என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    முகத்தை டல்லாக்கும் ஓவர் மேக்கப்... என்ன செய்யலாம்?
    X

    முகத்தை டல்லாக்கும் ஓவர் மேக்கப்... என்ன செய்யலாம்?

    • கொண்டாட்டங்களுக்கு பிறகு சருமத்தை புத்துணர்ச்சியூட்ட எக்ஸ்ஃபோலியேஷன் ஒரு சிறந்த வழி.
    • நல்ல தூக்கம் எந்த ஒப்பனையாலும் ஒப்பிட முடியாத இயற்கையான பளபளப்பை முகத்திற்கு அளிக்கும்.

    பண்டிகை காலங்களில் அல்லது விஷேசங்களின்போது நாம் பெரும்பாலும், நீண்டநேரம் நீடிக்கவேண்டும் என்பதற்காக அதிகளவு மேக்கப் போடுவோம். இந்த அதிகப்படியான மேக்கப் பின்னர் சருமத்தை மந்தமாகவும், சோர்வாகவும் மாற்றும். அதிக லேயர்கள் மற்றும் அவற்றில் உள்ள சில பொருட்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்து, சிவத்தல், வறட்சி மற்றும் உணர்திறன் ஆகியவற்றை ஏற்படுத்தும். கொண்டாட்டங்கள் முடிந்து நாம் பழைய நிலைக்கு திரும்பினாலும், முகம் அந்த கலைப்பில் அப்படியேத்தான் இருக்கும். அலச்சலால் சோர்வடைந்த சருமத்தை மீண்டும் பிரகாசிக்க வைக்க உதவும் சில எளிய வழிகள் இங்கே.

    நீரேற்றம்

    விழாக்களின்போது நாம் தவிர்க்கும் முக்கிய செயல்பாடுகளில் ஒன்று தண்ணீர் குடிப்பது. அங்கு செல்வது, இங்கு செல்வது என வேலையில் தண்ணீர் குடிக்கவே நேரம் இருக்காது. வேலைகளால் போதுமான அளவு தண்ணீர் குடிக்க எளிதில் மறந்துவிடலாம். நீரிழப்பு சருமத்தை மந்தாக்கும், சோர்வாக்கும். இதனால் நீரேற்றம் என்பது சருமத்திற்கும், உடலுக்கும் மிக அவசியமான ஒன்று. ஒவ்வொரு நாளும் குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவேண்டும். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தண்ணீர் குடியுங்கள். மாற்றாக எலுமிச்சை சாறும் குடிக்கலாம். சில நேரங்களில் குலதெய்வ கோயில்களுக்கு செல்வோம். அங்கு வெயிலில் நிற்கவேண்டிய சூழல் வரும். அதனால் அதுபோன்ற இடங்களுக்கு செல்லும்போது வெள்ளரிக்காய், புதினா போட்டு தண்ணீரை எடுத்து சென்று அதை குடியுங்கள். ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வது, மேக்கப், கொழுப்பு நிறைந்த உணவுகள் போன்றவற்றின் பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.

    எக்ஸ்ஃபோலியேட்

    கொண்டாட்டங்களுக்கு பிறகு சருமத்தை புத்துணர்ச்சியூட்ட எக்ஸ்ஃபோலியேஷன் ஒரு சிறந்த வழியாகும். இது முகத்தில் உள்ள இறந்த செல்கள், அதிகப்படியான எண்ணெய், மீதமுள்ள மேக்கப்பை நீக்கி சருமத்திற்கு புது தோற்றத்தை கொடுக்கும். பண்டிகை நாட்களை தாண்டி, வாரத்திற்கு ஒரு முறையும் எக்ஸ்ஃபோலியேட் செய்வது சிறந்தது.


    கொண்டாட்டங்களுக்கு பிறகு சருமத்தை புத்துணர்ச்சியூட்ட எக்ஸ்ஃபோலியேஷன் சிறந்த வழி

    ஃபேஸ்மாஸ்க்

    ஃபேஸ்பேக் அல்லது ஃபேஸ்மாஸ்க் சருமப் பராமரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஃபேஸ்மாஸ்க் புத்துணர்ச்சியை அளிக்கும். ஃபேஸ் மாஸ்க்குகளில் சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்கி ஊட்டமளிக்கும் சீரம்கள் உள்ளன. காஃபின், தாவரச் சாறுகள் போன்ற பொருட்களும் உள்ளன. அவை வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. குறிப்பாக கண்களைச் சுற்றி. அதுபோல ஃபேஸ்பேக்கும் சிறந்த நன்மையை அளிக்கும். தினமும் முகத்தை க்ளென்சிங் செய்தாலும் எல்லா முறையும் சருமத்தின் ஆழம்வரை நன்கு சுத்தம் செய்வதில்லை. அதனால் வாரத்தில் ஒருநாள் ஃபேஸ்பேக் பயன்படுத்தும்போது அது சருமத்தின் ஆழம்வரை சென்று சுத்தம் செய்யும். இரண்டு முறை செய்வது கூடுதல் பிரகாசத்தை வழங்கும்.

    சன்ஸ்கீரினை தவிர்க்காதீர்கள்

    விழா நாட்களில் அதிகம் வெளியே செல்ல வேண்டியிருக்கும். அப்போது சூரிய ஒளியின் சேதங்களிலிருந்து சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கீரின் உதவும். அதனால் மறக்காமல் வெளியே செல்லும்போது சன்ஸ்கீரின் பயன்படுத்துங்கள்.

    தூக்கம்

    கொண்டாட்டங்களினால் தூக்கம் பாதிக்கப்படும். சரியான தூக்கம் இல்லாதது கண்ணைச்சுற்றி கருவளையங்களையும், வீக்கத்தையும் ஏற்படுத்தும். அதனால் நன்கு தூங்குங்கள். தூக்கம் உங்கள் உடல், சரும செல்களை சரிசெய்து சமநிலையை மீட்டெடுக்கிறது. நீங்கள் நன்றாக ஓய்வெடுத்து எழுந்திருக்கும்போது, உங்கள் சருமம் எந்த ஒப்பனையாலும் ஒப்பிட முடியாத இயற்கையான பளபளப்பைப் பெறும்.

    Next Story
    ×