என் மலர்
நீங்கள் தேடியது "பீகார் முதல்வர் நிதிஷ்குமார்"
- இந்தியாவில், சட்டத்தின் ஆட்சி மேலோங்கி நிற்கிறது
- நிதிஷ்குமார் அப்பெண்ணை வேறு எங்காவது தொட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?
பீகாரில் திங்கள்கிழமை அன்று (டிச.15) 1000க்கும் மேற்பட்ட ஆயுஷ் மருத்துவர்கள், அரசுப் பணிக்கான தங்கள் நியமன கடிதங்களை, அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரிடம் இருந்து பெற்றனர். அப்போது முஸ்லீம் பெண் மருத்துவர் ஒருவரும் பெற்றார்.
அவருக்கு பணி நியமன ஆணையை வழங்கும்போது நிதிஷ், அப்பெண் மருத்துவர் அணிந்திருந்த ஹிஜாபை பிடித்து இழுத்தார். அவரின் இந்த செயலை அவரின் அருகில் இருந்தவர்களும் தடுக்க முயன்றனர். ஆனால் பீகாரின் முதலமைச்சரோ சிரித்துக் கொண்டே இந்த வேலையை செய்தார். இந்தச் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே நிதிஷ்குமாரின் இந்த செயலால் அப்பெண் மருத்துவர் தனக்கு அரசு வேலை வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்,
"அப்பெண் வேலையை மறுக்கலாம் அல்லது நரகத்திற்குகூட செல்லலாம். அது அவளுடைய விருப்பம். ஆனால், நிதிஷ்குமார் செய்தது சரியே. அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. நீங்கள் பாஸ்போர்ட் எடுக்கப் போகிறீர்கள் என்றால், உங்கள் முகத்தைக் காட்ட மாட்டீர்களா? விமான நிலையத்திற்குச் செல்லும்போது, உங்கள் முகத்தைக் காட்ட மாட்டீர்களா? மக்கள் பாகிஸ்தான் மற்றும் ஆங்கிலேயர்களைப் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் இது இந்தியா. இந்தியாவில், சட்டத்தின் ஆட்சி மேலோங்கி நிற்கிறது," என தெரிவித்துள்ளார்.
முன்னதாக இதுதொடர்பாக கருத்து தெரிவித்த உத்தரபிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத், நிதிஷ்குமார் அப்பெண்ணை வேறு எங்காவது தொட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- நிதிஷ் குமார் கட்சி வைத்திருக்கும் ஊரக பணிகள் துறை மூலமாக தேர்தலுக்கு முன்னதாக 1000 கோடி ரூபாய் விடுவிக்க அக்கட்சி இலக்கு.
- அரசாங்கம் வெளியேறப் போகிறது என்பதை மற்ற அமைச்சர்கள் நன்கு அறிவார்கள்.
பீகார் மாநிலத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் ஊரக வேலைகள் துறைக்கு (RWD) 1000 கோடி ரூபாய் விடுவிக்க இருப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் கூறுகையில் "தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை முதல்வர், சீனியர் அமைச்சர் ஒரு கூட்டத்தில் ஊழல் கொள்ளை தொடர்பாக மோதிக் கொண்டனர்.
நிதிஷ் குமார் கட்சி வைத்திருக்கும் ஊரக பணிகள் துறை மூலமாக தேர்தலுக்கு முன்னதாக 1000 கோடி ரூபாய் விடுவிக்க, அக்கட்சி இலக்கு வைத்துள்ளது. இந்தப் பணம் உலகளாவிய டெண்டர் மூலம் ஒப்பந்ததாரர்களிடமிருந்து பெறப்பட உள்ளது.
தேர்தலுக்கு முன்பு கிராமப்புற சாலைகள் எதுவும் அமைக்கப்படுவதில்லை, ஆனால் டெண்டர் செயல்முறையை நிர்வகிப்பதன் மூலம் ஒரு கொள்ளையடிக்கும் விளையாட்டு நடந்து வருகிறது.
முதல்வர் சுயநினைவில் இல்லை, அமைதியாக இருக்கிறார். அரசாங்கம் வெளியேறப் போகிறது என்பதை மற்ற அமைச்சர்கள் நன்கு அறிவார்கள். எனவே, கொள்ளையடிப்பதற்கான வெளிப்படையான போராட்டம் உள்ளது.
இவ்வாறு தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.
- வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார்
நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டது.
முன்னதாக வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த வக்கீலும், மேல் சபை எம்.பி.யுமான கபில்சிபல் நிருபர்களிடம் கூறியதாவது:-
வக்பு மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்து நிறைவேற்ற ஆளும் கட்சி முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு மதத்திலும் சீர்திருத்தம் அவசியம். சீர்திருத்தம் என்பது நல்ல விஷயம்தான். ஆனால் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன? 2014 முதல் குறிப்பிட்ட ஒரு மதத்தை குறிவைக்கப்படுவதை நாம் பார்த்து உள்ளோம்.
நாட்டில் மதசார்பற்ற கட்சி யார்? என்பது இன்று தெரியவரும். பீகாரில் சட்டசபை தேர்தல் நடை பெறவுள்ள நிலையில், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மசோதாவுக்கு ஆதரவளித்தால் தோல்வியை சந்திக்கும்.
அதனால்,பா.ஜ.க. எளிதில் மசோதாவை நிறைவேற்று வதற்காக ஐக்கிய ஜனதா தளம் வெளி நடப்பு செய்ய வாய்ப்பு உள்ளது. சிராஜ் பஸ்வானும் இதையே பின்பற்றுவார் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுமார் 25க்கும் மேற்பட்ட மாநில கட்சிகள் எதிர்கட்சி கூட்டணியை உருவாக்கின
- 3 சந்திப்புகளுக்கு பிறகு ஒன்றும் நடக்கவில்லை என்றார் நிதிஷ்குமார்
இந்திய பாராளுமன்றத்திற்கு அடுத்த வருடம் தேர்தல் நடக்க இருக்கிறது. இம்மாதம் இந்தியாவின் 5 மாநிலங்களுக்கு வெவ்வேறு தேதிகளில் சட்டசபை தேர்தல்களும் நடக்க உள்ளது.
வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரஸை உள்ளடக்கி இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா கூட்டணி" எனும் கூட்டணியை அமைத்தன.
இதில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் அடக்கம்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து நிதிஷ்குமார் விமர்சித்துள்ளார்.
அவர் இது குறித்து தெரிவித்ததாவது:
இந்தியாவில் பல கட்சிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி, இந்தியாவின் வரலாற்றை மாற்ற முயற்சிப்பவர்களுக்கு எதிராக ஒன்று திரள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, கடின முயற்சிகளுக்கு பிறகு உருவானதே இந்தியா கூட்டணி. கூட்டணி உருவானதும் பாட்னாவிலும், பெங்களூரூவிலும், மும்பையிலும் பல சந்திப்புகள் நடந்தன. ஆனால், அதற்கு பிறகு ஒன்றுமே நடைபெறவில்லை. குறிப்பாக காங்கிரஸ் கட்சி, அடுத்த வருடம் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தல் குறித்து அக்கறை காட்டவில்லை. அக்கட்சியின் கவனம் முழுவதும் நடக்க இருக்கும் 5 மாநில தேர்தல்களிலேயே உள்ளது. 5 மாநில தேர்தல்கள் முடிவடைந்ததும் மீண்டும் காங்கிரஸ் கட்சியினர் அனைவரையும் அழைப்பார்கள்.
இவ்வாறு நிதிஷ்குமார் பேசினார்.






