என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் சினிமா"

    • லோ பட்ஜெட்டில் தயாராகி, பல மடங்கு லாபத்தை இந்தாண்டு சில படங்கள் குவித்தன.
    • இந்த படங்கள், தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரே நேரத்தில் நம்பிக்கை ஊட்டின.

    பெரும் நட்சத்திரங்கள், நூறு கோடி பட்ஜெட், பிரம்மாண்ட விளம்பரம் அசெய்தால் தான் படம் வெற்றி பெறும் என்ற பார்முலாவை மாற்றி நல்ல கதை, சுவாரசியமான திரைக்கதை ஆகியவற்றால் 2025-ல் சில தமிழ் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்தன.

    "சிறிய பட்ஜெட் = சிறிய வசூல்" என்ற பழைய கணக்கை முறியடித்து, லோ பட்ஜெட்டில் தயாராகி, பல மடங்கு லாபத்தை இந்தாண்டு சில படங்கள் குவித்தன. இந்த படங்கள், தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரே நேரத்தில் நம்பிக்கை ஊட்டின.

    OTT, சிங்கிள் ஸ்க்ரீன், மல்டிப்ளெக்ஸ் என எல்லா தளங்களிலும் பொதுமக்களின் பாராட்டும், குடும்ப ஆதரவும் கிடைத்த படங்கள் தான் 2025-ன் உண்மையான பாக்ஸ் ஆபிஸ் ஹீரோக்கள். அவ்வகையில் இந்தாண்டு குறைந்த பட்ஜெட்டில் தயாராகி பல மடங்கு லாபம் கொடுத்த டாப் 5 வெற்றி படங்களை இந்த தொகுப்பில் காணலாம்

    1. டூரிஸ்ட் பேமிலி:

    பட்ஜெட்: ரூ.7 - 8 கோடி

    வசூல்: ரூ.90 கோடி

    சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவான படம் 'டூரிஸ்ட் பேமிலி'. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கிய இப்படம் உலக அளவில் பெரும் வரவெற்பிற் பெற்று வசூலை வாரி குவித்தது.

    இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாயை வசூலில் கடந்தது. உலகளவில் சுமார் ரூ.90 கோடி வசூலை குவித்தது.கம்மியான பட்ஜெடில் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட மில்லியன் டால்டர் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு 10 மடங்கு லாபம் கொடுத்து மாபெரும் வெற்றியை கொடுத்துது.

    2. தலைவன் தலைவி:

    பட்ஜெட்: ரூ.25 கோடி

    வசூல்: ரூ.100 கோடி

    விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமாக உருவான 'தலைவன் தலைவி' படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    ரூபாய் 25 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம், ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. ஒரு மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம், மிகப்பெரிய வெற்றியை இந்த ஆண்டு பதிவு செய்தது.

    3. டிராகன்:

    பட்ஜெட்: ரூ.35 கோடி

    வசூல்: ரூ.150 கோடி

    இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியான டிராகன் திரைப்படம் 10 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்து சாதனை படைத்தது.

    லவ் டுடே படத்தை தொடர்ந்து டிராகன் படமும் பிரதீப் ரங்கநாதனுக்கு வெற்றி படமாக அமைந்தது. இப்படம் மொத்தமாக உலக அளவில் 150 கோடி ரூபாய் வசூலை கடந்தது.

    பட்ஜெட் அளவில் இப்படம் இந்த பட்டியலில் உள்ள மற்ற படங்களைவிட சற்றுக் கூடுதலானாலும், அதன் அபாரமான வசூல் காரணமாக தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது

     4. மாமன்:

    பட்ஜெட்: ரூ.10 கோடி

    வசூல்: ரூ.50 கோடி

    பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவான படம் மாமன். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

    இப்படத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக தயாரான இப்படம் கிராம மக்களை வெகுவாக கவர்ந்தது.

    ரூபாய் 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 50 கோடி வரை வசூல் செய்து கோலிவுட் சினிமா வட்டாரத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    5. குடும்பஸ்தன்:

    பட்ஜெட்: ரூ.8 கோடி

    வசூல்: ரூ.28 கோடி

    இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்து வெளியான படம் 'குடும்பஸ்தன்'. இப்படத்தில் சான்வி மேகனா கதாநாயகியாக நடித்திருந்தார்.

    ஒரு நடுத்தர குடும்ப ஆண்மகன் படும் பண கஷ்டங்களை மிக நகைச்சுவையாக இப்படம் கையாண்டது.

    வெறும் ரூ.8 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.28 கோடி வசூலை குவித்து சிறிய படங்களும் பெரிய வசூலை குவிக்கும் என்று இந்தாண்டு தொடக்கத்தில் எடுத்துக்காட்டியது.

    ஆர்.ஆர் மூவிஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் ஆதிக் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

    மனிதர்களை சந்தர்ப்பச் சூழ்நிலை என்னவெல்லாம் செய்யும் என்பதை எடுத்துச் சொல்வது 'ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி.'

    சிங்கப்பூரில் வசிக்கிற முரளி சொந்த ஊருக்கு வருகிறான். தனது காதலியை தேடிப் போகிறான். அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணமாகிவிட்ட விவரம் தெரிந்து அதிர்ச்சியடைகிறான். அந்த அதிர்ச்சியிலிருந்தும் அவனை மீட்க அவனது நண்பன் தனது தங்கையை திருமணம் செய்து வைக்கிறான். நாட்கள் நல்லபடியாக நகர முரளியின் மனைவி தாய்மையடைகிறாள்.

    அந்த சந்தர்ப்பத்தில் தனது முன்னாள் காதலியைப் பற்றி சில விஷயங்கள் முரளியின் கவனத்துக்கு வருகிறது. அவளுக்கு திருமணமான விவரம் தெரிந்தபோது அதிர்ச்சியடைந்ததை விட பல மடங்கு அதிர்ச்சியடைகிறான். அது மனநிலை அவனது வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறது என்பது கதை.

    ஆர்.ஆர் மூவிஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் ஆதிக் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். காயத்ரி ரெமா, அனுகிருஷ்ணா கதாநாயகிகளாக நடிக்க தம்பி சிவன், வர்ஷிதா,விஜய் டிவி சரத்,மனோகர் பெருமாத்தா ஆகியோர் கதையின் பாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். டைசன் ராஜ் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கே.ராஜன், ஆர்.வி. உதயகுமார், பேரரசு ஜாக்குவார் தங்கம், என்.விஜயமுரளி, விவேகபாரதி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளி வருகிறது.

    • சமந்தாவின் சொத்து ரூ.90 கோடி முதல் ரூ.110 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
    • 5-ம் இடத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளார்.

    தமிழ் சினிமாவில் உள்ள பணக்கார நடிகைகள் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.

    அந்தவகையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பயணித்து வரும் நயன்தாரா அதிக சொத்து சேர்த்த நடிகை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.220 கோடி முதல் ரூ.250 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

    2-வது இடத்தில் பால்நிற மேனி நடிகை தமன்னா இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.120 கோடி முதல் ரூ.150 கோடி வரை இருக்கும் என்கிறார்கள். தென்னிந்திய சினிமா தாண்டி பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக ஜொலிக்கும் சமந்தாவின் சொத்து ரூ.90 கோடி முதல் ரூ.110 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இவர் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளார்.

    முன்னணி நடிகை திரிஷா ரூ.85 கோடி சொத்துடன் 4-ம் இடத்தில் இருக்கிறார். 5-ம் இடத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.60 கோடி முதல் ரூ.70 கோடி வரை இருக்கும் என்கிறார்கள்.

    நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகை, பல படங்களில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சேமித்து வைத்திருந்தாராம். இந்த பணத்தை எல்லாம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில், அவரது கணவர், புதிய தொழில் ஒன்றை தொடங்கலாம் என்று ஐடியா கொடுத்தாராம். நடிகையும் நல்லா இருக்கே... என்று சம்மதம் தெரிவித்தாராம். இதற்காக பல கோடி முதலீடு செய்தாராம் நடிகை.

    ஆனால், எதிர்ப்பார்த்த படி அந்த தொழில் சூடு பிடிக்க வில்லையாம். இதனால், நொந்து போன நடிகை, கணவரை நம்பி பணத்தை முதலீடு செய்ய கூடாது என்று முடிவு செய்து இருக்கிறாராம். இருந்தாலும் நடிகையின் கணவர் பல ஐடியாக்களோடு வலம் வந்துக் கொண்டிருக்கிறாராம்.

    ஒரு படத்திலேயே பல இளசுகளை தன்வசப்படுத்திய நடிகைக்கு தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறாராம். அதற்கு நடிகையை வைத்து முதல் படத்தை இயக்கிய இயக்குனரே காரணமாம். அப்படி என்ன என்று விசாரித்தால், நடிகையை தேடி வரும் படங்களை எல்லாம், கதை சரியில்லை, அந்த ஹீரோ வேண்டாம், படம் நன்றாக வராது என்று பல காரணங்களை சொல்லி நடிகையை இயக்குனர் நடிக்க விடாமல் செய்து வருகிறாராம்.

    இயக்குனரின் இந்த செயல் நடிகையின் நல்லதுக்கா.... இல்லை... வேற எதுக்கா... என்று கோடம்பாக்கத்தினர் அரசல் புரசலாக பேசி வருகிறார்கள்.

    நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த நடிகை, திருமணத்திற்கு முன்பு இரண்டு படங்களுக்கு அட்வான்ஸ் தொகையாக ரூ.10 கோடி வாங்கினாராம். அதன்பிறகு படம் நடித்து தர தாமதிக்கிறாராம். இதனால் கொடுத்த பணத்தை படக்குழு திரும்பி கேட்டார்களாம். ஆனால் அவர்களுக்கு பதில் அளித்த நடிகை புதிய படத்தில் நடித்து தருகிறேன். பணத்தை திரும்பி கேட்காதீங்க என்று சொல்லாமல் சொல்லி விட்டாராம். இதனால் பணம் கொடுத்தவர்கள் குழம்பி பணத்தை எப்படி திரும்பி பெறுவது என்று யோசித்து வருகின்றார்களாம்.

    டாப் ஹீரோக்களுடன் நடித்த நடிகை திடீரென திருமணம் செய்து கொண்டாராம். பின்னர் நடிக்க வந்த நடிகைக்கு வாய்ப்பு தர யாருக்கும் மனசு இல்லையாம். இதனால் விரக்தியடைந்த நடிகை என்ன செய்வது என்று யோசித்து நைட் பார்ட்டிக்கு ஹீரோக்களை அழைத்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம். அதுமட்டுமல்லாமல் சில இடங்களுக்கு அழையா விருந்தாளியாக செல்லும் நடிகை அட்ஜஸ்ட்மெண்ட் செய்யக்கூட தயார் என்று சொல்லியிருக்கிறாராம்.


    தன் இடுப்பழகில் ரசிகர்களை கிறங்கடித்த முன்னணி நடிகையின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என பல நடிகர்கள் ஏக்கத்துடன் இருந்தார்களாம். ஆனால் நடிகையோ நடிகர் ஒருவரை காதலிக்க தொடங்கினாராம். நடிகையின் மூலம் தயாரிப்பாளரான நடிகர் தன் முதல் படத்தில் அந்த நடிகையை நடிக்க வைத்தாராம்.

    இதற்கு சம்பளம் கேட்ட நடிகையிடம் நீ என் வருங்கால மனைவி ஆகப்போகிறாயே என்று ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி வந்தாராம். பின்னர் சில வருடங்கள் இருவரும் உறவில் இருந்தார்களாம். அதன்பிறகு நடிகையின் மார்க்கெட் குறையவே நடிகர் கம்பி நீட்டிவிட்டாரம்.

    இதனால் நொந்துபோன நடிகை சொந்த ஊரில் மாப்பிளையை பார்த்து திருமணம் செய்து கொண்டாராம். ஆனால் இன்று வரை தன்னை ஏமாற்றிய அந்த நடிகர் மீது கடும் கோப்பத்தில் உள்ளாராம் நடிகை.

    நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் முன்னணி நடிகரின் படத்தில் நடித்த நடிகை ஒருவர், தெலுங்கு பக்கம் சென்றாராம். அங்கு முன்னணி நடிகரின் படத்தில் ஒப்பந்தமானாராம். அந்த படத்திற்காக பெரிய தொகையை சம்பளமாக கேட்டாராம். ஆனால் படக்குழு இதற்கு ஒப்புக் கொள்ளாமல் படத்தில் இருந்து விலக்கி விட்டார்களாம்.

    பின்னர் அந்த நடிகை, நான் அதிக படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதால் இந்த படத்தில் இருந்து நானே விலகி விட்டேன் என்று பில்டப் விட்டு வருகிறாராம்.

    முன்னணி ஹீரோக்களுடன் நடித்த நடிகை ஒருவர் டாப் ஹீரோ ஒருவருடன் நடிக்காததை பெரிய குறையாக நினைத்து வந்தாராம். இவருக்கு போட்டியாக இருக்கும் நடிகை அந்த நடிகருடன் இணைந்து நடித்து கெமிஸ்ட்ரியில் பின்னிவிட்டாராம். இதனால் கடுப்பான நடிகை இந்த தடவை வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்று நினைத்து பலபேரை தூது அனுப்பினாராம்.

    தூது ஒர்க்கவுட் ஆகவே அந்த டாப் ஹீரோவும் நடிகையும் நேரில் சந்தித்தார்களாம். பின்னர் ஹீரோவுடன் மூன்று நாட்கள் தனிமையில் பொழுதை கழித்த நடிகைக்கு கிரீன் சிக்னல் கிடைத்துவிடவே தன் படத்தில் ஏற்கனேவே கமிட் செய்திருந்த ஹீரோயினை தூக்கி விட்டு நடிகையை புக் செய்துவிட்டாராம்.

    இதனால் குஷியான நடிகை ஹீரோவின் அடுத்தப்படத்திலும் நடிக்க தூது அனுப்பவே ஒரு முறைதான் வாய்ப்பு என ஹீரோ கண்டிப்பாக சொல்லிவிட்டாராம்.

    ஒரு சில படங்களில் நடித்து பெரிய அளவில் வெளியே தெரியாத நடிகை ஒருவர் தேசிய விருது வாங்கிய பின்னர் பிசியான நடிகையாக மாறினாராம். பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தாராம். திருமணம் ஆன பின்னரும் இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம்.

    இவரை இயக்குனர்களும், நடிகர்களும் முத்தக் காட்சி, ஆபாச காட்சிகளில் நடிக்க வற்புறுத்தி வந்தார்களாம். இதனால் கோபமான நடிகை என் கணவருக்கு இந்த மாதிரி காட்சிகளில் நடிப்பது பிடிக்காது என்றும் நான் இது போன்ற காட்சிகளில் நடிக்க விருப்பபடவில்லை என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம். இதனால் முத்த காட்சிகள் இடம்பெறும் கதைகள் அவரிடம் வந்தால் ஆளவிடுங்கடா சாமி என்று எஸ்கேப் ஆகிவிடுகிறாராம்.

    பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இளம் நடிகை சிறிது காலம் சினிமாவில் இருந்து ஓய்வெடுத்து வந்தாராம். அதன்பின்னர் மீண்டும் நடிக்க வந்த நடிகை, பிரபல நடிகருடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டாராம். அந்த நடிகையின் பிறந்தநாளில் நடிகர் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தாராம்.

    அப்போது திடீரென நடிகை ஆண்டி ஆகிவிட்டார் என்றும் அவருக்கு வயது 31 கடந்து விட்டது என்றும் நடிகர் தெரிவித்தாராம். பொதுவெளியில் நடிகையின் வயதை கூறியதால் அவர் கோபத்தில் உள்ளாராம்.

    ×