என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக வேட்பாளர்"

    • தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் முதல் கட்ட நேர்காணலை கடந்த 9-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.
    • கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி கொடுத்தது போக 170 தொகுதிகளில் அ.தி.மு.க.வை களம் இறக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க. தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. இதைத் தொடர்ந்து கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தனித்தனியாக களமிறங்கிய அ.தி.மு.க.வும் பாரதிய ஜனதா கட்சியும் வருகிற சட்டமன்றத் தேர்தலை ஒன்றாக இணைந்து சந்திக்க உள்ளன. அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பா.ம.க., டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் சேர்ந்துள்ள நிலையில் பல்வேறு சிறிய கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளன.

    இதனைத் தொடர்ந்து சென்னையை அடுத்துள்ள மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த லட்சக்கணக்கான தொண்டர்களும் பங்கேற்றனர்.

    தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமையாமல் இருந்து வந்த நிலையில் தற்போது டி.டி.வி. தினகரன் மற்றும் பா.ம.க.வும் இந்த கூட்டணியில் சேர்ந்து இருப்பது அதிரடி திருப்பமாகவே பார்க்கப்படுகிறது.

    இந்த கட்சிகளோடு சேர்ந்து அந்தந்த பகுதிகளில் செல்வாக்குடன் திகழும் 10 கட்சிகளும் இந்த கூட்டணியில் சேர்ந்து இருப்பதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணியாகவே மாறி இருப்பதாக அந்த கட்சியினர் கூறி வருகிறார்கள்.

    இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் தொடர்பாக தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள தொடங்கியுள்ளார்.

    அ.தி.மு.க.வில் சட்டமன்ற தொகுதி வாரியாக போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.

    இதுபோன்று தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் முதல் கட்ட நேர்காணலை கடந்த 9-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். இந்த நேர்காணல் கடந்த 10,12 ,13 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக 4 நாட்கள் நடைபெற்றது. இந்த நேர்காணலின்போது சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தகுதியான நபர்களை எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்திருக்கிறார்.

    இதன் பிறகு பொங்கல் பண்டிகை விடுமுறை மற்றும் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொதுக் கூட்டம் ஆகியவை இருந்ததால் நேர்காணல் உடனடியாக நடத்தப்படவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு 5-வது நாள் நேர்காணல் 24-ந்தேதி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் நேர்காணலை நடத்தினார்.

    இன்றைய நேர்காணலில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அ.தி.மு.க. கூட்டணியில் பல்வேறு கட்சிகளும் இணைந்து பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்ற பிறகு கட்சி அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வினர் மிகுந்த உற்சாகத்துடனே வரவேற்றார்கள்.

    இன்று காலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, தென்காசி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

    காலை 9.30 மணிக்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளிடமும், அதன் பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க.வினரிடமும் நேர்காணல் நடத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு மற்றும் திருவண்ணாமலை வடக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட நிர்வாகிகளிடமும் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தினார்.

    இன்று மாலையில் திருவண்ணாமலை கிழக்கு திருவண்ணாமலை மத்திய மாவட்ட நிர்வாகிகளுடன் முதலில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    இந்த ஆலோசனைக் கூட்டம் மாலை 4 மணிக்கு தொடங்கும் நிலையில் இதன் பிறகு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடமும் நேர்காணல் நடைபெறுகிறது.

    சட்டமன்றத் தேர்தலில் மக்களை கவரும் வகையில் குறிப்பாக செயல்பட்டு வரும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் யார் யார் என்பதை? எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே ரகசிய சர்வே மூலமாக கண்டறிந்து வைத்துள்ளார். அதுபோன்ற நபர்களில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு துடிப்பான அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

    தற்போது நடைபெற்று உள்ளது முதல் கட்ட நேர்காணல் என்றும் அடுத்தடுத்து 2 அல்லது 3 நேர்காணல்களை நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இருப்பதாகவும் கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

    இப்படி அனைத்து மாவட்ட நிர்வாகிகளிடமும் நடத்தி முடிக்கப்பட்ட பிறகு அ.தி.மு.க. சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் யார் யார் என்கிற பட்டியல் இறுதி செய்யப்படுகிறது.

    வருகிற சட்டமன்றத் தேர்தலில் அரிதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளார். இதற்காக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளார்.

    கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி கொடுத்தது போக 170 தொகுதிகளில் அ.தி.மு.க.வை களம் இறக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஒருவேளை கூட்டணி கட்சிகளுக்கு 2 அல்லது 3 இடங்களை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அ.தி.மு.க. குறி வைத்து உள்ள இந்த 170 தொகுதிகள் மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதுபோன்று ஏற்பட்டால் 20 தொகுதிகளை விட்டுக் கொடுத்து விட்டு 150 தொகுதிகளுக்கு குறையாமல் அ.தி.மு.க. களமிறங்கும் என்று தெரிகிறது.

    பா.ஜ.க.வுக்கு 25 தொகுதிகள், பா.ம.க.வுக்கு 17 தொகுதிகள், டி.டி.வி. தினகரனுக்கு 7 முதல் 10 தொகுதிகள் வரை ஒதுக்குவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    இதேபோன்று கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற சிறிய கட்சிகளுக்கு 2 அல்லது 3 இடங்கள் வரையிலும் சில கட்சிகளுக்கு ஒரு இடம் வரையிலும் ஒதுக்குவதற்கு அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பான தொகுதி பங்கீடு விரைவில் முடிவடைந்து எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்கிற அறிவிப்பும் வெளியிடப்பட உள்ளது.

    இப்படி தொகுதி பங்கீடு முடிவடைந்ததும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளார்.

    • ஜனவரி 11, 12ம் தேதிகளில் நடைபெற இருந்த அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் ஒத்திவைப்பு.
    • விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணல் வரும் 9ம் தேதி தொடங்கப்படுகிறது.

    ஜனவரி 11, 12 தேதிகளில் நடைபெற இருந்த வேட்பாளர் நேர்காணல் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

    சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்தவரகளுக்கான நேர்காணல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஜனவரி 11, 12ம் தேதிகளில் நடைபெற இருந்த அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் ஜனவரி 12, 24 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணல் வரும் 9ம் தேதி தொடங்கப்படுகிறது.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் ஜனவரி 9ம் தேதி முதல் 24ம் தேதி வரை நேர்காணல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    • இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு, யாருக்கு என்ன பலம் என்பதை காண்பிப்பது மட்டும் முக்கியமல்ல.
    • 2 மாதத்தில் இந்த இடைத்தேர்தலை மக்கள் மறந்துவிடுவார்கள்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் எப்படி வரும் என்று நேற்றைய தினம் வெளியான பொருளாதார சர்வே ஆவணம் ஒரு அளவீடாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

    பட்ஜெட்டை பொறுத்தவரை அமிர்த கால பட்ஜெட் என நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான அச்சாணியாக இந்த பட்ஜெட் இருக்கும்.

    இந்தியாவின் உட்கட்டமைப்புக்கு ரூ.10 லட்சம் கோடி வரை நிதி ஒதுக்கி உள்ளார்கள். இதில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்குவார்கள் என்பது எதிர்ப்பார்ப்பு மட்டுமல்ல, எங்கள் நம்பிக்கை.

    ஐ.எம்.எப். கணிப்பின்படி இந்த ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி இந்த ஆண்டுக்கான அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்து செல்லும். நகர்ப்புற வேலைவாய்ப்பை பொறுத்தமட்டில் கோவிட் காலத்தின் பாதிப்பை இந்தியா தாண்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    முக்கியமாக ஆளுங்கட்சியின் பண பலம், அரசியல் பலம், அரசு எந்திரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு எதிராக ஒரு பலம் வாய்ந்த வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. இந்த விவகாரத்தை பொறுத்தவரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள், தெளிவுபடுத்துகிறோம்.

    மெரினாவில் கலைஞர் பேனா சிலை வைப்பதால் 13 மீன்பிடி கிராமங்களுக்கு பிரச்சனை இருக்கிறது. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். தமிழக அரசு நடத்தியது கருத்து கேட்பு கூட்டமா அல்லது மாவட்ட செயலாளர்களில் யார் அதிகம் சத்தம் எழுப்புகிறார்கள் என்பதை காட்டுவதற்காக நடத்தப்பட்ட கூட்டமா என்று தெரியவில்லை.

    இந்த கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், என்.ஜி.ஓ.க்களும் சிலை வைக்க வேண்டாம் என்றே கூறியிருக்கிறார்கள். அவர்களுடைய அறிவாலய பணத்தில் எந்த இடத்திலும் பேனா சிலையை வைக்க ஜனநாயகத்தில் இடம் உள்ளது. ஆனால் பொது இடம் என்று வரும்போது மக்களின் கருத்தை மதிக்க வேண்டும்.

    2022 ஆகஸ்டு மாதம் இந்தியா டுடே நடத்திய ஸ்டேட் ஆப் தி நேஷன் நடத்திய கருத்து கணிப்பில் மு.க.ஸ்டாலினுக்கு 60 சதவீத மக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதே பத்திரிகை ஜனவரி 26 அன்று நடத்திய கருத்து கணிப்பில் மு.க.ஸ்டாலினின் இமேஜ் 44 சதவீதம் சரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 6 மாதங்களில் 16 சதவீதம் எந்த முதல்வரும் சரிவை சந்திக்கவில்லை.

    அவர்களின் செயல்பாட்டை வைத்து பார்க்கும் போது, வருகிற 2024-ல் கணக்கெடுத்தால் நிச்சயமாக செல்வாக்கு 20 சதவீதத்திற்கும் கீழ் வந்துவிடும். தி.மு.க. தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அவர்கள் என்ன செய்தாலும் ஈரோடு இடைத்தேர்தல் முடிவு மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்த போகிறது.

    பேனா சிலை விவகாரத்தில் தமிழக மீனவர்களோடு, என்.ஜி.ஓ.க்களோடு கைக்கோர்க்க தயாராக இருக்கிறோம். மீனவர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எடப்பாடி பழனிசாமி ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை இன்று அறிவித்துள்ளார். அவர் பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணியில் உள்ள தலைவர்களிடம் கலந்தாலோசித்து விட்டுத்தான் அறிவித்தாரா என்ற நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, ஈரோடு இடைத்தேர்தல் குறித்து யாரிடம் என்ன பேசினோம் என்பதை வெளியில் கூறுவது நாகரிகமாக இருக்காது. எல்லா தலைவர்களிடமும் பேசியிருக்கிறோம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.

    இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு, யாருக்கு என்ன பலம் என்பதை காண்பிப்பது மட்டும் முக்கியமல்ல. 2 மாதத்தில் இந்த இடைத்தேர்தலை மக்கள் மறந்துவிடுவார்கள். ஆனால் நாம் 2024 பாராளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

    • கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாக கொண்ட சிம்லா முத்துசோழன் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான்.
    • வக்கீலான சிம்லா முத்துசோழன், தி.மு.க. முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள் ஆவார்.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. முதல் கட்ட வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.

    இதில் 16 தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கியது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் எஞ்சிய 16 தொகுதிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். அதில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் சிம்லா முத்துசோழன் போட்டியிடுகிறார்.

    தமிழகத்தில் அ.தி.மு.க. போட்டியிடும் 32 தொகுதிகளில் ஒரே ஒரு பெண் வேட்பாளர் என்ற பெயரை சிம்லா முத்துசோழன் பெற்றுள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். வக்கீலான சிம்லா முத்துசோழன், தி.மு.க. முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள் ஆவார். சற்குண பாண்டியன் தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளராகவும், கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது அமைச்சராகவும் இருந்துள்ளார்.

    சிம்லா முத்துசோழன் 2016-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க.வில் இருந்து விலகிய அவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த நிலையில் தற்போது அவருக்கு நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் விதிகளை மீறி தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.
    • தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த புதன்கிழமை அன்று தொடங்கியது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், தென்சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் மீது தரமணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேர்தல் விதிகளை மீறி தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மற்றும் தனியார் திருமண மண்டப உரிமையாளர் பாலாஜி மீது தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
    • சென்னை ஆர்.கே.நகரில் செயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர் சிம்லா முத்துச்சோழன்.

    மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக தனது முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.

    இதில், நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளராக சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில், நெல்ல தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டு அதிமுக அறிவித்துள்ளது.

    அதன்படி, சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக இணை செயலாளரான ஜான்சிராணி வேட்பாளராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

    ஜான்சிராணி தற்போது திசையான்விளை பேரூராட்சி தலைவராகவும் உள்ளார்.

    திமுக வில் இருந்து அதிமுகவில் இணைந்த 15 நாட்களில் வேட்பாளராக சிம்லா அறிவிக்கப்பட்டார். சென்னை ஆர்.கே.நகரில் செயலலிதாவை எதிர்த்து சிம்லா முத்துச்சோழன் போட்டியிட்டவர்.

    ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழனுக்கு வாய்ப்பு கொடுப்பதா என எதிர்ப்பு எழுந்த நிலையில் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியுள்ள நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் பலத்தை காட்ட வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டு உள்ளது.
    • இன்று அல்லது நாளை வேட்பாளர் யார்? என்பதை தேர்வு செய்து அறிவிக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணமடைந்ததை தொடர்ந்து அடுத்த மாதம் 10-ந்தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியான தி.மு.க. முதல் ஆளாக களம் இறங்கி உள்ளது. தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டு உள்ளார்.

    தி.மு.க.வுக்கு போட்டியாக அ.தி.மு.க., பா.ம.க. சார்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர். நாம் தமிழர் கட்சியும் போட்டியிட தயாராகி வருகிறது. தி.மு.க. சார்பில் முன்கூட்டியே வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி, விழுப்புரம் மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகத்துடன் ஆலோசித்து வருகிறார்.

    இருவரும் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது பற்றி விவாதித்துள்ளனர்.

    விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்கு 7 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 2019-ம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ் செல்வன் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் இவரே போட்டியிட்டிருந்தார். இதனால் இவருக்கே போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காணை ஒன்றிய செயலாளர் ராஜா, விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர்கள் பன்னீர், முகுந்தன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் லட்சுமி நாராயணன், தொழில் அதிபர் டி.கே.சுப்பராயன், விக்கிரவாண்டி நகர செயலாளர் பூரண ராவ் ஆகியோரும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்டுள்ளனர்.

    இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் யாரை வேட்பாளராக தேர்வு செய்வது என்பதில் கடும் இழுபறி நீடித்து வருகிறது. இருப்பினும் இன்று அல்லது நாளை வேட்பாளர் யார்? என்பதை தேர்வு செய்து அறிவிக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது. எனவே அ.தி.மு.க. வேட்பாளரின் பெயர் விவரம் இன்று மாலையிலோ நாளை காலையிலோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியுள்ள நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் பலத்தை காட்ட வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே அவர் தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டவும் திட்டமிட்டுள்ளார்.

    ×