என் மலர்
வழிபாடு
- குடும்பத்தில் சுபீட்சம் பெருகும் தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.
- சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர்.
இன்று மஹாசங்கடஹர சதுர்த்தி. விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரும் தேய்பிறை சதுர்த்தி மஹாசங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கிறோம். மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சம் பெருகும் தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். கேது தோஷம், சந்திர தோஷம் நீங்கும்.
சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர். சந்திர பகவானும் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார். தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய அருள் வளர்ந்தது. சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது அழிப்பது என்று பொருள். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் சங்கடங்கள் நீங்கும்.
நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் சந்திரன் பகவான். சந்திரன் மனோகாரகன். தண்ணீர் சார்ந்த நோய்கள், பயணங்கள், சுவை, உணவு, கற்பனைத் திறன், தெய்வீக பணி போன்றவைகளுக்கும் காரகன் ஆவார். ஒருவரின் ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன் சுப பலன்களையும், தேய்பிறை சந்திரன் பாதக பலன்களையும் தருகிறது. சந்திரனால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கவும், கேது தோஷம் நீங்கவும் விநாயகரை வழிபடலாம்.
விநாயகர் கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர். சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர். சந்திர பகவானும் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார். தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளை தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபடுகிறோம்.
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலெளம் கம் தோரண
கணபதயே சர்வகார்ய கர்த்தாய ஸகல
சித்திகராய ஸர்வஜன வசீகரணாய
ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம்
கணபதயே ஸ்வாஹா."
இந்த கணபதி மந்திரத்தை சங்கடஹர சதுர்த்தி முடிவதற்குள், அதாவது, காலை முதல் மாலைக்குள் ஒரு முறையாவது சொல்ல வேண்டும். முடிந்தவர்கள் காலை, மாலை இருவேளையும் சொல்வது சிறப்பானதாகும். சுப காரியங்கள், மங்கள நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள், புதிய ஆடைகள் வாங்குவது, புதிய தொழில் தொடங்குவது என எந்த சுப காரியம் தொடங்குவதாக இருந்தாலும் மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று தொடங்கலாம். அப்படி செய்வதால் வீட்டில் தொடர்ந்து சுபகாரியங்கள் நிகழும்.
- முன்னதாக கோவிலின் அருகில் 123 குண்டங்களுடன் பிரம்மாண்ட யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
- புனிதநீர் அடங்கிய குடங்களை சிவாச்சாரியார்கள் தோளில் சுமந்து கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து கோபுர கலசத்தை வந்தடைந்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோவிலாகும். அம்மன் மயில் உருவில் இறைவனை பூஜித்ததாக புராண வரலாறு கூறுகிறது.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.
பணிகள் முடிவடைந்த நிலயைில் இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கோவிலின் அருகில் 123 குண்டங்களுடன் பிரம்மாண்ட யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலையில் வைப்பதற்காக கங்கை, யமுனை, சிந்து, காவிரி உள்ளிட்ட 9 நதிகளில் இருந்து தீர்த்தங்கள் யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பூஜைகள் தொடங்கின.
தொடர்ந்து, கடந்த 31-ந் தேதி மாலை முதற்கால யாகசாலை பூஜைகள் நடந்தது. 1-ந் தேதி 2,3-ம் கால யாகசால பூஜையும், நேற்று 4, 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 6-ம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாஹுதி நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், கடம் புறப்பாடு நடைபெற்றது.
புனிதநீர் அடங்கிய குடங்களை சிவாச்சாரியார்கள் தோளில் சுமந்து கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து கோபுர கலசத்தை வந்தடைந்தனர்.
தொடர்ந்து, திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, வானில் கருடன் வட்டமிட, மேளதாளங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் மயிலாடுதுறை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பாதுகாப்பு பணிக்காக சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏராளமானோர் திரண்டதால் நகரமே விழாக்கோலம் பூண்டது.
- மகா சங்கடஹர சதுர்த்தி.
- ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆவணி-17 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தி நள்ளிரவு 12.01 மணி வரை பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: ரேவதி மாலை 4.24 மணி வரை பிறகு அசுவினி
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சுப முகூர்த்த தினம். மகா சங்கடஹர சதுர்த்தி. திருவலஞ்சுழி, திருநாரையூர், மதுரை, உப்பூர், திருச்சி மலைக்கோட்டை, பிள்ளையார்பட்டி கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ ரெங்கநாதர் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பணிவு
ரிஷபம்-அமைதி
மிதுனம்-இன்சொல்
கடகம்-பரிசு
சிம்மம்-பிரீதி
கன்னி-தேர்ச்சி
துலாம்- மாற்றம்
விருச்சிகம்-ஆக்கம்
தனுசு- விருத்தி
மகரம்-வரவு
கும்பம்-பெருமை
மீனம்-பயணம்
- பக்தியின் திருவுருவமாக விளங்கியவர்தான் கண்ணப்பநாயனார்.
- அய்யனே எனக்கு இடையறாத பக்தியை தரவேண்டும்.
இறைவனாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவன்தொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் தான் இந்த நாயன்பார்கள். அந்த வகையில் இன்றைக்கு நாம் கண்ணப்பநாயனார் பற்றி இன்று தெரிந்துகொள்வோம்.
பக்தியின் திருவுருவமாக விளங்கியவர்தான் கண்ணப்பநாயனார். இவர் முற்பிறவியில் அர்ஜுனனாக இருந்தார். அர்ஜுனன் மிகப்பெரிய சிவபக்தனாக இருந்தார். மகாபாரதபோரில் தன்னுடைய மகனான அபிமன்யூவை கொன்றவர்களை கொல்லாமல் விடமாட்டேன் என்று சொல்லிக்கொண்டு உணவும் உண்ணாமல், சிவபூஜையும் செய்யாமல் கண்ணபிரான் கூட கயிலாயத்திற்கு சென்றார்.
சிவபெருமானிடம் வரம் கேட்பதற்காக செல்கிறார். அங்கு சென்றபோது ஒரு பன்றியின் காரணமாக அர்ஜுனனுக்கும் வேடன் வடிவில் இருந்த சிவபெருமானுக்கும் இடையே சண்டை நடக்கிறது. வேடன் வடிவில் இருப்பது சிவபெருமான் என்று அறியாமல் வேடன் தானே என்று வேடன் குலத்தை திட்டினான். உடனே தன்னுடைய திருவுருவத்தை அர்ஜுனனிடம் காட்டி அர்ஜுனா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று கூறினார் சிவபெருமான்.
உடனே அர்ஜுனன் தன்னுடைய தவறை உணர்ந்து. அவரிடம் அய்யனே உன்னை என்றுமே மறவாத வரத்தை தரவேண்டும் என்று கேட்டார். ஆனால் வரம் வாங்க வந்ததே தன்னுடைய மகனை கொன்றவர்களை கொல்ல பாசுவதகனி வாங்க வந்தவர் அவ்வாறு கேட்காமல் அய்யனே எனக்கு இடையறாத பக்தியை தரவேண்டும் என்று கேட்டுவிட்டார்.
சிவபெருமான் மகனே அர்ஜுனா... நீ அபிமன்யூவை கொன்றவர்களை கொல்வதற்காக மனதிற்குள்ளேயே கேட்டாயே பாசுவத கனி அதனை நான் இப்போது உனக்கு தருகிறேன். ஆனால் நீ அடுத்த பிறவியில் இப்போது நீ கேட்டாயே ஒருவரம் இடையறாத பக்தியை தரவேண்டும் என்று அந்த வரத்தை நான் அடுத்த பிறவியில் உனக்கு தருவேன்.
ஆனால் நீ என்னை திட்டினாயே வேடன் என்று, எனவே நீ அடுத்த பிறவியில் வேடர் குலத்தில் பிறந்து ஒரு பன்றியின் காரணமாக காளஹஸ்தியில் என்னை கண்டு முக்தி பெருவாய் என்று கூறினார் சிவபெருமான். இதுதான் கண்ணப்பநாயனாரின் முற்பிறப்பு வரலாறு.
வேடர் குலத்தில் ஒரு தலைவர் இருந்தார். அவர் பெயர் நாகன். அவருடைய மனைவி பெயர் தத்தை. இந்த நாகனுக்கும் தத்தைக்கும் நீண்டகாலமாக குழந்தைப்பேறு இல்லை. இதனால் இவர்கள் இருவரும் முருகப்பெருமானை நோக்கி தவம் செய்தனர். முருகப்பெருமானின் திருவருளால் நாகனுக்கும் தத்தைக்கும் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தின்னன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
தின்னன் சிறுவயதிலேயே காட்டிற்கு சென்று புலிக்குட்டியை பிடித்து வந்து வீட்டின் முற்றத்தில் கட்டிபோட்டு விடுவான். அந்த அளவிற்கு வீரமுடன் இருந்தான். தின்னன் 7 வயதிலேயே வில்விற்றையை கற்றுக்கொண்டு நல்ல தின்மையாகவும், வேடவர் குலத்திற்கு ஏற்ற தைரியசாலியாகவும் இருந்தார்.
வேடவர் தலைவனாகிய நாகனுக்கு இப்போது வயதாகிவிட்டது. வேட்டைக்கு இவர்கள் செல்லாததால் மலைப் பகுதியில் விளையக்கூடிய பயிர்களை எல்லாம் விலங்குகள் அழிக்கத்தொடங்கின. இதனால் வேடர்கள் எல்லோரும் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். இதனால் வேடவர்களின் தலைவனாகிய நாகன், தன்னுடைய வேடவ இன மக்களை எல்லாம் அழைத்து எனக்கு வயதாகிவிட்டது. என்னால் இனி வேட்டையாட முடியாது. எனவே என்னுடைய மகானான தின்னனை தலைவனாக அறிவிக்கிறேன் என்று கூறினார் நாகன்.
தலைவனான தின்னன் வேட்டையாட வில்லும், வாளும் கொண்டு சென்றார். தின்னனுக்கு நானன், காடன் என்று இரண்டு நண்பர்கள் இருந்தனர். ஒருநாள் தின்னனும், நானனும், காடனும் காட்டுக்கு வேட்டையாட காட்டிற்கு சென்றனர். காட்டில் ஒரு பன்றி தின்னனாரின் அருகிலேயே ஓடி ஓடி வந்து கொண்டிருந்தது. உடனே தின்னனாரும் அந்த பன்றிக்கு பின்னாடி ஓடினார். தின்னனை தொடர்ந்து நாகனும், அவருக்கு பின்னால் காடனும் ஒருவர் பின் ஒருவராக ஓடிச்சென்றனர். கடைசியில் தின்னனார் அந்த பன்றியை தன்னுடைய ஈட்டியால் ஒரு குத்து குத்தி கொன்றுவிட்டார்.
நெடுந்தூரம் ஓடி வந்ததால் இவர்கள் மூவருக்கும் பசி எடுக்கத்தோன்றியது. அப்போது தின்னன் தனது நண்பர்களிடம், குடிக்க தண்ணீர் கேட்டார். உடனே அவருடைய நண்பர்களான நாணனும், காடனும் திருகாளத்தி மலைக்கு தின்னனை அழைத்துக்கொண்டு சென்றனர். அங்கு நதிக்கரை தின்னனின் நண்பன் காடன் அந்த பன்றியை சாப்பிடுவதற்கு நெருப்புமூட்டிக்கொண்டு இருந்தார்.
அப்போது திருக்காளத்தி மலை உச்சியில் உள்ள சிவபெருமான பார்க்க நாணன் தன்னுடைய நண்பனான தின்னனாரை அழைத்துக்கொண்டு சென்றார். திருக்காளத்தி மலையில் உள்ள சிவபெருமானை பார்த்த தின்னன், அவரை பார்த்து சிவபெருமானே இந்த கொடிய காட்டின் எப்படி தனியாக இருக்கிறீர்கள் என்று கூறி வருத்தப்பட்டார். அதன்பிறகு நான் உடனே உங்களுக்கு சாப்பிடுவதற்கு ஏதாவது கொண்டுவருகிறேன் என்று சொல்லி தன்னுடைய நண்பன் காடன் சுட்டு வைத்திருந்த பன்றி இறைச்சியை பார்த்தார்.
அந்த இறைச்சியில் எந்த பகுதி சுவையாக இருக்கும் என்று நினைத்து அந்த பகுதியை சாப்பிட்டு பார்த்து அந்த எச்சில் இறைச்சியை ஒரு இலையில் சேர்த்து வைத்து அதனை சிவபெருமானுக்கு கொண்டுசெல்லலாம் என்று எடுத்துக்கொண்டு செல்ல, ஐயோ இறைச்சி சாப்பிட்டால் சிவபெருமானுக்கு தண்ணீர் தாகம் எடுக்கும். எனவே தண்ணீர் எப்படி கொண்டு செல்வது என்று எண்ணிக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய தண்ணீரை தன்னுடைய வாயில் முகர்ந்து வைத்துக்கொண்டு உடனே திருக்காளத்தில் இருக்கக்கூடிய சிவபேருமானின் ஆலயத்துக்கு சென்றார் தின்னன்.
அதன்பிறகு தான் கொண்டுவந்த இறைச்சியையும் சிவபெருமானுக்கு படைத்தார் தின்னன். பின்னர் வாயில் முகர்ந்து கொண்டுவந்த நீரை மஞ்சன நீராக எண்ணி சிவபெருமான் மீது உமிழ்ந்துவிட்டார். பிறகு சிவபெருமானை பார்த்து சாப்பிடுங்கள் என்று தின்னனார் பவ்யமாக வேண்டிக்கொண்டார்.
இவ்வாறு தொடர்ந்து தின்னனார் தான் சுவைத்து பார்த்து கொண்டுவந்த இறைச்சியையும், வாயில் உமிழ்ந்து கொண்டுவந்த நீரை மஞ்சன நீராகவும் சிவபெருமானுக்கு படைத்து வந்தார். திருகாளத்தி மல்லையில் தினமும் காலையில் சிவபெருமானுக்கு ஆகம முறைப்படி சிவகேசரியார் என்பவர் பூக்கள், மஞ்சன நீர், அமுது கொண்டு பணி செய்வது வழக்கம். அன்று மதியம் தான் தின்னனார், தான் சுவைத்துக்கொண்டுவந்த இறைச்சியையும், எலும்பையும் படைத்தார். மறுநாள் பூஜை செய்வதற்காக பூக்கள், மஞ்சனநீர், அமுது ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் செய்ய வந்தார்.
உடனே சிவபெருமானுக்கு முன்னாள் இறைச்சியும், எலும்புத்துண்டும் இருப்பதை பார்த்த சிவகேசரியார் நடுநடுங்கி போனார். இந்த கொடுஞ்செயலை செய்தவர் யாரோ என்று கூறிக்கொண்டு அதனை எடுத்து சுத்தம் செய்துவிட்டு, அருகில் இருந்த நதியில் குளித்துவிட்டு வந்து சிவபெருமானுக்கு பூஜை செய்தார். இப்படி 4 நாட்கள் சென்றது. இந்த 4 நாட்களும் சிவகேசரியார் பூக்களும், மஞ்சனநீரும், அமுதும் கொண்டு வந்து அபிஷேகம் செய்துவிட்டு செல்வார். மாலையில் தின்னனார் வந்து இறைச்சிகளும், எலும்புகளும் கொண்டுவந்து வழிபாடு செய்வார்.
௪ நாட்களும் தொடர்ந்து இந்த இறைச்சிகளை அப்புறப்படுத்திக்கொண்டே வந்தார். ஐந்தாவது நாள் ரொம்ப வருத்தப்பட்டு இறைவனிடம் நீ எப்படி பொருத்துக்கொண்டு இருக்கிறாய். இந்த கொடுமையை எப்படியாவது நீக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு மனம் வருந்தி வேண்டினார். அன்று இரவு சிவகேசரியார் கனவில் சிவபெருமான் வந்து, என்னிடம் வந்து பூஜை செய்பவனை சாதாரண வேடன் என்று நினைத்துவிடாதே. நீ அவன் செய்யும் பக்தியை நாளை நேரில் வந்து மறைந்திருந்து பார் என்று கூறினார்.
சிவகேசரியார் காளஹஸ்தி மலைக்கு சென்று அங்கு ஒரு மரத்தின் பின்னால் மறைந்திருந்து என்ன நடக்கிறது என்பதை கவனித்தார். வழக்கம்போல் அன்றும் தின்னனார் ரொம்ம மகிழ்ச்சியுர இலையில் இறைச்சியும், வாயில் நீரும் முகர்ந்து வந்தார். அப்போது சிவபெருமானின் ஒரு கண்ணில் இருந்து ரத்தம் வடிந்துகொண்டு இருந்தது. உடனே சிவபெருமான் அப்பா... என்று ஓடி வந்து அலறிவிட்டார். இதனால் வாயில் இருந்த மஞ்சனநீர் கீழே வடிந்தது. உடனே ஊனுக்கு ஊன் வினைதீர்க்கும் என்கிற பழமொழி தின்னனாருக்கு நினைவுக்கு வந்தது. சிவபெருமானே உங்களுடைய கண்களில் இருந்து ரத்தம் வடிகிறது என்று கவலைப்படவேண்டாம். என்னிடம் இரண்டு கண்கள் உள்ளன என்று கூறிவிட்டு தன்னுடைய ஒரு கண்ணை பிடுங்கி எடுத்து சிவபெருமானின் ஒரு கண்ணில் வைத்தார்.
அப்போது ரத்தம் வடிவது நின்றுவிட்டது. தின்னனாருக்கு ஒரே சந்தோசம். சிவபெருமானுக்கு கண்களில் இருந்து வடியக்கூடிய ரத்தம் நின்றுவிடவே தின்னனாருக்கு ஒரே சந்தோசம். அந்த சந்தோசம் தீருவதற்குள், சிவபெருமானின் மற்றொரு கண்ணில் இருந்தும் ரத்தம் வடிந்தது. இதை பார்த்ததும் சிவபெருமான் வருத்தப்படாதீர்கள். எனக்கு இன்னொரு கண்ணும் இருக்கிறது. அதையும் நான் உமக்கே தந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு மற்றொரு கண்ணையும் பிடுங்க சென்றார்.
அப்போது சிபெருமானுக்கு வைக்கும் போது அடையாளம் தெரிவதற்காக தன்னுடைய காலின் பெருவிரலை அடையாளத்திற்கு சிவபெருமானின் ரத்தம் வடியக்கூடிய மற்றொரு கண்ணில் வைத்து ஊன்றி வைத்துவிட்டு அம்பை எடுத்து மற்றொரு கண்ணையும் குத்தும்போது சிவபெருமான் திகைத்து நின்று பொறு கண்ணப்பா பொறு என்று அசரிரீயாக தடுத்து நிறுத்தினார். என்னுடைய கண்ணில் ரத்தம் வடிவதை பார்த்தவுடன் உன்னுடைய கண்ணை பிடுங்கி நீ வைத்ததால் நீ கண்ணப்பர் என்று அழைக்கப்படுவாய்.
அதுமட்டுமில்லாமல் நீ எப்போதும் என்னுடனேயே இருப்பாய் என்று கூறி திருக்காளத்தி மலையில் வைத்து முக்தியும் கொடுத்தார் சிவபெருமான். இந்த கண்ணப்பநாயனாரின் வரலாற்றில் இருந்து தெரிவது என்னவென்றால் இறைவனிடம் நாம் எப்போதும் அன்போடும், பக்தியோடும் இருந்தால் முக்தி கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் பிறவிப்பிணிகூட நீங்கும் இதைத்தான் இந்த கதை நமக்கு உணர்த்துகிறது. பக்தியோடு இருப்போம். முக்தி பெறுவோம்.
- ராஜகோபுரத்துக்கு முன்னதாக தல தீர்த்தமான சூலகங்கை உள்ளது.
- தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளுள் ஒன்று காமன் பண்டிகை.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளுள் ஒன்று காமன் பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசை முடிந்து மூன்றாவது நாள் தொடங்கி வளர்பிறையில் கொண்டாடப்படும் இப்பண்டிகை சுமார் 15 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும். காமனை சிவன் எரிப்பதும், பின்னர் ரதிதேவியின் வேண்டுகோளுக்கிணங்கி அவனை உயிர்ப்பிப்பதுமான புராண வரலாறே காமன் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. காமனை எரித்ததும், சிவனின் நெற்றிக்கண் நெருப்பை வாயு பகவான் சுமந்து சென்று, சரவணப்பொய்கையில் விட்டு முருகப்பெருமான் பிறப்புக்கு வித்திட்டதுமான புராண வரலாறு நிகழ்ந்த திருத்தலமே, திருக்குறுக்கை திருத்தலம்.
தல வரலாறு
தீர்க்கவாகு என்ற முனிவா், சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கு கங்கை நீரை ஆகாயத்தின் வழியே பெற்று அபிஷேகம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒவ்வொரு ஆலயத்தின் முன்னே நின்று நீண்ட தன் இரு கரங்களை உயரே தூக்குவார். குடத்தில் கங்கை நீர் வரும். அதைக் கொண்டு அபிஷேகம் செய்வார்.
அதன் அடிப்படையில் இவ்வாலயத்திற்கு வந்த அவர், ஆலயத்தின் முன்புறமுள்ள திரிசூல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டார். சூலதீர்த்தம் கங்கையை விட புனிதமானது என்பதை அறியாது வழக்கம்போல, கங்கைநீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய முடிவுசெய்து தன் இரு கரங்களையும் ஆகாயத்தை நோக்கி தூக்கினார்.
கங்கை நீர் வருவதற்கு பதிலாக அவரது நீண்ட கைகள் குறுகிப்போயின. இதை எதிர்பாராத முனிவர் இறைவனை சரணடைந்தார். முதலில் விநாயகரை வழிபட விநாயகரும் தன் கையை குறுக்கிக் கொண்டு காட்சியருளி அவர் கவலையைப் போக்கினார். இதனால் இத்தலத்தின் பெயர் 'குறுங்கைத்தலம்' என்றானது. குறுங்கை விநாயகர், ஆலய பிரகாரத்தில் தனிச் சன்னிதியில் ஆவுடையார் மீது இருப்பதும், அவருக்கு அருகில் குறுங்கை முனிவரின் உருவம் இருப்பதும் இந்த ஆலயத்தின் சிறப்பாகும்.
புராண வரலாறு
பிரம்மனின் பேத்தியும், தட்சனின் மகளுமான தாட்சாயிணியை சிவபெருமான் மணந்தார். அது பிடிக்காத தட்சன், சிவபெருமானை அழைக்காமல் யாகம் நடத்தினான். இதனால் கோபமடைந்த தாட்சாயிணி, தட்சனின் வேள்வித்தீயில் விழுந்து உயிர் துறந்ததுடன், வேள்விக்கான பலன் கிடைக்காதபடி செய்தாள். தாட்சாயிணியின் முடிவு கேட்டு கோபம் கொண்டு சிவபெருமான், வீரபத்திரரை அனுப்பி தட்சனின் வேள்விச் சாலையையும், தட்சனையும் அழித்தார். பின்னர் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார் ஈசன்.
இந்த நிலையில் சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்ற சூரபதுமன் மற்றும் தாரகாசுரன் ஆகியோர், தேவர்களை துன்புறுத்தி வந்தனர். அசுரா்களால் பாதிக்கப்பட்ட தேவர்கள், அவர்களை அழிக்க ஒரு குமாரனைத் தோன்றச் செய்யுமாறு சிவபெருமானிடம் வேண்டுகோள் வைப்பதென முடிவு செய்தனர். ஆனால் அவர் யோக நிலையில் இருந்ததால், பல முயற்சிகளை செய்தும், தவத்தை கலைக்க இயலவில்லை. இறுதியாக காமக் கடவுளான மன்மதன் மூலம், சிவன் மீது அம்பு விடச் செய்து அவரது தவத்தை கலைத்தனர்.
இதனால் கோபமுற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணைத் திறந்து காமனைப் பார்க்க அவன் எரிந்து சாம்பலானான். இதுவே 'காம தகனம்' எனப்படுகிறது. மன்மதனின் மனைவியான ரதிதேவி, தன் கணவனை உயிர்ப்பித்து தரும்படி சிவபெருமானிடம் வேண்டினாள். சிவபெருமான் அவளிடம், "நான் பூலோகத்தில் பார்வதியை மணம் புரியும்போது, மன்மதனுக்கு சாப விமோசனம் கிடைக்கும். அதுவரை அவன் உன் கண்களுக்கு மட்டுமே தெரிவான்" என்று அருளினார்.
காமன் தகனத்தின் போது சிவனின் கண்களிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியை வாயு பகவான் சுமந்துச் சென்று சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளில் விழச்செய்தார். இது ஆறு குழந்தைகளாக உருப்பெற, கார்த்திகைப் பெண்கள் அறுவர், அந்தக் குழந்தைகளை வளர்த்தனர். பார்வதிதேவி ஆறு குழந்தைகளையும் தனது இரு கரத்தால் ஒன்றாக அணைக்க, அந்த ஆறுபேரும் ஒருவராக மாறினர். இப்படி காமனை தகனம் செய்து ஆறுமுகனை உருவாக்கி, அசுரனை அழிக்க சிவன் அருள் புரிந்த திருத்தலமே திருக்குறுக்கை திருத்தலம்.
ஆலய அமைப்பு
ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் மேற்கு நோக்கி ஆலயம் அமைந்துள்ளது. ராஜகோபுரத்துக்கு முன்னதாக தல தீர்த்தமான சூலகங்கை உள்ளது. வாசலில் உள்புறமாகத் துவார கணபதியும், சுப்பிரமணியரும் இருக்கின்றனர். வெளிச்சுற்றில் தோட்டம் மட்டுமே உள்ளது. சன்னிதிகள் எதுவும் கிடையாது. இவ்வாலயத்தில் கொடிமரம் இல்லை. நந்தி, பலிபீடம் மட்டும் உள்ளது. பஞ்சமூர்த்தி மண்டபத்தின் இடதுபக்கம் உள்ள சன்னிதியில், ஞானாம்பிகை அம்மன் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறார். அம்மன் சன்னிதிக்கு எதிரில், நந்தி, பலிபீடம், இருபுறமும் துவாரபாலகியர் உள்ளனர். அம்பாள் சன்னிதியின் வலதுபுறம் சுக்ர வார அம்மனைக் காணலாம்.
உள் கோபுரம் தாண்டி உள்ளே செல்ல நடராஜர் மண்டபம் உள்ளது. இதன் வடக்குப்புறத்தில் முருகப்பெருமான், கஜலட்சுமி சன்னிதிகளும், தெற்கில் சோஹரேசுவரர், சோமாஸ்கந்தர், நிருதிகணபதி சன்னிதிகளும் உள்ளன. அடுத்துள்ள சம்ஹார மண்டபத்தில் சிவபெருமான், யோகமூர்த்தியாக வீற்றிருக்கிறார். சிவபெருமானைச் சுற்றி சனகாதி முனிவர்கள் உள்ளனர். மகாமண்டபத்தில் பலிபீடமும் நந்தியம் பெருமானும் இடம்பெற்றிருக்க, கருவறையில் மூலவர் வீரட்டேசுவரர் சதுரமான ஆவுடையார் மீது லிங்கத் திருமேனியுடன் சுயம்புவாக காட்சி தருகிறார். லிங்கத்தை உற்றுப் பார்த்தால் சிவபெருமான் மீது மன்மதன் எய்த தாமரை மலர் பீடத்தின் முன்புறம் நடுவில் இடம்பெற்றிருப்பதைக் காணலாம். மூலவர் வீரட்டேசுவரரை வணங்குபவர்களுக்கு துயரம் நீங்கி மன அமைதி கிடைக்கும். சுவாமி சன்னிதிக்கு நேர் எதிரில் ரதிமன்மதன் சிற்பங்கள் இருக்கின்றன.
திருச்சுற்றில் கிணறு, தலவிருட்சமான கடுக்காய் மரம், செவிசாய்த்த நந்தி, நவக்கிரகங்கள், சூரியர், பைரவர், மடப்பள்ளி குறுங்கை விநாயகர் சன்னிதி, அதற்கடுத்து ஞானசம்பந்தர், சேரமான், சந்திரசேகரர், பிரதோஷ நாயனார் ஆகியோர் உள்ளனர். கருவறை கோட்டத்தில் துர்க்கை, பிரம்மா, பைரவர், அண்ணாமலையார், விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, மகாகணபதி வீற்றிருக்கின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு ௮ மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். அமைவிடம்
இவ்வாலயம் அமைந்துள்ள திருக்குறுக்கை செல்வதற்கு மயிலாடுதுறையிலிருந்து நேரடி பேருந்து மற்றும் ஆட்டோ வசதி இருக்கிறது. மணல்மேடு மற்றும் குத்தாலத்தில் இருந்தும் ஆட்டோ வசதி உள்ளது. அருகாமையில் உள்ள ரெயில் நிலையம் மயிலாடுதுறை.
- திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சிறப்பு அலங்கார திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆவணி-16 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திருதியை நள்ளிரவு 1.42 மணி வரை பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: உத்திரட்டாதி மாலை 5.32 மணி வரை பிறகு ரேவதி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை
மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ சுவாமிக்கு திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல் உப்பிலியப்பன்கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சிறப்பு அலங்கார திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உறுதி
ரிஷபம்-உவகை
மிதுனம்-உதவி
கடகம்-சோர்வு
சிம்மம்-பணிவு
கன்னி-தாமதம்
துலாம்- ஆக்கம்
விருச்சிகம்-திடம்
தனுசு- பரிசு
மகரம்-நிதானம்
கும்பம்-திறமை
மீனம்-லாபம்
- காலை 9 மணிக்கு வள்ளி மணவாள பெருமானுக்கு அபிஷேகம் நடக்கிறது.
- திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள சின்னம்பேடு என்ற ழைக்கப்படும் சிறுவாபுரியில் புகழ்பெற்ற ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். செவ்வாய்கிழமைகளில் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.
இந்நிலையில் சென்னை அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு சார்பில் சிறுவாபுரி முருகன் கோவிலில் திருக்கல்யாணம் நாளை மறுநாள்(3-ந்தேதி) நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு விநாயகர், ஆதி மூலவர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் மூலவருக்கு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு வள்ளி மணவாள பெருமானுக்கு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் காலை 11 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து மதியம் 12 மணிக்கு சுவாமி பிரகார புறப்பாடும் மதியம் 12.30 மணிக்கு பக்தர்களுக்கு அன்ன தானமும் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், வழிபாட்டு குழுவினரும் செய்து வருகிறார்கள்.
- அபிமன்யு என்ற யானை தலைமையில் யானைகள் மைசூர் வந்தடைந்தன.
- மைசூர் அரண்மனை அர்ச்சகர்கள் பிரஹல்லாதராவ் தாண்டா சாளுவ துலா சுப லக்னத்தில் பாரம்பரிய முறைப்படி சிறப்பு பூஜை நடந்தது.
மைசூர்:
உலகப் புகழ்பெற்ற 413-வது மைசூர் தசரா விழா கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்கும் யானைகளுக்கு இன்று காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. மைசூர் மாவட்டப் பொறுப்பாளர் ஹெச்.சி.மகாதேவப்பா நாகர்ஹோலே பூங்காவின் பிரதான வாயிலான வீரனஹோசஹள்ளி அருகே அலங்கரிக்கப்பட்ட யானைகளின் முற்றங்களில் மலர்களை வைத்து தொடங்கி வைத்தார்.
காலை 9.45 மணி முதல் 10.15 மணி வரை வீரனஹோசஹள்ளி கேட் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் மைசூர் அரண்மனை அர்ச்சகர்கள் பிரஹல்லாதராவ் தாண்டா சாளுவ துலா சுப லக்னத்தில் பாரம்பரிய முறைப்படி சிறப்பு பூஜை நடந்தது.
அபிமன்யு என்ற யானை தலைமையில் யானைகள் அர்ஜுனன், பீமா, கோபி, தனஞ்சய, வரலட்சுமி, விஜயா, மகேந்திரன், கஞ்சன் ஆகிய யானைகள் மைசூர் வந்தடைந்தன.
இந்த நிகழ்ச்சியில் வனத்துறை மந்திரி ஈஸ்வர் காந்த்ரே, ஹுன்சூர் எம்எல்ஏ ஹரிஷ் கவுடா, மேயர் சிவக்குமார், கலெக்டர் டாக்டர் கே.வி.ராஜேந்திரா, வன அலுவலர் சவுரப்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- பிரம்மோற்சவத்தில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- பக்தர்களின் வசதிக்காக மாட வீதிகளில் ஜெர்மன் தொழில் நுட்பத்துடன் கூரை அமைக்கப்படும்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்நிலையில் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் திருப்பதியில் உள்ள அன்னமைய்யா பவனில் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு தர்மா ரெட்டி கூறியதாவது:-
பிரம்மோற்சவத்தில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதிகமானோர் சாமியை தரிசிக்கவும் வழி வகுக்கப்பட்டுள்ளது.
அதனால், பிரம்மோற்சவ நாட்களில் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கான சிறப்பு தரிசனங்கள் போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளது. எஸ்.சி, எஸ்.டி, பி.சி. மற்றும் மீனவ பக்தர்கள் 1,000 பேருக்கு தினமும் இலவச தரிசனம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும்.
செப்டம்பர் 22-ந் தேதி இரவு 7 மணிக்கு கருட சேவை நடக்கிறது. அன்று திருப்பதியிலிருந்து திருமலைக்கு மோட்டார் பைக்குகள் வர தடை விதிக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக மாட வீதிகளில் ஜெர்மன் தொழில் நுட்பத்துடன் கூரை அமைக்கப்படும்.
பிரம்மோற்சவ வாகன சேவையின்போது, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 9 மாநில கலைஞர்களால் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
மலைப்பாதையில் இப்போதைய நிபந்தனைகளே பிரம்மோற்சவத்திலும் பின்பற்றப்படும்.
ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 59,808 பேர் தரிசனம் செய்தனர். 25,618 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.60 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
இன்று பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் நேரடி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரமானது.
- திருக்கடவூர் என்ற ஊரில் பிறந்தவர் தான் அபிராமி பட்டர்.
- சிறுவயது முதல் அபிராமி அன்னையின் பரமபக்தராக இருந்தார்.
சோழவள நாட்டில் காவிரியின் தென்கரையில் இருக்கக்கூடிய திருக்கடவூர் என்ற ஊரில் பிறந்தவர் தான் அபிராமி பட்டர். அபிராமிபட்டருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். இவர் நாளொருமேனியும் பொழுதொருவண்ணமாக வளர்ந்து வந்தார்.சிறுவயது முதல் அபிராமி அன்னையின் பரமபக்தராக இருந்தார். இதனால் சுப்பிரமணியன் என்ற பெயர் மறைந்து அபிராமிபட்டர் என்று மக்களால் அழைக்கப்பட்டார்.
அபிரமாமிபட்டருக்கு தமிழ்மொழியுடன், வடமொழி, சமஸ்கிருதம் போன்ற மொழிகள் எல்லாம் தெரியும். அதுமட்டுமல்லாமல் இசைக் கலையிலும் தேர்ச்சிபெற்று விளங்கினார். இப்படி கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினார். தெய்வபக்தியிலும் முதிர்ச்சி அடைந்து காணப்பட்டார் அபிராமிபட்டர்.
தன்னுடைய அப்பாவை குருவாகக்கொண்டு காயத்ரி மகா மந்திரத்தின் அரும்பொருளையும் சக்கர வழிபாட்டின்முறைகளையும் நன்கு அறிந்துகொண்டார் அபிராமி பட்டர். தேவியின் வழிபாட்டு முறைகளால் இயற்கையாக கவிதை பாடக்கூடிய இயல்பையும் அபிராமி பட்டர் பெற்றிருந்தார். அபிராமி அம்மையின் திருக்கோலத்தை தன்னுடைய இதயத்தில் நிலைநிறுத்தி ஞானநிலையிலேயே நிலைத்து இருந்தார் அபிராமி பட்டர்.
அதுமட்டுமில்லாமல் தன்னுடைய வீட்டிலும் சக்தி பூஜையையும், ஸ்ரீசக்ர பூஜையையும் தவறாமல் செய்து வந்தார் அபிராமி பட்டர். திருமணம் முடிந்த பின்பும் இல்லற வாழ்க்கையில் ஒரு பற்றற்ற நிலையிலேயே வாழ்ந்து வந்தார் அபிராமி பட்டர். அபிராமி பட்டரை அபிராமி பக்தர் என்று சொல்வதை விட அபிராமி பித்தர் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இருந்தார் அபிராமி பட்டர்.
அபிராமிபட்டரின் சிந்தையும், செயலும் அபிராமி அமையின் திருப்பாத கமலங்களிலேயே ஒன்றி இருந்தது. இதைபார்த்துக் கொண்டிருந்த அபிராமி அம்மையின் மனம் கரையத் தொடங்கியது. தனது அன்பு அடியாரான அபிராமி பட்டரின் பக்தியை உலகிற்கு உணர்த்த எண்ணினார். உடனே தனது திருவிளையாடலை நடத்த நினைத்தார் உமையம்மையான அபிராமி அம்மை.
அந்த சமையத்தில் தான் சரபோஜை மன்னன் 18&ம் நூற்றாண்டில் தஞ்சை தரணியை அரசாட்சி செய்து வந்தார். அந்த மன்னன் அமாவாசை நாளன்று காவிரிபட்டினம் சென்று கடலில் நீராடிவிட்டு அப்படியே திருக்கடவூர் வந்து அமுதகடேஸ்வரரையும், அபிராமி அம்மையையும் வணங்க வேண்டும் என்று நினைத்தார்.
மன்னன் கோவிலுக்கு வருவதற்கான முன்னேற்பாடுகள் எல்லாம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதனால் ஆலயமே விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்குபார்த்தாலும் பசுமையான வாழைமரங்களும், மாவிலை தோரணங்களும் அழகாக இருந்தன. அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலோ ஆங்கார வேலைபாடுகளுடன் மிக அழகாக இருந்தது. மேளதாளங்களுடன் வேத மந்திரங்களும் ஒலித்துக் கொண்டிருந்தன.
சரபோஜை மன்னன் கோவிலுக்கு வரக்கூடிய அன்று அமுதகடேஸ்வரருக்கும், அபிராமி அம்மைக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. வாசமிகு, வண்ணமிகு ஆடை, ஆபரணங்களாலும் அழகா அழகுபடுத்தி இருந்தாங்க. அமுதகடேஸ்வரரான சிவலிங்கத்திற்கு சங்கு அபிஷேகத்திற்காக 1008 சங்குகளை தயார் நிலையில் வைத்திருந்தனர். பூஜைகளை விஷேசமாக நடத்திக்கொண்டிருந்தனர்.
சரபோஜை மன்னர் வந்ததும் கோவில் யானை மாலைபோட்டு வரவேற்றது. உடனே பூரணகும்ப மரியாதை அளித்து சரபோஜை மன்னனை வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். சரபோஜை மன்னன் முதலில் ராஜ கோபுரத்தை வணங்கியவாறு கோவிலுக்குள் சென்றார். சரபோஜை மன்னன் முன்னிலையில் அபிஷேகம் தொடங்கியது. அமுதகடேஸ்வரருக்கு ஆனந்தாமாக நடந்த 1008 சங்கு அபிஷேக ஆராதனைகளை கண்டுகளித்து பரவசமானார் சரபோஜை மன்னர். தனது இருகரம் குவித்து அமுதகடேஸ்வரரை வணங்கினார் சரபோஜை மன்னர்.
அதன்பிறகு அபிராமி அம்மையின் சன்னதிக்கு வந்தார் சரபோஜை மன்னர். அங்கு வந்த மன்னனை கண்டதும் அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் மரியாதையா ஆளுக்கொரு பக்கமாக விலகி நின்றனர். ஆனால் ஒருவர் மட்டும் அப்படி செய்யவில்லை. சரபோஜை மன்னன் வந்ததையோ, பரிவாரங்கள் இருந்ததையோ எதுவுமே அறியாமல் அபிராமி அம்மையின் அலங்கார அழகில் தன்னை மறைந்து சிலையாக நின்றுகொண்டிருந்தார் அபிராமி பட்டர்.
அபிராமிபட்டரின் தோற்றப்பொலிவைக்கண்டு சரபோஜை மன்னன் மெய்மறந்து நின்றார். அபிராமி பட்டரிடம் உரையாட வேண்டும் என்று எண்ணிய சரபோஜை மன்னர் அருகில் இருந்தவர்களிடம் யார் இவர் என்று கேட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அனைவரும் இவர் ஒரு பரம பித்தர் என்று கூறினர்.ஆனால் அவர்கள் சொன்ன கருத்தை சரபோஜை மன்னரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நெற்றியிலே திருநீறு அணிந்து அதன்நடுவே செந்தூர பொட்டு வைத்து கழுத்தில் ருத்ராட்சத்துடன் சிவக்கோலத்துடன் திகழ்ந்த அபிராமி பட்டரை பார்த்து சரபோஜை மன்னர் கேட்டார் சுவாமி தாங்கள் யார்? நான் உங்களை பற்றி அறிந்துகொள்ளலாமா என்று சரபோஜை மன்னர் அபிராமி பட்டரிடம் கேட்டார்.
அப்போதுதான் பக்தி மயக்கத்திலிருந்து விடுபட்டார் அபிராமி பட்டர். அருகில் இருந்த அரசரை கவனித்தார். அரசரை கண்டதும் அபிராமி பட்டருக்கு ஒன்றுமே புரியவில்லை. இருந்தாலும் தன்னை சுதாரித்துக்கொண்டு நான் இங்கு பஞ்சாங்கம் செய்கிறேன். அபிராமி அம்மையின் அழகையும், பெருமைகளையும் மனம்குளிர பாடுபவன் என்றார். இதை கேட்டதும் சரபோஜை மன்னர் இன்று அமாவாசை உண்டா? எத்தனை நாழிகை இருக்கிறது என்று கேட்டார்.
அபிராமி அம்மையின் மீது உள்ள ஆபரணங்களில் ஒளிப்பிழம்பில் மூழ்கி திளைத்த அபிராமிபட்டர், இன்று அமாவாசையா, இல்லை இன்று பவுர்ணமி என்று சொன்னார். அப்படி சொல்லிக்கொண்டிருக்கும்போதும் அபிராமி பட்டரின் பார்வை அபிராமி அம்மையின் பேரொளியிலேயே மதிமயங்கி இருந்தது. அபிராமிபட்டர் கூறியதை கேட்ட சரபோஜை மன்னன் என்ன இன்று பவுர்ணமியா? என்று சொல்லி ஆச்சரியப்பட்டார். சரிதான் இந்த மக்கள் கூறுவபோல இவரும் ஒருபித்தர் தான் என்று நினைத்தார்.
சற்று கோபத்துடன் சரபோஜை மன்னர் அபிராமி பட்டரை பார்த்து இன்று முழுநிலவு நாள் இல்லை என்றால் இவருக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்று கூறிவிட்டு சென்றார். சரபோஜை மன்னர் கூறிய வார்த்தைகள் அபிராமி பட்டரின் காதுகளில் விழவே இல்லை. சிறிதுநேரத்திற்கு பிறகு அபிராமி அம்மையின் கோவிலில் இருந்து புறப்பட்டு தனது வீட்டிற்கு சென்றார் அபிராமி பட்டர்.
அப்போது அங்கிருந்தவர்கள் இப்படித்தான் அரசரிடம் பேசுவீர்களா என்று கூறினார்கள். இன்று அமாவாசை. அதை சொல்வதற்கு பதிலாக பவுர்ணமி என்று கூறிவிட்டீர்களே. அரசர் உன் மீது கோபத்துடன் சென்று விட்டார் என்று கூறினர். இவர்களது பேச்சை கேட்க கேட்க சுய உணர்வை பெற்றார் அபிராமி பட்டர். இன்று அமாவாசையா நான் பவுர்ணமி என்று மாற்றி சொல்லிவிட்டேனே என்று குழம்பியபடி வீட்டிற்குள் நுழைந்தார் அபிராமிபட்டர்.
கோவிலில் நடந்ததை தன்னுடைய மனைவிடம் சொல்லி மனம்வருந்தினார் அபிராமி பட்டர். நீங்கள் கவலைப்படாதீர்கள் அபிராமி அம்மையின் பாதத்தை சரணடையுங்கள் என்று கூறினார் அபிராமி பட்டரின் மனைவி. உடனே அபிராமி பட்டர் இப்போதே தன்னுடைய தவறுக்கு பிராயசித்தம் தேடுகிறேன் என்று கூறிக்கொண்டு திரும்பவும் ஆலயத்திற்கு ஓடி சென்றார் அபிராமி பட்டர்.
அபிராமி அம்மையின் கோவில் வாசலில் பெரிய தீக்குழி ஒன்றை ஏற்படுத்தினார்கள். அதன் இருபக்கமும் கால்கள் நட்டு மேல்விட்டம்போட்டு தீக்குழிக்கு நடுவாக 100 பொறிகள் கொண்ட பெரிய உறி ஒன்ற கட்டி தொங்கவிட்டார் அபிராமி பட்டர். அபிராமி பட்டர் இப்படி செய்துகொண்டிருப்பதை பார்த்த ஊரார்கள் அனைவரும் அபிராமி அம்மையின் கோவிலுக்கு வந்தனர்.
அபிராமி பட்டர் முதலில் அந்த குழியில் நெருப்பை வளர்த்துவிட்டு கையில் ஒரு ஏடும், எழுத்தாணியும் எடுத்துகொண்டு அந்த உறியின்மீது தொங்கிக் கொண்டிருந்த உறியின் மீது ஏறி அமர்ந்தார். அபிராமி பட்டர் இவ்வாறு செய்து கொண்டிருக்க, அபிராமி பட்டரின் மனைவியோ அங்கு ஓடி வந்தார். மக்கள் அனைவரும் அபிராமி பட்டருக்கு வழிவிட்டனர். தன்னுடைய கணவரின் செயலைக்கண்டு அவரால் கரம் குவிக்க முடிந்ததே தவிர தன்னுடைய கணவரை தடுக்கக்கூடிய சக்தி அவர்களுக்கு இல்லை.
உடனே அபிராமி பட்டரின் மனைவி அபிராமி அம்மையின் சன்னதிக்கு ஓடினார். கண்ணீர்விட்டு அதறி அழுது தன்னுடைய திருமாங்கல்யத்தை கையில் எடுத்து அம்மையே நீயே கதி என்று அம்மையின் திருப்பாதங்களை பற்றிக் கொண்டார். இந்த பரிதாபமான சூழ்நிலையிலும் அபிராமி பட்டரின் செயலை சிலர் ஏளனம் செய்தனர்.
உறியில் அமர்ந்த அபிராமி பட்டர் தலைமீது கரம்குவித்து ராஜகோபுரத்தை தரிசித்து கோவிலுக்குள் இருக்கும் பிள்ளயாரை தியானித்தார். பக்தியால் மெய்மறந்து அபிராமி பட்டரின் கண்களில் நீர் அருவியாக கொட்டியது. உடனே தாரமர்கொன்றையும் செண்பகமாலையு என்று விநாயக காப்புச்செய்யுளை அபிராமி பட்டர் தன்னுடைய திருவாயால் பாட அதையே அவர் திருக்கரம் எழுதத்தொடங்கியது.
அதன்பிறகு உதிக்கின்ற செங்கம்மா உச்சித்திலகம் உணர்வுடயோன் எனத்தொடங்கும் அந்தாதியை பாடினார். பாடிக்கொண்டிருக்கும்போதே எழுதவும் செய்தார். அபிராமி பட்டரின் பாட்டை கேட்ட பக்தர்கள் எல்லோரு பரவசத்தில் மூழ்கினர்.
அந்தாதி என்பது ஒரு பாட்டின் இறுதியில் உள்ள எழுத்து அசை, சீர், அசை என்னும் ஐந்தினுள் ஏதேனும் ஒன்று அடுத்த பாட்டிற்கு ஆதியாக அமையுமாறு பாடக்கூடியது. அபிராமி அந்தாதியில் இருக்கக்கூடிய 100 பாடல்களும் அந்தாதியாக அமைந்தாலும், இறுதிப்பாட்டின் இறுதி சீர் முதல் பாட்டின் முதல் சீரில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் உரியில் நூல் ஒன்றையும் அறுத்துக்கொண்டே வந்தார் அபிராமி பட்டர்.
78 பாடல்கள் பாடி முடிந்தது உறியின் 78 கயிறுகள் அறுபட்டுவிட்டன. உறியோ சரியான நிலையில் இல்லாமல் தடுமாறிக்கொண்டே வந்தது. அங்கு கூடியிருக்கக்கூடிய மக்கள் பக்தியுடனும் ஒருவித பயத்துடனும் மெய்மறந்து நின்றனர். இன்னும் அபிராமி அம்மை வந்து அபிராமி பட்டரை காப்பாற்றவே இல்லையே என்றும் சூரியனும் மேற்கு திசையில் அஸ்தனமானபோகிறது என்றனர்.
அபிராமி பட்டர் இவ்வாறு செய்வதை கேள்விப்பட்ட சரபோஜ் மன்னரோ கோவிலை நோக்கி வந்தார். எதைப் பற்றியும் கவலைப்படாத அபிராமி பட்டர் அபிராமி அம்மையின் பாடல்களை பாடிக்கொண்டிருந்தார். 79&வது பாடலாகிய விழிக்கே அருளுண்டு அபிராமி வல்லிக்கே வேதம் சொன்ன விழிக்கே வழிபட நெஞ்சுண்டு என்று பாடி எப்படியும் இவ்வுலக தொடர்பை நாம் அறுத்துக்கொள்ள வேண்டியதுதான் என்று தீர்மானித்தார். உடனே ஏட்டையும், எழுத்தாணியையும் கீழே வைத்துவிட்டார் அபிராமி பட்டர்.
அந்த நேரத்தில் தான் அபிராமி அம்மை அபிராமி பட்டரின் முன் தோன்றினார். தன் அருட்குழந்தை இப்படி வருந்துவதை எத்தனை நேரம் தான் பார்த்துக் கொண்டிருப்பார் அபிராமி. தன்னுடைய காதில் அணிந்து கொண்டிருந்த தண்டை ஒன்றை கழற்றி விண்ணை நோக்கி வீசினார் அபிராமி அன்னை. எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் நடந்தேறியது.
ஆஹா இந்த ஆட்சியை என்ன சொல்வது உதிக்கின்ற செங்கதிர் போல அத்தடாகம் பேரொளி பொங்க இருண்ட வானில் உலகம் எங்கு பவுர்ணமி நிலவு போல ஒளிவீசியது. உடனே அபிராமி அம்மை அபிராமி பட்டரை பார்த்து அன்பனே நீ அரசனிடத்தி கூறியபடி நிலவை விண்ணில் பார் என்று திருவாய்மலர்ந்தார்.
அங்கிருந்தவர்கள் அனைவரும் பக்தி பரவசத்தில் ஆனந்தம் அடைந்தனர். அரசரோ அதிசயித்து நின்றார். அபிராமி பட்டர் கண்களில் இருந்து நீர் ஆறாய் பெருகியது. அம்மையே என்னையும் உன் அடியார்களில் ஒன்றாக சேர்த்துக் கொண்டாயே, நான் தன்யனானேன். நான் உறியில் திரியறுத்தேன். நீயோ நான் செய்த வினையெல்லாம் அறுத்துவிட்டாயே என்னே உன்னுடைய அருள், உன்னுடைய கருணை தன்ன என்று கூறி பூரிப்படைந்து உறியில் இருந்து கீழே இறங்கினார் அபிராமி பட்டர்.
பார்த்துக்கொண்டிருந்த பக்தர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். அபிராமி பட்டரின் மனைவியோ ஓடி வந்து அபிராமி பட்டரின் காலில் விழுந்து ஆனந்த கண்ணீர் வடித்தார். அம்மை எனக்கு மாங்கல்ய பிச்சை அளித்துவிட்டார் என்று கூறினார். இதை பார்த்துக்கொண்டிருந்த சரபோஜி மன்னரும் அபிராமி பட்டரின் அடிபணிந்தார். அபிராமி பட்டரை ஏளனம் செய்து எள்ளிநகையாடியவர்கள் எல்லாம் அபிராமி பட்டரை போற்றி தொழுதார்கள். அபிராமி பட்டரை வணங்கிய மன்னன் சுவாமி உங்கள் பெருமையை நான் அறியாமல் போனேன். இந்த திரு அந்தாதியை தொடர்ந்து பாடி அருளாசிபுரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அபிராமிபட்டர் அதற்கு இசைந்து கோவிலுக்குள் சென்று அம்மையின் சன்னதிக்கு எதிரில் அமர்ந்து தொடர்ந்து பாடினார் அபிராமி பட்டர்.இப்படி ஒவ்வொரு பாடலாக பாடும் போதும் உறியின் கயிறு கழன்று விழுந்துகொண்டே வந்தது. இறுதியாக 100-வது பாடலில் திருவடி பாதங்களை சரண்புகுவதற்கான மார்க்கத்தையும் காட்டிவிட்டார் அபிராமி பட்டர். 100&வது பாட பாடியதும் உறி கழன்று நெருப்பில் விழுந்து எரிந்துபோனது. பக்தர்கள் அனைவரும் அந்த சாம்பலினை பிரசாதமாக எடுத்து சென்றனர்.
அதன்பிறகு தான் அதுவரை பாடிய நூற்பயனை அபிராமி பட்டர் ஆத்தாளே எங்கள் அபிராமி வல்லியே அண்டமெல்லாம் பூத்தாளே என்ற பாடலை பாடி முடித்தார். இப்படி காப்பு, நூற்பயன் சேர்த்து 102 பாடல்களை கொண்ட அபிராமி அந்தாதியை பக்திகாவியமாக சமர்ப்பித்தார் அபிராமி பட்டர்.
நடந்ததை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சரபோஜி மன்னர் அபிராமி பட்டரை பார்த்து நீங்கள் உண்மையாகவே அபிராமி பட்டர்தான். சரபோஜி மன்னரும் அபிராமி பட்டருகு காணிக்கையாக ஏராமான விளைநிலகளை கொடுத்தார். ஆனால் அபிராமி பட்டர் அதனை மறுக்கவே, தங்கள் வழியினருக்காவது ஆகும் என்று செப்பு பட்டையம் ஒன்றை எழுதி கொடுத்தார் சரபோஜி மன்னர்.
இன்றளவும் அவரது வாரிசு வழியினரிடம் அந்த பட்டயம் உள்ளது. அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியோடு, திருக்கடவூர் கள்ளவாரண பிள்ளையார் பதிகம், அமுதக்டேஸ்வரர் பதிகம் காலசம்ஹார மூர்த்தி பதிகம் அபிராமி பதிகம் போன்றவற்றை படத்துள்ளார்.
திருக்கடையூரில் இன்று அபிராமி பட்டர் வாழ்ந்த வீடு உள்ளது. திருக்கடையூர் மேல்வளாகத்தில் இருக்கக்கூடிய 3&வது வீடு அபிராமி பட்டர் வீடு. ஒவ்வொரு வருடமும் திருக்கடையூர் அபிராமி ஆலயத்தில் தை அமாவாசை அன்று இரவு 8 மண் அளவில் தருமபுரம் ஆதினம் குருமகா சன்னிதானம் மற்றும் இளைய சன்னிதானம் இடத்தில் அபிராமி பட்டர் விழா சிறப்பாக நடைபெறுகிறது. அப்போது ஆயிரக்கணகானவர்கள் முன்னிலையில் அபிராமி அந்தாதி பாடப்படும்.
இந்த சமயத்தில் அபிராமி அம்மை நவரத்தின அங்கி அணிந்திருப்பார். ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் அம்மனுக்கு தங்க காசு சமர்ப்பித்து தீப ஆராதனை நடைபெறும். 79-வது பாடலின் முடிவில் கொடிமரத்திற்கு அடியில் பவுர்ணமி நிலவு தோன்றுவது போன்ற ஐதீக நிகழ்வு நடைபெறும். அப்போது கோவிலின் அனைத்து விளக்குகளும் அணைகப்படும் இருளில் பவுர்ணமி நிலவு ஒளிவீசுவது போன்ற தெய்வீகப்பெருவிழா. தன்னை முழுமையாக நம்பும் பக்தர்களுக்கு அபிராமி அம்மை எதுவும் செய்வாள் என்பதற்கு அபிராமி பட்டர் விழா சான்று.
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
- ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
சோபகிருது ஆண்டு, ஆவணி-15 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவிதியை பின்னிரவு 3.42 மணி வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம் : பூரட்டாதி மாலை 6.49 மணி வரை. பிறகு உத்திரட்டாதி.
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை. திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் பவனி. திருவேடகம் ஏலவங்குழலி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம். ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
நாளைய ராசிபலன்
மேஷம் - வெற்றி
ரிஷபம் - குழப்பம்
மிதுனம் - அன்பு
கடகம் - வாழ்வு
சிம்மம் - பணிவு
கன்னி - பண்பு
துலாம் - நலம்
விருச்சிகம் - சுகம்
தனுசு - விருத்தி
மகரம் - ஆக்கம்
கும்பம் - கடமை
மீனம் - பரிசு
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
- திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆவணி-15 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவிதியை பின்னிரவு 3.42 மணி வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம்: பூரட்டாதி மாலை 6.49 மணி வரை. பிறகு உத்திரட்டாதி.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை. திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் பவனி. திருவேடகம் ஏலவங்குழலி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம். ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம் -வெற்றி
ரிஷபம் -குழப்பம்
மிதுனம் -அன்பு
கடகம் -வாழ்வு
சிம்மம் -பணிவு
கன்னி -பண்பு
துலாம்-நலம்
விருச்சிகம்-சுகம்
தனுசு-விருத்தி
மகரம்-ஆக்கம்
கும்பம்-கடமை
மீனம்-பரிசு






