என் மலர்tooltip icon

    வழிபாடு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உகாதி அல்லது யுகாதி யுகம் என்ற பொருளை கொண்டது.
    • புதிய ஆண்டு தொடக்கத்தை உகாதி குறிக்கிறது.

    இந்து மத நூல்கள் மற்றும் புராணங்களின் படி பிரம்மா இவ்வுலகை படைக்க தொடங்கிய நாளை உகாதி குறிக்கிறது. பிரம்மா காலத்தை வரையறுக்க வருடங்கள், வாரங்கள், நாட்கள் மற்றும் மாதங்களை உருவாக்கி பிரபஞ்ச செயல்பாட்டின் அடையாளமான உகாதியை தொடங்கியதாக நம்பப்படுகிறது. உகாதி அல்லது யுகாதி யுகம் என்ற பொருளை கொண்டது. ஆதி என்றால் புதியது என்று பொருள்படும்.

    12 ஆம் நூற்றாண்டில் இந்தியக் கணிதவியலாளர் பாஸ்கராச்சாரியார் யுகாதியை புத்தாண்டின் தொடக்கமாக கண்டறிந்தார். கடுமையான குளிர்காலத்திற்குப் பிறகு வசந்த காலம் அதாவது புதிய ஆண்டு தொடக்கத்தை யுகாதி குறிக்கிறது.

    யுகாதி, தெலுங்கு பண்டிகையாகும். இது தெலுங்கு புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் யுகாதி மிகவும் உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது.

    மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தடவி குளிப்பார்கள். இது உடலையும் மனதையும் தூய்மையாக்கி புத்தாண்டுக்கு தயார்படுத்தும் என்று நம்பப்படுகிறது. மக்கள் புதிய ஆடைகளை அணிவார்கள். இது புதிய தொடக்கங்களையும் குறிக்கிறது.

    மக்கள் தங்கள் வீடுகளை மா இலைகள் மற்றும் ரங்கோலிகளால் அலங்கரிக்கின்றனர். இந்த நிகழ்விற்காக மக்கள் சிறப்பு உணவுகளை தயார் செய்வார்கள்.

    யுகாதியின் சிறப்பு உணவுகள்

    பேவு பெல்லா

    யுகாதி அன்று, நடைமுறையில் ஒவ்வொரு வீட்டிலும் வேப்ப இலைகள், மாம்பழம், புளி, உப்பு, வெல்லம் மற்றும் மிளகாய் ஆகியவற்றின் கலவையான பேவு பெல்லா தயாரிக்கப்படுகிறது.

    பச்சடி

    பச்சடி ஆறு சுவைகளையும் கொண்டுள்ளது. யுகாதி பண்டிகையின் போது மக்கள் தங்கள் குடும்பத்துடன் ருசிக்கும் உணவாக இது திகழ்கிறது.

    • இந்த ஆண்டு நாட்டில் வறட்சியும், புரட்சியும் உருவாகலாம்.
    • மக்களின் வாழ்க்கை போராட்டமாக அமையும்.

    செவ்வாய் நீச்சமும், வக்ரமும்

    * ஐப்பசி 6-ந் தேதி முதல் தை 4-ந் தேதி (23.10.2024 - 17.1.2025) வரை கடகத்தில் செவ்வாய் நீச்சம் பெறுகிறார்.

    * கார்த்திகை 18-ந் தேதி முதல் மாசி 9-ந் தேதி வரை (3.12.2024 - 21.2.2025) செவ்வாய் வக்ர நிலையில் இருக்கிறார்.

    * இடையில் தை 5-ந் தேதி (18.1.2025) அன்று மிதுன ராசிக்குச் செல்லும் செவ்வாய், மீண்டும் பங்குனி 24-ந் தேதி (7.4.2025) அன்று கடகத்திற்கு திரும்பி வருகிறார்.

    இதுபோன்ற காலங்களில் செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி, செவ்வாய் ராசிநாதனாக அமைந்த மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள், அங்காரக தலங்களுக்குச் சென்று வழிபடுங்கள்.

    சனி, குரு வக்ர காலம்

    * குரோதி வருடம் ஆனி மாதம் 5-ந் தேதி முதல் ஐப்பசி மாதம் 18-ந் தேதி (19.6.2024 - 4.11.2024) வரை, கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகிறார்.

    * குரோதி வருடம் புரட்டாசி மாதம் 29-ந் தேதி முதல் தை மாதம் 20-ந் தேதி (15.10.2024 - 11.2.2025) வரை, ரிஷப ராசியில் குரு வக்ரம் பெறுகிறார்.

    இந்த வருடம் தமிழ்ப் புத்தாண்டு தினமானது, சித்திரை மாதம் 1-ந் தேதி (14.4.2024) ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. இந்த தமிழ் வருடத்தின் பெயர் 'குரோதி'. வருகிற பங்குனி மாதம் 30-ந் தேதி (13.4.2024) சனிக்கிழமை அன்று, மிருகசீரிஷம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில், மிதுன ராசியில் இரவு 8.10 மணிக்கு மங்களகரமான குரோதி ஆண்டு பிறக்கிறது.

    இந்த ஆண்டின் கிரக நிலைகளை வைத்துப் பார்க்கும்பொழுது, இந்த ஆண்டு சுக்ரனின் வீடான ரிஷப ராசிக்குச் செல்லும் குரு, அங்கு ஓராண்டு காலம் இருப்பதால் எதிர்பாராத நல்ல திருப்பங்களும், இனிய சம்பவங்களும் நடைபெறவும், மக்களுக்கு ஆன்மிக சிந்தனை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

    பஞ்சாங்கத்தின்படி இந்த ஆண்டு நாட்டில் வறட்சியும், புரட்சியும் உருவாகலாம். நீர்நிலைகள் வற்றும் சூழலும், நெருப்பால் ஆபத்தும், புதிய தொற்று நோய்கள் உருவெடுத்தலும் இருக்கும். அரசாங்கத்தின் புதிய வரிவிதிப்பு, மக்களுக்கு மன கலக்கத்தை ஏற்படுத்தும்.

    புஞ்சைப் பயிர்களின் விளைச்சல் பெருகும். பவளம் மற்றும் சிவப்பு நிற ரத்தினங்களின் உற்பத்தி அதிகரிக்கும். தங்கம் விலை ஏற்றம் காணும். கால்நடைகள் விருத்தியாகும். எண்ணெய், மற்றும் திரவப் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். தேவையான அளவு மழை பெய்து விவசாயத்தை காப்பாற்றும்.

    அரசியல் களம் சூடுபிடிக்கும். மக்களின் வாழ்க்கை போராட்டமாக அமையும். பெட்ரோல், டீசல், எரிவாயு இறங்குவதுபோல் தோன்றி, மீண்டும் ஏறுமுகம் காணும். வெள்ளை நிற பொருட்களின் விலை உயரும். எப்படி இருந்தாலும் மக்களுக்கு வாங்கும் திறன் அதிகரிக்கும்.

    இந்த ஆண்டு அரசியல் மற்றும் ஆன்மிகத்தில் பெண்களின் பங்கு அதிகரிக்கும். சுக்ரன் வீட்டில் குரு உலா வருவதால் நாடு முழுவதும் திடீர், திடீரென பதற்றம் அதிகரிக்கும். கூட்டுப் பிரார்த்தனைகள் மூலம் மக்கள் மன அமைதி காணலாம். இளைஞர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டிய வருடம் இது. சனி - செவ்வாய் சேர்க்கை மற்றும் சனி -செவ்வாய் பார்வைக் காலங்களில், இயற்கை சீற்றங்களாலும், நூதன தொற்று நோய்களாலும் அச்சுறுத்தல் ஏற்படும். சித்திரை 18-ந் தேதி (1.5.2024) அன்று, குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. பகைக் கிரகமான சுக்ரன் வீட்டிற்கு குரு செல்வதால் எதிலும் கவனமாக செயல்படுங்கள்.

    சனி - செவ்வாய் சேர்க்கை (14.4.2024 முதல் 21.4.2024 வரை), சனி- செவ்வாய் பார்வை (23.10.2024 முதல் 17.1.2025 வரை) காலங்களில் கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த ஆண்டு முழுவதும் கடக ராசிக்கு அஷ்டமச் சனியும், சிம்ம ராசிக்கு கண்டகச் சனியும், விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியும், மகர ராசிக்கு பாதச்சனியும், கும்ப ராசிக்கு ஜென்மச்சனியும், மீன ராசிக்கு விரயச் சனியும் நடக்கிறது. இவர்கள் சுய ஜாதக அடிப்படையில் யோகபலம் பெற்ற நாளில், தசாபுத்திக்கு ஏற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது வளர்ச்சியைத் தரும்.

    • வசந்தோற்சவம் 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
    • திருப்பதி தேவஸ்தானம் ஆர்ஜித சேவைகளை ரத்து செய்துள்ளது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 3 நாட்கள் வசந்தோற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வசந்தோற்சவம் வருகிற 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    முதல் நாளான 21-ந்தேதி காலை 6.30 மணிக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். அதன்பின் வசந்த மண்டபத்துக்குக் கொண்டு வருகிறார்கள். அங்கு வசந்த உற்சவ அபிஷேகம் முடிந்ததும் கோவிலுக்கு திரும்புகின்றனர்.

    22-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத்தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து, வசந்த மண்டபத்துக்கு வருகிறார்கள். அங்கு உற்சவர்களுக்கு அர்ச்சகர்கள் வசந்தோற்சவம் நடத்துகின்றனர். வசந்தோற்சவம் முடிந்ததும் கோவிலுக்குள் கொண்டு செல்லப்படுகின்றனர்.

    கடைசி நாளான 23-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி, சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணர், ருக்மணியுடன் வசந்த மண்டபத்துக்கு வருகிறார்கள். அங்கு உற்சவர்களுக்கு வசந்தோற்சவம் நடந்ததும், மாலை கோவிலை அடைகிறார்கள்.

    வசந்தோற்சவத்தை முன்னிட்டு தினமும் மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. தினமும் மாலை 6 மணியில் இருந்து 6.30 மணி வரை ஆஸ்தானம் நடக்கிறது.

    சுட்டெரிக்கும் வெப்பத்தை தணிக்க உற்சவர்களுக்கு வசந்த காலத்தில் நடத்தப்படும் உற்சவம் என்பதால், `வசந்தோற்சவம்' என்று அழைக்கப்படுகிறது. வசந்தோற்சவத்தில் உற்சவர்களுக்கு மணங்கமழும் மலர்களை சமர்ப்பிப்பதுடன், பல்வேறு பழங்களும் வசந்தோற்சவத்தில் நெய்வேத்தியமாக சமர்ப்பிக்கப்படுகின்றன.

    ஆர்ஜித சேவைகள் ரத்து

    வசந்தோற்சவத்தை முன்னிட்டு 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை ஆர்ஜித சேவைகளான கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை, அஷ்டதள பாத பத்மாராதன சேவையை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    • வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது.
    • தெய்வீக மரமான கற்பக விருட்ச மர வாகன வீதிஉலா.

    திருமலை:

    திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று 8 மணியில் இருந்து 9 மணிவரை தெய்வீக மரமான கற்பக விருட்ச மர வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கற்பக மரத்தின் கீழே அமர்ந்து பக்தர்கள் தியானம் செய்தால் நாம் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும், நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.

    அதேபோல் பக்தர்கள் கேட்கும் வரங்களை வாரி வழங்கவே உற்சவர் கோதண்டராமர் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீதிகளில் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து சாமி தரிசனம் செய்தனர்.

    அதன்பிறகு உற்சவர்களான சீதாதேவி, லட்சுமணர், கோதண்டராமருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை சர்வ பூபால வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான சீதா, கோதண்டராமர், லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி, கோவில் துணை அதிகாரி நாகரத்னா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இன்று யுகாதி பண்டிகை.
    • திருக்குற்றாலம் ஸ்ரீகுற்றாலநாதர் தேரோட்டம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, பங்குனி 27 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பிரதமை இரவு 10.27 மணி வரை. பிறகு துவிதியை.

    நட்சத்திரம்: ரேவதி காலை 8.33 மணி வரை. பிறகு அசுவினி.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று யுகாதி பண்டிகை. தெலுங்கு வருடப் பிறப்பு சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் பூத வாகனத்திலும், சப்பரத்திலும் திருவீதி உலா. கோவில்பட்டி ஸ்ரீசுவாமி சப்பரத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு. திருக்குற்றாலம் ஸ்ரீகுற்றாலநாதர் தேரோட்டம். வடபழனி, வல்லக்கோட்டை தலங்களில் முருகப் பெருமானுக்கு காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆதாயம்

    ரிஷபம்-சுகம்

    மிதுனம்-சுபம்

    கடகம்-வரவு

    சிம்மம்-செலவு

    கன்னி-தாமதம்

    துலாம்- உழைப்பு

    விருச்சிகம்-வெற்றி

    தனுசு-களிப்பு

    மகரம்- உண்மை

    கும்பம்-பரிவு

    மீனம்-அமைதி

    • ரமலானின் பாக்கியமிக்க கடைசி இரவு.
    • நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள். மறு பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்

    ரமலானில் பாக்கியமிக்க கடைசி இரவு

    இஸ்லாமிய மாதங்கள் பெரும்பாலும் 30 'நாட்களில் நிறைவுபெறும். சில நேரங்களில் 29 நாட்களிலும் நிறைவடையும். அது ஆங்கில மாதங்களைப் போன்று 28 அல்லது 31 நாட்களிலோ நிறைவு பெறாது.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள். மறு பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்.' (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)

    இதே விதத்தில் தான் ரமலான் நோன்பை நோற்க வேண்டும். ரமலான் பிறை 29 நிறைவடைந்ததும் பெருநாள் பிறையான ஷவ்வால் மாத பிறையைக் காண வேண்டும். மேகமூட்டம் இருந்து பிறை தென்படாமல் போனாலும், மேகமூட்டமே இல்லாமல் பிறை தெரியவில்லை யென்றாலும் ரமலானை முப்பது நாட்களாக பூர்த்தி செய்ய வேண்டும். ரமலான் பிறை 29 நிறைவடைந்த அன்று பிறை தென்பட்டால், அன்றைய ரமலான் மாத நாட்கள் 29 நாட்களாக கணிக்கப்படும்.

    ரமலானின் கடைசி இரவு என்பது 29-வது இரவாக இருக்கலாம். அல்லது அன்றைய ரமலான் மாதம் முப்பது நாட்களாக இருந்தால், முப்பதாம் பிறை ரமலானின் கடைசி இரவாக இருக்கலாம். ஷவ்வால் பிறையான பெருநாள் பிறைக்கு முன்பு வருவதுதான் ரமலானின் கடைசி பிறை. ரமலானின் கடைசி இரவு அன்று நோன்பாளிகளுக்கு இறைவன் புறத்திலிருந்து வெகுமதிகள் வழங்கப்படுகிறது.

    அந்த வெகுமதிகளை பெற்றிட நோன்பாளிகள் ரமலானின் கடைசி பிறை இரவு அன்று அதிகமாக இரவு வணக்கம் புரியவேண்டும். அதிகமாக இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரவேண்டும். அன்றைய இரவிலும் சரி, ரமலானின் ஒவ்வொரு இரவிலும் சரி எல்லாம் வல்ல அல்லாஹ் நரக கைதிகளை விடுதலை செய்கின்றான். எனவே, ரமலானின் கடைசி இரவில் முடிந்த அளவுக்கு நரகத்திலிருந்து விடுதலை பெற இறைவனிடம் இருகரமேந்தி அதிகமாக இறைஞ்ச வேண்டும்.

    'ரமலான் மாதத்தின் முதல் இரவு வந்தால், ஓர் அழைப்பாளர் இவ்வாறு அழைப்பு கொடுக்கிறார். 'நன்மையை தேடுபவனே! நன்மையின் பக்கம் முன்னேறிச் செல்! தீமையை தேடுபவனே! தீமையை குறைத்துக்கொள்! நரகத்தில் இருந்து கைதிகளை விடுதலை செய்ய இறைவனுக்கு அதிகாரம் உள்ளது. மேலும், இது ரமலானின் ஒவ்வொரு இரவிலும் நீடிக்கிறது என்கிறார். இவ்வாறு நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)

    'ரமலானின் கடைசி இரவு அன்று நோன்பாளிகளுக்காக அவர்களின் பாவம் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) கூறியபோது, 'அந்த இரவு லைலத்துல்கத்ர் இரவா? என நபி (ஸல்) அவர்களிடம் கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அவ்வாறில்லை. ஒரு வேலையாளுக்கு அவரின் ஊதியம் முழுமையாக வழங்கப்படுவதெல்லாம் அவர் தம் வேலையை முடித்து கொடுத்த பிறகு தான்' என நபி (ஸல்) விளக்கம் அளித்தார்கள். (அறி விப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ் மது)

    ரமலானின் கடைசி இரவு ஏன் பாக்கியம் நிறைந்ததாக அமைகிறது என்றால், அன்றைய இரவுதான் நரக விடுதலையின் கடைசி இரவாகும். அன்றைய இரவில் நரக கைதிகளுக்கு நரக விடுதலை கிடைக்கிறது. மேலும், அன்றைய இரவில் இறைவனின் கூலியாக பாவமன்னிப்பும் கிடைக்கிறது. இத்தகைய இரண்டு வாய்ப்புகளும் ரமலானின் கடைசி இரவில் வாய்ப்பதால் அந்த கடைசி இரவு பாக்கியம் நிறைந்ததாக ஆகி விடுகிறது. இந்த பாக்கியத்தை பாக்கியசாலிகள் தவிர வேறு எவரும் பெறமுடியாது.

    • ஆயிரம் பொன் சப்பரம் தலையலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இன்று முகூர்த்தக்கால் கோவில் முன்பாக நடப்பட்டது.

    மதுரை:

    தமிழகத்தின் தென் திருப்பதி என்றழைக்கப்படும் மதுரை மாவட்டம் அழகர் கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவிற்கான பணிகள் இன்று கொட்டகை முகூர்த்த நிகழ்வுடன் தொடங்கியது.

    மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் சன்னதியில் இன்று காலை சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்தம் மற்றும் ஆயிரம் பொன் சப்பரம் தலையலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு கொட்டகை முகூர்த்த நிகழ்ச்சி தொடங்கியது. முகூர்த்தக்கால் கோவில் முன்பாக நடப்பட்டது. இந்த கொட்டகை மூகூர்த்த நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் கலைவாணன் மற்றும் கோவில் பட்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     இந்த நிகழ்ச்சியின் போது சித்திரை திருவிழா சைவ-வைணவ ஒற்றுமையை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி என்பதை நிருபிக்கும் வகையில் கள்ளழகர் கோவில் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய 2 கோவில்களின் சார்பிலும் தனித்தனியாக அச்சிடப்பட்ட பத்திரிகைகள் தாம்பூல தட்டில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் அழைப்பிதழ்களை நிர்வாக தரப்பில் ஒருவருக்கொருவர் அளித்து திருவிழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடைபெறக்கூடிய மதுரை வண்டியூர் வைகையாற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்தம் நடைபெற உள்ளது.

    இந்த கொட்டகை மூகூர்த்தத்தை தொடர்ந்து சித்திரை பெருவிழாவிற்கான பணிகள் தொடங்கும். 21-ந் தேதி மாலை 7 மணிக்கு அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர் மதுரைக்கு புறப்பாடாகும் நிகழ்ச்சி நடைபெறும், 22-ந்தேதி மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடைபெறும் இதனையடுத்து விழாவின் சிகர நிகழ்வாக 23-ந் தேதி காலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும்.

    பின்னர் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீச்சுதல் நடைபெறும். இதனை தொடர்ந்து 24-ந் தேதி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், அதனை தொடர்ந்து நள்ளிரவில் தசாவதாரம் நடைபெறும், 25-ந் தேதி தல்லாகுளம் பகுதியில் பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், 26-ந்தேதி அழகர்மலைக்கு புறப்பாடு ஆகுதல், 27-ந்தேதி சன்னதி திரும்புதல் நிகழ்வு நடைபெற்று விழா நிறைவுபெறும்.

    • ராமேசுவரம் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக திகழ்கிறது.
    • திதி கொடுத்து வழிபாடு நடத்தினால் பாவ விமோச்சனம் கிடைக்கும்.

    ராமேசுவரம்:

    தென்னகத்து காசியாக போற்றப்படும் ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக திகழ்கிறது. இந்த கோவிலில் அமாவாசை தினத்தன்று அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து சுவாமி வழிபாடு நடத்தினால் பாவ விமோச்சனம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    இந்த கோவிலில் தை அமாவாசை, மஹாளய அமாவாசை, ஆடி அமா வாசை மற்றும் மாதந்திர அமாவாசை நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வருகை தந்து புனித நீராடி வழிபாடு செய்கின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று பங்குனி மாத சர்வ அமா வாசை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசு வரம் வருகை தந்தனர்.

    தம்மோடு வாழ்த்து மறைந்து முன்னோர்களுக்கு அக்னி தீர்த்த கடலில் நீராடி திதி கொடுத்து வழிபட்டனர். இதன் பின்னர் ராமநாத சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

    ஏற்கனவே தற்போது பள்ளிகளுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிக மாக இருந்தது. அசம்பாவி தங்களை தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவிலிலும் பங்குனி மாத சர்வ அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • நாளை சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
    • 23-ந்தேதி திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூவாகம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

    10-ந் தேதி முதல் மகாபாரதம் சொற்பொழிவு மற்றும் சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது. 12-ந்தேதி பீஷ்மர் பிறப்பு மற்றும் 14-ந் தேதி பாஞ்சாலி பிறப்பும், 17-ந் தேதி கூத்தாண்டவர் பிறப்பும் மற்றும் சுவாமி வீதியுலா நடக்கிறது.

    21-ந் தேதி கூத்தாண்டவருக்கு பாலாலயம் நடைபெறுகிறது. 22-ந்தேதி மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சியும், சித்திரை பெருவிழாவின் முக்கிய விழாவான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி 23-ந் தேதி நடைபெற உள்ளது.

    அன்றைய தினம் மாலை இந்தியா முழுவதும் இருந்து வரும் திருநங்கைகள் கோவில் பூசாரி கையினால் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இதனை தொடர்ந்து 24-ந் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளது.ஏப்ரல் 25-ந் தேதி விடையாற்றியும், 26-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியுடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.

    • முருகன் என்றாலே நம் நினைவிற்கு வருவது மயிலும், வேலும் தான்.
    • முருகப்பெருமானுக்கே உரிய ஞானசக்தி வேலாயுதம்.

    நாம் வணங்கும் தெய்வங்கள் பெரும்பாலானவை ஆயுதம் ஏந்திய தெய்வங்களே. அந்த வரிசையில் காவல் தெய்வங்கள், பார்வதி, சிவபெருமான் மற்றும் முருகன் ஆகிய தெய்வங்களை குறிப்பிட்டு சொல்லலாம். முருகன் என்றாலே நம் நினைவிற்கு வருவது மயிலும், வேலும் தான். புராணங்களின் படி அதிக முக்கியத்துவம் வாய்ந்த மிக முக்கியமான ஆயுதமாக முருகனின் வேல் கருதப்படுகிறது.

    வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை" என்பதே தொன்று தொட்டு சொல்லும் கூற்று. முருகனுக்கு இந்த வேலினால் வேல்முருகன் என்ற பெயரும் உண்டு.

    சூரபத்மன் எனும் அரக்கனை அழிக்க பார்வதிதேவி தன்னுடைய சக்திகள் அனைத்தையும் திரட்டி வேலை வடிவமைத்து, அதனைக் கொண்டு சூரனை வதைக்கச் சொன்னதாக புராணங்கள் கூறுகின்றன. அதாவது வேல் என்பதே சக்தியின் அம்சம். அதனாலேயே வேலிற்கு சக்திவேல் என்ற பெயரும் உண்டு.

    முருகனின் வேலுக்கு அப்படி என்ன சிறப்பு?

    "வெல்" என்ற வினைச்சொல்லே நீண்டு 'வேல்" என்ற பெயர்ச்சொல் ஆகிறது. ஆகவே, வேல் என்றால் வெற்றி என்று பொருள்படும். பராசக்தியின் வடிவமே வேலாயுதம் என்பார்கள். அறிவு, ஞானம், பொருள், இன்பம், திருவருள், திருவருட்சக்தி முதலிய சொற்கள் வேலின் உருவமாக உள்ள பராசக்தியையே குறிப்பனவாகும்.

    முருகப்பெருமானுக்கே உரிய ஞானசக்தி வேலாயுதம். வெல்லும் தன்மையுடையது வேல். தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால், அதற்கு 'வெற்றிவேல்" என்ற பெயரும் உண்டு.

    வேல் உணர்த்துவது என்னவென்றால்... வேலின் அடிப்பகுதி ஆழமாகவும், இடைப்பகுதி விசாலமாகவும், நுனிப்பகுதி கூர்மையாகவும் திகழ்கிறது. வேலைப்போன்று அறிவானது கூர்மையானதாகவும், அகன்றும், ஆழமாகவும் இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துவதாக இருக்கிறது.

    முருக வழிபாட்டில் தொன்மை வாய்ந்தது வேல் வழிபாடு. இன்றும் பல முருகன் கோவில்களில் வேலுக்கு மட்டுமே பூஜை செய்து கொண்டிருக்கின்றனர். வேல் வழிபாட்டின் எளிமைப்படுத்தப்பட்ட நவீன வடிவமே சக்திவேல் வழிபாடு. சக்திவேலை வணங்குவது என்பது அன்னை பராசக்தியையும், தனயன் முருகனையும் ஒருசேர வணங்குவதாகும்.

    மனம் பாரமாக இருக்கும் நேரங்களில் மனதுக்குள் சக்திவேலை நினைத்துக் கொண்டு 'ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க" என்று சொன்னால், மனம் லேசாகி விடும்.

    வேல் வழிபாட்டின் பலன்கள்:

    காரிய தடைகள் விலகி திருமணம் கைகூடும், குழந்தைப்பேறு கிடைக்கும்.

    கல்வியில் மேன்மை, மன பயம் நீங்கி வலிமை உண்டாகும்.

    வியாபாரத்தில் இலாபம், பில்லி சூனியம், நவகிரகங்களினால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.

    சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மரண பயம் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம்.

    சொந்தமாய் வீடு மற்றும் நினைத்த காரியம் நினைத்தப்படியே நிறைவேறும்.

    கலைகளில் தேர்ச்சி, பாவங்கள் தீர்ந்து புண்ணியம் பெருகும்.

    வெற்றிவேல், வீரவேல் என முழங்கும் இடத்தில் வேலின் ஆற்றலும், முருகனின் ஆசியும் அனைவருக்கும் கிடைக்கும்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒவ்வொரு விரதங்களும் ஒவ்வொரு வகையான பலன்களை வழங்கும்.
    • நம்பிக்கையோடு விரதத்தை கடைப்பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    விரதங்கள் ஏராளமாக இருக்கின்றன. வார விரதம், தினசரி விரதம், மாத விரதம், திதி விரதம், வருட விரதங்கள், சிறப்பு விரதங்கள், பிரதோஷ விரதம், நட்சத்திர விரதங்கள் என பல வகை உண்டு. ஒவ்வொரு விரதங்களும் ஒவ்வொரு வகையான பலன்களை வழங்கும். விரதங்களின் மூலம் வாழ்வை மட்டுமல்ல, உடலையும் நலமாக்கிக் கொள்ள இயலும். நம்பிக்கையோடு விரதத்தை கடைப்பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    ஜாதக ரீதியாக நமக்கு யோக பலன் தரும் கிரகம் எது என்று அறிந்து, அதற்குரிய நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் பார்த்து விரதம் இருக்க வேண்டும். விரதம் இருக்கும் நாளில் அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நற்பலன் கிடைக்கும். தோஷங்கள் அனைத்தும் மாறி சந்தோஷங்கள் நம்மை நாடி வரும்.

    நவக்கிரகங்களின் சஞ்சாரம் நல்ல நிலையில் அமைந்தால் வாழ்க்கை சக்கரம் சீராக சுழல முடியும். ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு அமைப்பில் அமைந்திருக்கும். எந்த கிரகம் பலமிழந்து இருக்கின்றதோ அந்த கிரகத்தை பலப்படுத்துவதற்குரிய வழிபாடுகள். விரதங்களை மேற்கொண்டால் வாழ்வில் வளம் காண இயலும்.

    பொதுவாக வாரத்தின் ஏழு நாட்களில் எந்த கிரகத்திற்குரிய கிழமையில் விரதம் இருக்க வேண்டும் என்பதை அறிந்து விரதம் மேற்கொள்ள வேண்டும்.

    சூரியன் அருள்பெற விரும்புபவர்கள், ஞாயிற்றுக்கிழமை அன்று 'ஆதிவார விரதம்' இருப்பது நல்லது. சூரியன் உதிக்கும் முன்பாக எழுந்து சூரிய வழிபாட்டோடு சிவனையும் வழிபடுங்கள். கோதுமை தானம் செய்வது நல்லது.

    சந்திர பலம் வேண்டுபவர்கள் சந்திர பகவானின் அருளைப் பெற திங்கட்கிழமை அன்று விரதம் இருப்பது நல்லது. அன்றைய தினம் தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டு ஒரு சிலருக்காவது அரிசி தானம் செய்யலாம்.

    செவ்வாய் என்னும் அங்காரகன் அருளைப்பெற விரும்புபவர்கள், ஜாதகத்தில் செவ்வாய் பலம் குறைந்தவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டு துவரை தானம் செய்வது நல்லது.

    புதனின் அருளைப்பெற விரும்புபவர்கள், கல்விஞானம் பெற விரும்புபவர்கள், புதன்கிழமை விரதம் இருந்து மகா விஷ்ணுவை வழிபட்டு வருவதுடன் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்வது மிகவும் சிறந்தது. பாசிப்பயிறு தானம் செய்வது நல்லது.

    'குரு பார்க்க கோடி நன்மை' என்பதால் குருவின் அருளைப் பெற விரும்புபவர்கள், வியாழக்கிழமை விரதம் இருந்து முல்லைப்பூ மாலை அணிவித்து குருவை வழிபட்டு, சுண்டல் தானம் கொடுப்பது நல்லது.

    சுக்ரன் அருளைப் பெற விரும்புபவர்கள் வெள்ளிக் கிழமை விரதம் இருந்து, மாலை நேரத்தில் சிவாலயத்திற்குச் சென்று வெண் தாமரை பூ மாலை அணி வித்து லட்சுமி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. அன்றைய தினம் அன்னதானம் செய்வது மிகவும் உகந்தது. மொச்சை தானம் செய்யலாம்.

    சனி பகவானின் அருளைப்பெற விரும்புபவர்கள், சனிக்கிழமை அன்று விரதமிருந்து எள்தீபம் ஏற்றி வழிபட்டு வருவது நல்லது. திசை மாறிய தெய்வ வழிபாடு மிகவும் நற்பலனை வழங்கும். எள்ளோதரை நைவேத்தியம் அல்லது எள் தானம் செய்யலாம்.

    ராகுவின் அருளைப்பெற விரும்புபவர்கள். செவ்வாய்க்கிழமை தோறும் வடக்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டு வருவது நல்லது.

    கேது வின் அருளைப்பெற விரும்புபவர்கள், கேது இருக்கும் இடத்திற்குரிய நாளில் விநாயகப் பெருமானை முறையாக வழிபட்டு வருவது நல்லது. ராகுவிற்குரிய உளுந்து, கேதுவிற்குரிய கொள்ளு தானம் செய்வது சிறந்தது.

    ஒவ்வொரு வாரத்திலும் அந்தந்த கிரகத்திற்குரிய கிழமையில் தொடர்ந்து விரதம் இருந்து வழிபட்டால் கோரிக்கைகள் நிறைவேறும். உங்கள் ஜாதகத்திற்கு ஏற்ற நற்பலன் தரும் கிரகத்திற்குரிய கிழமையில் விரதம் இருப்பதால் குடும்ப முன்னேற்றமும், செல்வச்செழிப்பும், செல்வாக்கும் உயரும். வாழ்வில் வளம் காண இந்த விரதங்கள் உறுதுணையாக அமையும்.

    எந்த விரதம் இருப்பவர்களாக இருந்தாலும் முதன் முதலில் விநாயகப் பெருமானை வழிபட்ட பிறகு விரதத்தை தொடங்குவது நல்லது. விநாயகர் வழிபாடு வெற்றியை வழங்கும். பொதுவாக அனைவரும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து ஆனைமுகப்பெருமானை வழிபட்டால் சங்கடங்கள் அகலும்.

    • அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் ஆலய பங்குனி தேரோட்டம்.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

    திருச்சி:

    பஞ்சபூதங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருவானைக் காவல் ஜெம்பு கேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 17-ந்தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வருகிற 24-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டத்திற்கான எட்டுத்திக்கும் கொடியேற்றம் கடந்த 3-ந் தேதி நடைபெற்றது. அன்று முதல் தினமும் சாமி, அம்மன் காலையில் புறப்பாடு கண்டருளியும் மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நேற்று இரவு தேரோட் டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சுவாமி, அம்மன் தெருவடச்சானில் வீதி உலா வந்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதற்கென இன்று அதிகாலை சாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 5.30 மணியளவில் உற்சவர் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர்.

    முன்னதாக விநாயகர், சுப்ரமணியர் சிறிய தேரோட்டம் தேரோடும் வீதிகளில் வந்து நிலையை அடைந்தது. பின்னர் காலை 6.50 மணியளவில் ஜம்புகே ஸ்வரர் சுவாமி தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதி அடங்கிய நான்கு பிரகாரங்களில் சுற்றிவந்த தேர் மேல உள்வீதியும், தெற்கு உள்வீதியும் சந்திக்கும் இடத்திற்கு வந்தது.

    பின்னர் காலை 8.15 மணிக்கு அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அம்மன் தேர் சுவாமி தேருக்கு பின்னால் கொண்டு வந்து நிறுத்தப்ப ட்டது. அம்மன் தேருக்கு பின்னால் சண்டீகேஸ்வரர் சிறிய சப்பரத்தில் வந்து அருள்பாலித்தார். மீண்டும் பக்தர்களால் சாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு காலை 11 மணிக்கு நிலையை வந்தடைந்தது. அம்மன் தேர் 12.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

    தேரோட்டத்தின் போது கோவில் யானை அகிலா தேருக்கு முன் செல்ல மேளதாளம், சங்கொலி முழங்க வாணவேடிக்கையுடன் சிவ, சிவ, ஓம் சக்தி என்ற பக்தி முழக்கத்திற்கு நடுவே உற்சவர்கள் ஜெம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    தேர்த்திருவிழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஆகியவை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநகர போலீஸ் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. வியாபாரிகள் சார்பில் நடைபெற்ற அன்னதானத்தை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

    தேரோட்ட விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், கோவில் பண்டிதர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

    ×