என் மலர்
கோவில்கள்
வலியன் என்ற கரிக்குருவி இத்தலத்தை வலம் வந்து பூஜை செய்ததால் திருவலிவலம் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
இறைவர் திருப்பெயர் : இருதய கமலநாதேஸ்வரர், மனத்துணைநாதர்.
இறைவியார் திருப்பெயர் : வாளையங்கண்ணி, அங்கயற்கண்ணி.
தல மரம் : புன்னை.
தீர்த்தம் : சங்கர தீர்த்தம்.
வழிபட்டோர் : சூரியன், கரிக்குருவி(வலியன்), காரணமாமுனிவர் முதலியோர்.
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. ஒல்லையாறி உள்ளமொன்றிக், 2. பூவியல் புரிகுழல் வரிசிலை.
2. அப்பர் - நல்லான்காண் நான்மறைக.
3. சுந்தரர் - ஊனங் கைத்துயிர்ப் பாயுல.
தல வரலாறு:
கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும்.வலியன் என்ற கரிக்குருவி இத்தலத்தை வலம் வந்து பூஜை செய்ததால் திருவலிவலம் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு முகப்பு வாயில் நம்மை வரவேற்கிறது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் சுதையினாலான ரிஷப வாகனத்தில்மேல் அமர்ந்துள்ள சிவன் பார்வதி, வள்ளி தெய்வானையுடன் மயில் மீதமர்ந்த முருகர், மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர் ஆகியோரைக் காணலாம். உள்ளே நுழைந்தால் தூண்களுடன் கூடிய முன் மண்டபம் உள்ளது.
மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் உள்ளது. அதன் பின் உள்ள 3 நிலை கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் நேரே மூலவர் மனத்துனைநாதர் சந்நிதியுள்ள கட்டுமலை அமைந்துள்ளது. படிகளேறி மண்டபத்தை அடைந்தால் வலதுபுறம தெற்கு நோக்கிய அம்பாள் மாழையொண்கண்ணி சந்நிதி அமைந்துள்ளது.மூலவர் இருதய கமலநாதர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி எருந்தருளியுள்ளார். பிராகாரத்தில் வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர், இலக்குமி, காசிவிசுவநாதர், நவக்கிரகங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன.
ஆலயத்தைச் சுற்றி 4 புறமும் அக்காலத்தில் அகழி இருந்தது என்பது இத்தலத்து தேவாரப் பதிகங்களில் "பொழில் சூழ்ந்த வலிவலம்" என்று குறிப்பிட்டிருப்பதின் மூலம் அறியலாம். இத்தலத்திற்கு ஏகசக்கரபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு. இவ்வாலயத்தில் உள்ள திருமால் ஏகசக்கர நாராயணப்பெருமாள் என்ற பெயருடன் காட்சி தருகிறார். சூரியனும், காரணரிஷியும் இத்தல இறைவனை பூசித்துப் பேறுபெற்றுள்ளனர். இத்தல தீர்த்தம் காரண ரிஷியின் பேரால் காரண கங்கை என்றுரயைக்கப்படுகிறது. இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. சிவன் சந்நிதிக்கு இடப்பக்கம் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
தேவாரப்பாடல் பாடும் ஓதுவார்கள், தேவாரப்பாடல் பாடும் முன் இத்திருப்பாடலுடன் தான் தேவாரம் பாட ஆரம்பிப்பார்கள். தேவாரம் ஓதுவோர் யாவரும் முதன்முதலாக ஓதும் என்ற திருப்பாட்டு திருஞானசம்பந்தரால் முதல் திருமுறையில் இத்தலத்து இறைவன் மேல் பாடப்பெற்ற பூ இயல் புரிகுழல் வரிசிலை நிகர் நுதல் என்ற பதிகத்தின் 5-வது பாடலாகும். எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஆரம்பிக்கும் முனபு விநாயகருக்கு வந்தனம் சொல்லிவிட்டுத் தான் ஆரம்பிப்பது நமது மரபு. அதன்படி கணபதிவர அருளினான் என்று இப்பாடலில் வரும் கணபதியை தொழுதுவிட்டு தேவாரம் பாட ஆரம்பிப்பார்கள். சுந்தரர் தனது பதிகத்தில் 5-வது திருப்பாட்டில், சிறந்த இசைத்தமிழைப் பாடிய திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளும், திருநாவுக்கரசு சுவாமிகளும் அருளிச்செய்த பாடலகளைப் பெற்ற இறைவன் வலிவலத்தில் உள்ளான் என்று அவர்கள் இருவரையும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
போன்: +91- 4366 - 205 636
அமைவிடம் :
திருவாரூருக்கு தென்கிழக்கே 9 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. திருவாரூர் மற்றும் நாகபட்டினத்தில் இருந்து கீவளூர் வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது.
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர் வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம். இரண்டுமே நல்ல பாதைகள்
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இறைவியார் திருப்பெயர் : வாளையங்கண்ணி, அங்கயற்கண்ணி.
தல மரம் : புன்னை.
தீர்த்தம் : சங்கர தீர்த்தம்.
வழிபட்டோர் : சூரியன், கரிக்குருவி(வலியன்), காரணமாமுனிவர் முதலியோர்.
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. ஒல்லையாறி உள்ளமொன்றிக், 2. பூவியல் புரிகுழல் வரிசிலை.
2. அப்பர் - நல்லான்காண் நான்மறைக.
3. சுந்தரர் - ஊனங் கைத்துயிர்ப் பாயுல.
தல வரலாறு:
கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும்.வலியன் என்ற கரிக்குருவி இத்தலத்தை வலம் வந்து பூஜை செய்ததால் திருவலிவலம் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு முகப்பு வாயில் நம்மை வரவேற்கிறது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் சுதையினாலான ரிஷப வாகனத்தில்மேல் அமர்ந்துள்ள சிவன் பார்வதி, வள்ளி தெய்வானையுடன் மயில் மீதமர்ந்த முருகர், மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர் ஆகியோரைக் காணலாம். உள்ளே நுழைந்தால் தூண்களுடன் கூடிய முன் மண்டபம் உள்ளது.
மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் உள்ளது. அதன் பின் உள்ள 3 நிலை கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் நேரே மூலவர் மனத்துனைநாதர் சந்நிதியுள்ள கட்டுமலை அமைந்துள்ளது. படிகளேறி மண்டபத்தை அடைந்தால் வலதுபுறம தெற்கு நோக்கிய அம்பாள் மாழையொண்கண்ணி சந்நிதி அமைந்துள்ளது.மூலவர் இருதய கமலநாதர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி எருந்தருளியுள்ளார். பிராகாரத்தில் வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர், இலக்குமி, காசிவிசுவநாதர், நவக்கிரகங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன.
ஆலயத்தைச் சுற்றி 4 புறமும் அக்காலத்தில் அகழி இருந்தது என்பது இத்தலத்து தேவாரப் பதிகங்களில் "பொழில் சூழ்ந்த வலிவலம்" என்று குறிப்பிட்டிருப்பதின் மூலம் அறியலாம். இத்தலத்திற்கு ஏகசக்கரபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு. இவ்வாலயத்தில் உள்ள திருமால் ஏகசக்கர நாராயணப்பெருமாள் என்ற பெயருடன் காட்சி தருகிறார். சூரியனும், காரணரிஷியும் இத்தல இறைவனை பூசித்துப் பேறுபெற்றுள்ளனர். இத்தல தீர்த்தம் காரண ரிஷியின் பேரால் காரண கங்கை என்றுரயைக்கப்படுகிறது. இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. சிவன் சந்நிதிக்கு இடப்பக்கம் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
தேவாரப்பாடல் பாடும் ஓதுவார்கள், தேவாரப்பாடல் பாடும் முன் இத்திருப்பாடலுடன் தான் தேவாரம் பாட ஆரம்பிப்பார்கள். தேவாரம் ஓதுவோர் யாவரும் முதன்முதலாக ஓதும் என்ற திருப்பாட்டு திருஞானசம்பந்தரால் முதல் திருமுறையில் இத்தலத்து இறைவன் மேல் பாடப்பெற்ற பூ இயல் புரிகுழல் வரிசிலை நிகர் நுதல் என்ற பதிகத்தின் 5-வது பாடலாகும். எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஆரம்பிக்கும் முனபு விநாயகருக்கு வந்தனம் சொல்லிவிட்டுத் தான் ஆரம்பிப்பது நமது மரபு. அதன்படி கணபதிவர அருளினான் என்று இப்பாடலில் வரும் கணபதியை தொழுதுவிட்டு தேவாரம் பாட ஆரம்பிப்பார்கள். சுந்தரர் தனது பதிகத்தில் 5-வது திருப்பாட்டில், சிறந்த இசைத்தமிழைப் பாடிய திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளும், திருநாவுக்கரசு சுவாமிகளும் அருளிச்செய்த பாடலகளைப் பெற்ற இறைவன் வலிவலத்தில் உள்ளான் என்று அவர்கள் இருவரையும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
போன்: +91- 4366 - 205 636
அமைவிடம் :
திருவாரூருக்கு தென்கிழக்கே 9 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. திருவாரூர் மற்றும் நாகபட்டினத்தில் இருந்து கீவளூர் வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது.
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர் வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம். இரண்டுமே நல்ல பாதைகள்
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கடம்பவன நாதர் கோவில், தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 65-வது திருத்தலம் ஆகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருச்சிராப்பள்ளிக்கு வடமேற்கே 33 கிலோமீட்டர் தொலைவில், கரூர் நெடுஞ்சாலையில் உள்ள காவிரி பாயும் வளமான நகரம் குளித்தலை. இந்த ஊரானது, கடம்பதுறை, தட்சிணாகாசி, குழித்தண்டலை உள்ளிட்ட பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இங்குள்ள கடம்பவன நாதர் கோவில், தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 65-வது திருத்தலம் ஆகும்.
‘துறை’ என்றால் ‘ஆற்றின் கரையோரம் அமைந்த ஊர்’ என்று பொருள்படும். எனவே கடம்ப மரங்கள் நிறைந்த காவிரிக்கரை ஊர் என்பதால் ‘கடம்பந்துறை’ என்ற சிறப்பு பெயரைப் பெற்றது. பெயருக்கு ஏற்ப திருக்கோவிலின் வெளிச்சுற்றில் உள்ள நந்த வனம் முழுவதும் கடம்ப மரங்கள் நின்று அசைந்தாடுகின்றன. இத்தல கடம்பவன நாதருக்கு கடம்பமரம் தல விருட்சமாக இருப்பதில் ஆச்சரியமில்லை.
வடக்கு நோக்கியுள்ள ஐந்துநிலை ராஜகோபுரத்தைத் தரிசித்து விட்டு உள்ளே நுழைந்தால், நந்தி தேவர் அமர்ந்திருக்க கருவறையின் உள்ளே சிறிய சிவலிங்கத் திருமேனியுடன் காட்சி தருகிறார் கடம்பவனநாதர். இவர் வடக்கு திசை நோக்கி வீற்றிருப்பது பெருஞ்சிறப்பாகச் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சிவாலயங்களில் சென்னை கோயம்பேடு குறுங்காலீசுவரரும், குளித்தலை கடம்பவனநாதரும் மட்டும்தான் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளனர். மூலவருக்குப் பின்புறம் கருவறையில் சப்த கன்னியர்கள் வீற்றிருப்பது எங்குமில்லாத சிறப்பாகும்.
தல வரலாறு
தூம்ரலோசனன் என்ற அரக்கனை அழிக்க அம்பிகை துர்க்கை வடிவெடுத்துப் போரிடச் சென்றாள். அவளால் அரக்கனின் அட்டகாசத்தை அடக்க முடியாமல் போக, சப்த கன்னியரை துணைக்கு அழைத்துக் கொண்டு போரிட்டாள். அதன்பின் வெற்றி கிடைத்தது. அசுரனை அழித்த தோஷம் நீங்க, துர்கை ஆனவள் இத்தல இறைவனை தினமும் பூஜிப்பதாக ஐதீகம். எனவே இத்திருக்கோவிலில் துர்க்கை அம்மன் திருமேனி இல்லை.
சப்தகன்னியருள் ஒருவரான சாமுண்டியே துர்க்கையாக இருப்பதாகவும், அவருக்கே ராகுகால பூஜை நடைபெறுவதாகவும் கூறுகின்றனர். சுவாமி வடக்கு நோக்கி இருப்பதால் எதிரே தெற்கு நோக்கியபடி ஆடவல்லான் நடராஜர் இருக்கிறார். அவரது காலடியில் முயலகன் இல்லை. பொதுவாக ஒரு ஆலயத்தை பிரகார வலம் வரும்போது, கருவறை கோஷ்டத்தின் பின்புறம் லிங்கோத்பவரோ, மகாவிஷ்ணுவோ இருப்பார்கள். ஆனால் இங்கே தட்சிணாமூர்த்தி இருக்கிறார். கிழக்கு நோக்கியபடி விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், அவர் எதிரே லிங்கோத்பவர் காட்சி தருகிறார்கள்.
கிழக்கு நோக்கிய தனிச்சன்னிதியில் அம்பிகை ‘முற்றிலா முலை அம்மை’ என்ற பெயரில் அருளாட்சி செய்கிறாள். அப்பர் முதல் பதிகத்தில் முதல் வரியிலேயே இந்த அன்னையைப் பற்றி குறிப்பிடுகிறார். அறுபத்து மூவர் மூர்த்தங்களும், நவக்கிரகங்களும் திருக்கோவில் சுற்றில் காணப்படுகின்றன. கடம்பவன நாதரை சப்தகன்னியர் மட்டுமில்லாது அகத்தியரும், கண்வ முனிவரும் வழிபட்டுள்ளனர்.
முருகப்பெருமான் பூஜித்த தலம் என்பதால் ‘கந்தபுரம்’ என்றும், அசுரனிடம் இருந்து திருமால் வேதங்களை மீட்க இத்தல இறைவனை வழிபட்டதால் ‘சதுர்வேதபுரம்’ என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. “காமன் காய்ந்த பிரான் கடம்பந்துறை நாமம் ஏந்த தீவினை நாசமே” என்ற அப்பரின் வாக்குப் புனிதமாக நம் தீவினைகள் தீர்க்கும் கடம்பந்துறை திருக்கோவிலை ஒரு முறை வலம் வரலாமே.
‘துறை’ என்றால் ‘ஆற்றின் கரையோரம் அமைந்த ஊர்’ என்று பொருள்படும். எனவே கடம்ப மரங்கள் நிறைந்த காவிரிக்கரை ஊர் என்பதால் ‘கடம்பந்துறை’ என்ற சிறப்பு பெயரைப் பெற்றது. பெயருக்கு ஏற்ப திருக்கோவிலின் வெளிச்சுற்றில் உள்ள நந்த வனம் முழுவதும் கடம்ப மரங்கள் நின்று அசைந்தாடுகின்றன. இத்தல கடம்பவன நாதருக்கு கடம்பமரம் தல விருட்சமாக இருப்பதில் ஆச்சரியமில்லை.
வடக்கு நோக்கியுள்ள ஐந்துநிலை ராஜகோபுரத்தைத் தரிசித்து விட்டு உள்ளே நுழைந்தால், நந்தி தேவர் அமர்ந்திருக்க கருவறையின் உள்ளே சிறிய சிவலிங்கத் திருமேனியுடன் காட்சி தருகிறார் கடம்பவனநாதர். இவர் வடக்கு திசை நோக்கி வீற்றிருப்பது பெருஞ்சிறப்பாகச் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சிவாலயங்களில் சென்னை கோயம்பேடு குறுங்காலீசுவரரும், குளித்தலை கடம்பவனநாதரும் மட்டும்தான் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளனர். மூலவருக்குப் பின்புறம் கருவறையில் சப்த கன்னியர்கள் வீற்றிருப்பது எங்குமில்லாத சிறப்பாகும்.
தல வரலாறு
தூம்ரலோசனன் என்ற அரக்கனை அழிக்க அம்பிகை துர்க்கை வடிவெடுத்துப் போரிடச் சென்றாள். அவளால் அரக்கனின் அட்டகாசத்தை அடக்க முடியாமல் போக, சப்த கன்னியரை துணைக்கு அழைத்துக் கொண்டு போரிட்டாள். அதன்பின் வெற்றி கிடைத்தது. அசுரனை அழித்த தோஷம் நீங்க, துர்கை ஆனவள் இத்தல இறைவனை தினமும் பூஜிப்பதாக ஐதீகம். எனவே இத்திருக்கோவிலில் துர்க்கை அம்மன் திருமேனி இல்லை.
சப்தகன்னியருள் ஒருவரான சாமுண்டியே துர்க்கையாக இருப்பதாகவும், அவருக்கே ராகுகால பூஜை நடைபெறுவதாகவும் கூறுகின்றனர். சுவாமி வடக்கு நோக்கி இருப்பதால் எதிரே தெற்கு நோக்கியபடி ஆடவல்லான் நடராஜர் இருக்கிறார். அவரது காலடியில் முயலகன் இல்லை. பொதுவாக ஒரு ஆலயத்தை பிரகார வலம் வரும்போது, கருவறை கோஷ்டத்தின் பின்புறம் லிங்கோத்பவரோ, மகாவிஷ்ணுவோ இருப்பார்கள். ஆனால் இங்கே தட்சிணாமூர்த்தி இருக்கிறார். கிழக்கு நோக்கியபடி விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், அவர் எதிரே லிங்கோத்பவர் காட்சி தருகிறார்கள்.
கிழக்கு நோக்கிய தனிச்சன்னிதியில் அம்பிகை ‘முற்றிலா முலை அம்மை’ என்ற பெயரில் அருளாட்சி செய்கிறாள். அப்பர் முதல் பதிகத்தில் முதல் வரியிலேயே இந்த அன்னையைப் பற்றி குறிப்பிடுகிறார். அறுபத்து மூவர் மூர்த்தங்களும், நவக்கிரகங்களும் திருக்கோவில் சுற்றில் காணப்படுகின்றன. கடம்பவன நாதரை சப்தகன்னியர் மட்டுமில்லாது அகத்தியரும், கண்வ முனிவரும் வழிபட்டுள்ளனர்.
முருகப்பெருமான் பூஜித்த தலம் என்பதால் ‘கந்தபுரம்’ என்றும், அசுரனிடம் இருந்து திருமால் வேதங்களை மீட்க இத்தல இறைவனை வழிபட்டதால் ‘சதுர்வேதபுரம்’ என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. “காமன் காய்ந்த பிரான் கடம்பந்துறை நாமம் ஏந்த தீவினை நாசமே” என்ற அப்பரின் வாக்குப் புனிதமாக நம் தீவினைகள் தீர்க்கும் கடம்பந்துறை திருக்கோவிலை ஒரு முறை வலம் வரலாமே.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலம் என்ற பெயரிலேயே ஒரு திருத்தலம் இருப்பதும், அங்கு சிவாலயம் ஒன்று அமைந்திருப்பதும் எவ்வளவு பெரிய சிறப்பாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.
சிவபெருமானை அதிகமாக நேசிக்கும் அடியவர்களும், அவரின் பக்தர்களும் தவறாமல் உச்சரிக்கும் ஒரு வாசகம், ‘திருச்சிற்றம்பலம்.’ மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல திருவாசகத்தை சிவபெருமானே எழுதியதாகவும், அதன் முடிவில் தன்னுடையப் பெயரை ‘திருச்சிற்றம் பலம்’ என்று எழுதியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. அத்தகையச் சிறப்புவாய்ந்த இந்த நாமத்தை உச்சரித்து பலன் பெற்றவர்கள் ஏராளம்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலம் என்ற பெயரிலேயே ஒரு திருத்தலம் இருப்பதும், அங்கு சிவாலயம் ஒன்று அமைந்திருப்பதும் எவ்வளவு பெரிய சிறப்பாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். அந்த ஊரில் வசிக்கும் மக்கள்தான் என்ன தவம் செய்தவர்களாக இருக்க வேண்டும்.. திருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. அந்த வகையில் இந்த திருச்சிற்றம்பலத்து மண்ணை உடலில் பூசிக்கொண்டால் முக்தி கிடைக்கும் என்கிறார்கள்.
அப்படிப்பட்ட திருச்சிற்றம்பலத்தில் புராதனவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் லிங்கத் திருமேனியாக காட்சி தரும் சிவபெருமான், பெரிய நாயகி உடனாய புராதனவனேஸ்வரராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு கொடிமரம் இல்லை. ஆலயத்தின் வெளியே நந்திகேஸ்வரர், அவருக்கு எதிர்புறம் வடக்கு பகுதியில் இரட்டை விநாயகர் சன்னிதி உள்ளது. லிங்கத் திருமேனியில் சிவபெருமான் கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு பார்த்தும் வீற்றிருக்கிறார்கள்.
உள்பிரகாரத்தின் வடக்கில் மகா கணபதி, தன் தும்பிக்கை முகத்தை வடக்குபுறமாக தலைசாய்த்து வித்தியாசமான முறையில் காணப்படுகிறார். இது ஒரு அபூர்வமான அமைப்பாகும். மேலும் மகாலட்சுமி, வள்ளி- தெய்வானை உடனாய முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, சப்த கன்னியர்கள், சண்டிகேஸ்வரர், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை மற்றும் பைரவர், சூரியன், சந்திரன், நவக்கோள்களுடன் கூடிய லிங்கத் திருமேனி என பல்வேறு கடவுளர் சிலைகளை ஆலயம் முழுவதும் நாம் காணமுடியும். இந்த ஆலயத்தின் தலவிருட்சம், வில்வ மரமாகும்.
ஆடி, மார்கழி மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் இந்த ஆலயத்தில் திருமணம், காதுகுத்து, நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடந்தபடியே இருப்பதைக் காணலாம்.
இத்தல இறைவனின் பெயரைப் போலவே, இந்தக் கோவிலின் அமைப்பும், உருவச் சிலைகளும் புராதன காலத்தைச் சேர்ந்தவை போல் காட்சி தருகின்றன. இந்த ஆலயமானது திருமணத் தடை அகற்றும் பரிகாரத்தலமாக திகழ்கிறது.
எமன் சன்னிதி
சிவாலய தரிசனத்தை முடித்து வெளியே வந்தால், கிழக்கு நோக்கி 15 நிமிட நடைபயணத்தில் எமதர்மன் சன்னிதி இருக்கிறது. கையில் சூலாயுதம், பாசக்கயிறு, மந்திரக்கோல் தாங்கி, வலது காலை மடக்கி, இடதுகாலை தொடங்கவிட்ட நிலையில் எமதர்மன் காட்சி தருகிறார். இந்த எமதர்மனை தரிசித்தாலே பாவங்கள் விலகிவிடுவதாக நம்பிக்கை. சனிக்கிழமை தோறும் பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை, எமகண்ட நேரத்தில் ஆயுள் விருத்திக்கான பூஜைகள் இங்கு செய்யப்படுகின்றன. பிரிந்த தம்பதிகள் சேர, மரண கண்டம், விபத்துகள் நீங்க, பகை விலகவும் இந்த சன்னிதியில் பூஜைகள் நடத்தப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு கீற்று கொட்டகையில் சுதை சிற்பமாக இருந்த எமதர்மனுக்கு, தற்போது கற்சிலை வடித்து வைக்கப்பட்டுள்ளது. அவரைச் சுற்றி பரிவார தெய்வங்கள் உள்ளனர். எமன் சன்னிதிக்கு தெற்கு பகுதியில் ஆண்கள் மட்டும் நீராடும், ‘எம தீர்த்தக்குளம்’ அமைந்துள்ளது.
பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில், கீரமங்கலம் வழித்தடத்தில் சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் திருச்சிற்றம்பலம் திருத்தலம் அமைந்து உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலம் என்ற பெயரிலேயே ஒரு திருத்தலம் இருப்பதும், அங்கு சிவாலயம் ஒன்று அமைந்திருப்பதும் எவ்வளவு பெரிய சிறப்பாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். அந்த ஊரில் வசிக்கும் மக்கள்தான் என்ன தவம் செய்தவர்களாக இருக்க வேண்டும்.. திருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. அந்த வகையில் இந்த திருச்சிற்றம்பலத்து மண்ணை உடலில் பூசிக்கொண்டால் முக்தி கிடைக்கும் என்கிறார்கள்.
அப்படிப்பட்ட திருச்சிற்றம்பலத்தில் புராதனவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் லிங்கத் திருமேனியாக காட்சி தரும் சிவபெருமான், பெரிய நாயகி உடனாய புராதனவனேஸ்வரராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு கொடிமரம் இல்லை. ஆலயத்தின் வெளியே நந்திகேஸ்வரர், அவருக்கு எதிர்புறம் வடக்கு பகுதியில் இரட்டை விநாயகர் சன்னிதி உள்ளது. லிங்கத் திருமேனியில் சிவபெருமான் கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு பார்த்தும் வீற்றிருக்கிறார்கள்.
உள்பிரகாரத்தின் வடக்கில் மகா கணபதி, தன் தும்பிக்கை முகத்தை வடக்குபுறமாக தலைசாய்த்து வித்தியாசமான முறையில் காணப்படுகிறார். இது ஒரு அபூர்வமான அமைப்பாகும். மேலும் மகாலட்சுமி, வள்ளி- தெய்வானை உடனாய முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, சப்த கன்னியர்கள், சண்டிகேஸ்வரர், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை மற்றும் பைரவர், சூரியன், சந்திரன், நவக்கோள்களுடன் கூடிய லிங்கத் திருமேனி என பல்வேறு கடவுளர் சிலைகளை ஆலயம் முழுவதும் நாம் காணமுடியும். இந்த ஆலயத்தின் தலவிருட்சம், வில்வ மரமாகும்.
ஆடி, மார்கழி மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் இந்த ஆலயத்தில் திருமணம், காதுகுத்து, நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடந்தபடியே இருப்பதைக் காணலாம்.
இத்தல இறைவனின் பெயரைப் போலவே, இந்தக் கோவிலின் அமைப்பும், உருவச் சிலைகளும் புராதன காலத்தைச் சேர்ந்தவை போல் காட்சி தருகின்றன. இந்த ஆலயமானது திருமணத் தடை அகற்றும் பரிகாரத்தலமாக திகழ்கிறது.
எமன் சன்னிதி
சிவாலய தரிசனத்தை முடித்து வெளியே வந்தால், கிழக்கு நோக்கி 15 நிமிட நடைபயணத்தில் எமதர்மன் சன்னிதி இருக்கிறது. கையில் சூலாயுதம், பாசக்கயிறு, மந்திரக்கோல் தாங்கி, வலது காலை மடக்கி, இடதுகாலை தொடங்கவிட்ட நிலையில் எமதர்மன் காட்சி தருகிறார். இந்த எமதர்மனை தரிசித்தாலே பாவங்கள் விலகிவிடுவதாக நம்பிக்கை. சனிக்கிழமை தோறும் பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை, எமகண்ட நேரத்தில் ஆயுள் விருத்திக்கான பூஜைகள் இங்கு செய்யப்படுகின்றன. பிரிந்த தம்பதிகள் சேர, மரண கண்டம், விபத்துகள் நீங்க, பகை விலகவும் இந்த சன்னிதியில் பூஜைகள் நடத்தப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு கீற்று கொட்டகையில் சுதை சிற்பமாக இருந்த எமதர்மனுக்கு, தற்போது கற்சிலை வடித்து வைக்கப்பட்டுள்ளது. அவரைச் சுற்றி பரிவார தெய்வங்கள் உள்ளனர். எமன் சன்னிதிக்கு தெற்கு பகுதியில் ஆண்கள் மட்டும் நீராடும், ‘எம தீர்த்தக்குளம்’ அமைந்துள்ளது.
பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில், கீரமங்கலம் வழித்தடத்தில் சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் திருச்சிற்றம்பலம் திருத்தலம் அமைந்து உள்ளது.
‘கோவில் நகரம்’ என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. இவற்றுள் 5 வைணவத் திருக்கோவில்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
‘கோவில் நகரம்’ என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. இங்கு நடைபெறும் மகாமக உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினம் 12 சிவாலயங்களில் இருந்தும், 5 வைணவ திருக்கோவில்களில் இருந்தும், மகாமக குளத்திற்கு சுவாமிகள் தீர்த்தவாரி காண வருவார்கள். இவற்றுள் 5 வைணவத் திருக்கோவில்களைப் பற்றி இங்கே சிறிய குறிப்புகளாகப் பார்க்கலாம்.
சாரங்கபாணி கோவில்
கும்பகோணத்தில் உள்ள வைணவக் கோவில்கள் பலவற்றில், முதன்மையானதாக விளங்குகிறது, சாரங்கபாணி திருக்கோவில். ஏம முனிவர் என்பவர், திருமாலை நோக்கி கடுமையான தவம் புரிந்தார். அவர் முன்பாகத் தோன்றிய மகாவிஷ்ணு, “உனக்கு வேண்டிய வரங்களைத் தருகிறேன். நீ கும்பகோணம் சென்று அங்குள்ள அமுதவாவி தீர்த்தத்தில் நீராடி தவம் புரிந்து வா” என்று அருளினார். அதன் படியே ஏம முனிவரும், கும்பகோணம் வந்து தவம் செய்துகொண்டிருந்தார். அப்படி அவர் தவம் இருந்தபோது ஒரு நாள், அங்குள்ள குளத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர் மீது, ஒரு பெண் குழந்தை இருப்பதைக் கண்டார். அந்தக் குழந்தையை எடுத்து வந்து தன் மகளாக வளர்த்தார். ‘கோமளவல்லி’ என்று பெயரிடப்பட்ட அந்தப் பெண், ‘திருமாலை மணம் முடிக்க வேண்டும்’ என்ற எண்ணத்துடன் தவம் இயற்றத் தொடங்கினாள்.
கோமளவல்லியின் பக்திக்கு மனமிரங்கிய திருமால், ஏம முனிவருக்கு அருளாசி வழங்கியதோடு, கோமளவல்லியையும் மணந்துகொண்டார். இதன் நினைவாகவே இன்றளவும், இந்தக் கோவிலில் தை மாதம் நடைபெறும் விழாவின் 6-ம் நாளில், திருக்கல்யாாண உற்சவம் நடத்தப்படுகிறது. கருவறையில் ஐந்து தலை நாகத்தின் மீது பள்ளிகொண்டபடி சயன கோலத்தில் பெருமாள் வீற்றிருக்கிறார். உற்சவ பெருமாள், நின்ற கோலத்தில் அருள் வழங்குகிறார்.
ராஜகோபால சுவாமி கோவில்
கும்பகோணம் பெரிய கடைத் தெரு பகுதியில் அமைந்திருக்கிறது, ராஜகோபால சுவாமி கோவில். மகாமகம் அன்று, அங்குள்ள குளத்தில் தீர்த்தமாடும் வைணவக் கோவில்களில் இந்தக் கோவிலின் பெருமாளும் ஒருவர். இந்தக் கோவிலில் மூலவராகவும் உற்சவராகவும் ராஜகோபால சுவாமியே வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் ருக்மணி, சத்யபாமா, அலமேலுமங்கை, செங்கமலவள்ளி ஆகிய தாயார்களும் வீற்றிருந்து அருள்புரிகிறார்கள். ‘கோ’ என்பதற்கு ‘பசு’, ‘அரசன்’ என்று பொருள். ‘பாலன்’ என்றால் ‘சிறுவன்’ என்று அர்த்தம். ஏழை-எளிய மக்களுக்கு கேட்டதை வழங்கும் இறைவனாக, இங்கு ராஜகோபால சுவாமி வீற்றிருக்கிறார். இத்தல இறைவன், துணைவியரோடு அலங் காரப் பிரியனாக, ராஜ கம்பீரம் பொருந்தியவராக, எண்ணற்ற அணி கலன்களை உடலில் பூட்டியபடி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
மன்னார்குடியிலும், ராஜகோபால சுவாமி கோவில் ஒன்று உள்ளது. ஆனால் அங்கு மூலவராக மட்டுமே இறைவன் வீற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதிவராகப் பெருமாள் கோவில்
வைகுண்டத்தில் இருக்கும் நாராயணரை வழிபடுவதற்காக, சனகாதி முனிவர்கள் வருகை தந்தனர். அப்போது வைகுண்டத்தில் வாசல் காப்பாளர்களாக இருந்த விஜயன், ஜெயன் ஆகிய இருவரும், முனிவர்களைத் தடுத்தனர். இந்த நிலையில் நாராயணரே, வைகுண்ட வாசலைத் திறந்துகொண்டு வந்து முனிவர்களுக்கு காட்சி கொடுத்தார். அவரை தரிசனம் செய்த முனிவர்கள், தங்களுக்கு அனுமதி வழங்க மறுத்த ஜெயன், விஜயன் இருவரையும் அரக்கர்களாக பிறக்க சாபமிட்டனர். தானே அவர்களுக்கு சாப விமோசனம் அளிப்பதாக நாராயணர் கூறினார். அதன்படி பூலோகத்தில் பிறந்தவர்களே இரண்யாட்சனும், இரண்யகசிபுவும். இரண்யாட்சன் ஒரு முறை பூமியை களவாடி, கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். அதனை வராக அவதாரம் எடுத்து திருமால் மீட்டதோடு, இரண்யாட்சனை வதம் செய்தார்.
உலகில் முதலில் தோன்றிய இடம் ‘வராகபுரி’ என்னும் கும்பகோணம் என்று இந்தக் கோவில் தல புராணம் சொல்கிறது. எனவே முதலில் இந்தக் கோவிலில் உள்ள ஆதிவராகப் பெருமாளை வழிபட்ட பிறகே, அனைத்து தெய்வங்களையும் வழிபட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். அம்புஜவல்லி உடனாய ஆதிவராகப் பெருமாள் திருக்கோவில் என்று அழைக்கப்படும் இத்தலத்தில், மூலவராகவும் உற்சவராகவும் ஆதிவராகப் பெருமாள் வீற்றிருக்கிறார். தாயார் பெயர் அம்புஜவல்லி.
சக்கரபாணி கோவில்
கும்பகோணத்தில் உள்ள வைணவக் கோவில்களில், இரண்டாவது பெரிய கோவிலாக திகழ்வது, சக்கரபாணி திருக்கோவில் ஆகும். காவிரி ஆற்றின் தென்கரையில், பெரிய கடைத்தெருவின் வடக்கு மூலையில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. இத்தல மூலவர், சக்கர வடிவமான தாமரைப் பூவுடன் கூடிய அறுங்கோண எந்திரத்தில் வீற்றிருந்து காட்சி தருவதால், ‘சக்கரபாணி’ என்று பெயர் பெற்றார். எட்டு கரங்களைக் கொண்டு நின்ற கோலத்தில் அருளும் இந்த பெருமாளிடம், சங்கு, சக்கரம், வில், கோடரி, உலக்கை, மண்வெட்டி, கதை, செந்தாமரை போன்றவை காணப்படுகின்றன. சக்கரபாணி, ருத்ராட்சம் வைத்திருப்பவர் என்று கருதப்படுவதால், அவருக்கு சிவபெருமானைப் போல வில்வ அர்ச்சனை செய்யப்படுகிறது.
இத்தல தாயாரான விஜயவல்லியும் நின்ற கோலத்திலேயே அருள்புரிகிறாள். சூரிய பகவான் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளார். எனவே இது ‘பாஸ்கரத் தலம்’ என்றும் அழைக்கப்படுகிறது. சாரங்கபாணி கோவிலில் இருப்பதைப் போல, இங்கும் தட்சிணாயன வாசல் மற்றும் உத்தராயன வாசல் என்று இரண்டு வாசல்கள் இருக்கின்றன.
ராமசாமி கோவில்
கும்பகோணம் பொற்றாமரைக் குளத்திற்கு தென்மேற்கில், தஞ்சாவூர் செல்லும் சாலையில் பெரிய கடைத்தெருவிற்கு போகும் வழியில் ராமசாமி கோவில் அமைந்திருக்கிறது. நாயக்க மன்னர்களிடம் அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதர் என்பவர், இந்தக் கோவிலை கட்டி எழுப்பியதாக தல வரலாறு சொல்கிறது. கோவில் கருவறையில் உள்ள மூலவர், பட்டாபிஷேக ராமராக வீற்றிருக்கிறார். ராமரும், சீதையும் ஒரே ஆசனத்தில் அமர்ந்திருக்க, அவர்களுக்கு பரதன் குடைபிடித்திருக்கிறான். சத்ருக்கணன் சாமரம் வீசுகிறான். லட்சுமணன், வில் ஏந்திய நிலையில் ராமனின் கட்டளைக்காக காத்திருக்கிறான். ஆஞ்சநேயர் தன்னுடைய கையில் வீணை ஏந்தி, ராமாயணத்தை பாராயணம் செய்யும் நிலையில் காட்சி தருகிறார்.
விசுவாமித்திர முனிவரின் யாகத்தை காத்தல், தன்னை மீண்டும் அயோத்தி அழைத்துச் செல்ல வந்த பரதனுக்கு தன்னுடைய பாதுகைகளை அளித்தல், தனக்காக உயிர் கொடுத்த ஜடாயுவுக்கு மோட்சம் அளித்தல், முனிவர்களுக்காக அரக்கர்களை அழித்தல், தன்னுடைய துன்பங்களைக் கூறி வருந்திய சுக்ரீவனுக்கு, ஆறுதல் கூறி அவனுடைய ராஜ்ஜியத்தைப் பெற்றுக்கொடுத்தல், தன்னிடம் தஞ்சம் என்று வந்த விபீஷணனுக்கு, அபயமளித்து ராஜ்ஜியம் அளித்தல் என்று ராமபிரான் செய்தவை அனைத்தும், இந்தக் கோவிலின் உட்பிரகாரத்தில் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. கலை மற்றும் சிற்ப ஓவியங்களுக்கு இந்தக் கோவில் ஒரு முன்னுதாரணமாக அமைந்தது என்றால் மிகையல்ல.
சாரங்கபாணி கோவில்
கும்பகோணத்தில் உள்ள வைணவக் கோவில்கள் பலவற்றில், முதன்மையானதாக விளங்குகிறது, சாரங்கபாணி திருக்கோவில். ஏம முனிவர் என்பவர், திருமாலை நோக்கி கடுமையான தவம் புரிந்தார். அவர் முன்பாகத் தோன்றிய மகாவிஷ்ணு, “உனக்கு வேண்டிய வரங்களைத் தருகிறேன். நீ கும்பகோணம் சென்று அங்குள்ள அமுதவாவி தீர்த்தத்தில் நீராடி தவம் புரிந்து வா” என்று அருளினார். அதன் படியே ஏம முனிவரும், கும்பகோணம் வந்து தவம் செய்துகொண்டிருந்தார். அப்படி அவர் தவம் இருந்தபோது ஒரு நாள், அங்குள்ள குளத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர் மீது, ஒரு பெண் குழந்தை இருப்பதைக் கண்டார். அந்தக் குழந்தையை எடுத்து வந்து தன் மகளாக வளர்த்தார். ‘கோமளவல்லி’ என்று பெயரிடப்பட்ட அந்தப் பெண், ‘திருமாலை மணம் முடிக்க வேண்டும்’ என்ற எண்ணத்துடன் தவம் இயற்றத் தொடங்கினாள்.
கோமளவல்லியின் பக்திக்கு மனமிரங்கிய திருமால், ஏம முனிவருக்கு அருளாசி வழங்கியதோடு, கோமளவல்லியையும் மணந்துகொண்டார். இதன் நினைவாகவே இன்றளவும், இந்தக் கோவிலில் தை மாதம் நடைபெறும் விழாவின் 6-ம் நாளில், திருக்கல்யாாண உற்சவம் நடத்தப்படுகிறது. கருவறையில் ஐந்து தலை நாகத்தின் மீது பள்ளிகொண்டபடி சயன கோலத்தில் பெருமாள் வீற்றிருக்கிறார். உற்சவ பெருமாள், நின்ற கோலத்தில் அருள் வழங்குகிறார்.
ராஜகோபால சுவாமி கோவில்
கும்பகோணம் பெரிய கடைத் தெரு பகுதியில் அமைந்திருக்கிறது, ராஜகோபால சுவாமி கோவில். மகாமகம் அன்று, அங்குள்ள குளத்தில் தீர்த்தமாடும் வைணவக் கோவில்களில் இந்தக் கோவிலின் பெருமாளும் ஒருவர். இந்தக் கோவிலில் மூலவராகவும் உற்சவராகவும் ராஜகோபால சுவாமியே வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் ருக்மணி, சத்யபாமா, அலமேலுமங்கை, செங்கமலவள்ளி ஆகிய தாயார்களும் வீற்றிருந்து அருள்புரிகிறார்கள். ‘கோ’ என்பதற்கு ‘பசு’, ‘அரசன்’ என்று பொருள். ‘பாலன்’ என்றால் ‘சிறுவன்’ என்று அர்த்தம். ஏழை-எளிய மக்களுக்கு கேட்டதை வழங்கும் இறைவனாக, இங்கு ராஜகோபால சுவாமி வீற்றிருக்கிறார். இத்தல இறைவன், துணைவியரோடு அலங் காரப் பிரியனாக, ராஜ கம்பீரம் பொருந்தியவராக, எண்ணற்ற அணி கலன்களை உடலில் பூட்டியபடி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
மன்னார்குடியிலும், ராஜகோபால சுவாமி கோவில் ஒன்று உள்ளது. ஆனால் அங்கு மூலவராக மட்டுமே இறைவன் வீற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதிவராகப் பெருமாள் கோவில்
வைகுண்டத்தில் இருக்கும் நாராயணரை வழிபடுவதற்காக, சனகாதி முனிவர்கள் வருகை தந்தனர். அப்போது வைகுண்டத்தில் வாசல் காப்பாளர்களாக இருந்த விஜயன், ஜெயன் ஆகிய இருவரும், முனிவர்களைத் தடுத்தனர். இந்த நிலையில் நாராயணரே, வைகுண்ட வாசலைத் திறந்துகொண்டு வந்து முனிவர்களுக்கு காட்சி கொடுத்தார். அவரை தரிசனம் செய்த முனிவர்கள், தங்களுக்கு அனுமதி வழங்க மறுத்த ஜெயன், விஜயன் இருவரையும் அரக்கர்களாக பிறக்க சாபமிட்டனர். தானே அவர்களுக்கு சாப விமோசனம் அளிப்பதாக நாராயணர் கூறினார். அதன்படி பூலோகத்தில் பிறந்தவர்களே இரண்யாட்சனும், இரண்யகசிபுவும். இரண்யாட்சன் ஒரு முறை பூமியை களவாடி, கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். அதனை வராக அவதாரம் எடுத்து திருமால் மீட்டதோடு, இரண்யாட்சனை வதம் செய்தார்.
உலகில் முதலில் தோன்றிய இடம் ‘வராகபுரி’ என்னும் கும்பகோணம் என்று இந்தக் கோவில் தல புராணம் சொல்கிறது. எனவே முதலில் இந்தக் கோவிலில் உள்ள ஆதிவராகப் பெருமாளை வழிபட்ட பிறகே, அனைத்து தெய்வங்களையும் வழிபட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். அம்புஜவல்லி உடனாய ஆதிவராகப் பெருமாள் திருக்கோவில் என்று அழைக்கப்படும் இத்தலத்தில், மூலவராகவும் உற்சவராகவும் ஆதிவராகப் பெருமாள் வீற்றிருக்கிறார். தாயார் பெயர் அம்புஜவல்லி.
சக்கரபாணி கோவில்
கும்பகோணத்தில் உள்ள வைணவக் கோவில்களில், இரண்டாவது பெரிய கோவிலாக திகழ்வது, சக்கரபாணி திருக்கோவில் ஆகும். காவிரி ஆற்றின் தென்கரையில், பெரிய கடைத்தெருவின் வடக்கு மூலையில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. இத்தல மூலவர், சக்கர வடிவமான தாமரைப் பூவுடன் கூடிய அறுங்கோண எந்திரத்தில் வீற்றிருந்து காட்சி தருவதால், ‘சக்கரபாணி’ என்று பெயர் பெற்றார். எட்டு கரங்களைக் கொண்டு நின்ற கோலத்தில் அருளும் இந்த பெருமாளிடம், சங்கு, சக்கரம், வில், கோடரி, உலக்கை, மண்வெட்டி, கதை, செந்தாமரை போன்றவை காணப்படுகின்றன. சக்கரபாணி, ருத்ராட்சம் வைத்திருப்பவர் என்று கருதப்படுவதால், அவருக்கு சிவபெருமானைப் போல வில்வ அர்ச்சனை செய்யப்படுகிறது.
இத்தல தாயாரான விஜயவல்லியும் நின்ற கோலத்திலேயே அருள்புரிகிறாள். சூரிய பகவான் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளார். எனவே இது ‘பாஸ்கரத் தலம்’ என்றும் அழைக்கப்படுகிறது. சாரங்கபாணி கோவிலில் இருப்பதைப் போல, இங்கும் தட்சிணாயன வாசல் மற்றும் உத்தராயன வாசல் என்று இரண்டு வாசல்கள் இருக்கின்றன.
ராமசாமி கோவில்
கும்பகோணம் பொற்றாமரைக் குளத்திற்கு தென்மேற்கில், தஞ்சாவூர் செல்லும் சாலையில் பெரிய கடைத்தெருவிற்கு போகும் வழியில் ராமசாமி கோவில் அமைந்திருக்கிறது. நாயக்க மன்னர்களிடம் அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதர் என்பவர், இந்தக் கோவிலை கட்டி எழுப்பியதாக தல வரலாறு சொல்கிறது. கோவில் கருவறையில் உள்ள மூலவர், பட்டாபிஷேக ராமராக வீற்றிருக்கிறார். ராமரும், சீதையும் ஒரே ஆசனத்தில் அமர்ந்திருக்க, அவர்களுக்கு பரதன் குடைபிடித்திருக்கிறான். சத்ருக்கணன் சாமரம் வீசுகிறான். லட்சுமணன், வில் ஏந்திய நிலையில் ராமனின் கட்டளைக்காக காத்திருக்கிறான். ஆஞ்சநேயர் தன்னுடைய கையில் வீணை ஏந்தி, ராமாயணத்தை பாராயணம் செய்யும் நிலையில் காட்சி தருகிறார்.
விசுவாமித்திர முனிவரின் யாகத்தை காத்தல், தன்னை மீண்டும் அயோத்தி அழைத்துச் செல்ல வந்த பரதனுக்கு தன்னுடைய பாதுகைகளை அளித்தல், தனக்காக உயிர் கொடுத்த ஜடாயுவுக்கு மோட்சம் அளித்தல், முனிவர்களுக்காக அரக்கர்களை அழித்தல், தன்னுடைய துன்பங்களைக் கூறி வருந்திய சுக்ரீவனுக்கு, ஆறுதல் கூறி அவனுடைய ராஜ்ஜியத்தைப் பெற்றுக்கொடுத்தல், தன்னிடம் தஞ்சம் என்று வந்த விபீஷணனுக்கு, அபயமளித்து ராஜ்ஜியம் அளித்தல் என்று ராமபிரான் செய்தவை அனைத்தும், இந்தக் கோவிலின் உட்பிரகாரத்தில் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. கலை மற்றும் சிற்ப ஓவியங்களுக்கு இந்தக் கோவில் ஒரு முன்னுதாரணமாக அமைந்தது என்றால் மிகையல்ல.
அட்டவீரட்ட தலங்களில் முக்கியமானதாக கருதப்படுவது, தட்சனை வீரபத்திரர் வதம் செய்ததாக சொல்லப்படும் திருப்பறியலூர் திருத்தலம். இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சிவபெருமானின் வீரதீரச் செயல்கள் வெளிப்பட்ட தலங்களாக ‘அட்டவீரட்டங்கள்’ எனப்படும் எட்டு தலங்கள் உள்ளன. அவற்றில் ஆறு இடங்களில் சிவபெருமான் நேரடியாக தோன்றி எமன், அந்தகன், சலந்தரன், திரிபுராதிகள், கஜாசுரன், மன்மதன் ஆகியோரை அழித்தும், உயிர்ப்பித்தும் அருள்புரிந்தார். மற்ற இரு இடங்களில் வீரபத்திரர், பைரவர் ஆகியோரை அனுப்பி முறையே தட்சன், பிரம்மன் ஆகியோரை தண்டித்ததாகவும், அந்த தலங்களின் புராணங்கள் சொல்கின்றன.
இந்த அட்டவீரட்ட தலங்களில் முக்கியமானதாக கருதப்படுவது, தட்சனை வீரபத்திரர் வதம் செய்ததாக சொல்லப்படும் திருப்பறியலூர் திருத்தலம். ஒரு சாபம் காரணமாக பூலோகத்தில் தட்சனின் மகளாகப் பிறந்திருந்த பார்வதிதேவி, தாட்சாயிணி என்ற பெயருடன் வளர்ந்து வந்தாள். அவள் சிவபெருமானை நினைத்து தவம் செய்து, அவரையே மணந்துகொண்டாள். தன் மகள் தனக்குத் தெரியாமல் திருமணம் செய்ததால் அவள் மீதும், ஈசனின் மீதும் தட்சன் கோபம் கொண்டான்.
ஒரு முறை அவன் நடத்திய யாகத்திற்கு, மகாவிஷ்ணு, பிரம்மன் உள்ளிட்ட பிறதேவர்களையும், ரிஷிகளையும், முனிவர்களையும் அழைத்திருந்தான். ஆனால் ஈசனை அழைக்கவில்லை. அவருக்கு உரிய அவிர்பாகத்தையும் கொடுக்கவில்லை. இதைத் தட்டிக் கேட்கச் சென்ற தாட்சாயிணியையும் அவமதித்து அனுப்பினான். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், தன்னுடைய அம்சமாக வீரபத்திரரை தோற்றுவித்து, தட்சனை அழிக்க அனுப்பினார். வீரபத்திரர் தட்சனையும், அவனது யாகத்தையும் அழித்ததாக புராணங்கள் சொல்கின்றன.
வீரபத்திரர், பலருக்கும் குலதெய்வமாக இருக்கிறார். பராசக்தியால் தோற்றுவிக்கப்பட்ட பத்ரகாளி அம்மன், வீரபத்திரருக்கு தேவியாக இருந்து அருள்கிறாள். வீரபத்திரருக்கு விரதங்களும் கடைப்பிடிக்கப்படுகின்றன. செவ்வாய்க்கிழமைகளில் இந்த வீரபத்திரர் விரதத்தை மேற்கொள்ளலாம். அப்போது சந்தனத்தால் அபிஷேகம் செய்து, சிவப்பு வண்ண மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால், சத்ரு பயம் நீங்கும் என்கிறார்கள்.
ஐப்பசி மாதம் வரும் வளர்பிறை அஷ்டமியிலும் வீரபத்திரர் விரதத்தை கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை ‘வீரபத்திர விரதம்’ என்றும், ‘மகா அஷ்டமி விரதம்’ என்றும் சொல்வார்கள். இந்த விரத நாளில் தும்பை, நந்தியாவர்த்தம் போன்ற வெண்மை நில மலர்களைக் கொண்டு வீரபத்திரரை அர்ச்சித்து, வெண் பட்டு துணியால் அலங்கரித்து, மகா நிவேதனம் செய்து வழிபட்டால் குடும்ப சந்ததிகள் தழைத்தோங்குவர் என்பது நம்பிக்கை.
சிவபெருமானின் அட்டவீரட்ட தலங்களில் முக்கியமானது திருப்பறியலூர். இது தற்போது பரசலூர் என்று அழைக்கப்படுகிறது. மயிலாடுதுறையில் இருந்து திருக்கடவூர் செல்லும் சாலையில் இந்த திருத்தலம் இருக்கிறது. இந்த ஆலயத்தின் மகா மண்டபத்திற்கு வடக்கில் வீரபத்திரர் சன்னிதி உள்ளது. மழு, சூலம், கதை, கத்தி, கேடயம், கபாலம், மணிமாலை ஏந்தியபடி வீரபத்திரர் காட்சி தருகிறார். இவரை வணங்கினால் சகல பயமும் நீங்கி இன்பமான வாழ்வைப் பெறலாம்.
செங்கல்பட்டில் இருந்து சிங்கப்பெருமாள்கோவில் சாலையில் தென்கிழக்கில் 7 கிலோமீட்டர் தூரத்தில் அனுமந்தபுரம் இருக்கிறது. இங்கும் வீரபத்திரருக்கு ஆலயம் உள்ளது. இங்குள்ள வீரபத்திரர் காலையில் குழந்தை முகத்துடனும், உச்சி வேளையில் வாலிபத் தோற்றத்துடனும், மாலையில் வயோதிகராகவும் காட்சி தருவது சிறப்புக்குரியது.
மேல்மருவத்தூருக்கு தெற்கே 5 கிலோமீட்டர் தூரத்தில் பெரும்பேர்கண்டிகை என்ற முருகன் தலம் உள்ளது. இந்த ஊரின் நடுவே வீரபத்திரர் ஆலயம் இருக்கிறது. கருவறையில் வீரபத்திரரும், அவருக்கு வடமேற்கு மூலையில் தனிச்சன்னிதியில் பத்ரகாளியும் எழுந்தருளியுள்ளனர். இங்குள்ள சக்கரக் கிணறு தீர்த்தம் மிகவும் விசேஷமானது என்று சொல்கிறார்கள்.
இந்த அட்டவீரட்ட தலங்களில் முக்கியமானதாக கருதப்படுவது, தட்சனை வீரபத்திரர் வதம் செய்ததாக சொல்லப்படும் திருப்பறியலூர் திருத்தலம். ஒரு சாபம் காரணமாக பூலோகத்தில் தட்சனின் மகளாகப் பிறந்திருந்த பார்வதிதேவி, தாட்சாயிணி என்ற பெயருடன் வளர்ந்து வந்தாள். அவள் சிவபெருமானை நினைத்து தவம் செய்து, அவரையே மணந்துகொண்டாள். தன் மகள் தனக்குத் தெரியாமல் திருமணம் செய்ததால் அவள் மீதும், ஈசனின் மீதும் தட்சன் கோபம் கொண்டான்.
ஒரு முறை அவன் நடத்திய யாகத்திற்கு, மகாவிஷ்ணு, பிரம்மன் உள்ளிட்ட பிறதேவர்களையும், ரிஷிகளையும், முனிவர்களையும் அழைத்திருந்தான். ஆனால் ஈசனை அழைக்கவில்லை. அவருக்கு உரிய அவிர்பாகத்தையும் கொடுக்கவில்லை. இதைத் தட்டிக் கேட்கச் சென்ற தாட்சாயிணியையும் அவமதித்து அனுப்பினான். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், தன்னுடைய அம்சமாக வீரபத்திரரை தோற்றுவித்து, தட்சனை அழிக்க அனுப்பினார். வீரபத்திரர் தட்சனையும், அவனது யாகத்தையும் அழித்ததாக புராணங்கள் சொல்கின்றன.
வீரபத்திரர், பலருக்கும் குலதெய்வமாக இருக்கிறார். பராசக்தியால் தோற்றுவிக்கப்பட்ட பத்ரகாளி அம்மன், வீரபத்திரருக்கு தேவியாக இருந்து அருள்கிறாள். வீரபத்திரருக்கு விரதங்களும் கடைப்பிடிக்கப்படுகின்றன. செவ்வாய்க்கிழமைகளில் இந்த வீரபத்திரர் விரதத்தை மேற்கொள்ளலாம். அப்போது சந்தனத்தால் அபிஷேகம் செய்து, சிவப்பு வண்ண மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால், சத்ரு பயம் நீங்கும் என்கிறார்கள்.
ஐப்பசி மாதம் வரும் வளர்பிறை அஷ்டமியிலும் வீரபத்திரர் விரதத்தை கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை ‘வீரபத்திர விரதம்’ என்றும், ‘மகா அஷ்டமி விரதம்’ என்றும் சொல்வார்கள். இந்த விரத நாளில் தும்பை, நந்தியாவர்த்தம் போன்ற வெண்மை நில மலர்களைக் கொண்டு வீரபத்திரரை அர்ச்சித்து, வெண் பட்டு துணியால் அலங்கரித்து, மகா நிவேதனம் செய்து வழிபட்டால் குடும்ப சந்ததிகள் தழைத்தோங்குவர் என்பது நம்பிக்கை.
சிவபெருமானின் அட்டவீரட்ட தலங்களில் முக்கியமானது திருப்பறியலூர். இது தற்போது பரசலூர் என்று அழைக்கப்படுகிறது. மயிலாடுதுறையில் இருந்து திருக்கடவூர் செல்லும் சாலையில் இந்த திருத்தலம் இருக்கிறது. இந்த ஆலயத்தின் மகா மண்டபத்திற்கு வடக்கில் வீரபத்திரர் சன்னிதி உள்ளது. மழு, சூலம், கதை, கத்தி, கேடயம், கபாலம், மணிமாலை ஏந்தியபடி வீரபத்திரர் காட்சி தருகிறார். இவரை வணங்கினால் சகல பயமும் நீங்கி இன்பமான வாழ்வைப் பெறலாம்.
செங்கல்பட்டில் இருந்து சிங்கப்பெருமாள்கோவில் சாலையில் தென்கிழக்கில் 7 கிலோமீட்டர் தூரத்தில் அனுமந்தபுரம் இருக்கிறது. இங்கும் வீரபத்திரருக்கு ஆலயம் உள்ளது. இங்குள்ள வீரபத்திரர் காலையில் குழந்தை முகத்துடனும், உச்சி வேளையில் வாலிபத் தோற்றத்துடனும், மாலையில் வயோதிகராகவும் காட்சி தருவது சிறப்புக்குரியது.
மேல்மருவத்தூருக்கு தெற்கே 5 கிலோமீட்டர் தூரத்தில் பெரும்பேர்கண்டிகை என்ற முருகன் தலம் உள்ளது. இந்த ஊரின் நடுவே வீரபத்திரர் ஆலயம் இருக்கிறது. கருவறையில் வீரபத்திரரும், அவருக்கு வடமேற்கு மூலையில் தனிச்சன்னிதியில் பத்ரகாளியும் எழுந்தருளியுள்ளனர். இங்குள்ள சக்கரக் கிணறு தீர்த்தம் மிகவும் விசேஷமானது என்று சொல்கிறார்கள்.
தஞ்சை மாவட்டத்தில், காவிரியின் தென் கரையில் அமைந்துள்ளது திருவலம்சுழி ஸ்வேத விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தஞ்சை மாவட்டத்தில், காவிரியின் தென் கரையில் அமைந்துள்ளது திருவலம்சுழி ஸ்வேத விநாயகர் ஆலயம். இந்தத் தலத்தில் திருக்கல்யாண கோலத்தில் வாணி- கமலாம்பிகா சமேத சுவேத விநாயகர் உற்சவராக அருள்பாலித்து வருகிறார். சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற பெருமை உடையது. காவிரி நதி, இங்கே சற்றே திரும்பி வலமாக வளைந்து பாய்வதால் இவ்வூர் திருவலம்சுழி என பெயர் பெற்றது. இங்கு அருள்பாலிக்கும் ஸ்வேத விநாயகரது தும்பிக்கை வலப்புறமாக வளைந்திருப்பதும் இப்பெயர் வர காரணம் என கூறப்படுகிறது.
கோயில் வரலாறு: இந்திரன் வழிபடும் தலம் ‘ஸ்வேத’ என்ற வடமொழிச் சொல்லுக்கு ‘வெள்ளை’ என்று பொருள். பாற்கடலைக் கடைந்தபோது, மிதந்து வந்த வெள்ளை நிற நுரையைக் கொண்டு இந்திரன் வடித்து வழிபட்ட உருவம்தான் இது எனக் கூறப்படுகிறது. ஒருமுறை தேவலோகத்துக்கு விஜயம் செய்த துர்வாச முனிவரை மதியாததால் தேவேந்திரன் சபிக்கப்பட்டார். சாப விமோசனம் பெரும் பொருட்டு, கடல் நுரையால் செய்யப்பட்ட விநாயகர் உருவத்தை எடுத்துக்கொண்டு பூமியில் சுற்றித் திரிந்தார்.
அமைதியான இந்த காவிரிக்கரையைக் கண்டதும், பிள்ளையாரைக் கீழே வைத்து விட்டு நதியில் நீராடினார். ஆற்றிலிருந்து திரும்பி வந்து சிலையை எடுக்க தேவேந்திரன் முயன்றார். முடியவில்லை. இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தியன்றும் இந்திரன் இங்கு வந்து வழிபடுவதாக ஐதீகம். சின்னஞ்சிறு மூர்த்தி விநாயகர் கடல் நுரையால் செய்யப்பட்டதால் எந்தவித அபிஷேகமும் இங்கு பிள்ளையாருக்குச் செய்யப்படுவதில்லை. பச்சைக் கற்பூரம் மட்டுமே திருமேனியில் சாத்தப்படுகிறது. விசேஷ தினங்களில் வெள்ளி, தங்கக் கவசங்கள் அணியப்படும்.
கோயில் அமைப்பு: வலஞ்சுழிநாதர் கோயிலின் உள்ளே வலப்புறம் பைரவர் சன்னதியும், இடப்புறம் ஜடாதீர்த்தமும் ஜடா தீர்த்த விநாயகர் சன்னதியும் உள்ளன. தொடர்ந்து பலிபீடம், மூஞ்சுறு, கொடி மரம் உள்ளன. அதற்கடுத்து வெள்ளை விநாயகர் கோயிலின் தூண் மண்டபமும் கருவறையும் உள்ளன. கருங்கல்லால் ஆன ஜன்னல் இச்சன்னதியில் உள்ளது. கல்லால் ஆன விளக்குகளைப் போன்ற அமைப்பு இச்சன்னதியின் தனித்துவங்களில் ஒன்றாகும். தூண்களில் நுணுக்கமான சிற்ப அமைப்புகள் காணப்படுகின்றன. விநாயகர் சன்னதியின் வலப்புறம் நால்வர் சன்னதி உள்ளது. ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் திருப்பணி செய்த தலம் திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் திருக்கோயில்.
தலபெருமை: இந்திரன் வழிபட்ட தலம். மகாவிஷ்ணு, மார்கழி மாத சஷ்டி திதியில் இத்தலத்தில் உள்ள வெள்ளை விநாயகரை நேரில் வந்து வழிபட்டதாகவும் புராணங்கள் இருக்கின்றன. ராஜராஜ சோழன், போருக்குப் போகும் போதெல்லாம் தன்னுடைய இஷ்ட தெய்வங்களின் ஒன்றான வெள்ளை விநாயகரை வழிபட்டு, பின்னர்தான் போருக்குச் சென்று வெற்றி வாகை சூடிவந்ததாக இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. இதர தலங்களில் விநாயகரின் இரண்டு தந்தங்களில் ஒன்று மட்டும் கூர்மையாக இருக்கும். மற்றொன்று பாதி ஓடிந்த நிலையில் காணப்படும்.
ஆனால் இந்தத் தலத்தில் இரு தந்தங்களும் கூர்மையானதாகக் காட்சியளிக்கின்றன. மகாசிவராத்திரி, விநாயக சதுர்த்தி, திருக்கார்த்திகை ஆகியவை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்திலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவிலும், அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. திருவலஞ்சுழி சுவேத விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறும். தினமும் சுவாமி வீதியுலா நடைபெறும். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேவேந்திரன் பூஜை, தேரோட்டம் நடைபெறும். சுத்தாபிஷேகத்துடன் விழா நிறைவடையும்.
கோயில் வரலாறு: இந்திரன் வழிபடும் தலம் ‘ஸ்வேத’ என்ற வடமொழிச் சொல்லுக்கு ‘வெள்ளை’ என்று பொருள். பாற்கடலைக் கடைந்தபோது, மிதந்து வந்த வெள்ளை நிற நுரையைக் கொண்டு இந்திரன் வடித்து வழிபட்ட உருவம்தான் இது எனக் கூறப்படுகிறது. ஒருமுறை தேவலோகத்துக்கு விஜயம் செய்த துர்வாச முனிவரை மதியாததால் தேவேந்திரன் சபிக்கப்பட்டார். சாப விமோசனம் பெரும் பொருட்டு, கடல் நுரையால் செய்யப்பட்ட விநாயகர் உருவத்தை எடுத்துக்கொண்டு பூமியில் சுற்றித் திரிந்தார்.
அமைதியான இந்த காவிரிக்கரையைக் கண்டதும், பிள்ளையாரைக் கீழே வைத்து விட்டு நதியில் நீராடினார். ஆற்றிலிருந்து திரும்பி வந்து சிலையை எடுக்க தேவேந்திரன் முயன்றார். முடியவில்லை. இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தியன்றும் இந்திரன் இங்கு வந்து வழிபடுவதாக ஐதீகம். சின்னஞ்சிறு மூர்த்தி விநாயகர் கடல் நுரையால் செய்யப்பட்டதால் எந்தவித அபிஷேகமும் இங்கு பிள்ளையாருக்குச் செய்யப்படுவதில்லை. பச்சைக் கற்பூரம் மட்டுமே திருமேனியில் சாத்தப்படுகிறது. விசேஷ தினங்களில் வெள்ளி, தங்கக் கவசங்கள் அணியப்படும்.
கோயில் அமைப்பு: வலஞ்சுழிநாதர் கோயிலின் உள்ளே வலப்புறம் பைரவர் சன்னதியும், இடப்புறம் ஜடாதீர்த்தமும் ஜடா தீர்த்த விநாயகர் சன்னதியும் உள்ளன. தொடர்ந்து பலிபீடம், மூஞ்சுறு, கொடி மரம் உள்ளன. அதற்கடுத்து வெள்ளை விநாயகர் கோயிலின் தூண் மண்டபமும் கருவறையும் உள்ளன. கருங்கல்லால் ஆன ஜன்னல் இச்சன்னதியில் உள்ளது. கல்லால் ஆன விளக்குகளைப் போன்ற அமைப்பு இச்சன்னதியின் தனித்துவங்களில் ஒன்றாகும். தூண்களில் நுணுக்கமான சிற்ப அமைப்புகள் காணப்படுகின்றன. விநாயகர் சன்னதியின் வலப்புறம் நால்வர் சன்னதி உள்ளது. ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் திருப்பணி செய்த தலம் திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் திருக்கோயில்.
தலபெருமை: இந்திரன் வழிபட்ட தலம். மகாவிஷ்ணு, மார்கழி மாத சஷ்டி திதியில் இத்தலத்தில் உள்ள வெள்ளை விநாயகரை நேரில் வந்து வழிபட்டதாகவும் புராணங்கள் இருக்கின்றன. ராஜராஜ சோழன், போருக்குப் போகும் போதெல்லாம் தன்னுடைய இஷ்ட தெய்வங்களின் ஒன்றான வெள்ளை விநாயகரை வழிபட்டு, பின்னர்தான் போருக்குச் சென்று வெற்றி வாகை சூடிவந்ததாக இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. இதர தலங்களில் விநாயகரின் இரண்டு தந்தங்களில் ஒன்று மட்டும் கூர்மையாக இருக்கும். மற்றொன்று பாதி ஓடிந்த நிலையில் காணப்படும்.
ஆனால் இந்தத் தலத்தில் இரு தந்தங்களும் கூர்மையானதாகக் காட்சியளிக்கின்றன. மகாசிவராத்திரி, விநாயக சதுர்த்தி, திருக்கார்த்திகை ஆகியவை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்திலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவிலும், அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. திருவலஞ்சுழி சுவேத விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறும். தினமும் சுவாமி வீதியுலா நடைபெறும். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேவேந்திரன் பூஜை, தேரோட்டம் நடைபெறும். சுத்தாபிஷேகத்துடன் விழா நிறைவடையும்.
திருநெல்வேலியில் இருந்து மேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சேரன்மாதேவி திருத்தலம். இங்கு ஆவுடைநாயகி உடனாய அம்மைநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது.
திருநெல்வேலியில் இருந்து மேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சேரன்மாதேவி திருத்தலம். இங்கு ஆவுடைநாயகி உடனாய அம்மைநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இது நவ கயிலாயத்தில் ஒன்றாகவும், சந்திரனுக்குரிய தலமாகவும் போற்றப்படுகிறது. இந்தக் கோவிலில் ‘அம்மைநாதர்’ என்ற பெயரில் இறைவனும், ‘ஆவுடைநாயகி’ என்ற பெயரில் இறைவியும் அருள்பாலித்து வருகிறார்கள்.
சிவ தரிசனம் பெற விரும்பிய உரோமச முனிவர், அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி தாமிரபரணி நதிக்கரைக்கு வந்தார். அங்கு ஒன்பது மலர்களை, நதியில் விட்டார். அந்த ஒன்பது மலர்களும் ஒதுங்கிய கரையினில்தான் நவ கயிலாயங்கள் எனப்படும் சிவன் கோவில்கள் அமைந்துள்ளன. இவற்றின் இரண்டாவது மலர் ஒதுங்கிய இடத்தில் உரோமச முனிவர், லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார். அதுதான் சேரன்மாதேவி திருத்தலம் என்று சொல்லப்படுகிறது.
பிற்காலத்தில் உரோமச முனிவர் வழிபட்ட சிவலிங்கமானது, ஒரு அரச மரத்தின் கீழ் இருந்தது. இந்தப் பகுதி யில் வசித்த சகோதரிகளான சிவபக்தைகள் இருவர், நெல் குத்தி அரிசி வியாபாரம் செய்து வந்தனர். தினமும் இத்தல லிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கிய பின்பே, அவர்கள் தங்களுடைய வேலையைத் தொடங்குவார்கள். ‘இந்த லிங்கம், மரத்தடியில் யாராலும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறதே’ என்று ஆதங்கப்பட்ட அந்த சிவ பக்தைகள், சிவபெரு மானுக்கு கோவில் ஒன்றை அமைக்க முடிவு செய்தனர். ஆனால் அவர்களிடம் அதற்கான பணம் இல்லை.
அவர்கள் தங்களது உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தை சேமிக்கத் தொடங்கினர். அவர்களது பக்தியை கண்டு மகிழ்ந்த சிவன், அடியார் வடிவில் அந்தப் பெண்களின் வீட்டிற்கு சென்றார். அவரை வரவேற்ற சகோதரிகள் உபசரித்து உணவு பரிமாறினர். அப்போது வீட்டில் விளக்கு எரியவில்லை. அதை சுட்டிக்காட்டிய அடியவர், “மங்களம் இல்லாத இவ்வீட்டில் நான் சாப்பிடமாட்டேன்” என்று எழுந்தார்.
சகோதரிகள் பதறிப்போய் அவசர அவசரமாக விளக்கைத் தேடினர். விளக்கு தென்படாததால் சமையலுக்கு வைத்திருந்த தேங்காயை உடைத்து, அதில் நெய்விட்டு விளக்கேற்றினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த அடியார் உருவத்தில் இருந்த சிவபெருமான், உணவருந்திய பின் தன்னுடைய சுய உருவத்தை, அந்த சகோதரிகளுக்கு காண்பித்து அருளாசி கூறி மறைந்தார். அதன்பின்பு அவர்களது இல்லத்தில் செல்வம் பெருகியது. அதைக் கொண்டு இங்கு கோவில் எழுப்பினர்.
அரிசி வியாபாரம் செய்பவர்கள், இந்தக் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து, அரிசி தானம், அன்னதானம் செய்தால் வியாபாரம் செழிக்கும் என்கிறார்கள். மாதுளம் பழச்சாறு அபிஷேகம் செய்து அம்பாள் சன்னிதி முன்பு தட்டில் அரிசியை பரப்பி, அதன் மத்தியில் உடைத்த தேங்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றுவதும் முக்கிய வழிபாடாக இருக்கிறது. சுவாமி - அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
இந்தக் கோவிலின் மண்டபத் தூணில், சிவ பூஜை செய்த உரோமச முனிவரின் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது. சகோதரிகள் இருவர் நெல் குத்தி, அரிசி புடைக்கும் சிற்பம், வடக்குபுறமாக ஒரு தூணில் உள்ளது. இங்குள்ள கோவில் கல்வெட்டுகளில் இந்த ஊர், ‘சேரன்மகாதேவி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுகள் யாவும் பாண்டியர் காலத்து கல்வெட்டுகளாகும். இந்தக் கோவிலை நந்தனார் தரிசித்திருக்கிறார். அதற்கு அடையாளமாக அவரது சிற்பம், கொடிமரத்தின் கீழ் பீடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இவர் இங்கிருந்து சுவாமியை வணங்கியபடி இருக்க, நந்தி சற்று விலகியிருக்கிறது. கொடிமரத்தின் அருகில் நின்று, விலகிய நந்தியையும், சிவபெருமானையும் ஒருசேர தரிசிக்கலாம்.
திருநெல்வேலியில் இருந்து சேரன்மாதேவி செல்ல ஏராளமான பேருந்து வசதிகள் இருக்கின்றன.
சிவ தரிசனம் பெற விரும்பிய உரோமச முனிவர், அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி தாமிரபரணி நதிக்கரைக்கு வந்தார். அங்கு ஒன்பது மலர்களை, நதியில் விட்டார். அந்த ஒன்பது மலர்களும் ஒதுங்கிய கரையினில்தான் நவ கயிலாயங்கள் எனப்படும் சிவன் கோவில்கள் அமைந்துள்ளன. இவற்றின் இரண்டாவது மலர் ஒதுங்கிய இடத்தில் உரோமச முனிவர், லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார். அதுதான் சேரன்மாதேவி திருத்தலம் என்று சொல்லப்படுகிறது.
பிற்காலத்தில் உரோமச முனிவர் வழிபட்ட சிவலிங்கமானது, ஒரு அரச மரத்தின் கீழ் இருந்தது. இந்தப் பகுதி யில் வசித்த சகோதரிகளான சிவபக்தைகள் இருவர், நெல் குத்தி அரிசி வியாபாரம் செய்து வந்தனர். தினமும் இத்தல லிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கிய பின்பே, அவர்கள் தங்களுடைய வேலையைத் தொடங்குவார்கள். ‘இந்த லிங்கம், மரத்தடியில் யாராலும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறதே’ என்று ஆதங்கப்பட்ட அந்த சிவ பக்தைகள், சிவபெரு மானுக்கு கோவில் ஒன்றை அமைக்க முடிவு செய்தனர். ஆனால் அவர்களிடம் அதற்கான பணம் இல்லை.
அவர்கள் தங்களது உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தை சேமிக்கத் தொடங்கினர். அவர்களது பக்தியை கண்டு மகிழ்ந்த சிவன், அடியார் வடிவில் அந்தப் பெண்களின் வீட்டிற்கு சென்றார். அவரை வரவேற்ற சகோதரிகள் உபசரித்து உணவு பரிமாறினர். அப்போது வீட்டில் விளக்கு எரியவில்லை. அதை சுட்டிக்காட்டிய அடியவர், “மங்களம் இல்லாத இவ்வீட்டில் நான் சாப்பிடமாட்டேன்” என்று எழுந்தார்.
சகோதரிகள் பதறிப்போய் அவசர அவசரமாக விளக்கைத் தேடினர். விளக்கு தென்படாததால் சமையலுக்கு வைத்திருந்த தேங்காயை உடைத்து, அதில் நெய்விட்டு விளக்கேற்றினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த அடியார் உருவத்தில் இருந்த சிவபெருமான், உணவருந்திய பின் தன்னுடைய சுய உருவத்தை, அந்த சகோதரிகளுக்கு காண்பித்து அருளாசி கூறி மறைந்தார். அதன்பின்பு அவர்களது இல்லத்தில் செல்வம் பெருகியது. அதைக் கொண்டு இங்கு கோவில் எழுப்பினர்.
அரிசி வியாபாரம் செய்பவர்கள், இந்தக் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து, அரிசி தானம், அன்னதானம் செய்தால் வியாபாரம் செழிக்கும் என்கிறார்கள். மாதுளம் பழச்சாறு அபிஷேகம் செய்து அம்பாள் சன்னிதி முன்பு தட்டில் அரிசியை பரப்பி, அதன் மத்தியில் உடைத்த தேங்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றுவதும் முக்கிய வழிபாடாக இருக்கிறது. சுவாமி - அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
இந்தக் கோவிலின் மண்டபத் தூணில், சிவ பூஜை செய்த உரோமச முனிவரின் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது. சகோதரிகள் இருவர் நெல் குத்தி, அரிசி புடைக்கும் சிற்பம், வடக்குபுறமாக ஒரு தூணில் உள்ளது. இங்குள்ள கோவில் கல்வெட்டுகளில் இந்த ஊர், ‘சேரன்மகாதேவி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுகள் யாவும் பாண்டியர் காலத்து கல்வெட்டுகளாகும். இந்தக் கோவிலை நந்தனார் தரிசித்திருக்கிறார். அதற்கு அடையாளமாக அவரது சிற்பம், கொடிமரத்தின் கீழ் பீடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இவர் இங்கிருந்து சுவாமியை வணங்கியபடி இருக்க, நந்தி சற்று விலகியிருக்கிறது. கொடிமரத்தின் அருகில் நின்று, விலகிய நந்தியையும், சிவபெருமானையும் ஒருசேர தரிசிக்கலாம்.
திருநெல்வேலியில் இருந்து சேரன்மாதேவி செல்ல ஏராளமான பேருந்து வசதிகள் இருக்கின்றன.
மூன்று காலத்துக்கும் அதிபதியாக இருக்கும் காரணத்தால், இத்தல இறைவன் ‘திரிகாலேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். மூலவரான சிவபெருமான், லிங்க உருவில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார்.
வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிந்த ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கிறது, வாலாஜா. இங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது ஒழுகூர். இங்கு முன்வினை போக்கும் வல்லமை கொண்ட திரிகாலேஸ்வரர், கோவில் கொண்டுள்ளார்.
இந்தக் கோவில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டு, சோழர்களாலும், தொண்டைமான் அரசர்களாலும் திருப்பணி செய்யப்பட்டதாக தெரிகிறது. ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழனிடம் படைத்தளபதியாக இருந்தவன், பார்த்தவேந்திராதிவர்மன். இவன் வீரபாண்டியன் என்ற அரசனுடன் போரிட்டு அவன் தலையைக் கொய்த காரணத்தால், ‘வீரபாண்டியனின் தலை கொய்த பரகேசரிவர்மன்’ என்ற பட்டத்தைப் பெற்றவன். பின்னர் இவன், சோழ அரசனால் தொண்டை நாட்டை தனியாக ஆளும் அனுமதியைப் பெற்றான். இவனும் இந்தக் கோவிலுக்கு திருப்பணியைச் செய்திருக்கிறான்.
வேலூருக்கு அருகில் உள்ள சேண்பாக்கத்தில் கோவில் கொண்டுள்ள ஏகாதச கணபதியைப் போல, ஒழுகூரிலும் மூன்று பிள்ளையார்கள் சுயம்புவாக இருப்பது விசேஷமானதாக பார்க்கப்படுகிறது. இந்த மூன்று கணபதியும் ‘மாகம் பிள்ளையார்’ என்று அழைக்கப்படுகின்றனர். மகாராஜன் என்னும் பார்த்தவேந்திராதிவர்மன் வழிபட்டதால், ‘மகாராஜப் பிள்ளையார்’ என்று பெயர்பெற்று, பின்னாளில் அதுவே மருவி ‘மாகம் பிள்ளையார்’ என்றானதாக தெரிகிறது.
இந்தக் கோவில் கஜபிருஷ்ட விமானத்துடன் அமைந்திருக்கிறது. ‘கஜபிருஷ்டம்’ என்றால், தமிழில் ‘தூங்கானை மாடம்’ என்று பொருள். தூங்கும் யானையின் பின்புறம் போல் இந்த விமானம் அமைந்திருக்கும்.
‘திரிகாலம்’ என்பது இரண்டு வகையாக குறிப்பிடப்படுகிறது. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்றையும் ‘திரிகாலம்’ என்பது ஒரு வகை. அதே போல் காலை, மாலை, இரவு ஆகிய மூன்றையும் கூட ‘திரிகாலம்’ என்றே சொல்வார்கள். இப்படி மூன்று காலத்துக்கும் அதிபதியாக இருக்கும் காரணத்தால், இத்தல இறைவன் ‘திரிகாலேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். மூலவரான சிவபெருமான், லிங்க உருவில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். சுயம்பு வடிவத்துடன் பெரிய பாணம் கொண்டு, சதுர வடிவ ஆவுடையாரில் இந்த லிங்கம் அருள்கிறது.
திரிபுரசுந்தரி என்ற பெயருடன் அம்பாள் அருள்கிறாள். அம்பிகை தெற்கு நோக்கி வீற்றிருக்கிறாள். நான்கு திருக்கரங்களுடன் நான்கடி உயரத்தில் காணப்படும் இந்த அம்பிகையின் முகம் வசீகர தோற்றத்தில் உள்ளது. அம்பிகை சன்னிதி வாசல் உயரம் சற்றே குறைவாக உள்ளது. எனவே முதுகை வளைத்துதான் உள்ளே நுழைய வேண்டும். இந்த சன்னிதி பிற்காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டு, உட்கோவிலாக இணைக்கப்பட்டதாக தெரிகிறது.
கோவில் வெளிச்சுற்றில் சப்த மாதர்களின் திருமேனிகள் காணப்படுகின்றன. பழமையான உற்சவ மூர்த்திகள், கோஷ்ட மூர்த்திகள் கிடைக்கப்பெறாததால், புதியதாக செய்யப்பட்டு வழிபாட்டில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு பாறையில் செதுக்கப்பட்ட அழகான விநாயகர் ஒன்று காணப்படுகிறது. இந்த பிள்ளையார், பிள்ளையார்பட்டி விநாயகரைப் போல காட்சியளிக்கிறார். இந்தக் கோவில் ராஜகோபுரம் 2 நிலைகளுடன் காணப்படுகிறது.
சிவன் கோவில் அருகிலேயே லட்சுமிநாராயணர் கோவில் ஒன்றும் உள்ளது. லட்சுமியை மடியின் மீது வைத்துக் கொண்டு கிழக்கு நோக்கியபடி லட்சுமி நாராயணர் வீற்றிருக்கிறார். சமீபத்தில் சிவன் கோவிலுக்கும், பெருமாள் கோவிலுக்கும் திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தக் கோவில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டு, சோழர்களாலும், தொண்டைமான் அரசர்களாலும் திருப்பணி செய்யப்பட்டதாக தெரிகிறது. ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழனிடம் படைத்தளபதியாக இருந்தவன், பார்த்தவேந்திராதிவர்மன். இவன் வீரபாண்டியன் என்ற அரசனுடன் போரிட்டு அவன் தலையைக் கொய்த காரணத்தால், ‘வீரபாண்டியனின் தலை கொய்த பரகேசரிவர்மன்’ என்ற பட்டத்தைப் பெற்றவன். பின்னர் இவன், சோழ அரசனால் தொண்டை நாட்டை தனியாக ஆளும் அனுமதியைப் பெற்றான். இவனும் இந்தக் கோவிலுக்கு திருப்பணியைச் செய்திருக்கிறான்.
வேலூருக்கு அருகில் உள்ள சேண்பாக்கத்தில் கோவில் கொண்டுள்ள ஏகாதச கணபதியைப் போல, ஒழுகூரிலும் மூன்று பிள்ளையார்கள் சுயம்புவாக இருப்பது விசேஷமானதாக பார்க்கப்படுகிறது. இந்த மூன்று கணபதியும் ‘மாகம் பிள்ளையார்’ என்று அழைக்கப்படுகின்றனர். மகாராஜன் என்னும் பார்த்தவேந்திராதிவர்மன் வழிபட்டதால், ‘மகாராஜப் பிள்ளையார்’ என்று பெயர்பெற்று, பின்னாளில் அதுவே மருவி ‘மாகம் பிள்ளையார்’ என்றானதாக தெரிகிறது.
இந்தக் கோவில் கஜபிருஷ்ட விமானத்துடன் அமைந்திருக்கிறது. ‘கஜபிருஷ்டம்’ என்றால், தமிழில் ‘தூங்கானை மாடம்’ என்று பொருள். தூங்கும் யானையின் பின்புறம் போல் இந்த விமானம் அமைந்திருக்கும்.
‘திரிகாலம்’ என்பது இரண்டு வகையாக குறிப்பிடப்படுகிறது. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்றையும் ‘திரிகாலம்’ என்பது ஒரு வகை. அதே போல் காலை, மாலை, இரவு ஆகிய மூன்றையும் கூட ‘திரிகாலம்’ என்றே சொல்வார்கள். இப்படி மூன்று காலத்துக்கும் அதிபதியாக இருக்கும் காரணத்தால், இத்தல இறைவன் ‘திரிகாலேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். மூலவரான சிவபெருமான், லிங்க உருவில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். சுயம்பு வடிவத்துடன் பெரிய பாணம் கொண்டு, சதுர வடிவ ஆவுடையாரில் இந்த லிங்கம் அருள்கிறது.
திரிபுரசுந்தரி என்ற பெயருடன் அம்பாள் அருள்கிறாள். அம்பிகை தெற்கு நோக்கி வீற்றிருக்கிறாள். நான்கு திருக்கரங்களுடன் நான்கடி உயரத்தில் காணப்படும் இந்த அம்பிகையின் முகம் வசீகர தோற்றத்தில் உள்ளது. அம்பிகை சன்னிதி வாசல் உயரம் சற்றே குறைவாக உள்ளது. எனவே முதுகை வளைத்துதான் உள்ளே நுழைய வேண்டும். இந்த சன்னிதி பிற்காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டு, உட்கோவிலாக இணைக்கப்பட்டதாக தெரிகிறது.
கோவில் வெளிச்சுற்றில் சப்த மாதர்களின் திருமேனிகள் காணப்படுகின்றன. பழமையான உற்சவ மூர்த்திகள், கோஷ்ட மூர்த்திகள் கிடைக்கப்பெறாததால், புதியதாக செய்யப்பட்டு வழிபாட்டில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு பாறையில் செதுக்கப்பட்ட அழகான விநாயகர் ஒன்று காணப்படுகிறது. இந்த பிள்ளையார், பிள்ளையார்பட்டி விநாயகரைப் போல காட்சியளிக்கிறார். இந்தக் கோவில் ராஜகோபுரம் 2 நிலைகளுடன் காணப்படுகிறது.
சிவன் கோவில் அருகிலேயே லட்சுமிநாராயணர் கோவில் ஒன்றும் உள்ளது. லட்சுமியை மடியின் மீது வைத்துக் கொண்டு கிழக்கு நோக்கியபடி லட்சுமி நாராயணர் வீற்றிருக்கிறார். சமீபத்தில் சிவன் கோவிலுக்கும், பெருமாள் கோவிலுக்கும் திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம், சாத்தனார் மணிமேகலை போன்ற இலக்கியங்களிலேயே திருப்பதி பற்றிய குறிப்புகள் உள்ளன. அவற்றில் திருப்பதியின் அப்போதைய பெயரான ‘திருவேங்கடம்’ என குறிப்பிடப்பட்டிருக்கும்.
காக்கும் கடவுளான மகா விஷ்ணுவின் அம்சமான திருப்பதி ஏழுமலையானை காண கண் கோடி வேண்டும். பூலோக வைகுண்டம் என வர்ணிக்கப்படும் திருப்பதி உலக அளவில் மிகப் பிரசித்திப் பெற்றது. அதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் “கலியுக வைகுண்டம்” ஆக கன்னியாகுமரியில் ஏழுமலையான் ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளது.
சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம், சாத்தனார் மணிமேகலை போன்ற இலக்கியங்களிலேயே திருப்பதி பற்றிய குறிப்புகள் உள்ளன. அவற்றில் திருப்பதியின் அப்போதைய பெயரான ‘திருவேங்கடம்’ என குறிப்பிடப்பட்டிருக்கும்.
இன்று எத்தனையோ திருக்கோயில்கள் இருக்கும் போது திருப்பதியில் மட்டும் ஏன் பக்தர்கள் கூட்டம் இப்படி அலைமோதுகிறது? காரணம் இல்லாமல் இல்லை. இந்த சேஷத்திரத்தில் மகாவிஷ்ணு நடத்திக் காட்டிய மகிமைகள் பல. ஒருநாள் இருநாளில் அல்ல. பல ஜென்மங்கள் எடுத்துக் கொண்டு நடத்திய ‘நாடகம்’ தான் திருப்பதியில் வெங்கடேஸ்வர பெருமாள் குடிக்கொள்ள காரணமாயிற்று,
கங்கை நதிக்கரையில் காஸ்யப முனிவரின் தலைமையில் முனிவர்கள் சிலர் யாகம் செய்துக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட நாரதர் இந்த யாகம் யாருடைய நன்மைக்காக நடத்தப்படுகிறது என கேட்டார். ஆனால் அங்கிருந்த முனிவர்களால் அதற்கு பதிலளிக்க முடியவில்லை. அதனால் பிருகு முனிவரிடம் உதவி கேட்டு சென்றனர்.
பிருகு முனிவரின் உள்ளங்காலில் ஒரு கண் இருந்ததால் அவருக்கு மற்ற முனிவர்களை விட ஞானம் சற்று அதிகம் இருந்தது. அவர் இதற்கு ஒரு தீர்வு காண நினைத்து பிரம்மனை தரிசிக்க சத்யலோகத்திற்கு சென்றார். அங்கே பிரம்மதேவர் சரஸ்வதி தேவியின் துணையுடன் தனது நான்கு முகங்களாலும் ஸ்ரீமன் நாராயணைப் போற்றி நான்கு வேதங்கள் ஓதிக் கொண்டிருந்தார்.
அவர் பிருகு முனிவர் வந்ததை கவனிக்கவே இல்லை. சற்று நேரம் பொறுத்துப் பார்த்த முனிவர் இவர் வழிபாட்டிற்கு உகந்தவர் இல்லை என முடிவு செய்து சிவப்பெருமானை தரிசிக்க கைலாசம் சென்றார். ஆனால் சிவன் பார்வதிதேவியுடன் ஏதோ முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்ததால் அவரும் முனிவரை கண்டுக் கொள்ளவில்லை. முனிவரைக் கண்ட பார்வதிதேவி சிவனிடம் கூற அவரோ தனது முக்கிய ஆலோசனையின் போது முனிவர் குறுக்கிட்டதைக் விரும்பாததால் அவரை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலானார். அதனால் ஆத்திரமுற்ற பிருகு முனிவர் சிவப்பெருமானுக்கு சாபமிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
பின்னர் மகாவிஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் வந்தார். ஆனால் ஆதிசேஷன் குடை விரிக்க, மகாலட்சுமி காலடியில் அமர்ந்து பணிவிடை செய்ய ஆனந்த சயனத்தில் இருந்ததால் அவரும் முனிவர் வந்ததை கவனிக்கவில்லை. அதனால் ஆத்திரத்தில் மதியிழந்த பிருகு முனிவர் மகாலட்சுமியின் உறைவிடமான மகாவிஷ்ணுவின் நெஞ்சில் எட்டி உதைத்தார்.
முனிவரின் கோபத்தை தணிக்க நினைத்த பெருமாள் எட்டி உதைத்த காலை சட்டென பிடித்து பாதங்களை மென்மையாக அழுத்திவிட்டார். அந்த இதத்தில் முனிவரின் கோபம் தணிந்தது. அதே சமயம் மகாவிஷ்ணு பிருகு முனிவரின் காலில் இருந்த கண்ணை பறித்துவிட்டார். பாதத்தில் இருந்த கண் தான் அவருக்கு இத்தனை அகங்காரத்தை தந்தது. தனது தவற்றை உணர்ந்த முனிவர் விஷ்ணுவிடம் மன்னிப்புக் கோரிவிட்டு மும்மூர்த்திகளில் சிறந்தவர் இவரே என முடிவு செய்தார்.
இருப்பினும், தனது மணவாளன் தன்னை எட்டி உதைத்த முனிவரின் காலைப் பிடித்து மன்னிப்புக் கேட்டதை விரும்பாத ஸ்ரீதேவி அவரிடம் கோபித்துக் கொண்டு சென்று இன்று மகாராஷ்டிராவில் உள்ள கோலாபூர் எனும் இடத்திற்கு சென்றுவிட்டார். அவரைத் தேடிப் பிடித்து வருவதற்காக பூலோகம் வந்த மகாவிஷ்ணு வேங்கடமலையில் உள்ள புஷ்கரணியின் தெற்கு கரையில் ஒரு புளிய மரத்தடியில் எறும்பு புற்றின் மேல் அமர்ந்து தவம் புரிய ஆரம்பித்தார்.
இதில் மனமுருகிய பிரம்மரும், ஈசனும் பெருமாளுக்கு உதவும் நோக்கோடு பசு மற்றும் கன்றுக் குட்டியின் வடிவெடுத்து அவர்களும் பூலோகம் வந்தனர். இத்தனை சங்கதிகளையும் சூர்ய பகவான் மூலம் அறிந்த மகாலட்சுமி அவரது அறிவுரைப்படி மாடு மேய்க்கும் பெண்ணாக உருக்கொண்டு வந்து பசுவையும் கன்றையும் சோழ மன்னனுக்கு விற்றார். அவற்றை வாங்கிய சோழ மன்னனின் பணியாட்கள் அவற்றை வேங்கடமலைக்கு மேய அனுப்புவார்கள்.
அங்கே ஒரு எறும்பு புற்றில் மகாவிஷ்ணுவை கண்ட பசு தாமாகவே அங்கே பால்சுரக்க ஆரம்பித்தது. அதை ஏற்று மகாவிஷ்ணுவும் பசியாறி வந்தார். இதற்கிடையே அரண்மனையில் பசுக்கள் பால் தருவது இல்லை என்பதை கவனித்த மன்னனின் வேலையாள் பசுவை பின் தொடர்ந்து வந்தான். அது ஒரு இடத்தில் தானாகவே பால் சுரந்து பாலை வீணடிப்பதை கவனித்த அவன் பசுவின் மீது தன் கோடாலியை வீசியெறிய அது பசு மீது பட்டுவிடக் கூடாது என மகாவிஷ்ணு குறுக்கேத் தோன்றி அடியை தான் வாங்கினார். தான் வீசிய ஆயுதம் மகாவிஷ்ணுவை தாக்கி அதனால் ரத்தம் வருவதைக் கண்ட வேலையாள் அதிர்ச்சியில் உயிரிழந்தான்.
ரத்தக் கறையுடன் பசு மாடு வருவதைக் கண்ட சோழ ராஜா என்ன நடந்தது என அறிய அதை பின் தொடர்ந்தான். அஙகே எறும்பு புற்று ஒன்றின் அருகே தனது வேலையாள் இறந்து கிடப்பதைக் கண்டு எதுமறியாமல் விழித்தான். அப்பொழுது அவனுக்கு காட்சியளித்த விஷ்ணு அவனது வேலைக்காரன் செய்த குற்றத்திற்கு மன்னனுக்கு சாபமிட்டார். ஆனால் மன்னன் மீது தவறேதுமில்லாக் காரணத்தால் அவன் அடுத்த ஜென்மத்தில் ஆகாய ராஜாவாக பிறப்பானென்றும் தனக்கும் பத்மாவதிக்கும் திருமணம் நடக்கும் சமயம் அவனது சாபம் தீரும் எனவும் ஆசி வழங்கினார்.
ஸ்ரீ வராகசுவாமி ஆலயம் : இந்த சம்பவங்கள் நடந்த காலக்கட்டத்தில் திருப்பதி மலை வராகசுவாமியின் இருப்பிடமாக ஆதி வராக ஷேத்திரமாக இருந்தது. சோழ ராஜாவிற்கு ஆசி வழங்கி அனுப்பிய மகாவிஷ்ணு ஸ்ரீனிவாசன் என்ற பெயருடன் தனக்கு ஒரு இருப்பிடம் வேண்டி வராக சுவாமியை சந்தித்தார். அவரும் மகிழ்ந்து இடமளித்தார். அதற்கு நன்றிக் கூறும் விதமாகத் தான் இன்றும் திருப்பதிக்கு செல்பவர்கள் முதலில் புஷ்கரணியில் குளித்து வராக சுவாமியை தரிசித்து பூஜை, நைவேத்தியங்களை முதலில் அவருக்கு செய்துவிட்டு பிறகு வெங்கடேசப் பெருமாளை தரிசிக்க வேண்டும் என ஒரு ஐதீகம் உள்ளது.
பத்மாவதி தாயார் : இது அனைத்தும் ஒரு ஜென்மத்து கதை. இக்கதை சோழ மன்னனின் அடுத்த ஜென்மத்திலும் தொடர்கிறது. அடுத்த பிறவியில் அச்சோழ மன்னன் ஆகாச ராஜாவாக பிறந்தான். பிறந்து வளர்ந்து அனைத்து வளங்களும் பெற்று திகழ்ந்த அவனுக்கு பிள்ளைப் «பறு இல்லை அதனால் யாகம் செய்ய எண்ணிய அவன் நிலத்தை உழுதப் பொழுது அழகிய தாமரை மலர் ஒன்று தோன்றியது. அதை அருகில் சென்று பார்த்தப்போது அதில் ஒரு பெண் குழந்தை இருப்பது தெரிந்தது. அப்போது அதை எடுத்து வளர்த்தால் சகல சவுபாக்கியம் உண்டாகும் என அசரீரிக் கேட்டது. தாமரை மலரில் தோன்றியதால் பத்மாவதி எனப் பெயரிட்டு சீரும் சிறப்புடனும் வளர்த்து வந்தான்.
இதனிடையே சீனிவாசன் என்ற பெயரோடு வாழ்ந்து வந்த மகாவிஷ்ணு பத்மாவதியைக் கண்டார். உடனே பெற்ற தாய் போல தன்னை கவனித்து வந்த வகுலாதேவியிடம் சென்று பூர்வஜென்ம கதைகளைக் கூறி பத்மாவதியை தான் மணக்க வேண்டிய அவசியத்தைக் கூறுகிறார். அதே சமயம் ஆகாச ராஜாவும் அவனது மனைவியும் கூட தங்களது மகள் வேங்கட மலையில் வசித்து வரும் சீனிவாசனை மணக்க விரும்புவதை அறிகிறார்கள். செல்வங்களுக்கு அதிபதியான கு«பரன் இத்திருமணச் செலவுகளுக்காக சீனிவாசனுக்கு கடன் தருகிறார்.
இரு வீட்டார் சம்மதத்துடன் தேவர்களும், சிவன், பிரம்மா புடைசூழ சீனிவாசன், பத்மாவதி திருமணம் நடைபெறுகிறது. இக்கதையும், இத்திருமணமும் நடைபெற்ற இடம் தான் திருவேங்கடமலை (திருப்பதி திருமலை). அதனால் இன்றும் திருமலையில் தினமும் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி இப்போதும் பிரம்மோற்சவம் நடக்கும் 9 நாட்களும், மஞ்சள், குங்குமம் மற்றும் சேலை திருப்பதியில் இருந்து திருச்சானூரில் இருக்கும் பத்மாவதி தாயாருக்கு எடுத்து செல்லப்படுகிறது.
கோவில் வரலாறு : தொண்டைமான் எனும் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த மன்னன் ஒருவன் முதன் முதலாக கோவில், பிரகாரம் கட்டி தினசரி வழிபாட்டிற்கு வழிசெய்தான் எனக் கூறப்படுகிறது. அவனைத் தொடர்ந்து பல சோழ மன்னர்கள் பல சேவைகளை செய்துள்ளனர். ஆனால் இன்றுள்ள வளங்களில் பெரும்பாலானவை விஜயநகர பேரரசுக் காலத்தில் வந்தவை. கிருஷ்ணதேவராயர் இக்கோவிலுக்கு பலவசதிகளை செய்து கொடுத்து எக்கச்சக்கமான தங்க வைர ஆபரணங்களையும் பரிசளித்தார்.
1843லிருந்து 1933 வரை ஆங்கிலேய ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் கோவில் நிர்வாகம் ஹதிராம்ஜி மடத்தை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது. 1932-ல் மதராஸ் அரசு பொறுப்பேற்றதுடன் தனி தேவஸ்தானம் அமைத்து பொறுப்பை அதன் வசமளித்தது. 1933-ல் திருப்பதி திருமலை தேவஸ்தானம் உதயமானது.
சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம், சாத்தனார் மணிமேகலை போன்ற இலக்கியங்களிலேயே திருப்பதி பற்றிய குறிப்புகள் உள்ளன. அவற்றில் திருப்பதியின் அப்போதைய பெயரான ‘திருவேங்கடம்’ என குறிப்பிடப்பட்டிருக்கும்.
இன்று எத்தனையோ திருக்கோயில்கள் இருக்கும் போது திருப்பதியில் மட்டும் ஏன் பக்தர்கள் கூட்டம் இப்படி அலைமோதுகிறது? காரணம் இல்லாமல் இல்லை. இந்த சேஷத்திரத்தில் மகாவிஷ்ணு நடத்திக் காட்டிய மகிமைகள் பல. ஒருநாள் இருநாளில் அல்ல. பல ஜென்மங்கள் எடுத்துக் கொண்டு நடத்திய ‘நாடகம்’ தான் திருப்பதியில் வெங்கடேஸ்வர பெருமாள் குடிக்கொள்ள காரணமாயிற்று,
கங்கை நதிக்கரையில் காஸ்யப முனிவரின் தலைமையில் முனிவர்கள் சிலர் யாகம் செய்துக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட நாரதர் இந்த யாகம் யாருடைய நன்மைக்காக நடத்தப்படுகிறது என கேட்டார். ஆனால் அங்கிருந்த முனிவர்களால் அதற்கு பதிலளிக்க முடியவில்லை. அதனால் பிருகு முனிவரிடம் உதவி கேட்டு சென்றனர்.
பிருகு முனிவரின் உள்ளங்காலில் ஒரு கண் இருந்ததால் அவருக்கு மற்ற முனிவர்களை விட ஞானம் சற்று அதிகம் இருந்தது. அவர் இதற்கு ஒரு தீர்வு காண நினைத்து பிரம்மனை தரிசிக்க சத்யலோகத்திற்கு சென்றார். அங்கே பிரம்மதேவர் சரஸ்வதி தேவியின் துணையுடன் தனது நான்கு முகங்களாலும் ஸ்ரீமன் நாராயணைப் போற்றி நான்கு வேதங்கள் ஓதிக் கொண்டிருந்தார்.
அவர் பிருகு முனிவர் வந்ததை கவனிக்கவே இல்லை. சற்று நேரம் பொறுத்துப் பார்த்த முனிவர் இவர் வழிபாட்டிற்கு உகந்தவர் இல்லை என முடிவு செய்து சிவப்பெருமானை தரிசிக்க கைலாசம் சென்றார். ஆனால் சிவன் பார்வதிதேவியுடன் ஏதோ முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்ததால் அவரும் முனிவரை கண்டுக் கொள்ளவில்லை. முனிவரைக் கண்ட பார்வதிதேவி சிவனிடம் கூற அவரோ தனது முக்கிய ஆலோசனையின் போது முனிவர் குறுக்கிட்டதைக் விரும்பாததால் அவரை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலானார். அதனால் ஆத்திரமுற்ற பிருகு முனிவர் சிவப்பெருமானுக்கு சாபமிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
பின்னர் மகாவிஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் வந்தார். ஆனால் ஆதிசேஷன் குடை விரிக்க, மகாலட்சுமி காலடியில் அமர்ந்து பணிவிடை செய்ய ஆனந்த சயனத்தில் இருந்ததால் அவரும் முனிவர் வந்ததை கவனிக்கவில்லை. அதனால் ஆத்திரத்தில் மதியிழந்த பிருகு முனிவர் மகாலட்சுமியின் உறைவிடமான மகாவிஷ்ணுவின் நெஞ்சில் எட்டி உதைத்தார்.
முனிவரின் கோபத்தை தணிக்க நினைத்த பெருமாள் எட்டி உதைத்த காலை சட்டென பிடித்து பாதங்களை மென்மையாக அழுத்திவிட்டார். அந்த இதத்தில் முனிவரின் கோபம் தணிந்தது. அதே சமயம் மகாவிஷ்ணு பிருகு முனிவரின் காலில் இருந்த கண்ணை பறித்துவிட்டார். பாதத்தில் இருந்த கண் தான் அவருக்கு இத்தனை அகங்காரத்தை தந்தது. தனது தவற்றை உணர்ந்த முனிவர் விஷ்ணுவிடம் மன்னிப்புக் கோரிவிட்டு மும்மூர்த்திகளில் சிறந்தவர் இவரே என முடிவு செய்தார்.
இருப்பினும், தனது மணவாளன் தன்னை எட்டி உதைத்த முனிவரின் காலைப் பிடித்து மன்னிப்புக் கேட்டதை விரும்பாத ஸ்ரீதேவி அவரிடம் கோபித்துக் கொண்டு சென்று இன்று மகாராஷ்டிராவில் உள்ள கோலாபூர் எனும் இடத்திற்கு சென்றுவிட்டார். அவரைத் தேடிப் பிடித்து வருவதற்காக பூலோகம் வந்த மகாவிஷ்ணு வேங்கடமலையில் உள்ள புஷ்கரணியின் தெற்கு கரையில் ஒரு புளிய மரத்தடியில் எறும்பு புற்றின் மேல் அமர்ந்து தவம் புரிய ஆரம்பித்தார்.
இதில் மனமுருகிய பிரம்மரும், ஈசனும் பெருமாளுக்கு உதவும் நோக்கோடு பசு மற்றும் கன்றுக் குட்டியின் வடிவெடுத்து அவர்களும் பூலோகம் வந்தனர். இத்தனை சங்கதிகளையும் சூர்ய பகவான் மூலம் அறிந்த மகாலட்சுமி அவரது அறிவுரைப்படி மாடு மேய்க்கும் பெண்ணாக உருக்கொண்டு வந்து பசுவையும் கன்றையும் சோழ மன்னனுக்கு விற்றார். அவற்றை வாங்கிய சோழ மன்னனின் பணியாட்கள் அவற்றை வேங்கடமலைக்கு மேய அனுப்புவார்கள்.
அங்கே ஒரு எறும்பு புற்றில் மகாவிஷ்ணுவை கண்ட பசு தாமாகவே அங்கே பால்சுரக்க ஆரம்பித்தது. அதை ஏற்று மகாவிஷ்ணுவும் பசியாறி வந்தார். இதற்கிடையே அரண்மனையில் பசுக்கள் பால் தருவது இல்லை என்பதை கவனித்த மன்னனின் வேலையாள் பசுவை பின் தொடர்ந்து வந்தான். அது ஒரு இடத்தில் தானாகவே பால் சுரந்து பாலை வீணடிப்பதை கவனித்த அவன் பசுவின் மீது தன் கோடாலியை வீசியெறிய அது பசு மீது பட்டுவிடக் கூடாது என மகாவிஷ்ணு குறுக்கேத் தோன்றி அடியை தான் வாங்கினார். தான் வீசிய ஆயுதம் மகாவிஷ்ணுவை தாக்கி அதனால் ரத்தம் வருவதைக் கண்ட வேலையாள் அதிர்ச்சியில் உயிரிழந்தான்.
ரத்தக் கறையுடன் பசு மாடு வருவதைக் கண்ட சோழ ராஜா என்ன நடந்தது என அறிய அதை பின் தொடர்ந்தான். அஙகே எறும்பு புற்று ஒன்றின் அருகே தனது வேலையாள் இறந்து கிடப்பதைக் கண்டு எதுமறியாமல் விழித்தான். அப்பொழுது அவனுக்கு காட்சியளித்த விஷ்ணு அவனது வேலைக்காரன் செய்த குற்றத்திற்கு மன்னனுக்கு சாபமிட்டார். ஆனால் மன்னன் மீது தவறேதுமில்லாக் காரணத்தால் அவன் அடுத்த ஜென்மத்தில் ஆகாய ராஜாவாக பிறப்பானென்றும் தனக்கும் பத்மாவதிக்கும் திருமணம் நடக்கும் சமயம் அவனது சாபம் தீரும் எனவும் ஆசி வழங்கினார்.
ஸ்ரீ வராகசுவாமி ஆலயம் : இந்த சம்பவங்கள் நடந்த காலக்கட்டத்தில் திருப்பதி மலை வராகசுவாமியின் இருப்பிடமாக ஆதி வராக ஷேத்திரமாக இருந்தது. சோழ ராஜாவிற்கு ஆசி வழங்கி அனுப்பிய மகாவிஷ்ணு ஸ்ரீனிவாசன் என்ற பெயருடன் தனக்கு ஒரு இருப்பிடம் வேண்டி வராக சுவாமியை சந்தித்தார். அவரும் மகிழ்ந்து இடமளித்தார். அதற்கு நன்றிக் கூறும் விதமாகத் தான் இன்றும் திருப்பதிக்கு செல்பவர்கள் முதலில் புஷ்கரணியில் குளித்து வராக சுவாமியை தரிசித்து பூஜை, நைவேத்தியங்களை முதலில் அவருக்கு செய்துவிட்டு பிறகு வெங்கடேசப் பெருமாளை தரிசிக்க வேண்டும் என ஒரு ஐதீகம் உள்ளது.
பத்மாவதி தாயார் : இது அனைத்தும் ஒரு ஜென்மத்து கதை. இக்கதை சோழ மன்னனின் அடுத்த ஜென்மத்திலும் தொடர்கிறது. அடுத்த பிறவியில் அச்சோழ மன்னன் ஆகாச ராஜாவாக பிறந்தான். பிறந்து வளர்ந்து அனைத்து வளங்களும் பெற்று திகழ்ந்த அவனுக்கு பிள்ளைப் «பறு இல்லை அதனால் யாகம் செய்ய எண்ணிய அவன் நிலத்தை உழுதப் பொழுது அழகிய தாமரை மலர் ஒன்று தோன்றியது. அதை அருகில் சென்று பார்த்தப்போது அதில் ஒரு பெண் குழந்தை இருப்பது தெரிந்தது. அப்போது அதை எடுத்து வளர்த்தால் சகல சவுபாக்கியம் உண்டாகும் என அசரீரிக் கேட்டது. தாமரை மலரில் தோன்றியதால் பத்மாவதி எனப் பெயரிட்டு சீரும் சிறப்புடனும் வளர்த்து வந்தான்.
இதனிடையே சீனிவாசன் என்ற பெயரோடு வாழ்ந்து வந்த மகாவிஷ்ணு பத்மாவதியைக் கண்டார். உடனே பெற்ற தாய் போல தன்னை கவனித்து வந்த வகுலாதேவியிடம் சென்று பூர்வஜென்ம கதைகளைக் கூறி பத்மாவதியை தான் மணக்க வேண்டிய அவசியத்தைக் கூறுகிறார். அதே சமயம் ஆகாச ராஜாவும் அவனது மனைவியும் கூட தங்களது மகள் வேங்கட மலையில் வசித்து வரும் சீனிவாசனை மணக்க விரும்புவதை அறிகிறார்கள். செல்வங்களுக்கு அதிபதியான கு«பரன் இத்திருமணச் செலவுகளுக்காக சீனிவாசனுக்கு கடன் தருகிறார்.
இரு வீட்டார் சம்மதத்துடன் தேவர்களும், சிவன், பிரம்மா புடைசூழ சீனிவாசன், பத்மாவதி திருமணம் நடைபெறுகிறது. இக்கதையும், இத்திருமணமும் நடைபெற்ற இடம் தான் திருவேங்கடமலை (திருப்பதி திருமலை). அதனால் இன்றும் திருமலையில் தினமும் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி இப்போதும் பிரம்மோற்சவம் நடக்கும் 9 நாட்களும், மஞ்சள், குங்குமம் மற்றும் சேலை திருப்பதியில் இருந்து திருச்சானூரில் இருக்கும் பத்மாவதி தாயாருக்கு எடுத்து செல்லப்படுகிறது.
கோவில் வரலாறு : தொண்டைமான் எனும் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த மன்னன் ஒருவன் முதன் முதலாக கோவில், பிரகாரம் கட்டி தினசரி வழிபாட்டிற்கு வழிசெய்தான் எனக் கூறப்படுகிறது. அவனைத் தொடர்ந்து பல சோழ மன்னர்கள் பல சேவைகளை செய்துள்ளனர். ஆனால் இன்றுள்ள வளங்களில் பெரும்பாலானவை விஜயநகர பேரரசுக் காலத்தில் வந்தவை. கிருஷ்ணதேவராயர் இக்கோவிலுக்கு பலவசதிகளை செய்து கொடுத்து எக்கச்சக்கமான தங்க வைர ஆபரணங்களையும் பரிசளித்தார்.
1843லிருந்து 1933 வரை ஆங்கிலேய ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் கோவில் நிர்வாகம் ஹதிராம்ஜி மடத்தை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது. 1932-ல் மதராஸ் அரசு பொறுப்பேற்றதுடன் தனி தேவஸ்தானம் அமைத்து பொறுப்பை அதன் வசமளித்தது. 1933-ல் திருப்பதி திருமலை தேவஸ்தானம் உதயமானது.
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 101 வது திவ்ய தேசம். கருப்புநிறம் கொண்ட கண்ணன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிப்பது இத்தலத்தின் தனி சிறப்பு.
தல வரலாறு :
கிருஷ்ணரின் தாய்மாமன் கம்சன் அவருடைய மாமனாராகிய ஜராசங்கு கிருஷ்ணன் மீது 16 முறை படையெடுத்து தோற்று போனார். 17வது முறை சண்டையிட்டபோது மதுரா நகரிலிருந்து மக்களை வெளியேற கிருஷ்ணர் ஆணையிட்டார். அப்போது கிருஷ்ணர் சௌராஷ்டிரா தேசம் மற்றும் ஜாம் நகர் அருகில் கடலோரத்தில் வாழ்ந்து வந்த ஒரு மகாராஜாவின் மகள் ருக்மணியை மணந்து 100 ஆண்டுகள் மன்னராக ஆட்சிபுரிந்தார்.
ஒரே நாளில் ஒரே இரவில் இப்பகுதியை தங்கத்தால் ஆன நகராக துவாரகாவை உருவாக்குகிறார். கண்ணன் பாதம் பட்டாலே புண்ணியம் என்று சொல்லுவார்கள். கண்ணன் இங்கே அரசனாக வாழ்ந்திருந்து மக்களிடையே கலந்து பழகியிருக்கிறார். பக்தர்கள் அவரை அரசனாகவும் போற்றுகிறார்கள். பகவானாகவும் துகிக்கிறார்கள்.
கம்சனைக் கொன்ற பிறகு மதுராவுக்கு உக்ரசேனனை அரசனாக்கினார் கிருஷ்ணன். கம்சனுடைய மாமனாரும்- மகத தேசத்து அரசனுமான ஜராசந்தனுக்குக் கோபத்தை உண்டாக்கியது. அவன் மதுராமீது போர் தொடுத்தான். ஜராசந்தனுடைய சேனையை எதிர்த்து நிற்க முடியாமல் யாதவ சேனை பின்வாங்கியது.
இதனிடையே யாதவர்களால் தன் தந்தை அவமானப்படுத்தப்பட்டதை நாரதர் மூலம் அறிந்த காலயவனன் என்ற அரசனும் பெரும்படையுடன் மதுராவைத் தாக்கினான். இரண்டு எதிரிகளை ஒரே சமயத்தில் சமாளிப்பது கஷ்டம் என்பதை உணர்ந்த கிருஷ்ணர் மீதமிருந்த யாதவ சேனைகளையும் மக்களையும் அழைத்துக் கொண்டு மேற்குக் கடற்கரைப் பக்கம் வந்து சமுத்திர ராஜனிடம் பன்னிரண்டு யோசனை தூரம் கடலில் இடம் கேட்டார்.
அதன் படி கடல் பன்னிரண்டு யோசனை தூரம் உள்வாங்கியது. கடல் கொடுத்த பூமியில் தேவதச்சன் விஸ்வகர்மாவின் உதவியுடன் ஒரு அற்புதமான நகரை நிர்மாணித்து யாதவ மக்களையும் மாடு- கன்றுகளையும் அங்கு குடியேற்றினார் கிருஷ்ணர். இப்படித் தோன்றியதுதான் துவாரகா.
கிருஷ்ணன் வாழ்ந்த காலத்திலிருந்த துவாரகா இப்போது இல்லை. கி.பி. 8 முதல் 10-ஆம் நூற்றாண்டுகளில் அந்நிய படையெடுப்பாளர்கள் அழித்துவிட்டனர். பின்னாளில் 15 மற்றும் 16-ஆம் நூற்றாண்டுகளில் குஜ்ராத்தை ஆண்ட சாளுக்கிய அரச பரம்பரையினர் கட்டியதுதான் இப்போதுள்ள கோவில் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த துவாரகா கிருஷ்ணர் கோவில் மற்றும் சோமநாதர் கோவில் பாணியில் அமைந்திருப்பதை அதற்கு ஆதாரமாகக் கூறுகிறார்கள். துவாரகாதீஷ் கோவில் கோமதி நதிக்கரையை ஒட்டிய உயரமான இடத்தில் அமைந்துள்ளது. பல படிக்கட்டுகள் ஏறித்தான் உள்ளே செல்ல வேண்டும்.
இக்கோவில் கோபுர உயரம் 51.8 மீட்டர். நான்கு நிலைகளைக் கொண்ட கோபுரத்தின்மேல் உயர்ந்து நிற்கும் கூர்மையான கோபுரத்தைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. 72 தூண்களைக் கொண்ட பெரிய நுழைவாயில் மண்டபமும் அற்புதமானது. கருவறையில் துவாரகாதீஷ் ஸ்ரீகிருஷ்ணன் சிரசில் கொண்டையுடன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். இக்கோவிலை ஜெகத்மந்திர் என்றும் அழைக்கிறார்கள்.
தல சிறப்பு பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 101 வது திவ்ய தேசம்.கருப்புநிறம் கொண்ட கண்ணன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிப்பது இத்தலத்தின் தனி சிறப்பு. இவ்வூர் ஒரு காலத்தில் சுதாமபுரி எனப்பட்டது. இங்கு தான் சுதாமர் எனப்படும் குசேலர் பிறந்தார். இவருக்கு தனிக்கோயில் இங்குள்ளது. சுதாமர் கோயில் என அழைக்கின்றனர். இத்தக் கோயில் ஐந்து மாடிகளைக் கொண்டது.
60 அழகிய சிற்பங்களுடன் கூடிய தூண்கள் இம்மாடிகளைத் தாங்குகின்றன. இங்குள்ள சிற்பங்களே சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன. கீழே சன்னிதானமும் மேல்மாடியில் கோபுரமும் உள்ளன. இதன் உயரம் மட்டும் 172 அடி. கோயிலின் நடுவில் மிகப்பெரிய மண்டபம் உள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி இன்னும் பல சிறிய கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு மாடியில் நின்றும் துவாரகையின் இயற்கை அழகை ரசிக்கலாம். துளசிக்கு சன்னதி இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
தலபெருமை கிருஷ்ண ஜெயந்தி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கிருஷ்ணரை விதவித ஆடை அலங்காரம் செய்து வழிபடுவர். மேன்மை அடைவர். ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட சாரதா பீடம் உள்ளது. 5000 ஆண்டுகள் பழமையான திருத்தலம் இதுவே என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.
கோமதி நதிக்கரையில், துவாரகா கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது. இந்த நதியில் நீராடினால் கங்கா ஸ்நானம் செய்த பலன் கிட்டும். 11 விதமான பதார்த்தங்கள் பிரசாதமாக கிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது. துர்வாச முனிவரின் கமண்டல நீரை ருக்மணி தேவி பருகியதால் துர்வாச முனிவர் இங்குள்ள பூமி உப்பாகும் என்றும் கடல்நீர் வற்றும் என சாபமிட்டார். பின்னர் துவாரகை வந்த கிருஷ்ணரை மண முடித்த பின் துர்வாச முனிவருக்கு கிருஷ்ணர் விருந்து படைத்தார்.
இதில் மனம் குளிர்ந்த துர்வாச முனிவர் சாபத்தை நீக்கி ஊர் செழிப்புறவும் கிருஷ்ணர் 100 ஆண்டுகள் ஆட்சி புரியவும் ஆசி வழங்கினார். இக்கோவில் கோபுரத்தின் உச்சியில் முக்கோண வடிவிலான- சிவப்புப் பட்டுத் துணியாலான சூரிய- சந்திர உருவங்கள் பதித்த 82 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய கொடி தினமும் மூன்று முறை ஏற்றி இறக்கப்படுகிறது. கொடியை ஏற்றியவுடன் கோபுர உச்சியிலேயே உள்ள வட்டமான இடத்தில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது. காலையில் பாலகிருஷ்ணனாகவும் பகலில் மகாராஜாவைப்போலவும் மாலையில் பூஜிக்கத்தக்க அலங்காரத்துடனும் துவாரகாதீஷ் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.
துவாரகாவிலிருந்து சற்று தூரத்தில் துவாரகா தீவு உள்ளது. படகில்தான் அங்கு செல்ல வேண்டும். முதலில் ஸ்ரீகிருஷ்ணன் ஆட்சி செய்த துவாரகா கடலில் மூழ்கிய சமயம் அவர் விருப்பப்படி கடலில் மூழ்காமல் எஞ்சியிருந்த பகுதிதான் இது. இங்கே அவரது அரண்மனை அப்படியே உள்ளது.
இங்கும் ஒரு துவாரகாநாத் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். இங்கு அவரது மற்ற மனைவியர்களின் ருக்மிணி தவிர கோவில்கள், தாய் தேவகி கோவில், கல்யாணராமர், திரிவிக்கிரமமூர்த்தி மற்றும் லக்ஷ்மி நாராயணர் கோவில்கள் உள்ளன. இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் சங்க தீர்த்தம் உள்ளது. இந்த தீவு துவாரகையிலேயே ருக்மிணிக்குத் தனிக்கோவில் உள்ளது. சிரித்த முகத்துடன் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார் ருக்மிணி.
துவாரகா கிருஷ்ணனிடம் ருக்மிணி ஏதோ காரணத்தால் கோபித்துக் கொண்டு இங்கு வந்ததாக கோவில் பூசாரி கூறுகிறார். அதாவது துவாரகா கோவிலிலுள்ள ஸ்ரீகிருஷ்ணரை நேருக்கு நேர் பார்த்தபடி இங்கு நிற்கிறாராம் ருக்மிணி. கோமதி நதி கடலில் சங்கமிக்கும் இடத்தில் துவாரகா கற்கள் கிடைக்கின்றன.
அவற்றின் மேல்பாகம் தேன் அடைபோல் இருக்கும். சில கற்களில் விஷ்ணுவின் சக்கரம் இருக்குமாம். இந்த கற்களில் நாராயண சின்னம் மற்றும் மகாலக்ஷ்மி சின்னம் பிரதீக் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த கற்களை எடுத்து வந்து பூஜிப்பவர்கள் மோட்சத்தை அடைகிறார்கள் என்று நம்பப்படுகிறது. இந்த தீவு துவாரகாவுக்கு அக்காலத்தில் சங்கோதரா மற்றும் ஸ்ரீதீர்த்தா என்று பெயர்.
இங்கு ஸ்ரீகிருஷ்ணன் ஆட்சி செய்த தர்ம சபையும் ஒரு மச்சாவதார பகவான் கோவிலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துவாரகாவிலும் தீவு துவாரகாவிலும் ஆண்டு முழுவதும் எல்லா விழாக்களும் சிறப்பாக நடக்கின்றன. தினமும் இந்தியா முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து துவாரகாதீஷையும் ருக்மிணி தாயாரையும் தரிசனம் செய்கின்றனர். ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இருப்பிடம் :
துவாரகை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 453 கி.மீ., தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து காலை 9.35க்கு கிளம்பும் நவஜீவன் எக்ஸ்பிரசில் அகமதாபாத் சென்று, அங்கிருந்து ஒகாதுறைமுகம் செல்லும் ரயிலில் சென்றால், துவாரகையை அடையலாம். அகமதாபாத்தில் இருந்து பஸ்சும் உண்டு.
கிருஷ்ணரின் தாய்மாமன் கம்சன் அவருடைய மாமனாராகிய ஜராசங்கு கிருஷ்ணன் மீது 16 முறை படையெடுத்து தோற்று போனார். 17வது முறை சண்டையிட்டபோது மதுரா நகரிலிருந்து மக்களை வெளியேற கிருஷ்ணர் ஆணையிட்டார். அப்போது கிருஷ்ணர் சௌராஷ்டிரா தேசம் மற்றும் ஜாம் நகர் அருகில் கடலோரத்தில் வாழ்ந்து வந்த ஒரு மகாராஜாவின் மகள் ருக்மணியை மணந்து 100 ஆண்டுகள் மன்னராக ஆட்சிபுரிந்தார்.
ஒரே நாளில் ஒரே இரவில் இப்பகுதியை தங்கத்தால் ஆன நகராக துவாரகாவை உருவாக்குகிறார். கண்ணன் பாதம் பட்டாலே புண்ணியம் என்று சொல்லுவார்கள். கண்ணன் இங்கே அரசனாக வாழ்ந்திருந்து மக்களிடையே கலந்து பழகியிருக்கிறார். பக்தர்கள் அவரை அரசனாகவும் போற்றுகிறார்கள். பகவானாகவும் துகிக்கிறார்கள்.
கம்சனைக் கொன்ற பிறகு மதுராவுக்கு உக்ரசேனனை அரசனாக்கினார் கிருஷ்ணன். கம்சனுடைய மாமனாரும்- மகத தேசத்து அரசனுமான ஜராசந்தனுக்குக் கோபத்தை உண்டாக்கியது. அவன் மதுராமீது போர் தொடுத்தான். ஜராசந்தனுடைய சேனையை எதிர்த்து நிற்க முடியாமல் யாதவ சேனை பின்வாங்கியது.
இதனிடையே யாதவர்களால் தன் தந்தை அவமானப்படுத்தப்பட்டதை நாரதர் மூலம் அறிந்த காலயவனன் என்ற அரசனும் பெரும்படையுடன் மதுராவைத் தாக்கினான். இரண்டு எதிரிகளை ஒரே சமயத்தில் சமாளிப்பது கஷ்டம் என்பதை உணர்ந்த கிருஷ்ணர் மீதமிருந்த யாதவ சேனைகளையும் மக்களையும் அழைத்துக் கொண்டு மேற்குக் கடற்கரைப் பக்கம் வந்து சமுத்திர ராஜனிடம் பன்னிரண்டு யோசனை தூரம் கடலில் இடம் கேட்டார்.
அதன் படி கடல் பன்னிரண்டு யோசனை தூரம் உள்வாங்கியது. கடல் கொடுத்த பூமியில் தேவதச்சன் விஸ்வகர்மாவின் உதவியுடன் ஒரு அற்புதமான நகரை நிர்மாணித்து யாதவ மக்களையும் மாடு- கன்றுகளையும் அங்கு குடியேற்றினார் கிருஷ்ணர். இப்படித் தோன்றியதுதான் துவாரகா.
கிருஷ்ணன் வாழ்ந்த காலத்திலிருந்த துவாரகா இப்போது இல்லை. கி.பி. 8 முதல் 10-ஆம் நூற்றாண்டுகளில் அந்நிய படையெடுப்பாளர்கள் அழித்துவிட்டனர். பின்னாளில் 15 மற்றும் 16-ஆம் நூற்றாண்டுகளில் குஜ்ராத்தை ஆண்ட சாளுக்கிய அரச பரம்பரையினர் கட்டியதுதான் இப்போதுள்ள கோவில் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த துவாரகா கிருஷ்ணர் கோவில் மற்றும் சோமநாதர் கோவில் பாணியில் அமைந்திருப்பதை அதற்கு ஆதாரமாகக் கூறுகிறார்கள். துவாரகாதீஷ் கோவில் கோமதி நதிக்கரையை ஒட்டிய உயரமான இடத்தில் அமைந்துள்ளது. பல படிக்கட்டுகள் ஏறித்தான் உள்ளே செல்ல வேண்டும்.
இக்கோவில் கோபுர உயரம் 51.8 மீட்டர். நான்கு நிலைகளைக் கொண்ட கோபுரத்தின்மேல் உயர்ந்து நிற்கும் கூர்மையான கோபுரத்தைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. 72 தூண்களைக் கொண்ட பெரிய நுழைவாயில் மண்டபமும் அற்புதமானது. கருவறையில் துவாரகாதீஷ் ஸ்ரீகிருஷ்ணன் சிரசில் கொண்டையுடன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். இக்கோவிலை ஜெகத்மந்திர் என்றும் அழைக்கிறார்கள்.
தல சிறப்பு பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 101 வது திவ்ய தேசம்.கருப்புநிறம் கொண்ட கண்ணன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிப்பது இத்தலத்தின் தனி சிறப்பு. இவ்வூர் ஒரு காலத்தில் சுதாமபுரி எனப்பட்டது. இங்கு தான் சுதாமர் எனப்படும் குசேலர் பிறந்தார். இவருக்கு தனிக்கோயில் இங்குள்ளது. சுதாமர் கோயில் என அழைக்கின்றனர். இத்தக் கோயில் ஐந்து மாடிகளைக் கொண்டது.
60 அழகிய சிற்பங்களுடன் கூடிய தூண்கள் இம்மாடிகளைத் தாங்குகின்றன. இங்குள்ள சிற்பங்களே சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன. கீழே சன்னிதானமும் மேல்மாடியில் கோபுரமும் உள்ளன. இதன் உயரம் மட்டும் 172 அடி. கோயிலின் நடுவில் மிகப்பெரிய மண்டபம் உள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி இன்னும் பல சிறிய கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு மாடியில் நின்றும் துவாரகையின் இயற்கை அழகை ரசிக்கலாம். துளசிக்கு சன்னதி இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
தலபெருமை கிருஷ்ண ஜெயந்தி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கிருஷ்ணரை விதவித ஆடை அலங்காரம் செய்து வழிபடுவர். மேன்மை அடைவர். ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட சாரதா பீடம் உள்ளது. 5000 ஆண்டுகள் பழமையான திருத்தலம் இதுவே என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.
கோமதி நதிக்கரையில், துவாரகா கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது. இந்த நதியில் நீராடினால் கங்கா ஸ்நானம் செய்த பலன் கிட்டும். 11 விதமான பதார்த்தங்கள் பிரசாதமாக கிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது. துர்வாச முனிவரின் கமண்டல நீரை ருக்மணி தேவி பருகியதால் துர்வாச முனிவர் இங்குள்ள பூமி உப்பாகும் என்றும் கடல்நீர் வற்றும் என சாபமிட்டார். பின்னர் துவாரகை வந்த கிருஷ்ணரை மண முடித்த பின் துர்வாச முனிவருக்கு கிருஷ்ணர் விருந்து படைத்தார்.
இதில் மனம் குளிர்ந்த துர்வாச முனிவர் சாபத்தை நீக்கி ஊர் செழிப்புறவும் கிருஷ்ணர் 100 ஆண்டுகள் ஆட்சி புரியவும் ஆசி வழங்கினார். இக்கோவில் கோபுரத்தின் உச்சியில் முக்கோண வடிவிலான- சிவப்புப் பட்டுத் துணியாலான சூரிய- சந்திர உருவங்கள் பதித்த 82 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய கொடி தினமும் மூன்று முறை ஏற்றி இறக்கப்படுகிறது. கொடியை ஏற்றியவுடன் கோபுர உச்சியிலேயே உள்ள வட்டமான இடத்தில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது. காலையில் பாலகிருஷ்ணனாகவும் பகலில் மகாராஜாவைப்போலவும் மாலையில் பூஜிக்கத்தக்க அலங்காரத்துடனும் துவாரகாதீஷ் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.
துவாரகாவிலிருந்து சற்று தூரத்தில் துவாரகா தீவு உள்ளது. படகில்தான் அங்கு செல்ல வேண்டும். முதலில் ஸ்ரீகிருஷ்ணன் ஆட்சி செய்த துவாரகா கடலில் மூழ்கிய சமயம் அவர் விருப்பப்படி கடலில் மூழ்காமல் எஞ்சியிருந்த பகுதிதான் இது. இங்கே அவரது அரண்மனை அப்படியே உள்ளது.
இங்கும் ஒரு துவாரகாநாத் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். இங்கு அவரது மற்ற மனைவியர்களின் ருக்மிணி தவிர கோவில்கள், தாய் தேவகி கோவில், கல்யாணராமர், திரிவிக்கிரமமூர்த்தி மற்றும் லக்ஷ்மி நாராயணர் கோவில்கள் உள்ளன. இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் சங்க தீர்த்தம் உள்ளது. இந்த தீவு துவாரகையிலேயே ருக்மிணிக்குத் தனிக்கோவில் உள்ளது. சிரித்த முகத்துடன் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார் ருக்மிணி.
துவாரகா கிருஷ்ணனிடம் ருக்மிணி ஏதோ காரணத்தால் கோபித்துக் கொண்டு இங்கு வந்ததாக கோவில் பூசாரி கூறுகிறார். அதாவது துவாரகா கோவிலிலுள்ள ஸ்ரீகிருஷ்ணரை நேருக்கு நேர் பார்த்தபடி இங்கு நிற்கிறாராம் ருக்மிணி. கோமதி நதி கடலில் சங்கமிக்கும் இடத்தில் துவாரகா கற்கள் கிடைக்கின்றன.
அவற்றின் மேல்பாகம் தேன் அடைபோல் இருக்கும். சில கற்களில் விஷ்ணுவின் சக்கரம் இருக்குமாம். இந்த கற்களில் நாராயண சின்னம் மற்றும் மகாலக்ஷ்மி சின்னம் பிரதீக் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த கற்களை எடுத்து வந்து பூஜிப்பவர்கள் மோட்சத்தை அடைகிறார்கள் என்று நம்பப்படுகிறது. இந்த தீவு துவாரகாவுக்கு அக்காலத்தில் சங்கோதரா மற்றும் ஸ்ரீதீர்த்தா என்று பெயர்.
இங்கு ஸ்ரீகிருஷ்ணன் ஆட்சி செய்த தர்ம சபையும் ஒரு மச்சாவதார பகவான் கோவிலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துவாரகாவிலும் தீவு துவாரகாவிலும் ஆண்டு முழுவதும் எல்லா விழாக்களும் சிறப்பாக நடக்கின்றன. தினமும் இந்தியா முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து துவாரகாதீஷையும் ருக்மிணி தாயாரையும் தரிசனம் செய்கின்றனர். ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இருப்பிடம் :
துவாரகை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 453 கி.மீ., தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து காலை 9.35க்கு கிளம்பும் நவஜீவன் எக்ஸ்பிரசில் அகமதாபாத் சென்று, அங்கிருந்து ஒகாதுறைமுகம் செல்லும் ரயிலில் சென்றால், துவாரகையை அடையலாம். அகமதாபாத்தில் இருந்து பஸ்சும் உண்டு.
‘நவ கயிலாயம்’ என்பது சிவபெருமானின் ஒன்பது திருக்கோவில்களைக் குறிப்பதாகும். ஒன்பது கோவில்களில் நான்கு கோவில்கள் திருநெல்வேலி மாவட்டத்திலும், மற்றவை தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளிலும் அமைந்திருக்கின்றன.
‘நவ கயிலாயம்’ என்பது சிவபெருமானின் ஒன்பது திருக்கோவில்களைக் குறிப்பதாகும். இந்த ஒன்பது சிவன் கோவில்களும், பக்தர்களுக்கு உடல் நலம் மற்றும் செல்வத்தை அளிப்பவையாக உள்ளன. ஒன்பது கோவில்களில் நான்கு கோவில்கள் திருநெல்வேலி மாவட்டத்திலும், மற்றவை தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளிலும் அமைந்திருக்கின்றன.
பாபநாசம்
திருநெல்வேலியில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன், பாபவிநாசர், கயிலாசநாதர் என்று அழைக்கப்படுகிறார். இத்தல இறைவியின் பெயர் உலகாம்பிகை என்பதாகும். இந்தக் கோவில் தீர்த்தமாக, தாமிரபரணி நதி உள்ளது. இந்தத் திருத்தலம் முக்கியமான சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் மிக முக்கியமான அகத்தியர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இது சூரிய தலம் ஆகும்.
சேரன்மகாதேவி
திருநெல்வேலியில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் அம்மைநாதர் என்றும், அம்பாள் ஆவுடைநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இத்தலம் சந்திரனுக்குரியதாக விளங்குகிறது. திருநெல்வேலி சந்திப்பில் இருந்து இங்கு செல்ல பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோடகநல்லூர்
திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவிக்கு செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் கயிலாசநாதர் என்றும், இறைவி சிவகாமிஅம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த ஆலயம் நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு உரிய திருத்தலமாக திகழ்கிறது.
குன்னத்தூர்
திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவேங்கடநாதபுரத்துக்கு அருகில் உள்ள ஒரு சிறிய குன்றில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் பரமேஸ்வரன், கயிலாயநாதர் என்றும், அம்பாள் சிவகாமசுந்தரி என்றும் பெயர் பெற்றுள்ளனர். இந்த திருத்தலம் ‘சங்காணி சிவன் கோவில்’ என்று பக்தர்களால் அறியப்படுகிறது. இது கேது பகவானுக்குரிய தலமாகும்.
முறப்பநாடு
திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்திலும், தூத்துக்குடி நகரில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது. இந்தக் கோவிலில் கயிலாசநாதர், சிவகாமி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். குரு பகவானுக்குரிய தலமாக இது விளங்குகிறது.
ஸ்ரீவைகுண்டம்
திருநெல்வேலியில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும், தூத்துக்குடியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த திருத்தலம் இருக்கிறது. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள இந்த திருத்தலத்தில் கயிலாசநாதர், சிவகாமி அம்மை என்ற பெயரில் இறைவனும், இறைவியும் அருள்கிறார்கள். இது சனி பகவானுக்குரிய கோவிலாக கருதப்படுகிறது.
தென்திருப்பேரை
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 38 கிலோமீட்டர் தூரத்தில் இந்த திருத்தலம் இருக்கிறது. இங்கு கயிலாசநாதரும், அழகிய பொன்னம்மையும், இறைவன்- இறைவியாக வணங்கப்படுகிறார்கள். இது நவக்கிரகத்தில் புதனுக்குரிய திருக்கோவிலாக திகழ்கிறது.
ராஜபதி
இந்தக் கோவிலானது, தென்திருப்பேரை திருத்தலத்தின் அருகிலேயே அமைந்திருக்கிறது. இங்குள்ள இறைவன் கயிலாசநாதர் என்றும், அழகிய பொன்னம்மை என்ற சிவகாமி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்தக் கோவில் கேதுவை வணங்குவதற்கு ஏதுவான திருத்தலமாக உள்ளது.
சேந்தன்பூமங்கலம்
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் ஆத்தூர் மற்றும் புன்னக்காயல் அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் கயிலாசநாதர் என்றும், இறைவி சவுந்தர்ய நாயகி என்றும் பெயர்பெற்றுள்ளனர். இந்தக் கோவில் சுக்ரனுக்குரிய தலமாக பாவிக்கப்படுகிறது.
பாபநாசம்
திருநெல்வேலியில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன், பாபவிநாசர், கயிலாசநாதர் என்று அழைக்கப்படுகிறார். இத்தல இறைவியின் பெயர் உலகாம்பிகை என்பதாகும். இந்தக் கோவில் தீர்த்தமாக, தாமிரபரணி நதி உள்ளது. இந்தத் திருத்தலம் முக்கியமான சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் மிக முக்கியமான அகத்தியர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இது சூரிய தலம் ஆகும்.
சேரன்மகாதேவி
திருநெல்வேலியில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் அம்மைநாதர் என்றும், அம்பாள் ஆவுடைநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இத்தலம் சந்திரனுக்குரியதாக விளங்குகிறது. திருநெல்வேலி சந்திப்பில் இருந்து இங்கு செல்ல பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோடகநல்லூர்
திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவிக்கு செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் கயிலாசநாதர் என்றும், இறைவி சிவகாமிஅம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த ஆலயம் நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு உரிய திருத்தலமாக திகழ்கிறது.
குன்னத்தூர்
திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவேங்கடநாதபுரத்துக்கு அருகில் உள்ள ஒரு சிறிய குன்றில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் பரமேஸ்வரன், கயிலாயநாதர் என்றும், அம்பாள் சிவகாமசுந்தரி என்றும் பெயர் பெற்றுள்ளனர். இந்த திருத்தலம் ‘சங்காணி சிவன் கோவில்’ என்று பக்தர்களால் அறியப்படுகிறது. இது கேது பகவானுக்குரிய தலமாகும்.
முறப்பநாடு
திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்திலும், தூத்துக்குடி நகரில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது. இந்தக் கோவிலில் கயிலாசநாதர், சிவகாமி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். குரு பகவானுக்குரிய தலமாக இது விளங்குகிறது.
ஸ்ரீவைகுண்டம்
திருநெல்வேலியில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும், தூத்துக்குடியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த திருத்தலம் இருக்கிறது. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள இந்த திருத்தலத்தில் கயிலாசநாதர், சிவகாமி அம்மை என்ற பெயரில் இறைவனும், இறைவியும் அருள்கிறார்கள். இது சனி பகவானுக்குரிய கோவிலாக கருதப்படுகிறது.
தென்திருப்பேரை
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 38 கிலோமீட்டர் தூரத்தில் இந்த திருத்தலம் இருக்கிறது. இங்கு கயிலாசநாதரும், அழகிய பொன்னம்மையும், இறைவன்- இறைவியாக வணங்கப்படுகிறார்கள். இது நவக்கிரகத்தில் புதனுக்குரிய திருக்கோவிலாக திகழ்கிறது.
ராஜபதி
இந்தக் கோவிலானது, தென்திருப்பேரை திருத்தலத்தின் அருகிலேயே அமைந்திருக்கிறது. இங்குள்ள இறைவன் கயிலாசநாதர் என்றும், அழகிய பொன்னம்மை என்ற சிவகாமி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்தக் கோவில் கேதுவை வணங்குவதற்கு ஏதுவான திருத்தலமாக உள்ளது.
சேந்தன்பூமங்கலம்
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் ஆத்தூர் மற்றும் புன்னக்காயல் அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் கயிலாசநாதர் என்றும், இறைவி சவுந்தர்ய நாயகி என்றும் பெயர்பெற்றுள்ளனர். இந்தக் கோவில் சுக்ரனுக்குரிய தலமாக பாவிக்கப்படுகிறது.
உங்கள் வாழ்வில் நன்மைகளை வரவழைக்க, ராகு-கேதுக்களை வழிபாடு செய்வது நல்லது. ராகு-கேதுக்களின் தோஷம் நீக்கும் பரிகாரத் தலங்கள், தமிழகத்தில் ஏராளமான இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
1-9-2020 அன்று ராகு-கேது பெயர்ச்சி நடைபெற்றது. இந்த பெயர்ச்சி உங்கள் வாழ்வில் நன்மைகளை வரவழைக்க, ராகு-கேதுக்களை வழிபாடு செய்வது நல்லது. ராகு-கேதுக்களின் தோஷம் நீக்கும் பரிகாரத் தலங்கள், தமிழகத்தில் ஏராளமான இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
சிதம்பரத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, காட்டுமன்னார்கோவில். இங்கு சவுந்தரநாயகி உடனாய அனந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு அஷ்டநாகங் களும், அதன் தலைவனான அனந்தனின் தலைமையில் வழிபட்டு பேறு பெற்றுள்ளன. எனவே இத்தல இறை வனை வழிபட்டால், ராகு-கேது தோஷம், காலசர்ப்ப தோஷம், நாகதோஷம் ஆகியவை நீங்கும்.
நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில், ஆதிசேஷன் வழிபட்ட தலம் ஆகும். இங்கும் ராகு-கேது பெயர்ச்சியின் போது வழிபாடு செய்யலாம்.
பரமக்குடியில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் நயினார்கோயில் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள சவுந்தரநாயகி உடனாய நாகநாத சுவாமி ஆலயத்திலும் வழிபடலாம்.
திருமீயச்சூர் என்ற ஊரில் உள்ள லலிதாம்பிகை கோவிலின் பிரகாரத்தில் 12 நாகர்கள் காணப்படுகின்றன. இதற்கு பாலாபிஷேகம் செய்தும், பரிகாரம் செய்யலாம்.
கும்பகோணம் அருகே நாச்சியார்கோயில் என்ற ஊரில் சீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் இருக்கும் கல் கருடனின் உடலில் ஒன்பது இடத்தில் நாகர் உருவம் அமைந்துள்ளது.
வேலூர் அருகே உள்ள சோளிங்கரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் பெத்தநாகபுடி என்ற ஊர் உள்ளது. இங்கு நாகவல்லி உடனாய நாதேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகே, மாகாளன் எனும் நாகம் லிங்கம் அமைத்து பூஜித்த கோவில் உள்ளது. இந்தக் கோவில் மூலவர், மகாகாளேஸ்வரர் என்பதாகும். இது ராகு-கேது பூஜித்த தலம் ஆகும்.
சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் உடனாய படம்பக்கநாதர் கோவில், ஆதிசேஷன் வழிபட்ட திருக்கோவிலாகும். இங்கு வழிபட்டாலும், ராகு-கேது தோஷம் விலகும்.
கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ளது கதிராமங்கலம். இங்குள்ள வனதுர்க்கை அம்மனை, காவிரியில் நீராடி வழிபட்டால் ராகுவால் உண்டான தோஷங்கள் நீங்கும்.
சிவகங்கை அருகில் உள்ள காளையார்கோயிலுக்கு சென்று, அங்குள்ள மகமாயி அம்மன், கானக்காளையீஸ்வரர் ஆகியோரை வழிபடுங்கள். இதனால் ராகு மற்றும் கேதுவால் உண்டான தோஷம் விலகும்.
நன்னிலத்தில் இருந்து குடவாசல் செல்லும் சாலையில் உள்ளது வாஞ்சி நாதேஸ்வரர் திருக்கோவில். இங்குள்ள நாக தீர்த்தத்தில் நீராடி, நாகநாதரையும், நாகராஜரையும் வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கன்னி அம்மனை மனம் உருக வணங்கி வழிபட்டு வந்தால், ராகு- கேதுவால் ஏற்பட்ட தடைகள் விலகும்.
புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது பேரையூர். இங்கு வீற்றிருக்கும் பிரகதாம்பாள் உடனாய நாகநாதரை, நாகலோகத்தில் இருந்த பாம்புகள் யாவும் வணங்கி அருள் பெற்றதாக தல வரலாறு கூறுகின்றது. இங்குள்ள 5 தலை நாகரை வணங்குவதும் நாக தீர்த்தத்தில் நீராடுவதும் விசேஷம்.
திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பட்டீஸ்வரம் திருத்தலம் அருகில் உள்ளது மணக்கால் என்ற ஊர். இங்கு சேஷபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவனை வழிபட்ட ஆதிசேஷன் தன்னுடைய சாபம் நீங்கப்பெற்றான். இங்குள்ள சிவலிங்கத்தில், பாம்பு ஊர்ந்து சென்ற தடம் இருப்பதை இன்றும் காணலாம்.
தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது, கத்தரிநத்தம். இத்தலத்தில் இறைவனாக காளகஸ்தீஸ்வரரும், இறைவியாக ஞானாம்பிகையும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இத்தலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்திக்கு இணையானதாகப் போற்றப்படுகிறது.
சிதம்பரத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, காட்டுமன்னார்கோவில். இங்கு சவுந்தரநாயகி உடனாய அனந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு அஷ்டநாகங் களும், அதன் தலைவனான அனந்தனின் தலைமையில் வழிபட்டு பேறு பெற்றுள்ளன. எனவே இத்தல இறை வனை வழிபட்டால், ராகு-கேது தோஷம், காலசர்ப்ப தோஷம், நாகதோஷம் ஆகியவை நீங்கும்.
நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில், ஆதிசேஷன் வழிபட்ட தலம் ஆகும். இங்கும் ராகு-கேது பெயர்ச்சியின் போது வழிபாடு செய்யலாம்.
பரமக்குடியில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் நயினார்கோயில் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள சவுந்தரநாயகி உடனாய நாகநாத சுவாமி ஆலயத்திலும் வழிபடலாம்.
திருமீயச்சூர் என்ற ஊரில் உள்ள லலிதாம்பிகை கோவிலின் பிரகாரத்தில் 12 நாகர்கள் காணப்படுகின்றன. இதற்கு பாலாபிஷேகம் செய்தும், பரிகாரம் செய்யலாம்.
கும்பகோணம் அருகே நாச்சியார்கோயில் என்ற ஊரில் சீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் இருக்கும் கல் கருடனின் உடலில் ஒன்பது இடத்தில் நாகர் உருவம் அமைந்துள்ளது.
வேலூர் அருகே உள்ள சோளிங்கரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் பெத்தநாகபுடி என்ற ஊர் உள்ளது. இங்கு நாகவல்லி உடனாய நாதேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகே, மாகாளன் எனும் நாகம் லிங்கம் அமைத்து பூஜித்த கோவில் உள்ளது. இந்தக் கோவில் மூலவர், மகாகாளேஸ்வரர் என்பதாகும். இது ராகு-கேது பூஜித்த தலம் ஆகும்.
சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் உடனாய படம்பக்கநாதர் கோவில், ஆதிசேஷன் வழிபட்ட திருக்கோவிலாகும். இங்கு வழிபட்டாலும், ராகு-கேது தோஷம் விலகும்.
கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ளது கதிராமங்கலம். இங்குள்ள வனதுர்க்கை அம்மனை, காவிரியில் நீராடி வழிபட்டால் ராகுவால் உண்டான தோஷங்கள் நீங்கும்.
சிவகங்கை அருகில் உள்ள காளையார்கோயிலுக்கு சென்று, அங்குள்ள மகமாயி அம்மன், கானக்காளையீஸ்வரர் ஆகியோரை வழிபடுங்கள். இதனால் ராகு மற்றும் கேதுவால் உண்டான தோஷம் விலகும்.
நன்னிலத்தில் இருந்து குடவாசல் செல்லும் சாலையில் உள்ளது வாஞ்சி நாதேஸ்வரர் திருக்கோவில். இங்குள்ள நாக தீர்த்தத்தில் நீராடி, நாகநாதரையும், நாகராஜரையும் வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கன்னி அம்மனை மனம் உருக வணங்கி வழிபட்டு வந்தால், ராகு- கேதுவால் ஏற்பட்ட தடைகள் விலகும்.
புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது பேரையூர். இங்கு வீற்றிருக்கும் பிரகதாம்பாள் உடனாய நாகநாதரை, நாகலோகத்தில் இருந்த பாம்புகள் யாவும் வணங்கி அருள் பெற்றதாக தல வரலாறு கூறுகின்றது. இங்குள்ள 5 தலை நாகரை வணங்குவதும் நாக தீர்த்தத்தில் நீராடுவதும் விசேஷம்.
திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பட்டீஸ்வரம் திருத்தலம் அருகில் உள்ளது மணக்கால் என்ற ஊர். இங்கு சேஷபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவனை வழிபட்ட ஆதிசேஷன் தன்னுடைய சாபம் நீங்கப்பெற்றான். இங்குள்ள சிவலிங்கத்தில், பாம்பு ஊர்ந்து சென்ற தடம் இருப்பதை இன்றும் காணலாம்.
தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது, கத்தரிநத்தம். இத்தலத்தில் இறைவனாக காளகஸ்தீஸ்வரரும், இறைவியாக ஞானாம்பிகையும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இத்தலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்திக்கு இணையானதாகப் போற்றப்படுகிறது.






