என் மலர்
கோவில்கள்
இறைவனைத் தொட்டு வணங்க பக்தர்கள் அனுமதிக்கப்படும் ஆலயம், தமிழில் மட்டுமே அர்ச்சனை வழிபாடு செய்யப்படும் திருத்தலம், என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, சின்ன வேடம்பட்டி தண்டபாணித் திருக்கோவில்.
ஆறு வகை சமயங்கள் சங்கமிக்கும் திருக்கோவில், இறைவனைத் தொட்டு வணங்க பக்தர்கள் அனுமதிக்கப்படும் ஆலயம், தமிழில் மட்டுமே அர்ச்சனை வழிபாடு செய்யப்படும் திருத்தலம், தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு தனி சன்னிதி கொண்ட கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, சின்ன வேடம்பட்டி தண்டபாணித் திருக்கோவில்.
கி.பி. 1908-ம் ஆண்டில் கவுமார மடாலயத்தின் நிறுவனரான ராமானந்த சுவாமிகளால் விநாயகருக்கும், தண்டபாணிக்கும் தனித்தனி சிறு கோவில்கள், செங்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டன. இதன்பின் கஜபூஜை சுந்தர சுவாமிகளால், இந்த ஆலயம் கருங்கல் திருப்பணியாக மாற்றப்பட்டது.
கிழக்கு நோக்கிய நிலையில் ஆலயம் திகழ்கிறது. கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியோர் அபிநாசியப்பருக்கு முன்பாக உள்ளன. உள்ளே நுழைந்ததும், மயில் வாகனத்தை நோக்கியபடி, மூலவர் தண்டபாணி நின்ற கோலத்தில் அருளாசி வழங்குகின்றார். மூலஸ்தான விமானம், தஞ்சாவூர் ராஜராஜேஸ்வரம் கோவிலைப் போன்ற அமைப்பில் உள்ளது.
கவுமார சாஸ்த்திரத்தில் கூறியுள்ளபடி, தண்டபாணி சன்னிதி நடுநாயகமாக விளங்குகின்றது. இவரை மையமாக வைத்து, சித்தி மகோற்கட விநாயகர் சன்னிதி, மேற்கு நோக்கிய அவிநாசியப்பர் சன்னிதி அமைந்துள்ளன. அருகே வைணவத்தை போற்றும் விதமாக பாண்டுரங்கர் சன்னிதியும் இருக்கிறது. அடுத்ததாக பைரவர் சன்னிதி, வடகிழக்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கே அனுமன் சன்னிதி உள்ளன.
திருவள்ளுவருக்கும் தனிச் சன்னிதி இங்கு உள்ளது. இதேபோல அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், ராமானந்த சுவாமிகள், கந்த சுவாமிகள், சுந்தரசுவாமிகள், திருமுருக கிருபானந்த சுவாமிகள் ஆகியோரின் திருவுருவச் சிலை வடிவங்களும் காணப்படுகின்றன. கவுமார மடாலயத்தின் வளாகத்தில் பதினாயிரம் சதுர அடியில் அமைந்த பிரமாண்ட கோவிலாக இந்தத் திருக்கோவில் விளங்குகிறது.
தண்டபாணி கருவறையின் பின்புறம் மேற்கு நோக்கியபடி, பழமையான அவிநாசியப்பர் சன்னிதி அமைந்துள்ளது. வேறு தலத்தில் இருந்து அச்சு பிசகாமல் இங்கு இடம் பெயர்ந்த அபிநாசியப்பரின் இதன் வரலாறு குறித்து அறியலாம்.

கருவறைக் கோட்டத்தில் தட்சிணா மூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மன், உமா மகேஸ்வரி, விஷ்ணு துர்க்கை, விசாலாட்சி ஆகிய திருமேனிகள் அமைந்துள்ளன. காசியில் விசுவநாதரை, பக்தர்களே தொட்டு வணங்குவது போல, இங்கும் அடியார்கள் அவிநாசியப்பரை தொட்டு, அபிஷேக, அர்ச்சனை, ஆராதனை செய்ய அனுமதிக்கப் படுகிறார்கள்.
இவ்வாலயத்தின் சிறப்பே, தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெறும் கோவில் என்பது தான். சித்திரை வருடப் பிறப்பில் தொடங்கி, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், வைகுண்ட ஏகாதசி, கந்தசஷ்டி, நவராத்திரி, தைப்பூசம், மகா சிவராத்திரி என மாதந்தோறும் விழாக்கள் நிறைந்த ஆலயமாக இது திகழ்கின்றது. தைப்பூசத்தன்று தேர்த் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆலயத்தின் தல விருட்சமாக, முருகப் பெருமானுக்கு உகந்த கடம்ப மரம் அமைந் துள்ளது. தலத் தீர்த்தமாக சரவணப் பொய்கை திகழ்கின்றது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
ஆறு சமயக் கோவில்கள் :
ஆதிசங்கரர் வடிவமைத்துத் தந்த ஆறு வகை சமயங்களைப் போற்றும் விதமாக சூரியன், சிவன், சக்தி, திருமால், கணபதி, முருகன் என ஆறு தெய்வங்களுக்கும் இடம் தந்த திருக்கோவிலாக, இது அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தில் தண்டபாணி நடுநாயகமாக விளங்க, தென்கிழக்கில் சூரியன், வடகிழக்கில் அவிநாசியப்பர், வடக்கே குபேரன் திசையில் கருணாம்பிகை, வடமேற்கே பாண்டுரங்கன், நிருதி திசையில் சித்தி மகோற்கட விநாயகர் சன்னிதிகள் அமைந்துள்ளன.
சித்திரத் தேர் :
திருப்பதி கோவிலின் தேரை உருவாக்கிய ஸ்தபதி கோவிந்தராஜ் தலைமையில், அழகிய சித்திரத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது. அடியில் பூதகணங்கள், மேலே ஆமை தாங்கிட, அதன் மீது பூதேவி, ஆதிசேஷன் ஆகியோர் தாங்கும் விதமாக இந்தத் தேர் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆறு பொறிகளில் முருகப்பெருமான் தோற்றம், நாரதரின் வேள்வியில் தோன்றிய முரட்டு ஆட்டை அடக்கும் முருகன், பிரம்மனை சிறை பிடித்தல், சிவனுக்கு உபதேசம் செய்யும் முருகன், பழத்திற்காக ஆண்டிக் கோலம் பூண்டது என பல்வேறு வரலாற்றுக் காட்சிகள் மரச் சிற்பங்களாக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று தேரோட்டம் சிறப்பாக நடைபெறும்.
அமைவிடம் :
கோயம்புத்தூருக்கு வடக்கே 9 கிலோமீட்டர் தொலைவில் சின்னவேடம் பட்டியில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
கி.பி. 1908-ம் ஆண்டில் கவுமார மடாலயத்தின் நிறுவனரான ராமானந்த சுவாமிகளால் விநாயகருக்கும், தண்டபாணிக்கும் தனித்தனி சிறு கோவில்கள், செங்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டன. இதன்பின் கஜபூஜை சுந்தர சுவாமிகளால், இந்த ஆலயம் கருங்கல் திருப்பணியாக மாற்றப்பட்டது.
கிழக்கு நோக்கிய நிலையில் ஆலயம் திகழ்கிறது. கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியோர் அபிநாசியப்பருக்கு முன்பாக உள்ளன. உள்ளே நுழைந்ததும், மயில் வாகனத்தை நோக்கியபடி, மூலவர் தண்டபாணி நின்ற கோலத்தில் அருளாசி வழங்குகின்றார். மூலஸ்தான விமானம், தஞ்சாவூர் ராஜராஜேஸ்வரம் கோவிலைப் போன்ற அமைப்பில் உள்ளது.
கவுமார சாஸ்த்திரத்தில் கூறியுள்ளபடி, தண்டபாணி சன்னிதி நடுநாயகமாக விளங்குகின்றது. இவரை மையமாக வைத்து, சித்தி மகோற்கட விநாயகர் சன்னிதி, மேற்கு நோக்கிய அவிநாசியப்பர் சன்னிதி அமைந்துள்ளன. அருகே வைணவத்தை போற்றும் விதமாக பாண்டுரங்கர் சன்னிதியும் இருக்கிறது. அடுத்ததாக பைரவர் சன்னிதி, வடகிழக்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கே அனுமன் சன்னிதி உள்ளன.
திருவள்ளுவருக்கும் தனிச் சன்னிதி இங்கு உள்ளது. இதேபோல அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், ராமானந்த சுவாமிகள், கந்த சுவாமிகள், சுந்தரசுவாமிகள், திருமுருக கிருபானந்த சுவாமிகள் ஆகியோரின் திருவுருவச் சிலை வடிவங்களும் காணப்படுகின்றன. கவுமார மடாலயத்தின் வளாகத்தில் பதினாயிரம் சதுர அடியில் அமைந்த பிரமாண்ட கோவிலாக இந்தத் திருக்கோவில் விளங்குகிறது.
தண்டபாணி கருவறையின் பின்புறம் மேற்கு நோக்கியபடி, பழமையான அவிநாசியப்பர் சன்னிதி அமைந்துள்ளது. வேறு தலத்தில் இருந்து அச்சு பிசகாமல் இங்கு இடம் பெயர்ந்த அபிநாசியப்பரின் இதன் வரலாறு குறித்து அறியலாம்.
காங்கேயத்தை அடுத்துள்ள சிலம்பக் கவுண்டன் வலசு என்ற ஊரில், பல்லவர் கால பாணியிலான மிகவும் பழமையான அவிநாசியப்பர் ஆலயம் அமைந்திருந்தது. இவ்வாலயம் மிகவும் சிதிலமடைந்திருந்தது. கோவிலைப் பராமரிக்க இயலாததால், இங்குள்ள மூல மூர்த்தங்களை வேறு ஏதேனும் பெரிய கோவிலுக்குள் வைத்துவிடலாம் என்ற எண்ணம் கோவில் நிர்வாகிகளுக்கு ஏற்பட்டது. அதன்படி அந்த ஆலயத்தின் கற்கள், மூல மூர்த்திகள் அனைத்தும் அச்சு பிசகாமல், தண்டபாணி ஆலயத்தின் அருகே நூறு நாட்களில் அமைத்து முடிக்கப்பட்டது. அவி நாசியப்பர் ஆலயத்தில் கருணாம்பிகை அம்பாளும் எழுந்தருளி இருக்கிறார்.

அவிநாசியப்பர், தண்டபாணி
இவ்வாலயத்தின் சிறப்பே, தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெறும் கோவில் என்பது தான். சித்திரை வருடப் பிறப்பில் தொடங்கி, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், வைகுண்ட ஏகாதசி, கந்தசஷ்டி, நவராத்திரி, தைப்பூசம், மகா சிவராத்திரி என மாதந்தோறும் விழாக்கள் நிறைந்த ஆலயமாக இது திகழ்கின்றது. தைப்பூசத்தன்று தேர்த் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆலயத்தின் தல விருட்சமாக, முருகப் பெருமானுக்கு உகந்த கடம்ப மரம் அமைந் துள்ளது. தலத் தீர்த்தமாக சரவணப் பொய்கை திகழ்கின்றது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
ஆறு சமயக் கோவில்கள் :
ஆதிசங்கரர் வடிவமைத்துத் தந்த ஆறு வகை சமயங்களைப் போற்றும் விதமாக சூரியன், சிவன், சக்தி, திருமால், கணபதி, முருகன் என ஆறு தெய்வங்களுக்கும் இடம் தந்த திருக்கோவிலாக, இது அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தில் தண்டபாணி நடுநாயகமாக விளங்க, தென்கிழக்கில் சூரியன், வடகிழக்கில் அவிநாசியப்பர், வடக்கே குபேரன் திசையில் கருணாம்பிகை, வடமேற்கே பாண்டுரங்கன், நிருதி திசையில் சித்தி மகோற்கட விநாயகர் சன்னிதிகள் அமைந்துள்ளன.
சித்திரத் தேர் :
திருப்பதி கோவிலின் தேரை உருவாக்கிய ஸ்தபதி கோவிந்தராஜ் தலைமையில், அழகிய சித்திரத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது. அடியில் பூதகணங்கள், மேலே ஆமை தாங்கிட, அதன் மீது பூதேவி, ஆதிசேஷன் ஆகியோர் தாங்கும் விதமாக இந்தத் தேர் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆறு பொறிகளில் முருகப்பெருமான் தோற்றம், நாரதரின் வேள்வியில் தோன்றிய முரட்டு ஆட்டை அடக்கும் முருகன், பிரம்மனை சிறை பிடித்தல், சிவனுக்கு உபதேசம் செய்யும் முருகன், பழத்திற்காக ஆண்டிக் கோலம் பூண்டது என பல்வேறு வரலாற்றுக் காட்சிகள் மரச் சிற்பங்களாக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று தேரோட்டம் சிறப்பாக நடைபெறும்.
அமைவிடம் :
கோயம்புத்தூருக்கு வடக்கே 9 கிலோமீட்டர் தொலைவில் சின்னவேடம் பட்டியில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
தஞ்சை மாவட்டத்தில் பட்டவர்த்தி என்ற கிராமத்தில் விசுவநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தஞ்சை மாவட்டத்தில் பட்டவர்த்தி என்ற கிராமத்தில் விசுவநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் விசுவ நாதர். இறைவி விசாலாட்சி அம்மன். ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்திற்குள் நுழைந்ததும் பலி பீடம், நந்தி பகவான் இருக்க, அடுத்ததாக அர்த்த மண்டபம் உள்ளது. அதன் வலது புறம் அம்மன் விசாலாட்சி நான்கு கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னையின் வலது மேல் கரத்தில் அட்சய பாத்திரம், இடது மேல் கையில் பத்மம் ஏந்தியும், வலது கீழ் மற்றும் இடது கீழ் கரங்கள் அபய, வரத முத்திரைகளுடன் அன்னை வீற்றிருக்கிறாள். அர்த்த மண்டபத்தின் நுழைவுவாசலின் இடது புறம் சித்தி விநாயகர் திருமேனி உள்ளது.
அடுத்துள்ள கருவறையில் இறைவன் விசுவநாத சுவாமி, லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். இறைவனின் தேவக் கோட்டத்தில் தென் திசையில் தட்சிணாமூர்த்தியும், வடக்கு திசையில் விஷ்ணு துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் மேற்கில் நிருதி விநாயகரும், பாலசுப்பிரமணியரும் தனித் தனி சன்னிதிகளில் உள்ளனர். வடக்கில் சண்டிகேஸ்வரரின் சன்னிதி உள்ளது. மகாமண்டபத்தின் கிழக்குப் பகுதியில் சூரியன், பைரவர், சனிபகவான் ஆகியோர் அருள்கின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா இங்கு சிறப்பாக நடைபெறும். ஐப்பசி மாதம் கந்தசஷ்டி மற்றும் கார்த்திகை சோம வாரம் ஆகிய நாட்களில் பாலசுப் பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை கள் நடக்கின்றன. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
இங்குள்ள விஷ்ணு துர்க்கைக்கு எலுமிச்சை பழ மாலை அணிவித்து பிரார்த்தனை செய்தால், கன்னிப் பெண்களுக்கு விரைந்து திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை. தவிர துர்க்கைக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ராகு கால பூஜைகளும் நடக்கிறது. இந்த நாட்களில் துர்க்கைக்கு 11 விளக்கேற்றி 11 வாரங்கள் வழிபட்டால், பெண்களின் மனம் போல் மாங்கல்யம் கிடைக்கும். இப்படி வேண்டுதல் நிறைவேறியவர்கள், திருமணத்திற்குப் பின் தம்பதியராக வந்து துர்க்கைக்கு அபிஷேக ஆராதனை செய்து, புத்தாடை அணிவித்து தங்கள் நன்றியை தெரிவிக்கின்றனர்.
இங்குள்ள நிருதி விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி அன்று 16 தேங்காய்களை ஒரு மாலையாகக் கட்டி, விநாய கருக்கு சாத்தி அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தைச் செல்வம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. குருப்பெயர்ச்சி நாட்களில் இங்கு சிறப்பு ஹோமம் நடைபெறுவதுடன் தட்சிணாமூர்த்திக்கு விசேஷ அபிஷேகமும், அலங்காரமும், ஆராதனைகளும் நடைபெறுகின்றன.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 6 மணி முதல் 8 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.
இங்கு அருள்பாலிக்கும் அன்னை விசாலாட்சி அம்மன் பெண்களின் மனம் கவர்ந்த நாயகியாக, அவர்களின் அனைத்து பிரார்த்தனைகளையும் தீர்த்து வைப்பதில் நிகரற்றவள் என்று பக்தர்கள் நம்புவது நிஜமே.
அமைவிடம் :
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தால் வைத்தீஸ்வரன் கோவில் பேருந்து தடத்தில் உள்ளது பட்டவர்த்தி என்ற திருத்தலம். மணல்மேட்டிலிருந்து 5 கி.மீ தொலைவில் ஆலயம் இருக்கிறது.
அடுத்துள்ள கருவறையில் இறைவன் விசுவநாத சுவாமி, லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். இறைவனின் தேவக் கோட்டத்தில் தென் திசையில் தட்சிணாமூர்த்தியும், வடக்கு திசையில் விஷ்ணு துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் மேற்கில் நிருதி விநாயகரும், பாலசுப்பிரமணியரும் தனித் தனி சன்னிதிகளில் உள்ளனர். வடக்கில் சண்டிகேஸ்வரரின் சன்னிதி உள்ளது. மகாமண்டபத்தின் கிழக்குப் பகுதியில் சூரியன், பைரவர், சனிபகவான் ஆகியோர் அருள்கின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா இங்கு சிறப்பாக நடைபெறும். ஐப்பசி மாதம் கந்தசஷ்டி மற்றும் கார்த்திகை சோம வாரம் ஆகிய நாட்களில் பாலசுப் பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை கள் நடக்கின்றன. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
இங்குள்ள விஷ்ணு துர்க்கைக்கு எலுமிச்சை பழ மாலை அணிவித்து பிரார்த்தனை செய்தால், கன்னிப் பெண்களுக்கு விரைந்து திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை. தவிர துர்க்கைக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ராகு கால பூஜைகளும் நடக்கிறது. இந்த நாட்களில் துர்க்கைக்கு 11 விளக்கேற்றி 11 வாரங்கள் வழிபட்டால், பெண்களின் மனம் போல் மாங்கல்யம் கிடைக்கும். இப்படி வேண்டுதல் நிறைவேறியவர்கள், திருமணத்திற்குப் பின் தம்பதியராக வந்து துர்க்கைக்கு அபிஷேக ஆராதனை செய்து, புத்தாடை அணிவித்து தங்கள் நன்றியை தெரிவிக்கின்றனர்.
இங்குள்ள நிருதி விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி அன்று 16 தேங்காய்களை ஒரு மாலையாகக் கட்டி, விநாய கருக்கு சாத்தி அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தைச் செல்வம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. குருப்பெயர்ச்சி நாட்களில் இங்கு சிறப்பு ஹோமம் நடைபெறுவதுடன் தட்சிணாமூர்த்திக்கு விசேஷ அபிஷேகமும், அலங்காரமும், ஆராதனைகளும் நடைபெறுகின்றன.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 6 மணி முதல் 8 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.
இங்கு அருள்பாலிக்கும் அன்னை விசாலாட்சி அம்மன் பெண்களின் மனம் கவர்ந்த நாயகியாக, அவர்களின் அனைத்து பிரார்த்தனைகளையும் தீர்த்து வைப்பதில் நிகரற்றவள் என்று பக்தர்கள் நம்புவது நிஜமே.
அமைவிடம் :
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தால் வைத்தீஸ்வரன் கோவில் பேருந்து தடத்தில் உள்ளது பட்டவர்த்தி என்ற திருத்தலம். மணல்மேட்டிலிருந்து 5 கி.மீ தொலைவில் ஆலயம் இருக்கிறது.
விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு ராஜகுருவாக திகழ்ந்த வியாசராஜர் பிரதிஷ்டை செய்த தலங்களில் ஒன்றுதான் இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் ஆலயம்.
விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு ராஜகுருவாக திகழ்ந்தவர், வியாசராஜர். மாத்வ குருமார்களில் ஒருவராகவும், ஸ்ரீவியாசராஜ மடத்தின் பீடாதிபதியாகவும் விளங்கிய இவர், அனுமன் பாதம்பட்டதாக அறியப்பட்ட 700-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமன் சிலையை பிரதிஷ்டை செய்தவர். அப்படி அவர் பிரதிஷ்டை செய்த தலங்களில் ஒன்றுதான் இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் ஆலயம்.
தல வரலாறு :
வியாசராஜர், தற்போது ஆலயம் இருக்கும் இடத்தில் ஒரு பாறையின் மீது அமர்ந்து தியானம் செய்தார். அப்போது அவருக்கு பாறையின் மீது ஆஞ்சநேயர் தியானம் செய்வது போன்ற காட்சி தென்பட்டது. அதன் உண்மை நிலையை அறிய நிஷ்டையில் ஆழ்ந்தார். அப்போது அவருக்கு சில காட்சிகள் தோன்றின.
ராமனுக்கும் ராவணனுக்குமான போர் முடிந்தது. ராமன் பெற்ற வெற்றியை , அசோகவனத்தில் இருக்கும் சீதையிடம் சொல்வதற்காக பறந்து சென்றார் அனுமன். அங்கு சீதையைக் கண்டு வணங்கியவர், “அன்னையே! உங்களை நானே அழைத்துச் சென்று விடுவேன். அது ராமபிரானின் புகழுக்கு இழுக்காகும். எனவே ராமர் வெற்றி பெற்ற தகவலைச் சொல்லவே நான் வந்தேன்” என்றார்.
அப்போது சீதையின் நெற்றி வகிட்டில் செந்தூரம் அணிந்திருப்பதைப் பார்த்த அனுமன், அதுபற்றி சீதையிடம் கேட்டார். அதற்கு சீதை, ராவணனுடனான யுத்தத்தில் ராமனுக்கு வெற்றி கிடைக்க வேண்டி செந்தூரம் அணிந்ததாக கூறினாள்.
‘அன்னை நெற்றியில் சிறிதளவு செந்தூரம் இட்டதற்கே இத்தனை பெரிய வெற்றி கிடைத்தது என்றால், உடல் முழுவதும் செந்தூரம் பூசிக்கொண்டால் என்னுடைய தெய்வம் ராமபிரானுக்கு எவ்வளவு வெற்றி கிடைக்கும்’ என்று எண்ணிய ஆஞ்சநேயர் தன்னுடைய உடல் முழுவதும் செந்தூரம் பூசிக்கொண்டார்.
வெற்றிக்குப் பின் ராமர், சீதை மற்றும் லட்சுமணனுடன் அயோத்திக்குத் திரும்பினார். வழியில் 7 தீர்த்தங்கள் கொண்ட இந்த இடத்தில் சிவபூஜை செய்ய நினைத்தார். அதற்கு வழிவகை செய்வது போல், அங்கு ஒரு வில்வ மரத்தடியில் சுயம்பு சிவலிங்கம் காணப்பட்டது. அதன் எதிரில் திருநந்தி தேவரும் தென்பட்டார். இதுவே உகந்த இடம் என்று நினைத்த ராமர், சிவ பூஜை செய்தார். அனுமனும் சற்று தூரத்தில் இருந்த பாறையில் ராம ஜெபம் உச்சரித்தபடியே காவலுக்கு நின்றார்.
இந்த காட்சிகள் அனைத்தும் வியாசராஜர் தியானத்தில் வந்து போனது. இதையடுத்து அனுமனின் உருவம் தென்பட்ட பாறையின் மீது அனுமன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இந்த அனுமன் 5 அடி உயரத்தில் பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் காட்சி தருகிறார். நேர் பார்வையும், இடது கையில் சவுகந்தி மலரை வைத்தபடியும், வலது கையால் ஆசீர்வதிக்கும் தோரணையிலும் அருள் புரிகிறார். அவரது தலைக்கு பின்புறமாக வளைந்து நிற்கும் வாலில் மணி கட்டப்பட்டுள்ளது.
அனுமன் அருளும் இந்த ஆலயம், ‘இடுகம்பாளையம் அனுமந்தராயர் கோவில்’ என்றும், ‘ஜயமங்கள ஆஞ்சநேயர் கோவில்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆலயம் குறுகலான நிலப்பரப்பில் அமைந்திருப்பதால், ‘இடுகம்’ என்ற பெயரில் இந்தத் திருத்தலம் பெயர் பெற்றுள்ளது.
ஆலயத்தின் தென்புறத்தில் விநாயகரும், கன்னி மூலையில் ராமர் பூசித்த ராமலிங்கேஸ்வரரும், அவருக்கு எதிரில் திருநந்தி தேவரும், வடக்கில் செல்வமுத்துக்குமரனும், அவருக்கு அருகில் பர்வதவர்தனி அம்மனும் சன்னிதி கொண்டிருக்கிறார்கள். பிரதான தெய்வமாக ஜெயமங்கள ஆஞ்சநேயர் விளங்கு கிறார். இவர் நவக்கிரக தோஷங்களைப் போக்குவதோடு, மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் வேண்டும் பக்தர்கள், ஆஞ்சநேயரை மனதார பிரார்த்திக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள், தங்களது வீட்டில் தினமும் ஒரு கைப்பிடி அரிசியை தனியாக எடுத்து வைக்கிறார்கள். இப்படி 30 நாட்கள் சேர்த்த அரிசியை கோவிலில் சமர்ப்பிக்கிறார்கள். இப்படி பக்தர்கள் பலரும் சேர்ப்பிக்கும் அரிசியில் அன்ன தானம் வழங்கப்படுகிறது.
ஆறு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயம், தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ச்சியாக திறந்திருக்கும்.
கோயம்புத்தூரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இடுகம்பாளையம். கோயம்புத்தூரில் இருந்து அன்னூர் வந்து, அங்கிருந்தும் இடுகம்பாளையம் செல்லலாம்.
தல வரலாறு :
வியாசராஜர், தற்போது ஆலயம் இருக்கும் இடத்தில் ஒரு பாறையின் மீது அமர்ந்து தியானம் செய்தார். அப்போது அவருக்கு பாறையின் மீது ஆஞ்சநேயர் தியானம் செய்வது போன்ற காட்சி தென்பட்டது. அதன் உண்மை நிலையை அறிய நிஷ்டையில் ஆழ்ந்தார். அப்போது அவருக்கு சில காட்சிகள் தோன்றின.
ராமனுக்கும் ராவணனுக்குமான போர் முடிந்தது. ராமன் பெற்ற வெற்றியை , அசோகவனத்தில் இருக்கும் சீதையிடம் சொல்வதற்காக பறந்து சென்றார் அனுமன். அங்கு சீதையைக் கண்டு வணங்கியவர், “அன்னையே! உங்களை நானே அழைத்துச் சென்று விடுவேன். அது ராமபிரானின் புகழுக்கு இழுக்காகும். எனவே ராமர் வெற்றி பெற்ற தகவலைச் சொல்லவே நான் வந்தேன்” என்றார்.
அப்போது சீதையின் நெற்றி வகிட்டில் செந்தூரம் அணிந்திருப்பதைப் பார்த்த அனுமன், அதுபற்றி சீதையிடம் கேட்டார். அதற்கு சீதை, ராவணனுடனான யுத்தத்தில் ராமனுக்கு வெற்றி கிடைக்க வேண்டி செந்தூரம் அணிந்ததாக கூறினாள்.
‘அன்னை நெற்றியில் சிறிதளவு செந்தூரம் இட்டதற்கே இத்தனை பெரிய வெற்றி கிடைத்தது என்றால், உடல் முழுவதும் செந்தூரம் பூசிக்கொண்டால் என்னுடைய தெய்வம் ராமபிரானுக்கு எவ்வளவு வெற்றி கிடைக்கும்’ என்று எண்ணிய ஆஞ்சநேயர் தன்னுடைய உடல் முழுவதும் செந்தூரம் பூசிக்கொண்டார்.
வெற்றிக்குப் பின் ராமர், சீதை மற்றும் லட்சுமணனுடன் அயோத்திக்குத் திரும்பினார். வழியில் 7 தீர்த்தங்கள் கொண்ட இந்த இடத்தில் சிவபூஜை செய்ய நினைத்தார். அதற்கு வழிவகை செய்வது போல், அங்கு ஒரு வில்வ மரத்தடியில் சுயம்பு சிவலிங்கம் காணப்பட்டது. அதன் எதிரில் திருநந்தி தேவரும் தென்பட்டார். இதுவே உகந்த இடம் என்று நினைத்த ராமர், சிவ பூஜை செய்தார். அனுமனும் சற்று தூரத்தில் இருந்த பாறையில் ராம ஜெபம் உச்சரித்தபடியே காவலுக்கு நின்றார்.
இந்த காட்சிகள் அனைத்தும் வியாசராஜர் தியானத்தில் வந்து போனது. இதையடுத்து அனுமனின் உருவம் தென்பட்ட பாறையின் மீது அனுமன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இந்த அனுமன் 5 அடி உயரத்தில் பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் காட்சி தருகிறார். நேர் பார்வையும், இடது கையில் சவுகந்தி மலரை வைத்தபடியும், வலது கையால் ஆசீர்வதிக்கும் தோரணையிலும் அருள் புரிகிறார். அவரது தலைக்கு பின்புறமாக வளைந்து நிற்கும் வாலில் மணி கட்டப்பட்டுள்ளது.
அனுமன் அருளும் இந்த ஆலயம், ‘இடுகம்பாளையம் அனுமந்தராயர் கோவில்’ என்றும், ‘ஜயமங்கள ஆஞ்சநேயர் கோவில்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆலயம் குறுகலான நிலப்பரப்பில் அமைந்திருப்பதால், ‘இடுகம்’ என்ற பெயரில் இந்தத் திருத்தலம் பெயர் பெற்றுள்ளது.
ஆலயத்தின் தென்புறத்தில் விநாயகரும், கன்னி மூலையில் ராமர் பூசித்த ராமலிங்கேஸ்வரரும், அவருக்கு எதிரில் திருநந்தி தேவரும், வடக்கில் செல்வமுத்துக்குமரனும், அவருக்கு அருகில் பர்வதவர்தனி அம்மனும் சன்னிதி கொண்டிருக்கிறார்கள். பிரதான தெய்வமாக ஜெயமங்கள ஆஞ்சநேயர் விளங்கு கிறார். இவர் நவக்கிரக தோஷங்களைப் போக்குவதோடு, மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் வேண்டும் பக்தர்கள், ஆஞ்சநேயரை மனதார பிரார்த்திக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள், தங்களது வீட்டில் தினமும் ஒரு கைப்பிடி அரிசியை தனியாக எடுத்து வைக்கிறார்கள். இப்படி 30 நாட்கள் சேர்த்த அரிசியை கோவிலில் சமர்ப்பிக்கிறார்கள். இப்படி பக்தர்கள் பலரும் சேர்ப்பிக்கும் அரிசியில் அன்ன தானம் வழங்கப்படுகிறது.
ஆறு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயம், தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ச்சியாக திறந்திருக்கும்.
கோயம்புத்தூரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இடுகம்பாளையம். கோயம்புத்தூரில் இருந்து அன்னூர் வந்து, அங்கிருந்தும் இடுகம்பாளையம் செல்லலாம்.
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அனுமன் கோவில் என்றால் அது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தான். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அனுமன் கோவில் என்றால் அது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தான். புனிதப் பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் பார்க்க வேண்டிய முக்கிய இடம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலாகும். 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது.
மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மரும், நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.
கோவில் வரலாறு
ராமாயண காலத்தில் சஞ்சீவி மலையில் உள்ள மூலிகையைப் பெறுவதற்காக இமயத்தில் இருந்து மலையைப் பெயர்த்து எடுத்து வந்தார். பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார். அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்து வந்தார். அந்த நேரத்தில் சூரியன் உதயமானதால் வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்தார். மீண்டும் வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை.
அப்போது ராமனுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல் என்று அசிரீரி ஒலி கேட்க, ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார். ராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் அங்கே வந்தார். ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள்பாலிக்கிறார்.
தல பெருமைகள்
இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை மிகவும் பிரம்மாண் டமானது. பீடத்திலிருந்து 22 அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் முகம் மிகவும் அழகாக தேஜஸ் உள்ளதாக இருப்பது மிக முக்கியமான சிறப்பம்சம். தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கும்பிட்டுச் செல்லும் புகழ் பெற்ற கோவில்.
எதிரே உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தின் உப கோவில்தான் இந்த ஆஞ்சநேயர் சன்னதி என்றாலும் இச்சன்னதி யில்தான் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இச்சா சக்தி (நாமகிரி அம்மன்), கிரியாசக்தி (நரசிம்மர்), ஞானசக்தி(ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற கோவில் இது.
இங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு நேர் எதிராக இருக்கும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை தொழுதபடி இருக்கிறார். மிக பிரம் மாண்டமாக காற்று, மழை, வெயில் இவைகளை தாங்கிக் கொண்டு திறந்த வெளியில் தொழுத கைகளோடு நின்றிருக்கிறார்.
வடைமாலை நேர்த்திக் கடன்
முன்பு ஒருசமயம் நவக்கிரகங்களில் அதிக குரூரமான ராகுவும், சனியும் ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதனால் ஆஞ்ச நேயருக்கு கீழ்ப்படிந்தார்கள். பூவுலகில் மாந்தர்களுக்கு சனியாலும், ராகுவாலும் ஏதேனும் இடையூறு ஏற்படின் அவர்களை திருப்திபடுத்துவதின் பொருட்டு ராகுவுக்கு பிடித்த உளுந்தும், சனிக்கு பிடித்த எள் எண்ணெயாலும் செய்த வடைமாலையை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட்டால் சனி, ராகு இவர்களுடைய இடையூறுகளில் இருந்து விடு படுகிறார்கள் என்பதற்காகத் தான் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துகிறார்கள்.
கோபுரம் இல்லை
லோகநாயகனான ஸ்ரீ நரசிம்மரே (எதிரில் உள்ள ஆலயம்) கிரி உருவில் மேல் விதானம் இல்லாமல் இருப்பதால் தாசனான எனக்கும் விதானம் தேவையில்லை என்று ஸ்ரீ ஆஞ்சநேயர் திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் நின்றிருக்கிறார்.
தங்க ரதம்
இக்கோவிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு ரூ.1500 கட்டணம் செலுத்தி தங்க ரதம் இழுத்து வழிபட்டு வருகிறார்கள்.
108 தங்க மலர் அர்ச்சனை செய்வதற்கு கட்டணம் ரூ. 250 ஆகும். இந்த அர்ச்சனை செய்யும் நேரம் காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை.
மதியம் 12.30 மணி முதல் 1.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 9.00மணி வரை
ஒரு கட்டண சீட்டுக்கு அதிகபட்சமாக 5 பெயர்கள் (ராசி, நட்சத்திரம் அர்ச்சனை செய்யப்படும்)
அன்னதானம்
தமிழக முதல்- அமைச்சரின் திருக்கோவில் அன்னதானத் திட்டம் மூலம் தினமும் இக்கோவிலில் 125 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
தங்கத்தேர் கட்டணம்
நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் அபிஷேக, ஆராதனை மற்றும் பூஜைக்குரிய கட்டணம் எவ்வளவு என்பது குறித்த விபரம் வருமாறு:- அன்னதானம் 100 நபர்களுக்கு வழங்க கட்டணம் ரூ.2500, ஆஞ்சநேயர் வடைமாலை அபிஷேக கட்டணம் (1 பங்கு) ரூ.6000, தங்கத்தேர் புறப்பாடு கட்டணம் ரூ.2000, வெள்ளி கவசம் சாத்துபடி கட்டணம் ரூ.750, தங்க கவசம் சாத்துபடி கட்டணம் ரூ.5000, முத்தங்கி சாத்துபடி கட்டணம் ரூ.3000, திருக்கல்யாண உற்சவ கட்டணம் ரூ.2500, வெண்ணெய் காப்பு (1 பங்கு கட்டணம் ரூ.15000 வீதம் 5 பங்கு கட்டணம்) ரூ.75000, 108 தங்கமலர் அர்ச்சனை கட்டணம் ரூ.250, ஸ்ரீசுத்த பாராயணம் ரூ.250 ஆகும்.
பிரார்த்தனை சீட்டு மூலம் கோரிக்கை நிறைவேறும்
மாணவ, மாணவிகள் படிப்பு நன்றாக வரவும், அதிக மதிப்பெண் எடுக்கவும் ஸ்ரீராமஜெயம் மற்றும் “ஸ்ரீஆஞ்சநேயா போற்றி” என்று 108 முறை எழுதி நூலில் கட்டி சன்னதியின் பின்புறம் உள்ள ஜன்னலில் கட்டித் தொங்கவிடுகிறார்கள். அதேபோல தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் பிரார்த்தனையை ஆஞ்சநேயர் நிறைவேற்றித் தரவேண்டும் என்று கூறி பிரார்த்தனை சீட்டு எழுதி தொங்கவிடுகிறார்கள். இப்படி பிரார்த்தனை சீட்டு எழுதினால் தங்கள் கோரிக்கையை ஆஞ்சநேயர் நிறைவேற்றுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
முக்கிய திருவிழாக்கள்
நாமக்கல் நரசிம்ம சுவாமி கோவிலோடு இணைந்து ஆஞ்சநேயர் கோவில் இருப்பதால் இந்த கோவில்களுக்கு திருவிழாக்கள் ஒன்றாக நடத்தப்படுகிறது. முக்கிய திருவிழாக்கள் வருமாறு:-
தமிழ் வருடப் பிறப்பு (சித்திரை)
தெலுங்கு வருடப் பிறப்பு
வைகாசி விசாகம் (ஏப்ரல் - மே)
ஆடி 18 (ஆகஸ்டு)
ஆடி பூரம் - ஸ்ரீநாமகிரி தாயர் ஊஞ்சல் சேவை
ஆவணி பவுத்திர உற்சவம் (செப்டம்பர்)
ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி (செப்டம்பர்)
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி (செப்டம்பர் - அக்டோபர்)
புரட்டாசியின் அனைத்து சனிக்கிழமைகள் (செப்டம்பர் - அக்டோபர்)
நவராத்திரி உற்சவம் (அக்டோபர்)
விஜயதசமி
திருகார்த்திகை தீபம் (டிசம்பர்)
அனுமன் ஜெயந்தி (மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அமாவாசை)
மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள்
வைகுண்ட ஏகாதசி (ஸ்ரீ அரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடுகள்)
அறுவடைத் திருநாள் (பொங்கல்- ஜனவரி)
வருட உற்சவம் (பங்குனி)
அஸ்த நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இது 15 நாட்கள் திருவிழாவாகும். மூன்றாம் நாள் திருத் தேர் உலா நடைபெறும்.
பஸ்-ரெயில் வசதிகள்
நாமகிரி என்ற சிறப்புமிக்க நாமக்கல் நகரின் மையத்தில் இக்கோவில் வீற்றிருக்கிறது. நாமக்கல் ரெயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலும், பஸ் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.
நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லலாம். சேலத்தில் இருந்து பஸ்சில் வருபவர்கள் சேலம் ரோடு சிக்னலில் இறங்கி நடந்து கோவிலுக்கு செல்லலாம். நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து ராசிபுரம் செல்லும் டவுன் பஸ்சில் டிரைவர் பஸ்சை நிறுத்தினால் கோவில் வாசலில் இறங்கி கொள்ளலாம். இல்லை என்றால் சேலம் ரோடு சிக்னலில் இறங்கி கோவிலுக்கு செல்லலாம். நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து ஆட்டோவில்தான் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வர முடியும். இக்கோவிலில் தங்கும் விடுதிகள் உள்ளன.
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நாமக்கல்லுக்கு பஸ் வசதி உள்ளது. இக்கோவில் சேலத்தில் இருந்து 57 கிலோ மீட்டர் தூரத்திலும், கரூரில் இருந்து 43 கிலோ மீட்டர் தூரத்திலும், ஈரோட்டில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திலும் கோவையில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்திலும், திருச்சியில் இருந்து 85 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது.
இந்த கோவிலுக்கு முக்கிய நகரங்களில் இருந்து ரெயில் மூலமும் வரலாம். நாமக்கல் ரெயில் நிலையத்தில் பெங்களூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - பழனி எக்ஸ்பிரஸ், பழனி-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், சேலம் - கரூர் பாசஞ்சர் ரெயிலும் நாமக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மரும், நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.
கோவில் வரலாறு
ராமாயண காலத்தில் சஞ்சீவி மலையில் உள்ள மூலிகையைப் பெறுவதற்காக இமயத்தில் இருந்து மலையைப் பெயர்த்து எடுத்து வந்தார். பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார். அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்து வந்தார். அந்த நேரத்தில் சூரியன் உதயமானதால் வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்தார். மீண்டும் வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை.
அப்போது ராமனுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல் என்று அசிரீரி ஒலி கேட்க, ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார். ராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் அங்கே வந்தார். ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள்பாலிக்கிறார்.
தல பெருமைகள்
இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை மிகவும் பிரம்மாண் டமானது. பீடத்திலிருந்து 22 அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் முகம் மிகவும் அழகாக தேஜஸ் உள்ளதாக இருப்பது மிக முக்கியமான சிறப்பம்சம். தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கும்பிட்டுச் செல்லும் புகழ் பெற்ற கோவில்.
எதிரே உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தின் உப கோவில்தான் இந்த ஆஞ்சநேயர் சன்னதி என்றாலும் இச்சன்னதி யில்தான் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இச்சா சக்தி (நாமகிரி அம்மன்), கிரியாசக்தி (நரசிம்மர்), ஞானசக்தி(ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற கோவில் இது.
இங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு நேர் எதிராக இருக்கும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை தொழுதபடி இருக்கிறார். மிக பிரம் மாண்டமாக காற்று, மழை, வெயில் இவைகளை தாங்கிக் கொண்டு திறந்த வெளியில் தொழுத கைகளோடு நின்றிருக்கிறார்.
வடைமாலை நேர்த்திக் கடன்
முன்பு ஒருசமயம் நவக்கிரகங்களில் அதிக குரூரமான ராகுவும், சனியும் ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதனால் ஆஞ்ச நேயருக்கு கீழ்ப்படிந்தார்கள். பூவுலகில் மாந்தர்களுக்கு சனியாலும், ராகுவாலும் ஏதேனும் இடையூறு ஏற்படின் அவர்களை திருப்திபடுத்துவதின் பொருட்டு ராகுவுக்கு பிடித்த உளுந்தும், சனிக்கு பிடித்த எள் எண்ணெயாலும் செய்த வடைமாலையை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட்டால் சனி, ராகு இவர்களுடைய இடையூறுகளில் இருந்து விடு படுகிறார்கள் என்பதற்காகத் தான் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துகிறார்கள்.
கோபுரம் இல்லை
லோகநாயகனான ஸ்ரீ நரசிம்மரே (எதிரில் உள்ள ஆலயம்) கிரி உருவில் மேல் விதானம் இல்லாமல் இருப்பதால் தாசனான எனக்கும் விதானம் தேவையில்லை என்று ஸ்ரீ ஆஞ்சநேயர் திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் நின்றிருக்கிறார்.
தங்க ரதம்
இக்கோவிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு ரூ.1500 கட்டணம் செலுத்தி தங்க ரதம் இழுத்து வழிபட்டு வருகிறார்கள்.
108 தங்க மலர் அர்ச்சனை செய்வதற்கு கட்டணம் ரூ. 250 ஆகும். இந்த அர்ச்சனை செய்யும் நேரம் காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை.
மதியம் 12.30 மணி முதல் 1.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 9.00மணி வரை
ஒரு கட்டண சீட்டுக்கு அதிகபட்சமாக 5 பெயர்கள் (ராசி, நட்சத்திரம் அர்ச்சனை செய்யப்படும்)
அன்னதானம்
தமிழக முதல்- அமைச்சரின் திருக்கோவில் அன்னதானத் திட்டம் மூலம் தினமும் இக்கோவிலில் 125 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
தங்கத்தேர் கட்டணம்
நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் அபிஷேக, ஆராதனை மற்றும் பூஜைக்குரிய கட்டணம் எவ்வளவு என்பது குறித்த விபரம் வருமாறு:- அன்னதானம் 100 நபர்களுக்கு வழங்க கட்டணம் ரூ.2500, ஆஞ்சநேயர் வடைமாலை அபிஷேக கட்டணம் (1 பங்கு) ரூ.6000, தங்கத்தேர் புறப்பாடு கட்டணம் ரூ.2000, வெள்ளி கவசம் சாத்துபடி கட்டணம் ரூ.750, தங்க கவசம் சாத்துபடி கட்டணம் ரூ.5000, முத்தங்கி சாத்துபடி கட்டணம் ரூ.3000, திருக்கல்யாண உற்சவ கட்டணம் ரூ.2500, வெண்ணெய் காப்பு (1 பங்கு கட்டணம் ரூ.15000 வீதம் 5 பங்கு கட்டணம்) ரூ.75000, 108 தங்கமலர் அர்ச்சனை கட்டணம் ரூ.250, ஸ்ரீசுத்த பாராயணம் ரூ.250 ஆகும்.
பிரார்த்தனை சீட்டு மூலம் கோரிக்கை நிறைவேறும்
மாணவ, மாணவிகள் படிப்பு நன்றாக வரவும், அதிக மதிப்பெண் எடுக்கவும் ஸ்ரீராமஜெயம் மற்றும் “ஸ்ரீஆஞ்சநேயா போற்றி” என்று 108 முறை எழுதி நூலில் கட்டி சன்னதியின் பின்புறம் உள்ள ஜன்னலில் கட்டித் தொங்கவிடுகிறார்கள். அதேபோல தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் பிரார்த்தனையை ஆஞ்சநேயர் நிறைவேற்றித் தரவேண்டும் என்று கூறி பிரார்த்தனை சீட்டு எழுதி தொங்கவிடுகிறார்கள். இப்படி பிரார்த்தனை சீட்டு எழுதினால் தங்கள் கோரிக்கையை ஆஞ்சநேயர் நிறைவேற்றுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
முக்கிய திருவிழாக்கள்
நாமக்கல் நரசிம்ம சுவாமி கோவிலோடு இணைந்து ஆஞ்சநேயர் கோவில் இருப்பதால் இந்த கோவில்களுக்கு திருவிழாக்கள் ஒன்றாக நடத்தப்படுகிறது. முக்கிய திருவிழாக்கள் வருமாறு:-
தமிழ் வருடப் பிறப்பு (சித்திரை)
தெலுங்கு வருடப் பிறப்பு
வைகாசி விசாகம் (ஏப்ரல் - மே)
ஆடி 18 (ஆகஸ்டு)
ஆடி பூரம் - ஸ்ரீநாமகிரி தாயர் ஊஞ்சல் சேவை
ஆவணி பவுத்திர உற்சவம் (செப்டம்பர்)
ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி (செப்டம்பர்)
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி (செப்டம்பர் - அக்டோபர்)
புரட்டாசியின் அனைத்து சனிக்கிழமைகள் (செப்டம்பர் - அக்டோபர்)
நவராத்திரி உற்சவம் (அக்டோபர்)
விஜயதசமி
திருகார்த்திகை தீபம் (டிசம்பர்)
அனுமன் ஜெயந்தி (மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அமாவாசை)
மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள்
வைகுண்ட ஏகாதசி (ஸ்ரீ அரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடுகள்)
அறுவடைத் திருநாள் (பொங்கல்- ஜனவரி)
வருட உற்சவம் (பங்குனி)
அஸ்த நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இது 15 நாட்கள் திருவிழாவாகும். மூன்றாம் நாள் திருத் தேர் உலா நடைபெறும்.
பஸ்-ரெயில் வசதிகள்
நாமகிரி என்ற சிறப்புமிக்க நாமக்கல் நகரின் மையத்தில் இக்கோவில் வீற்றிருக்கிறது. நாமக்கல் ரெயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலும், பஸ் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.
நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லலாம். சேலத்தில் இருந்து பஸ்சில் வருபவர்கள் சேலம் ரோடு சிக்னலில் இறங்கி நடந்து கோவிலுக்கு செல்லலாம். நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து ராசிபுரம் செல்லும் டவுன் பஸ்சில் டிரைவர் பஸ்சை நிறுத்தினால் கோவில் வாசலில் இறங்கி கொள்ளலாம். இல்லை என்றால் சேலம் ரோடு சிக்னலில் இறங்கி கோவிலுக்கு செல்லலாம். நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து ஆட்டோவில்தான் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வர முடியும். இக்கோவிலில் தங்கும் விடுதிகள் உள்ளன.
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நாமக்கல்லுக்கு பஸ் வசதி உள்ளது. இக்கோவில் சேலத்தில் இருந்து 57 கிலோ மீட்டர் தூரத்திலும், கரூரில் இருந்து 43 கிலோ மீட்டர் தூரத்திலும், ஈரோட்டில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திலும் கோவையில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்திலும், திருச்சியில் இருந்து 85 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது.
இந்த கோவிலுக்கு முக்கிய நகரங்களில் இருந்து ரெயில் மூலமும் வரலாம். நாமக்கல் ரெயில் நிலையத்தில் பெங்களூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - பழனி எக்ஸ்பிரஸ், பழனி-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், சேலம் - கரூர் பாசஞ்சர் ரெயிலும் நாமக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
பல்வேறு இடங்களில் பல பெயர்களில் அழைக்கப்படும் சிவபெருமான், உத்திரகாண்ட் மாவட்டத்தில் கோபிஸ்வரர் என நாமம் கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு நலமும், வளமும் வழங்கி அருளாசி புரிந்து கொண்டு இருக்கிறார்.
‘தென்னாடுடைய சிவனே போற்றி: எந்நாட்ட வருக்கும் இறைவா போற்றி’ என பக்தர்களால் பாடி, துதித்து பரவசமடையும் பரமேஸ்வரன், எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறான். பல்வேறு இடங்களில் பல பெயர்களில் அழைக்கப்படும் சிவபெருமான், உத்திரகாண்ட் மாவட்டத்தில் கோபிஸ்வரர் என நாமம் கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு நலமும், வளமும் வழங்கி அருளாசி புரிந்து கொண்டு இருக்கிறார்.
பத்ரிநாத், கேதார்நாத் செல்லும் வழியில் கோபிநாத் கோவில் உள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள மிக உயரமான கோவில்களில் கேதார்நாத்துக்கு அடுத்த இடத்தில் கோபிஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இக்கோவிலின் கட்டிடக் கலை மிகவும் பிரசித்திப் பெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆலயத்தில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. அதன் மூலம் கி.பி. 12 மற்றும் 13-ம் நூற்றாண்டு கோவிலை கத்திரிய அரசர்கள் கட்டியதாக தெரிய வருகிறது. சிவபெருமான், கோபிய பெண்ணின் உருவத்தில் கிருஷ்ணருடன் நடனமாடினார் என்று சொல்லப்படுகிறது. அதனால் இத்தல இறைவனின் பெயர் கோபிநாத் என்று பெயரிடப்பட்டது.
கோவிலின் பிரகாரத்தில் 5 அடி உயரத்திற்கு, 20 சென்டி மீட்டர் அகலத்திற்கு ஒரு சூலாயுதம் இருக்கிறது. இதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. ஒருமுறை சிவபெருமான் தியானத்தில் இருந்தார். மன்மதன் அங்கு சென்று சிவபெருமானின் தியானத்தை கலைக்க முயன்றான். இதை உணர்ந்த சிவபெருமான் சூலாயுதத்தை எடுத்து வீசினார். அது இந்த இடத்தில் ஆழமாக பதிந்து விட்டதாக நம்பப்படுகிறது. இந்த சூலாயுதம் இன்றும் பனியிலும் வெயிலும் பாதிக்காமல் அப்படியே இருக்கிறது. காலத்தால் அழியாத இந்த திரிசூலம் பக்தர்களின் தீவினைகளையும், மனகஷ்டத்தை போக்கக்கூடியது என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கைகளால் பிடித்து ஆட்டும் போது ஆடாத திரிசூலம், சிவனை நினைத்து சிவ நாமத்தை சொல்லி ஒரு சுண்டு விரல் கொண்டு தட்டினாலே அது லேசாக அசைவதை உணர முடியும். இத்தல இறைவனை நினைத்தால் ஒருவரின் மன கஷ்டங்கள் போவதுடன், நினைத்தக் காரியங்கள் நிறைவேறுவதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து யாத்ரீகர்கள் வந்து சிவனை வழிபட்டு தங்கள் மன கஷ்டங்களை போக்கிக் கொள்வதாகவும் சொல்கிறார்கள்.
இந்த ஆலயம் உருவானதற்கு மற்றுமொரு கதையும் சொல்லப்படுகிறது. இப்பகுதியை ஆண்ட ராஜசேகர் என்ற மன்னன், ஒரு பசு இந்த இடத்திற்கு தினமும் வந்து தானாகவே பாலை சுரப்பதை அறிந்தான். இதையடுத்து மன்னன் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பார்த்தபோது, அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதை அறிந்து வியப்படைந்தான். பின்னர் அங்கு கோவிலை அமைத்தான்.
இந்த ஆலயத்தின் அழகிய கோபுரத்தில் 24 கதவுகள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கருவறையில் வீற்றிருக்கும் சிவபெருமான் முன்பாக சிறிய நந்தி ஒன்று காண்போரை பரவசம் அடையச் செய்கிறது. பிரகாரத்தில் கணேசர் சன்னிதி, பார்வதி, பைரவர், அனுசியா, நவதுர்க்கா, அனுமன், பரசுராமன் சன்னிதிகள் உள்ளன. இக்கோவிலுக்கு வெயில் காலத்திலும், வசந்த காலத்திலும் செல்வது நல்லது. குளிர்காலத்தில் அதிக குளிராகவும், பனி உறைந்தும் இருக்கும்.
ரிஷிகேஷில் இருந்து 212 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த திருத்தலம். கோவில் வரை செல்ல பஸ், கார் வசதிகள் உள்ளன. சென்னையில் இருந்து செல்பவர்கள் ரிஷிகேஷ் வரை ரெயிலில் செல்லலாம். அங்கிருந்து பஸ் மூலம் கோவிலை சென்றடையலாம்.
பத்ரிநாத், கேதார்நாத் செல்லும் வழியில் கோபிநாத் கோவில் உள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள மிக உயரமான கோவில்களில் கேதார்நாத்துக்கு அடுத்த இடத்தில் கோபிஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இக்கோவிலின் கட்டிடக் கலை மிகவும் பிரசித்திப் பெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆலயத்தில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. அதன் மூலம் கி.பி. 12 மற்றும் 13-ம் நூற்றாண்டு கோவிலை கத்திரிய அரசர்கள் கட்டியதாக தெரிய வருகிறது. சிவபெருமான், கோபிய பெண்ணின் உருவத்தில் கிருஷ்ணருடன் நடனமாடினார் என்று சொல்லப்படுகிறது. அதனால் இத்தல இறைவனின் பெயர் கோபிநாத் என்று பெயரிடப்பட்டது.
கோவிலின் பிரகாரத்தில் 5 அடி உயரத்திற்கு, 20 சென்டி மீட்டர் அகலத்திற்கு ஒரு சூலாயுதம் இருக்கிறது. இதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. ஒருமுறை சிவபெருமான் தியானத்தில் இருந்தார். மன்மதன் அங்கு சென்று சிவபெருமானின் தியானத்தை கலைக்க முயன்றான். இதை உணர்ந்த சிவபெருமான் சூலாயுதத்தை எடுத்து வீசினார். அது இந்த இடத்தில் ஆழமாக பதிந்து விட்டதாக நம்பப்படுகிறது. இந்த சூலாயுதம் இன்றும் பனியிலும் வெயிலும் பாதிக்காமல் அப்படியே இருக்கிறது. காலத்தால் அழியாத இந்த திரிசூலம் பக்தர்களின் தீவினைகளையும், மனகஷ்டத்தை போக்கக்கூடியது என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கைகளால் பிடித்து ஆட்டும் போது ஆடாத திரிசூலம், சிவனை நினைத்து சிவ நாமத்தை சொல்லி ஒரு சுண்டு விரல் கொண்டு தட்டினாலே அது லேசாக அசைவதை உணர முடியும். இத்தல இறைவனை நினைத்தால் ஒருவரின் மன கஷ்டங்கள் போவதுடன், நினைத்தக் காரியங்கள் நிறைவேறுவதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து யாத்ரீகர்கள் வந்து சிவனை வழிபட்டு தங்கள் மன கஷ்டங்களை போக்கிக் கொள்வதாகவும் சொல்கிறார்கள்.
இந்த ஆலயம் உருவானதற்கு மற்றுமொரு கதையும் சொல்லப்படுகிறது. இப்பகுதியை ஆண்ட ராஜசேகர் என்ற மன்னன், ஒரு பசு இந்த இடத்திற்கு தினமும் வந்து தானாகவே பாலை சுரப்பதை அறிந்தான். இதையடுத்து மன்னன் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பார்த்தபோது, அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதை அறிந்து வியப்படைந்தான். பின்னர் அங்கு கோவிலை அமைத்தான்.
இந்த ஆலயத்தின் அழகிய கோபுரத்தில் 24 கதவுகள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கருவறையில் வீற்றிருக்கும் சிவபெருமான் முன்பாக சிறிய நந்தி ஒன்று காண்போரை பரவசம் அடையச் செய்கிறது. பிரகாரத்தில் கணேசர் சன்னிதி, பார்வதி, பைரவர், அனுசியா, நவதுர்க்கா, அனுமன், பரசுராமன் சன்னிதிகள் உள்ளன. இக்கோவிலுக்கு வெயில் காலத்திலும், வசந்த காலத்திலும் செல்வது நல்லது. குளிர்காலத்தில் அதிக குளிராகவும், பனி உறைந்தும் இருக்கும்.
ரிஷிகேஷில் இருந்து 212 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த திருத்தலம். கோவில் வரை செல்ல பஸ், கார் வசதிகள் உள்ளன. சென்னையில் இருந்து செல்பவர்கள் ரிஷிகேஷ் வரை ரெயிலில் செல்லலாம். அங்கிருந்து பஸ் மூலம் கோவிலை சென்றடையலாம்.
திருச்சி அருகே உள்ள ஆங்கரை என்ற கிராமத்தில் உள்ளது மருதாந்த நாதேஸ்வரர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்
திருச்சி அருகே உள்ள ஆங்கரை என்ற கிராமத்தில் உள்ளது மருதாந்த நாதேஸ்வரர் கோவில். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் மருதாந்த நாதேஸ்வரர். இறைவி சுந்தர காஞ்சனி அம்பாள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம் இது.
சாரத்வதம் என்று ஒரு ஊர். அங்கு வருமான ககோளர் என்பவர் இருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்தவர்; சிவபக்தி மிகுந்தவர். அவருடைய மனைவி லீலாவதி. கண்டவர் மயங்கும் அழகு கொண்டவள். இவர்களுக்கு ஒரு ஆண் மகன் பிறந்தான். தனது ஞான திருஷ்டியால் தனது மகன் பெரிய பாவம் செய்யப்போகிறான் என்பதை ககோளர் அறிந்தார். அதனால் அவனுக்கு மருதாந்தன் என்று பெயரிட்டார்.
காலம் ஓடியது. லீலாவதி தடம் மாறினாள். பிற ஆடவர் பழக்கம் அவளுக்கு உண்டானது. அதனால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டாள். கோதாவரிக் கரையில் உள்ள உத்தமபுரத்தில் வசித்தபடி, பல ஆண்களிடம் பொன், பொருள் பெற்றுக்கொண்டு சுகவாழ்வு வாழ்ந்தாள்.
அவள் மகன் மருதாந்தன் வேத சாஸ்திரங்களை நன்கு கற்றான். அவன் தேச யாத்திரை செய்து வரும் போது, உத்தமபுரம் வந்தான். அவனது அறிவுத் திறமையை நேரில் கண்ட அவ்வூர் மன்னன், அவனுக்கு மந்திரி பதவி வழங்கினான்.
தவறான நண்பனின் வழிகாட்டுதலால், லீலாவதியின் வீட்டிற்கு சென்றான் மருதாந்தன். அங்கு சென்றதும் தான் அது அவனது தாய் என்பது தெரிந்தது. இருவரும் வேதனை அடைந்தனர். லீலாவதி தன் மகனிடம், “நீ தர்ம சாஸ்திரங்கள் கற்ற மகான்களிடம் கூறி பிராயச்சித்தம் அறிவாய்” எனக் கூறினாள்.
கோதாவரி கரைக்குச் சென்ற மருதாந்தன், சந்தியா வந்தனத்திற்காக அங்கு கூடிய வேத விற்பன்னர்களிடம் நடந்ததை கூறி, பிராயச்சித்தம் அருளும்படி வேண்டி நின்றான்.

அதன்படியே செய்தான் மருதாந்தன். 12 ஆண்டுகள் பல ஊர்களைச் சுற்றி வந்த அவன், ஓரிடத்தில் கடுமையான தவத்தில் ஈடுபட்டான். அப்போது அவன் கழுத்தில் இருந்த இரும்பு மணிகள் ரத்தினமாக மாறின. தன் பாவம் விலகிய அகம்ஹரம் என்ற இடத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். அந்த ஊர் தற்போது ஆங்கரை என்று அழைக்கப்படுகிறது. மருதாந்தன் பிரதிஷ்டை செய்த லிங்கமே, மருதாந்த நாதேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.
ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமர்ந்திருந்தாலும், தெற்கு திசை வாசலே பயன்படுத்தப்படுகிறது. முகப்பை கடந்ததும் அகன்ற பிரகாரம். மகாமண்டபத்தில் நத்தியம்பெருமான் வீற்றிருக்க, இடதுபுறம் தண்டபாணியின் திருமேனி உள்ளது. அர்த்தமண்டபத்தை அடுத்து உள்ள கருவறையில் இறைவி சுந்தர காஞ்சனி அம்பாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு நான்கு கரங்கள். தனது மேல் வலது மற்றும் இடது கரங்களில் தாமரை மலர்களை தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் வீற்றிருக்கிறாள். அம்மனை தரிசித்துவிட்டு வலதுபுறம் வந்தால் மருதாந்த நாதேஸ்வரர் சன்னிதி உள்ளது.
தினசரி மூன்று கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
மாத்ரு கமன என்ற மகாதோஷத்தை மருதாந்தனுக்கு போக்கிய இத்தலத்து இறைவனையும், இறைவியையும் வணங்குவதால் நம்மை பிடித்திருக்கும் அனைத்து தோஷங்களும் விலகும் என்று நம்புகின்றனர் பக்தர்கள்.
திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் சாலையில் லால்குடிக்கு 2 கிலோமீட்டர் முன்பாக ஆங்கரை உள்ளது.
சாரத்வதம் என்று ஒரு ஊர். அங்கு வருமான ககோளர் என்பவர் இருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்தவர்; சிவபக்தி மிகுந்தவர். அவருடைய மனைவி லீலாவதி. கண்டவர் மயங்கும் அழகு கொண்டவள். இவர்களுக்கு ஒரு ஆண் மகன் பிறந்தான். தனது ஞான திருஷ்டியால் தனது மகன் பெரிய பாவம் செய்யப்போகிறான் என்பதை ககோளர் அறிந்தார். அதனால் அவனுக்கு மருதாந்தன் என்று பெயரிட்டார்.
காலம் ஓடியது. லீலாவதி தடம் மாறினாள். பிற ஆடவர் பழக்கம் அவளுக்கு உண்டானது. அதனால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டாள். கோதாவரிக் கரையில் உள்ள உத்தமபுரத்தில் வசித்தபடி, பல ஆண்களிடம் பொன், பொருள் பெற்றுக்கொண்டு சுகவாழ்வு வாழ்ந்தாள்.
அவள் மகன் மருதாந்தன் வேத சாஸ்திரங்களை நன்கு கற்றான். அவன் தேச யாத்திரை செய்து வரும் போது, உத்தமபுரம் வந்தான். அவனது அறிவுத் திறமையை நேரில் கண்ட அவ்வூர் மன்னன், அவனுக்கு மந்திரி பதவி வழங்கினான்.
தவறான நண்பனின் வழிகாட்டுதலால், லீலாவதியின் வீட்டிற்கு சென்றான் மருதாந்தன். அங்கு சென்றதும் தான் அது அவனது தாய் என்பது தெரிந்தது. இருவரும் வேதனை அடைந்தனர். லீலாவதி தன் மகனிடம், “நீ தர்ம சாஸ்திரங்கள் கற்ற மகான்களிடம் கூறி பிராயச்சித்தம் அறிவாய்” எனக் கூறினாள்.
கோதாவரி கரைக்குச் சென்ற மருதாந்தன், சந்தியா வந்தனத்திற்காக அங்கு கூடிய வேத விற்பன்னர்களிடம் நடந்ததை கூறி, பிராயச்சித்தம் அருளும்படி வேண்டி நின்றான்.

மருதாந்த நாதேஸ்வரர், சுந்தர காஞ்சனி
அவர்கள் “கருப்பு நிறமுள்ள இரும்பினால் செய்யப்பட்ட மணிகளை கழுத்தில் கட்டி கொண்டு கிராமங்கள் தோறும் போய் பிச்சை எடு. நீ செய்த பாவங்களை அவர்களிடம் கூறு. இறைவனுக்கு பூஜை செய். உன் கழுத்தில் உள்ள மணிகள் ரத்தினமாக மாறும் வரை இப்படிச் செய். இரும்பு மணிகள் ரத்தினமாக மாறியதும், உன் பாவம் நீங்கி விட்டதாக அறிந்துகொள். அந்த இடத்தில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்” என்று கூறினர்.
அதன்படியே செய்தான் மருதாந்தன். 12 ஆண்டுகள் பல ஊர்களைச் சுற்றி வந்த அவன், ஓரிடத்தில் கடுமையான தவத்தில் ஈடுபட்டான். அப்போது அவன் கழுத்தில் இருந்த இரும்பு மணிகள் ரத்தினமாக மாறின. தன் பாவம் விலகிய அகம்ஹரம் என்ற இடத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். அந்த ஊர் தற்போது ஆங்கரை என்று அழைக்கப்படுகிறது. மருதாந்தன் பிரதிஷ்டை செய்த லிங்கமே, மருதாந்த நாதேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.
ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமர்ந்திருந்தாலும், தெற்கு திசை வாசலே பயன்படுத்தப்படுகிறது. முகப்பை கடந்ததும் அகன்ற பிரகாரம். மகாமண்டபத்தில் நத்தியம்பெருமான் வீற்றிருக்க, இடதுபுறம் தண்டபாணியின் திருமேனி உள்ளது. அர்த்தமண்டபத்தை அடுத்து உள்ள கருவறையில் இறைவி சுந்தர காஞ்சனி அம்பாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு நான்கு கரங்கள். தனது மேல் வலது மற்றும் இடது கரங்களில் தாமரை மலர்களை தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் வீற்றிருக்கிறாள். அம்மனை தரிசித்துவிட்டு வலதுபுறம் வந்தால் மருதாந்த நாதேஸ்வரர் சன்னிதி உள்ளது.
தினசரி மூன்று கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
மாத்ரு கமன என்ற மகாதோஷத்தை மருதாந்தனுக்கு போக்கிய இத்தலத்து இறைவனையும், இறைவியையும் வணங்குவதால் நம்மை பிடித்திருக்கும் அனைத்து தோஷங்களும் விலகும் என்று நம்புகின்றனர் பக்தர்கள்.
திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் சாலையில் லால்குடிக்கு 2 கிலோமீட்டர் முன்பாக ஆங்கரை உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் உள்ளது சாரங்கபாணி ஆலயம். இந்த ஆலயத்தில் உள்ள சில சிறப்புகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் உள்ளது சாரங்கபாணி ஆலயம். 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்த நிலையில் வைத்து போற்றப்படும் கோவில் இதுவாகும். இந்த ஆலயத்தில் உள்ள சில சிறப்புகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.
வில்லுடன் பெருமாள்
பொதுவாக அனைத்து வைணவ தலங்களிலும் பெருமாள் தன்னுடைய கரங்களில் சங்கு மற்றும் சக்கரத்தை ஏந்தியபடி தான் காட்சி தருவார். ஆனால் சாரங்கபாணி ஆலயத்தில் உள்ள இறைவன், தன்னுடைய கரங்களில் ‘சார்ங்கம்’ என்னும் வில்லை வைத்திருக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் மூலவர், உற்சவர் இருவருமே கையில் வில் வைத்திருப்பது சிறப்புக்குரிய அம்சமாகும். சார்ங்கம் என்ற வில்லை வைத்திருப்பதாலேயே, இத்தல இறைவன் சாரங்கபாணி என்று அழைக்கப்படுகிறார்.
நாலாயிர திவ்ய பிரபந்தம்
திருமாலைப் பற்றி, 12 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த பாடல்களே ‘நாலயிர திவ்ய பிரபந்தம்’ என்ற நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. அந்த நூல் கிடைக்க வழி செய்தவர் இத்தல பெருமாள் ஆவார். நாதமுனி என்பவர் இத்தல இறைவனை தரிசிக்க வந்தார். அப்போது சில பக்தர்கள் சுவாமியின் பெருமையை “ஓராயிரத்துள் இப்பத்தும்” என்று சொல்லி பாடினர். அதைக் கேட்டு, “இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளதா?” என்று வியந்த நாதமுனி, மீதி பாடல்களையும் பாடும்படி கேட்டார். ஆனால், அவர்களுக்கு தெரியவில்லை. இந்த நிலையில் நாதமுனியின் கனவில் தோன்றிய பெருமாள், “ஆழ்வார்திருநகரி சென்று, நம்மாழ்வாரை வணங்கினால் மீதி பாடல்கள் கிடைக்கும்” என்றார். ஆனால் வந்த இடத்தில் ஆயிரம் பாடல்களுக்கு பதிலாக நாலாயிரம் பாடல்கள் கிடைத்தன. அந்த தொகுப்பு தான் ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்னும் நூல்.
சொர்க்கவாசல் இல்லை
திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படும் 108 ஆலயங்களில் பெரும்பாலானவற்றில் சொர்க்கவாசல் இருக்கும். ஆனால் சாரங்கபாணி ஆலயத்தில் சொர்க்கவாசல் இல்லை. இத்தல இறைவன், நேராக வைகுண்டத்தில் இருந்து இங்கு வந்தார். எனவே இத்தல இறைவனை வணங்கினாலே முக்தி கிடைத்து விடும் என்பதால், தனியாக சொர்க்கவாசல் இல்லை என்று காரணம் கூறப்படுகிறது. தை முதல் ஆனி மாதம் வரை உத்ராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயண வாசல் வழியாகவும் இறைவனை தரிசிக்க செல்ல வேண்டும். இரண்டில் ஏதாவது ஒரு வாசல் தான் திறந்திருக்கும்.
பக்தனுக்கு திதி கொடுத்த பரந்தாமன்
இத்தல சாரங்கபாணியின் மீது அதீத பக்தி கொண்டவர், லட்சுமி நாராயணசாமி என்னும் பக்தர். இந்த ஆலயத்தின் கோபுரத்தை கட்டியவர் இவர்தான். தன்னுடைய இறுதி காலம் வரை இறைவனுக்கு சேவை செய்தார். ஆனால் அவருக்கு பிள்ளைகள் இல்லை. ஒரு தீபாவளி நாளில் லட்சுமி நாராயணசாமி, இறைவனடி சேர்ந்தார். இறந்த பெற்றோருக்கு பிள்ளைகள் திதி கொடுக்காவிட்டால், அவர்கள் நரகத்திற்கு செல்ல நேரிடும். எனவே தன்னுடைய பக்தனுக்கு, தானே மகனாக இருந்து திதி கொடுத்தார் சாரங்கபாணி என்று தல வரலாறு சொல்கிறது. தீபாவளியன்று உச்சி காலத்தில் தன் பக்தருக்கு சாரங்கபாணி திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது. ஆனால் இதனை பார்ப்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
வீட்டோடு மாப்பிள்ளை
இந்த தலம் கோமளவல்லி தாயாரின் பிறந்த வீடு ஆகும். அவரை திருமணம் செய்து கொண்ட திருமால், இங்கு வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பதாக ஐதீகம். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. பொதுவாக சுவாமி சன்னிதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, இந்த ஆலயத்தில் கோமளவல்லி தாயார் சன்னிதியின் முன்பாக நடத்துகின்றனர். அதன்பிறகே சுவாமி சன்னிதியில் கோ பூஜை நடைபெறும். தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும் என்பது பொதுவான விதி இருப்பதால், அதற்கு ஏற்றால்போல் தாயார் சன்னிதிக்கு சென்ற பிறகே, இறைவனின் சன்னிதிக்கு செல்லும் வகையில் ஆலய வடிவமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது.
பாதாள சீனிவாசன்
இத்தல இறைவியான கோமளவல்லி தாயாரை திருமணம் செய்வதற்காக, பூலோகம் வந்தார் திருமால். தாயாரிடம் விளையாட நினைத்து, பூமிக்கு அடியில் சென்று ஒளிந்து கொண்டார். எங்கு தேடியும் திருமாலைக் காணாததால், தாயார் கலக்கம் அடைந்தார். கொஞ்ச நேர கண்ணாமூச்சி விளையாட்டுக்குப் பிறகு, அவர் முன்பு தோன்றிய பெருமாள், தாயாரை மணந்து கொண்டார். திருமால் ஒளிந்த இடம் ‘பாதாள சீனிவாசர் சன்னிதி’ என்ற பெயரில் இந்த ஆலயத்தில் இருக்கிறது. அதே போல் திருமணத்திற்கு பிறகு, மேடான பகுதியில் நின்ற சீனிவாசர், ‘மேட்டு சீனிவாசர்’ என்ற பெயரில் தாயாருடன் தனிச் சன்னிதியில் அருள்கிறார். ஒவ்வொருவரின் வாழ்வும் இல்லறத்தை தழுவிய பின்பே, மேன்மை பெறும் என்ற தத்துவத்தை இந்த அமைப்பு உணர்த்துவதாக சொல்கிறார்கள்.
உத்தான சயனம்
பெருமாள் படுத்தபடி இருக்கும் ‘சயனம்’ என்னும் நிலைக்கு பல்வேறு பெயர்கள் உண்டு. அதில் ஒரு சயனம் ‘உத்தான சயனம்’ ஆகும். சாரங்கபாணி ஆலயத்திற்கு வந்த திருமழிசை ஆழ்வார், இத்தல இறைவனை வணங்கி மங்களாசாசனம் செய்தார். அப்போது அவர் “நடந்து திரிந்ததால் கால்கள் வலிக்கிறது என்பதற்காகவா, பள்ளிகொண்டிருக்கிறாய்?” என்ற பொருளில் பாடினார். அதைக் கேட்ட பெருமாள் எழ முயன்றார். உடனே திருமழிசை ஆழ்வார், “அப்படியே காட்சி தா” என்று கேட்க, இறைவனும் அப்படியே அருளினார். படுத்தபடி சற்றே தலையைத் தூக்கி எழ முயலும் கோலத்தில் இங்கு இறைவன் அருள்கிறார். இந்த கோலத்திற்கு `உத்தான சயனம்’ என்று பெயர்.
வில்லுடன் பெருமாள்
பொதுவாக அனைத்து வைணவ தலங்களிலும் பெருமாள் தன்னுடைய கரங்களில் சங்கு மற்றும் சக்கரத்தை ஏந்தியபடி தான் காட்சி தருவார். ஆனால் சாரங்கபாணி ஆலயத்தில் உள்ள இறைவன், தன்னுடைய கரங்களில் ‘சார்ங்கம்’ என்னும் வில்லை வைத்திருக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் மூலவர், உற்சவர் இருவருமே கையில் வில் வைத்திருப்பது சிறப்புக்குரிய அம்சமாகும். சார்ங்கம் என்ற வில்லை வைத்திருப்பதாலேயே, இத்தல இறைவன் சாரங்கபாணி என்று அழைக்கப்படுகிறார்.
நாலாயிர திவ்ய பிரபந்தம்
திருமாலைப் பற்றி, 12 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த பாடல்களே ‘நாலயிர திவ்ய பிரபந்தம்’ என்ற நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. அந்த நூல் கிடைக்க வழி செய்தவர் இத்தல பெருமாள் ஆவார். நாதமுனி என்பவர் இத்தல இறைவனை தரிசிக்க வந்தார். அப்போது சில பக்தர்கள் சுவாமியின் பெருமையை “ஓராயிரத்துள் இப்பத்தும்” என்று சொல்லி பாடினர். அதைக் கேட்டு, “இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளதா?” என்று வியந்த நாதமுனி, மீதி பாடல்களையும் பாடும்படி கேட்டார். ஆனால், அவர்களுக்கு தெரியவில்லை. இந்த நிலையில் நாதமுனியின் கனவில் தோன்றிய பெருமாள், “ஆழ்வார்திருநகரி சென்று, நம்மாழ்வாரை வணங்கினால் மீதி பாடல்கள் கிடைக்கும்” என்றார். ஆனால் வந்த இடத்தில் ஆயிரம் பாடல்களுக்கு பதிலாக நாலாயிரம் பாடல்கள் கிடைத்தன. அந்த தொகுப்பு தான் ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்னும் நூல்.
சொர்க்கவாசல் இல்லை
திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படும் 108 ஆலயங்களில் பெரும்பாலானவற்றில் சொர்க்கவாசல் இருக்கும். ஆனால் சாரங்கபாணி ஆலயத்தில் சொர்க்கவாசல் இல்லை. இத்தல இறைவன், நேராக வைகுண்டத்தில் இருந்து இங்கு வந்தார். எனவே இத்தல இறைவனை வணங்கினாலே முக்தி கிடைத்து விடும் என்பதால், தனியாக சொர்க்கவாசல் இல்லை என்று காரணம் கூறப்படுகிறது. தை முதல் ஆனி மாதம் வரை உத்ராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயண வாசல் வழியாகவும் இறைவனை தரிசிக்க செல்ல வேண்டும். இரண்டில் ஏதாவது ஒரு வாசல் தான் திறந்திருக்கும்.
பக்தனுக்கு திதி கொடுத்த பரந்தாமன்
இத்தல சாரங்கபாணியின் மீது அதீத பக்தி கொண்டவர், லட்சுமி நாராயணசாமி என்னும் பக்தர். இந்த ஆலயத்தின் கோபுரத்தை கட்டியவர் இவர்தான். தன்னுடைய இறுதி காலம் வரை இறைவனுக்கு சேவை செய்தார். ஆனால் அவருக்கு பிள்ளைகள் இல்லை. ஒரு தீபாவளி நாளில் லட்சுமி நாராயணசாமி, இறைவனடி சேர்ந்தார். இறந்த பெற்றோருக்கு பிள்ளைகள் திதி கொடுக்காவிட்டால், அவர்கள் நரகத்திற்கு செல்ல நேரிடும். எனவே தன்னுடைய பக்தனுக்கு, தானே மகனாக இருந்து திதி கொடுத்தார் சாரங்கபாணி என்று தல வரலாறு சொல்கிறது. தீபாவளியன்று உச்சி காலத்தில் தன் பக்தருக்கு சாரங்கபாணி திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது. ஆனால் இதனை பார்ப்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
வீட்டோடு மாப்பிள்ளை
இந்த தலம் கோமளவல்லி தாயாரின் பிறந்த வீடு ஆகும். அவரை திருமணம் செய்து கொண்ட திருமால், இங்கு வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பதாக ஐதீகம். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. பொதுவாக சுவாமி சன்னிதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, இந்த ஆலயத்தில் கோமளவல்லி தாயார் சன்னிதியின் முன்பாக நடத்துகின்றனர். அதன்பிறகே சுவாமி சன்னிதியில் கோ பூஜை நடைபெறும். தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும் என்பது பொதுவான விதி இருப்பதால், அதற்கு ஏற்றால்போல் தாயார் சன்னிதிக்கு சென்ற பிறகே, இறைவனின் சன்னிதிக்கு செல்லும் வகையில் ஆலய வடிவமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது.
பாதாள சீனிவாசன்
இத்தல இறைவியான கோமளவல்லி தாயாரை திருமணம் செய்வதற்காக, பூலோகம் வந்தார் திருமால். தாயாரிடம் விளையாட நினைத்து, பூமிக்கு அடியில் சென்று ஒளிந்து கொண்டார். எங்கு தேடியும் திருமாலைக் காணாததால், தாயார் கலக்கம் அடைந்தார். கொஞ்ச நேர கண்ணாமூச்சி விளையாட்டுக்குப் பிறகு, அவர் முன்பு தோன்றிய பெருமாள், தாயாரை மணந்து கொண்டார். திருமால் ஒளிந்த இடம் ‘பாதாள சீனிவாசர் சன்னிதி’ என்ற பெயரில் இந்த ஆலயத்தில் இருக்கிறது. அதே போல் திருமணத்திற்கு பிறகு, மேடான பகுதியில் நின்ற சீனிவாசர், ‘மேட்டு சீனிவாசர்’ என்ற பெயரில் தாயாருடன் தனிச் சன்னிதியில் அருள்கிறார். ஒவ்வொருவரின் வாழ்வும் இல்லறத்தை தழுவிய பின்பே, மேன்மை பெறும் என்ற தத்துவத்தை இந்த அமைப்பு உணர்த்துவதாக சொல்கிறார்கள்.
உத்தான சயனம்
பெருமாள் படுத்தபடி இருக்கும் ‘சயனம்’ என்னும் நிலைக்கு பல்வேறு பெயர்கள் உண்டு. அதில் ஒரு சயனம் ‘உத்தான சயனம்’ ஆகும். சாரங்கபாணி ஆலயத்திற்கு வந்த திருமழிசை ஆழ்வார், இத்தல இறைவனை வணங்கி மங்களாசாசனம் செய்தார். அப்போது அவர் “நடந்து திரிந்ததால் கால்கள் வலிக்கிறது என்பதற்காகவா, பள்ளிகொண்டிருக்கிறாய்?” என்ற பொருளில் பாடினார். அதைக் கேட்ட பெருமாள் எழ முயன்றார். உடனே திருமழிசை ஆழ்வார், “அப்படியே காட்சி தா” என்று கேட்க, இறைவனும் அப்படியே அருளினார். படுத்தபடி சற்றே தலையைத் தூக்கி எழ முயலும் கோலத்தில் இங்கு இறைவன் அருள்கிறார். இந்த கோலத்திற்கு `உத்தான சயனம்’ என்று பெயர்.
தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் உள்ளன. அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிக, மிக வித்தியாசமானது. தனிச் சிறப்புகள் அதிகம் கொண்டது.
தலக்குறிப்பு :
கோவிலின் பெயர்: அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவில்
கட்டியவர்: ஆதித்திய சோழன் என்னும் சோழ மன்னன்
காலம்: சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
இறைவனின் திருநாமம்: அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர்
தேவாரத் திருப்பெயர்: அருள்மிகு சந்திரசேகர பிறையணி கொன்றயினான்
இறைவியின் திருநாமம்: அருள்மிகு அமிர்தாம்பிகையம்மன்
தேவாரத் திருப்பெயர்: அருள்மிகு வடிவாம்பிகையம்மன்
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: சூரிய புட்கரணி. சந்திர புட்கரணி
ஆறு: வராக நதி (எ) சங்கராபரணி
பூஜை: மூன்று காலம்
நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை
தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் உள்ளன. அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிக, மிக வித்தியாசமானது. தனிச் சிறப்புகள் அதிகம் கொண்டது.
இந்த ஆலயத்துக்குள் யார் ஒருவர் காலடி எடுத்து வைக்கிறாரோ, அவரது ஜாதகத்தில் உள்ள அனைத்து வக்கிரத் தோஷங்களும் அடுத்த நிமிடமே தவிடு பொடியாகி விடும் என்பது ஜதீகம். சிவாலயமாக இருந்த போதிலும் காளியின் சிறப்பு காரணமாகவும் இந்த தலம் சக்தி தலங்களில் ஒன்றாக புகழ் பெற்று திகழ்கிறது.
பழமையும், பெருமையும் வாய்ந்த திருவக்கரை என்னும் இத்திருத்தலம் தொண்டை நாட்டிலுள்ள 32 சிவத்தலங்களுள் 30-வது தலமாகும். 7-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இத்திருக்கோவில் சமயக்குரவர் நால்வருள் பார்வதி தேவியிடம் ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்புடையது.
அமைவிடம்
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருவக்கரை கிராமத்தில் அமைந்துள்ளது இத்திருத்தலம். திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி என எந்த நகரத்திலிருந்து வந்தாலும் சுமார் 27 கி.மீ. தொலைவில் திருவக்கரை அமைந்துள்ளது. திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாக புதுச்சேரி செல்லும் பேருந்துப் பாதையில் பெரும்பாக்கம் என்னும் இடத்தில் இறங்கி தெற்கு நோக்கி 10 கி.மீ. தூரம் சென்றால் திருவக்கரையை அடையலாம்.
அதே போல் விழுப்புரத்திலிருந்து திருக்கனூர் வழியாக புதுச்சேரி செல்லும் வழியில் திருக்கனூர் என்னும் இடத்தில் இறங்கி வடக்கு நோக்கி சுமார் 5 கி.மீ. சென்றாலும் இக்கோவிலை அடையலாம். ‘வராக நதி’ என்று அழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின் வடகரையில் ஏழு நிலை ராஜகோபுரத்துடன் சுமார் பத்து ஏக்கர் நிலப்பரப்பில் கிழக்கு நோக்கி இக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் இத்தல இறைவன் சந்திரமவுலீஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார். இவர் எங்கும் காண முடியாத அரியவகையான மூன்று முகலிங்கமாக அருள்பாலிக்கின்றார்.
ராஜகோபுரத்தின் வழியாக நுழைந்தவுடன் வடக்கு நோக்கிய வக்கிரகாளியம்மன் சன்னதி அமைந்துள்ளது. வழிபட்டால் நம்மை வாழ வைக்கும் தாய் இவள். இதற்கு அருகே மேற்கு நோக்கி வக்கிராசுரன் வழிபட்ட வக்ரலிங்கம் சன்னதி உள்ளது. மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவன் சன்னதி அரிதாகவே காணப்படும். இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
காளி சன்னதியிலிருந்து உள்ளே மூலவர் சன்னதிக்கு செல்லும் வழியில் வலதுபுறம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. நேரே பெரிய வடிவில் திருநந்தி அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் ராஜகோபுரம், திருநந்தி, கொடிமரம், மூலவர் சன்னதி முதலியன நேர்கோட்டில் அமையாமல் ஒன்றைவிட்டு ஒன்று விலகி அமைந்திருக்கும் அமைப்பை வேறு எங்கும் காண முடியாது.
திருநந்தியை கடந்து கிளிகோபுரம் வழியாக மூலவர் சன்னதிக்குச் செல்ல வேண்டும். மூலவர் சன்னதிக்கு வடப்புறம் கிளிகோபுரம் அருகே அம்பாள் வடிவுடையம்மன் தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றாள். தென் திசையில் குணடலினி மாமுனிவர் ஜீவசமாதி அடைந்த சன்னதி உள்ளது.
கருவறைக்குப் பின்புறம் வக்கிராசுரனை வதம் செய்த வரதராஜபெருமாள் தாயார் இன்றி தனியாக பிரயோகச் சக்கரத்துடன் வீற்றிருக்கின்றார். இக்கோவிலில் நடராஜ பெருமாள் கால்மாற்றி வக்ரதாண்டவம் ஆடிய திருக்கோலத்தைக் காணலாம். இங்கு நவகிரக சன்னதியில் தெற்கு திரும்பிய காக வாகனத்தில் நின்ற வக்ரசனியைக் காணலாம். இத்திருக்கோவில் அமைப்பு, உறையும் இறைவன் மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்தும் வக்கிர நிலையில் அமைந்து அருள்புரிகின்றனர்.
இத்திருக்கோவில் ஆதித்ய சோழன் என்னும் சோழ மன்னரால் ஏறக்குறைய 2000-ம் ஆண்டுகளுக்கு முன் செங்கற்களால் கட்டப்பட்டது எனத் தெரிகிறது. பின்னர் கி.பி.907 முதல் கி.பி.953 வரையுள்ள காலகட்டத்தில் வாழ்ந்த, சிவபக்தனாக விளங்கிய முதலாம் பராந்தகச் சோழனின் மகனான கண்டராதித்தச் சோழனால் கி.பி.950 முதல் கி.பி.957 முடிய உள்ள காலத்தில் திருக்கோவில் கோபுரம் கட்டுவிக்கப்பட்டு அவன் பெயரிலேயே கண்டராதித்தன் ‘‘திருக்கோபுரம்’’ எனவும் ‘‘கண்டர் சூரியன் திருக்கோபுரம்’’ எனவும் வழங்கப்பட்டதாக வரலாற்றுச் செய்தி கூறுகிறது.
கண்டராதித்தனின் மனைவியான செம்பியன் மாதேவியார் பாடல் பெற்றகோவில்களான திருத்துருத்தி, திருக்கோடிக்கா, திருமுதுக்குன்றம், தென்குரங்காடு துறைபோன்ற கோவில்களைக் கற்றளியாக்கி திருப்பணி செய்துள்ளார். அதே போல திருவக்கரை திருத்தலத்தையும் கற்றளியாக்கி சிறந்ததொரு திருப்பணி செய்துள்ளார். கோவில்களுக்கு தானங்கள்பலவும் செய்துள்ளதை வரலாற்றுச் செய்தி மூலம் அறிய முடிகிறது. மாதேவியாரின் அரிய திருப்பணியால் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் திருக்கோவிலோடு சேர்ந்து அவரது பெயரும் புகழோடு நிலைத்து நிற்கின்றது.
திருவக்கரை கோவிலின் சிறப்புகள்
* இத்திருக்கோவிலில் ராஜகோபுரம், நந்தி, கொடிமரம், மூலஸ்தானம் முதலியன நேர்கோட்டில் அமையவில்லை.
* இத்திருக்கோவிலில் இறைவன் மூன்று முகலிங்கமாக காட்சி தருகின்றார்.
* பிரதான சிவத்தலமான இத்திருத்தலத்தில் வரதராஜ பெருமாள் சன்னதி அமைந்துள்ளது ஒரு தனிச் சிறப்பாகும்.
* குண்டலினி சித்தர் ஜீவசமாதி அமைந்துள்ள பெருமையுடையது இத்திருக்கோவில்.
* இத்திருக்கோவிலில் எட்டு திருக்கரங்களுடன் அஷ்டபுஜ துர்க்கை காட்சி தருகின்றார்.
* சமயக்குரவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்புடையது இத்திருக்கோவில்.
* பிரார்த்தனைத் தலமாக விளங்குகின்றது இத்திருக்கோவில்.
* சனிபகவான் வாகனமான காகம் எல்லாத் தலங்களிலும் அவருக்கு வலப்புறமாக இருக்கும். ஆனால் இங்கு அவருக்கு இடப்புறமாக அமைந்து வக்கிரமாக காட்சியளிக்கிறது.
* உலகத்தை ரட்சிக்கும் ஜகன்மாதா இங்கு வக்கிரகாளியாக நமக்கெல்லாம் சரணாகதித் தத்துவத்தை உணர்த்தி அருள்புரியும் திருக்கோலம் ஒரு தனிச்சிறப்பாகும்.
பிரார்த்தனை பலன்கள்
வக்கிரமாக அமையப்பெற்ற கிரகங்களால் வாழ்க்கை பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வக்கிரமாக அமையப்பெற்ற தெய்வங்களை வழிபட்டு, வக்கிரமாக கட்டப்பட்டுள்ள இக்கோவிலை வலம் வந்தால் துன்பங்கள் நீங்கப்பெற்று வாழ்க்கையில் பயனடைவர். இது வக்கிரதோஷ நிவர்த்தி தலமாகும்.
திருமணமாகாதவர், பிள்ளைப்பேறு அற்றவர் இக்கோவிலில் உள்ள துர்க்கை அம்மனை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் பூஜை செய்து வந்தால் குறைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
நினைத்த காரியம் கைகூட வேண்டுமென்போர் பவுர்ணமி தினத்தன்று வக்கிரகாளி அம்மனை தொடர்ந்து இடைவிடாது மூன்று மாத பவுர்ணமி அன்று தரிசித்து வந்தால் எண்ணிய காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. அதனாலேயே இரவு 12.00 மணிக்கு நடைபெறும் ஜோதி தரிசனத்தில் கலந்து கொள்வதற்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து பலன் பெற்று வருகின்றார்கள். கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பயனடைகிறார்கள்.
இத்திருக்கோவில் தனியாக அமைந்துள்ள தீப லட்சுமியின் திருக்கோவிலில் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் ராகு காலத்தில் விளக்கேற்றி இந்த அம்மனை கும்பிட்டு மாங்கல்யம் கட்டி பிரார்த்தனை செய்தால் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.
ஆலய தலவரலாறு
முன் காலத்தில் இத்தலத்துக்கு வக்கிரபுரி என்று பெயர் இருந்தது. குண்டல மகரிஷி என்ற முனிவர் வாழ்ந்து இங்கே சமாதி யாகிஇருக்கிறார். அவருடைய பேரனான வக்கிரா சூரனும் அவனுடைய சகோதரி துர்முகியும் சிவ பக்தர்கள். அரியவரம் பெறுவதற்காக நீண்ட நாட்கள் கடுந்தவம் புரிந்தான் வக்கிராசூரன். முடிவில் ஈஸ்வரன் தோன்றி வேண்டும் வரம் யாது என்று கேட்டார். தேவர் மூவரால் அழியாமலும், சிவலிங்கத்தை எப்போதும் தன் கண்டத்தில் வைத்திருக்கவும் வரம் கேட்டான்.
அப்போது ஈஸ்வரன் அசைவ உணவு நமக்காகாதே என்றார். காலையில் பூஜை செய்து உணவு உண்ட பிறகே சிவலிங்கத்தை கண்டத்தில் வைப்பேன் என்றான் அசுரன். சர்வேஸ்வரன் அவன் கேட்ட வரம் அளித்தார். வரம் பெற்றதும் தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் பிரம்மாவிடம் செல்ல, அவர் தேவர்களுடன் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர்.
உமையவள்தான் சாமுண்டியாக 16 கலைகளுடன் வராகி, இந்திராணி,கவுமாரி, சாமுண்டி, மகேஸ்வரி, வைணவி, பிராமி எனும் சப்தமாதர்களாகத் தோன்றி எட்டு திருக்கரங்களுடன் சூலம், வில், வாள், ஈட்டி, இருப்புலக்கை, தோமரம், பாசம், அங்குசம், பரசு ஆகிய ஆயுதங்களுடன் தோன்றி அழிக்கத்தக்கவள். அவன் பெண்களால் அழிய வரம் பெறவில்லை.
அவன் லிங்கத்தை கண்டத்தில் வைத்திருக்கும்போது கொல்ல முடியாது. அசைவ உணவு உண்ண கடல்வழி செல்லும் போது அசுரன் தன் தங்கை காவலில் கண்டலிங்கத்தை வைப்பான். அப்போது அசுரனின் சகோதரியை முதலில் அழித்து பின் அவனையும் அழிக்கவேண்டும் என்று மகாவிஷ்ணு குறிப்பிட்டார்.
அதன்படி ஈஸ்வரியை அழைத்து மகாவிஷ்ணு கொல்லும் வழிமுறைகளைக் கூறினார். ஈஸ்வரியும் 16 கலைகளுடன் பேருருவெடுத்து மகாவிஷ்ணு யோசனைப் படி வக்கிர துர்முகியை அழித்து, பின்னர் வக்கிராசூரனை அழித்து பதினாறு கலைகளுடன் ராஜகோபுரத்தின் சமீபமாக வடக்கு முகமாக அமர்ந்தால் அருள்மிகு வக்கிரகாளி என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
வக்கிராசூரன் வழிபட்டதால் இத்தலம் திருவக்கரை எனப்பெயர் பெற்றது. மூலலிங்கம் முகலிங்கமாக அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வடக்கு முகமான காளியின் எதிரில் வக்கிராசூரன் சிலை உள்ளது. அவன் கண்டத்தில் வைத்திருந்ததால் கண்டலிங்கம் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
திருவக்கரை தேவார பாடல் பெற்ற தலமாகும். இது திண்டிவனத்தில் இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது. புதுச்சேரி செல்லும் பாதையில் பெரும்பாக்கம் சென்று தெற்கில் 10 கி.மீ செல்ல வேண்டும்.
வடிவாம்பிகையின் பேசும் தோற்றம்
புன்முறுவல் பூக்க, அபயகரத்துடன் விளங்கும் அன்னை வடிவாம்பிகையின் வடிவழகைச் சொல்லி முடியாது. காலத்தின் கோலத்தினால் மங்கிய வெளிச்சத்திலும் அன்னையின் அருள் திருமுகத்தைப்பார்த்தால் கருணையும் பரிவும் தாண்டவமாடுவதைக் காண்கிறோம்.
சற்று உற்றுப்பார்த்தால் அன்னை பேசுவது போலவும் மூக்குப்புல்லாக்கு ஆடுவது போலவும் தோன்றி மெய்சிலிர்க்கிறது. சுமார் நான்கு அடி உயரத்தில் விளங்கும் அன்னையின் எழிலையும் அருளையும் கண்டு உய்யவாவது இந்த தலத்தைப்போய்ப்பார்க்க வேண்டும். அன்னையின் சன்னதி தெற்குப் பார்த்தது. பெரும்பாலான திருக்கோயில்களில் கிழக்கு நோக்கி காட்சி தரும் தேவி, இங்கு திருவெற்றியூர் வடிவுடையம்மைப் போல தெற்கு நோக்கி காட்சி தருகின்றாள். இச்சன்னதியின் முன்மண்டபம் அழகிய எட்டு தூண்களால் ஆனது. இச்சன்னதியில் இடப்புறம் பள்ளியறை உள்ளது. சந்திரசேகரர் கிழக்குப்பார்த்து எழுந்தருளியிருக்கிறார்.
அன்னை துர்க்கையின் உருவம் கருத்தைக் கவருகிறது. ஐந்து அடிக்கு மேல் உயரமுள்ள சிற்பத்தில் உள்ள அஷ்ட புஜங்கள் மகிஷனின் தலைமேல் லாவகமாக நிற்கிற கோலம் மிக அழகியது. மிகவும் சக்தி வாய்ந்த துர்க்கை இவள் என்று கூறுகிறார்கள். இந்த துர்க்கையின் அருளைப் பற்றிப் பலமாகப் பேசுகிறார்கள். சந்திரசேகரரின் சன்னதிக்கும் தெற்குப் பக்கத்தில் வக்கிராசுரனுடைய தாத்தா குண்டல மகரிஷியின் சமாதி இருக்கிறது.
அதன் மேல் வக்கிரன் பூஜித்த கண்டலிங்கத்தை ஸ்தாபித்திருக்கிறார்கள். வடக்குபக்கத்தில் ஸஹஸ் ரலிங்கத்துக்குச்சிறிய கோவில் ஒன்று உள்ளது. அதன் பக்கத்தில் வக்கிரனை அழித்த வரதராஜப்பெருமானின் திருக்கோவிலைக்காணலாம். எங்கும் உள்ளது போல் இல்லாமல் திருமாலின் கரத்தில் சக்கரம் பிரயோகப்பாணியில் அமைந்திருக்கிறது. தாயாரின் சந்நிதி தனியாகக் கிடையாது.
ஆலய அமைப்பு
பொதுவாக வேறு எங்கும் அதிகமாகக் காணப் படாத வகையில் கோவிலின் அமைப்பு இருக்கிறது. மிகப் பரந்த நிலப்பரப்பில் கோவில் அமைந்துள்ளது. கருவறைக் கோவிலும் அதைச் சார்ந்த கோவில்களும், மண்டபங்களும், சுற்றுச் சுவர்களும், கோபுரமும் தனியாக அமைந்துள்ளன. தற்போதுள்ள வக்கிரகாளி கோவிலும், வக்கி ரலிங்கம் கோவிலும், சந்திரசேகர் கோவிலுக்கும், கோபுரத்திற்கும் வெளியில் முன்புறத்தில் தனியாக இருந்திருத்தல் வேண்டும். பிற்காலத்தில் இவை இரண்டாவது ராஜாதிராஜன் காலத்தில், புதிய ராஜகோபுரமும், மதிற்சுவரும் எழுதப்பட்டுக் கோவில் முன்புறத்தை விரிவாக்கப்பட்ட போது மூலக் கோவிலுடன் அவைகள் இணைந்துள்ளன.
விண்ணளாவி நிற்கும் பெரிய ராஜகோபுரத்தின் உள்ளே முதலில் நாம் நுழைகிறோம். ராஜகோபுரத்தின் உட்புற மேற்கூரையில் ஒன்பது கட்டங்களின் நடுவில் தாமரையும், சுற்றிலும் அஷ்டதிக்குப் பாலர்களும் தென்படுகின்றனர். ராஜகோபுரத்தின் அடிப்படை கருங்கல்லாலும், மேற்புறம் செங்கல்லாலும் கட்டப்பட்டுள்ளன.
“ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ராஜாதி ராஜ தேவர்க்கு யாண்டு ஏழாவது திருவக்கரை ஆளுடையார் கோவிலில் இத்திரு கோபுரங் கண்டர் சூரியன் திரு கோபுரமென்னும் பெயரால் செய்வித்தான். அம்மை அப்பன் பாண்டி நாடு கொண்டானான கண்டர் சூரியன் சம்புவராயன்” எனும் கல் வெட்டிலிருந்து, இந்தக் கோபுரம் கண்டர் சூரியன் சம்புவராயனால் கட்டப் பெற்றதால் ‘கண்டர் சூரியன் திருக்கோபுரம்’ என்னும் பெயரைப் பெற்றது என அறிகிறோம்.
இவனே, கி.பி.1193-ல் மூன்றாவது குலோத்துங்கனின் 16-வது ஆட்சி ஆண்டில் இருப்பு நாராசம் உட்பட ஆயிரத்து நூற்று எண்பத்து இரண்டு பலம் தாரா எடையுள்ள ஐந்து நிலக் குத்து விளக்குகள் இரண்டினைக் கோவிலுக்குத் தானமாகவும் அளித்துள்ளனர். ராஜகோபுரத்தைக் கடந்ததும், இடப்பக்கம் வக்கிரகாளியின் திருக்கோவில் காட்சியளிக்கிறது. அக்கரையில் உள்ளதால் வக்கரைக் காளியாகவும், வக்கிர காளியாகவும் இது விளங்குகிறது.
இந்தச் சிறு கோவிலுக்கு முன்னால் காந்தாரக் கலையழகுடன் கொண்டையிட்ட இரண்டு பாலகியர் நிற்கின்றனர். உருண்டு திரண்ட பொன்மேனி முழுவதையும் கலையழகுடன் காட்டி நிற்கும் இச்சிற்பங்களின் ஒய்யார அழகுக்கு ஒப்புவமையே கூற முடியாது. இயற்கையாக நிற்கும் இந்த எழில் நங்கையரைப் பூமியிலிருந்து வருவது போல், முழங்கால் வரையுள்ள இச்சிற்பங்கள் சிறந்த கலைஞர்களுக்கு ஆழ்ந்த தத்துவங்களைப் போதிக்கின்றன.
நூற்றுக்கால் மண்டபம்
ராஜ கோபுரத்தைக் கட்டிய பாண்டி நாடு கொண்டானான கண்டர் சூரியன் சம்புவராயனே (கி.பி.1179-ல்) இந்த நூற்றுக்கால் மண்டபத்தையும் கட்டினான். அதனால் ‘கண்டர் சூரியன் திருமண்டபம்’ என்று இதற்கு பெயர். அமர்ந்த நிலையில் உள்ள எட்டு சிம்ம தூண்களிடையே இந்த மண்டபம், இரு பக்கமும் இரண்டு சக்கரங்களுடன் இரண்டு குதிரைகள் இழுத்துச் செல்வதைப் போல் தேர் அமைப்பில் இருக்கிறது.
மண்டபத்தின் உட்புறச் சுவரில், ஒரு குதிரையின் மீது வலக்கையில் வாள் ஏந்தி வீரன் ஒருவன் செல்வது போன்ற சிறு சுவர் சிற்பம் உள்ளது. இம்மண்டபத்தையும் ராஜ கோபுரத்தையும் கட்டிய கண்டர் சூரிய சம்புவராயன் சிற்பமாக இது இருக்கலாம்.
திருநந்தி
மண்டபத்தின் தென்புறம் பெரிய நந்தி உள்ளது. பலி பீடத்தை அடுத்து காதுகளை உயர்த்தி சற்று வலப்புறம் சாய்ந்து சிரிக்கும் பாவனையில் உள்ள இந்த நந்தி, ராஜகோபுரத்திற்கும், கருவறைக்கும் நேராக இல்லாமல், வடப்புறமாகச் சற்று நகர்ந்து வக்கிரமாக இருப்பது கவனிக்கத்தக்கது. கொஞ்சம் தள்ளியுள்ள சிறு விநாயகர் கோவிலுள்ள கணபதியின் திருவுருவம் பெரியதாக இருக்கிறது.
கிளிக் கோபுரம்
மூலக் கோவிலின் நுழைவு வாயிலின் முதற்கோபுரம் இதுவே. பின்னர் கோவிலின் முன்புறம் விரிவாக்கப்பட்டு உள்ளது. கட்டப்பட்ட ராஜகோபுரத்தைவிடச் சிறிது. தற்போது ‘கிளிக் கோபுரம்’ என்று அழைக்கப்படுகிறது.
குண்டலி மகரிஷி
வெளிச்சுற்றில் கருவறைக்குத் தென்புறம் ‘குண்டலி மகரிஷி’யின் சமாதியும், சமாதியின் மேல் சிவலிங்கமும், நிறுவப் பட்டுள்ளன. இந்தத் தனிக் கோவிலின் முன்புறமுள்ள துவாரபாலகர் குறிப்பிடத்தக்கவர்.
வக்கிரம் ஆனது ஏன் ?
காளி அம்மன் வக்கிர நிலையில் இருப்பதால்தான் இவள் கோவில் கொண்டி ருக்கும் சந்திரமவுலீஸ்வரர் கோவிலும் வக்கிர நிலையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். பொதுவாக எல்லாக் கோவில்களிலும் கோபுர வாசலில் இருந்து சுவாமியை தரிசனம் செய்யலாம். ஆனால் திருவக்கரைக் கோவிலில் ராஜகோபுரம், கொடி மரம், நந்தி, கருவறையில் குடிகொண்டிருக்கும் சந்திர மவுலீஸ்வரர் ஆகியவை ஒரே நேர்க் கோட்டில் இல்லாமல் ஒன்றை விட்டு ஒன்று விலகி வக்கிர நிலையில் காணப்படுகிறது.
இத்தல காளியின் வக்கிர நிலையினாலேயே தலமும் வக்கிர நிலையில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கோவில் வடிவமைப்பு மட்டுமல்லாமல் சிலைகளும் வக்கிர நிலைகளிலேயே காணப்படுகின்றன.
விநாயகர் தன் துதிக்கையை இடது பக்கத்திற்கு பதிலாக வலப்பக்கமாக சுருட்டி வைத்து கொண்டிருக்கிறார். எல்லாக் கோவில்களிலும் சனி பகவான் வாகனமான காகம் அவருக்கு வலப்புறமாக இருப்பது வழக்கம். ஆனால் இங்கு வழக்கத்துக்கு மாறாக சனி பகவானுடைய இடது புறத்தில் அமைந்து காணப்படுகிறது. இங்குள்ள நந்தி கருவறைக்கும் கொடிமரத்திற்கும் நேராக இல்லாமல் வடப்புறமாகச் சற்று விலகி வக்கிரமான நிலையில் இருக்கிறது.
செல்வது எப்படி ?
திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாக புதுவை செல்லும் பேருந்துப் பாதையில் பெரும்பாக்கம் என்னுமிடத்தில் இறங்கி தெற்கு நோக்கி 7 கி.மீ. தூரம் சென்றால், திருவக்கரையை அடையலாம். திண்டிவனத்திலிருந்து திருவக்கரைக்கு நேரடியாக பேருந்து உள்ளது.
சுந்தர விநாயகர் சன்னதி
இத்திருக்கோவிலின் நேர் எதிர் வீதியில் சுந்தர விநாயகர் சன்னதி தனிக் கோவிலாக அமைந்து காட்சி தருகிறது. இங்கு விநாயகர் சுமார் 10 அடி உயர சிலையாக கம்பீரமாகக் காட்சி தருகின்றார்.
கல்வெட்டுகள்
முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் இருந்து (சாலி வாகன சக ஆண்டு 1352 (கி.பி. 1430)) செம்மந்தை காங்கேயன் வரையுள்ள பல்வேறு மாமன்னர்களும், அவர்தம் தேவிமார்களும், குறுநில மன்னர் களும் அரசு அதிகாரிகளும் செய்வித்த திருப்பணிகளையும், கோவிலுக்கு அளித்த நிமந்தங்களையும், 43 கல்வெட்டுக்கள் விரிவாக எடுத்துச் சொல்கின்றன. ஒவ்வொரு கல்வெட்டும் புதிய வரலாற்றுச் செய்திகளை அருமையாக விளக்குகிறது.
கண்டலிங்கம்
காளிக்கோவில் எதிரில் மேற்கு நோக்கிய நிலையில் ஆத்மலிங்கம் கோவில் உள்ளது. இது கண்டலிங்கம் என்றும் அழைக் கப்படுகிறது. இந்த லிங்கத்தை வக்கிராசூரன் பூஜித்ததால் இதற்கு வக்கிரலிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறுவர்.
இந்த லிங்கம் கோடைக் காலங்களில் குளிர்ச்சியாக இருக்கும். மழைக் காலங்களில் லிங்கம் வெப்பமாகக் காணப்படுமாம். லிங்கத்தின் மேற்பகுதியில் முத்து முத்தான நீர்த்துளிகள் காணப்படும். இந்தக் கோவிலுக்குத் தனி நந்தியும் உண்டு. இது இராசசிம்ம பல்லவன் காலத்திய லிங்கம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
சிவலோகமுடைய பரம சுவாமிகளின் திருக்காட்சி
கருவறையில் போய் நின்றதும், கயிலயங்கிரிக்குள் நிற்கும் உன்னத உணர்வால் உடல் புல்லரிக்கிறது. கார்மலி கொன்றையோடும் கதிர்மத்தமும் வாள் அரவும் நீர் மலியும் சடைமேல் நிரம்பா மதியும் குடி, பிரம்மமா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் சேர்ந்த ஓர் உருவாய் ‘முகலிங்கர்’ காட்சி தருகிறார். வெள்ளியங்கிரி வெற்புடையானே நம் எதிரில் இருப்பது போன்ற உள்ளுணர்ச்சி எழுகிறது.
அம்பிகையின் கோவில்
கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னரே அம்பிகைக்குத் தனிக் கோவில் எடுக்கும் வழக்கம் தமிழகத்தில் வேரூன்றியது. அதன்படி, அருள்மிகு வடிவாம்பிகையின் கோவில் தெற்கு நோக்கித் தனிக் கோவிலாகத் திகழ்கிறது. எட்டு அழகிய தூண்கள் உடைய மண்டபத்தின் கூடிய கோவில், ஒரு தூணில் ‘பின்னால் நடனம்’ ஆடும் இரண்டு பெண்கள் காட்சி அளிக்கின்றனர். அன்னை வடிவாம்பிகை தெற்கு நோக்கி நின்று அருள் புரிகின்றாள். அவளுக்கு நேர் எதிரில் சுடுகாடு இருக்கிறது.
முப்பெரும் பயன்கள்
வக்கிர கிரகங்களால் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள், இத்திருத்தலத்துக்கு வந்து வக்கிரகாளி, வக்கிர லிங்கம், வக்கிரசனி பகவான் முதலியோரைத் தரிசித்து, வக்கிரமாகக் கட்டப்பட்டுள்ள இந்த வக்கிரக் கோவிலையும் வலம் வந்தால், வக்கிர கிரகங்களின் தொல்லைகளும், துன்பங்களும் நீங்கப் பெற்று வாழ்க்கையில் பயன் அடைவர். வேறெங்கும் எளிதில் காணப்படாத மும்முக லிங்கம், சகஸ்ரலிங்கம், பிரயோக சக்கரத்துடன் தனித்து நிற்கும் திருமால், அற்புத வேலைப்பாடுகள் நிரம்பிய பிரம்மாண்டமான வாயிற் காவலர், ராஜசிம்மன் காலத்திய பதினாறுபட்டை லிங்கம் முதலியவற்றைக் கண்டு மகிழலாம்.
முக்கியத் திருவிழாக்கள்
* மாதாந்திர பவுர்ணமி விழா மற்றும் பிரதி அமாவாசை விழா
* சித்ரா பவுர்ணமி உற்சவம்
* ஆடிக் கிருத்திகை உற்சவம்
* கார்த்திகை தீப உற்சவம்
* தை பூசம் மற்றும் காணும் பொங்கல் உற்சவம்
* தை கிருத்திகை
* தமிழ் வருடப்பிறப்பில் திருக்குளத்தில் தெப்பல் உற்சவம்
* பிரதோஷ உற்சவம்
மேற்காணும் உற்சவங்களைத் தவிர பிரதி பவுர்ணமிதோறும் அருள்மிகு வக்ரகாளியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும், விசேஷ பூஜைகளும், இரவு 12 மணிக்கு ஜோதி பூஜையும் நடைபெறும். ஒவ்வொரு பிரதி மாத பவுர்ணமியன்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும்.
இந்தக் கோவிலில் பிரதி அமாவாசை தினத்தன்றும் ஸ்ரீ வக்ரகாளியம்மன் மற்றும் ஸ்ரீ வரதராஜபெருமாளுக்கு சந்தன காப்பு அலங்காரமும், பகல் 12 மணியளவில் தீப தரிசனமும் நடைபெறும்.
இவ்வாலயத்தில் ஸ்ரீ வக்ரகாளியம்மன் சித்ரா பவுர்ணமி உற்சவத்தன்று இரவு வீதியுலாக்காட்சி, வாணவேடிக்கைகளுடன் அதிவிமர்சையாய் நடைபெறும்.
இத்திருக்கோவில் நடைமுறையில் நெய் தீப தரிசனமே நடைபெறுகிறது. பக்தர்கள் சூடம் வாங்கி வருவதனை தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அபிஷேக விபரங்கள்
1.பால் அபிஷேகம்:-- ரூ-.250
பலன்கள்: எல்லா நலன்களையும் பெற்று நலமுடன் வாழலாம்.
2.அனைத்து அபிஷேகம்:-- ரூ-.1,000
பலன்கள்: தொழிலில் மேன்மை கிடைக்கும். கடன்கள் நீங்கும், கல்வியில் சிறந்து விளங்கலாம், பதவி உயர்வு கிடைக்கும்.
3.சந்தன காப்பு அலங்காரம்:-- ரூ-.2,500
பலன்கள்: ராகு, கேது தோஷம் நீங்கிடும், திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சமூக அந்தஸ்து உயரும்.
தொடர்புக்கு
அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவில்
திருவக்கரை,
வானூர்வட்டம், விழுப்புரம் மாவட்டம், பின்கோடு-604304
Website:www.vakarakaliammantemple.org
E-mail:vakrakaliamman@gmail.com
கோவிலின் பெயர்: அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவில்
கட்டியவர்: ஆதித்திய சோழன் என்னும் சோழ மன்னன்
காலம்: சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
இறைவனின் திருநாமம்: அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர்
தேவாரத் திருப்பெயர்: அருள்மிகு சந்திரசேகர பிறையணி கொன்றயினான்
இறைவியின் திருநாமம்: அருள்மிகு அமிர்தாம்பிகையம்மன்
தேவாரத் திருப்பெயர்: அருள்மிகு வடிவாம்பிகையம்மன்
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: சூரிய புட்கரணி. சந்திர புட்கரணி
ஆறு: வராக நதி (எ) சங்கராபரணி
பூஜை: மூன்று காலம்
நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை
தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் உள்ளன. அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிக, மிக வித்தியாசமானது. தனிச் சிறப்புகள் அதிகம் கொண்டது.
இந்த ஆலயத்துக்குள் யார் ஒருவர் காலடி எடுத்து வைக்கிறாரோ, அவரது ஜாதகத்தில் உள்ள அனைத்து வக்கிரத் தோஷங்களும் அடுத்த நிமிடமே தவிடு பொடியாகி விடும் என்பது ஜதீகம். சிவாலயமாக இருந்த போதிலும் காளியின் சிறப்பு காரணமாகவும் இந்த தலம் சக்தி தலங்களில் ஒன்றாக புகழ் பெற்று திகழ்கிறது.
பழமையும், பெருமையும் வாய்ந்த திருவக்கரை என்னும் இத்திருத்தலம் தொண்டை நாட்டிலுள்ள 32 சிவத்தலங்களுள் 30-வது தலமாகும். 7-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இத்திருக்கோவில் சமயக்குரவர் நால்வருள் பார்வதி தேவியிடம் ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்புடையது.
அமைவிடம்
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருவக்கரை கிராமத்தில் அமைந்துள்ளது இத்திருத்தலம். திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி என எந்த நகரத்திலிருந்து வந்தாலும் சுமார் 27 கி.மீ. தொலைவில் திருவக்கரை அமைந்துள்ளது. திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாக புதுச்சேரி செல்லும் பேருந்துப் பாதையில் பெரும்பாக்கம் என்னும் இடத்தில் இறங்கி தெற்கு நோக்கி 10 கி.மீ. தூரம் சென்றால் திருவக்கரையை அடையலாம்.
அதே போல் விழுப்புரத்திலிருந்து திருக்கனூர் வழியாக புதுச்சேரி செல்லும் வழியில் திருக்கனூர் என்னும் இடத்தில் இறங்கி வடக்கு நோக்கி சுமார் 5 கி.மீ. சென்றாலும் இக்கோவிலை அடையலாம். ‘வராக நதி’ என்று அழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின் வடகரையில் ஏழு நிலை ராஜகோபுரத்துடன் சுமார் பத்து ஏக்கர் நிலப்பரப்பில் கிழக்கு நோக்கி இக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் இத்தல இறைவன் சந்திரமவுலீஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார். இவர் எங்கும் காண முடியாத அரியவகையான மூன்று முகலிங்கமாக அருள்பாலிக்கின்றார்.
ராஜகோபுரத்தின் வழியாக நுழைந்தவுடன் வடக்கு நோக்கிய வக்கிரகாளியம்மன் சன்னதி அமைந்துள்ளது. வழிபட்டால் நம்மை வாழ வைக்கும் தாய் இவள். இதற்கு அருகே மேற்கு நோக்கி வக்கிராசுரன் வழிபட்ட வக்ரலிங்கம் சன்னதி உள்ளது. மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவன் சன்னதி அரிதாகவே காணப்படும். இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
காளி சன்னதியிலிருந்து உள்ளே மூலவர் சன்னதிக்கு செல்லும் வழியில் வலதுபுறம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. நேரே பெரிய வடிவில் திருநந்தி அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் ராஜகோபுரம், திருநந்தி, கொடிமரம், மூலவர் சன்னதி முதலியன நேர்கோட்டில் அமையாமல் ஒன்றைவிட்டு ஒன்று விலகி அமைந்திருக்கும் அமைப்பை வேறு எங்கும் காண முடியாது.
திருநந்தியை கடந்து கிளிகோபுரம் வழியாக மூலவர் சன்னதிக்குச் செல்ல வேண்டும். மூலவர் சன்னதிக்கு வடப்புறம் கிளிகோபுரம் அருகே அம்பாள் வடிவுடையம்மன் தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றாள். தென் திசையில் குணடலினி மாமுனிவர் ஜீவசமாதி அடைந்த சன்னதி உள்ளது.
கருவறைக்குப் பின்புறம் வக்கிராசுரனை வதம் செய்த வரதராஜபெருமாள் தாயார் இன்றி தனியாக பிரயோகச் சக்கரத்துடன் வீற்றிருக்கின்றார். இக்கோவிலில் நடராஜ பெருமாள் கால்மாற்றி வக்ரதாண்டவம் ஆடிய திருக்கோலத்தைக் காணலாம். இங்கு நவகிரக சன்னதியில் தெற்கு திரும்பிய காக வாகனத்தில் நின்ற வக்ரசனியைக் காணலாம். இத்திருக்கோவில் அமைப்பு, உறையும் இறைவன் மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்தும் வக்கிர நிலையில் அமைந்து அருள்புரிகின்றனர்.
இத்திருக்கோவில் ஆதித்ய சோழன் என்னும் சோழ மன்னரால் ஏறக்குறைய 2000-ம் ஆண்டுகளுக்கு முன் செங்கற்களால் கட்டப்பட்டது எனத் தெரிகிறது. பின்னர் கி.பி.907 முதல் கி.பி.953 வரையுள்ள காலகட்டத்தில் வாழ்ந்த, சிவபக்தனாக விளங்கிய முதலாம் பராந்தகச் சோழனின் மகனான கண்டராதித்தச் சோழனால் கி.பி.950 முதல் கி.பி.957 முடிய உள்ள காலத்தில் திருக்கோவில் கோபுரம் கட்டுவிக்கப்பட்டு அவன் பெயரிலேயே கண்டராதித்தன் ‘‘திருக்கோபுரம்’’ எனவும் ‘‘கண்டர் சூரியன் திருக்கோபுரம்’’ எனவும் வழங்கப்பட்டதாக வரலாற்றுச் செய்தி கூறுகிறது.
கண்டராதித்தனின் மனைவியான செம்பியன் மாதேவியார் பாடல் பெற்றகோவில்களான திருத்துருத்தி, திருக்கோடிக்கா, திருமுதுக்குன்றம், தென்குரங்காடு துறைபோன்ற கோவில்களைக் கற்றளியாக்கி திருப்பணி செய்துள்ளார். அதே போல திருவக்கரை திருத்தலத்தையும் கற்றளியாக்கி சிறந்ததொரு திருப்பணி செய்துள்ளார். கோவில்களுக்கு தானங்கள்பலவும் செய்துள்ளதை வரலாற்றுச் செய்தி மூலம் அறிய முடிகிறது. மாதேவியாரின் அரிய திருப்பணியால் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் திருக்கோவிலோடு சேர்ந்து அவரது பெயரும் புகழோடு நிலைத்து நிற்கின்றது.
திருவக்கரை கோவிலின் சிறப்புகள்
* இத்திருக்கோவிலில் ராஜகோபுரம், நந்தி, கொடிமரம், மூலஸ்தானம் முதலியன நேர்கோட்டில் அமையவில்லை.
* இத்திருக்கோவிலில் இறைவன் மூன்று முகலிங்கமாக காட்சி தருகின்றார்.
* பிரதான சிவத்தலமான இத்திருத்தலத்தில் வரதராஜ பெருமாள் சன்னதி அமைந்துள்ளது ஒரு தனிச் சிறப்பாகும்.
* குண்டலினி சித்தர் ஜீவசமாதி அமைந்துள்ள பெருமையுடையது இத்திருக்கோவில்.
* இத்திருக்கோவிலில் எட்டு திருக்கரங்களுடன் அஷ்டபுஜ துர்க்கை காட்சி தருகின்றார்.
* சமயக்குரவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்புடையது இத்திருக்கோவில்.
* பிரார்த்தனைத் தலமாக விளங்குகின்றது இத்திருக்கோவில்.
* சனிபகவான் வாகனமான காகம் எல்லாத் தலங்களிலும் அவருக்கு வலப்புறமாக இருக்கும். ஆனால் இங்கு அவருக்கு இடப்புறமாக அமைந்து வக்கிரமாக காட்சியளிக்கிறது.
* உலகத்தை ரட்சிக்கும் ஜகன்மாதா இங்கு வக்கிரகாளியாக நமக்கெல்லாம் சரணாகதித் தத்துவத்தை உணர்த்தி அருள்புரியும் திருக்கோலம் ஒரு தனிச்சிறப்பாகும்.
பிரார்த்தனை பலன்கள்
வக்கிரமாக அமையப்பெற்ற கிரகங்களால் வாழ்க்கை பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வக்கிரமாக அமையப்பெற்ற தெய்வங்களை வழிபட்டு, வக்கிரமாக கட்டப்பட்டுள்ள இக்கோவிலை வலம் வந்தால் துன்பங்கள் நீங்கப்பெற்று வாழ்க்கையில் பயனடைவர். இது வக்கிரதோஷ நிவர்த்தி தலமாகும்.
திருமணமாகாதவர், பிள்ளைப்பேறு அற்றவர் இக்கோவிலில் உள்ள துர்க்கை அம்மனை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் பூஜை செய்து வந்தால் குறைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
நினைத்த காரியம் கைகூட வேண்டுமென்போர் பவுர்ணமி தினத்தன்று வக்கிரகாளி அம்மனை தொடர்ந்து இடைவிடாது மூன்று மாத பவுர்ணமி அன்று தரிசித்து வந்தால் எண்ணிய காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. அதனாலேயே இரவு 12.00 மணிக்கு நடைபெறும் ஜோதி தரிசனத்தில் கலந்து கொள்வதற்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து பலன் பெற்று வருகின்றார்கள். கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பயனடைகிறார்கள்.
இத்திருக்கோவில் தனியாக அமைந்துள்ள தீப லட்சுமியின் திருக்கோவிலில் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் ராகு காலத்தில் விளக்கேற்றி இந்த அம்மனை கும்பிட்டு மாங்கல்யம் கட்டி பிரார்த்தனை செய்தால் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.
ஆலய தலவரலாறு
முன் காலத்தில் இத்தலத்துக்கு வக்கிரபுரி என்று பெயர் இருந்தது. குண்டல மகரிஷி என்ற முனிவர் வாழ்ந்து இங்கே சமாதி யாகிஇருக்கிறார். அவருடைய பேரனான வக்கிரா சூரனும் அவனுடைய சகோதரி துர்முகியும் சிவ பக்தர்கள். அரியவரம் பெறுவதற்காக நீண்ட நாட்கள் கடுந்தவம் புரிந்தான் வக்கிராசூரன். முடிவில் ஈஸ்வரன் தோன்றி வேண்டும் வரம் யாது என்று கேட்டார். தேவர் மூவரால் அழியாமலும், சிவலிங்கத்தை எப்போதும் தன் கண்டத்தில் வைத்திருக்கவும் வரம் கேட்டான்.
அப்போது ஈஸ்வரன் அசைவ உணவு நமக்காகாதே என்றார். காலையில் பூஜை செய்து உணவு உண்ட பிறகே சிவலிங்கத்தை கண்டத்தில் வைப்பேன் என்றான் அசுரன். சர்வேஸ்வரன் அவன் கேட்ட வரம் அளித்தார். வரம் பெற்றதும் தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் பிரம்மாவிடம் செல்ல, அவர் தேவர்களுடன் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர்.
உமையவள்தான் சாமுண்டியாக 16 கலைகளுடன் வராகி, இந்திராணி,கவுமாரி, சாமுண்டி, மகேஸ்வரி, வைணவி, பிராமி எனும் சப்தமாதர்களாகத் தோன்றி எட்டு திருக்கரங்களுடன் சூலம், வில், வாள், ஈட்டி, இருப்புலக்கை, தோமரம், பாசம், அங்குசம், பரசு ஆகிய ஆயுதங்களுடன் தோன்றி அழிக்கத்தக்கவள். அவன் பெண்களால் அழிய வரம் பெறவில்லை.
அவன் லிங்கத்தை கண்டத்தில் வைத்திருக்கும்போது கொல்ல முடியாது. அசைவ உணவு உண்ண கடல்வழி செல்லும் போது அசுரன் தன் தங்கை காவலில் கண்டலிங்கத்தை வைப்பான். அப்போது அசுரனின் சகோதரியை முதலில் அழித்து பின் அவனையும் அழிக்கவேண்டும் என்று மகாவிஷ்ணு குறிப்பிட்டார்.
அதன்படி ஈஸ்வரியை அழைத்து மகாவிஷ்ணு கொல்லும் வழிமுறைகளைக் கூறினார். ஈஸ்வரியும் 16 கலைகளுடன் பேருருவெடுத்து மகாவிஷ்ணு யோசனைப் படி வக்கிர துர்முகியை அழித்து, பின்னர் வக்கிராசூரனை அழித்து பதினாறு கலைகளுடன் ராஜகோபுரத்தின் சமீபமாக வடக்கு முகமாக அமர்ந்தால் அருள்மிகு வக்கிரகாளி என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
வக்கிராசூரன் வழிபட்டதால் இத்தலம் திருவக்கரை எனப்பெயர் பெற்றது. மூலலிங்கம் முகலிங்கமாக அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வடக்கு முகமான காளியின் எதிரில் வக்கிராசூரன் சிலை உள்ளது. அவன் கண்டத்தில் வைத்திருந்ததால் கண்டலிங்கம் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
திருவக்கரை தேவார பாடல் பெற்ற தலமாகும். இது திண்டிவனத்தில் இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது. புதுச்சேரி செல்லும் பாதையில் பெரும்பாக்கம் சென்று தெற்கில் 10 கி.மீ செல்ல வேண்டும்.
வடிவாம்பிகையின் பேசும் தோற்றம்
புன்முறுவல் பூக்க, அபயகரத்துடன் விளங்கும் அன்னை வடிவாம்பிகையின் வடிவழகைச் சொல்லி முடியாது. காலத்தின் கோலத்தினால் மங்கிய வெளிச்சத்திலும் அன்னையின் அருள் திருமுகத்தைப்பார்த்தால் கருணையும் பரிவும் தாண்டவமாடுவதைக் காண்கிறோம்.
சற்று உற்றுப்பார்த்தால் அன்னை பேசுவது போலவும் மூக்குப்புல்லாக்கு ஆடுவது போலவும் தோன்றி மெய்சிலிர்க்கிறது. சுமார் நான்கு அடி உயரத்தில் விளங்கும் அன்னையின் எழிலையும் அருளையும் கண்டு உய்யவாவது இந்த தலத்தைப்போய்ப்பார்க்க வேண்டும். அன்னையின் சன்னதி தெற்குப் பார்த்தது. பெரும்பாலான திருக்கோயில்களில் கிழக்கு நோக்கி காட்சி தரும் தேவி, இங்கு திருவெற்றியூர் வடிவுடையம்மைப் போல தெற்கு நோக்கி காட்சி தருகின்றாள். இச்சன்னதியின் முன்மண்டபம் அழகிய எட்டு தூண்களால் ஆனது. இச்சன்னதியில் இடப்புறம் பள்ளியறை உள்ளது. சந்திரசேகரர் கிழக்குப்பார்த்து எழுந்தருளியிருக்கிறார்.
அன்னை துர்க்கையின் உருவம் கருத்தைக் கவருகிறது. ஐந்து அடிக்கு மேல் உயரமுள்ள சிற்பத்தில் உள்ள அஷ்ட புஜங்கள் மகிஷனின் தலைமேல் லாவகமாக நிற்கிற கோலம் மிக அழகியது. மிகவும் சக்தி வாய்ந்த துர்க்கை இவள் என்று கூறுகிறார்கள். இந்த துர்க்கையின் அருளைப் பற்றிப் பலமாகப் பேசுகிறார்கள். சந்திரசேகரரின் சன்னதிக்கும் தெற்குப் பக்கத்தில் வக்கிராசுரனுடைய தாத்தா குண்டல மகரிஷியின் சமாதி இருக்கிறது.
அதன் மேல் வக்கிரன் பூஜித்த கண்டலிங்கத்தை ஸ்தாபித்திருக்கிறார்கள். வடக்குபக்கத்தில் ஸஹஸ் ரலிங்கத்துக்குச்சிறிய கோவில் ஒன்று உள்ளது. அதன் பக்கத்தில் வக்கிரனை அழித்த வரதராஜப்பெருமானின் திருக்கோவிலைக்காணலாம். எங்கும் உள்ளது போல் இல்லாமல் திருமாலின் கரத்தில் சக்கரம் பிரயோகப்பாணியில் அமைந்திருக்கிறது. தாயாரின் சந்நிதி தனியாகக் கிடையாது.
ஆலய அமைப்பு
பொதுவாக வேறு எங்கும் அதிகமாகக் காணப் படாத வகையில் கோவிலின் அமைப்பு இருக்கிறது. மிகப் பரந்த நிலப்பரப்பில் கோவில் அமைந்துள்ளது. கருவறைக் கோவிலும் அதைச் சார்ந்த கோவில்களும், மண்டபங்களும், சுற்றுச் சுவர்களும், கோபுரமும் தனியாக அமைந்துள்ளன. தற்போதுள்ள வக்கிரகாளி கோவிலும், வக்கி ரலிங்கம் கோவிலும், சந்திரசேகர் கோவிலுக்கும், கோபுரத்திற்கும் வெளியில் முன்புறத்தில் தனியாக இருந்திருத்தல் வேண்டும். பிற்காலத்தில் இவை இரண்டாவது ராஜாதிராஜன் காலத்தில், புதிய ராஜகோபுரமும், மதிற்சுவரும் எழுதப்பட்டுக் கோவில் முன்புறத்தை விரிவாக்கப்பட்ட போது மூலக் கோவிலுடன் அவைகள் இணைந்துள்ளன.
விண்ணளாவி நிற்கும் பெரிய ராஜகோபுரத்தின் உள்ளே முதலில் நாம் நுழைகிறோம். ராஜகோபுரத்தின் உட்புற மேற்கூரையில் ஒன்பது கட்டங்களின் நடுவில் தாமரையும், சுற்றிலும் அஷ்டதிக்குப் பாலர்களும் தென்படுகின்றனர். ராஜகோபுரத்தின் அடிப்படை கருங்கல்லாலும், மேற்புறம் செங்கல்லாலும் கட்டப்பட்டுள்ளன.
“ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ராஜாதி ராஜ தேவர்க்கு யாண்டு ஏழாவது திருவக்கரை ஆளுடையார் கோவிலில் இத்திரு கோபுரங் கண்டர் சூரியன் திரு கோபுரமென்னும் பெயரால் செய்வித்தான். அம்மை அப்பன் பாண்டி நாடு கொண்டானான கண்டர் சூரியன் சம்புவராயன்” எனும் கல் வெட்டிலிருந்து, இந்தக் கோபுரம் கண்டர் சூரியன் சம்புவராயனால் கட்டப் பெற்றதால் ‘கண்டர் சூரியன் திருக்கோபுரம்’ என்னும் பெயரைப் பெற்றது என அறிகிறோம்.
இவனே, கி.பி.1193-ல் மூன்றாவது குலோத்துங்கனின் 16-வது ஆட்சி ஆண்டில் இருப்பு நாராசம் உட்பட ஆயிரத்து நூற்று எண்பத்து இரண்டு பலம் தாரா எடையுள்ள ஐந்து நிலக் குத்து விளக்குகள் இரண்டினைக் கோவிலுக்குத் தானமாகவும் அளித்துள்ளனர். ராஜகோபுரத்தைக் கடந்ததும், இடப்பக்கம் வக்கிரகாளியின் திருக்கோவில் காட்சியளிக்கிறது. அக்கரையில் உள்ளதால் வக்கரைக் காளியாகவும், வக்கிர காளியாகவும் இது விளங்குகிறது.
இந்தச் சிறு கோவிலுக்கு முன்னால் காந்தாரக் கலையழகுடன் கொண்டையிட்ட இரண்டு பாலகியர் நிற்கின்றனர். உருண்டு திரண்ட பொன்மேனி முழுவதையும் கலையழகுடன் காட்டி நிற்கும் இச்சிற்பங்களின் ஒய்யார அழகுக்கு ஒப்புவமையே கூற முடியாது. இயற்கையாக நிற்கும் இந்த எழில் நங்கையரைப் பூமியிலிருந்து வருவது போல், முழங்கால் வரையுள்ள இச்சிற்பங்கள் சிறந்த கலைஞர்களுக்கு ஆழ்ந்த தத்துவங்களைப் போதிக்கின்றன.
நூற்றுக்கால் மண்டபம்
ராஜ கோபுரத்தைக் கட்டிய பாண்டி நாடு கொண்டானான கண்டர் சூரியன் சம்புவராயனே (கி.பி.1179-ல்) இந்த நூற்றுக்கால் மண்டபத்தையும் கட்டினான். அதனால் ‘கண்டர் சூரியன் திருமண்டபம்’ என்று இதற்கு பெயர். அமர்ந்த நிலையில் உள்ள எட்டு சிம்ம தூண்களிடையே இந்த மண்டபம், இரு பக்கமும் இரண்டு சக்கரங்களுடன் இரண்டு குதிரைகள் இழுத்துச் செல்வதைப் போல் தேர் அமைப்பில் இருக்கிறது.
மண்டபத்தின் உட்புறச் சுவரில், ஒரு குதிரையின் மீது வலக்கையில் வாள் ஏந்தி வீரன் ஒருவன் செல்வது போன்ற சிறு சுவர் சிற்பம் உள்ளது. இம்மண்டபத்தையும் ராஜ கோபுரத்தையும் கட்டிய கண்டர் சூரிய சம்புவராயன் சிற்பமாக இது இருக்கலாம்.
திருநந்தி
மண்டபத்தின் தென்புறம் பெரிய நந்தி உள்ளது. பலி பீடத்தை அடுத்து காதுகளை உயர்த்தி சற்று வலப்புறம் சாய்ந்து சிரிக்கும் பாவனையில் உள்ள இந்த நந்தி, ராஜகோபுரத்திற்கும், கருவறைக்கும் நேராக இல்லாமல், வடப்புறமாகச் சற்று நகர்ந்து வக்கிரமாக இருப்பது கவனிக்கத்தக்கது. கொஞ்சம் தள்ளியுள்ள சிறு விநாயகர் கோவிலுள்ள கணபதியின் திருவுருவம் பெரியதாக இருக்கிறது.
கிளிக் கோபுரம்
மூலக் கோவிலின் நுழைவு வாயிலின் முதற்கோபுரம் இதுவே. பின்னர் கோவிலின் முன்புறம் விரிவாக்கப்பட்டு உள்ளது. கட்டப்பட்ட ராஜகோபுரத்தைவிடச் சிறிது. தற்போது ‘கிளிக் கோபுரம்’ என்று அழைக்கப்படுகிறது.
குண்டலி மகரிஷி
வெளிச்சுற்றில் கருவறைக்குத் தென்புறம் ‘குண்டலி மகரிஷி’யின் சமாதியும், சமாதியின் மேல் சிவலிங்கமும், நிறுவப் பட்டுள்ளன. இந்தத் தனிக் கோவிலின் முன்புறமுள்ள துவாரபாலகர் குறிப்பிடத்தக்கவர்.
வக்கிரம் ஆனது ஏன் ?
காளி அம்மன் வக்கிர நிலையில் இருப்பதால்தான் இவள் கோவில் கொண்டி ருக்கும் சந்திரமவுலீஸ்வரர் கோவிலும் வக்கிர நிலையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். பொதுவாக எல்லாக் கோவில்களிலும் கோபுர வாசலில் இருந்து சுவாமியை தரிசனம் செய்யலாம். ஆனால் திருவக்கரைக் கோவிலில் ராஜகோபுரம், கொடி மரம், நந்தி, கருவறையில் குடிகொண்டிருக்கும் சந்திர மவுலீஸ்வரர் ஆகியவை ஒரே நேர்க் கோட்டில் இல்லாமல் ஒன்றை விட்டு ஒன்று விலகி வக்கிர நிலையில் காணப்படுகிறது.
இத்தல காளியின் வக்கிர நிலையினாலேயே தலமும் வக்கிர நிலையில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கோவில் வடிவமைப்பு மட்டுமல்லாமல் சிலைகளும் வக்கிர நிலைகளிலேயே காணப்படுகின்றன.
விநாயகர் தன் துதிக்கையை இடது பக்கத்திற்கு பதிலாக வலப்பக்கமாக சுருட்டி வைத்து கொண்டிருக்கிறார். எல்லாக் கோவில்களிலும் சனி பகவான் வாகனமான காகம் அவருக்கு வலப்புறமாக இருப்பது வழக்கம். ஆனால் இங்கு வழக்கத்துக்கு மாறாக சனி பகவானுடைய இடது புறத்தில் அமைந்து காணப்படுகிறது. இங்குள்ள நந்தி கருவறைக்கும் கொடிமரத்திற்கும் நேராக இல்லாமல் வடப்புறமாகச் சற்று விலகி வக்கிரமான நிலையில் இருக்கிறது.
செல்வது எப்படி ?
திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாக புதுவை செல்லும் பேருந்துப் பாதையில் பெரும்பாக்கம் என்னுமிடத்தில் இறங்கி தெற்கு நோக்கி 7 கி.மீ. தூரம் சென்றால், திருவக்கரையை அடையலாம். திண்டிவனத்திலிருந்து திருவக்கரைக்கு நேரடியாக பேருந்து உள்ளது.
சுந்தர விநாயகர் சன்னதி
இத்திருக்கோவிலின் நேர் எதிர் வீதியில் சுந்தர விநாயகர் சன்னதி தனிக் கோவிலாக அமைந்து காட்சி தருகிறது. இங்கு விநாயகர் சுமார் 10 அடி உயர சிலையாக கம்பீரமாகக் காட்சி தருகின்றார்.
கல்வெட்டுகள்
முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் இருந்து (சாலி வாகன சக ஆண்டு 1352 (கி.பி. 1430)) செம்மந்தை காங்கேயன் வரையுள்ள பல்வேறு மாமன்னர்களும், அவர்தம் தேவிமார்களும், குறுநில மன்னர் களும் அரசு அதிகாரிகளும் செய்வித்த திருப்பணிகளையும், கோவிலுக்கு அளித்த நிமந்தங்களையும், 43 கல்வெட்டுக்கள் விரிவாக எடுத்துச் சொல்கின்றன. ஒவ்வொரு கல்வெட்டும் புதிய வரலாற்றுச் செய்திகளை அருமையாக விளக்குகிறது.
கண்டலிங்கம்
காளிக்கோவில் எதிரில் மேற்கு நோக்கிய நிலையில் ஆத்மலிங்கம் கோவில் உள்ளது. இது கண்டலிங்கம் என்றும் அழைக் கப்படுகிறது. இந்த லிங்கத்தை வக்கிராசூரன் பூஜித்ததால் இதற்கு வக்கிரலிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறுவர்.
இந்த லிங்கம் கோடைக் காலங்களில் குளிர்ச்சியாக இருக்கும். மழைக் காலங்களில் லிங்கம் வெப்பமாகக் காணப்படுமாம். லிங்கத்தின் மேற்பகுதியில் முத்து முத்தான நீர்த்துளிகள் காணப்படும். இந்தக் கோவிலுக்குத் தனி நந்தியும் உண்டு. இது இராசசிம்ம பல்லவன் காலத்திய லிங்கம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
சிவலோகமுடைய பரம சுவாமிகளின் திருக்காட்சி
கருவறையில் போய் நின்றதும், கயிலயங்கிரிக்குள் நிற்கும் உன்னத உணர்வால் உடல் புல்லரிக்கிறது. கார்மலி கொன்றையோடும் கதிர்மத்தமும் வாள் அரவும் நீர் மலியும் சடைமேல் நிரம்பா மதியும் குடி, பிரம்மமா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் சேர்ந்த ஓர் உருவாய் ‘முகலிங்கர்’ காட்சி தருகிறார். வெள்ளியங்கிரி வெற்புடையானே நம் எதிரில் இருப்பது போன்ற உள்ளுணர்ச்சி எழுகிறது.
அம்பிகையின் கோவில்
கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னரே அம்பிகைக்குத் தனிக் கோவில் எடுக்கும் வழக்கம் தமிழகத்தில் வேரூன்றியது. அதன்படி, அருள்மிகு வடிவாம்பிகையின் கோவில் தெற்கு நோக்கித் தனிக் கோவிலாகத் திகழ்கிறது. எட்டு அழகிய தூண்கள் உடைய மண்டபத்தின் கூடிய கோவில், ஒரு தூணில் ‘பின்னால் நடனம்’ ஆடும் இரண்டு பெண்கள் காட்சி அளிக்கின்றனர். அன்னை வடிவாம்பிகை தெற்கு நோக்கி நின்று அருள் புரிகின்றாள். அவளுக்கு நேர் எதிரில் சுடுகாடு இருக்கிறது.
முப்பெரும் பயன்கள்
வக்கிர கிரகங்களால் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள், இத்திருத்தலத்துக்கு வந்து வக்கிரகாளி, வக்கிர லிங்கம், வக்கிரசனி பகவான் முதலியோரைத் தரிசித்து, வக்கிரமாகக் கட்டப்பட்டுள்ள இந்த வக்கிரக் கோவிலையும் வலம் வந்தால், வக்கிர கிரகங்களின் தொல்லைகளும், துன்பங்களும் நீங்கப் பெற்று வாழ்க்கையில் பயன் அடைவர். வேறெங்கும் எளிதில் காணப்படாத மும்முக லிங்கம், சகஸ்ரலிங்கம், பிரயோக சக்கரத்துடன் தனித்து நிற்கும் திருமால், அற்புத வேலைப்பாடுகள் நிரம்பிய பிரம்மாண்டமான வாயிற் காவலர், ராஜசிம்மன் காலத்திய பதினாறுபட்டை லிங்கம் முதலியவற்றைக் கண்டு மகிழலாம்.
முக்கியத் திருவிழாக்கள்
* மாதாந்திர பவுர்ணமி விழா மற்றும் பிரதி அமாவாசை விழா
* சித்ரா பவுர்ணமி உற்சவம்
* ஆடிக் கிருத்திகை உற்சவம்
* கார்த்திகை தீப உற்சவம்
* தை பூசம் மற்றும் காணும் பொங்கல் உற்சவம்
* தை கிருத்திகை
* தமிழ் வருடப்பிறப்பில் திருக்குளத்தில் தெப்பல் உற்சவம்
* பிரதோஷ உற்சவம்
மேற்காணும் உற்சவங்களைத் தவிர பிரதி பவுர்ணமிதோறும் அருள்மிகு வக்ரகாளியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும், விசேஷ பூஜைகளும், இரவு 12 மணிக்கு ஜோதி பூஜையும் நடைபெறும். ஒவ்வொரு பிரதி மாத பவுர்ணமியன்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும்.
இந்தக் கோவிலில் பிரதி அமாவாசை தினத்தன்றும் ஸ்ரீ வக்ரகாளியம்மன் மற்றும் ஸ்ரீ வரதராஜபெருமாளுக்கு சந்தன காப்பு அலங்காரமும், பகல் 12 மணியளவில் தீப தரிசனமும் நடைபெறும்.
இவ்வாலயத்தில் ஸ்ரீ வக்ரகாளியம்மன் சித்ரா பவுர்ணமி உற்சவத்தன்று இரவு வீதியுலாக்காட்சி, வாணவேடிக்கைகளுடன் அதிவிமர்சையாய் நடைபெறும்.
இத்திருக்கோவில் நடைமுறையில் நெய் தீப தரிசனமே நடைபெறுகிறது. பக்தர்கள் சூடம் வாங்கி வருவதனை தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அபிஷேக விபரங்கள்
1.பால் அபிஷேகம்:-- ரூ-.250
பலன்கள்: எல்லா நலன்களையும் பெற்று நலமுடன் வாழலாம்.
2.அனைத்து அபிஷேகம்:-- ரூ-.1,000
பலன்கள்: தொழிலில் மேன்மை கிடைக்கும். கடன்கள் நீங்கும், கல்வியில் சிறந்து விளங்கலாம், பதவி உயர்வு கிடைக்கும்.
3.சந்தன காப்பு அலங்காரம்:-- ரூ-.2,500
பலன்கள்: ராகு, கேது தோஷம் நீங்கிடும், திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சமூக அந்தஸ்து உயரும்.
தொடர்புக்கு
அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவில்
திருவக்கரை,
வானூர்வட்டம், விழுப்புரம் மாவட்டம், பின்கோடு-604304
Website:www.vakarakaliammantemple.org
E-mail:vakrakaliamman@gmail.com
இந்தியாவில் ஏராளமான சிவன் கோவில்கள் அவற்றில் பாடல்பெற்ற சிவஸ்தலங்களாக போற்றப்படும் 274 ஆலயங்களில், 264 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன. அவற்றுள் சிறப்பு மிக்க சிவாலயங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் ஏராளமான சிவன் கோவில்கள் இருக்கின்றன. இருப்பினும் அவற்றில் பாடல்பெற்ற சிவஸ்தலங்களாக போற்றப்படும் 274 ஆலயங்களில், 264 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன. இந்த ஆலயங்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் கொண்டவை. இவற்றில் பல கோவில்கள் சுயம்பு லிங்கங்களை மூலவராக கொண்டது என்பது சிறப்புக்குரியது. சிறப்பு மிக்க சிவாலயங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்
காஞ்சீபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் பஞ்சபூத தலங்களில் நிலம் என்று குறிப்பிடப்படுகிறது. பஞ்சபூத தலங்களில் முதல் தலமான இந்த ஆலயத்தில் காமாட்சி அம்மன் பூசித்த மணல், லிங்கமே மூலவராக இருக்கிறது. அன்னையின் தவத்தை சோதிக்க விரும்பிய இறைவன், மணல் லிங்கம் செய்து வழிபட்டு வந்த இடத்தில் வெள்ளத்தை உருவாக்கினார். வெள்ளத்தில் லிங்கம் அடித்துச் சென்று விடாமல் இருக்க அம்மன், லிங்கத்தை இரு கைகளாலும் தழுவிக்கொண்டதாக தல வரலாறு சொல்கிறது. இப்போதும் இந்த லிங்கத்தில் அன்னை இறுக தழுவிய கைத் தடம் இருப்பதைக் காணலாம். இங்குள்ள ஒற்றை மாமரம் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த மரத்தில் இருந்து நான்கு வகையாக (வேதங்கள்) சுவை கொண்ட கனிகள் கிடைக்கின்றன.
பாஸ்கரேஸ்வரர் கோவில்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் இருக்கிறது பாஸ்கரேஸ்வரர் திருக்கோவில். சிவபெருமானின் சன்னிதிக்கு எதிரில் நின்று சூரிய பகவான் தரிசனம் செய்யும் கோலத்தை, இந்த ஆலயத்தைத் தவிர வேறு எங்கும் காண முடியாது என்கிறார்கள். இந்த ஆலயம் பிதுர் தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திர நாட்கள், சிம்ம லக்னம், சிம்ம ராசி, சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதத்தின் முதல் தேதியில் பிறந்தவர்கள், வளர்பிறையில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் இங்குள்ள சிவபெருமானையும், சூரிய பகவானையும் வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். மேலும் நீண்டநாள் நோய் நீங்குமாம். இந்த ஆலயத்தில் சஷ்டி பூர்த்தி செய்பவர்களின் ஆயுள் நீடிக்கும் என்றும் கூறுகிறார்கள்.
புஷ்பவனேஸ்வரர் ஆலயம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் என்ற ஊரில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது, புஷ்பவனேஸ்வரர் கோவில். இத்தல இறைவன் புஷ்பவனேஸ்வரர், புவனநாதர் என்று அழைக்கப்படுகிறார். காசி நகரை விடவும், 16 மடங்கு புண்ணியம் தரும் தலமாக இது போற்றப்படுகிறது. இங்குள்ள வைகை ஆற்றில் இறந்தவர்களின் அஸ்தியை கரைத்து, மோட்ச தீபம் ஏற்றுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆலயத்தில் மூலவருக்கு எதிராக உள்ள நந்தி சற்று விலகியிருப்பது தனிச் சிறப்பாகும். திருமணத் தடை விலக, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, இத்தல இறைவனை வழிபடலாம். சரியாக பேச்சு வராதவர்களுக்காகவும், கலைகளில் சிறந்து விளங்கவும், ஆயுள் விருத்திக்காகவும் இந்த ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
சதுரகிரி மலைக்கோவில்
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோவில் தான், சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி ஆலயம் ஆகும். இந்த ஆலயத்திற்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியில் இருந்தும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் இருந்தும், தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் இருந்தும் மலைப் பாதைகள் உள்ளன. பழனி மலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும், நவபாஷண முருகனின் சிலையை, சதுரகிரி மலையில் தங்கியிருந்த காலத்தில் தான் போகர் சித்தர் உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. இந்த மலை சித்தர்கள் பலரும் உலவும் புண்ணிய பூமியாக திகழ்கிறது. இங்குள்ள மலை அருவி நீரும், மூலிகைகளும் நோய்களை தீர்க்கவல்ல அருமருந்துகள்.
கும்பேஸ்வரர் திருத்தலம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளது கும்பேஸ்வரர் கோவில். இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம், கீழே பருத்தும், மேல செல்லச் செல்ல ஊசி போன்ற வடிவிலும் காணப்படுகிறது. இந்த ஆலயத்தில் கல் நாதஸ்வரம் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா இங்கு நடைபெறும் விழாக்களில் பிரசித்திப் பெற்றதாகும். புதியதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள், குபேர வாழ்வு வேண்டுபவர்கள், இத்தலத்தில் அருள்பாலிக்கும் மங்களநாயகி அம்மனுக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டிய பலன் கிடைக்கும்.
சோசமேஸ்வரர் திருக்கோவில்
கும்பகோணத்தில் இருந்து உடையாளூர் செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர் தொலைவில் கீழ்ப்பழையறை என்ற ஊர் இருக்கிறது. இங்கு சோமகலாம்பிகை சமேத சோமேஸ்வரர் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். சோழ மன்னர்களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கிய திருத்தலம் இதுவாகும். வடதளியில் மற்றொரு மதத்தவரால் மறைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தை, அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர், உண்ணா நோன்பிருந்து மீட்ட சிறப்புக்குரிய திருத்தலம். மங்கையர்கரசியார், அமர்நீதி நாயனார் ஆகியோர் சிவனடியார்களுக்கு அருள்பணி புரிந்த தலம் இது. இந்த ஆலய இறைவனை, சோமன் என்று அழைக்கப்படும் சந்திரனும், குரு பகவானும் பூசித்து பேறு பெற்றுள்ளனர்.
திருமேனிநாதர் ஆலயம்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ளது திருமேனிநாதர் திருக்கோவில். இங்கு இறைவன் திருமணக் கோலத்தில் அருள்வதால், இந்த ஆலயத்தில் வைத்து திருமணம் செய்து கொள்வது சிறப்புக்குரிய விஷயமாகும். மேலும் திருமண வரம் கிடைக்கவும் இத்தல இறைவனை வழிபடலாம். பிரளய காலத்தின் போது ஏற்பட்ட வெள்ளத்தை தடுத்த இடம். இங்கு சிவபெருமானே, ‘கயிலாயத்தை விட சிறந்த இடம் இது’ என்று கருதி அருள்பாலிப்பதாக சொல்லப்படுகிறது. இத்தலத்தில் சிவராத்திரி அன்று வில்வ இலையைக் கொண்டு இறைவனை அர்ச்சித்து வழிபட்டால், அனைத்து தலங்களிலும் உள்ள சிவபெருமானை ஆயிரம் வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
சுவேதாரண்யேஸ்வரர் கோவில்
நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தியாவில் காசிக்கு நிகரான தலங்கள் ஆறு இருப்பதாகவும், அதில் ஒன்று இந்த ஆலயம் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்பாலிக்கிறார். சிவபெருமானின் 1008 நடனங்களையும் ஆடிய திருத்தலம் இது என்பதால், ‘ஆதி சிதம்பரம்’ என்றும் இந்த ஆலயம் போற்றப்படுகிறது. சிவபெருமானின் 64 வடிவங்களில் 43-வது வடிவம் அகோரமூர்த்தியாகும். இந்த ஆலயத்தின் அகோரமூர்த்தி தரிசனம் சிறப்பு வாய்ந்தது. 21 தலைமுறைக்கான சாபத்தை நீக்கும் வல்லமை இத்தல இறைவனுக்கு உண்டு. இங்குள்ள புதன் பகவானை வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும்.
ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்
காஞ்சீபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் பஞ்சபூத தலங்களில் நிலம் என்று குறிப்பிடப்படுகிறது. பஞ்சபூத தலங்களில் முதல் தலமான இந்த ஆலயத்தில் காமாட்சி அம்மன் பூசித்த மணல், லிங்கமே மூலவராக இருக்கிறது. அன்னையின் தவத்தை சோதிக்க விரும்பிய இறைவன், மணல் லிங்கம் செய்து வழிபட்டு வந்த இடத்தில் வெள்ளத்தை உருவாக்கினார். வெள்ளத்தில் லிங்கம் அடித்துச் சென்று விடாமல் இருக்க அம்மன், லிங்கத்தை இரு கைகளாலும் தழுவிக்கொண்டதாக தல வரலாறு சொல்கிறது. இப்போதும் இந்த லிங்கத்தில் அன்னை இறுக தழுவிய கைத் தடம் இருப்பதைக் காணலாம். இங்குள்ள ஒற்றை மாமரம் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த மரத்தில் இருந்து நான்கு வகையாக (வேதங்கள்) சுவை கொண்ட கனிகள் கிடைக்கின்றன.
பாஸ்கரேஸ்வரர் கோவில்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் இருக்கிறது பாஸ்கரேஸ்வரர் திருக்கோவில். சிவபெருமானின் சன்னிதிக்கு எதிரில் நின்று சூரிய பகவான் தரிசனம் செய்யும் கோலத்தை, இந்த ஆலயத்தைத் தவிர வேறு எங்கும் காண முடியாது என்கிறார்கள். இந்த ஆலயம் பிதுர் தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திர நாட்கள், சிம்ம லக்னம், சிம்ம ராசி, சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதத்தின் முதல் தேதியில் பிறந்தவர்கள், வளர்பிறையில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் இங்குள்ள சிவபெருமானையும், சூரிய பகவானையும் வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். மேலும் நீண்டநாள் நோய் நீங்குமாம். இந்த ஆலயத்தில் சஷ்டி பூர்த்தி செய்பவர்களின் ஆயுள் நீடிக்கும் என்றும் கூறுகிறார்கள்.
புஷ்பவனேஸ்வரர் ஆலயம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் என்ற ஊரில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது, புஷ்பவனேஸ்வரர் கோவில். இத்தல இறைவன் புஷ்பவனேஸ்வரர், புவனநாதர் என்று அழைக்கப்படுகிறார். காசி நகரை விடவும், 16 மடங்கு புண்ணியம் தரும் தலமாக இது போற்றப்படுகிறது. இங்குள்ள வைகை ஆற்றில் இறந்தவர்களின் அஸ்தியை கரைத்து, மோட்ச தீபம் ஏற்றுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆலயத்தில் மூலவருக்கு எதிராக உள்ள நந்தி சற்று விலகியிருப்பது தனிச் சிறப்பாகும். திருமணத் தடை விலக, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, இத்தல இறைவனை வழிபடலாம். சரியாக பேச்சு வராதவர்களுக்காகவும், கலைகளில் சிறந்து விளங்கவும், ஆயுள் விருத்திக்காகவும் இந்த ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
சதுரகிரி மலைக்கோவில்
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோவில் தான், சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி ஆலயம் ஆகும். இந்த ஆலயத்திற்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியில் இருந்தும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் இருந்தும், தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் இருந்தும் மலைப் பாதைகள் உள்ளன. பழனி மலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும், நவபாஷண முருகனின் சிலையை, சதுரகிரி மலையில் தங்கியிருந்த காலத்தில் தான் போகர் சித்தர் உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. இந்த மலை சித்தர்கள் பலரும் உலவும் புண்ணிய பூமியாக திகழ்கிறது. இங்குள்ள மலை அருவி நீரும், மூலிகைகளும் நோய்களை தீர்க்கவல்ல அருமருந்துகள்.
கும்பேஸ்வரர் திருத்தலம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளது கும்பேஸ்வரர் கோவில். இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம், கீழே பருத்தும், மேல செல்லச் செல்ல ஊசி போன்ற வடிவிலும் காணப்படுகிறது. இந்த ஆலயத்தில் கல் நாதஸ்வரம் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா இங்கு நடைபெறும் விழாக்களில் பிரசித்திப் பெற்றதாகும். புதியதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள், குபேர வாழ்வு வேண்டுபவர்கள், இத்தலத்தில் அருள்பாலிக்கும் மங்களநாயகி அம்மனுக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டிய பலன் கிடைக்கும்.
சோசமேஸ்வரர் திருக்கோவில்
கும்பகோணத்தில் இருந்து உடையாளூர் செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர் தொலைவில் கீழ்ப்பழையறை என்ற ஊர் இருக்கிறது. இங்கு சோமகலாம்பிகை சமேத சோமேஸ்வரர் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். சோழ மன்னர்களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கிய திருத்தலம் இதுவாகும். வடதளியில் மற்றொரு மதத்தவரால் மறைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தை, அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர், உண்ணா நோன்பிருந்து மீட்ட சிறப்புக்குரிய திருத்தலம். மங்கையர்கரசியார், அமர்நீதி நாயனார் ஆகியோர் சிவனடியார்களுக்கு அருள்பணி புரிந்த தலம் இது. இந்த ஆலய இறைவனை, சோமன் என்று அழைக்கப்படும் சந்திரனும், குரு பகவானும் பூசித்து பேறு பெற்றுள்ளனர்.
திருமேனிநாதர் ஆலயம்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ளது திருமேனிநாதர் திருக்கோவில். இங்கு இறைவன் திருமணக் கோலத்தில் அருள்வதால், இந்த ஆலயத்தில் வைத்து திருமணம் செய்து கொள்வது சிறப்புக்குரிய விஷயமாகும். மேலும் திருமண வரம் கிடைக்கவும் இத்தல இறைவனை வழிபடலாம். பிரளய காலத்தின் போது ஏற்பட்ட வெள்ளத்தை தடுத்த இடம். இங்கு சிவபெருமானே, ‘கயிலாயத்தை விட சிறந்த இடம் இது’ என்று கருதி அருள்பாலிப்பதாக சொல்லப்படுகிறது. இத்தலத்தில் சிவராத்திரி அன்று வில்வ இலையைக் கொண்டு இறைவனை அர்ச்சித்து வழிபட்டால், அனைத்து தலங்களிலும் உள்ள சிவபெருமானை ஆயிரம் வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
சுவேதாரண்யேஸ்வரர் கோவில்
நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தியாவில் காசிக்கு நிகரான தலங்கள் ஆறு இருப்பதாகவும், அதில் ஒன்று இந்த ஆலயம் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்பாலிக்கிறார். சிவபெருமானின் 1008 நடனங்களையும் ஆடிய திருத்தலம் இது என்பதால், ‘ஆதி சிதம்பரம்’ என்றும் இந்த ஆலயம் போற்றப்படுகிறது. சிவபெருமானின் 64 வடிவங்களில் 43-வது வடிவம் அகோரமூர்த்தியாகும். இந்த ஆலயத்தின் அகோரமூர்த்தி தரிசனம் சிறப்பு வாய்ந்தது. 21 தலைமுறைக்கான சாபத்தை நீக்கும் வல்லமை இத்தல இறைவனுக்கு உண்டு. இங்குள்ள புதன் பகவானை வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும்.
குலசேகரபட்டினத்தில் தெற்கு காரச்சேரியில் அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகர நாதர் கோவில் உள்ளது. இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலூகாவில் உள்ள தெற்கு காரசேரி, தேரோடும் வீதிகள் நிறைந்த பெரும் பட்டணமாக விளங்கியது நல்லூர். பிரமாண்டமான தேர்(கார்) ஓடிய சேரி கார்சேரி என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியில் வடக்கே ஒரு காரசேரி இருந்த காரணத்தினால் இவ்வூர் தெற்கு காரசேரி என்று அழைக்கப்படுகிறது.
குலசேகரபட்டினத்தை தலைமையிடமாக கொண்டு ஆண்டு வந்த குலசேகர பாண்டியன் ஆட்சி காலத்தில் ஒரே நேரத்தில் 9 சிவன் கோவில் கட்டினார். அந்தக் கோவில்களில் ஒரே நேரத்தில் பூஜை செய்தும் மகிழ்ந்தார். குலசேகரபட்டினத்தில் இருந்து திருவாரூர் வரை இந்த 9 கோவில்களும் அமைந்திருந்தது. தெற்கு காரச்சேரியில் அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகர நாதர், கல்லிடைக்குறிச்சி அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகர நாதர் போன்ற கோவில்கள் இந்த வரிசையில் அடங்கும்.
இந்தக் கோவிலின் சிவன் சன்னிதியில் உற்சவர் சிலைகள் வைக்கப்பட்ட அறையில் இருந்து, ஸ்ரீவைகுண்டம் சிவன் கோவிலுக்கு செல்ல சுரங்கப்பாதை உண்டு. தெற்கு காரசேரி ஆலயத்தின் பூஜையை முடித்து விட்டு, குலசேகர மன்னர் இந்த வழியாகத் தான் ஸ்ரீவைகுண்டம் சென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் சில நேரங்களில் எதிரிகளிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ளவும் இந்த சுரங்க பாதையை பயன்படுத்தி உள்ளார்.
இக்கோவில் மிகவும் பிரமாண்டமானது ஆகும். ‘ஒரு சிறு கிராமத்தில் இப்படி ஒரு கோவிலா?’ என நம்மை பிரமிக்க வைக்கிறது. ஆலயத்தின் முன்புறம் பிரமாண்டமான தெப்பக்குளமும், கொடிமரம், பலி பீடம் மற்றும் மிகப்பெரிய நந்தி ஆகியவை வெளிபிரகாரத்தில் உள்ளன. கோவிலின் உள்புறம் நுழைந்தால் அங்கு சிவன் கிழக்கு நோக்கி சற்று இடது புறம் சாய்ந்து, பக்தர்கள் கோரிக்கையை செவிசாய்த்து கேட்கும் விதமாக காட்சியளிக்கிறார். அம்மை குலசேகர நாயகி தெற்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கிறார்.
ஆலயத்தை பிரகார வலம் வந்தால், சுர தேவரும், தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தியும் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். கன்னி மூலையில் விநாயக பெருமான், மறுபுறம் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும் உள்ளனர். விநாயகருக்கும், முருகப்பெருமானுக்கு இடையே காசி விசுவநாதர் - விசாலாட்சி, சோமசுந்தரர்-மீனாட்சி அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள். அதை தொடர்ந்து சண்டிகேஸ்வரர், சனி பகவான், பைரவர், சூரியன், சந்திரன், அதிகாரநந்தி, நவக்கிரகம் என எல்லா தெய்வங்களும் உள்ளன. சுமார் 800 வருடங்களுக்கு முன் இந்த ஊர் மிக பெரிய பட்டினமாக இருந்துள்ளது. அதற்கு பல தடயங்கள் உள்ளன.
குலசேகரபாண்டியன் இந்த கோவில் நலனுக்காக மிகப்பெரிய குளம் ஒன்றை வெட்டினார். அதன் மூலம் பாசனம் பெறும் வண்ணம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் நஞ்சை, புஞ்சை நிலங்களை ஏற்படுத்தினார். அதில் வரும் வருமானத்தின் ஒரு பகுதியைக் கொண்டு கோவிலுக்கு தினமும் 6 கால பூஜை நடக்க ஏற்பாடு செய்துள்ளான்.

ஆனால் தெய்வம் பதில் அளிக்கவில்லை. இதனால் “கோவிலை தரைமட்டம் ஆக்குங்கள்” என்று கூறினான்.
உடனே ஆங்கிலேய படையினர் கோவிலை அடித்து நொறுக்க தயாரானார்கள். அப்போது எதிர்பாராத விதமாக பாறை மீது நின்ற குதிரை, அந்த துரையை கீழே தூக்கி வீசியது. இதில் நிலைகுலைந்து போன துரை கீழே விழுந்தான். குதிரை மறு நிமிடம் தனது காலால் மிதித்து அவனை கொன்று விட்டது. இதனைக் கண்ட மற்ற ஆங்கிலேயர்கள் ஓட்டம் பிடித்தனர். அந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில், தற்போது குதிரையின் கால் தடம் மற்றும் துரையின் கால் தடம், முட்டு, கை தடம் காணப்படுகிறது.
இக்கோவிலில் எல்லா விழாக்களும் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. சித்திரை வருஷ பிறப்பு, வைகாசி விசாகம், பிரதோஷம், சிவராத்திரி, திருவாதிரை, சஷ்டி, திருக்கார்த்திகை, திருக்கல்யாணம் உட்பட அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடந்து வருகிறது. குலசேகர மன்னன், தனக்கு எதிரிகள் மூலம் பிரச்சினை வரும் போதெல்லாம் வெற்றி வேண்டுமென்றால் இக்கோவிலில் வந்து வணங்கி சென்றதாக கூறப்படுகிறது. வெற்றியை பெற்று தரும் கோவிலாக இத்தலம் விளங்கி வருகிறது.
இதனால் அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெறவும், மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறவும் இங்கே வந்து வணங்கி செல்கிறார்கள். மேலும் நீண்டநாள் நோய், விபத்தில் ஏற்பட்ட பெரும் காயம் நீங்கி விடுவதாகவும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இங்குள்ள வள்ளி - தெய்வானை சமேத முருகன் முன்பு திருமணம் முடித்தால், குழந்தைப்பேறு நிச்சயம் என்பது ஐதீகம். இந்தக் கோவில் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம் :
இந்த கோவிலுக்கு நெல்லை - திருச்செந்தூர் மெயின் ரோட்டில் 18 கி.மீ தொலைவில் இருக்கிறது கருங்குளம் விளக்கு. இங்கிருந்து வலது பக்கமாக திரும்பி சென்றால் 6 கிலோமீட்டர் தூரத்தில் தெற்கு காரசேரி உள்ளது. அங்கிருந்து 1 கிலோமீட்டர் ஊருக்குள் சென்றால் கோவில் இருக்கிறது.
குலசேகரபட்டினத்தை தலைமையிடமாக கொண்டு ஆண்டு வந்த குலசேகர பாண்டியன் ஆட்சி காலத்தில் ஒரே நேரத்தில் 9 சிவன் கோவில் கட்டினார். அந்தக் கோவில்களில் ஒரே நேரத்தில் பூஜை செய்தும் மகிழ்ந்தார். குலசேகரபட்டினத்தில் இருந்து திருவாரூர் வரை இந்த 9 கோவில்களும் அமைந்திருந்தது. தெற்கு காரச்சேரியில் அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகர நாதர், கல்லிடைக்குறிச்சி அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகர நாதர் போன்ற கோவில்கள் இந்த வரிசையில் அடங்கும்.
இந்தக் கோவிலின் சிவன் சன்னிதியில் உற்சவர் சிலைகள் வைக்கப்பட்ட அறையில் இருந்து, ஸ்ரீவைகுண்டம் சிவன் கோவிலுக்கு செல்ல சுரங்கப்பாதை உண்டு. தெற்கு காரசேரி ஆலயத்தின் பூஜையை முடித்து விட்டு, குலசேகர மன்னர் இந்த வழியாகத் தான் ஸ்ரீவைகுண்டம் சென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் சில நேரங்களில் எதிரிகளிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ளவும் இந்த சுரங்க பாதையை பயன்படுத்தி உள்ளார்.
இக்கோவில் மிகவும் பிரமாண்டமானது ஆகும். ‘ஒரு சிறு கிராமத்தில் இப்படி ஒரு கோவிலா?’ என நம்மை பிரமிக்க வைக்கிறது. ஆலயத்தின் முன்புறம் பிரமாண்டமான தெப்பக்குளமும், கொடிமரம், பலி பீடம் மற்றும் மிகப்பெரிய நந்தி ஆகியவை வெளிபிரகாரத்தில் உள்ளன. கோவிலின் உள்புறம் நுழைந்தால் அங்கு சிவன் கிழக்கு நோக்கி சற்று இடது புறம் சாய்ந்து, பக்தர்கள் கோரிக்கையை செவிசாய்த்து கேட்கும் விதமாக காட்சியளிக்கிறார். அம்மை குலசேகர நாயகி தெற்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கிறார்.
ஆலயத்தை பிரகார வலம் வந்தால், சுர தேவரும், தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தியும் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். கன்னி மூலையில் விநாயக பெருமான், மறுபுறம் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும் உள்ளனர். விநாயகருக்கும், முருகப்பெருமானுக்கு இடையே காசி விசுவநாதர் - விசாலாட்சி, சோமசுந்தரர்-மீனாட்சி அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள். அதை தொடர்ந்து சண்டிகேஸ்வரர், சனி பகவான், பைரவர், சூரியன், சந்திரன், அதிகாரநந்தி, நவக்கிரகம் என எல்லா தெய்வங்களும் உள்ளன. சுமார் 800 வருடங்களுக்கு முன் இந்த ஊர் மிக பெரிய பட்டினமாக இருந்துள்ளது. அதற்கு பல தடயங்கள் உள்ளன.
குலசேகரபாண்டியன் இந்த கோவில் நலனுக்காக மிகப்பெரிய குளம் ஒன்றை வெட்டினார். அதன் மூலம் பாசனம் பெறும் வண்ணம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் நஞ்சை, புஞ்சை நிலங்களை ஏற்படுத்தினார். அதில் வரும் வருமானத்தின் ஒரு பகுதியைக் கொண்டு கோவிலுக்கு தினமும் 6 கால பூஜை நடக்க ஏற்பாடு செய்துள்ளான்.
ஆங்கிலேயர் ஆதிக்கம் தலைவிரித்து ஆடிய சமயத்தில், சுமார் 250 வருடங்களுக்கு முன்பு கூப்பிட்ட குரலுக்கு என்னவென்று கேட்காத பல கோவில்களை அடித்து நொறுக்கப்பட்டன. இக்கோவிலுக்கு வெள்ளைக்கார அதிகாரி குதிரையில் வந்து, கோவில் அருகே உள்ள பாறையில் நின்று கொண்டு “குலசேகரா” என்று இறைவனின் பெயரைச் சொல்லி கூப்பிட்டான்.

வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான்
ஆனால் தெய்வம் பதில் அளிக்கவில்லை. இதனால் “கோவிலை தரைமட்டம் ஆக்குங்கள்” என்று கூறினான்.
உடனே ஆங்கிலேய படையினர் கோவிலை அடித்து நொறுக்க தயாரானார்கள். அப்போது எதிர்பாராத விதமாக பாறை மீது நின்ற குதிரை, அந்த துரையை கீழே தூக்கி வீசியது. இதில் நிலைகுலைந்து போன துரை கீழே விழுந்தான். குதிரை மறு நிமிடம் தனது காலால் மிதித்து அவனை கொன்று விட்டது. இதனைக் கண்ட மற்ற ஆங்கிலேயர்கள் ஓட்டம் பிடித்தனர். அந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில், தற்போது குதிரையின் கால் தடம் மற்றும் துரையின் கால் தடம், முட்டு, கை தடம் காணப்படுகிறது.
இக்கோவிலில் எல்லா விழாக்களும் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. சித்திரை வருஷ பிறப்பு, வைகாசி விசாகம், பிரதோஷம், சிவராத்திரி, திருவாதிரை, சஷ்டி, திருக்கார்த்திகை, திருக்கல்யாணம் உட்பட அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடந்து வருகிறது. குலசேகர மன்னன், தனக்கு எதிரிகள் மூலம் பிரச்சினை வரும் போதெல்லாம் வெற்றி வேண்டுமென்றால் இக்கோவிலில் வந்து வணங்கி சென்றதாக கூறப்படுகிறது. வெற்றியை பெற்று தரும் கோவிலாக இத்தலம் விளங்கி வருகிறது.
இதனால் அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெறவும், மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறவும் இங்கே வந்து வணங்கி செல்கிறார்கள். மேலும் நீண்டநாள் நோய், விபத்தில் ஏற்பட்ட பெரும் காயம் நீங்கி விடுவதாகவும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இங்குள்ள வள்ளி - தெய்வானை சமேத முருகன் முன்பு திருமணம் முடித்தால், குழந்தைப்பேறு நிச்சயம் என்பது ஐதீகம். இந்தக் கோவில் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம் :
இந்த கோவிலுக்கு நெல்லை - திருச்செந்தூர் மெயின் ரோட்டில் 18 கி.மீ தொலைவில் இருக்கிறது கருங்குளம் விளக்கு. இங்கிருந்து வலது பக்கமாக திரும்பி சென்றால் 6 கிலோமீட்டர் தூரத்தில் தெற்கு காரசேரி உள்ளது. அங்கிருந்து 1 கிலோமீட்டர் ஊருக்குள் சென்றால் கோவில் இருக்கிறது.
சென்னை மந்தைவெளி மார்க்கெட் பகுதியில் உள்ள மாரிச் செட்டித் தெருவில் வெங்கடேசப் பெருமாள் ஆலயம் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சென்னை மந்தைவெளி மார்க்கெட் பகுதியில் உள்ள மாரிச் செட்டித் தெருவில் வெங்கடேசப் பெருமாள் ஆலயம் உள்ளது. சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் மயிலாப்பூரில் வாழ்ந்து வந்த பத்மசாலியர் குலத்தவர்கள், தற்போது ஆலயம் இருக்கும் இடத்தில் சிறிய சன்னிதியில் மூலவர் வெங்கடேசப் பெருமாளை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தனர்.
சில காலங்கள் கழித்து, பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்கள் உற்சவ சிலைகளை மூலவர் சன்னிதியில் எழுந்தருளச் செய்தனர். இதையடுத்து துவஜஸ்தம்பமும், பலிபீடமும் ஏற்படுத்தப்பட்டது. பெரிய திருவடி (கருடன்) மூலவர் விக்கிரகம், அலர்மேல் மங்கைத் தாயார், ஆண்டாள் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளை தனிச் சன்னிதிகளில் பிரதிஷ்டை செய்தனர். அனுமனுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் 30 வருடங்களுக்கு முன் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டன.
இந்த ஆலயத்தில் பேயாழ்வார், விஷ்வக்ஸேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், முதலியாண்டான், மணவாள மாமுனிகள் ஆகியோரது உற்சவ திருமேனிகளும் உள்ளன. தவிர ஆண்டாள் சன்னிதியில் ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் திருமேனிகள் காணப்படுகின்றன. 2001-ம் ஆண்டு ஆலயத்திற்கு நேர்த்தி சேர்க்கும் வகையில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டது.
ஆலயத்தின் ராஜகோபுரம், பலிபீடம், துவஜஸ்தம்பம், கருடாழ்வார் சன்னிதியைக் கடந்து சென்றால், அர்த்த மண்டபம் உள்ளது. கல் கட்டடமான இந்த மண்டபத்தின் மேற்கூரையில், சதுரமான அமைப்பில் 12 ராசிகள் பொறிக்கப்பட்டுள்ளன. கருவறை முன்பு துவாரபாலகர்களை நாம் தரிசிக்கலாம். கருவறை முகப்பில் திருமால் சயனக் கோலம், வலது பக்கம் பாவணா மகரிஷி, இடது பக்கம் மார்க்கண்டேய ரிஷி ஆகியோரது சுதைச் சிற்பங்களை நாம் காணலாம். இதையடுத்து நாம் கருவறையில் மேற்கு திருமுகமாக நின்ற திருக்கோலத்தில் சதுர்ப்புஜங்களுடன் தனிச் சன்னிதியில் சேவை சாதிக்கிறார். மூலவருக்கு முன்னால் உற்சவ மூர்த்தியாய் பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் காட்சி தருகிறார்.
சுவாமி கருவறையை விட்டு வெளியே வந்தால், வெளிப்பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் அலர்மேல் மங்கைத் தாயார் தனிச்சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தாயார் மூலவர் மற்றும் உற்சவராக எழுந்தருளியுள்ளார். முகத்தில் புன்னகை மலர நான்கு கரங்களுடன், இரு கரங்களில் அபய, வரத முத்திரையுடன் காணப்படுகிறார். தாயாரின் கனிவான பார்வையில் நமது மனக் குறைகள் நீங்குகிறது.
தென்கிழக்கு மூலையில் ஆண்டாள் சன்னிதி உள்ளது. ஆண்டாள் இரு திருக்கரங்களுடன் ஒரு திவ்யமான சேவையை அளிக்கின்றார். ஆண்டாளுக்கு சற்று முன்னால் ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் அனுமன் உற்சவ மூர்த்திகளாக காட்சி தருகின்றனர். ராமர் சன்னிதிக்கு நேர் எதிரில் தென்மேற்கு மூலையில் ஆஞ்சநேயர் சிறிய உருவ வடிவில் தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். வட மேற்கு மூலையில் தனிச்சன்னிதியில் மூலவராக முன்புறம் சக்கரத்தாழ்வாரையும், பின்புறம் யோக நரசிம்மரையும் கண்டு சேவிக்கலாம்.
இந்த ஆலயத்தில் திருமணம் கைகூடுவதற்கும், வாழ்வில் மேன்மை பெறவும் பெருமாள் சன்னிதியில் வழிபாடு செய்கிறார்கள். எதிரிகளால் ஏற்படும் தொல்லை அகலவும், பயம் நீங்கவும் சக்கரத்தாழ்வாரை வழிபடுகிறார்கள். செல்வம் பெருக அலர்மேல் மங்கை தாயாரையும், வியாபார தடை நீங்குவதற்கு ஆஞ்சநேயரையும் தரிசனம் செய்கிறார்கள்.
பாஞ்சராத்ர ஆகமப்படி பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயத்தில், சித்திரை மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் அன்று ராமானுஜருக்கும், புனர்பூசம் நட்சத்திர நாளில் முதலியாண்டானுக்கும் சாற்றுமுறை நடக்கிறது. வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் நம்மாழ்வார் சாற்றுமுறை நடைபெறும். ஆடி மாதம் ஆடிப்பூர விழாவும், ஆண்டாள் அவதார உற்சவமும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசியில் நவராத்திரி உற்சவம், விஜயதசமி, ஐப்பசி மாதத்தில் தீபாவளி, மூல நட்சத்திரத்தில் மணவாள மாமுனிகள் சாற்றுமுறை, பூராடம் நட்சத்திரத்தில் சேனைமுதலிகள் சாற்றுமுறை, சதய நட்சத்திரம் அன்று பேயாழ்வாருக்கும், திருவோணம் நட்சத்திரத்தில் பொய்கையாழ்வாருக்கும், அவிட்டம் நட்சத்திரத்தில் பூதத்தாழ்வாருக்கும் சாற்றுமுறை நடக்கிறது. கார்த்திகை மாதத்தில் திருமங்கையாழ்வார் சாற்றுமுறை, பாஞ்சராத்ர தீபம் ஏற்றப்படுகிறது. மார்கழி மாதத்தில் தனுர் மாத பூஜையும், பகல் பத்து, இராப்பத்து உற்சவங்களும், வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, போகிப் பண்டிகை போன்றவையும், ஆண்டாள் திருக்கல்யாண சேர்த்தி உற்சவமும் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் சங்கராந்தி உற்சவம், கனுப் பண்டிகைகளும், மாசி மாதத்தில் மகம் திருமஞ்சனம் மற்றும் சமுத்திர தீர்த்தவாரி, பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம், சேர்த்தி உற்சவம், ராமநவமி மற்றும் 10 நாள் பிரம்மோற்சவம் ஆகியவை சிறப்புடன் நடக்கிறது.
இவ்வாலயத்தில் எந்த ஆலயத்திலும் நடைபெறாத தீப்பந்தத் திருவிழா பக்தஜன சபையினரால் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
சில காலங்கள் கழித்து, பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்கள் உற்சவ சிலைகளை மூலவர் சன்னிதியில் எழுந்தருளச் செய்தனர். இதையடுத்து துவஜஸ்தம்பமும், பலிபீடமும் ஏற்படுத்தப்பட்டது. பெரிய திருவடி (கருடன்) மூலவர் விக்கிரகம், அலர்மேல் மங்கைத் தாயார், ஆண்டாள் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளை தனிச் சன்னிதிகளில் பிரதிஷ்டை செய்தனர். அனுமனுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் 30 வருடங்களுக்கு முன் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டன.
இந்த ஆலயத்தில் பேயாழ்வார், விஷ்வக்ஸேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், முதலியாண்டான், மணவாள மாமுனிகள் ஆகியோரது உற்சவ திருமேனிகளும் உள்ளன. தவிர ஆண்டாள் சன்னிதியில் ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் திருமேனிகள் காணப்படுகின்றன. 2001-ம் ஆண்டு ஆலயத்திற்கு நேர்த்தி சேர்க்கும் வகையில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டது.
ஆலயத்தின் ராஜகோபுரம், பலிபீடம், துவஜஸ்தம்பம், கருடாழ்வார் சன்னிதியைக் கடந்து சென்றால், அர்த்த மண்டபம் உள்ளது. கல் கட்டடமான இந்த மண்டபத்தின் மேற்கூரையில், சதுரமான அமைப்பில் 12 ராசிகள் பொறிக்கப்பட்டுள்ளன. கருவறை முன்பு துவாரபாலகர்களை நாம் தரிசிக்கலாம். கருவறை முகப்பில் திருமால் சயனக் கோலம், வலது பக்கம் பாவணா மகரிஷி, இடது பக்கம் மார்க்கண்டேய ரிஷி ஆகியோரது சுதைச் சிற்பங்களை நாம் காணலாம். இதையடுத்து நாம் கருவறையில் மேற்கு திருமுகமாக நின்ற திருக்கோலத்தில் சதுர்ப்புஜங்களுடன் தனிச் சன்னிதியில் சேவை சாதிக்கிறார். மூலவருக்கு முன்னால் உற்சவ மூர்த்தியாய் பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் காட்சி தருகிறார்.
சுவாமி கருவறையை விட்டு வெளியே வந்தால், வெளிப்பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் அலர்மேல் மங்கைத் தாயார் தனிச்சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தாயார் மூலவர் மற்றும் உற்சவராக எழுந்தருளியுள்ளார். முகத்தில் புன்னகை மலர நான்கு கரங்களுடன், இரு கரங்களில் அபய, வரத முத்திரையுடன் காணப்படுகிறார். தாயாரின் கனிவான பார்வையில் நமது மனக் குறைகள் நீங்குகிறது.
தென்கிழக்கு மூலையில் ஆண்டாள் சன்னிதி உள்ளது. ஆண்டாள் இரு திருக்கரங்களுடன் ஒரு திவ்யமான சேவையை அளிக்கின்றார். ஆண்டாளுக்கு சற்று முன்னால் ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் அனுமன் உற்சவ மூர்த்திகளாக காட்சி தருகின்றனர். ராமர் சன்னிதிக்கு நேர் எதிரில் தென்மேற்கு மூலையில் ஆஞ்சநேயர் சிறிய உருவ வடிவில் தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். வட மேற்கு மூலையில் தனிச்சன்னிதியில் மூலவராக முன்புறம் சக்கரத்தாழ்வாரையும், பின்புறம் யோக நரசிம்மரையும் கண்டு சேவிக்கலாம்.
இந்த ஆலயத்தில் திருமணம் கைகூடுவதற்கும், வாழ்வில் மேன்மை பெறவும் பெருமாள் சன்னிதியில் வழிபாடு செய்கிறார்கள். எதிரிகளால் ஏற்படும் தொல்லை அகலவும், பயம் நீங்கவும் சக்கரத்தாழ்வாரை வழிபடுகிறார்கள். செல்வம் பெருக அலர்மேல் மங்கை தாயாரையும், வியாபார தடை நீங்குவதற்கு ஆஞ்சநேயரையும் தரிசனம் செய்கிறார்கள்.
பாஞ்சராத்ர ஆகமப்படி பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயத்தில், சித்திரை மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் அன்று ராமானுஜருக்கும், புனர்பூசம் நட்சத்திர நாளில் முதலியாண்டானுக்கும் சாற்றுமுறை நடக்கிறது. வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் நம்மாழ்வார் சாற்றுமுறை நடைபெறும். ஆடி மாதம் ஆடிப்பூர விழாவும், ஆண்டாள் அவதார உற்சவமும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசியில் நவராத்திரி உற்சவம், விஜயதசமி, ஐப்பசி மாதத்தில் தீபாவளி, மூல நட்சத்திரத்தில் மணவாள மாமுனிகள் சாற்றுமுறை, பூராடம் நட்சத்திரத்தில் சேனைமுதலிகள் சாற்றுமுறை, சதய நட்சத்திரம் அன்று பேயாழ்வாருக்கும், திருவோணம் நட்சத்திரத்தில் பொய்கையாழ்வாருக்கும், அவிட்டம் நட்சத்திரத்தில் பூதத்தாழ்வாருக்கும் சாற்றுமுறை நடக்கிறது. கார்த்திகை மாதத்தில் திருமங்கையாழ்வார் சாற்றுமுறை, பாஞ்சராத்ர தீபம் ஏற்றப்படுகிறது. மார்கழி மாதத்தில் தனுர் மாத பூஜையும், பகல் பத்து, இராப்பத்து உற்சவங்களும், வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, போகிப் பண்டிகை போன்றவையும், ஆண்டாள் திருக்கல்யாண சேர்த்தி உற்சவமும் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் சங்கராந்தி உற்சவம், கனுப் பண்டிகைகளும், மாசி மாதத்தில் மகம் திருமஞ்சனம் மற்றும் சமுத்திர தீர்த்தவாரி, பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம், சேர்த்தி உற்சவம், ராமநவமி மற்றும் 10 நாள் பிரம்மோற்சவம் ஆகியவை சிறப்புடன் நடக்கிறது.
இவ்வாலயத்தில் எந்த ஆலயத்திலும் நடைபெறாத தீப்பந்தத் திருவிழா பக்தஜன சபையினரால் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இணையானதாகக் கருதப்படும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுபவர்களுக்குத் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
ராவணனைப் போரில் கொன்று, சீதையை மீட்டுத் திரும்பிய ராமர், தனக்குப் போரில் கிடைத்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வழிபட்ட தருமசாஸ்தா எனும் ஐயப்பன் கோவில், கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், சாஸ்தாம்கோட்டை எனுமிடத்தில் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் இருக்கும் தருமசாஸ்தாவான ஐயப்பன், மனைவி பிரபா மற்றும் மகன் சத்யகன் ஆகியோருடன் இணைந்து கோவில் கொண்டிருக்கிறார்.
தல வரலாறு
வானரப்படைகள் உதவியுடன் கடல் கடந்து சென்ற ராமர், ராவணனுடன் போரிட்டு அவனைக் கொன்று சீதையை மீட்டார். ராவணனின் தம்பி விபீஷணனை இலங்கைக்கு அரசனாக்கினார். அதன் பிறகு, மனைவி சீதா, தம்பி லட்சுமணன் மற்றும் வானரப்படையினரை அழைத்துக் கொண்டு ராமர் அயோத்திக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
நீண்ட தூரம் வந்திருந்த அவர்கள், பெரிய ஏரி ஒன்றின் அருகே தங்கி ஓய்வெடுக்கத் தொடங்கினர். அவ்விடத்தில் சுயம்புவாகத் தோன்றியிருந்த தர்மசாஸ்தாவை, தனக்குப் போரில் கிடைத்த வெற்றிக்கு நன்றி செலுத்தும் விதமாக ராமர் வழிபட்டார். பின்னர் அவர், அங்கிருந்த ஏரிக்கரையில் முன்னோர் வழிபாடு (பித்ரு தர்ப்பணம்) செய்தார்.
அங்கிருந்து அயோத்திக்குக் கிளம்புவதற்கு முன்பாகத் தன்னுடன் வந்த வானரப்படைகளில் நீலன் எனும் வானரத்தை அழைத்து, அவ்விடத்தில் தங்கித் தர்மசாஸ்தா வழிபாட்டைத் தொடர்ந்து செய்யும்படி கூறியதுடன், நீலனுக்குத் துணையாகச் சில வானரங்களையும் அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டுச் சென்றார். நீலன் மற்றும் அதனுடனிருந்த வானரங்கள் சாஸ்தா வழிபாட்டிற்குத் தேவையான பல்வேறு பணிகளை தொடர்ந்து செய்து வந்தன என்று இக்கோவில் அமைந்த தல வரலாறு சொல்லப்படுகிறது.
கோவில் கட்டுமான வரலாறு
பந்தள நாட்டு இளவரசர்களில் ஒருவர், அதிக வசதிகள் கொண்ட காயங்குளம் இளவரசியைத் திருமணம் செய்து கொண்டார். அதனால் அவர், பந்தளத்தை விட்டுக் காயங்குளத்திற்குச் செல்ல நேரிட்டது. இதனால் மாதந்தோறும் வழிபட்டு வந்த சபரிமலை ஐயப்பனை தரிசிக்க முடியாத நிலை இளவரசருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து அரச குடும்பத்தில் ஐயப்பன் அதிருப்திக்கான அறிகுறிகளாகச் சில நிகழ்வுகள் நடைபெற்றன.
தன் தவறை உணர்ந்த இளவரசர், சபரிமலைக்குச் சென்று, தனது தவறுகளை மன்னிக்க வேண்டியும், தான் சபரிமலைக்கு மாதந்தோறும் வந்து வழிபடுவதில் இருக்கும் சில சிக்கல்களைத் தீர்க்க வேண்டியும் ஐயப்பனை வழிபட்டு வந்தார். அதில் இருந்து பன்னிரண்டாம் நாளில், அவரது கனவில் தோன்றிய ஐயப்பன், இனி சபரிமலைக்கு வந்து வழிபடுவதற்குப் பதிலாக சாஸ்தாம்கோட்டை எனுமிடத்திற்கு வந்து தன்னை வழிபடும்படி சொன்னார். அந்த இடத்தைக் காயங்குளம் அரண்மனையில் நடைபெறவிருக்கும் வில்வித்தைப் போட்டிக்கு வரும் இளைஞர் ஒருவர் உனக்கு அடையாளம் காட்டுவார் என்றும் சொன்னார்.
காயங்குளத்தில் நடைபெற்ற வில்வித்தைப் போட்டியில் கலந்து கொண்டவர்களில், இளவரசரும், இளைஞர் ஒருவரும் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகி இருந்தனர். போட்டிக்கான நடுவர்கள், “இருவரும் கிழக்கு திசையில் அம்பை எய்திட வேண்டும். அதிகத் தூரம் அம்பு எய்தவர் போட்டியில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர்” என்று அறிவித்தனர்.
அதன்படி இளவரசரும், இளைஞரும் கிழக்குத் திசையில் அம்பைச் செலுத்தினர். இருவரது அம்புகளில் அதிக தூரம் சென்ற அம்பைத் தேடிச் சென்றவர்கள், அழகிய ஏரிக்கரை ஒன்றை அடைந்தனர். அந்த ஏரியின் நடுவில் அமைந்திருந்த நிலப்பரப்பில் இளைஞர் செலுத்திய அம்பு கண்டறியப்பட்டது.

கோவில் அமைப்பு
கேரளக் கட்டுமானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இக்கோவிலில், தர்மசாஸ்தாவான ஐயப்பன், மனைவி பிரபா மற்றும் மகன் சத்யகனுடன் கோவில் கொண்டிருக்கிறார். மேலும் கணபதி, சிவபெருமான், நாகயட்சி, நாகராஜா, யட்சி, யோகீஸ்வரன் உள்ளிட்டவர்களுக்கும் சன்னிதிகள் இருக்கின்றன. ஆலய வளாகத்திலும், சுற்றுப்பகுதிகளிலும் குரங்குகள் அதிக அளவில் உலாவிக் கொண்டிருக்கின்றன. இவையனைத்தும் ராமர், சாஸ்தா வழிபாட்டுக்காக விட்டுச் சென்ற நீலன் மரபு வழியிலான குரங்குகள் எனும் தொன்ம நம்பிக்கை பக்தர்களிடையே இருக்கிறது.
இக்கோவிலில் திருவோணம், நவராத்திரி, மண்டல பூஜை நாட்கள், மகர சம்கிரபூஜை, சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மாசி மாதம் பத்து நாட்கள் ஆண்டுத் திருவிழா நடக்கிறது. வைகாசி மாதம் ஹஸ்தம் நட்சத்திர நாளில், ஆலயத்தில் சிவபெருமான் சிலை நிறுவப்பட்ட நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இணையானதாகக் கருதப்படும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுபவர்களுக்குத் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆலயம் தினமும் அதிகாலை 4.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம்
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் சாஸ்தாம்கோட்டை எனுமிடத்தில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். கொல்லம் நகரிலிருந்து 29 கிலோமீட்டர், அடூர் நகரில் இருந்து 11 கிலோமீட்டர், கருநாகப்பள்ளி என்னும் இடத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது. மேற்காணும் மூன்று ஊர்களில் இருந்தும் கோவிலுக்குச் செல்லப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
- தேனி மு.சுப்பிரமணி
தல வரலாறு
வானரப்படைகள் உதவியுடன் கடல் கடந்து சென்ற ராமர், ராவணனுடன் போரிட்டு அவனைக் கொன்று சீதையை மீட்டார். ராவணனின் தம்பி விபீஷணனை இலங்கைக்கு அரசனாக்கினார். அதன் பிறகு, மனைவி சீதா, தம்பி லட்சுமணன் மற்றும் வானரப்படையினரை அழைத்துக் கொண்டு ராமர் அயோத்திக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
நீண்ட தூரம் வந்திருந்த அவர்கள், பெரிய ஏரி ஒன்றின் அருகே தங்கி ஓய்வெடுக்கத் தொடங்கினர். அவ்விடத்தில் சுயம்புவாகத் தோன்றியிருந்த தர்மசாஸ்தாவை, தனக்குப் போரில் கிடைத்த வெற்றிக்கு நன்றி செலுத்தும் விதமாக ராமர் வழிபட்டார். பின்னர் அவர், அங்கிருந்த ஏரிக்கரையில் முன்னோர் வழிபாடு (பித்ரு தர்ப்பணம்) செய்தார்.
அங்கிருந்து அயோத்திக்குக் கிளம்புவதற்கு முன்பாகத் தன்னுடன் வந்த வானரப்படைகளில் நீலன் எனும் வானரத்தை அழைத்து, அவ்விடத்தில் தங்கித் தர்மசாஸ்தா வழிபாட்டைத் தொடர்ந்து செய்யும்படி கூறியதுடன், நீலனுக்குத் துணையாகச் சில வானரங்களையும் அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டுச் சென்றார். நீலன் மற்றும் அதனுடனிருந்த வானரங்கள் சாஸ்தா வழிபாட்டிற்குத் தேவையான பல்வேறு பணிகளை தொடர்ந்து செய்து வந்தன என்று இக்கோவில் அமைந்த தல வரலாறு சொல்லப்படுகிறது.
கோவில் கட்டுமான வரலாறு
பந்தள நாட்டு இளவரசர்களில் ஒருவர், அதிக வசதிகள் கொண்ட காயங்குளம் இளவரசியைத் திருமணம் செய்து கொண்டார். அதனால் அவர், பந்தளத்தை விட்டுக் காயங்குளத்திற்குச் செல்ல நேரிட்டது. இதனால் மாதந்தோறும் வழிபட்டு வந்த சபரிமலை ஐயப்பனை தரிசிக்க முடியாத நிலை இளவரசருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து அரச குடும்பத்தில் ஐயப்பன் அதிருப்திக்கான அறிகுறிகளாகச் சில நிகழ்வுகள் நடைபெற்றன.
தன் தவறை உணர்ந்த இளவரசர், சபரிமலைக்குச் சென்று, தனது தவறுகளை மன்னிக்க வேண்டியும், தான் சபரிமலைக்கு மாதந்தோறும் வந்து வழிபடுவதில் இருக்கும் சில சிக்கல்களைத் தீர்க்க வேண்டியும் ஐயப்பனை வழிபட்டு வந்தார். அதில் இருந்து பன்னிரண்டாம் நாளில், அவரது கனவில் தோன்றிய ஐயப்பன், இனி சபரிமலைக்கு வந்து வழிபடுவதற்குப் பதிலாக சாஸ்தாம்கோட்டை எனுமிடத்திற்கு வந்து தன்னை வழிபடும்படி சொன்னார். அந்த இடத்தைக் காயங்குளம் அரண்மனையில் நடைபெறவிருக்கும் வில்வித்தைப் போட்டிக்கு வரும் இளைஞர் ஒருவர் உனக்கு அடையாளம் காட்டுவார் என்றும் சொன்னார்.
காயங்குளத்தில் நடைபெற்ற வில்வித்தைப் போட்டியில் கலந்து கொண்டவர்களில், இளவரசரும், இளைஞர் ஒருவரும் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகி இருந்தனர். போட்டிக்கான நடுவர்கள், “இருவரும் கிழக்கு திசையில் அம்பை எய்திட வேண்டும். அதிகத் தூரம் அம்பு எய்தவர் போட்டியில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர்” என்று அறிவித்தனர்.
அதன்படி இளவரசரும், இளைஞரும் கிழக்குத் திசையில் அம்பைச் செலுத்தினர். இருவரது அம்புகளில் அதிக தூரம் சென்ற அம்பைத் தேடிச் சென்றவர்கள், அழகிய ஏரிக்கரை ஒன்றை அடைந்தனர். அந்த ஏரியின் நடுவில் அமைந்திருந்த நிலப்பரப்பில் இளைஞர் செலுத்திய அம்பு கண்டறியப்பட்டது.
அம்பு இருந்த இடத்தின் அருகில் மேடைப்பகுதியில் சுயம்புவாக இருந்த சிலையை, ஒரு குரங்கு வழிபட்டுக் கொண்டிருந்ததைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். அப்போது அவர்களுடன் இருந்த இளைஞர் மறைந்து போனார். இளவரசருக்குச் சபரிமலை ஐயப்பன் கனவில் சொன்னது நினைவுக்கு வந்தது. அந்த இடத்தில் தற்போதிருக்கும் கோவிலை இளவரசன் கட்டியதாக கோவில் கட்டப்பட்ட வரலாறு சொல்லப்படுகிறது.

மனைவி- மகனுடன் வீற்றிருக்கும் ஐயப்பன்
கோவில் அமைப்பு
கேரளக் கட்டுமானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இக்கோவிலில், தர்மசாஸ்தாவான ஐயப்பன், மனைவி பிரபா மற்றும் மகன் சத்யகனுடன் கோவில் கொண்டிருக்கிறார். மேலும் கணபதி, சிவபெருமான், நாகயட்சி, நாகராஜா, யட்சி, யோகீஸ்வரன் உள்ளிட்டவர்களுக்கும் சன்னிதிகள் இருக்கின்றன. ஆலய வளாகத்திலும், சுற்றுப்பகுதிகளிலும் குரங்குகள் அதிக அளவில் உலாவிக் கொண்டிருக்கின்றன. இவையனைத்தும் ராமர், சாஸ்தா வழிபாட்டுக்காக விட்டுச் சென்ற நீலன் மரபு வழியிலான குரங்குகள் எனும் தொன்ம நம்பிக்கை பக்தர்களிடையே இருக்கிறது.
இக்கோவிலில் திருவோணம், நவராத்திரி, மண்டல பூஜை நாட்கள், மகர சம்கிரபூஜை, சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மாசி மாதம் பத்து நாட்கள் ஆண்டுத் திருவிழா நடக்கிறது. வைகாசி மாதம் ஹஸ்தம் நட்சத்திர நாளில், ஆலயத்தில் சிவபெருமான் சிலை நிறுவப்பட்ட நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இணையானதாகக் கருதப்படும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுபவர்களுக்குத் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆலயம் தினமும் அதிகாலை 4.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம்
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் சாஸ்தாம்கோட்டை எனுமிடத்தில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். கொல்லம் நகரிலிருந்து 29 கிலோமீட்டர், அடூர் நகரில் இருந்து 11 கிலோமீட்டர், கருநாகப்பள்ளி என்னும் இடத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது. மேற்காணும் மூன்று ஊர்களில் இருந்தும் கோவிலுக்குச் செல்லப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
- தேனி மு.சுப்பிரமணி






