என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    குரு தோஷத்தால் அவதிபட்டு வருபவர்கள் வியாழக்கிழமை தினங்களில் விரதம் இருக்கும் போது மஞ்சள் நிற ஆடையை உடுத்த வேண்டியது அவசியமா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    நவக்கிரகங்களில் ஐந்தாவது இடத்தை பெறுகிறார் குருபகவான். வியாழக்கிழமைகளில் குரு பகவானை நினைத்து மேற்கொள்ளும் விரதத்திற்கு குருவார விரதம் என்று பெயர். முக்கியமான விரதங்களில் இந்த விரதமும் ஒன்றாக கருதப்படுகிறது.

    குரு பகவானால் பாதிப்பு உள்ளவர்கள் இந்த குருவார விரதம் மேற்கொள்வது சிறப்பு. குருவார விரதம் இருக்கும் தினங்களில் ராகவேந்திரர், சாய் பாபா வழிபாடு செய்வது விசேஷமானது. இதனால் பலன் இரட்டிப்பாகும்.

    குரு பகவானுக்கு பிடித்த நிறம் மஞ்சள். எனவே குரு தோஷத்தால் அவதிபட்டு வருபவர்கள் அந்த தினங்களில் மஞ்சள் நிற ஆடையை உடுத்தி வருவது நல்லது. வார வாரம் மஞ்சள் நிற ஆடையை தேட முடியாது இல்லையா? எனவே மஞ்சள் நிற கைக்குட்டை போன்றவைகளையாவது தன்வசம் வைத்திருப்பது நல்லது.

    மஞ்சள் நிற ஆடைகளை பிறருக்கு தானம் செய்வது குரு பகவானுக்கு உரிய பரிகாரங்களில் ஒன்றாக விளங்குகிறது. மேலும் மஞ்சள் நிற ஆடை உடுத்துபவர்களுக்கு குரு அருள் நிரம்பக் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
    ஸ்ரீ விளம்பி ஆண்டில் ( 2018 - 2019) வரும் நவக்கிரக ஜெயந்தி விரத தினங்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஸ்ரீ விளம்பி ஆண்டில் ( 2018 - 2019) வரும் நவக்கிரக ஜெயந்தி விரத தினங்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    ஆவணி 19 - சனி ஜெயந்தி
    ஆவணி 26 - அங்காரக ஜெயந்தி
    புரட்டாசி 05 - குரு ஜெயந்தி
    புரட்டாசி 18 - சுக்கிர ஜெயந்தி
    கார்த்திகை 06 - சந்திர ஜெயந்தி
    தை 29 - சூரிய ஜெயந்தி

    (ராகு - கேதுக்களுக்கு கிரக ரூபம் இல்லாமையாலும், சாயாக் கிரகங்களாவதாலும் ஜெயந்தி நாட்கள் கிடையாது).
    வைகாசி மாத பவுர்ணமி அன்று முருகப்பெருமான் ஆறுமுகங்களுடன் அவதரித்த நாள். வைகாசி விசாகம். அன்றைய தினம் விரதம் மேற்கொண்டால் இன்பமான வாழ்வு அமையும்.
    வைகாசி மாத பவுர்ணமி அன்று முருகப்பெருமான் ஆறுமுகங்களுடன் அவதரித்த நாள். வைகாசி விசாகம். அன்றைய தினம் விரதம் மேற்கொண்டால் இன்பமான வாழ்வு அமையும்.

    விரதமிருப்பவர்கள் வைகாசி மாத பவுர்ணமி அன்றும் விரதமிருந்து மாலை சந்திர உதயத்தில் நிலவையும் அம்பாளையும் தரிசனம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்பவர்கள் தங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் எல்லாக் காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள்.

    வைகாசி பவுர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள். பவுர்ணமி இரவின் நடுநிசியில் தியானம், ஜெபம், பூஜை, பிராணாயாமம், தவம் செய்தால் இறைசக்தி உடனே கிடைக்கும்.

    இந்த நாளில் விரதம் இருந்து சிவன் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்தால் எண்ணங்கள் ஈடேரும்.

    இந்நாளில் விரதம் இருப்பவர்கள் இரவில் குறைவான எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய ஆகாரத்தை உண்ண வேண்டும். இவ்வாறு உண்டால் நள்ளிரவில் தியானம் செய்வதற்கும், பிராணாயமம் செய்வதற்கும் ஏதுவாக இருக்கும். 
    இன்று (திங்கட்கிழமை) வைகாசி விசாக திருநாள். வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் மழலைப்பாக்கியம் உடனே கிடைக்கும்.
    இன்று (திங்கட்கிழமை) வைகாசி விசாக திருநாள். சக்தியிடம் முருகன் விசாகனாக தோன்றிய நாள்தான் வைகாசி விசாகம் ஆகும். அதனால்தான் முருகப் பெருமானுக்கு வைகாசி விசாகத்திருநாள் ஓர் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. ஒருமுறை அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர்.

    சிவபெருமான் அசுரர்களுடைய கொடுமையை களைந்து அவர்களை காத்தருள விரும்பினார். தமது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகளைத் தோற்று வித்தார். அவை தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையிலே கொண்டு சேர்த்தது.

    புராணங்களின்படி சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி, சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது.
    இது ஆறுமுகப் பெருமான் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. வைகாசி மாதம்  விசாகம் நட்சத்திரம் தினத்தன்று இந்த அவதாரம் நிகழ்ந்தது. இதன் காரணமாக வைகாசி  விசாகம் தினம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

    உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு சிவபெருமானின் திருவிளையாடலால் குழந்தையான நாள். ஆதலால் சைவ மக்கள் வழிபாட்டுக்கு வைகாசி விசாக நாள் மிகவும் சிறந்ததாகும்.

    நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களை கொண்டாடும் பொழுதுதான் அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமைகிறது. ஆற்றலும் அவன் அருளால் நமக்கு கிடைக்கிறது. முருகனுக்கு உகந்த நாளில் குறிப்பாக வைகாசி மாதம் வரும் ‘விசாக’ நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும்.

    பகை விலகும்.பாசம் பெருகும். அவனது திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும். அன்றைய தினம் குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால் குலம் தழைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    அன்று அதிகாலையில் விநாயகப் பெருமானை வழிபட்டு, இல்லத்து பூஜை அறையில் முருகப்பெருமான் படம் வைத்து, அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கேற்றி ஐந்து வித எண்ணை ஊற்றி, ஐந்துவித புஷ்பம் சாற்றி, ஐந்து வகை பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும், அவனுக்கு பிடித்த மாம்பழத்தையும் வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும்.

    விசாக நட்சத்திர தினத்தன்று உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயத்திற்கு சென்று அவருக்கு நல்லெண்ணையில் அபிஷேகம் செய்து பார்த்தால் நல்லன யாவும் நடைபெறும்.  பசும்பாலால் அபிஷேகம் செய்து பார்த்தால் விசும்பும் வாழ்க்கை மாறி வியக்கும் விதத்தில் ஆயுள் கூடும்.

    பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து பார்த்தால் பட்ட கடன்கள் தீரும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் பார்க்கும் செயல்கள் எல்லாம்

    சர்க்கரையால் அபிஷேகம் செய்து பார்த்தால் சந்தித்தவர்கள் எல்லாம் நண்பர்களாக மாறுவர். இளநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் இனிய சந்ததிகள் பிறக்கும் எலுமிச்சம் பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் எம பயங்கள் தீரும். மாம்பழத்தில் அபிஷேகம் செய்து பார்த்தால் மகிழ்ச்சி தரும் விதத்தில் செல்வநிலை உயரும். திருநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் திக்கட்டும் புகழ் பரவும் வாய்ப்பு கிடைக்கும்.

    அன்னத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் அரசு வழி ஆதரவு நமக்கு கிடைக்கும். சந்தனத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் சரும நோய் அத்தனையும் தீர்ந்தும் போகும். பன்னீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் பார்போற்றும் செல்வாக்கு நமக்கு சேரும். தேனாலே அபிஷேகம் செய்து பார்த்தால் தித்திக்கும் சங்கீதம் விருத்தியாகும்.

    இதனால்தான் வைகாசி விசாகம் தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் முருகன் திருத்தலங்களில் கோலாகல விழா கொண்டாடப்படுகிறது. விசாக நட்சத்திரத்தில் உதித்த விசாகன் என்ற முருகன் பெயரால் இரு திருத்தலங்கள் உள்ளன. ஒன்று வைசாக் என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம் ஆகும். இது ஆந்திர மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமாகும்.

    இது அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் தலங்கள் 237-ல் ஒரு திருத்தலமாகும். மற்றொரு தலம் விசாகபவனம் எனப்படும் தலமாகும். இத்தலம் தணிகை புராணம் எழுதிய நூலாசிரியர் ஸ்ரீகச்சியப்ப முனிவர் என்பவர் கூறும் 64 திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது.

    சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் கோவிலில் வைகாசி பவுர்ணமி அன்று இறைவனும், இறைவியும் லிங்கத்தில் ஐக்கியமாகும் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    விசாகம் குருவிற்குரிய நட்சத்திரமாவதால் குருவிற்கு உரிய தலமான திருச்செந்தூரில் வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.
    ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மாசலத்தில் கோவில் கொண்டுள்ள வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் சிறப்பான தினமாகும். சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சி தரும் இந்த நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாக நாளில் சந்தனப் பூச்சைக் களைவார்கள். மூல விக்கிரகத்தின் இயற்கை தோற்றப்பொழிவு அன்று தரிசனமாகும்.  பின்னர் சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி சந்தனப்பூச்சு செய்வார்கள்.

    கன்னியாகுமரி அம்மனுக்கு ‘ஆராட்டு விழா’ இந்நாளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக சொல்லப்படும் காஞ்சி கருட சேவை, வைகாசி விசாகத்தை ஒட்டியே நடைபெற்று வருகிறது.

    திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்ற மகான் வைகாசி விசாகத்தில் சித்தியடைந்ததால் இந்நாளில் அவரது குருபூஜை திருப்போரிலுள்ள அவரது சமாதியில் விசேஷமாக நடைபெற்று வருகிறது.

    இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமி மலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான். உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் நடக்கும் விசாக திருவிழா தனித்தன்மை கொண்டது. இதில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் லட்சக்கணக்கில் கலந்து கொள்வார்கள்.

    விசாகத்தன்று அதிகாலையில் கடலில் நீராடி கடல் மண்ணை எடுத்து தலையில் சிறிய பெட்டிகளில் சுமந்து வந்து சுயம்புநாதர் ஆலயத்தின் அருகில் குவிப்பார்கள். இதனால்  பாவ வினைகளும், நோய்களும் தீரும்.

    செல்வங்கள் சேரும், புகழ் சேரும், கல்வி அறிவு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் வெற்றி அடையும். சுயம்புலிங்கத்தின் அருள் என்றும் மண் சுமந்தாருடன் நிலைத்து நிற்கும்.

    வைகாசி மாதம் பவுர்ணமியும், விசாக நட்சத்திரமும் கூடிய உச்சி வேளையில் அறுக்கு இலையும், அரிசியும் தலையில் வைத்துக் கொண்டு உத்திரகோச மங்கை என்னும் தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் புனித நீராட வேண்டும். பின் ஆலயத்தின் உட்புறத்திலுள்ள அக்னி தீர்த்தத்தில் எள், அருகு, கோமியம் இவற்றை சிரசில் தெளித்துக் கொண்டு நீராடி கருவறையில் குடி கொண்டிருக்கும் மங்களநாதனுக்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். பின் தான தர்மங்களை செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

    குழந்தை பாக்கியத்திற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கும் தம்பதியர் இன்றும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் மழலைப்பாக்கியம் உடனே கிடைக்கும்.

    இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர் சாதம் ஆகியவற்றை ஏழை-எளியவர்களுக்கு தானம் கொடுப்பது நல்லது.
    வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். இத்திருநாளில் திருமணமாகாத கன்னியர்கள் விரதமிருந்து முருகப்பெருமானை வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.
    28-5-2018 வைகாசி விசாகம்

    வைகாசி மாதத்தில் சந்திரன் பவுர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனாலேயே இந்த மாதம் ‘வைசாக' மாதம் என்றிருந்து, பின்னாளில் ‘வைகாசி’ என்றானதாக சொல்லப்படுகிறது. இந்த மாத பவுர்ணமி நாளை ‘வைகாசி விசாகம்’ என்று குறிப்பிடுகிறோம். இந்த நாளில் தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். விசாகம் என்னும் நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களின் கூட்டமைப்பாகும். இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். தேவர்களுக்கும், உலக உயிர்களுக்கும் துன்பம் விளைவித்த சூரபதுமன் மற்றும் அவனது சகோதரர்களை அழிப்பதற்காக, சிவபெருமானின் சக்தியாக ஆறுமுகங்களுடன் தோன்றியவர் முருகப்பெருமான்.

    இந்த நாளில் அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகத் திருநாள் மிகச் சிறப்பாக நடைபெறும்.

    ‘வி' என்றால் ‘பட்சி' (மயில்), ‘சாகன்' என்றால் ‘சஞ்சரிப்பவன்' மயில் மீது வலம் வரும் இறைவன் என்பதால் ‘விசாகன்' என்றும் முருகப்பெருமான் அழைக்கப்படுகிறார். முருகனுடைய வாகனமாக சூரபத்மனே வீற்றிருக்கிறான். இதன் மூலம் பகைவனுக்கும் அருள்கின்ற தன்மையை முருகப்பெருமானிடத்தில் காணலாம். இந்நாளில் திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் அணி அணியாக மக்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்வார்கள்.

    இந்த நாளில், முருகப் பெருமானுக்கு விரதமிருந்து மனமுருகி வேண்டிக் கொண்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது உறுதி. குழந்தை இல்லாதவர்கள் வைகாசி விசாகம் அன்று பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதமிருந்து முருகன் கோவிலுக்கு சென்று வேண்டிக் கொண்டால், அடுத்த வருடம் வைகாசி விசாகத்திற்குள் மடியில் குழந்தை தவழுவது உறுதி.



    திருமணமாகாத கன்னியர்கள் விரதமிருந்து முருகப்பெருமானை வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும். வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் இருப்பதால், ஆசைகள் ஈடேறி முடிவில் முக்தி கிடைக்கும். வைகாசி கிருஷ்ணபட்ச ஏகாதசியன்று விரதம் அனுஷ்டித்தால் வித்யாதானம் செய்த பலன் கிடைப்பதுடன், எதிர்பாரா ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.

    வைகாசி மாத அஷ்டமிக்கு ‘சதாசிவாஷ்டமி’ என்று பெயர். அன்று இடபாரூடராகிய சிவமூர்த்தியை எண்ணி விரதம் இருப்பர். வெ றும் நீரை நைவேத்தியம் செய்து அதையே குடிக்கவேண்டும். அதன் பலனாக செய்த பாவங்கள் அனைத்தும் போகும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.

    விரதம் இருக்கும் முறை

    வைகாசி விசாகம் அன்று பிரம்மமுகூர்த்த வேளையில் (காலை 4.30-6) மணிக்குள் எழுந்து நீராடவேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள், ஒருவேளை மட்டும் உணவு உண்ணலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரமான ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரம், ‘ஓம் சரவணபவாய நம’, ‘ஓம் முருகா’ ஆகிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நாள் முழுவதும் ஜெபித்து வர வேண்டும்.

    திருப்புகழ், கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முக கவசம் பாடல்களில் ஏதேனும் ஒன்றை காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்யலாம். முருகன் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும். முருகனின் திருத்தலங்களுக்கு அருகில் இருப்பவர்கள் கோவிலுக்கு குழுவாகச் செல்லலாம். முருகன் கோவில் அமைந்துள்ள மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு புத்திரதோஷம் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் மழலைச்செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம். 
    அமாவாசையை அடுத்துவரும் ஏகாதசியை சுக்கில பட்ச ஏகாதசி என்றும், பவுர்ணமியை அடுத்த ஏகாதசியை கிருட்ண பட்ச ஏகாதசி என்றும் அழைக்கின்றனர்.
    தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவை சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார்.

    போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார். அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, ‘முரன்’ பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது.

    இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது. விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு ‘ஏகாதசி' எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.
    ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த ரிஷி பஞ்சமி விரதத்தை கணவனுடனோ அல்லது தனியாகவோ அனுஷ்டிக்க வேண்டும்.
    விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமி திதியை ‘ரிஷி பஞ்சமி’ என்று அழைக்கிறார்கள். அன்றைய தினம் சப்த ரிஷிகளை வணங்கி வழிபாடு செய்பவர்களின் இல்லங்களில் வளம் பெருகும் என்பது ஐதீகம். இந்த விரதத்தின் மூலம் வேண்டிய வரங்களைப் பெற முடியும். பெண்களின் சவுபாக்கியம் அதிகரிக்க வேண்டிச் செய்யப்படும் விரதம் இதுவாகும்.

    அதுவும் வயது முதிர்ந்த பெண்களே இந்த விரதத்தை செய்வது வழக்கமாகும். ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த ரிஷி பஞ்சமி விரதத்தை கணவனுடனோ அல்லது தனியாகவோ செய்ய வேண்டும். அன்றைய தினம் காலை நீர்நிலைகளில், நெல்லிப்பொடியை உடலில் தேய்த்து குளிக்க வேண்டும்.

    பிறகு வீட்டின் நடுவில் மண்டபம் அமைத்து அதில் கலசங்கள் வைத்து, அந்த கலசங்களில் சப்த ரிஷிகளையும், அருந்ததியையும் சேர்த்து ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும். சப்த ரிஷிகளுக்கு நைவேத்தியம் செய்ததை, 7 பேருக்கு தானமாக வழங்க வேண்டும். இரவு முழுவதும் சப்த ரிஷிகளின் கதைகளைக் கேட்டபடி கண் விழித்து இருக்க வேண்டும்.

    மறுநாள் காலையில் ரிஷிகளுக்கு ஹோமம் செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதே போல் ஏழு ஆண்டுகள் செய்து வந்தால், துன்பங்கள் விலகும். மங்கலம் உண்டாகும். செல்வங்கள் சேரும். சவுபாக்கியம் கிடைக்கும்.

    இந்த விரதங்களின் போது 10 விதமான தானங்களைச் செய்வது நன்மைகளை வழங்கும். இந்த தானங்கள் செய்யப்படுவது, நம்முடைய வாழ்விலும், விரதங்களைக் மேற்கொள்ளும் போதும், அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு வேண்டியே ஆகும்.

    கோ-தானம் (பசு அல்லது தேங்காய்), பூதானம் (நிலம் அல்லது சந்தனக்கட்டை), தில தானம் (எள்), ஹிரண்யம் (பொன்னாலான நாணயம்), வெள்ளி நாணயம், நெய், வஸ்திரம், நெல், வெல்லம், உப்பு ஆகியன. ஒவ்வொன்றையும் ஒரு பாத்திரம் அல்லது தட்டில் வைத்துத் தானம் செய்யலாம். தச தானம் செய்ய இயலாதவர்கள், பஞ்ச தானம் செய்யலாம். அவை, வஸ்திரம், தீபம், கும்பம், மணி, புத்தகம் ஆகியன.
    ஸ்ரீ விளம்பி ஆண்டில் ( 2018 - 2019) வரும் நவராத்திரிகளும், விரதம் இருக்க வேண்டிய நாட்களும் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஸ்ரீ விளம்பி ஆண்டில் ( 2018 - 2019) வரும் நவராத்திரிகளும், விரதம் இருக்க வேண்டிய நாட்களும் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    இதர நவராத்திரிகள்

    வராகி நவராத்திரி - ஆனி மாதம் 29-ந் தேதி (13.7.2018) வெள்ளிக்கிழமை முதல் ஆடி மாதம் 5-ந்தேதி (21.7.2018) சனிக்கிழமை வரை.

    சியாமளா நவராத்திரி - தை மாதம் 22-ந்தேதி (5.2.2019) செவ்வாய்க்கிழமை முதல் மாசி மாதம் 2-ந்தேதி (14.2.2019) வியாழக்கிழமை வரை.

    வசந்த நவராத்திரி - பங்குனி மாதம் 23-ந்தேதி (6.4.2019) சனிக்கிழமை முதல் பங்குனி மாதம் 30-ந்தேதி (13.4.2019) சனிக்கிழமை வரை.

    நவராத்திரி

    நவராத்திரி ஆரம்பம் - புரட்டாசி 24 (10.10.2018) புதன்கிழமை
    பத்ரகாளியஷ்டமி - பத்ரகாளி அவதார நாள் புரட்டாசி 30 (16.10.2018) செவ்வாய்க்கிழமை
    சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை - ஐப்பசி 1 (18.10.28) வியாழக் கிழமை
    ஆயுத பூஜை செய்ய - காலை 9.30 முதல் 10.30 வரை, பகல் 12.30 முதல் 1.30 வரை
    விஜயதசமி - ஐப்பசி 2 (19.10.2018) வெள்ளிக்கிழமை
    மறு பூஜை செய்ய - அதிகாலை 5.00-6.00, காலை 8.00 - 9.00
    ஸ்ரீ விளம்பி ஆண்டில் ( 2018 - 2019) விரதமிருந்து பூஜை செய்ய உகந்த பவுர்ணமி நாட்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஸ்ரீ விளம்பி ஆண்டில் ( 2018 - 2019) விரதமிருந்து பூஜை செய்ய உகந்த பவுர்ணமி நாட்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.  

    வைகாசி    15 (29.05.2018) செவ்வாய்
    ஆனி    13 (27.06.2018) புதன்
    ஆடி    11 (27.07.2018) வெள்ளி
    ஆவணி    09 (25.08.2018) சனி
    புரட்டாசி    08 (24.09.2018) திங்கள்
    ஐப்பசி    07 (24.10.2018) புதன்
    கார்த்திகை    06 (22.11.2018) வியாழன்
    மார்கழி    07 (22.12.2018) சனி
    தை    06 (20.01.2019) ஞாயிறு
    மாசி    07 (19.02.2019) செவ்வாய்
    பங்குனி    06 (20.03.2019) புதன்
    ஸ்ரீ விளம்பி ஆண்டில் ( 2018 - 2019) விரதமிருந்து விநாயகர் பூஜை மற்றும் வீட்டில் விநாயகர் ஹோமம் செய்வதற்கு உகந்த நாட்கள் என்னவென்று விரிவாக பார்க்கலாம்.
    ஸ்ரீ விளம்பி ஆண்டில் விரதமிருந்து விநாயகர் பூஜை மற்றும் வீட்டில் விநாயகர் ஹோமம் செய்வதற்கு உகந்த நாட்கள் விவரம் வருமாறு:-

    மே 25 - வெள்ளி
    ஜூன் 3 - ஞாயிறு
    ஜூன் 4 - திங்கள்
    ஜூன் 6 - புதன்
    ஜூன் 10 - ஞாயிறு
    ஜூன் 17 - ஞாயிறு
    ஜூன் 25 - திங்கள்
    ஜூன் 28 - வியாழன்
    ஜூலை 1 - ஞாயிறு
    ஜூலை 2 - திங்கள்
    ஜூலை 27 - வெள்ளி
    ஆக. 1 - புதன்
    ஆக. 3 - வெள்ளி
    ஆக. 14 - செவ்வாய்
    ஆக. 16 - வியாழன்
    ஆக. 17 - வெள்ளி
    ஆக. 29 - புதன்
    ஆக. 30 - வியாழன்
    ஆக. 31 - வெள்ளி
    செப். 12 - புதன்
    செப். 13 -வியாழன்
    செப். 20 - வியாழன்
    செப். 23 - ஞாயிறு
    அக். 11 - வியாழன்
    அக். 19 - வெள்ளி
    அக். 28 - ஞாயிறு
    அக். 29 - திங்கள்
    அக். 31 - புதன்
    நவ. 4 - ஞாயிறு
    நவ. 9 - வெள்ளி
    நவ. 11 - ஞாயிறு
    நவ. 14 - புதன்
    நவ. 18 - ஞாயிறு
    நவ. 23 - வெள்ளி
    நவ. 25 - ஞாயிறு
    நவ. 26 - திங்கள்
    டிச. 2 - ஞாயிறு
    டிச. 12 - புதன்
    டிச. 13 - வியாழன்
    டிச. 14 - வெள்ளி
    டிச. 27 - வியாழன்
    டிச. 31 - திங்கள்
    ஜன. 11 - வெள்ளி
    ஜன. 13 - ஞாயிறு
    ஜன. 21 - திங்கள்
    ஜன. 23 - புதன்
    ஜன. 24 - வியாழன்
    ஜன. 27 - ஞாயிறு
    பிப். 1 - வெள்ளி
    பிப். 8 - வெள்ளி
    பிப். 9 - சனி
    பிப். 10 - ஞாயிறு
    பிப். 11 - திங்கள்
    பிப். 15 - வெள்ளி
    பிப். 17 - ஞாயிறு
    பிப். 18 - திங்கள்
    பிப். 22 - வெள்ளி
    பிப். 24 - ஞாயிறு
    மார்ச் 3 - ஞாயிறு
    மார்ச் 10 - ஞாயிறு
    மார்ச் 13 - புதன்
    மார்ச் 17 - ஞாயிறு
    மார்ச் 18 - திங்கள்
    மார்ச் 22 - வெள்ளி
    மார்ச் 31 - ஞாயிறு
    ஏப். 10 - புதன்
    ஸ்ரீ விளம்பி ஆண்டில் மறைந்த நம் முன்னோர்களான பித்ருக்களை நினைத்து தர்ப்பணம் மற்றும் பூஜை செய்வதற்குரிய நாட்கள் விவரம் பின்வருமாறு.....
    ஸ்ரீ விளம்பி ஆண்டில் மறைந்த நம் முன்னோர்களான பித்ருக்களை நினைத்து தர்ப்பணம் மற்றும் பூஜை செய்வதற்குரிய நாட்கள் விவரம் வருமாறு:-

    ஜூன் 5 - செவ்வாய்
    ஜூன் 13 - புதன்
    ஜூன் 15 - வெள்ளி
    ஜூன் 17 - ஞாயிறு
    ஜூன் 20 - புதன்
    ஜூன் 22 - வெள்ளி
    ஜூன் 25 - திங்கள்
    ஜூன் 27 - புதன்
    ஜூன் 30 - சனி
    ஜூலை 10 - செவ்வாய்
    ஜூலை 11 - புதன்
    ஜூலை 13 - வெள்ளி
    ஜூலை 16 - திங்கள்
    ஜூலை 21 - சனி
    ஜூலை 23 - திங்கள்
    ஆக. 3 - வெள்ளி
    ஆக. 7 - செவ்வாய்
    ஆக. 8 - புதன்
    ஆக. 9 - வியாழன்
    ஆக. 13 - திங்கள்
    ஆக. 16 - வியாழன்
    ஆக. 17 - வெள்ளி
    ஆக. 20 - திங்கள்
    ஆக. 22 - புதன்
    ஆக. 23 - வியாழன்
    ஆக. 24 - வெள்ளி
    ஆக. 27 - திங்கள்
    செப். 3 - திங்கள்
    செப். 5 - புதன்
    செப். 12 - புதன்
    செப். 17 - திங்கள்
    செப். 20 - வியாழன்
    செப். 23 - ஞாயிறு
    செப். 25 - செவ்வாய்
    செப். 27 - வியாழன்
    செப். 28 - வெள்ளி
    செப். 30 - ஞாயிறு
    அக். 1 - திங்கள்
    அக். 2 - செவ்வாய்
    அக. 3 - புதன்
    அக். 6 - சனி
    அக். 7 - ஞாயிறு
    அக். 9 - செவ்வாய்
    அக். 11 - வியாழன்
    அக். 12 - வெள்ளி
    அக். 18 - வியாழன்
    அக். 21 - ஞாயிறு
    அக். 26 - வெள்ளி
    நவ. 4 - ஞாயிறு
    நவ. 6 - செவ்வாய்
    நவ. 7 - புதன்
    நவ. 16 - வெள்ளி
    நவ. 20 - செவ்வாய்
    நவ. 22 - வியாழன்
    நவ. 23 - வெள்ளி
    நவ. 29 - வியாழன்
    டிச. 4 - செவ்வாய்
    டிச. 6 - வியாழன்
    டிச. 14 - வெள்ளி
    டிச. 16 - ஞாயிறு
    டிச. 18 - செவ்வாய்
    டிச. 22 - சனி
    டிச. 25 - செவ்வாய்
    டிச. 28 - வெள்ளி
    டிச. 30 - ஞாயிறு
    ஜன. 2 - புதன்
    ஜன. 10 - வியாழன்
    ஜன. 13 - ஞாயிறு
    ஜன. 15 - செவ்வாய்
    ஜன. 17 - வியாழன்
    ஜன. 20 - ஞாயிறு
    ஜன. 21 - திங்கள்
    ஜன. 27 - ஞாயிறு
    ஜன. 28 - திங்கள்
    பிப். 4 - திங்கள்
    பிப். 12 - செவ்வாய்
    பிப். 13 - புதன்
    பிப். 14 - வியாழன்
    பிப். 17 - ஞாயிறு
    பிப். 19 - செவ்வாய்
    பிப். 26 - செவ்வாய்
    பிப். 27 - புதன்
    மார்ச் 6 - புதன்
    மார்ச் 12 - செவ்வாய்
    மார்ச் 15 - வெள்ளி
    மார்ச் 17 - ஞாயிறு
    மார்ச் 18 - திங்கள்
    மார்ச் 20 - புதன்
    மார்ச் 23 - சனி
    மார்ச் 27 - புதன்
    மார்ச் 28 - வியாழன்
    மார்ச் 29 - வெள்ளி
    மார்ச் 30 - சனி
    மார்ச் 31 - ஞாயிறு
    ஏப். 1 - திங்கள்
    ஏப். 4 - வியாழன்
    ஏப். 6 - சனி
    ஏப். 8 - திங்கள்
    ஏப். 10 - புதன்
    விளம்பி வருடத்தில் (2018 - 2019) ஒவ்வொரு மாதமும் வரும் பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமி விரத நாட்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    விளம்பி வருடத்தில் (2018 - 2019) ஒவ்வொரு மாதமும் வரும் பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமி விரத நாட்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    அஷ்டமி நாள்    - அஷ்டமியின் பெயர்  -  பூஜை பலன்கள்

    வைகாசி 23 (6-6-2018) புதன்கிழமை இரவு : அதிக அஷ்டமி - தொழில் விருத்தி உண்டாகும்.

    ஆனி 22 (6-7-2018) வெள்ளிக்கிழமை : பகவதாஷ்டமி - கடன் சுமை தீரும். அடியார்களுக்குச் செய்த தீமைகள் நீங்கும்.

    ஆடி 19 (4-8-2018) சனிக்கிழமை இரவு : நீலகண்டாஷ்டமி - கல்வியில் மேன்மை ஏற்படும்.

    ஆடி 20 (5-8-2018) ஞாயிற்றுக்கிழமை பகல்    : சகல துறைகளிலும் வெற்றி ஏற்படும்.

    ஆவணி 18 (3-9-2018) திங்கட்கிழமை : ஸ்தானு அஷ்டமி - லட்சுமி கடாட்சம் ஏற்படும். விஷ பயம் விலகும்.

    புரட்டாசி 16 (2-10-2018) செவ்வாய்க்கிழமை     : சம்புகாஷ்டமி - ஆயுள் விருத்தி ஏற்படும். தாய், தந்தையர்க்கு செய்த இன்னலால் ஏற்பட்ட தோஷம் விலகும்.

    ஐப்பசி 14 (31-10-2018) புதன்கிழமை : ஈஸ்வராஷ்டமி    - சகோதர பகை நீங்கும். கைலாச பதவி கிடைக்கும்.

    கார்த்திகை 14 (30-11-2018) வெள்ளிக்கிழமை : ருத்ராஷ்டமி - தனவரவு உண்டாகும். காலபைரவாஷ்டமி  - கோபத்தால் செய்த பாபங்கள் விலகும்.

    மார்கழி 14 (29-12-2018) சனிக்கிழமை : சங்கராஷ்டமி     - தொழில் விருத்தி ஏற்படும். தொழில் முறையில் செய்த பாபங்கள் விலகும்.

    தை 13 (27-1-2019) ஞாயிற்றுக்கிழமை இரவு : தேவதேவாஷ்டமி    - மன பயம் விலகும்.

    தை 14 (28-1-2019) திங்கட்கிழமை பகல் :     உயர் பதவி கிடைக்கும்.

    மாசி 14 (26-2-2019) செவ்வாய்க்கிழமை : மகேஷ்வராஷ்டமி - போட்டிகளில் வெற்றி, தொழில் துறையில் புது யுக்தி, முன்னேற்றம் ஏற்படும்.

    பங்குனி 14 (28-3-2019) வியாழக்கிழமை : திரியம்பகாஷ்டமி - திருமணத்தடை விலகும். யமபயம் நீங்கி ஆயுள் விருத்தி ஏற்படும்.

    இந்த நாட்களில் காலையில் சிவபெருமானையும் மாலையில் சூரிய அஸ்தமனத்தில் பைரவரையும் தரிசனம் செய்து வழிபடுதல் வேண்டும்.
    ×