என் மலர்
ஆன்மிகம்
- திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை.
- லால்குடி ஸ்ரீசப்த ரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-12 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: துவாதசி பின்னிரவு 2.41 மணி வரை. பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: விசாகம் இரவு 9.04 மணி வரை. பிறகு அனுஷம்.
யோகம்: சித்தயோகம்.
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் தலங்களில் அபிஷேகம். திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீகல்யாண வெங்கட்ராமன் சுவாமிக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை. லால்குடி ஸ்ரீசப்த ரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உண்மை
ரிஷபம்-செலவு
மிதுனம்-லாபம்
கடகம்-வரவு
சிம்மம்-போட்டி
கன்னி-ஆர்வம்
துலாம்- மாற்றம்
விருச்சிகம்-உவகை
தனுசு- பாராட்டு
மகரம்-கவனம்
கும்பம்-வெற்றி
மீனம்-சிறப்பு
- 31-வது முக்தி தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.
- அதிஷ்டானங்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும்.
காஞ்சிபுரம்:
காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதியாக திகழ்ந்த மகாபெரியவா என்று அழைக்கப்படும் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா சுவாமிகளின் 31-வது முக்தி தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி ஆராதனை மகோற்சவம் நேற்று தொடங்கி முதல் நாள் நிகழ்ச்சியாக சதுர்வேத பாராயணம் நடைபெற்றது. ரிக் வேதத்தின் முதுநிலைப் பாடத்தைத் தொடர்ந்து 40 நாட்களாக அதிஷ்டானத்தில் பாஸ்கர கன பாடிகள் என்பவரால் பாடப்பட்டு வந்தது.
அதிஷ்டானத்தில் மகா பெரியவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
நாளை ஸ்ரீ ருத்ர பாராயணம், பூஜை, ஹோமங்கள் நடைபெறும். மகா பூரணா ஹுதி தீபாராதனைக்கு பிறகு, மகா பெரியவா சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும்.
பின்னர் கணபதி சேது லாரா குழுவினரின் புல்லாங்குழல் இன்னிசை, மாலை மாண்டலின் வித்வான் யு.ராஜேஷ் குழுவினரின் இன்னிசை நடைபெறுகிறது.
- மண்டல பூஜை இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
- இன்று இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி தொடங்கியது.
அன்று முதல் தினமும் மாலை அணிந்து விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாவதை தடுக்க இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய முடிந்தது.
மெய்நிகர் வரிசை (ஆன்லைன் முன்பதிவு) மூலமாக தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட போதிலும், உடனடி முன்பதிவு மூலமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் பக்தர்களை ஒழுங்குபடுத்தி அனுப்ப கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டனர். இதனால் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுவது தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் 41 நாட்களாக நடந்து வந்த மண்டல பூஜை இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு நேற்று மாலை தங்க அங்கி அணிவிக்கப்பட்டது. அதே அலங்காரத்தில் இன்று பக்தர்களுக்கு ஐயப்பன் காட்சியளித்தார். பகல் 12 முதல் 12.30 மணி வரை மண்டல பூஜை நடை பெற்றது.
பக்தர்கள் வருகையை கட்டுப்படுத்தும் விதமாக இன்று ஆன்லைன் முன்பதிவு முறையில் 60 ஆயிரம் பக்தர்களும், உடனடி முன்பதிவு முறையில் 5 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர். மண்டல பூஜை முடிந்து இன்று இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.
அதன்பிறகு மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. அன்று முதல் ஜனவரி 19-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக் கப்படுவார்கள். ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு ஜோதி தரிசனம் நடைபெறு கிறது.
மகரவிளக்கு பூஜை காலத்தில் தினமும் அனும திக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை மண்டல பூஜை காலத்தை போன்றே கடைபிடிக்கப்பட உள்ளது. மேலும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு ஜனவரி 13-ந்தேதி 50 ஆயிரம் பக்தர்களையும், 14-ந்தேதி 40 ஆயிரம் பக்தர்களையும் மெய்நிகர் வரிசை முறையில் அனும திக்க முடிவு செய்யப்பட் டுள்ளது.
அந்த நாட்களில் உடனடி முன்பதிவு அடிப்படையில் எத்தனை பக்தர்களுக்கு அனுமதி வழங்குவது என்று முடிவு எதுவும் தற்போது எடுக்கப்படவில்லை.
- டிக்கெட்டுகள் வழங்க 91 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- 10 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி ஜனவரி 10-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு 19-ந் தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்த 10 நாட்களுக்கு உண்டான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 25 நிமிடத்தில் 1.40 லட்சம் டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்தனர்.
ஆனால் இந்த டிக்கெட்டுகளை பெறுவதற்காக 14 லட்சம் பேர் தேவஸ்தான இணையதளத்தில் முயற்சி மேற்கொண்டு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த 10 நாட்களுக்கான இலவச தரிசன டோக்கன்கள் திருப்பதியில் 9 இடங்களில் வழங்கப்பட உள்ளது. இதற்கான கவுண்டர்கள் ஏற்பாடு செய்வதை செயல் அதிகாரி ஷியாமலா ராவ், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரியுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனத்திற்காக ஜனவரி 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 3 நாட்களுக்கு உண்டான 1.20 லட்சம் இலவச சர்வதரிசன டோக்கன்கள் ஜனவரி 9-ந்தேதி காலை 5 மணிமுதல் தொடர்ந்து வழங்கப்படும்.
3 நாட்களுக்கான டோக்கன்கள் முடிந்த பின்னர், அந்தந்த நாட்களுக்கு டோக்கன்கள் முந்தைய நாள் வழங்கப்படும்.
இதற்காக திருப்பதியில் 8 மையங்களில் 87 கவுண்டர்களும், திருமலையில் 4 கவுன்டர்களும் என மொத்தம் 91 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் தங்களின் ஆதார் அட்டையை காண் பித்து டோக்கன் பெற வேண்டும். இந்தமுறை முறைகேடுகள் நடக்காமல் இருக்க டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு அவர்களின் புகைப்பட அடையாளத் துடன் கூடிய டோக்கன் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 73,301 பேர் சாமி தரிசனம் செய்தனர்.26,242 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
ரூ.4.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.நேரடி இலவச தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- மீனாட்சி அம்மன் விக்ரகம் மரகதக் கல்லால் ஆனது.
- பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம்.
* மீனாட்சி அம்மன் விக்ரகம் மரகதக் கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம்.
* அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக.

* அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும் ஏனென்றால் கிளி பேசுவதை திருப்பி பேசும் அதைப்போல் பக்தர்களின் வேண்டுதலை திரும்பத் திரும்ப அன்னையிடம் சொல்லும் இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும்.
* அன்னையின் விக்ரகம் சுயம்பு ஆகும் சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும் ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின் சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரகமாக நின்றுவிட்டாள் அதனால் சுயம்பு அன்னை.
* அன்னை மதுரையில் யாகசாலையில் அக்னியில் அவதரித்தாள். இவளின் இயர்பெயர் தடாதகை அங்கயற்கண்ணிஆகும்.
* பாண்டிய மகாராஜாவுக்கும் மஹாராணி காஞ்சனமாலைக்கும் ஒரே மகள். அதனால் பாண்டிய நாட்டின் பேரரசி ஆவாள்.
* இங்கு கற்பகிரகத்தில் அன்னையின் விக்ரகம் உயிருடன் இருக்கும் ஒரு பெண்ணை பார்ப்பது போல் இருக்கும்.

* அன்னையே சிலையாக இருப்பதால் மிகவும் அழகாக இருக்கும் இவளை பார்த்து கொண்டே இருக்க வேண்டும்போல் இருக்கும்.
* அன்னையின் சிலை மிகவும் நளினமாக இருக்கும் அன்னையின் சன்னதியில் தாழம்பூ குங்குமம் பிரசாதமாக தரப்படும்.
* மதுரையில் அன்னைக்கே முதல் மரியாதை. இங்கு அம்பிகையை முதலில் வணங்க வேண்டும். பின்னர் தான் சுவாமியை தரிசிக்க வேண்டும்.
* மீனாட்சி சுந்தரேஸ்வரர் மதுரையை அன்றும் இன்றும் என்றும் ஆட்சி செய்வார்கள் என்பது சிவவாக்கு. இங்கு எம்பெருமான் 64 திருவிளையாடல் புரிந்து உள்ளார். வேறு எந்த ஆலயத்திலும் இத்தனை திருவிளையாடல் புரிந்தது இல்லை.
* அனைத்து சிவ ஆலயமும் முக்தியை தரும் ஆனால் சிவ ஆலயத்தில் சகல செல்வமும் தரும் கோவில். மீனாட்சி சுந்தரேஸ்வரர் வாழ்ந்ததால் மதுரைக்கு வந்தாலே முக்தி
* இந்த கோவில் அம்மன் பெயரில் அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய அம்மன் கோவில். சக்தி பீடமும் ஆகும்.
* வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயம். சித்திரை திருவிழா அன்னைக்கும் ஆவணிமூல பெருவிழா சுவாமிக்கும் நடக்கும். மிகவும் அழகான கோபுரங்கள் கொண்ட கோவில்.
* தமிழகத்தில் மிகப்பெரிய விழா நடக்கும் முதல் ஆலயம். சைவமும் வைணவ சமயமும் ஒன்றாக கொண்டாடும் விழா.
* உலக அதிசியங்களுள் ஒன்று மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் என்றே கூறலாம். இவளை சரண் அடைந்தால் நம்மை காப்பாள் அன்னை மீனாட்சி. நவராத்திரி 4-ம் நாள் அன்று நமது சிவகங்கை விஸ்வநாதர் ஆலயத்தில் விசாலாட்சி மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.
* மதுரையில் மீனாட்சி தினமும் 8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு
* அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும். காலையில் சின்ன பெண் போன்ற அலங்காரம், உச்சி காலத்தில் மடிசார் புடவை, மாலை நேரத்தில் தங்க கவசம், வைரக்கிரீடம் போன்ற அலங்காரங்கள். இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டாலான புடவை என்ற அலங்காரங்களுடன் அன்னையைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும்.

* எல்லா கோவில்களும் போல இங்கும் பள்ளியறை அம்மன் சன்னதியில் இருக்கிறது. இரவு சுந்தரேஸ்வரரது வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமி சன்னதியில் இருந்து பள்ளியறை வரும். பாதுகைகள் வந்த பின் அன்னைக்கு விசேஷ ஹாரதி (மூக்குத்தி தீபாராதனை ) நடக்கிறது.
* அதன் பின்னர் அம்பிகையின் சன்னதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை, பால், பழங்கள், பாடல்கள், வாத்ய இசை என்று சகல உபசாரங்களுடன் இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது.
* மதுரையில் பள்ளியறை பூஜை பார்க்கப் பார்க்கத் திகட்டா காட்சி. பள்ளியறை பூஜை சிவ – சக்தி ஐக்யத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்திற்கு சிறப்பு அதிகம்.
* மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கு மதுரை மீனாட்சி கோவிலில் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரிசித்தல் நல்ல பயனைக் கொடுக்கும்.
* பிள்ளை இல்லாதவர்கள் காலையில் மீனாட்சியின் சிறுபிள்ளை அலங்காரத்துடன் நடக்கும் ஆராதனையை தரிசித்து மனமுருகி வேண்டினால் கட்டாயம் பலன் தருவாள் அன்னை என்கின்றனர்.
* வியாபார நஷ்டம் தொழில் மற்றும் வேளையில் பிரச்சனை உள்ளவர்கள் அன்னையின் வைர கிரீட அலங்காரம் கண்டு முன்னேற்றம் பெறலாம்.
* மதுரை மீனாட்சி அம்மன் சிலை பச்சை மரகத கல்லிலால் ஆனது. கருவறை பக்கம் மேளம் நாதஸ்வரம் போன்ற இசை கருவிகளை இசைக்க மாட்டார்கள். கல் என்றாலே கடினமானது என்று சொல்வார்கள். மரகத கல் மிக மென்மையானது. மேளம் நாதஸ்வரம் போன்ற இசை கருவிகளை இசைக்கும் போது வரும் ஒலி அதிர்வுகளை கூட தாங்கி கொள்ள முடியாதது. அப்படிப்பட்ட ஒரு கல்லை (ஒலி அதிர்வுகளை கூட தாங்க முடியாத) உளியால் செதுக்கி மீனாட்சி அம்மன் சிலை செய்து இருக்கிறார்கள்.
- கண்ணனின் திருநாமத்தைப் பாடுகின்றோம்.
- உன் திருவடிகளைப் பாடி, உன் நினைவிலேயே வாழுகின்றோம்.
திருப்பாவை
பாடல்:
கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
ஏற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
"கன்றுகளை ஈன்ற பசுக்களிடம் இருந்து பால் கறப்பவர்கள், ஆயர் குலத்தினர். இருந்தாலும் வலியவரும் பகைவர்களுடன் போர் செய்து அவர்களின் வீரம் அழியும்படி செய்வார்கள். அந்த கோபாலர்களின் குலத்தில் பிறந்த, புற்றில் உள்ள நாகத்தின் படம் போன்ற மறைவிடத்தையும், காட்டில் திரியும் பெண் மயில் போன்ற சாயலையும் உடையவளே! புறப்படுவாய்! உறவினர்களும், தோழியருமாகிய எல்லோரும் உன் முற்றத்திலே கூடி கண்ணனின் திருநாமத்தைப் பாடுகின்றோம். நீ சிறிதேனும் எங்களுடன் பேசாமல் உறங்குவதன் பொருள் என்ன?
திருவெம்பாவை
பாடல்:
மெய்யார் தடம் பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா! வழி அடியோம் வாழ்ந்தோங் காண்! ஆரழல்போல்
செய்யா! வெண்ணீறாடி! செல்வா! சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்யார்கள் உய்யும் வகையெல்லாம் உய்த்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
ஐயனே! அகன்ற குளங்களில் மொய்க்கின்ற வண்டுகளையுடைய மலர்கள் நிறைந்திருக்கின்றன. அதில் மூழ்கி, 'முகேர்' என்று ஓசை எழும்படி கைகளால் நீரைக் குடைந்து குடைந்து நீந்தி உன் திருவடிகளைப் பாடுகின்றோம். உன் திருவடிகளைப் பாடி, உன் நினைவிலேயே வாழுகின்றோம். நெருப்பைப் போன்ற சிவந்தவனே! வெண்ணீறு அணிந்தவனே! சிறிய இடையுடன் மை தீட்டிய கண்களை உடைய பார்வதியின் கணவனே! உன் அடியவர்களை ஆட்கொண்டு விளையாடுகின்றாய். அத்தகைய உன் அடியவர்களின் வழியிலேயே நாங்கள் செல்கிறோம். எங்களைக் கைவிடாமல் ஏற்றுக்கொண்டு காப்பாற்றுவாயாக.
- இன்று சர்வ ஏகாதசி.
- தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-11 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: ஏகாதசி நள்ளிரவு 1.10 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: சுவாதி இரவு 6.51 மணி வரை பிறகு விசாகம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சர்வ ஏகாதசி. சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மானக்கஞ்சார நாயனார் குரு பூஜை. மதுரை ஸ்ரீ கூடலழகர் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை மற்றும் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. குருவித்துறை ஸ்ரீ குருபகவான் சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. ஆலங்குடி ஸ்ரீ குரு பகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அமைதி
ரிஷபம்-போட்டி
மிதுனம்-ஆர்வம்
கடகம்-சிறப்பு
சிம்மம்-சிரத்தை
கன்னி-மாற்றம்
துலாம்- உவகை
விருச்சிகம்-ஆக்கம்
தனுசு- தெளிவு
மகரம்-உதவி
கும்பம்-உண்மை
மீனம்-பாசம்
- புதுமனைப் புகுவிழா நடைபெறும் அன்று நடைபெறும் ஹோமத்தின்போது பசுவையும், கன்றையும் அழைத்து வருவார்கள்.
- அப்படி கோமாதா வருவது புதுமனையில் லட்சுமி தேவியே எழுந்தருள்வது போன்ற ஒரு தெய்வீகத் தோற்றத்தைத் தருவதாகும்.
நாம் புதிதாக வீடு கட்டி கிரகப் பிரவேசம் நடத்தும்போது கன்றுடன் கூடிய பசுவைப் புதிய வீட்டிற்கு அழைத்து வருவதை வழக்கத்தில் வைத்து இருக்கிறோம்.
புது வீட்டுக்குள் வரும் பசு அங்கு வைத்து ஒரு வாய்ப்புல் தின்று அங்கேயே அது தன் கோமியத்தை இட வேண்டும்;
அந்தக் கோமியத்தில் மஞ்சள் பொடி கலந்து அந்தப் புதுமனையின் உள்ளும் புறமும் எங்கும் தெளிக்க வேண்டும் என்பதே.
புதுமனை புகு விழாவின் முக்கிய நிகழ்வாகும்.
இதன் மூலம் அந்த வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் நோய், நொடியின்றி செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள் என்பது ஐதீகமாக உள்ளது.
புதுமனைப் புகுவிழா நடைபெறும் அன்று நடைபெறும் ஹோமத்தின்போது பசுவையும், கன்றையும் அழைத்து வருவார்கள்.
அப்படி கோமாதா வருவது புதுமனையில் லட்சுமி தேவியே எழுந்தருள்வது போன்ற ஒரு தெய்வீகத் தோற்றத்தைத் தருவதாகும்.
இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் தனிப் பலன் உண்டு.
பால் நீண்ட வாழ்வையும், தயிர் புத்ர விருத்தியையும், நெய் மோட்சத்தையும், பஞ்ச கவ்யம் ஆன்ம விருத்தியையும் தரும்.
பால் குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.
சிவனுக்கு அபிஷேகம் செய்து, அவனை அர்ச்சித்து, ஆராதித்தால் அவனது அருட்கடலில் மூழ்கித் திளைக்கும் பெரும் பேறு அடியவர்களுக்கு எளிதில் கிடைக்கும்.
சிவனுக்கு மிக விருப்பமான அபிஷேகப் பொருள் பஞ்ச கவ்வியம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
- கங்கா தேவிக்கும், மகாலட்சுமிக்கும் தாமதமாக வந்ததால் பசுவின் உடலில் இடமில்லாத நிலை ஏற்பட்டது. பசு அவர்கள் மீது இரக்கம் கொண்டது.
- தன் பின் பகுதியைக் காட்டி, இந்த இரண்டு பாகங்களும்தான் காலியாக உள்ளன. நீங்கள் வேண்டுமானால் அங்கு குடியேறிக் கொள்ளலாம் என்று சொன்னது.
உலகத்தைப் படைத்தபோது பிரம்மா பசுவையும் படைத்தார். அது மட்டுமின்றி பசுவின் உடலில் பதினான்கு உலகங்களையும், முப்பத்து முக்கோடி தேவர்களையும் இடம் பெறச் செய்தார்.
எல்லாத் தேவர்களும் பசுவின் உடலில் இடம் பெற்றுவிட்ட நிலையில் கங்கா தேவிக்கும், மகாலட்சுமிக்கும் தாமதமாக வந்ததால் பசுவின் உடலில் இடமில்லாத நிலை ஏற்பட்டது. பசு அவர்கள் மீது இரக்கம் கொண்டது.
தன் பின் பகுதியைக் காட்டி, இந்த இரண்டு பாகங்களும்தான் காலியாக உள்ளன. நீங்கள் வேண்டுமானால் அங்கு குடியேறிக் கொள்ளலாம் என்று சொன்னது.
அவர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் அந்த இடத்தை ஏற்றுக்கொண்டனர்.
அதனால்தான் நாம், பசுவின் முன் பாகத்தையோ, முகத்தையோ தொட்டு நம்முடைய கண்களில் பக்தி உணர்வுடன் ஒற்றிக்கொள்வதோடு கோமாதா வழிபாட்டை முடித்து கொள்வதில்லை.
பசுவின் பின் பகுதியையும் தொட்டு இரண்டு கண்களிலும் பணிவுடன் ஒற்றிக்கொள்கிறோம்.
அதனால்தான் சாணத்துக்கும், கோமியத்துக்கும் அவ்வளவு மரியாதையும் மதிப்பும் உள்ளது.
பசு தரும் சாணத்தைத்தான் நாம் பெரும் புனிதப் பொருளாகக் கருதி அதிலிருந்து விபூதி தயாரித்து நம் உடம்பெங்கும் பூசி நோய்கள் அனைத்தையும் போக்கிக் கொள்கிறோம்.
அதுபோல பசுவிடம் இருந்து நாம் பெறும் கோமியமும் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது.
- சோமவாரம்‘ என்பது விரதம் மேற்கொள்ளும் நாள். எனவே அன்று தலையில் எண்ணை தேய்த்துக் கொள்ளக் கூடாது.
- சிவபெருமானுக்கு சுவேத அட்சதையை (வெள்ளையான முனை முறியாத அரிசி) லட்சம் சமர்ப்பித்தால் சகல சம்பத்தும் உண்டாகும்.
01. பிலிப்பைன்சில் வாழும் மக்கள் சிவனைச் 'சிவப்பன்' என அழைத்து வழிபடுகின்றனர்.
02. சி-சிவன், வா-அருள்,ய-ஆவி, ந-திரோதம், ம-மலம் என 'சிவாயநம' என்பதில் ஒவ்வோர் எழுத்தும் ஓர் உண்மையினைச் சுட்டி நிற்கிறது.
03. சிவராத்திரி பெரு நாளைச் சிவபெருமான் லிங்கத்தில் தோன்றிய நாளென்றும், சோதிமயமாய்த் தாணு வடிவில் பிரம்மா, விஷ்ணு இருவருக்கும் இடையே தோன்றிய நாளென்றும், புனர் உற்பவத்திற்காகத் தேவி பூஜை செய்த நாளென்றும் கூறுகின்றனர்.
04. சிவ வழிபாட்டினை இன்னும் ஆஸ்திரேலியப் பழங்குடியினர் தொடர்கின்றனர்.
05. காஞ்சி ஏகாம்பர நாதரைத் திங்கட்கிழமை தோறும் வணங்கினால் நலம் பெருகும்.
06. திருவூறல் என்னும் திருத்தலத்தில் உள்ள 'நந்திமடு'வில் நீராடுதல் விசேஷம்.
07. திருப்பாசூரு சிவ திருத்தலத்தில் உச்சிக் காலப் பூஜையை தரிசிப்பது நல்லது.
08. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேந்தன்பட்டி சிவன் ஆலயத்தில் ஒரே வெள்ளைக் கல்லில் செய்த 6 அடி நீளமுள்ள நந்தி உள்ளது. இதன் அகலம் 3அடி.
09. சிவபெருமானுக்கு வழங்கப்படும் பெயர்களில் ஒன்று எண் குணத்தான். அந்த எட்டுக் குணங்களாவன் பிறப்பின்மை, இறப்பின்மை, பற்றின்மை, பெயரின்மை, உவமையின்மை, ஒரு வினையின்மை, குறைவில்லா அறிவுடைமை, கோத்திரம் இன்மை.
10. ராஜபோகத்தை விரும்புவோன் பழுதில்லாத பத்துக் கோடி மலர்களால் பாத்திவ லிங்கத்தைப் பூஜிக்க வேண்டும்.
11. பிறப்பே எடுக்காத சிவபெருமானுக்குப் பிறந்த நட்சத்திரம் திருவாதிரை. இதுவே ஜென்ம நட்சத்திரம். இதனை சங்க இலக்கியம் 'பிறவா யாசகப் பெரியோன்' எனக் கூறுகின்றது.
12. 'சோமவாரம்' என்பது விரதம் மேற்கொள்ளும் நாள். எனவே அன்று தலையில் எண்ணை தேய்த்துக் கொள்ளக் கூடாது.
13. சிவபெருமானுக்கு சுவேத அட்சதையை (வெள்ளையான முனை முறியாத அரிசி) லட்சம் சமர்ப்பித்தால் சகல சம்பத்தும் உண்டாகும்.
14. முற்பிறப்பில் சிவனைக் குறித்துத் தவமிருந்து (பதிம்தேசி) கணவன் வேண்டும் என்று ஐந்து முறை கூறியதால் திரவுபதி ஐந்து கணவரை மணக்க வேண்டியதாயிற்று.
15. 'சிவாயநம' என்னும் சூட்சும பஞ்சாட்சரம் ஒரு தலைமாணிக்கம் என்றும், 'சிவயசிவ' என்ற காரண பஞ்சாட்சரம் இருதலை மாணிக்கம் என்றும் அழைக்கப்படுகின்றது.
16. சிவபெருமானின் திருக்காதுகளில் குழை வடிவில் இருக்கும் கந்தர்வர்கள் "அவசுதரர், கம்பளர்" அவர்களை 'ஹாஹா', 'ஹூஹூ' என்றும் அழைப்பர்.
- இளநீர், கரும்பின் சாறு, தயிர், தேன், நீர், நீறு, பசுநெய், பழம், பால், வெண்ணை இவையே சிவபிரானுக்கு உகந்த அபிஷேகப் பொருட்கள்.
- பால், தயிர், வெண்ணை, நெய், திருநீறு என்கிற இவை ஐந்துமே சிவனுக்குரிய ‘ஆனிடை ஐந்து’
01. ஜப்பானிய மக்கள் முற்காலத்தில் சிவனைச் 'சிவோ' என அழைத்து வணங்கியுள்ளனர்.
02. சிவபெருமான் முதன் முதலில் படைத்த மலை திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலம்.
03. இறைவன் சிவபெருமான் அர்ச்சுனனுக்குப் பாசுபதாஸ்திரம் கொடுத்த திருத்தலம் திருவேட்களம் என்னும் சிற்றூர். இங்கு இறைவனின் பெயர் பாசுபதேஸ்வரர்.
04. சிவபெருமான் ஆலகால நஞ்சினை அருந்திய பொழுது, உமாதேவியார் அவருடைய கண்டத்தைப் பிடிக்க, அவர் அவ்விஷக் கறையைத் தமது கண்டத்திற் காட்டியருளிய திருத்தலம் இலுப்பைப்பட்டு, இவ்வூர் பந்தணை நல்லூருக்கு அருகில் உள்ளது.
05. சிவனே கணக்கராய் இருந்து கோயிற் கணக்கை அரசனிடம் ஒப்புவித்த திருத்தலம்-'இன்னம்பர்' திருக்குடந்தை அருகில் உள்ளது.
06. சிவபிரானுக்கு பிடித்த ராகம் சங்கராபரணம். அன்னை உமையவளுக்கு பிரியமான ராகம்-கல்யாணி, தோடி, சாவேரி, தன்யாசி, பைரவி.
07. திருவாரூர் தியாராசர் பெருமானுக்கு தினமும் செங்கழுநீர்ப் பூ படைக்கப்படுகிறது.
08. கஸ்தூரி, கோரோசனம், குங்குமப்பூர், பச்சைக்கற்பூரம் முதலிய நறுமணப் பொருட்களைக் கூட்டி சிவபெருமானுக்கு ஒருமுறை சந்தனக் காப்பு அலங்காரம் செய்பவர் தேவ வருடத்தில் கோடி வருடம் சிவலோகத்தில் இன்புற்றிருப்பர் எனச் 'சிவ புண்ணியத் தெளிவு' கூறுகிறது.
09. இளநீர், கரும்பின் சாறு, தயிர், தேன், நீர், நீறு, பசுநெய், பழம், பால், வெண்ணை இவையே சிவபிரானுக்கு உகந்த அபிஷேகப் பொருட்கள்.
10. பால், தயிர், வெண்ணை, நெய், திருநீறு என்கிற இவை ஐந்துமே சிவனுக்குரிய 'ஆனிடை ஐந்து'
- ‘நமச்சிவாயத்’ திருப்பதிகத்தைச் சுந்தரமுர்த்தி நாயனார் கெடுமுடி என்னும் ஊரில் பாடியருளினார்.
- சிவபெருமானுக்கு வெண்மை நிறப் பட்டாடை அணிவிப்பவர்கள் மோட்சம் பெறுவார்கள் என்பது இந்து மத நம்பிக்கை.
1. சிவன் பேயன் வாழையிலும், விஷ்ணு முகுந்தன் வாழையிலும், பிரம்மா-பூவன் வாழையிலும் குடி கொண்டிருப்பதாலேயே இந்த மூன்று வாழைப் பழங்களில் ஒன்றையாவது இறைவனுக்குப் படைக்க வேண்டும்.
2. சிவத் தியானம் செய்யும் மகா வித்துவானான நந்தியே மகாதேவனைத் தரிசிக்க எனக்கு அனுமதி கொடு என்று கூறிக் கோவிலின் உள்ளே செல்லும்போத இரு கரங்களையும் மார்புக்கு நேராகக் குவித்து அஞ்சலி செய்து கொண்டே வலம் வருதல் வேண்டும்.
3. சிவனுடைய கடைசி அம்சம் கால பைரவர் அதனாலேயே கோவில்களில் அர்த்த ஜாமம் முடியும் போது கடைசியாகப் பைரவர்க்குத் தீபாராதனை செய்கின்றனர்.
4. 'நமச்சிவாயத்' திருப்பதிகத்தைச் சுந்தரமுர்த்தி நாயனார் கெடுமுடி என்னும் ஊரில் பாடியருளினார்.
5. சிவபெருமானுக்கு வெண்மை நிறப் பட்டாடை அணிவிப்பவர்கள் மோட்சம் பெறுவார்கள் என்பது இந்து மத நம்பிக்கை.
6. பிரதோஷ விழாவில் நந்தி பெருமானுக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் செய்ய வேண்டும். சிவாலயங்களில் காலையில் வலம் வந்தால் நோய் நீங்கும்.பகலில் வலம் வந்தால் விருப்பம் அளிக்கும். மாலையில் வலம் வந்தால் பாவங்கள் அகலும் அர்த்த சமாத்தில் வலம் வந்தால் மோட்ச சித்தி உண்டாகும்
7. பிரதோச விழாவின் போது நந்தி தேவர் பக்கத்திலும் இறைவன் திருச்சந்நிதியிலும் நெய் விளக்கு வைக்க வேண்டும்.
8. சிவன் என்னும் பெயர் திராவிட மொழிச் சொல். இது பிற்காலத்தில் வடமொழியில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
9. மாதப் பிறப்பு சதுர்த்தி, அட்டமி, நவமி, சதுர்த்தி, அமாவாசை, பவுர்ணமி, திங்கள் ஆகிய நாட்களில் வில்வம் எடுக்கக் கூடாது.
10. சங்க இலக்கிய காலத்திலும் சிலப்பதிகார காலத்திலும் சிவாலயங்கள் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன.






