என் மலர்
அமெரிக்கா
- முக்கிய அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தனர்.
- இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன.
இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் கோலகாலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுக்க பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு என நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் உலக நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், முக்கிய தலைவர்கள் இந்தியாவுக்கு தங்களின் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில், இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று இருக்கிறது.
அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள பிரபலமான டைம்ஸ் சதுக்கத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடினர்.
- 50 பேர் கொண்ட ஒரு கும்பல் முகமூடி அணிந்து உள்ளே புகுந்தது
- இந்த கும்பல் ஒரு வன்முறை வெறியாட்டத்தையே நிகழ்த்தியது
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ளது கனோகா பூங்கா (Canoga Park). இதன் அருகே உள்ளது வெஸ்ட்ஃபீல்ட் டோபங்கா வணிக வளாகம் (Westfield Topanga shopping mall).
இந்த வணிக வளாகத்தில் உள்ள நார்ட்ஸ்ட்ராம் பல்பொருள் அங்காடியில் (Nordstrom Department Store), 2 நாட்களுக்கு முன் மாலை 4 மணியளவில் திடீரென சுமார் 50 பேர் கொண்ட ஒரு கும்பல் உள்ளே நுழைந்தது.
அந்த கும்பல் தங்கள் அடையாளங்களை மறைக்க பலவிதமான முகமூடிகளை அணிந்து வந்தது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வாசலில் இருந்த காவலர்கள் முகங்கள் மீது கரடியை விரட்ட பயன்படுத்தும் ஸ்பிரேயை அடித்தனர். இதனால் அந்த காவலர்கள் செயலிழந்து நின்றனர். அதன் பிறகு அந்த கும்பல் அங்கு ஒரு வன்முறை வெறியாட்டத்தையே நிகழ்த்தியது.
அந்த வன்முறை கும்பல் கடையில் உள்ள கைக்கு கிடைத்த விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் பைகளில் போட்டு கொண்டன. கண்ணாடி அலமாரியில் வைக்கப்பட்டிருந்த பல விலையுயர்ந்த பொருட்களையும், துணிக்கடை பொம்மைகளையும் நாசம் செய்தது. இவர்களின் வெறியாட்டத்தை கண்ட கடை ஊழியர்கள் செய்வதறியாது பயந்து நின்றனர்.
அந்த கொள்ளையர்கள் அங்குள்ள விலையுயர்ந்த பொருட்களையும், ஆடைகளையும் கொள்ளையடித்த பிறகு காவல்துறை வருவதற்குள் வேகவேகமாக வெளியேறி, பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் லெக்ஸஸ் (Lexus) கார்களில் தப்பித்து சென்றனர்.
"காட்டுமிராண்டித்தனமான ஒரு வன்முறையிலும், கொள்ளையிலும் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக அங்கிருந்தவர்களோடு நேரில் பேசி வருகிறோம். இது வெறும் கொள்ளை சம்பவம் மட்டுமல்ல. இப்பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விஷயம். இக்குற்றத்தில் சம்பந்தபட்டவர்களை விரைவில் பிடிக்கப்படுவார்கள். அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தரப்படும்" என இச்சம்பவம் குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை ஆணையர் ஜிஸெல் எஸ்பினோஸா கூறியிருக்கிறார்.
கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.2.5 கோடிக்கு மேல் இருக்கலாம் என தெரிகிறது.
- காட்டுத்தீ லஹாய்னா பகுதியில் சுமார் 100 பேரை பலி வாங்கியது
- வீடியோக்களின் உண்மைதன்மை குறித்து அறியாதவர்களால் அவை வேகமாக பரப்பப்பட்டது
மேற்கு அமெரிக்காவில் உள்ள தீவு ஹவாய்.
இம்மாத தொடக்கத்தில் இத்தீவில் உள்ள மவுய் தீவிலும், அருகிலுள்ள சிறு தீவுகளிலும் ஒரு காட்டுத்தீ தொடங்கி படுவேகமாக பரவியது.
பலமாக வீசிய காற்று இதனை மேலும் வேகமாக பரவ செய்ததால் தீ கட்டுக்கடங்காமல் காடுகளை சேதம் செய்தது. ஹவாய் தீவின் லஹாய்னா பகுதியில் சுமார் 100 பேரை இது பலி வாங்கியது. இதில் 1000 பேருக்கு மேல் காணாமல் போனார்கள்.
இந்த காட்டுத்தீ குறித்து இணையத்தில் செய்திகளும், வீடியோக்களும் பரவி வந்தன. ஆனால், இவற்றில் ஒரு சில ஹவாய் காட்டுத்தீ சம்பந்தமானது என வேண்டுமென்றே பொய்யாக பதிவேற்றப்பட்டவை.
அதன் உண்மைதன்மை அறியாதவர்களால் இந்த வீடியோ காட்சிகள் வேகமாக வைரலாக்கப்பட்டது.
முதல் வீடியோவில் தீ வேகமாக பரவுகிறது. அதை தூர நின்று பார்வையாளர்கள் பதிவு செய்கின்றனர். இதை வெளியிட்ட பயனர் "தெருவையே தீ நாசம் செய்கிறது" என குறுஞ்செய்தியும் இதனுடன் பதிவு செய்திருந்தார்.
ஆனால், ஆய்வில் இது அமெரிக்காவில் ஓஹியோ மாநிலத்தின் க்ளீவ்லேண்ட் பகுதியில் ஜூன் 2022 காலக்கட்டத்தில் காய்ந்த தழைகளில் ஏற்பட்ட தீ பரவலை குறித்த வீடியோ என தெரிய வந்துள்ளது.
இதேபோல் மற்றொரு வீடியோவில் ஒரு மின்னல் போன்ற ஒளி ஒன்று ஒரு இடத்தை தாக்கி தீயை உண்டாக்குகிறது. இதனை வெளியிட்டவர், "மவுய் காட்டுத்தீ குறித்த மனதை வருந்த வைக்கும் காட்சிகள்" என ஒரு குறுஞ்செய்தியும் இதனுடன் பதிவிட்டிருந்தார்.
ஆனால், ஆய்வில் இது 2 மாத பழைய வீடியோ என்றும் இது இந்த வருடம் ஜூன் மாதம் ஒரு மின்மாற்றியில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்த வீடியோ என தெரிய வந்துள்ளது. இது அனேகமாக சிலி நாட்டில் நடைபெற்றிருக்கலாம் என சில தகவல்கள் தெரிவித்தாலும் ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை. ஆனால் இதுவும் ஹவாய் தீவின் காட்டுத்தீ குறித்த வீடியோ அல்ல என தெளிவாக தெரிகிறது.
இணையத்தில் பகிரப்படும் செய்திகள், தகவல்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் எப்போதுமே உண்மையானவை என பொது மக்கள் நம்பி விட வேண்டாம் என செய்தித்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
- தைவானுடன் அமெரிக்கா இணைந்து பயிற்சிகளை மேற்கொள்கிறது.
- தைவான் ஜலசந்தியில் அமைதி நிலவும் போது, உலக அமைதி நிலவும் என்று தெரிவித்து உள்ளது.
தைபேசிட்டி:
தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீன சொந்தம் கொண்டாடி வருகிறது.
இந்த விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது.சமீபத்தில் தைவானை சுற்றி கடலில் சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டது.
அதேபோல் தைவானுடன் அமெரிக்கா இணைந்து பயிற்சிகளை மேற்கொள்கிறது. இதற்கிடையே தைவான் துணை அதிபர் வில்லி யம்லாய், பராகுவே நாட்டின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அங்கு புறப்பட்டு சென்றார். வழியில் அவர் அமெரிக்காவில் நியூயார்க் நகருக்கு சென்றார். அவரது அமெரிக்க பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் சீனாவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என்று தைவான் துணை அதிபர் வில்லி யம்லாய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தைவானின் நீண்ட கால உயிர் வாழ்வை சர்வதேச சமூகம் அக்கறை கொள்ள வேண்டிய ஒன்றாகும். தைவானுக்கு சர்வாதி காரத்தின் அச்சுறுத்தல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் நாங்கள் முற்றிலும் அடிபணிய மாட்டோம். பயப்படமாட்டோம். ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் மதிப்புகளை நிலைநிறுத்துவோம்" என்றார்.
மேலும் தைவான் அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தைவான் பாதுகாப்பாக இருக்கும் போது உலகம் பாதுகாப்பாக இருக்கும். தைவான் ஜலசந்தியில் அமைதி நிலவும் போது, உலக அமைதி நிலவும் என்று தெரிவித்து உள்ளது.
- "தண்டர் ஓவர் மிச்சிகன்" விமான சாகச நிகழ்ச்சியின் 25-வது ஆண்டு விழா நடைபெற்றது
- போர் விமானம் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் விழுந்து நொறுங்கியது
அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாநிலத்தின் வாஷ்டெனா கவுன்டியில் (Washtenaw County) உள்ளது சிலான்டி (Ypsilanti) நகரம். இந்நகரத்தின் கிழக்கே உள்ளது வில்லோ ரன் (Willow Run) விமான நிலையம்.
இந்த விமான நிலையத்தில் "தண்டர் ஓவர் மிச்சிகன்" (Thunder Over Michigan) எனும் ஒரு விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். நேற்றும், நேற்று முன் தினமும் இந்நிகழ்ச்சியின் 25வது ஆண்டு விழாவுடன், இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வந்தது.
இதில் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு வானில் நடைபெற்ற பலவித விமானங்களின் சாகசங்களை கண்டு ரசித்து வந்தனர்.
நிகழ்ச்சி நடைபெற்ற போது உயரே பறந்து கொண்டிருந்த ஒரு மிக்-23 (MiG-23) போர் விமானத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக புகை வெளிப்பட்டது.
அது விழுந்து விடும் என உறுதியான நிலையில் அந்த விமானத்தை இயக்கிய இரு விமான ஓட்டிகளும் பாராசூட் வழியாக, போர் விமானத்தில் இருந்து குதித்தனர்.
பிறகு, சில நொடிகளிலேயே அந்த விமானம் தீப்பிடித்து, வில்லோ ரன் விமான நிலையத்தின் அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடுயிருப்பின் வாகன நிறுத்துமிடம் அருகே விழுந்து நொறுங்கியது.
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தால் உயிர்ச்சேதம் ஏதுமில்லை. பாராசூட்டில் குதித்த விமானிகள் பத்திரமாக தரையிறங்கினர். விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே தண்டர் ஓவர் மிச்சிகன் அமைப்பு, நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு விட்டதாக முகநூலில் அறிவித்து விட்டது.
இதனையடுத்து, நிகழ்ச்சியை கண்டுகளிக்க அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள் கலைந்து சென்றனர்.
அமெரிக்காவின் தேசிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு (FAA), தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் (NTSB) விபத்து குறித்து ஆராய்ந்து வருகின்றன.
பார்வையாளர்கள் இந்த விபத்தின் வீடியோ காட்சியை வைரலாக்கி வருகின்றனர்.
- சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
- வெடிவிபத்தால் அதனை சுற்றி இருந்த 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஜன்னல் கண்ணாடி, கதவுகள் உடைந்து சிதறி சேதம் அடைந்தது.
பென்சில்வேனியா:
அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் ஒரு வீட்டில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 2 வீடுகள் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் அந்த வீடுகளில் இருந்த 5 பேர் கருகி உயிர் இழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த வெடிவிபத்தால் அதனை சுற்றி இருந்த 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஜன்னல் கண்ணாடி, கதவுகள் உடைந்து சிதறி சேதம் அடைந்தது.
- ஸரியாவை கடைசியாக கண்டது ஜேரியஸ்தான் என தெரிய வந்தது
- அக்கறையுள்ள கணவன் போல் எங்களுடன் சேர்ந்து மணிக்கணக்காக ஸரியாவை தேடினான்
அமெரிக்காவின் வடக்கில் உள்ளது அலாஸ்கா மாநிலம்.
இங்கு வசித்து வரும் 21-வயதான ஜேரியஸ் ஹில்டாபிராண்ட், ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி ஸரியா ஹில்டாபிராண்ட் (21). ஸரியா அலாஸ்கா தேசிய பாதுகாப்புப்படையில் காவலராக தேர்ச்சியடைந்தவர். இவர் ப்ரெட் அண்ட் ப்ரூ அலாஸ்கா எனும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இத்தம்பதிகள் சமீபத்தில்தான் திருமணமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது வீடு மிட்டவுன் பகுதியில் மாக்கிங் பர்ட் டிரைவ் பகுதியில் உள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 6-ம் தேதியிலிருந்து ஸரியா திடீரென காணாமல் போனார்.
பதட்டமடைந்த இவர் கணவர் ஜேரியஸ் பல இடங்களில் அவரை தேடினார். பிறகு காணாமல் போன மனைவியை குறித்து தகவல் பெற முகநூலில், மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை தேடிவந்தார்.
இவருடன் ஸரியாவின் உறவினர்களும், நண்பர்களும் அவரை குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்கள் ஆங்காங்கே மக்களிடையே ஸரியாவின் புகைப்பட அடையாளங்களை வெளியிட்டு இது சம்பந்தமான துண்டு பிரசுரங்களையும் கொடுத்து தேடிவந்தனர்.
இந்நிலையில் ஸரியாவின் உடல் ஒரு மழைநீர் கால்வாயில் காணப்பட்டது. உடனே தகவல் தரப்பட்டு அங்கு வந்த காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.
வேலைக்கு செல்வதற்காக வீட்டைவிட்டு நடந்து சென்ற ஸரியாவை கடைசியாக பார்த்தது ஜேரியஸ்தான் என புலன் விசாரணையில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து ஜேரியஸ் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார்.
காவல்துறையினரின் விசாரணையில் இறுதியில் ஜேரியஸ் தன் மனைவியை கொன்றதாக ஒப்புக்கொண்டார். மனைவியை சுட்டு கொன்றதாகவும், அவர் உடலை யாருக்கும் தெரியாமல் மழைநீர் காலவாயில் பதுக்கியதாகவும்,
பிறகு மனைவி காணாமல் போனதாக நாடகமாடி அனைவரின் உதவியுடன் தேடி வந்ததாகவும் உண்மையை ஒப்புக்கொண்டார் ஜேரியஸ்.
சுமார் ரூ.4 கோடி ($5,00,000) பிணையில் வெளியே வரும் வகையில் அவர் மீது ஆன்கரேஜ் காவல்துறை மனைவியை கொலை செய்தது மற்றும் தடயங்களை மறைத்தது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
"அவளை அவனே கொன்றுவிட்டு ஒரு அக்கறையுள்ள கணவன்போல் எங்களுடன் சேர்ந்து மணிக்கணக்காக ஸரியாவை தேடினான். எனக்கு எதையும் நம்ப முடியவில்லை"என இச்சம்பவம் குறித்து ஸரியாவின் தாயார் மெரிடித் பார்னே கூறியிருக்கிறார்.
இதுவரை கொலைக்கான காரணம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நடந்தது.
- இதில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.
மாண்ட்ரியல்:
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார்.
இந்தப் போட்டியில் ஜானிக் சின்னர் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் ஜெசிக்கா பெகுலா, ரஷியாவின் சாம்சனோவாவுடன் மோதினார். இதில் பெகுலா 6-1, 6-0 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது.
- பலர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே உள்ள மவுய் தீவு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ நகருக்குள் பரவியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. பலர் உயிருக்கு பயந்து கடலில் குதித்தனர்.
இந்நிலையில், காட்டுத் தீயில் சிக்கி உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 93 ஆக அதிகரித்து உள்ளது. பலர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேரழிவுகரமான காட்டுத்தீயைக் கையாள்வது குறித்து விசாரணையைத் தொடங்குவதாக ஹவாயின் தலைமைச் சட்ட அதிகாரி தெரிவித்தார்.
லஹைனாவில் வசிப்பவர்கள் முதன்முறையாக நகரத்திற்குள் அனுமதிக்கப்பட்டதால் இந்த இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்தது தெரிய வந்துள்ளது.
- டாஸ் வென்று முதலில் ஆடிய இந்தியா 165 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 171 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
புளோரிடா:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 5-வது டி20 போட்டி ப்ரோவர்ட் கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் அரை சதம் கடந்தார். அவர் 45 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 61 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 27 ரன்கள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 4 விக்கெட்டும், அகீல் ஹொசைன், ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. கைல் மேயர்ஸ் 10 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய நிகோலஸ் பூரன், பிராண்டன் கிங்குடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர்.
பிராண்டன் கிங் அரை சதம் கடந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 12.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்திருந்தபோது மோசமான வானிலையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது பிராண்டன் கிங் 54 ரன்னும், நிகோலஸ் பூரன் 46 ரன்னும் எடுத்திருந்தனர்.
அரை மணி நேரத்துக்குப் பிறகு ஆட்டம் தொடர்ந்தது. 2வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்த நிலையில் நிகோலஸ் பூரன் 47 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 171 ரன்களை எடுத்து வென்றது. பிராண்டன் கிங் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரை 3-2 என கைப்பற்றியது.
- டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி முதலில் ஆடிய இந்தியா 165 ரன்கள் எடுத்தது.
புளோரிடா:
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ப் மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 45 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 61 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 27 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 4 விக்கெட்டும், அகீல் ஹொசைன், ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது.
- புளோரிடாவில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது.
- இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ப் மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும். வெற்றி பெறுவதற்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.






