search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devastating"

    • காட்டுத்தீ லஹாய்னா பகுதியில் சுமார் 100 பேரை பலி வாங்கியது
    • வீடியோக்களின் உண்மைதன்மை குறித்து அறியாதவர்களால் அவை வேகமாக பரப்பப்பட்டது

    மேற்கு அமெரிக்காவில் உள்ள தீவு ஹவாய்.

    இம்மாத தொடக்கத்தில் இத்தீவில் உள்ள மவுய் தீவிலும், அருகிலுள்ள சிறு தீவுகளிலும் ஒரு காட்டுத்தீ தொடங்கி படுவேகமாக பரவியது.

    பலமாக வீசிய காற்று இதனை மேலும் வேகமாக பரவ செய்ததால் தீ கட்டுக்கடங்காமல் காடுகளை சேதம் செய்தது. ஹவாய் தீவின் லஹாய்னா பகுதியில் சுமார் 100 பேரை இது பலி வாங்கியது. இதில் 1000 பேருக்கு மேல் காணாமல் போனார்கள்.

    இந்த காட்டுத்தீ குறித்து இணையத்தில் செய்திகளும், வீடியோக்களும் பரவி வந்தன. ஆனால், இவற்றில் ஒரு சில ஹவாய் காட்டுத்தீ சம்பந்தமானது என வேண்டுமென்றே பொய்யாக பதிவேற்றப்பட்டவை.

    அதன் உண்மைதன்மை அறியாதவர்களால் இந்த வீடியோ காட்சிகள் வேகமாக வைரலாக்கப்பட்டது.

    முதல் வீடியோவில் தீ வேகமாக பரவுகிறது. அதை தூர நின்று பார்வையாளர்கள் பதிவு செய்கின்றனர். இதை வெளியிட்ட பயனர் "தெருவையே தீ நாசம் செய்கிறது" என குறுஞ்செய்தியும் இதனுடன் பதிவு செய்திருந்தார்.

    ஆனால், ஆய்வில் இது அமெரிக்காவில் ஓஹியோ மாநிலத்தின் க்ளீவ்லேண்ட் பகுதியில் ஜூன் 2022 காலக்கட்டத்தில் காய்ந்த தழைகளில் ஏற்பட்ட தீ பரவலை குறித்த வீடியோ என தெரிய வந்துள்ளது.

    இதேபோல் மற்றொரு வீடியோவில் ஒரு மின்னல் போன்ற ஒளி ஒன்று ஒரு இடத்தை தாக்கி தீயை உண்டாக்குகிறது. இதனை வெளியிட்டவர், "மவுய் காட்டுத்தீ குறித்த மனதை வருந்த வைக்கும் காட்சிகள்" என ஒரு குறுஞ்செய்தியும் இதனுடன் பதிவிட்டிருந்தார்.

    ஆனால், ஆய்வில் இது 2 மாத பழைய வீடியோ என்றும் இது இந்த வருடம் ஜூன் மாதம் ஒரு மின்மாற்றியில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்த வீடியோ என தெரிய வந்துள்ளது. இது அனேகமாக சிலி நாட்டில் நடைபெற்றிருக்கலாம் என சில தகவல்கள் தெரிவித்தாலும் ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை. ஆனால் இதுவும் ஹவாய் தீவின் காட்டுத்தீ குறித்த வீடியோ அல்ல என தெளிவாக தெரிகிறது.

    இணையத்தில் பகிரப்படும் செய்திகள், தகவல்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் எப்போதுமே உண்மையானவை என பொது மக்கள் நம்பி விட வேண்டாம் என செய்தித்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

    கேரளாவில் பெய்து வரும் கன மழையால் நிலச்சரிவில் இருந்து தனது எஜமானையும், அவருடைய மனைவியையும் ஒரு செல்ல நாய் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது. #DogSaved #KeralaFamily #Landslide
    இடுக்கி:

    கேரளாவில் பெய்து வரும் கன மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பதில் ராணுவம், விமானப்படை, கடலோர காவல்படையை சேர்ந்த வீரர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நிலச்சரிவில் இருந்து தனது எஜமானையும், அவருடைய மனைவியையும் ஒரு செல்ல நாய் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது. இடுக்கி மாவட்டம் கீர்த்திகோடு என்னும் மலைக்கிராமத்தில் மனைவியுடன் வசித்து வருபவர் மோகனன். இவர், ‘ராக்கி’ என்னும் நாயை தனது வீட்டில் செல்லமாக வளர்த்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் ராக்கி திடீரென்று பலமாக குரைத்தது.

    வெகு நேரமாகியும் அது குரைப்பதை நிறுத்தவில்லை. இதனால் திடுக்கிட்டு எழுந்த மோகனனும், அவருடைய மனைவியும் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தனர். அப்போது அவர்களின் வீடு நிலச்சரிவு ஏற்பட்டு முழுவதுமாக சரிந்து விழுந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மோகனனும், அவருடைய மனைவியும் தங்களுடைய உயிரை தக்க நேரத்தில் காப்பாற்றிய ராக்கியை நன்றிப் பெருக்குடன் உச்சி முகர்ந்து கொஞ்சி மகிழ்ந்தனர்.

    மோகனன், தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் இந்த தகவலை தெரிவித்து உள்ளார்.  #DogSaved #KeralaFamily #Landslide
    ×