என் மலர்
இலங்கை
- முதலில் ஆடிய இலங்கை 166 ரன்களில் ஆல் அவுட்டானது.
- 2ம் நாள் முடிவில் பாகிஸ்தான் 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்துள்ளது.
கொழும்பு:
இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி 166 ரன்னில் சுருண்டது. தனஞ்செய டி சில்வா ஓரளவு தாக்குப் பிடித்து 57 ரன்கள் எடுத்தார்.
அதன்பின், பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் முடிவில் 28.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இரண்டாவது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 38.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து இருந்தது.
அப்போது பலத்த மழை பெய்ததால் அத்துடன் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. அப்துல்லா ஷபீக் 87 ரன்னும், பாபர் அசாம் 28 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
- கடந்த வாரம் இந்தியாவுக்கு 2 நாட்கள் பயணமாக வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
- இலங்கை தமிழர் விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
கொழும்பு:
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று 1987-ம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே ஒப்பந்தம் மூலம் இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அந்த சட்டதிருத்தம் தமிழர் பகுதியான வடக்கு கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைக்கவும், தமிழர்களுக்கு அதிகார பரவல் அளிக்கவும் வகை செய்கிறது. ஆனால் அந்த சட்டதிருத்தம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. அதை அமல்படுத்தக்கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கடந்த வாரம் இந்தியாவுக்கு 2 நாட்கள் பயணமாக வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது ஒருங்கிணைந்த இலங்கையின் வளர்ச்சிக்காகவும், இலங்கை தமிழர்கள் கண்ணியத்துடன் வாழவும், அதிகாரப் பகிர்வு அளிக்கும் 13-வது சட்டத் திருத்தத்தை இலங்கை முழுமையாக அமல்படுத்தவும், மாகாணங்களுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்கேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இதுகுறித்து ரணில் விக்ரமசிங்கே கூறும்போது, தங்கள் நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளிடம் ஆலோசனை நடத்தி ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.
இந்நிலையில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை தமிழர் விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டம் அதிபரின் செயலகத்தில் நடக்கிறது.
இதுகுறித்து அதிபரின் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில், அதிபர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் அதிபர் செயலகத்தில் நாளை நடைபெறும். இதில் தேசிய நல்லிணக்கத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும். இதில் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களை கொண்ட அனைத்து கட்சிகளும், சுயேட்சைகளும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சி கூட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கான தேசிய நல்லிணக்க திட்டம் பற்றி எடுத்துரைக்கப்படும்.
- டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- பாகிஸ்தானின் அப்ரார் அகமது 4 விக்கெட் வீழ்த்தினார்.
கொழும்பு:
இலங்கை சென்றுள்ள பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலேயில் நடந்த முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி இலங்கை அணி முதலில் களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி வீரர்கள் திணறினர். 36 ரன்கள் எடுப்பதற்குள் முக்கியமான 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
நெருக்கடியில் தவித்த இலங்கை அணியை தினேஷ் சண்டிமால்-தனஞ்சயா டி சில்வா ஜோடி சரிவிலிருந்து மீட்டது.
பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த தனஞ்செய டி சில்வா 57 ரன்னிலும், தினேஷ் சண்டிமால் 37 ரன்னிலும் அவுட்டாகினர். ரமேஷ் மெண்டிஸ் 27 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், இலங்கை அணி 48.4 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டகாரர் இமாம் ஹல் உக் 6 ரன்னில் அவுட்டானார். அப்துல்லா ஷபீக்குடன் ஷான் மசூத் ஜோடி சேர்ந்தார். இருவரும் அரை சதம் கடந்தனர். 2வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்த நிலையில் ஷான் மசூத் 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. அப்துல்லா ஷபீக் 74 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் ஏ அணி 352 ரன்கள் குவித்துள்ளது.
- அடுத்து ஆடிய இந்தியா ஏ அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
கொழும்பு:
வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா ஏ - பாகிஸ்தான் ஏ அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி அதிரடியாக ஆடியது. 50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்தது.
அதிரடியாக ஆடிய தயப் தாஹிர் பவுண்டரி , சிக்சருக்கு விரட்டி சதமடித்து அசத்தினார். சைம் அயூப், சாஹிப்சாதா பர்ஹான் அரை சதமடித்தனர்.
இந்தியா சார்பில் ரியான் பராக் , ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா
ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்து 61 ரன்னில் அவுட்டானார். யாஷ் துல் 39 ரன்கள், சாய் சுதர்சன் 29 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில் இந்திய அணி 40 ஓவரில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் பாகிஸ்தான் அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
- இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் லஹிரு திரிமானே.
- இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கொழும்பு:
இலங்கை அணியின் நட்சத்திர வீரரான லஹிரு திரிமானே, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணி வெற்றிபெற முக்கிய பங்காற்றியவர். 2010-ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமான இவர் 2022-ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடினார்.
இடது கை ஆட்டக்காரரான திரிமானே 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,088 ரன்களை எடுத்துள்ளார். இதில் மூன்று சதங்களும் 10 அரை சதங்களும் அடங்கும்.
127 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள திரிமானே 3,164 ரன்களை எடுத்துள்ளார். இதில் 21 அரை சதங்களும் 4 சதங்களும் அடங்கும்.
26 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர் 291 ரன்கள் எடுத்திருக்கிறார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை அணிக்காக விளையாடியது மிகவும் பெருமையான தருணம். கிரிக்கெட் எனக்கு நிறைய விஷயங்களைக் கொடுத்திருக்கிறது. எனக்கு வாய்ப்பளித்த மற்றும் ஆதரவாக இருந்த கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கும் எனது ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
ஆசியக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு முன் லஹிரு திரிமானே ஓய்வு அறிவித்துள்ளது இலங்கை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
- இலங்கை இந்தியா இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் இந்திய பயணம் குறித்து இலங்கை வெளியுறவு மந்திரி விரிவாக பேசினார்.
இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளதார நெருக்கடியின்போது இந்தியா பல்வேறு வகைகளில் அந்த நாட்டுக்கு உதவியது. நிதி உதவி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியதோடு, இலங்கைக்கு சர்வதேச நிதியம் கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் இந்தியா செய்தது. இந்த சூழலில் கடந்த ஆண்டு இலங்கை அதிபராக பதவியேற்றதற்கு பிறகு முதல் முறையாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசு முறை பயணமாக கடந்த 20-ந் தேதி இந்தியா வந்தார்.
இந்த பயணத்தின்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி அலி சப்ரி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் இந்திய பயணம் குறித்து விரிவாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இரு நாடுகளுக்கும் இடையே துறைமுக இணைப்பின் முக்கியத்துவம் குறித்து இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். அடுத்தகட்டத்தை அடைய, எங்களுக்கு முதலீடுகள் தேவை. இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் வழிகளை நாங்கள் விவாதித்தோம். இரு அரசாங்கங்களுக்கு இடையில் மட்டுமன்றி தனியார் துறைகளுக்கு இடையிலான உறவும் வலியுறுத்தப்பட்டன
தென்னிந்திய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியில் இலங்கைக்கு நன்மையளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்பட்டது. இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உதவும் வகையில் இந்திய பல்கலைக்கழகத்தை இணைத்துக்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. டாலர், யூரோ மற்றும் யென் ஆகியவற்றை ஏற்றுக்கொள்வது போல் இந்திய ரூபாயை பொது பணமாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்.
இந்திய ரூபாயின் நேரடி பயன்பாட்டை அனுமதிப்பது, இந்திய சுற்றுலா பயணிகள் மற்றும் வணிகர்களுக்கு பல நாணய மாற்றங்களின் தேவையைத் தடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலில் ஆடிய இந்திய அணி 211 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய வங்காளதேசம் 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
கொழும்பு:
வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடரின் 2வது அரையிறுதியில் இந்தியா ஏ - வங்காளதேசம் ஏ அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 49.1 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் யாஷ் துல் 66 ரன்னும், அபிஷேக் ஷர்மா 34 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் தன்ஜித் ஹசன் 51 ரன்கள், முகமது நயீ 38 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
இறுதியில், வங்காளதேசம் ஏ அணி 34.2 ஓவரில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 51 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஏ அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்தியா ஏ அணி சார்பில் நிஷாந்த் சந்து 5 விக்கெட், மானவ் சுதார் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் விருது யாஷ் துல்லுக்கு வழங்கப்பட்டது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 322 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய இலங்கை 262 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
கொழும்பு:
வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் ஏ - இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 322 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் உமர் யூசுப் 88 ரன்னும், முகமது ஹாரிஸ் 52 ரன்னும், முபாசிர் கான் 42 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ 85 பந்தில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஹன் அராச்சிகே 97 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், இலங்கை ஏ அணி 45.4 ஓவரில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் ஏ அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பாகிஸ்தான் ஏ அணி சார்பில் அர்ஷத் இக்பால் 5 விக்கெட், முபாசிர் கான், சுபியான் முகிம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் விருது அர்ஷத் இக்பாலுக்கு வழங்கப்பட்டது.
- பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களுடன் ஆலோசிக்க உள்ளனர்.
- அதிபராக பதவியேற்றபின் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது.
இலங்கையில் கடந்த ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பொதுமக்களின் போராட்டத்தால் அதிபராக இருந்த கோத்தபயா ராஜபக்சே பதவி விலகி நாட்டை விட்டு தப்பிச்சென்றார்.
தொடர்ந்து, இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார். பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த நாட்டை மீட்க இலங்கை இந்திய அரசிடம் உதவிகேட்டது. இதனால் இலங்கை அரசுக்கு இந்தியா பல கோடி ரூபாய் கடனுதவி வழங்கியது. எரிபொருள், உணவுப்பொருள் என பல்வேறு உதவிகளை இந்தியா வழங்கியது.
தற்போது இலங்கை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வர உள்ளார். ஜூலை 20, 21-ம் தேதி இந்தியா வரும் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார்.
இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு மேம்பாடு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களுடன் ஆலோசிக்க உள்ளனர்.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா அடுத்த வாரம் இலங்கை சென்று இலங்கை அதிபரின் பயணத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளார்.
அதிபராக பதவியேற்றபின் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய இலங்கை அணி 312 ரன்கள் எடுத்தது.
- தனஞ்செயா டி சில்வா பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
காலே:
பாகிஸ்தான்- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 312 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தனஞ்செயா டி சில்வா பொறுப்புடன் ஆடி சதமடித்து 122 ரன்னும், மேத்யூஸ் அரை சதமடித்து 64 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் பாகிஸ்தான் 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
6வது விக்கெட்டுக்கு இணைந்த ஷகீல், ஆகா சல்மான் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர்.
இறுதியில், 2ம் நாள் முடிவில் பாகிஸ்தா 5 விக்கெட்டுக்கு 221 ரன்கள் எடுத்துள்ளது. ஷகீல் 69 ரன்னும், ஆகா சல்மான் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட் வீழ்த்தினார்.
- இலங்கை அணி 58.2 ஓவரில் 226 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் தடைப்பட்டது.
- தனஞ்செயா டி சில்வா 94 ரன்கள் உடன் களத்தில் உள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் முதலில் மளமள என விக்கெட்டுகளை இழந்தது இலங்கை அணி.
அந்த அணி 54 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
நிஷான் மதுஷ்கா 4 ரன்னிலும், குஷால் மெண்டிஸ் 12 ரன்னிலும், கருணா ரத்னே 29 ரன்னிலும், ஷாஹீன் அப்ரிடி பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர்.
சண்டிமல் ஒரு ரன் எடுத்த நிலையில் நசீம் ஷா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.
ஐந்தாவது விக்கெட்டிற்கு மேத்யூஸ் உடன் தனஞ்செயா டி சில்வா ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் அரை சதம் அடித்து சிறப்பாக விளையாடினர்.
மேத்யூஸ் 64 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
ஆறாவது விக்கெட்டுக்கு தனஞ்ஜெயா டி சில்வாவுடன் சமாராவிக்ரமா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இலங்கை அணி 58.2 ஓவரில் 226 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் ஆட்டம் வெகு நேரத்திற்கு பின் தொடங்கியது.
66-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் சமரவிக்ரமா 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இலங்கை முதல் நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட்டு இழப்பிற்கு242 ரன்கள் எடுத்துள்ளது.
தனஞ்செயா டி சில்வா 94 ரன்கள் உடன் களத்தில் உள்ளார்.
- ரணில் விக்ரமசிங்கே அடுத்த வாரம் 2 நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார்.
- இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துடன் இந்தியா வளர்ச்சியை காண்கிறது
கொழும்பு :
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அடுத்த வாரம் 2 நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார். இந்த பயணத்தின்போது அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே உரையாற்றினார்.
அப்போது இந்தியாவின் வளர்ச்சி குறித்து பேசிய அவர் "ஜப்பான், கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் கிழக்கு ஆசியா 75 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. இ்ப்போது இந்தியாவுக்கான நேரம். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துடன் இந்தியா வளர்ச்சியை காண்கிறது" என்றார்.
முன்னதாக உரையாற்றிய இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தின் தலைவர் டி.எஸ். பிரகாஷ் இலங்கைப் பொருளாதாரத்தில் இந்திய ரூபாயை மேம்படுத்துமாறு அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய ரணில், "இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு நிகரான பொதுவான நாணயமாக மாறினால் அதை பயன்படுத்துவதில் இலங்கைக்கு எந்த தயக்கமும் இல்லை. அதை எப்படி செய்வது என்று நாம் கண்டுபிடிக்க வேண்டும். இதுபோன்ற மாற்றங்களை வெளியுலகில் இருந்து எடுத்துக் கொள்ள நாம் மனதை விசாலமாக வைத்திருக்க வேண்டும்" என கூறினார்.
மேலும் அவர், "உலகம் வளர்ச்சியடைந்து வருகிறது, குறிப்பாக பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா விரைவான வளர்ச்சியை அடைந்து வருகிறது" என தெரிவித்தார்.






