என் மலர்
பாகிஸ்தான்
- எனக்கு எதிராக சட்டவிரோத தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஹமாயுன் திலாவர் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
- ராவல் பிண்டி மற்றும் சர்கோடா நீதிபதிகள் எனக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியதால் நீக்கம்.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட்டரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு மத்தியில் இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2024 பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவருடைய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் மெஜாரிட்டி பெறவில்லை. தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டினார்.
அவருடைய கட்சி தொண்டர்கள், தலைவர்கள் தொடர்ந்து போராடு வருகின்றனர். இதற்கிடையே பாகிஸ்தானில் நிலவும் அரசியல் பதற்றத்தை குறைக்க இம்ரான் கான் கட்சியுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் 10 வருடத்திற்கு சர்வாதிகார ஆட்சியை திணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இம்ரான் கான் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பாகிஸ்தானில் 10 வருடத்திற்கு சர்வாதிகாரத்தை திணிக்க திட்டமிட்டுள்ளனர். அதில் இரண்டு வருடங்கள் ஏற்கனவே கடந்து போய்விட்டன. எங்களுக்கு எதிராக அடக்குமுறையை கையாளும் நீதிபதிகள் அல்லது போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு என்ற வெகுமதி வழங்கப்படுகிறது.
எனக்கு எதிராக சட்டவிரோத தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஹமாயுன் திலாவர் பதவி உயர்வு பெற்றுள்ளார். ராவல் பிண்டி மற்றும் சர்கோடா நீதிபதிகள் எனக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியதால், நீக்கப்பட்டுள்ள்ளனர். இதுபோன்ற செயல்கள் நாட்டின் தகுதியையும் சட்டத்தின் ஆட்சியையும் அழித்துவிட்டன.
இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
- பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
- செலவுகளை குறைக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இஸ்லாமாபாத்:
அண்டைநாடான பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கான ஒரு முயற்சியாக சர்வதேச நாணய நிதியத்திடம் பெரும் தொகையை கடனாக பெற பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்தது. அதனை ஏற்று பாகிஸ்தானுக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்தது.
அதே சமயம் கடனை வழங்க பாகிஸ்தான் அரசுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தது. அதில் முதன்மையானது பாகிஸ்தான் அரசு தனது செலவுகளை குறைக்க வேண்டும் என்பதாகவும். எனவே செலவுகளை குறைக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த பாகிஸ்தான் நிதி மந்திரி முகமது அவுரங்கசிப் "அரசு துறைகளின் எண்ணிக்கையை பாதியாக குறைத்து, 1½ லட்சம் வேலைகளை ஒழிக்க அரசு முடிவு செய்திருக்கிறது" என கூறினார்.
- பல சமயங்களில், திருமணச் செலவுகளுக்காக மக்கள் தங்கள் நிலத்தை விற்கிறார்கள்
- திருமணங்கள் எளிமையாகவும் தேவையற்ற செலவுகள் இல்லாமல் இருக்க வேண்டும்
பாகிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 சகோதரர்கள் இன்னொரு குடும்பத்தில் உள்ள 6 சகோதரிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பஞ்சாப் மாகாணத்தில் வரதட்சணை வாங்காமல் மிக எளிமையான முறையில் இந்த திருமணங்கள் நடைபெற்றது. தங்களது கடைசி தம்பிக்கு 18 வயது ஆகும் வரை காத்திருந்து 6 சகோதரர்களும் ஓர் நேரத்தில் திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணத்தில் 100 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த திருமணம் தொடர்பாக மூத்த சகோதரர், "நாங்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்பினோம். பல சமயங்களில், திருமணச் செலவுகளுக்காக மக்கள் தங்கள் நிலத்தை விற்கிறார்கள். திருமணங்கள் எளிமையாகவும் தேவையற்ற செலவுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதே எங்கள் குறிக்கோளாக இருந்தது" என்று தெரிவித்தார்.
- நியூ பஹ்மென் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பஸ்சை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டது.
- படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் டர்பெட் நகரில் நேற்று பஸ் சென்றுகொண்டிருந்தது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அந்த பஸ்சில் 36 பேர் பயணித்தனர். இதில், பலூசிஸ்தானை சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரும் அடக்கம்.
நியூ பஹ்மென் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பஸ்சை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பஸ்சில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
மேலும், இந்த கண்ணிவெடி தாக்குதலை பலூசிஸ்தான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நடத்தினரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாகிஸ்தான் ராணுவத்தின் சோதனைச் சாவடியை கைப்பற்றியதாக தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான்.
- சோதனைச் சாவடி கைவிடப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் பல பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவலை தடுக்க பல்வேறு இடங்களில் சோதனைப் சாவடிகள் அமைத்துள்ளது.
இந்த நிலையில் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள பஜாயுர் மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் சோதனைச் சாவடியை கைப்பற்றியதாக தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும். அந்த இடத்தில் தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மூத்த பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில் "அந்த சோதனைச் சாவடி குறைக்கும் செயல்முறையில் ஒரு பகுதியாக காலி செய்யப்பட்டது. கொஞ்ச நாட்களுக்கு முன் கைவிடப்பட்டது. அங்கிருந்து ராணுவ வீரர்கள் புதிய கோட்டைக்கு மாற்றப்பட்டனர்.
இந்த செயல்முறை ஜமாயுர் மாவட்டத்துடன் நின்றுவிடவில்லை. வடக்கு மற்றும் தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.
- கடந்த 18 வருடங்களில் என்னால் இயன்றவற்றை செய்து எனது தாயாரின் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற முயற்சி செய்து வருகிறேன்.
- 18 ஆண்டுகளுக்கு பிறகு காதலிலும், வாழ்க்கையிலும் 2-வது வாய்ப்பை பெற என் தாயாரை ஆதரித்தேன்.
பெற்ற தாயின் ஆசை, கனவை நிறைவேற்ற மகன்கள் விரும்புவார்கள். ஆனால் பாகிஸ்தானை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது தாய் விருப்பப்பட்டார் என்பதற்காக அவருக்கு 2-வது திருமணம் செய்து வைத்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்துல் அஹாத் என்ற அந்த வாலிபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பகிர்ந்துள்ளார்.
அதில் கடந்த 18 வருடங்களில் என்னால் இயன்றவற்றை செய்து எனது தாயாரின் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற முயற்சி செய்து வருகிறேன். அவர் எங்களுக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்துள்ளார். எனது தாயார் அமைதியான வாழ்க்கைக்கு தகுதியானவர். ஒரு மகனாக நான் சரியானதை செய்தேன் என்று நினைக்கிறேன். 18 ஆண்டுகளுக்கு பிறகு காதலிலும், வாழ்க்கையிலும் 2-வது வாய்ப்பை பெற என் தாயாரை ஆதரித்தேன்.
எனது தாயாரின் 2-வது திருமணம் குறித்து வெளியில் சொல்ல பல நாட்களாக பயந்தேன். ஆனால் இப்போது நீங்கள் காட்டும் அன்பும், பாசமும் என்னை உணர்ச்சி பெருக்கில் மூழ்கடிக்கிறது. எங்களது இந்த முடிவுக்கு மதிப்பளித்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த வீடியோ வைரலான நிலையில் அப்துல் அஹாத்தின் முற்போக்கான நடவடிக்கையை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி பதிவிட்டனர். சில பயனர்கள் அப்துல் அஹாத்தை அவரது தாயார் நன்றாக வளர்த்திருக்கிறார் என அவரது தாயையும் வாழ்த்தி பதிவிட்டனர்.
- விபத்துக்கு ஓட்டுநரின் அலட்சியமே காரணம் என போக்குவரத்து காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
- பாகிஸ்தானில் நெடுஞ்சாலைகளில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலிருந்து இஸ்லாமாபாத்தின் பகவால்பூர் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த பயணிகள் பஸ், பதே ஜங் என்ற பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். பெண்கள் உள்பட 22 பேர் படுகாயங்களுடன் பெனாசீர் பூட்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். ஒருவர் மட்டும் இஸ்லாமாபாத்தில் உள்ள தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்த விபத்துக்கு ஓட்டுநரின் அலட்சியமே காரணம் என போக்குவரத்து காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சிந்துவின் நவுஷாஹ்ரோ பெரோஸ் மாவட்டத்தில், மோரோ அருகே எம்-6 மோட்டார்வேயில் ஒரு லாரியும், வேனும் நேருக்குநேர் மோதியதில் 8 பேர் இறந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் நெடுஞ்சாலைகளில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.இதற்கு முக்கிய காரணங்கள் அதிக வேகம், ஆபத்தான முறையில் வாகனங்களை முந்திச் செல்லுதல் மற்றும் போக்குவரத்து விதிகளை புறக்கணிப்பது போன்றவையாக உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன",
- தீய சக்திகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் மையங்கள் தாக்கப்பட்ட்டன
- 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அதிகாரிகளால் வரையப்பட்ட எல்லைக் கோடான டுராண்ட் கோட்டை ஆப்கானிஸ்தான் நீண்ட காலமாக நிராகரித்து வருகிறது.
ஆப்கானிஸ்தான் கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் உள்ள பயிற்சி நிலையத்தை குறிவைத்து செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கைக்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் வந்துள்ளன.
தாலிபான் ஆட்சி நடக்கும் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானி தலிபான் என்ற கிளர்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தங்கள் நாட்டின்மீது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதாகவும், இது பயங்கரவாத அமைப்பு என பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. இந்த அமைப்பைக் குறிவைத்து அவ்வப்போது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திவருகிறது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் கடந்த [செவ்வாய்க்கிழமை] வான்வழி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தென்கிழக்கு எல்லையோரம் அமைந்துள்ள ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் உள்ள 7 கிராமங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 46 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் பல்வேறு இடங்கள் மீது ஆப்கனிஸ்தான் தாலிபான் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. தலிபான் படைகள் பாகிஸ்தானில் பல இடங்களை குறிவைத்து தாக்கியதில் 19 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று தகவல் வெளியாகி உள்ளது,

ஆப்கானிஸ்தான் தென்கிழக்கு பகுதிகள் மீது தாக்குதல்களை ஏற்பாடு செய்த தீய சக்திகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் மையங்கள் மற்றும் மறைவிடங்களில் உள்ளிட்ட பல நிலைகள் முதல் எல்லை அனுமான கொடு வரை பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது என தாலிபான் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் தளம் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை பாகிஸ்தானைக் குறிப்பிடுகிறதா என்று கேட்கப்பட்டபோது, ஆப்கானிஸ்தான் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் எனயதுல்லா கோவராஸ்மி, ஆப்கானிஸ்தான் அந்த நிலப்பரப்பை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அதிகாரிகளால் வரையப்பட்ட எல்லைக் கோடான டுராண்ட் கோட்டை ஆப்கானிஸ்தான் நீண்ட காலமாக நிராகரித்து வருகிறது. இந்த எல்லைக்கோடு ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு மலை மற்றும் அரசு ஆதிக்கம் இல்லாத பழங்குடிப் பகுதி வழியாக செல்கிறது.
- இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் காலமானார்.
- பாகிஸ்தானில் அவர் 4-ம் வகுப்புவரை படித்த பள்ளி உள்ள கிராமத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங் நேற்று மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது. 92 வயதாக இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இந்திய ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
உலகக் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு நாளை காலை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஒரு கிராமம் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது.
ஒட்டுமொத்த கிராமமே அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்து வருகிறது. நாங்கள் எங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவர் மறைந்ததாக உணர்கிறோம் என அல்டாஃப் ஹுசைன் தெரிவித்துள்ளார். இவர் அந்த கிராம மக்களின் தலைவர் ஆவார்.
மன்மோகன் சிங் 4-ம் வகுப்பு வரை படித்த கா கிராமம் (Gah village) பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த கிராமம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து தென்மேற்கோ 100 கி.மீ. தொலைவில் உள்ளது. மன்மோகன் சிங் பிறக்கும்போது ஜீலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1986-ம் ஆண்டு சக்வால் மாவட்டமாக பிரிக்கப்படும்போது இதனுடன் சேர்ந்தது.
மன்மோகன் சிங் உடன் படித்த ராஜி முகமது அலியின் மருமகன் ராஜா ஆஷிக் அலி 2008-ம் ஆண்டு டெல்லி சென்று மன்மோகன் சிங்கை சந்தித்ததாக தெரிவித்தார்.
கிராமத்தில் உள்ள அனைவரும் மிகுந்த வேதனை அடைகிறோம். மன்மோகன் சிங் இறுதிச் சடங்கில் பங்கேற்க விருப்பம் உள்ளது. ஆனால் நடப்பதற்கு சாத்தியம் இல்லை. ஆகையால் அஞ்சலி செலுத்துகிறோம்.
- உடல் நலம் குன்றிய நிலையில் சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
- இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். இவரது மைத்துனர் ஹபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி. இவர் ஜமாத்-உத்-தவா என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவராக இருந்து வந்தார்.
கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக ஜமாத்-உத்-தவா தெரிவித்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு நிதிமன்றம் ஹபீஸ் அப்துல் ரகுமான் மக்கிக்கு 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கியது. அப்துல் ரகுமான் மக்கி பாகிஸ்தான் சித்தாந்தத்திற்கு ஆதரவாளர் என பாகிஸ்தான் முதாஹிதா முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.
ஐ.நா. 2023-ம் அவரை சர்வதேச பயங்கரவாதி என அறிவித்தது. சொத்துகள் முடக்கம், பயணத் தடை ஆகிய தடைகளுக்கு உள்ளானார்.
- வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட 25 பேருக்கு கடந்த வாரம் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டு இருந்தது.
- மேலும் 60 குற்றவாளிகளுக்கு நேற்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.
இஸ்லாமாபாத்:
கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் 9-ந்தேதி இம்ரான்கான் ஆதரவாளர்கள், அவரை கைது செய்ததற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்முறை ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் ராணுவ வாகனங்கள், ராணுவ கமாண்டர் ஒருவரின் வீடு உள்ளிட்டவற்றை சேதப்படுத்தினர். வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.இது தொடர்பான விசாரணை ராணுவ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட 25 பேருக்கு கடந்த வாரம் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மேலும் 60 குற்றவாளிகளுக்கு நேற்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அவர்கள் 2 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றனர். இதில் இம்ரான்கானின் மருமகன் ஹாசன் கான் நியாசி முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். ராணுவ கமாண்டரின் வீட்டை தாக்கிய குற்றத்திற்காக அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தானில் 2025 இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பாதுகாப்பு காரணமாக இந்திய வீரர்களை அனுப்ப மறுப்பு கூறப்பட்டது.
- இரு அணிகளும் அரசியல் பதட்டங்கள் இல்லாமல் அந்தந்த நாடுகளில் இருந்து நுழைய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் - இந்தியா அரசியல் பிரச்சனை கிரிக்கெட் விளையாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.பாகிஸ்தானில் 2025 இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பாதுகாப்பு காரணமாக இந்திய வீரர்களை அனுப்ப மறுப்பு கூறப்பட்டது.
இதற்கு உபாயமாக ஐசிசி ஹைபிரிட் மாடலை பரிந்துரைத்து வருகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனைக்குப் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் அகமது செசாத், ஒரு புதிய தீர்வை முன்மொழிந்துள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் சொந்த மைதானத்தில் எவ்வாறு விளையாடலாம் என்று ஒரு வினோதமான ஆலோசனையை அவர் வழங்கியுள்ளார்.
யூடியூபில் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய அகமது செசாத், இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையில் ஒரு மைதானம் கட்டப்பட வேண்டும்.
ஒரு வாயில் இந்தியாவை நோக்கியும், மற்றொரு வாயில் பாகிஸ்தானை நோக்கியும் இருக்கும். வீரர்கள் அந்தந்த வாயில்களில் இருந்து வந்து விளையாடுவார்கள். இதனால் இரு அணிகளும் அரசியல் பதட்டங்கள் இல்லாமல் அந்தந்த நாடுகளில் இருந்து நுழைய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் பிசிசிஐக்கும் அவர்களின் அரசாங்கத்திற்கும் பிரச்சினைகள் இருக்கும். அவர்களின் வீரர்கள் எங்கள் பக்கத்தில் மைதானத்திற்கு வரும்போது, அவர்களுக்கு விசா தேவைப்படும் என்று அவர் கூறினார்.
இதற்கிடையே ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025க்கான நடுநிலைமையான இடத்தை ஐசிசி இன்னும் அறிவிக்கவில்லை, ஆனால் அது இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகமாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.






