என் மலர்
இஸ்ரேல்
- 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்
- பிணைக் கைதிகளை இஸ்ரேல் சிறப்புப்படையினர் மீட்டனர்.
காசா:
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். மேலும் 250-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர் களை பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்றனர்.
இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் காசாவில் 36 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட போர் நிறுத்தத் தின்போது 100-க்கும் மேற்பட்ட பிணைக் கைதி களை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர்.
இன்னும் அவர்களிடம் 120 பிணைக்கைதிகள் உள்ளனர். அவர்களை மீட்க இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தி செல்லப்பட்ட பிணைக்கைதி களில் ஒரு பெண் உள்பட 4 பேரை இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக நேற்று மீட்டது. காசா முனையில் உள்ள நுசைரத் முகாமில் கடத்தி வைக்கப்பட்டிருந்த பிணைக் கைதிகளை இஸ்ரேல் சிறப்புப்படையினர் மீட்டனர்.
இந்த மீட்பு நடவடிக்கையின் போது இஸ்ரேலிய சிறப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். மீட்கப்பட்ட பிணைக்கைதிகள் நோவா அர்காமனி, மெயிர்ஜன், ஆண்ட்ரே, ஷால்மி சிவ் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவர்கள் அனைவரும் இசை விழாவில் இருந்து கடத்தி செல்லப்பட்டவர்கள். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். 4 பேரும் நல்ல உடல் நிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிணைக் கைதிகள் மீட்பு நடவடிக்கையின்போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 210 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர். மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 210 பேர் பலியானார்கள். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று ஹமாசின் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்து உள்ளது.
- காசா பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.
- இந்த தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜெருசலேம்:
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே பல மாதமாக போர் நடந்து வருகிறது. ரபாவிலும் இருதரப்புக்கும் இடையே மோதல் நடக்கிறது.
ஹமாஸ் பயங்கரவாதிகளை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய காசாவில் உள்ள நுசி ராட்டில் பள்ளிக்கூடத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கூறி இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் தரப்பும் உறுதிசெய்துள்ளது.
இதுதொடர்பாக ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், அப்பாவி மக்கள்மீது தாக்குதல் நடத்திவிட்டு அதை சமாளிக்கப் பொய்க் கதைகளை இஸ்ரேல் சொல்லி வருகிறது என தெரிவித்தார்.
- ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம்.
- இஸ்ரேல் ராணுவத் தளம் மீது ராக்கெட்டுகள் வீசி தாக்குதல்.
பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேல் போரில் ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் உள்ளது.
அந்த இயக்கத்தினர் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் தெற்கு லெபனானில் இஸ்ரேல் ஆளில்லா விமானத்தை(டிரோன்) சுட்டு வீழ்த்தியதாக ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது.
மேலும் எல்லை நகரமான கிரியாத் ஷ்மோனாவில் உள்ள இஸ்ரேல் ராணுவத் தளம் மீது ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும் தெரிவித்தது.
- ரஃபாவின் மத்திய பகுதியில் ஹமாஸ் சுரங்கங்களை அழிக்கப்பட்டது.
- ஹமாஸ் ஆயுத கிடங்கு நகர் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது.
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா முனையில் இஸ்ரேல் எல்லையில் உள்ள காசாவின் வடக்குப் பகுதியில் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதல் நடத்தியது.
கொஞ்சம் கொஞ்சமாக தெற்கு நோக்கி படைகளை நகர்த்தி வந்தது. தற்போது ரஃபா நகரை தவிர்த்து மற்ற பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் சீர்குலைத்துள்ளது.
ஹமாஸ்க்கு எதிராக போர் தொடுத்ததன் நோக்கம் நிறைவேற வேண்டுமென்றால் ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என இஸ்ரேல் தெரிவித்தது.
எகிப்து எல்லையில் உள்ள ரஃபா நகரில் காசாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் (சுமார் 10 லட்சம் பேர்) வசித்து வருகிறார்கள். இதனால் இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தினால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என உலக நாடுகள் ரஃபா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றமும் ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த தடைவிதித்தது, ஆனால் முழு அளவில் தரைவழி தாக்குதல் நடத்தமாட்டோம் ஒரு குறிப்பிட்ட அளவில் தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் தெரிவித்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே கடந்த வார இறுதியில் தற்காலிக முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 40-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். இது துரதிருஷ்டவசமான தவறு என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்திருந்தார்.
இதனால் ரஃபா நகர் மீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் யோசிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஃபாவின் மத்திய பகுதியில் ராணுவம் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ரஃபாவின் மத்திய பகுதியில் ராக்கெட் லாஞ்சர்களை கண்டுபிடித்தோம். ஹமாஸ் அமைப்பின் சுரங்கங்கள் மற்றும் ஆயுத கிடங்கு நகரை அகற்றியுள்ளோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் கடந்த 6-ந்தேதி ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. எகிப்து எல்லையுடன் உள்ள கிழக்கு மாவட்டங்கள் மீது தங்களது தாக்குதலை அதிகரித்து வருகின்றன. தற்போது மேற்கு மாவட்டமான டெல் அல்-சுல்தானில் இஸ்ரேல் ராணுவம் நுழைந்துள்ளது.
இங்கு இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹமாஸ்க்கும் இடையில் கடுமையான சண்டை நீடித்து வருவதாக தகவல் வெளியாகியள்ளது.
மத்திய ரஃபாவின் எந்த பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.
- ரஃபா நகரில் காசாவின் 50 சதவீத பாலஸ்தீன மக்கள் வசித்து வருகிறார்கள்.
- பெரும்பாலான மக்கள் தற்காலிக முகாம்களில் வசித்து வரும் நிலையில், இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது காசாவின் தெற்கு பகுதியில் எகிப்து எல்லையில் அமைந்துள்ள ரஃபா மீது தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. முழு அளவில் இல்லாத ஒரு குறைந்த அளவிலான தரைவழி தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே வான்வழி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. காசாவின் வடக்கு பகுதியில் வசித்து வந்த பாலஸ்தீனர்கள் ரஃபா நகரில் குவிந்துள்ளனர். அவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் 13 லட்சம் மக்களின் நிலை என்னவாகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில்தான் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஏவுகணைகள் தற்காலிக முகாம் மீது விழுந்தது. இதில் தற்காலிக முகாம் தீப்பற்றி எரிந்தது. இந்த கோர சம்பவத்தில் 40-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் உலக நாடுகள் இஸ்ரேல் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக காசா மீது அனைத்து கண்களும் என்ற வாசகத்துடன் போட்டோ ஒன்று வெளியானது.
இந்த போட்டோவை ஷேர் செய்து காசா மக்களுக்கு (பாலஸ்தீன மக்கள்) பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், ஏவுகணை தாக்குதலின்போது ஹமாஸ் வெடிப்பொருட்கள் தீப்பற்றி எரிந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் ஹமாஸ் முற்றிலுமாக ஒழிக்க இன்னும் ஏழு மாதங்கள் தாக்குதல் நீடிக்கும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பப்படும் நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியபோது உங்களுடைய கண்கள் எங்கே இருந்தன என்ற வாசகத்துடன் ஒரு குழந்தை முன் ஹமாஸ் பயங்கரவாதி துப்பாக்கியுடன் நிற்கும் போட்டோவை வெளியிட்டு இஸ்ரேல் கேள்வி எழுப்பியுள்ளது.
அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் எல்லைக்குள் 1200 பேரை கொலை செய்த ஹமாஸ், 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதனால் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. தற்போது வரை இந்த தாக்குதலில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
- இஸ்ரேல் வான்தாக்குதலில் ரஃபா நகரில் 35 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
- இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருவதாக நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் ராணுவம், காசா மீது தாக்குல் நடத்தி வருகிறது. ரஃபா நகரை தவிர்த்து மற்ற பகுதிகளை தடம் தெரியாத அளவிற்கு அழித்து விட்டது. ஹமாஸ்க்கு எதிராக போர் தொடங்கியதற்கான இலக்கை எட்ட வேண்டுமென்றால் ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று இஸ்ரேல் தெரிவித்தது.
ரஃபா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரேல் அறிவித்தது. இதற்கு பெரும்பாலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஐ.நா. நீதிமன்றம் ரஃபா மீது தாக்குதல் நடத்தக்கூடாது என உத்தரவிட்டது.
இந்த நிலையில் நேற்று திடீரென ரஃபா நகர் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 35 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டது துரதிருஷ்டவசமான தவறு என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக எனத் தெரிவித்துள்ளார்.
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
- விலையுயர்ந்த சிவப்பு கல்லால் இந்த தங்க மோதிரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது
- ஜெருசலேமில் வாழ்ந்த பண்டைய கால மக்கள் செழிப்புடன் வாழ்ந்துள்ளனர்.
இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேமில் 2,300 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்பொருள் ஆணையம் தெரிவித்துள்ளது.
விலையுயர்ந்த சிவப்பு கல்லால் இந்த தங்க மோதிரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது
இதன்மூலம் ஜெருசலேமில் வாழ்ந்த பண்டைய கால மக்கள் குறிப்பிடத்தக்க செல்வாக்குடனும், செழிப்புடனும் இருந்ததை இந்த மோதிரம் உணர்த்துவதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- 250 பேரை ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
- 100 பேர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
காசா முனையில் ஆட்சி அதிகாரம் செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளினார்கள். அத்துடன் 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்திய வருகிறது. இந்த சண்டை ஏழு மாதங்களை தாண்டி நடைபெற்று வருகிறது.
போருக்கு இடையே கடந்த டிசம்பர் மாதம் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காக போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது சுமார் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதன்பின் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.
ஒரு பக்கம் பிணைக்கைதிகளை மீட்க முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் மறுபக்கம் இனிமேல் ஹமாஸ் அமைப்பால் இஸ்ரேல் நாட்டிற்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்தது.
தற்போது பாலஸ்தீனர்கள் அதிகளவில் வசித்து வரும் ரஃபா நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே பெண் ராணுவ வீரர்களை பிடித்து வைத்திருக்கும் வீடியோவை வெளியிட்டது.
இந்த நிலையில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பு இணைந்து நடத்திய நடவடிக்கையில் மூன்று பிணைக்கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹனான் யாப்லோன்கா, மைக்கேல் நிசென்பாயும், ஓரியன் ஹெர்னாண்டஸ் ஆகியோர் காசா முனைக்கு கடத்திச் செல்லப்பட்டார்கள். தற்போது அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
121 பிணைக்கைதிகள் இன்னும் ஹமாஸ் பிடியில் இருப்பதாக இஸ்ரேல் நம்புகிறது. 37 பிணைக்கைதிகள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
காசாவில் உள்ள ஜபாலியா நகரில் உடல்கள் மீட்கப்பட்டு இஸ்ரேலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
- காசாவின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் ரபா நகரில் உள்ளனர்.
- ரபாவில் இருந்து 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாமிற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவம் ரபா நகர் மீது தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் தொகை அடர்ந்த ரபா நகரில் இருந்து சுமார் 6 லட்சம் மக்கள் முகாமிற்கு இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
ரபா நகர் மீது தாக்குதல் நடத்தினால் ஆயுதம் வழங்கமாட்டோம் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. முழு அளவில் ரபா மீது தரைவழி தாக்குதல் நடத்தக்கூடாது என அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் வலியுறுத்திய நிலையில் இஸ்ரேல், சிறிய அளவிலான வரையறுக்கப்பட்ட தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ரபா மீதான தாக்குதல் தொடரும், கூடுதல் படைகள் ரபா நகருக்குள் நுழையும் என இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி யோவ் காலன்ட் தெரிவித்துள்ளார். மேலும், ரபாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் சுரங்கங்களை அழித்து, 20-க்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினரை கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ரபா மீது தாக்குதல் நடத்தப்படும் நிலையில் காசா முனையின் மற்ற பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் ஒன்றிணைந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதாக கூறப்படுகிறது. அப்படி தாக்குதல் நடத்துபவர்களை ஒழித்து கட்டியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் இருந்துக்கு 20-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் நோக்கி தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
- தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- பலியானவரின் பெயர் விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
காசா:
இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கி 6 மாதங்களை கடந்துவிட்டது. இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் கடுமையான தாக்குதலுக்கு பெண்கள், குழந்தைகள் உள்பட பலியானவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் காசாவின் ரபா நகரில் உள்ள மருத்துவமனைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பயணித்த கார் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் அவர் கொல்லப்பட்டார்.
அவர் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறையின் (டி.எஸ்.எஸ்.) ஊழியர் ஆவார். பலியானவரின் பெயர் விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை. என்றாலும், அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும், முன்னாள் இந்திய ராணுவ வீரர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருடன் பயணித்த மற்றொரு ஊழியர் படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
ஐ.நா. பணியாளர்கள் மீதான அனைத்து தாக்குதல்களையும் நான் கண்டிக்கிறேன். மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போரை நிறுத்தவும் அனைத்து பணயக் கைதிகளை விடுவிக்கவும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளரின் துணை செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறும்போது, "காசாவில் பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பிடுவதற்காக ஐநா ஊழியர்கள் வெவ்வேறு இடங்களுக்குச் செல்வார்கள். அவர்களின் வழக்கமான வேலையின் ஒரு பகுதியாக இருவரும் காரில் மருத்துவமனைக்குச் சென்றனர். அது ரபாவில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனை. அவர்களது வாகனம் எப்படி தாக்கப்பட்டது என்பது குறித்து விவரங்களை சேகரித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து அறிக்கைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்
- மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.
- அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காசா:
இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் பாலஸ்தீன ஆயுதக் குழுவினருக்கும் இடையே தீவிர சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனது தாக்குதல் நடவடிக்கையை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. கரம் ஷாலோம் எல்லை வாசலில் 4 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் ஒன்று ராணுவத்தால் அழிக்கப்பட்டது. மீதமுள்ள 3 ராக்கெட்டுகள் வெறிச்சோடிய பகுதிகளில் விழுந்தன. இந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

காசா நகரில் அல்ஷிபா மருத்துவமனை வளாகத்தில் உள்ள 3 புதைகுழிகளில் இருந்து 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.
இறந்தவர்களின் உடல்கள் அங்குள்ள ஆஸ்ப த்திரியில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த சிறுவர்கள் உள்பட பலரும் ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டு, இறந்த உறவினர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்காக காத்து நின்றனர்.
- போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
- ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என நேட்டன் யாகு தெரிவித்தார்.
காசா:
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
மேலும் அவர்கள் நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாகவும் கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போர் 7 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் பாலஸ்தீனம் தரப்பில் இதுவரை சுமார் 34 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மேலும் காசாவுக்குள் செல்லும் எல்லைகள் அனைத்தையும் இஸ்ரேல் முடக்கி உள்ளது. எனவே வெளிநாட்டு நிவாரண பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு அங்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கிடையே இந்த போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.
அதன்படி காசா போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது.
இதன்மூலம் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 3 பேர் பலியாகினர். மேலும் 10 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் காசாவின் ரபா பகுதியில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு குழந்தை உள்பட 19 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து காசா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு நிராகரித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இப்போது படைகளை பின்வாங்கினால் பதுங்கி இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவார்கள். எனவே அவர்களை முற்றிலும் ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என நேட்டன் யாகு தெரிவித்தார்.
மேலும் ரபா பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் அவர் அறிவுறுத்தி உள்ளார். இதனால் ரபா நகருக்குள் ராணுவத்தை அனுப்பி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு இருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.
அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதால் அங்கு பதற்றம் தீவிரம் அடைந்துள்ளது.






