என் மலர்
டென்னிஸ்
- சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- இதன் அரையிறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா வெற்றி பெற்றார்.
வாஷிங்டன்:
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.
இதில் ஜெசிகா 6-2 என முதல் செட்டை வென்றார். 2வது செட்டை அலெக்சாண்ட்ரோவா 6-2 என கைப்பற்றினார்.
இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 7-5 என ஜெசிகா பெகுலா வென்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தினார்.
- சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- இதன் காலிறுதியில் பிரிட்டனின் எம்மா நவரோ தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் பிரிட்டனின் எம்மா நவரோ, சக நாட்டு வீராங்கனையான அமண்டா அனிசிமோவா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக அனிசிமோவா 7-5, 7-6, (7-1) என்ற செட் கணக்கில் எம்மா நவரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- இதன் காலிறுதியில் ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன்
மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய சோபியா கெனின் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் அன்னா கலின்ஸ்கயாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- இதன் காலிறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா வெற்றி பெற்றார்.
வாஷிங்டன்:
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான டேனியல் காலின்சுடன் மோதினார்.
இதில் காலின்ஸ் 6-1 என முதல் செட்டை வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட ஜெசிகா பெகுலா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-3, 6-0 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா 6-1, 6-4 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
- இதில் செக் குடியரசைச் சேர்ந்த மென்சிக் விலகியுள்ளார்.
மான்டே கார்லோ:
மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற உள்ளது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் சிட்சிபாஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்நிலையில், செக் குடியரசைச் சேர்ந்த ஜாகுப் மென்சிக் மான்டே கார்லோ டென்னிஸ் தொடரில் இருந்து திடீரென விலகியுள்ளார்.
வரும் தொடர்களில் பங்கேற்க உள்ளதால் தற்போது ஓய்வு எடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த வாரம் நடந்த மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரஷியாவின் டேனில் மெத்வதேவ் டாப் 10 இடத்தை இழந்துள்ளார்.
- தற்போதைய தரவரிசைப் பட்டியலில் மெத்வதேவ் 11-வது இடத்தில் உள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் செக் குடியரசின் ஜாகுப் மென்சிக் சாம்பியன் பட்டம் வென்றார். இந்தத் தொடரின் முதல் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெளியேறினார்.
இந்நிலையில், ஏடிபி தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், கடந்த 2023-ம் ஆண்டுக்கு பிறகு டாப் 10 இடத்தை முதன்முறையாக இழந்துள்ளார் ரஷியாவின் டேனில் மெத்வதேவ்.
தற்போதைய தரவரிசைப் பட்டியலில் மெத்வதேவ் 11-வது இடத்தில் உள்ளார்.
இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடத்திலும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 2வது இடத்திலும், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 3வது இடத்திலும், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 4வது இடத்திலும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 5வது இடத்திலும் உள்ளனர்.
கடந்த ஆண்டில் நடைபெற்ற எந்த ஒரு டென்னிஸ் தொடரிலும் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு ஜோகோவிச் (செர்பியா), ஜாகுப் மென்சிக் (செக்குடியரசு) ஆகியோர் முன்னேறினர்.
- இந்த மோதலில் ஜாகுப் மென்சிக் 7-6 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மியாமி:
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்த மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு ஜோகோவிச் (செர்பியா), ஜாகுப் மென்சிக் (செக்குடியரசு) ஆகியோர் முன்னேறினர்.
பரபரப்பான இந்த இறுதிப்போட்டியில் ஜாகுப் மென்சிக் 7-6 (7-4) மற்றும் 7-6 (7-4 ) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் ஏடிபி மாஸ்டர்ஸ் பட்டத்தை முதல் முறையாக மென்சிங் பெற்று சாதனை படைத்துள்ளார்.
- மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
- இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
புளோரிடா:
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா உடன் மோதினார்.
இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய சபலென்கா 7-5, 6-2 என்ற நேர் செட்டில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
சபலென்கா மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் பெறுவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவில் நம்பர் 1 ஜோடி வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
புளோரிடா:
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் நம்பர் 1 ஜோடியான மார்செலோ ஆரேவலோ-மேட் பாவிக் ஜோடி, பிரிட்டனின் லாயிட் கிளாஸ்பூல்-ஜூலியன் கிளாஷ் ஜோடி உடன் மோதியது.
இதில் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய நம்பர் 1 ஜோடி 7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
சமீபத்தில் நடந்த இந்தியன் வெல்ஸ் தொடரிலும் இந்த ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
- மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
- இதில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
புளோரிடா:
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதிச் சுற்றில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பல்கேரியாவின் டிமித்ரோவ் உடன் மோதினார்.
இதில் ஜோகோவிச் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஜோகோவிச், ஜாகுப் மென்சிக் அல்லது டெய்லர் பிரிட்ஸ் உடன் மோத உள்ளார்.
- முதல் 2 செட்டை இருவரும் ஆளுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.
- மியாமி ஓபன் இறுதிப் போட்டியில் சபலென்காவும் பெகுலாவும் நாளை மோதவுள்ளார்.
புளோரிடா:
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் அரையிறுதியில் அரினா சபலென்கா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார். இதில் சபலென்கா 6-2, 6-2 என எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் 19 வயதான பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஈலாவும் அமெரிக்கா வீராங்கனை ஜெசிகா பெகுலாவும் மோதினர்.
இந்த போட்டியின் முதல் செட்டை பெகுலா 7-6 (7-3), வென்றார். அடுத்த செட்டை ஈலா 7-5 என்ற கணக்கில் வீழ்த்தினார். பரபரப்பான இறுதி செட்டில் பெகுலா 6-3 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார். இதன் மூலம் இறுதிப் போட்டியில் சபலென்காவும் பெகுலாவும் நாளை மோதவுள்ளார்.
- அரையிறுதியில் ஜோகோவிச் - டிமித்ரோவ், ஃப்ரிட்ஸ் - மென்சிக் மோதுகின்றனர்.
- இறுதிப் போட்டிக்கு முன்னேறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் செபாஸ்டியன் கோர்டா உடன் மோதினார்.
இந்த போட்டியில் ஜோகோவிச் 6-3, 7-6 (7-4) என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதி சுற்றில் ஜோகோவிச், டிமித்ரோவ் உடன் மோதுகிறார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து, ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் 1000 டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய வயதான வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றிருக்கிறார்.
தற்போது ஜோகோவிச் வயது 37 ஆண்டுகள் 10 மாதங்கள் ஆகிறது. முன்னதாக ரோஜர் ஃபெடரர் தனது 37 வயது ஏழு மாதங்கள் இருக்கும் போது இந்தியன் வெல்ஸ் மற்றும் மியாமி தொடர்களின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தது ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் டென்னிஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்ற வயதான வீரர் என்ற சாதனையாக இருந்தது.






