என் மலர்
டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக், சபலென்கா காலிறுதிக்கு முன்னேற்றம்
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
- பெண்கள் ஒற்றையரில் இகா ஸ்வியாடெக் நான்காவது சுற்றில் வெற்றி பெற்றார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 1-6 என இழந்த ஸ்வியாடெக் அடுத்த இரு சுற்றுகளை சிறப்பாக ஆடி 6-3, 7-5 என்ற செட்களில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நாளை மறுதினம் நடைபெறும் காலிறுதியில் ஸ்வியாடெக் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோதுகிறார்.
மற்றொரு போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா 7-5, 6-3 என்ற செட்கணக்கில் அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நாளை மறுதினம் நடைபெறும் காலிறுதியில் சபலென்கா சீனாவின் குயின்வென் ஜெங் உடன் மோதுகிறார்.
Next Story






