என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
    • இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா ஜோடி காலிறுதியில் தோல்வி அடைந்தது.

    மாண்டே கார்லோ:

    மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற உள்ளது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, பிரான்சின் மேனுவல் கினார்டு-மொனாக்கோவின் ரோமைன் அர்னியோடோ ஜோடியுடன் மோதியது.

    இதில் முதல் செட்டை 2-6 என இழந்த போபண்ணா ஜோடி, அடுத்த செட்டை 6-4 என கைப்பற்றியது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் போபண்ணா ஜோடி 7-10 என்ற கணக்கில் செட்டை இழந்து தோல்வி அடைந்து

    தொடரில் இருந்து வெளியேறியது.

    • காலிறுதி போட்டியில் அலெஜான்ட்ரோ டேவிடோவிச் (ஸ்பானிஷ்), அலெக்ஸி பாபிரின் (ஆஸ்திரேலியா) ஆகியோர் மோதினர்.
    • இதில் 6-3, 6-2 என்ற கணக்கில் என்ற செட் கணக்கில் டேவிடோவிச் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் காலிறுதி போட்டியில் அலெஜான்ட்ரோ டேவிடோவிச் (ஸ்பானிஷ்), அலெக்ஸி பாபிரின் (ஆஸ்திரேலியா) ஆகியோர் மோதினர்.

    இதில் 6-3, 6-2 என்ற கணக்கில் என்ற செட் கணக்கில் டேவிடோவிச் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    • மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
    • ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மாண்டே கார்லோ:

    மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மனியின் டேனியல் அல்ட்மையர் உடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், போர்ச்சுகலின் நுனோ போர்ஜஸ் உடன் மோதினார். இதில் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்ற சிட்சிபாஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
    • ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    மாண்டே கார்லோ:

    மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய டி மினார் 6-2, 6-2 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் மெத்வதேவ் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

    • மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
    • இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா ஜோடி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.

    மாண்டே கார்லோ:

    மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற உள்ளது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, இத்தாலியின் சிமொனே பொலேலி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடியுடன் மோதியது.

    இதில் முதல் செட்டை 2-6 என இழந்த போபண்ணா ஜோடி, அடுத்த இரு செட்களை7-6 (7-4), 10-7 என வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.

    • மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
    • ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் மெத்வதேவ் 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மாண்டே கார்லோ:

    மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காராஸ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ உடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 3-6, 6-0, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் அலெக்சாண்ட்ரே முல்லர் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 7-6 (8-6) என மெத்வதேவும், 2வது செட்டை 7-5 என முல்லரும் வென்றனர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை மெத்வதேவ் 6-2 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
    • ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    மாண்டே கார்லோ:

    மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், சிலியின் அலெஜாண்ட்ரோ டபிலோ உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய டபிலோ 6-3, 6-4 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஜோகோவிச் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

    • மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
    • ஒற்றையர் பிரிவில் ஜெர்மன் வீரர் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    மாண்டே கார்லோ:

    மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், இத்தாலியின் மெட்டியோ பெரேட்டினி உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-2 ஸ்வரேவும், 2வது செட்டை 6- 3 என பெரேட்டினியும் வென்றனர்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பெரேட்டினி 7-5 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

    • மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
    • ஒற்றையர் பிரிவில் பிரான்சின் முல்லர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மாண்டே கார்லோ:

    மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரான்சின் அலெக்சாண்ட்ரே முல்லர், அர்ஜெண்டினாவின் யூகோ கேராபெல் உடன் மோதினார்.

    இதில் முல்லர் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், சக நாட்டு வீரரான கரன் கச்சனாவ் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 7-5 என மெத்வதேவும், 2வது செட்டை 6-4 என கச்சனாவும் வென்றனர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை மெத்வதேவ் 6- 4 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் 2வது சுற்றில் மெத்வதேவ், முல்லரை சந்திக்கிறார்.

    • சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது.
    • இதன் இறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா வெற்றி பெற்றார்.

    வாஷிங்டன்:

    சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனை சோபியா கெனின் உடன் மோதினார்.

    ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய ஜெசிகா 6-3, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    கடந்த வாரம் நடந்த மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சபலென்காவிடம் தோற்ற ஜெசிகா பெகுலா 2வது இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
    • இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    மாண்டே கார்லோ:

    மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற உள்ளது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ-சிலியின் அலெஜாண்ட்ரோ ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 6-3, 7-5 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    நாளை மறுதினம் நடைபெறும் 2வது சுற்றில் போபண்ணா ஜோடி, இத்தாலி ஜோடியுடன் மோதுகிறது.

    • சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • இதன் அரையிறுதியில் அமெரிக்காவின் அனிசிமோவா காயத்தால் விலகினார்.

    வாஷிங்டன்:

    சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், சக நாட்டு வீராங்கனை அமண்டா அனிசிமோவா உடன் மோதினார்.

    இதில் சோபியா கெனின் 5-2 என முதல் செட்டில் முன்னிலை பெற்றிருந்தார். அப்போது அனிசிமோவா காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.

    இதையடுத்து சோபியா கெனின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சோபியா கெனின், ஜெசிகா பெகுலாவை சந்திக்கிறார்.

    ×