என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 210 ரன்கள் குவித்தது.
    • 2-வது அதிகபட்ச வெற்றிகளை பெற்ற அணி என்ற ஆஸ்திரேலியாவின் சாதனையை இந்திய அணி சமன் செய்தது.

    நாட்டிங்காம்:

    இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி சதம் கடந்தார். அவர் 62 பந்தில் 3 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 112 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து சார்பில் லாரன் பெல் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 14.5 ஓவரில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்த வெற்றியின் மூலம் சர்வதேச மகளிர் டி20 போட்டிகளில் 2-வது அதிகபட்ச வெற்றிகளை பெற்ற அணி என்ற ஆஸ்திரேலியாவின் சாதனையை இந்திய அணி சமன் செய்தது. 216 வெற்றிகளுடன் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது.

    • 2017-ம் ஆண்டு டி.என்.பி.எல். போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி தான் மோதிய 7 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றது.
    • தற்போது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 7 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்று 2-வது அணி என்ற சாதனையை படைத்தது.

    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். போட்டியில் 4-வது மற்றும் இறுதி கட்ட ஆட்டங்கள் திண்டுக்கல்லில் நேற்று தொடங்கியது.

    முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது.

    முதலில் விளையாடிய மதுரை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 9.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 71 ரன் எடுத்து இருந்த போது ஆட்டம் பூச்சிகளின் காரணமாக 20 நிமிடம் தடைப்பட்டது. இதனால் 14 ஓவர்களில் 114 ரன்கள் இலக்கு என மாற்றி அமைக்கப்பட்டது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 12.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு இந்த ரன்னை எடுத்தது.

    4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தான் மோதிய 7 ஆட்டத்திலும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது. அந்த அணி ஏற்கனவே திருப்பூர் தமிழன்சை 8 விக்கெட் வித்தியாசத்திலும், நெல்லை ராயல் கிங்சை 41 ரன் வித்தியாசத்திலும், கோவை கிங்சை 8 விக்கெட்டிலும், திண்டுக்கல் டிராகன்சை 8 ரன் வித்தியாசத்திலும், சேலம் ஸ்பார்டன்சை 6 விக்கெட்டிலும், திருச்சி கிராண்ட் சோழாசை 4 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது.

    2017-ம் ஆண்டு டி.என்.பி.எல். போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி தான் மோதிய 7 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றது. அதன் பிறகு தற்போது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 7 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்று 2-வது அணி என்ற சாதனையை படைத்தது.

    மதுரை அணியை வீழ்த்தியது குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் பாபா அபராஜித் கூறியதாவது:-

    7 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. லீக் சுற்றின் அனைத்து போட்டிகளிலும் வென்றது மிகுந்த திருப்தியாக இருக்கிறது. இதற்காக நாங்கள் கடுமையாக உழைத்தோம். இதற்கு அனைத்து வீரர்களும் தான் காரணமாகும்.

    எங்களது பந்துவீச்சு நன்றாக இருக்கிறது. சிலம்பரசன், விஜய் சங்கர் அபாரமாக வீசினார்கள். பிளே ஆப் சுற்றில் விளையாடும் இந்த நேரத்தில் ஒவ்வொரு துறைகளிலும் இன்னும் சிறிது முன்னேற்றம் காண வேண்டும். 'குவாலிபையர்1' போட்டியில் விளையாட இன்னும் 2 நாட்கள் ஓய்வு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ஆட்டநாயகன் விருது பெற்ற விஜய் சங்கர் கூறும் போது,

    பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கு முன் வெற்றி பெறுவது எங்களுக்கு மிகவும் முக்கியம். நாங்கள் விளையாடிய 7 லீக் போட்டிகளிலும் வென்று முதலிடம் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளிலும் வெல்லும் முனைப்புடன் உள்ளோம்" என்றார்.

    விஜய் சங்கர் 3 விக்கெட் வீழ்த்தி 28 ரன் எடுத்தார்.

    2-வது ஆட்டத்தில் கோவை கிங்ஸ் 68 ரன் வித்தியாசத்தில் சேலத்தை தோற்கடித்து ஆறுதல் பெற்றது. இந்த தோல்வியால் மதுரை அணி வாய்ப்பை இழந்து வெளியேறிது.

    * * *விக்கெட் கைப்பற்றிய மகிழ்ச்சியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள்.

    • கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி சதம் அடித்தார்.
    • அவர் 62 பந்தில் 3 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 112 ரன்கள் குவித்தார்.

    இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று நடந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி சதம் கடந்தார். அவர் 62 பந்தில் 3 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 112 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து, 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 14.5 ஓவரில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சதம் விளாசியதன் மூலம், கிரிக்கெட் போட்டியின் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் சதம் அடித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முதல் வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்தார்

    உலகளவில் 3 போட்டிகளிலும் சதம் அடித்த வீராங்கனைகளின் வரிசையில் ஸ்மிருதி மந்தனா 5வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய கோவை அணி 203 ரன்களைக் குவித்தது.
    • அடுத்து ஆடிய சேலம் 135 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது.

    திண்டுக்கல்:

    நடப்பு டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 4வது கட்ட போட்டிகள் திண்டுக்கல்லில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், இன்றைய 26-வது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    அதன்படி, முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 203 ரன்களைக் குவித்தது. பாலசுப்ரமணியம் சச்சின் அபாரமாக ஆடி சதமடித்து 116 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய ஷாருக் கான் 14 பந்தில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது. அபிஷேக் 32 ரன்னும், லோகேஷ்வர் 29 ரன்னும், நிதிஷ் ராஜகோபால் 22 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். தேவ் ராகுல் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், சேலம் அணி 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 68 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்றது.

    கோவை அணி சார்பில் வித்யுத் 5 விக்கெட்டும், திவாகர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இரு அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று நடந்தது.
    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    நாட்டிங்காம்:

    இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி சதம் கடந்தார். அவர் 62 பந்தில் 3 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 112 ரன்கள் குவித்தார். ஹர்லீன் தியோல் 43 ரன்னும், ஷபாலி வர்மா 20 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் லாரன் பெல் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்களை இழந்தது இங்கிலாந்து.

    அந்த அணியின் கேப்டன் நாட் சீவர் பிரண்ட்42 பந்தில் 66 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், இங்கிலாந்து 14.5 ஓவரில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகி விருது ஸ்மிருதி மந்தனாவுக்கு அளிக்கப்பட்டது.

    இந்தியா சார்பில் ஸ்ரீ சரணி 4 விக்கெட்டும், தீப்தி ஷர்மா, ராதா யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    நடப்பு டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று கட்ட லீக் போட்டிகள் கோவை, சேலம், நெல்லையில் நடந்து முடிந்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (12 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (8 புள்ளி), நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் (8 புள்ளி) ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

    இந்நிலையில், கடைசி சுற்று போட்டிகள் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது.

    இன்றைய 26-வது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேலம் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    அதன்படி, கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சித்தார்த் டக் அவுட்டானார். சுரேஷ் லோகேஷ்வர் 3 ரன்னில் வெளியேறினார். விஷால் வைத்யா 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    பாலசுப்ரமணியம் சச்சின் அபாரமாக ஆடி சதமடித்து 116 ரன்னில் அவுட்டானார்.

    ஆட்டத்தின் 18வது ஓவரில் ஷாருக் கான் ஹாட்ரிக் சிக்சர் உள்பட 28 ரன்கள் எடுத்தார். அவர் 14 பந்தில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 203 ரன்களைக் குவித்தது.

    இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்குகிறது.

    • 55 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது தென்ஆப்பிரிக்கா.
    • லுவான்- ட்ரே பிரிட்டோரியஸ், கார்பின் போஸ்ச் சதம் விளாசினர்.

    ஜிப்பாப்வே- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இன்று புலவாயோவில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் டெவால்ட் பிரேவிஸ், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், கோடி யூசுப் ஆகியோர் அறிமுகம் ஆகினர்.

    டோனி டி ஜோர்சி, ப்ரீட்ஸ்கே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜோர்சி 0 ரன்னிலும், ப்ரீட்ஸ்கே 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த முல்டர் 17 ரன்னிலும், பெடிங்காம் 0 ரன்னிலும் வெளியேறினர்.

    இதனால் 55 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது தென்ஆப்பிரிக்கா. 5ஆவது விக்கெட்டுக்கு லுவான்- ட்ரே பிரிட்டோரியஸ் உடன் டெவால்டு பிரேவிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளயாடியது. பிரேவிஸ் 41 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனார்.

    அடுத்து வந்த வெர்ரைன் 10 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கார்பின் போஸ்ச் அபாரமாக விளையாடினார். பிரிட்டோரியஸ் அறிமுக போட்டியிலேயே 112 பந்தில் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 157 பந்தில் 150 ரன்னைத் தொட்டார். தொடர்ந்து விளையாடிய அவர் 160 பந்தில் 153 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    போஸ்ச் 77 பந்தில் அரைசதமும், 124 பந்தில் சதமும் அடித்தார். தென்ஆப்பிரிக்கா முதல்நாள் ஆட்ட முடிவில் 90 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்கள் குவித்துள்ளது. போஸ்ச் 100 ரன்னுடனும், மபாகா 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    • விஜய் சங்கர் ஆட்டமிழக்காமல் 17 பந்தில் 28 ரன்கள் விளாசினார்.
    • பாபா அபராஜித் 12 பந்தில் 20 ரன்கள் அடித்தார்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 25ஆவது போட்டி திண்டுக்கலில் நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய மதரை பாந்தர்ஸ் 156 ரன்கள் சேர்த்தது, பின்னர். 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் களம் இறங்கியது.

    ஆஷிக், ஹரிகரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆஷிக் 17 பந்தில் 22 ரன்களும், ஹரிகரன் 17 பந்தில் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    பாபா அபராஜித் 12 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 9.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்திருக்கும்போது, ஆட்டம் தடைபட்டது. பின்னர் ஆட்டம் தொடங்கியபோது, 14 ஓவரில் 114 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. என். ஜெகதீசன் 10 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். விஜய் சங்கர் ஆட்டமிழக்காமல் 17 பந்தில் 28 ரன்கள் அடிக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 12.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தான் விளையாடிய அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மதுரை பாந்தர்ஸ் 7 போட்டிகளில் 2-ல் மட்டும் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது.

    • சதுர்வேத் 18 பந்தில் 31 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
    • ஆதீக் உர் ரஹ்மான் 28 பந்தில் 41 ரன்கள் விளாசினார்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 25ஆவது போட்டி திண்டுக்கலில் நடைபெற்று வருகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. மழைக் காரணமாக அவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால், சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது.

    மதுரை பாந்தர்ஸ் அணியின் ராம் அரவிந்த், பாலசந்தர் அனிருத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அரவிந்த் ரன்ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அனிருத் 4 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    3ஆவது விக்கெட்டுக்கு கேப்டன் சதுர்வேத் உடன் ஆதீக் உர் ரஹ்மான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. மதுரை பாந்தர்ஸ் 6.4 ஓவரில் 64 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. சதுர்வேத் 18 பந்தில் 31 ரன்கள் எடுத்த நிலையில் சிலம்பரசன் பந்தில் ஆட்டமிழந்தார்.

    மறுமுனையில் விளையாடிய ஆதீக் உர் ரஹ்மான் 28 பந்தில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சரத்குமார் 1 ரன்னில் வெளியேறினார். முருகன் அஸ்வின் அதிரடியாக 34 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    19ஆவது ஓவரை விஜய் சங்கர் வீசினார். இந்த ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தினார். 19 ஓவர் முடிவில் மதுரை பாந்தர்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்திருந்தது. தன்வர் கடைசி ஓவரில் 16 ரன்கள் விட்டுக்கொடுக்க மதுரை பாந்தர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்துள்ளது.

    • இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் கேள்விகள் எழும்.
    • கேட்டதை எல்லாம் கொடுத்ததாக தேர்வாளர்கள் எண்ணி, ரிசல்ட் என்னவானது என கேள்வி எழுப்புவார்கள்.

    இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவரது தலைமையில் இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

    கவுதம் கம்பீர் பதவி ஏற்ற பிறகு இந்தியா 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் வெற்றி பெற்றது.

    நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியடைந்தது. அதன்பின் ஆஸ்திரேலியா மண்ணில் 1-3 எனத்தோற்றது.

    இந்த நிலையில் ஐந்து போட்டிகளில் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.

    இந்த நிலையில் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளர் பதவி மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:-

    காம்பீர் மீது ஏராளமான அழுத்தம் உள்ளது. இந்த அழுத்தம் அதிகரித்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் அவரது தலைமையில் இந்திய அணி அதிக போட்டியில் வெற்றி பெறவில்லை. வங்கதேசத்திற்கு எதிரான 2 டெஸ்ட் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியிலும் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது. தோல்வி.! தோல்வி..! என சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

    ஒயிட்பால் கிரிக்கெட்டில் அவருடைய செயல்பாடு சிறப்பாக உள்ளது. அணி சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறது. ஆனால், டெஸ்ட் போட்டியை பொறுத்தவரையில், கேள்வி எழுகிறது. இந்த தொடரில் ஏராளமான அழுத்தம் இருப்பதாக நினைக்கிறேன். இந்த தொடர் இந்தியாவுக்கு சரியாக அமையவில்லை என்றால், கடவுளே வேண்டாம், சிறப்பாக செல்லும் என்று நம்புகிறேன். சிறப்பாக விளையாட வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புகிறேன். அப்படி சிறப்பாக இல்லை என்றால், கேள்விக்குறி எழும் எங்கே சென்றீர்கள்? என்ன செய்தீர்கள்? போன்ற கேள்விகள் எழும்.

    ஏனென்றால், அணி நிர்வாகம் கேட்டதையெல்லாம் கொடுத்ததாக தேர்வாளர்கள் உணர்கிறார்கள். ஆகவே, ரிசல்ட் காட்ட வேண்டும். சாக்குபோக்கு சொல்ல முடியாது.

    இவ்வாறு ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    • முதல் டெஸ்டில் பும்ரா 43.4 ஓவர்கள் வீசியுள்ளார்.
    • பணிச்சுமை காரணமாக 2ஆவது டெஸ்டில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பும்ரா 24.4 ஓவரில் 83 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். 2ஆவது இன்னிங்சில் 19 ஓவர்கள் வீசினார். 57 ரன்கள் கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை.

    இங்கிலாந்துக்கு தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே, 3 போட்டிகளில்தான் பும்ரா விளையாடிவார் என தெரிவிக்கப்பட்டது. முதல் டெஸ்டில் 43.4 ஓவர்கள் வீசிய பும்ரா, 2ஆம் போட்டிக்கான நேற்றைய பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனால் எட்ஜ்பாஸ்டனில் வருகிற 2ஆம் தேதி தொடங்கும் 2ஆவது டெஸ்டில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேவேளையில் பிரசித் கிருஷ்ணாவும் பயிற்சி மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இவர் முதல் இன்னிங்சில் 20 ஓவர்கள் வீசி 128 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். 2ஆவது இன்னிங்சில் 15 ஓவர்கள் வீசி 92 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். 5 விக்கெட் வீழ்த்தினாலும் ஓவருக்கு சராசரியாக 6 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்துள்ளார். இதனால் 2ஆவது டெஸ்டில் ஓரங்கட்டப்படலாம் எனத் தெரிகிறது.

    பும்ராவுடன் இவரும் 2ஆவது டெஸ்ட்டில் இடம்பெறவில்லை என்றால் ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணியில் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது.

    இந்திய பேட்டர்கள் 5 சதங்கள் அடித்த நிலையிலும், 20 விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் இந்தியா தோல்வியை சந்தித்தது. இதனால் பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் ஆகும். முதல் டெஸ்டில் சிராஜ் மிகப்பெரிய அளவில் சாதிக்கவில்லை. பும்ரா இல்லாத நிலையில் பந்து வீச்சை வழிநடத்தும் சீனியர் வீரராக உள்ளார். இவர் நீக்கப்பட வாய்ப்பு மிகவும் குறைவுதான்.

    2ஆவது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஜாஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
    • மதுரை பாந்தர்ஸ் 7ஆவது இடத்தில் உள்ளது.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 25ஆவது போட்டி திண்டுக்கலில் நடக்கிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    மழை பெய்த காரணத்தினால் அவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்தது. இதனால் ஆட்டம் சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாக தொடங்கப்பட்டது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தான் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மதுரை 6 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று 7ஆவது இடத்தில் உள்ளது.

    ×