என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சதம் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
    • தற்போது உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் சதம் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார்.

    குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் டிராவிஸ் ஹெட். தொடக்க வீரரான இவர் 120 பந்தில் 15 பவுண்டரி, 4 சிக்சருடன் 137 ரன்கள் குறித்து ஆட்டமிழந்தார்.

    இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்திய அணியிடம் இருந்து உலகக் கோப்பையை பறித்துக் கொண்டார் என்றால் அது மிகையாகாது.

    இது மட்டுமல்ல. கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த போட்டியிலும் சதம் விளாசியதுடன், ஆட்ட நாயகன் விருது வெற்று இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வியடைய காரணமாக இருந்தார்.

    இதன்மூலம் ஒரே வருடத்தில் இரண்டு ஐசிசி டிராபிகளை இந்தியாவிடம் இருந்து பறித்துக் கொண்டார் டிராவிஸ் ஹெட்.

    • ஷ்ரேயாஸ் அய்யர் 530 ரன்கள் அடித்துள்ளார்.
    • அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடித்துள்ளார்.

    உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த இந்தியா சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. ரோகித் அதிரடியாக விளையாடி 47 ரன்கள் சேர்த்தார். விராட் கோலி, கே.எல். ராகுல் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

    முக்கியமான போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கைக்கொடுக்கவில்லை. இதனால் ரசிகர்கள் இவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் 4-வது இடத்தில் களம் இறங்கி இரண்டு சதங்களுடன் அபாரமாக விளையாடினீர்கள். 530 ரன்கள் குவித்துள்ளீர்கள். ரோகித் சர்மா 31 சிக்சர்கள் அடித்துள்ள நிலையில், நீங்கள் 24 சிக்சர்கள் அடித்துள்ளீர்கள். எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு என "Iyer" ஹேஷ்டேக் டிரெண்டாக்கி எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

    • 10 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் தோல்வி.
    • சொந்த மண்ணில் தோல்வியடைந்ததால், இந்திய வீரர்கள் மிகவும் கவலை அடைந்தனர்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

    சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 வெற்றி பெற்று, இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததால் இந்திய அணி வீரர்கள் மிகவும் கவலை அடைந்தனர். சிராஜ் உள்ளிட்ட சில வீரர்கள் கண்ணீர் விட்டனர்.

    இந்திய பிரதமர் மோடி வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு உலகக் கோப்பையை வழங்கினார். பின்னர், அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "உலகக் கோப்பை முழுவதும் உங்களுடைய திறமை மற்றும் உறுதி குறிப்பிடத்தகுந்தது. நீங்கள் சிறந்த ஸ்பிரிட் உடன் விளையாடி நாட்டிற்கு மகத்தான பெருமை சேர்த்தீர்கள். நாங்கள் இன்று, எப்போதும் உங்களோடு நிற்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • விராட் கோலி- கே.எல். ராகுல் ஜோடியை பிரித்தது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக அமைந்தது.
    • இருவரும் அரைசதம் அடித்த உடனே விரைவாக ஆட்டம் இழந்தது இந்தியாவுக்கு பாதகமாக அமைந்தது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

    போட்டி முடிவடைந்து பரிசு வழங்கும் நிகழ்வின்போது, ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியதாவது:-

    கடைசியில் எங்களது சிறந்ததை கைப்பற்றியுள்ளோம். முக்கியமான போட்டிகளில் வீரர்கள் வீறுகொண்டு எழுந்து, சிறப்பான ஆட்டதை வெளிப்படுத்தினார்கள். இந்த தொடர் முழுவதும் நாங்கள் முதலில் பேட்டிங் செய்து சிறப்பாக செயல்பட்டோம். இன்று நாங்கள், சேஸிங் செய்வது சிறந்ததாக இருக்கும் என நினைத்தோம். இது எங்களுக்கு சற்று எளிதாக இருக்கும் என நினைத்தோம். எல்லோரும் இதில் ஆர்வமாக இருந்தனர்.

    நான் நினைத்ததை விட ஆடுகளம் கூடுதல் ஸ்லோ ஆக இருந்தது. குறிப்பாக பந்து சுழலவில்லை. அதற்கு ஏற்றவாறு தங்களை சரிசெய்து கொண்டு, பந்து வீச்சாளர்கள் சரியான லைனில் பந்தை பிட்ச் செய்தார்கள்.

    தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நாங்கள் பீல்டிங்கில் சொதப்பினோம். இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டார்கள். நாங்கள் வயதான வீரர்களை பெற்றுள்ளோம். இருந்தபோதிலும், ஒவ்வொருவரும் தங்களை பணியை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டனர்.

    300 ரன்களுக்கு கீழ் என்பது 240-ஆக அமைந்தது. 300 ரன்கள் கடினமாக இருக்கும் என நினைத்தேன். இருந்தாலும், இந்த ஆடுகளம் அதையும் சேஸிங் செய்யக்கூடிய அளவில்தான் இருந்தது. 240-ல் இந்தியாவை கட்டுப்படுத்திய மிகவும் மகிழ்ச்சி. லபுஷேன் பொறுமையாக விளையாடினார். டிராவிஸ் ஹெட் அவருடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    தைரியமாக ஆட்டத்தை எடுத்துச் சென்று, பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து, மிகப்பெரிய போட்டியில் தனது கேரக்டரை வெளிப்படுத்தினார். அவர் காயம் அடைந்தபோது, தேர்வாளர்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர். இந்த வெற்றி நீண்ட நாட்களுக்கு ஞாபகத்தில் இருக்கும். இந்த சீசனில் ஏராளமான வெற்றிகளை பெற்றுள்ளோம். அதில் இது மிகவும் உயர்ந்தது. மலையின் உச்சிப்பகுதி.

    இவ்வாறு பேட் கம்மின்ஸ் தெரிவித்தார்.

    • 20 முதல் 30 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் சிறந்ததாக இருந்திருக்கும்.
    • டிராவிஸ் ஹெட்- லபுஷேன் ஜோடி எங்களிடம் இருந்து ஆட்டத்தை அவர்கள் பக்கம் திருப்பி விட்டார்கள்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

    போட்டி முடிவடைந்து பரிசு வழங்கும் நிகழ்வின்போது, ரோகித் சர்மா கூறியதாவது:-

    முடிவு நாங்கள் நினைத்த வழியில் இல்லாமல் போனது. இன்று எங்களுக்கு சிறந்ததாக இல்லை. நாங்கள் எல்லா வகையிலும் முயற்சி செய்தோம். ஆனால், அவை எங்களுக்கு உதவாமல் போய்விட்டது. 20 முதல் 30 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால், அது சிறந்தாக இருந்திருக்கும். விராட் கோலி- கே.எல். ராகுல் ஜோடி நிலைத்து நின்று ஆடியபோது, நாங்கள் 270 முதல் 280 ரன்கள் வரை எதிர்பார்த்தோம். ஆனால், நாங்கள் விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்.

    240 ரன்கள்தான் அடித்திருக்கும்போது, விக்கெட்டை வீழ்த்தி விரும்ப வேண்டும். ஆனால் டிராவிஸ் ஹெட், லபுஷேன் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து, போட்டியை எங்களிடம் இருந்து முற்றிலுமாக அவர்களுக்குரியதாக்கி விட்டனர்.

    சேஸிங் செய்தபோது, ஆடுகள் பேட்ஸ்மேன்களுக்கு சற்று கூடுதல் சாதகமாக இருந்தது. நான் எந்தவித சாக்குபோக்கும் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் அதிக ரன்கள் அடிக்கவில்லை. 3 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தினோம். இன்னும் வீழ்த்திருக்க வேண்டும். ஆனால், அந்த இருவரும் சிறப்பாக விளையாடினர்.

    இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.

    • மூன்று சதங்கள் விளாசி சச்சின் ஒருநாள் சாதனையை முறியடித்தார்.
    • தொடர்ச்சியாக ஐந்து முறை 50 ரன்களுக்கு மேல் அடித்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 6-வது முறையாக கோப்பையை வென்றது.

    இந்தத் தொடரில் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3 சதங்கள் அடித்து, சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 49 சதங்கள் அடித்ததை முறியடித்தார்.

    இன்றைய போட்டியில் 63 பந்தில் 54 ரன்கள் எடுத்து ஆட்மிழந்தார். ஒரே தொடரில் 765 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. 

    • இந்தியா முதலில் 240 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
    • ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

    உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றது.

    போட்டி முடிந்த பிறகு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இரு அணி வீரர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. அதன்பின் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

    பின்னர் இந்தியா பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் ஆகியோர் இணைந்து பேட் கம்மின்ஸிடம் கோப்பையை வழங்கினர். பின்னர், ஆஸ்திரேலிய வீரர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

    • முதல் 10 ஓவருக்குப்பின் பேட்டிங் செய்ய ஆடுகளம் கடினமான அமைந்தது.
    • 2-வது பேட்டிங் செய்ய எளிதாக அமைந்ததால், ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    போட்டி தொடங்குவதற்கு முன், டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அப்போது, கம்மின்ஸ் தவறான முடிவை எடுத்துவிட்டார். இந்தியா அதிக ரன்கள் குவித்து, ஆஸ்திரேலியாவை சுருட்டிவிடும் என விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் சந்தோசத்தில் இருந்தனர். ஆனால், முதல் பேட்டிங்கின்போது 10 ஓவருக்குப்பின் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். இதனால் 240 ரன்களே அடிக்க முடிந்தது.

    2-வது பேட்டிங்கின்போது, ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லை. சற்று பனித்துளி இருந்ததால் சுழற்பந்து வீச்சு எடுபடவில்லை. மேலும், பந்து நன்றாக பேட்டிற்கு வந்தது. இதனால் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர்.

    இதன் காரணமாக கம்மின்ஸ் ஆடுகளத்தை நன்றாக கணித்து, முதலில் பீல்டிங் தேர்வு செய்து, கோப்பையையும் தட்டிப்பறித்துவிட்டார்.

    • உலகக் கோப்பையை 6-வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா.
    • ஆஸ்திரேலியா அணிக்கு டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்தினார்.

    உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இந்தியாவை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா அணி ஆறாவது முறையாக சாம்பியன்ஸ் பட்டம் வென்று அசத்தியது. இன்றைய போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 240 ரன்களை மட்டுமே குவித்தது.

    அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்களில் வெறும் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை துரத்தியது. துவக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து தணறிய ஆஸ்திரேலியா அணி, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    22.1 ஓவரில் 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 28-வது ஓவரின் 5-வது பந்தை பும்ரா வீசினார். லபுஷேன் எதிர்கொண்ட இந்த பந்து, அவரின் பேட்-ஐ தாக்கியது. விக்கெட் கிடைத்த உற்சாகத்தில் பும்ரா மற்றும் இந்திய வீரர்கள் விக்கெட் கேட்டு அம்பயரிடம் முறையிட்டனர். எனினும், அவர் செவி கொடுக்காமல் விக்கெட்டை மறுத்தார்.

    உடனே இந்திய கேப்டன் ரோகித் சர்மா ரிவ்யூ கேட்டார். மூன்றாவது நடுவர், இந்த பந்தை ரி-பிளே செய்து பார்த்தார். அதில் பந்து லபுஷேன் பேட்-இல் படாமல், நேரடியாக அவரது பேட்-இல் பட்டது தெளிவாக உறுதி செய்யப்பட்டது. மேலும் பந்து ஸ்டம்ப்களையும் பதம் பார்க்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், மூன்றாம் நடுவர் களத்தில் இருந்த அம்பயரின் முடிவே இறுதியானது என்பதை தெரிவிக்கும் வகையில் "அம்பயர்ஸ் கால்" என்ற தீர்ப்பை வழங்கினார்.

    போட்டியின் இந்த சூழலில் இந்திய அணி விக்கெட்டை வீழ்த்த போராடி வந்த நிலையில், அம்பயர்ஸ் கால் முடிவால் விக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது. இதன் பிறகு வேகம்பிடித்த லபுஷேன் மற்றும் டிராவிஸ் ஹெட் வெற்றி இலக்கை எட்டியது. இந்த நிலையில், போட்டியில் இந்திய அணி தோல்விக்கு "அம்பயர்ஸ் கால்" முடிவும் முக்கிய காரணம் என கூறி நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    • ஆஸ்திரேலியா சார்பில் டிராவிஸ் ஹெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • இந்தியா சார்பில் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று அசத்தல். இன்று (நவம்பர் 19) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 240 ரன்களை மட்டுமே சேர்த்தது.

    இந்தியா சார்பில் கேப்டன் ரோகித் சர்மா 47 ரன்களையும், விராட் கோலி 54 ரன்களையும், கே.எல். ராகுல் 66 ரன்களையும் சேர்த்தனர். சூர்யகுமார் யாதவ் 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஹேசில்வுட், பேட் கம்மின்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் ஜாம்பா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 241 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. அந்த அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் 7 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினார்.

    இவரைத் தொடர்ந்து கலமிறங்கிய மிட்செல் மார்ஷ் 15 ரன்களிலும், ஸ்டீவன் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் லபுஷேன் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலியா ஸ்கோர் சீராக அதிகரித்தது. 

    அப்படியாக 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி வெற்றி இலக்கை எட்டி, ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. ஆஸ்திரேலியா அணிக்கு டிராவில் ஹெட் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். இவர் 137 ரன்களையும், லபுஷேன் 58 ரன்களையும் குவித்தனர்.

    இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், முகமது ஷமி ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி தோல்வியடைந்ததை ஒட்டி, ரசிகர்கள் சோகத்துடன் மைதானத்தில் இருந்து வெளியேறினர்.

    • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 240 ரன்களை சேர்த்தது.
    • டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீசியது.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை காண பிரதமர் நரேந்திர மோடி மைதானம் வந்தடைந்தார். இவருடன் மத்திய மந்திரி அமித் ஷாவும் மைதானத்திற்கு வந்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியை காண பல முன்னணி வீரர்கள் மற்றும் பிரபலங்கள் மைதானத்திற்கு வந்துள்ளனர்.

    இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 240 ரன்களை சேர்த்தது. 241 ரன்களை துரத்தும் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், முகமது ஷமி ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 240 ரன்களை குவித்தது.
    • கோலி, கே.எல். ராகுல் பொறுமையாக ஆடி அரைசதம் அடித்தனர்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி 240 ரன்களை சேர்த்தது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸ்-ஐ தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. போட்டி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலிய அணி. அப்படியாக ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தை எதிர்கொண்ட ஸ்டீவன் ஸ்மித், கணிப்பில் செய்த பிழை காரணமாக எல்.பி.டபிள்யூ. முறையில் தனது விக்கெட்டை இழந்தார்.

    களத்தில் இருந்த அம்பயர் விக்கெட் கொடுக்க, அதிர்ச்சியில் இருந்த ஸ்டீவன் ஸ்மித் மறுமுனையில் விளையாடி வந்த டிராவிஸ் ஹெட்-இடம் ரிவ்யூ எடுக்கட்டுமா என கேட்டார். சந்தேகத்தில் இருந்த ஹெட் வேண்டாம் என்ற வகையில் பதில் அளிக்க, சற்றும் யோசிக்காமல் ஸ்டீவன் ஸ்மித் களத்தை விட்டு வெளியேறினார்.

    பிறகு வெளியான ரி-பிளே-வில் ஸ்டீவன் ஸ்மித் அவுட் ஆன பந்து ஸ்டம்ப்களை அடிக்க தவறியது தெரியவந்தது. அந்த வகையில், அவர் ரிவ்யூ எடுத்திருந்தால் விக்கெட்டை தக்கவைத்துக் கொண்டிருக்க முடியும். தனது விக்கெட்டில் ரிவ்யூ எடுத்திருந்தால், தப்பித்து இருக்கலாம் என்பதை அறிந்த பின் ஸ்டீவன் ஸ்மித் கடுப்பாகி இருப்பார். 

    ×