என் மலர்
விளையாட்டு
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் போபண்ணா ஜோடி அபார வெற்றி பெற்றது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி- சீனாவின் சாங் சீசென், செக் நாட்டின் தாமஸ் மெக்காக் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-3, 3-6, 7-6 (10-7) என்ற செட்களில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.
- கொரோனாவால் பாதிக்கப்பட்ட கேமரூன் கிரீன் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.
- கேமரூன் கிரீன் சமூக இடைவெளியை பின்பற்றி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் இடம் பிடித்துள்ளார். இந்த போட்டியில் அவர் சமூக இடைவெளியை பின்பற்றி விளையாடுகிறார். வீரர்கள் விக்கெட் எடுக்கும் போது பவுலர் மற்றும் கேட்ச் பிடித்த பீல்டருக்கு கைதட்டி வாழ்த்துக்கள் தெரிவிப்பது வழக்கம்.

அந்த வகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் விக்கெட் எடுக்கும் போது அனைவரும் ஒன்று கூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் போது அவர் மட்டும் சமூக இடைவெளியை பின்பற்றி மகிழ்ச்சியை தெரிவித்து வருகிறார். ஹசில்வுட் விக்கெட் எடுத்த போது அவரிடம் கைதட்டி மகிழ்ச்சியை தெரிவிக்க வந்த கிரீன் உடனே சுதாரித்து கொண்டு சைகை முழுமாக கைதட்டி மகிழ்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்குவாசில் தமிழகத்துக்கு மொத்தம் 7 பதக்கம் கிடைத்தது.
- தடகளத்தில் 3 தங்கம், 4 வெள்ளியும், ஸ்குவாசில் 2 தங்கமும் கிடைத்தன.
சென்னை:
6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.பெரும்பாலான போட்டிகள் சென்னையிலேயே நடக்கிறது.
5-வது நாள் முடிவில் தமிழ்நாடு 12 தங்கம், 3 வெள்ளி, 16 வெண்கலத்துடன் 31 பதக்கம் பெற்று இருந்தது. நேற்றைய 6-வது நாளில் தமிழக அணிக்கு 5 தங்கம் உள்பட மேலும் 17 பதக்கம் கிடைத்தது.
தடகளத்தில் 3 தங்கம், 4 வெள்ளியும், ஸ்குவாசில் 2 தங்கமும் கிடைத்தன. மல்லர் கம்பம் போட்டியில் 1 வெள்ளி, 1 வெண்கலம், குத்துச்சண்டையில் 4 வெண்கலம், சைக்கிளிங் பந்தயம், வாள்வீச்சில் தலா 1 வெண்கலமும் தமிழக வீரர், வீராங்கனைகள் பெற்றனர்.
தடகள போட்டியின் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் தருண் விகாஷ் 2.01 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார்.
பெண்களுக்கான டிரிபிள்ஜம்ப் பந்தயத்தில் தமிழகத்துக்கு தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. பவீனா ராஜேஷ் 12.10 மீட்டர் தூரம் தாண்டி முதல் இடத்தையும், பமிலா வர்ஷினி 11.84 மீட்டர் தூரம் தாண்டி 2-வது இடத்தையும் பிடித்தனர்.
பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் அபிநயா (12.21 வினாடி), ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் கோகுல் பாண்டியன் (10.89 வினாடி) ஆகியோர் வெள்ளிப்பதக்கம் பெற்றனர்.
ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்துக்கு 2 தங்கம் கிடைத்தது. ஆண்கள் அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழக அணி 2-0 என்ற கணக்கில் உத்திரபிரதேசத்தையும், பெண்கள் அணிகள் பிரிவில் 2-0 என்ற கணக்கில் மராட்டியத்தையும் தோற் கடித்தன.
ஸ்குவாஷ் போட்டியில் ஏற்கனவே பெண்கள் தனி நபர் பிரிவில் பூஜா ஆர்த்தி தங்கம் வென்று இருந்தார். சந்தேஷ், அரிஹந்த், தீபிகா, ஷமினா வெண்கல பதக்கம் பெற்றார். முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்குவாசில் தமிழகத்துக்கு மொத்தம் 7 பதக்கம் கிடைத்தது.
மல்லர்கம்பம் பந்தயத்தின் ஆண்கள் பிரிவில் ரோகித் சாய்ராம் 8.50 புள்ளிகள் பெற்று வெண்கலமும், மகளிர் பிரிவில் பூமிகா 8.25 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.
வாள்வீச்சு போட்டியில் ஆண்கள் சப்ரே பிரிவில் அர்லின், மவுரிஷ், ஷார்ஜின் ஆகியோர் அடங்கிய தமிழக அணி அரைஇறுதியில் 36-45 என்ற கணக்கில் ஜம்மு காஷ்மீரிடம் தோற்றது. இதனால் வெண்கலம் கிடைத்தது. சைக்கிளிங் பந்தயத்தில் தமிழரசி வெண்கலம் வென்றார்.
குத்துச்சண்டை போட்டியின் ஆண்கள் பிரிவில் நவீன்குமார், கபிலன் ஆகியோரும், பெண்கள் பிரிவில் ஜீவா, துர்கா ஆகியோரும் வெண்கல பதக்கம் பெற்றனர்.
தடகளம், ஸ்குவாஷ் போட்டிகளில் தமிழக பதக்கங்களை வேட்டையாடியது. தடகளத்தில் இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம், ஆகமொத்தம் 10 பதக்கம் கிடைத்துள்ளது. ஸ்குவாசில் 3 தங்கம், 4 வெண்கலம் கிடைத்துள்ளது.
நேற்றைய போட்டி முடிவில் தமிழ்நாடு 17 தங்கம், 8 வெள்ளி, 23 வெண்கலத்துடன், 48 பதக்கம் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
மராட்டியம், அரியானா முறையே முதல் 2 இடங்களில் உள்ளன.
- முகமது சிராஜ் 4 ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் கைப்பற்றவில்லை.
- பும்ரா 4 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த நிலையில், அவரால் விக்கெட் கைப்பற்ற முடியவில்லை.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி 50 ரன்களுக்கு மேல் சேர்த்தது.
இங்கிலாந்தின் ஸ்கோர் 11.5 ஓவரில் 55 ரன் இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. டக்கெட் 35 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஒல்லி போப் 1 ரன்னில் ஜடேஜா பந்தில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான கிராவ்லியை 20 ரன்னில் அஸ்வின் வெளியேற்றினார்.

இதனால் இங்கிலாந்து 60 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. கடசி 5 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார்.
இந்த நிலைத்து மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 28 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 18 ரன்களுடனும், பேர்ஸ்டோவ் 32 ரனகளுடனும் களத்தில் உள்ளனர்.
- இந்தியா- இங்கிலாந்து இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.
- ஐதராபாத் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
டாஸ் தோற்ற ரோகித் சர்மா "நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம். பேட்டிங்கோ, பந்து வீச்சோ திறமை அடிப்படையில் வீரர்கள் அவர்கள் பணியை திறமையாக செய்வார்கள்" என்றார்.
இங்கிலாந்து அணி:-
1. ஜாக் கிராவ்லி, 2. பென் டக்கெட், 3. ஒல்லி போப், 4. ஜோ ரூட், 5. பேர்ஸ்டோவ், 6. பென் ஸ்டோக்ஸ், 7. பென் போக்ஸ் (வி.கீப்பர்). 8. ரேஹன் அகமது, 9. டாம் ஹார்ட்லி, 10. மார்க் வுட், 11, ஜேக் லீச்.
இந்தியா அணி:-
1. ரோகித் சர்மா, 2. ஜெய்ஸ்வால், 3. சுப்மன் கில், 4. கே.எல். ராகுல், 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. ஜடேஜா, 7. பரத் (வி.கீப்பர்), 8. அஸ்வின், 9. அக்சர் பட்டேல், 10. பும்ரா, 11. முகமது சிராஜ்.
- சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் விதிப்படி 40 வயதிற்கு மேல் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது.
- வயது கடந்ததால் கட்டாய ஓய்வை அறிவித்துள்ளார் மோரி கோம்.
இந்தியாவின் சாதனை வீராங்கனையாக திகழ்பவர் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம். இவர் ஆறு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தவர். மேலும், 2012 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடிக்கொடுத்தவர்.
சாதனை வீராங்கனையான இவர் குத்துச்சண்டை போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
40 வயது வரைதான் ஆண்கள் மற்றும் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க முடியும் என சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் விதி சொல்கிறது.
ஆனால், 40 வயதை கடந்த பின்னரும் பதக்கம் வெல்லும் வேட்கையில் மேரி கோம் உள்ளார். இருந்த போதிலும் வயது காரணமாக ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மேரி கோம் கூறுகையில் "இன்னும் பல போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கை உள்ளது. ஆனால் வயது வரம்பு முடிவடைந்ததால் என்னால் எந்தவிதமான போட்டியிலும் கலந்து கொள்ள முடியாது. நான் இன்னும் அதிக போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். இருந்த போதிலும் வயது வரம்பு காரணமாக கட்டாய ஓய்வை அறிவிக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதித்துவிட்டேன்" என்றார்.
- முதல் இரு செட்களை அலெக்சாண்டர் ஸ்வரேவ் வென்றார்.
- மூன்றாவது செட்டை கார்லோஸ் அல்காரஸ் போராடி கைப்பற்றினார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவுடன் மோதினார்.
இதில் அல்காரஸ் 1-6, 3-6, 7-6 (7-2), 4-6 என்ற செட் கணக்கில் ஸ்வரேவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதன்மூலம் ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதிப் போட்டியில் உக்ரைனின் டயானா யாஸ்ட்ரீம்கா, செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவாவுடன் மோதினார். இதில் யாஸ்ட்ரீம்கா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் நோஸ்கோவாவை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் சீனாவின் குயின்வென் ஷெங், ரஷிய வீராங்கனை அன்னா கலின்ஸ்கயாவுடன் மோதினார். இதில் ஷெங் 6-7 (4-7), 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- முதலில் ஆடிய பிரிஸ்பேன் அணி 166 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய சிட்னி அணி 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சிட்னி:
பிக்பாஷ் லீக் தொடரின் 13-வது சீசன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த தொடர் டிசம்பர் 7-ம் தேதி தொடங்கியது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. இதில் சிட்னி சிக்சர்ஸ் அணியும், பிரிஸ்பேன் ஹீட் அணியும் மோதின.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. ஜோஷ் பிரவுன் 53 ரன்னும், ரென்ஷா 40 ரன்னும் அடித்தனர்.
சிட்னி அணி சார்பில் சீன் அபாட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டம் வெல்லலாம் என்ற இலக்குடன் சிட்னி அணி களமிறங்கியது.
பரபரப்பாக நடைபெற்ற ஆட்டததில் சிட்னி அணி 17.3 ஓவரில் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, பிரிஸ்பேன் ஹீட் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது.
பிரிஸ்பேன் அணியின் ஸ்பென்சர் ஜான்சன் 4 விக்கெட்டும், பார்ட்லெட், ஸ்வெப்சன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ஸ்பென்சர் ஜான்சனுக்கு அளிக்கப்பட்டது.
- முதல் காலிறுதியில் இருவரும் தலா 2 செட்களை போராடி வென்றனர்.
- வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை மெத்வதேவ் கைப்பற்றினார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் காலிறுதிச் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், போலந்து வீரர் ஹுபர்ட் ஹர்காக்சுடன் மோதினார்.
இதில் இருவரும் தலா 2 செட்களை போராடி வென்றனர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை மெத்வதேவ் கைப்பற்றினார்.
இறுதியில், மெத்வதேவ் 7-6 (7-4), 2-6, 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
- ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது.
மெல்போர்ன்:
டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி- அர்ஜெண்டினாவின் மால்டெனி, கோன்சலேஸ் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-4, 7-6 (7-5) என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- வார்னர், மேக்ஸ்வெல் அணிக்கு திரும்பியுள்ளனர்.
- பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 3 வடிவ கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதலில் நடந்த டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
இரு டெஸ்ட் தொடருக்கு பிறகு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்ற 14 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக மிட்செல் மார்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வார்னர், மேக்ஸ்வெல் அணிக்கு திரும்பியுள்ளனர். பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
டி20 அணிக்கான ஆஸ்திரேலிய அணி:-
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மாட் ஷார்ட், ஸ்டோனிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.
- முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டி பகல்- இரவு போட்டியாக நடைபெறுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் மற்றும் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 24 மணி நேரத்தில் நெகடிவ் முடிவு வரவில்லை என்றாலும் அவர்களால் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.






