என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டம் அபு தாபியில் 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    பஞ்சாப் அணி:

    1. கேஎல் ராகுல், 2. மந்தீப் சிங், 3. கிறிஸ் கெய்ல், 4. நிக்கோலஸ் பூரன், 5. க்ளென் மேக்ஸ்வெல், 6. தீபக் ஹூடா, 7. கிறிஸ் ஜோர்டான், 8. முருகன் அஸ்வின், 9. ரவி பிஷ்னோய், 10. முகமது ஷமி, 11. அர்ஷ்தீப் சிங்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

    1. ராபின் உத்தப்பா, 2. பென் ஸ்டோக்ஸ், 3. ஸ்டீவ் ஸ்மித், 4. சஞ்சு சாம்சன், 5. ஜோஸ் பட்லர், 6. ரியான் பராக், 7. ராகுல் டெவாட்டியா, 8. ஜாஃப்ரா ஆர்சர், 9. ஷ்ரேயாஸ் கோபால், 10. வருண் ஆரோன், 11. கார்த்திக் தியாகி.
    மீண்டும் ஒருமுறை கெய்க்வாட் அரைசதம் அடிக்க, ஜடேஜா போட்டியை பினிஷ் செய்ய கொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பை காலி செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
    துபாயில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் பிளே ஆஃப்ஸ் சுற்றுக்காக வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நோக்கத்தில் கொல்கத்தா அணி களம் இறங்கியது.

    பிளே ஆஃப்ஸ் சுற்று நுழைய முடியாவிட்டாலும் தண்ணி காட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு சென்னை அணி களம் இறங்கியது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நிதிஷ் ராணாவின் (87) ஆட்டத்தால் 172 ரன்கள் அடித்தது.

    பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை களம் இறங்கியது. டு பிளிஸ்சிஸ்க்கு பதிலாக இடம் பெற்ற வாட்சன் ஏமாற்றம்.

    ஆனால் ஆர்சிபி-க்கு எதிராக அரைசதம் அடித்த ருத்துராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடினார். அவருக்கு துணையாக அம்பதி ராயுடு அதிரடியாக விளையாடி 20  பந்தில் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 

    அடுத்து வந்த டோனி 1 ரன்னில் வெளியேற சென்னை அணிக்கு ஏமாற்றம். சாம் கர்ரன் அதிரடியாக விளையாட முடியாமல் திணற கெய்க்வாட் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் செல்ல முடிவு செய்தார். கடைசி 3 ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது.

    18-வது ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ருத்துராஜ் கெய்க்வாட் 53 பந்தில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பேட் கம்மின்ஸ் இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க சென்னை அணிக்கு கடைசி 2 ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டது.

    சாம் கர்ரன் 9 பந்தில் 9 ரன்னுடனும், ஜடேஜா 3 பந்தில் 2 ரன்னுடனும் இருந்தனர். 19-வது ஓவரை லூக்கி பெர்குசன் வீசினார். முதல் 3 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் சென்னை அவ்வளவுதான் என ரசிகர்கள் கவலையுடன் இருக்க 4-வது பந்தை ஜடேஜ பவுண்டரிக்கு விரட்டினார்.

    அடுத்த பந்தை பெர்குசன் நோ-பாலாக வீச ஜடேஜா அதில் இரண்டு ரன்கள் அடிக்க மொத்தம் 3 ரன்கள் கிடைத்தது. அதற்குப் பதிலாக வீசிய பந்தில் ஜடேஜா இமாயல சிக்சர் விளாசினார். இதனால் சென்னை ரசிகர்களுக்கு உற்சாகம் ஏற்பட்டது. அதுவரை 16 ரன்கள் கிடைத்திருந்தது. கடைசி பந்தையும் பவுண்டரி விரட்டி அசத்தினார் ஜடேஜா. இந்த ஓவரில் 20 ரன்கள் கிடைக்க சென்னை அணி வெற்றி விளிம்பிற்கு சென்றது.

    ஜடேஜா ஃபயர் ஆனதால் எப்படியும் கடைசி ஓவரில் 10 ரன்கள் எடுத்து விடலாம் என சென்னை வீரர்களும் உற்சாகத்தில் இருந்தனர்.

    கடைசி ஓவரை இளம் வீரர் நாகர்கோட்டி வீசினார். முதல் நான்கு பந்தில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தது செனனை.  கடைசி 2 பந்தில் 7 ரன்கள்  தேவைப்பட்டது.

    5-வது பந்தை ஜடேஜா எதிர்கொண்டார். நாகர்கோட்டியின் லெந்த் டெலிவரியை டீப் மிட்விக்கெட் திசையில் இமாலய சிக்சருக்கு தூக்கி அசத்தினார் ஜடேஜா. அத்துடன் போட்டி சமன் ஆனது. கடைசி பந்தில் ஒரு ரன் தேவை. சிங்கிள் தட்டி ஒரு ரன் எடுப்பார் என்று நினைக்கையில் அந்த பந்தையும் சிக்சருக்கு தூக்கினார் ஜடேஜா. இதனால் சென்னை அணி ஸ்டன்னிங் வெற்றி பெற்று கொல்கத்தாவுக்கு பலமான செக் வைத்தது. பெர்குசனின் நோ-பால் சிக்ஸ், கடைசி இரண்டு சிக்ஸ் போட்டியை அப்படியே மாற்றிவிட்டது.

    இந்தத் தோல்வியை நினைத்து பார்க்காத கொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு செக் வைத்தது சிஎஸ்கே. கடைசி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தினால் 7 வெற்றிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் வாய்ப்பு இருந்தால் மட்டுமே பார்க்க முடியும்.
    ருதுராஜ் கெய்க்வாட் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் டோனி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    துபாய்:

    ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று நடந்த 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்தது.

    முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது. அதிகபட்சமாக நிதிஷ்ரான 87 ரன் குவித்தார். பின்னர் விளையாடிய சென்னை அணியில் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 53 பந்தில் 72 ரன் எடுத்தார். கடைசி கட்டத்தில் ஜடேஜா அதிரடியாக விளையாடினார்.

    கடைசி ஓவரில் அணிக்கு 10 ரன் தேவைப்பட்டது. இதில் 5-வது பந்தை ஜடேஜா சிக்சர் விளாசினார். கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்டநிலையில் அந்த பந்தையும் சிக்சர் அடித்தார்.ஏற்கனவே பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட சென்னை அணிக்கு இது 5-வது வெற்றி (13 ஆட்டம்) ஆகும்.

    கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் களம் இறங்கிய கொல்கத்தா தோல்வியை சந்தித்துள்ளது. இதன்மூலம் அந்த அணியின் பிளேஆப் சுற்று வாய்ப்பு மங்கியுள்ளது.

    வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி கூறியதாவது:-

    இந்த ஆட்டத்தில் எங்களது திட்டங்கள் சாதகமாக சென்றது என்று நினைக்கிறேன். டாசில் ஜெயித்தது மகிழ்ச்சி அளித்தது. இந்த சீசனில் ஜடேஜா அற்புதமாக விளையாடினார். எங்களது அணியில் அவர் மட்டும் தான் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை எடுத்தார். விளையாடாத வீரர்களுக்கு நாங்கள் வாய்ப்புகளை வழங்க விரும்புகிறோம்.அதை அவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்.

    ருதுராஜ் கெய்க் வாட்டை வலை பயிற்சியின் போது பார்த்தோம். ஆனால் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதில் இருந்து அவர் மீண்டு வர 20 நாட்கள் ஆனது. ருதுராஜ் கெய்க்வாட் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். அவர் மிகவும் திறமையான வீரர்களில் ஒருவர். அவர் நிறைய பேசும் நபர் அல்ல. எனவே சில நேரங்களில் நிர்வாகத்துக்கு ஒரு வீரரை அளவிடுவது கடினம்.

    அவரை முதல் ஆட்டத்தில் விளையாட வைத்தபோது விரைவில் அவுட் ஆனார். நெருக்கடியால் அவர் வெளியேறினாரா? அல்லது அவரது இயல்பான விளையாட்டா? என்பதை சொல்வது கடினம். ஒரு வீரரை பற்றி கணிக்க ஒரு பந்து மட்டும் போதாது.

    நாங்கள் பிளேஆப் சுற்றுக்கு முன்னேற வில்லை என்றாலும் இந்த தொடரில் எங்களது சிறப்பை வெளிப்படுத்துவது முக்கியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான டோனி ஓய்வு பெற உள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.

    13-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறி இருக்கிறது. இதுவரை 13 ஆட்டங்களில் 5 வெற்றி மட்டுமே பெற்றிருக்கிறது.

    இந்தநிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்ட னான டோனி ஓய்வு பற்றி வதந்திகள் பரவி வருகின்றன.

    நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்கடித்தது. போட்டி முடிந்ததும் டோனி டி-சர்ட்டில் தனது கையெழுத்தை இட்டு கொல்கத்தா அணி வீரர்கள் நிதிஷ்ரானாவுக்கு கொடுத்தார். இதற்கு முன்பு ராஜஸ்தான் அணியில் விளையாடி வரும் ஜோஸ் பட்லருக்கு டோனி தனது டி-சர்ட்டில் கையெழுத்திட்டு கொடுத்திருந்தார். அதேபோல் மும்பை அணியில் உள்ள ஹர்திக் பாண்ட்யா, குர்னல் பாண்ட்யா ஆகியோருக்கும் தான் கையெழுத்திட்ட டி-சர்ட்டை வழங்கி இருந்தார்.

    இதனால் டோனி ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப் போகிறார் என்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணியை டோனியே வழிநடத்துவார் என்று அணி நிர்வாகம் தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    வெற்றி பெற்றால் தான் பிளேஆப் சுற்று வாய்ப்பை தக்கவைத்து கொள்ள முடியும் என்ற நிலையில் இன்று பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் மோத உள்ளனர்.

    அபுதாபி:

    ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. அபுதாபியில் இன்று நடக்கும் 50-வது லீக் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ஸ்டீவன் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த ஆட்டம் இரு அணிகளுக்குமே மிகவும் முக்கியமானது. இதில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.

    பஞ்சாப் அணி 12 ஆட்டத்தில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றால் பிளேஆப் சுற்று வாய்ப்பை பிரகாசபடுத்திக்கொள்ளும். பஞ்சாப் அணியில் லோகேஷ் ராகுல், கிறிஸ்கெய்ல், மன் திப்சிங், நிக்கோலஸ் பூரன் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்து வீச்சில் முகமது ‌ஷமி, ரவி பிஸ்னொய், ஜோர்டன் ஆகியோர் உள்ளனர். பஞ்சாப் அணி தனது கடைசி 5 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளது. இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.

    ராஜஸ்தான் அணி 12 ஆட்டத்தில் 5 வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு எஞ்சியுள்ள இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். அதேபோல் மற்ற அணிகளின் முடிவுகளும் ராஜஸ்தானுக்கு சாதகமாக அமைய வேண்டும்.

    அந்த அணியில் பென்ஸ்டோக்ஸ், ராபின் உத்தப்பா, சாம்சன், ஜோஸ் பட்லர் ஆகியோர் பேட்டிங்கில் உள்ளனர். பந்துவீச்சில் ஆர்ச்சர் நல்ல நிலையில் உள்ளார். மேலும் ஆல்ரவுண்டர் ராகுல் திவேதியாவும் அதிரடியாக விளையாடக்கூடியவர்.

    ஏற்கனவே இந்த இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் பஞ்சாப் அணி நிர்ணயித்த 224 ரன் இலக்கை ராஜஸ்தான் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    பேட்மிண்டன் பயிற்சியாளர் மற்றும் லக்‌ஷயா சென்னுடன் தொடர்பில் இருந்த இந்திய வீரர்கள் அஜய் ஜெயராம், சுபாங்கர் தேவ் போட்டியில் இருந்து விலகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சார்புருக்கென்:

    சார்லோர் லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் களம் இறங்க இருந்த நடப்பு சாம்பியனான இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் கடைசி நேரத்தில் விலகினார். அவரது தந்தையும், பயிற்சியாளருமான டி.கே. சென்னுக்கு அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா இருப்பது தெரிய வந்ததையடுத்து அவர் வேறுவழியின்றி விலக நேரிட்டது. இந்த நிலையில் பயிற்சியாளர் மற்றும் லக்‌ஷயா சென்னுடன் தொடர்பில் இருந்த இந்திய வீரர்கள் அஜய் ஜெயராம், சுபாங்கர் தேவ் ஆகியோரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த போட்டியில் இருந்து விலகி இருப்பதாக சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அஜய் ஜெயராம் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தற்போது எங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுள்ளனர். ஆனால் எங்களுக்குரிய உணவு உள்ளிட்ட விவரங்கள் எதையும் போட்டி அமைப்பாளர்கள் தெரிவிக்கவில்லை. எங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் நெகட்டிவ் முடிவு வந்ததற்கான மருத்துவ சான்றிதழ் உள்ளது. கொரோனா அறிகுறியும் இல்லை. ஜெர்மனியின் உள்ளூர் அதிகாரிகளை எங்களால் தொடர்பு கொள்ள இயலவில்லை. இங்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து உடனடியாக தாயகம் திரும்ப வாய்ப்பு உண்டா? என்பதை அறிய விரும்புகிறோம்’ என்று கூறியுள்ளார்.

    இதற்கிடையே ஜெர்மனியில் இந்த இரண்டு வீரர்கள் ஓட்டலில் தனிமைப்படுத்தும் நாட்களுக்கான செலவுத் தொகையை வழங்குவதாக இந்திய விளையாட்டு ஆணையம் உறுதி அளித்துள்ளது.

    இந்திய அணிக்கு தேர்வாகாத நிலையில், சூர்யகுமார் யாதவுக்கு தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆதரவான கருத்தை பதிவிட்டுள்ளார்.
    மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நடப்பு ஐபிஎல் சீசனில் 12 ஆட்டங்கள் விளையாடி 362 ரன்களை குவித்துள்ளார் சூர்யகுமார் யாதவ். அதோடு உள்நாட்டு கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடியுள்ளார்.

    எப்படியும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் நிச்சயம் இடம்பெறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள் என எல்லோரும் இதனை சொல்லி வந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை.

    இதனையறிந்து கொதிப்படைந்த கிரிக்கெட் ஆர்வலர்கள் பிசிசிஐ தேர்வு குழுவை சமூக வலைத்தளங்களில் கடுமையாக சாடி வருகின்றனர்.

    இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான ஆட்டத்தில் 43 பந்துகளில் 79 ரன்களை விளாசினார். அவரது ஆட்டம் என்னை டீமில் சேர்க்காமல் தப்பு செய்து விட்டீர்களே என சொல்வதுபோல இருந்தது.

    சூர்யகுமாரின் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ‘‘சூரிய நமஸ்கார், வலுவோடு இருங்கள், பொறுத்திருங்கள் என சூர்யகுமாரின் படத்தோடு டேக் செய்து டுவீட் போட்டுள்ளார். அந்த டுவீட் கூடிய விரைவில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக விளையாடுவார் என்பதை உணர்த்துவதுபோல இருந்தது.
    துபாயில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி.
    துபாய்:

    ஐ.பி.எல். தொடரின் 49-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, கொல்கத்தா அணியின் நிதிஷ் ராணா, ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
     
    ஷுப்மான் கில் 26 ரன்னிலும், சுனில் நரைன் 7  ரன்னிலும் ரிங்கு சிங் 11 ரன்னிலும் வெளியேறினர்.

    ஒரு பக்கம் விக்கெட் விழ மறுமுனையில் நிதிஷ் ராணா அரைசதம் அடித்தார். அவர் 61 பந்தில் 87 ரன்களில் வெளியேறினார். மோர்கன் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். 

    இறுதியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் 21 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக  
    ஷேன் வாட்சன், ருத்ராஜ் கெயிக்வாட் ஆகியோர் இறங்கினர். 

    இருவரும் அதிரடியாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில், வாட்சன் 14 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ராயுடு 38 ரன்னில் ஆட்டமிழந்தார். 

    கெயிக்வாட் இம்முறையும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். டோனி ஒரு ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து சாம் கர்ரன் இறங்கினார்.

    சிறப்பாக ஆடிய கெயிக்வாட் 72 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஜடேஜா இறங்கினார்.

    ஜடேஜாவும், சாம் கர்ரனும் பொறுப்புடன் ஆடி சென்னை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

    இறுதிப் பந்தில் ஜடேஜா சிக்சர் அடிக்க சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜடேஜா 31 ரன்னும், சாம் கர்ரன் 13 ரன்னும் அடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இது சென்னை அணியின் 5வது வெற்றி ஆகும்.

    கொல்கத்தா சார்பில் பாட் கம்மின்ஸ், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
    முதல் மூன்று போட்டிகளில் இரண்டில் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்த ருத்துராஜ் கெய்க்வாட் அடுத்த இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து அரைசதம் விளாசினார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரியான காம்பினேசன் இல்லாமல் இந்த ஐபிஎல் தொடரில் திணறியது. முதல் ஏழு போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அம்பதி ராயுடு காயத்தால் வெளியேறிய நிலையில் இளம் வீரராக கெய்க்வாட் களம் இறங்கினார். முதல் போட்டியிலேயே டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    அடுத்த போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். சென்னை அணி பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்பை இழந்த பிறகு மீண்டும் வாய்ப்பு கொடுத்தது. மும்பைக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். முதல் ஒவரிலேயே டக்அவுட் ஆகி வெளியேறினார்.

    ஆனால் கடந்த போட்டியில் ஆர்சிபி-க்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தில் அரைசதம் அடித்ததோடு அணியையும் வெற்றி பெற வைத்தார். இந்நிலையில் இன்று கொல்கத்தாவுக்கு எதிராகவும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசியுள்ளார்.

    முதல் மூன்று போட்டிகளில் இரண்டு முறை டக்அவுட்டாகி ஏமாற்றம் அடைந்த நிலையில் கடைசி இரண்டு போட்டிகளில் தொடர்ந்து அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஓபனிங் பேட்டிங்கை விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவர் எப்போதுமே மிடில் ஆர்டர் வரிசையில்தான் களம் இறங்கி பேட்டிங் செய்வார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    ராஜஸ்தான் அணியில் பென் ஸ்டோக்ஸ் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். சில போட்டிகளில் சொதப்பியதால் விமர்சனத்திற்கு உள்ளானார். அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். இவரது சதத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இன்னும் பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு உள்ளது.

    இந்நிலையில் எப்போதுமே தொடக்க வீரராக களம் இறங்க விரும்புவேன் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் ‘‘இந்த இந்த புதிய ரோலை (ஓபனிங் பேட்டிங்) மகிழ்ச்சியாக செய்கிறேன். இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய், டாம் பாண்டன், பேர்ஸ்டோவ், அலேக்ஸ் ஹேல்ஸ் இருப்பதால் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்குவது கடினம். இதனால் கிடைக்கும் வாய்ப்பை மகிழ்ச்சி அனுபவிக்கிறேன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எனக்கு பொறுப்ப கொடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
    நிதிஷ் ராணா அரைசதம் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு -- ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
    ஐபிஎல் தொடரின் 49-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்ற வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    கொல்கத்தா அணியின் நிதிஷ் ராணா, ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதுல் ஓவரை சாஹர் வீசினார். இந்த ஓவரில் சாஹர் மூன்று பவுண்டரிகள் விட்டுகொடுத்தார். அடுத்த ஓவரில் சாம் கர்ரன் 3 ரன் கொடுத்து கட்டுப்படுத்தினார். அடுத்த ஓவரில் சாஹர் 7 ரன் விட்டுக்கொடுத்தார்.

    6-வது ஓவரை சான்னெர் வீசினார். இந்த ஒவரில் ராணா 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க 15 ரன் விட்டுக்கொடுத்தது சிஎஸ்கே. இதனால் பவர் பிளேயில் கொல்கத்தா 48 ரன்கள் அடித்தது.

    கொல்கத்தா அதிக ரன்கள் குவிக்கும் என எதிபார்க்கப்பட்டது. ஜடேஜா, கரண் சர்மா ரன் கொடுப்பதை கட்டுப்படுத்தினர். 8-வது ஓவரை கரண் சர்மா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஷுப்மான் கில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த சுனில் நரைனை சான்னெர் 7  ரன்னில் வெளியேற்றினார். இதனால் 10 ஓவரில் 70 ரன்கள் எடுத்த கொல்கத்தா.

    அடுத்து வந்த ரிங்கு சிங் 11 ரன்னில் ஜடேஜா பந்தில் வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட் விழ மறுமுனையில் நிதிஷ் ராணா 44 பந்தில் அரைசதம் அடித்தார். கொல்கத்தா 15 ஓவரில் 106 ரன்கள் எடுத்திருந்தது.

    16-வது ஓவரை கரண் சர்மா வீசினார். இந்த ஓவரில் நிதிஷ் ராணா தொடர்ச்சியாக 3 சிக்சர்கள் விளாசினார். அடுத்த 3 பந்தில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கொல்கத்தா 16 ஓவரில் 125 ரன்கள் எடுத்திருந்தது.

    17-வது ஓவரில் தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில் 2 பவுண்டரியுடன் 11 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 18-வது ஓவரை லுங்கி நிகிடி வீசினார். முதல் பந்தில் 61 பந்தில் 87 ரன்கள் எடுத்திருந்த நிதிஷ் ராணாவை வெளியேற்றினார். என்றாலும் இரண்டு பவுண்டரிகளுடன் 14 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 19-வது ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தது சிஎஸ்கே. 19 ஓவர் முடிவில் கொல்கத்தா 163 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி ஓவரை லுங்கி நிகிடி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மோர்கன், 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி 4 பந்தில் ஐந்து ரன்களுடன் கடைசி ஓவரில் 9 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்துள்ளது. டெத் ஓவரான கடைசி 6 ஓவரில் 67 ரன்கள் அடித்துள்ளது.
    தொடக்கத்தில் இருந்தே அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரபடாவிற்கு, தற்போது முகமது ஷமி, பும்ரா கடும் போட்டியாக திகழ்கின்றனர்.
    ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவருக்கு ஆரஞ்ச் தொப்பியும், அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கு பர்பிள் தொப்பியும் வழங்கப்படும்.

    ஐபிஎல் தொடரில் தொடங்கியதில் இருந்தே ரன்குவிப்பில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல் முதல் இடத்தில் இருந்து வருகிறார். அதேபோல் பந்து வீச்சில் டெல்லி அணி வீரர் ரபடா ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

    முதல் போட்டியில் இருந்து 11-வது போட்டியை வரை அவர் விக்கெட் எடுக்காமல் இருந்தது கிடையாது. 12-வது போட்டியில் ஐதராபாத் அணிக்கெதிராக ரபடா விக்கெட்  வீழ்த்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் பும்ரா, முகமது ஷமி அதிக அளவில் விக்கெட் வீழ்த்தி அவரை நெருங்கிவிட்டனர்.

    ரபடா 23 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். அதிகபட்சமாக 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார். பும்ரா ஆர்சிபி-க்கு எதிராக 12-வது போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் 20  விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    முகமது ஷமியும் 20 விக்கெட் வீழ்த்தி 3-வது இடத்தில் உள்ளார். அதிகபட்சமாக 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    ஆர்சிபி வீரர் சாஹல் 18 விக்கெட்டும், ரஷித் கான், ஆர்சர், டிரென்ட் போல்ட் ஆகியோர் தலா 17 விக்கெட் வீழ்த்தி முறையே 5 முதல் 7 இடங்களையும் பிடித்துள்ளனர்.

    டெல்லி அணியின் நோர்ட்ஜோ 15 விக்கெட்டும், ராகுல் சாஹர் 14 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். வருண் சக்ரவர்த்தி 13 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    ×