search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்எஸ் டோனி
    X
    எம்எஸ் டோனி

    ஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு?

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான டோனி ஓய்வு பெற உள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.

    13-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறி இருக்கிறது. இதுவரை 13 ஆட்டங்களில் 5 வெற்றி மட்டுமே பெற்றிருக்கிறது.

    இந்தநிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்ட னான டோனி ஓய்வு பற்றி வதந்திகள் பரவி வருகின்றன.

    நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்கடித்தது. போட்டி முடிந்ததும் டோனி டி-சர்ட்டில் தனது கையெழுத்தை இட்டு கொல்கத்தா அணி வீரர்கள் நிதிஷ்ரானாவுக்கு கொடுத்தார். இதற்கு முன்பு ராஜஸ்தான் அணியில் விளையாடி வரும் ஜோஸ் பட்லருக்கு டோனி தனது டி-சர்ட்டில் கையெழுத்திட்டு கொடுத்திருந்தார். அதேபோல் மும்பை அணியில் உள்ள ஹர்திக் பாண்ட்யா, குர்னல் பாண்ட்யா ஆகியோருக்கும் தான் கையெழுத்திட்ட டி-சர்ட்டை வழங்கி இருந்தார்.

    இதனால் டோனி ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப் போகிறார் என்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணியை டோனியே வழிநடத்துவார் என்று அணி நிர்வாகம் தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×