என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓபனிங் பேட்டிங்கை எப்போதுமே விரும்புவேன்: பென் ஸ்டோக்ஸ்
Byமாலை மலர்29 Oct 2020 4:36 PM GMT (Updated: 29 Oct 2020 4:36 PM GMT)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஓபனிங் பேட்டிங்கை விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவர் எப்போதுமே மிடில் ஆர்டர் வரிசையில்தான் களம் இறங்கி பேட்டிங் செய்வார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
ராஜஸ்தான் அணியில் பென் ஸ்டோக்ஸ் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். சில போட்டிகளில் சொதப்பியதால் விமர்சனத்திற்கு உள்ளானார். அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். இவரது சதத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இன்னும் பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் எப்போதுமே தொடக்க வீரராக களம் இறங்க விரும்புவேன் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் ‘‘இந்த இந்த புதிய ரோலை (ஓபனிங் பேட்டிங்) மகிழ்ச்சியாக செய்கிறேன். இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய், டாம் பாண்டன், பேர்ஸ்டோவ், அலேக்ஸ் ஹேல்ஸ் இருப்பதால் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்குவது கடினம். இதனால் கிடைக்கும் வாய்ப்பை மகிழ்ச்சி அனுபவிக்கிறேன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எனக்கு பொறுப்ப கொடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X