என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல் மூன்றில் 2-ல் டக்: அதன்பின் அடுத்தடுத்து அரைசதம்- கெத்து காட்டிய கெய்க்வாட்
Byமாலை மலர்29 Oct 2020 5:19 PM GMT (Updated: 29 Oct 2020 5:19 PM GMT)
முதல் மூன்று போட்டிகளில் இரண்டில் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்த ருத்துராஜ் கெய்க்வாட் அடுத்த இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து அரைசதம் விளாசினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரியான காம்பினேசன் இல்லாமல் இந்த ஐபிஎல் தொடரில் திணறியது. முதல் ஏழு போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அம்பதி ராயுடு காயத்தால் வெளியேறிய நிலையில் இளம் வீரராக கெய்க்வாட் களம் இறங்கினார். முதல் போட்டியிலேயே டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
அடுத்த போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். சென்னை அணி பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்பை இழந்த பிறகு மீண்டும் வாய்ப்பு கொடுத்தது. மும்பைக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். முதல் ஒவரிலேயே டக்அவுட் ஆகி வெளியேறினார்.
ஆனால் கடந்த போட்டியில் ஆர்சிபி-க்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தில் அரைசதம் அடித்ததோடு அணியையும் வெற்றி பெற வைத்தார். இந்நிலையில் இன்று கொல்கத்தாவுக்கு எதிராகவும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசியுள்ளார்.
முதல் மூன்று போட்டிகளில் இரண்டு முறை டக்அவுட்டாகி ஏமாற்றம் அடைந்த நிலையில் கடைசி இரண்டு போட்டிகளில் தொடர்ந்து அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X