என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட் பேட்டியில் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் அடித்துள்ளது.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. பகல்-இரவு போட்டியான இதில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆஸ்திரேலிய அணியில் ஜோ பேர்ன்ஸ், மேத்யூ வடே  ஆகியோர் தொடக்க வீரர்களாகவும், லாபஸ்சேன், ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஆகியோர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் இடம்பிடித்தனர்.

    பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஸ்டார்க் வீசினார். பிரித்வி ஷா 2-வது பந்திலேயே ரன்ஏதும் எடுக்காமல் க்ளீன் போல்டானார். அடுத்து புஜாரா களம் இறங்கினார். மயங்க் அகர்வால் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 18.1 ஓவரில் 32 ரன்கள் எடுத்திருந்தது.

    3-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் நம்பிக்கையுடன் விளையாடியது. விரைவாக ரன்கள் அடிக்கமுடியவில்லை என்றாலும், ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை சோதிக்கும் வகையில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. புஜாரா 160 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆவுட் ஆனார். அடுத்து வந்த ரகானேவும் நிதானமாக விளையாடினார்.

    விராட் கோலி 123 பந்தில் அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 188 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி 74 ரன்கள் (180) எடுத்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். அடுத்து வந்த விஹாரி 16 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.

    2 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்

    187 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் அடுத்த 19 ரன்னுக்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. சகா மற்றும் அஸ்வின் முதல் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

    இதனால் இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலியா அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா ஒரு முறையும் ஆட்டமிழந்தார்.
    பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது அமிர், அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.
    பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர். இவரை இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்தனர்.

    விசாரணை முடிவில் ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டது, அதன்பின் மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்தார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாட விரும்பினார். இதனால் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

    டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிருப்தி அடைந்தது. இதனால் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் அவரை சேர்க்காமல் ஓரங்கட்டினர். இந்த நிலையில் அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக முகமது அமிர் அறிவித்துள்ளார்.

    முகமது அமிர் பாஸ்தானுக்காக 36 ஒருநாள், 49 டி20 மற்றும் 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் பிப்ரவரி 8-ந்தேதி தொடங்கும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், பிரெஞ்ச் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய நான்கு முக்கிய டென்னிஸ் தொடர்களாக கிராண்ட் ஸ்லாம் போட்டி நடைபெறும். இதில் ஆஸ்திரேலியா ஓபன் முதல் தொடராக நடத்தப்படும்.

    2021-ம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியா ஓபன் பிப்ரவரி 8-ந்தேதி தொடங்கும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக ஆண்டுதோறும் ஜனவரி 18-ந்தேதிதான் தொடங்கும். தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியா ஓபனுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் தோகாவில் ஜனவரி 10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடைபெறும். அதன்பின் வீரர்கள் அனைவரும் மெல்போர்னில் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள்.
    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்டில் கேப்டன் பொறுப்பில் ரகானேயின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்து கிரிக்கெட்டின் சகாப்தம் தெண்டுல்கர் பதில் அளித்துள்ளார்.

    மும்பை:

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலிய பயணத்தில் பாதியில் நாடு திரும்புகிறார். அவரது மனைவி அனுஷ்காவுக்கு குழந்தை பிறப்பதால் அவர் முதல் டெஸ்ட் முடிந்தபிறகு இந்தியா வருகிறார்.

    இதன் காரணமாக எஞ்சிய 3 டெஸ்டிலும் விராட் கோலி விளையாட மாட்டார். அவர் ஆடாமல் போவது இந்திய அணிக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்டிலும் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ரகானே ஏற்பார். அவர் தற்போது டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருக்கிறார். பயிற்சி ஆட்டத்தில் அவர் கேப்டன் பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டார்.

    இந்த நிலையில் கேப்டன் பொறுப்பில் ரகானேயின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்து கிரிக்கெட்டின் சகாப்தம் தெண்டுல்கர் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரகானே மதிநுட்பம் உள்ள சமநிலையில் இருக் கும் கிரிக்கெட் வீரர் ஆவார். அவர் அணியை வழிநடத்தி இதற்கு முன்பு பார்த்துள்ளேன். ரகானே ஆக்ரோ‌ஷமானவராக இருந்தாலும், அதை கட்டுப்படுத்த தெரிந்தவர்.

    நான் அவரது ஆட்டத்தை பக்கத்தில் இருந்து பார்த்துள்ளேன். அனைத்து வி‌ஷயங்களையும் கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கடின உழைப்பை அர்ப்பணிப்புடன் செயல்படுத்துபவர்.

    நிச்சயமாக ரகானே இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.

    கிரிக்கெட் விளையாட்டு தனிநபரை சார்ந்தது அல்ல. அது 11 பேரின் கூட்டு முயற்சி.இந்திய அணி நீண்ட பேட்டிங் வரிசையை கொண்டது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் கடந்த முறையை விட தற்போது அனுபவம் வாய்ந்ததாக உள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட இருக்கும் அஜிங்யா ரஹானே சிறப்பாக செயல்படுவார் என விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    அடிலெய்டு:

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முதலாவது டெஸ்டுடன் நான் தாயகம் திரும்பிய பிறகு எஞ்சிய 3 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட இருக்கும் அஜிங்யா ரஹானேவுடன் எனக்கு நல்ல புரிதல் உள்ளது. இருவரும் இணைந்து பேட்டிங்கில் சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்து விளையாடி இருக்கிறோம். அது அணிக்கு தேவையான நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையிலானது. இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் கேப்டனாக ரஹானே சிறப்பாக பணியாற்றினார். பார்க்க மிகவும் அமைதியாக தெரிவார். ஆனால் அணியின் வலிமை என்ன? ஒரு அணியாக என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். நாங்கள் எப்போதும் ஒரு அணியாக கூட்டு முயற்சியை வெளிப்படுத்தும் வகையில் கிரிக்கெட் ஆடுகிறோம். தனிப்பட்ட வீரரை சார்ந்து இருந்ததில்லை. நான் இல்லாத சமயத்தில் அவர் அணியை திறம்பட வழிநடத்துவார். ஒரு வீரராகவும், கேப்டனாகவும் அருமையாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.

    சமீபத்திய ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவுக்கு வந்து விளையாடுகிறேன். கிரிக்கெட் ஆடுவதற்கு அற்புதமான ஒரு இடம் ஆஸ்திரேலியா. இங்கு நீங்கள் சிறப்பாக செயல்படும் போது அதற்குரிய மரியாதையை மக்கள் தருவார்கள். அவர்களிடம் நிறைய எதிர்பார்ப்பு இருக்கும்.

    இவ்வாறு கோலி கூறினார்.

    ‘விராட் கோலி ஆஸ்திரேலியா அல்லாத ஒரு ஆஸ்திரேலியர். அதாவது ஆஸ்திரேலிய வீரர்களுக்கான அனைத்து பண்புகளையும் கொண்டவர்’ என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் கூறியிருந்தார். இது பற்றி கோலியிடம் கேட்ட போது, ‘நான் எப்போதும் நானாகவே இருக்க விரும்புகிறேன் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய ஆளுமை, குணாதிசயத்தை வெளிப்படுத்தும் விதத்தில் என்னை புதிய இந்தியாவின் பிரதிநிதியாக நினைக்கிறேன். புதிய இந்தியாவின் பிரதிநிதியாக சவால்களை எடுத்துக் கொண்டு, நம்பிக்கையுடன் முன்னெடுத்து செல்ல விரும்புகிறேன். எங்கள் வழியில் வரும் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதை உறுதிசெய்கிறோம்.’ என்றார்.

    ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில், ‘இந்திய வீரர்களை வம்புக்கு இழுக்க வேண்டும் அல்லது அதீத ஆக்ரோஷத்தை காட்ட வேண்டும் என்ற திட்டத்துடன் செல்ல மாட்டோம். பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் எங்களது வியூகத்தை களத்தில் சரியாக செயல்படுத்த வேண்டும். அது தான் எங்களது நோக்கம். அதே சமயம் களத்தில் வாக்குவாதம் பிரச்சினை நிகழ்ந்தால் நாங்கள் பின்வாங்கமாட்டோம். இந்த தொடர் முடிந்த பிறகு கேப்டன்ஷிப்பில் எனது எதிர்காலம் குறித்து பயிற்சியாளருடன் ஆலோசித்து முடிவு செய்வேன்’ என்றார்.
    ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 8-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    மெல்போர்ன்:

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும்.

    கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு 3 கிராண்ட்சிலாம் போட்டிகள் மட்டுமே நடந்தது.

    ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் (செர்பியா), சோபியா (அமெரிக்கா) சாம்பியன் பட்டம் பெற்றனர். தள்ளிவைக்கப்பட்டு நடத்தப்பட்ட அமெரிக்க ஓபனில் டொமினிக் தீம் (ஆஸ்தீரியா), நவோமி ஒசாகா (ஜப்பான்) பிரெஞ்சு ஓபனில் ரபெல்நடால் (ஸ்பெயின்), இகா சுவாடெக் (போலந்து) சாம்பியன் பட்டம் பெற்றனர்.

    பாரம்பரியம் மிக்க விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கொரோனா பாதிப்பால் ரத்து செய்யப்பட்டது.

    அடுத்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை மெல்போர்ன் நகரில் ஜனவரி 18-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 8-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை பரவி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டுக்கு செல்பவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

    டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும், அங்கு 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜனவரி 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை கத்தார் தலைநகர் ஜோகாவில் நடக்கிறது.
    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக பிங்க் பந்து பயன்படுத்தும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது.
    அடிலெய்டு:

    வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

    அடுத்து இரு அணிகள் இடையே 4 டெஸ்ட் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி, பகல் இரவு ஆட்டமாக  அடிலெய்டில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர் பிருத்வி ஷா ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.அதன்பின்னர் மயங்க் அகர்வால், புஜாரா இருவரும் நிதானமாக விளையாடினர்.

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக பிங்க் பந்து (இளம் சிவப்பு) போட்டியில் ஆடுகிறது. அதாவது முதல் முறையாக பகல் இரவு டெஸ்டில் விளையாடுகிறது.

    சிட்னியில் நடந்த பகல் இரவு பயிற்சி ஆட்டத்தை இந்திய வீரர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர். இதனால் இந்திய அணி நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு அதிக ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    லா லிகா கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் 3-1 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிக் கிளப்பை தோற்கடித்தது.
    மாட்ரிட்:

    லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் மாட்ரிட்டில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்-அத்லெட்டிக் கிளப் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் 3-1 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிக் கிளப்பை தோற்கடித்தது. ரியல் மாட்ரிட் அணியில் டோனி குரூஸ் 45-வது நிமிடத்திலும், கரிம் பென்ஜிமா 74-வது மற்றும் 90-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

    அத்லெட்டிக் அணி தரப்பில் ஆன்டெர் கேபா 52-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். அத்லெட்டிக் வீரர் ரால் கார்சியா 13-வது நிமிடத்தில் 2-வது மஞ்சள் அட்டை பெற்றதால் (சிவப்பு அட்டை) நடுவரால் வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு அந்த அணி 10 வீரர்களுடன் விளையாடியதால் தடுமாற்றத்தை சந்தித்தது. 13-வது ஆட்டத்தில் ஆடிய ரியல் மாட்ரிட் அணி பெற்ற 8-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணி மொத்தம் 26 புள்ளிகள் பெற்று கோல் வித்தியாசத்தில் முறையே முதல் 2 இடங்களில் இருக்கும் ரியல் சோசிடாட் (26 புள்ளிகள்), அட்லெடிகோ மாட்ரிட் (26 புள்ளிகள்) அணிகளுடன் சமன் செய்துள்ளது.
    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனின் மனைவி சாரா ரஹீமுக்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதை வில்லியம்சன் இன்ஸ்டாகிராம் மூலம் நேற்று தெரிவித்தார்.
    மவுன்ட் மாங்கானு:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனின் மனைவி சாரா ரஹீமுக்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதை வில்லியம்சன் இன்ஸ்டாகிராம் மூலம் நேற்று தெரிவித்தார்.

    குழந்தையை கட்டி அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் அவர் ‘எங்களது குடும்பத்திற்கு அழகான பெண் குழந்தையை வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். மனைவியை அருகில் இருந்து கவனிப்பதற்காக வெலிங்டனில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து வில்லியம்சன் விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தந்தையாகி இருக்கும் கேன் வில்லியம்சனுக்கு பலரும் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆக்லாந்தில் நாளை நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில் வில்லியம்சன் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. கடைசி இரண்டு 20 ஓவர் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெறும் 2 டெஸ்ட் போட்டியிலும் அவர் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    விராட் கோலி, ரோகித் சர்மா இல்லாமலும் வெற்றி பெறும் அளவிற்கு இந்தியாவிடம் பேட்டிங் உள்ளதாக சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா விளையாடவில்லை. இந்த டெஸ்ட் முடிந்த பின்னர், விராட் கோலி இந்தியா திரும்புகிறார். ரோகித் சர்மா 2-வது டெஸ்டில் விளையாடும் வாய்ப்பு இல்லை.

    இதனால் மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்டில் இருவரும் இல்லாமல் இந்தியா களம் இறங்குகிறது. என்றாலும், இந்தியாவால் வெற்றி பெறக்கூடிய அளவிற்கு பேட்டிங் உள்ளது என்று சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘நம்முடைய பேட்டிங் போதுமான அளவிற்கு வலிமை படைத்தது. ரோகித் சர்மா இல்லாமல் நியூசிலாந்தை எதிர்கொண்டோம். எதற்கும் உத்தரவாதம் கிடையாது. சில நேரங்களில் வீர்கள் காயம் அடையலாம். இதனால் போட்டியில் இருந்து அல்லது ஒட்டுமொத்த தொடரில் இருந்து வெளியேறலாம். தனிப்பட்ட நபர் யாராக இருந்தாலும், அவர்கள் இல்லாமல் விளையாட தயார் செய்து கொள்ள வேண்டும். இறுதியில் இது ஒரு அணியை பற்றியது. தனிப்பட்ட நபர் பற்றியது கிடையாது’’ என்றார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, நான் இந்தியாவின் பிரதிநிதி என கிரேக் சேப்பலுக்கு பதில் அளித்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் கிரேக் சேப்பல், விராட் கோலி எல்லாக் காலக்கட்டத்திலும், ஆஸ்திரேலிய அல்லாத ஆஸ்திரேலியர். அதாவது ஆஸ்திரேலிய வீரர்களுக்கான அனைத்து பண்புகளையும் கொண்டவர்’’ எனத் தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நான் எப்போதும் நானாகவே இருக்க விரும்புவதாக ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். என்னுடைய ஆளுமை மற்றும் கேரக்டர் வகையில் நான் ஒரு நியூ இந்தியாவின் பிரதிநிதி. என்னைப் பொறுத்த வரைக்கும் அப்படித்தான் பார்க்கிறேன்.

    என்னுடைய மனநிலையை ஆஸ்திரேலிய நாட்டினர் மனநிலையுடன் ஒப்பிட இயலாது. இந்திய கிரிக்கெட் அணியாக நாங்கள் எழுந்து நிற்கத் தொடங்கியதும் எனது ஆளுமை முதல் நாளிலிருந்தே இருந்து அப்படியே இருந்தது.

    புதிய இந்தியா சவால்களை எடுத்துக்கொள்கிறது மற்றும் நம்பிக்கை மற்றும் நேர்மறை ஆகியவற்றால் நிறைந்துள்ளது. எங்கள் வழியில் வரும் எந்த சவால்களுக்கும் நாங்கள் தயாராக இருப்பதை உறுதிசெய்கிறோம்’’ என்றார்.
    இந்தியாவுக்கு எதிரான ஒயிட்-பால் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக பந்து வீசவில்லை என்றாலும், மிட்செல் ஸ்டார்க் பிங்க் பாலில் அச்சுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் நாளை அடிலெய்டில் நடக்கிறது. இந்த டெஸ்ட் பகல்-இரவு டெஸ்டாக பிங்க்-பாலில் நடக்கிறது.

    ஆஸ்திரேலியா இதுவரை விளையாடியுள்ள பிங்க் பால் போட்டியில் தோல்வியை சந்தித்தது கிடையாது. இந்தியா வங்காளதேசத்திற்கு எதிராக மட்டுமே விளையாடியுள்ளது.

    ஒயிட்பால் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் நேர்த்தியாக பந்து வீசவில்லை. மேலும், குடும்ப உறுப்பினருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தொடரில் இருந்து வெளியேறினார்.

    தற்போது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் இணைந்துள்ளார். பிங்க்-பால் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் எப்படிபட்டவர் என்பதை அவரது சாதனையே கூறும். ஆம்.... 7 போட்டிகளில் 42 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஒரு போட்டிக்கு சராசரியாக 6 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்த சராசரி 19.23 ஆகும்.

    அதனால் நாளைய போட்டியிலும் இந்தியாவுக்கு கடும் அச்சுறுத்தலாக இருப்பார் எனக் கருதப்படுகிறது.
    ×