என் மலர்
விளையாட்டு

மும்பை:
இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலிய பயணத்தில் பாதியில் நாடு திரும்புகிறார். அவரது மனைவி அனுஷ்காவுக்கு குழந்தை பிறப்பதால் அவர் முதல் டெஸ்ட் முடிந்தபிறகு இந்தியா வருகிறார்.
இதன் காரணமாக எஞ்சிய 3 டெஸ்டிலும் விராட் கோலி விளையாட மாட்டார். அவர் ஆடாமல் போவது இந்திய அணிக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்டிலும் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ரகானே ஏற்பார். அவர் தற்போது டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருக்கிறார். பயிற்சி ஆட்டத்தில் அவர் கேப்டன் பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டார்.
இந்த நிலையில் கேப்டன் பொறுப்பில் ரகானேயின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்து கிரிக்கெட்டின் சகாப்தம் தெண்டுல்கர் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ரகானே மதிநுட்பம் உள்ள சமநிலையில் இருக் கும் கிரிக்கெட் வீரர் ஆவார். அவர் அணியை வழிநடத்தி இதற்கு முன்பு பார்த்துள்ளேன். ரகானே ஆக்ரோஷமானவராக இருந்தாலும், அதை கட்டுப்படுத்த தெரிந்தவர்.
நான் அவரது ஆட்டத்தை பக்கத்தில் இருந்து பார்த்துள்ளேன். அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கடின உழைப்பை அர்ப்பணிப்புடன் செயல்படுத்துபவர்.
நிச்சயமாக ரகானே இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.
கிரிக்கெட் விளையாட்டு தனிநபரை சார்ந்தது அல்ல. அது 11 பேரின் கூட்டு முயற்சி.இந்திய அணி நீண்ட பேட்டிங் வரிசையை கொண்டது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் கடந்த முறையை விட தற்போது அனுபவம் வாய்ந்ததாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும்.
கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு 3 கிராண்ட்சிலாம் போட்டிகள் மட்டுமே நடந்தது.
ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் (செர்பியா), சோபியா (அமெரிக்கா) சாம்பியன் பட்டம் பெற்றனர். தள்ளிவைக்கப்பட்டு நடத்தப்பட்ட அமெரிக்க ஓபனில் டொமினிக் தீம் (ஆஸ்தீரியா), நவோமி ஒசாகா (ஜப்பான்) பிரெஞ்சு ஓபனில் ரபெல்நடால் (ஸ்பெயின்), இகா சுவாடெக் (போலந்து) சாம்பியன் பட்டம் பெற்றனர்.
பாரம்பரியம் மிக்க விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கொரோனா பாதிப்பால் ரத்து செய்யப்பட்டது.
அடுத்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை மெல்போர்ன் நகரில் ஜனவரி 18-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 8-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை பரவி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டுக்கு செல்பவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும், அங்கு 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜனவரி 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை கத்தார் தலைநகர் ஜோகாவில் நடக்கிறது.
லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் மாட்ரிட்டில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்-அத்லெட்டிக் கிளப் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் 3-1 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிக் கிளப்பை தோற்கடித்தது. ரியல் மாட்ரிட் அணியில் டோனி குரூஸ் 45-வது நிமிடத்திலும், கரிம் பென்ஜிமா 74-வது மற்றும் 90-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
அத்லெட்டிக் அணி தரப்பில் ஆன்டெர் கேபா 52-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். அத்லெட்டிக் வீரர் ரால் கார்சியா 13-வது நிமிடத்தில் 2-வது மஞ்சள் அட்டை பெற்றதால் (சிவப்பு அட்டை) நடுவரால் வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு அந்த அணி 10 வீரர்களுடன் விளையாடியதால் தடுமாற்றத்தை சந்தித்தது. 13-வது ஆட்டத்தில் ஆடிய ரியல் மாட்ரிட் அணி பெற்ற 8-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணி மொத்தம் 26 புள்ளிகள் பெற்று கோல் வித்தியாசத்தில் முறையே முதல் 2 இடங்களில் இருக்கும் ரியல் சோசிடாட் (26 புள்ளிகள்), அட்லெடிகோ மாட்ரிட் (26 புள்ளிகள்) அணிகளுடன் சமன் செய்துள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனின் மனைவி சாரா ரஹீமுக்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதை வில்லியம்சன் இன்ஸ்டாகிராம் மூலம் நேற்று தெரிவித்தார்.
குழந்தையை கட்டி அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் அவர் ‘எங்களது குடும்பத்திற்கு அழகான பெண் குழந்தையை வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். மனைவியை அருகில் இருந்து கவனிப்பதற்காக வெலிங்டனில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து வில்லியம்சன் விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தையாகி இருக்கும் கேன் வில்லியம்சனுக்கு பலரும் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆக்லாந்தில் நாளை நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில் வில்லியம்சன் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. கடைசி இரண்டு 20 ஓவர் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெறும் 2 டெஸ்ட் போட்டியிலும் அவர் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






