என் மலர்tooltip icon

    விளையாட்டு

    அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இந்தியாவின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டது.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 244 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது.

    பிங்க்-பாலில் விளையாடிய அனுபவம் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு குறைவாக இருந்த போதிலும், அபாரமாக பந்து வீசினர். பும்ரா தொடக்க வீரர்களாக மேத்யூ வடே (8), ஜோ பேர்ன்ஸ் (8) ஆகியோரை எல்.பி.டபிள்யூ. மூலம் சாய்த்தார்.

    அதன்பின் வந்த நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்மித்தை 1 ரன்னில் வெளியேற்றினார் அஸ்வின். அத்துடன் டிராவிஸ் ஹெட் (7), கேமரூன் க்ரீன் (11) ஆகியோரையும் வெளியேற்றினார்.

    அதிர்ஷ்டத்தால் பலமுறை தப்பிய லாபஸ்சேன் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் அரைசதம் அடித்து கடைசி வரை போராடினார். கடைசி விக்கெட்டாக ஹசில்வுட் 8 ரன்னில் வெளியேற ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 72.1 ஓவர்கள் மட்டுமே விளையாடி 191 ரன்னில் சுருண்டது. டிம் பெய்ன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ், பும்ரா தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். 53 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
    ஆக்லாந்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    39 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்தது. ஜேக்கப் டஃபி இதில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் கேப்டன் சதாப் கான் 42 ரன்களும், பஹீம் அஷ்ரப் 18 பந்தில் 31 ரன்களும் அடிக்க பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் அடித்தது. ஜேக்கப் டஃபி 4 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். குக்கெலின் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க பேட்ஸ்மேன் டிம் செய்ஃபெர்ட் 57 ரன்கள் விளாசினார்.

    மார்க் சாப்மேன் 20 பந்தில் 34 ரன்கள் அடிக்க நியூசிலாந்து 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் ஒரு ரன்னில் வெளியேற்றி இந்தியாவுக்கு திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுத்தார் அஸ்வின்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பகல்-இரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 244 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

    அதன்பின் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறினர். குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித் ரன்கள் அடிக்க திணறினார். அவர் 29 பந்தில் 1 ரன் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.

    ஆஸ்திரேலியாவின் பேட்டிங் தூண் எனக் கருதப்படும் ஸ்மித்தை ஒற்றையிலக்க ரன்னில் வெளியேற்றியது இந்தியாவுக்கு மிகப்பெரிய பூஸ்ட் ஆக அமைந்தது.

    மேலும், ஸ்மித் இந்தியாவுக்கு எதிராக கடைசி 21 இன்னிங்சில் ஐந்து ரன்களுக்கு கீழே அவுட் ஆனது கிடையாது. தற்போது இந்த டெஸ்டில் ஆட்டமிழந்துள்ளார். அஸ்வின் பந்தில் ஸ்லிப் திசையில் நின்ற ரஹானேயிடம் கேட்ச் கொடுத்தார். இதன் மூலம் அஸ்வின் - ராஹேனே ஜோடி 3-வது முறையாக ஸ்மித்தை வீழ்த்தியுள்ளது.

    ஸ்மித் வெளியேற்றியதுடன் டிராவிஸ், கேமரூன் கிரீன் ஆகியோரையும் வெளியேற்றி ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கை ஆட்டங்காண வைத்தார் அஸ்வின்.
    விக்கெட் கீப்பர், பும்ரா மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் கேட்ச் விட, லாபஸ்சேன்-ஐ இறுதியில் உமேஷ் யாதவ் 47 ரன்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ. மூலம் வெளியேற்றினார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் இந்தியா 244 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்சில் ஆல்-அவுட் ஆனது.

    பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, அஸ்வின் ஆகியோர் அபாரமாக பந்து வீசினார்.

    15-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் மேத்யூ வடே 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரரான லாபஸ்சேன் களம் இறங்கினார். முதல் இரண்டு பந்தில் ரன்ஏதும் எடுக்கவில்லை. 3-வது பந்து பேட் விளம்பில் பட்டு விக்கெட் கீப்பருக்கும் முதல் ஸ்லிப்பிற்கும் இடையே பறந்தது. சாஹா டைவ் அடித்தார். ஆனால் பந்து கையில் படவில்லை. ஏறக்குறைய இது கேட்ச் மிஸ்தான். இதை பிடித்திருந்தால் லாபஸ்சேன் டக்அவுட்டில் சென்றிருப்பார்.

    18-வது ஓவரை முகமது ஷமி வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை லெக்சைடில் தூக்கி அடித்தார். பும்ரா பவுண்டரி லைனில் பிடிக்க முயன்றார். எளிதாக பிடிக்க முயன்ற கேட்ச்-ஐ பவுண்டரி லைனை தாண்டிவிடுவோமா என தவறாக நினைத்து கோட்டை விட்டார். இதனால் 12 ரன்னில் மீண்டும் ஒருமுறை லாபஸ்சேன் தப்பினார்.

    23-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை லெக் சைடு தூக்கி அடிக்க முயன்றார். பந்து பிரித்வி ஷா கைக்கு சென்றது. ஆனால் பிரித்வி ஷா எளிதாக பிடிக்க வேண்டியதை கோட்டை விட்டார். இதனால் 3-வது முறையாக 21 ரன்னில் அவுட்டாவதில் இருந்து தப்பினார்.

    இதற்கிடையே ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியாக 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் எல்.பி.டபிள்யூ, ஆனார். இவர்தான் ஆஸ்திரேலியா அணியில் முதல் 6 பேட்ஸ்மேன்களில் அதிக ரன்கள் அடித்தார். முதலிலேயே ஆட்டமிழந்திருந்தால் இந்தியாவுக்கு கூடுதல் சாதகமாக இருந்திருக்கும்.
    ஐஎஸ் எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    கோவா:

    11 அணிகள் பங்கேற்கும் 7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர்-ஒடிசா அணிகள் மோதின. இதில் பெங்களூர் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணிக்காக சுனில் சேத்ரி 38-வது நிமிடத்திலும், சில்வா 79-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஒடிசா தரப்பில் டெய்லர் 71 நிமிடத்தில் கோல் அடித்தார்.

    பெங்களூர் அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். அந்த அணி 6 ஆட்டத்தில் 3 வெற்றி, 3 டிராவுடன் 12 புள்ளிகள் பெற்று, 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஒடிசா அணி 5-வது தோல்வியை தழுவியது. அந்த அணி ஒரு புள்ளியுடன் 10-வது இடத்தில் இருக்கிறது.

    இன்று நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)-ஜாம்செட்பூர் அணிகள் மோதுகின்றன.

    கவுகாத்தி அணி 10 புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3-வது பெற்றிபெறும் ஆர்வத்தில் உள்ளது.

    ஜாம்செட்பூர் அணி 7 புள்ளியுடன் 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 2-வது வெற்றிக்கான வேட்கையில் உள்ளது.

    விராட் கோலியின் ரன் அவுட் தொடர்பாக ஆஸ்திரேலிய முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் வார்னே கருத்து தெரிவித்துள்ளார்.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டுவில் நேற்று தொடங்கிய பகல்-இரவு டெஸ்டில் இந்திய அணி கேப்டன் ராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அவர் 74 ரன் எடுத்திருந்த போது ரன்அவுட் ஆனார். கோலியின் ரன்அவுட்டுக்கு துணை கேப்டன் ரகானே தான் காரணம்.

    நாதன் லயன் வீசிய 77-வது ஓவரில் கடைசி பந்தில் ரகானே பந்தை எதிர்கொண்டு ஒரு ரன் எடுக்க முயன்று பிறகு பின் வாங்கினார். இதனால் எதிர்முனையில் இருந்த கோலி ரன்அவுட் ஆனார். அவரது அவுட் துரதிர்ஷ்டவசமானது.

    விராட் கோலி 16 ரன்னில் அவுட் ஆக வேண்டியவர். ஆஸ்திரேலிய அணி டி.ஆர்.எஸ்.க்கு செல்லாததால், அவர் தப்பினார். 74 ரன்னில் கோலி ரன் அவுட் ஆனது திருப்புமுனையாகும்.

    கோலியின் ரன் அவுட் தொடர்பாக ஆஸ்திரேலிய முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் வார்னே கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    விராட் கோலி போன்ற மிகச்சிறந்த பேட்ஸ்மேன் ரன்அவுட் ஆவதை பார்க்கும் போது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. மனதை வருத்தம் அடைய செய்துள்ளது.

    அவர் ஆடுகளத்திற்கு வரும்போது பெரிய இன்னிங்ஸ் வேண்டுமென எல்லோரும் சொல்லலாம். அதை உறுதியோடு அவரும் செய்து கொண்டிருந்தார். நம்மை போன்ற கிரிக்கெட் ஆர்வலர்கள் ஒவ்வொரு வரும் அவரது ரன் அவுட்டுக் காக வெட்கி தலைகுனிய வேண்டும்.

    இவ்வாறு வார்னே கூறியுள்ளார்.

    இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இது தொடர்பாக கூறியதாவது:-

    அந்த பந்தில் ரன் எடுத்திருக்கவே முடியாது. ஏனென்றால் பீல்டர் மிகவும் அருகில் இருந்தார். ஆனாலும் பார்ட்னர் ரகானேவின் அழைப்பை ஏற்று ரன் எடுக்க முன்வந்தார். கடைசியில் ரகானே வேண்டாம் என்று பின்வாங்கியதும் கோலி ரன்அவுட் ஆகி விட்டார்.

    ரகானே மீது தவறு இருந்தாலும், அவரிடம் கோபித்து கொள்ளாமல் விராட் கோலி அமைதியாக பெவிலியன் திரும்பியது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

    இந்த இன்னிங்சில் பல தடைகளை கடந்த கோலிக்கு இது கொஞ்சம் வலி இருக்கும். அது இயல்பானது.

    இவ்வாறு சஞ்சஸ் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

    டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 2-வது முறையாக ரன்அவுட் ஆகியுள்ளார். இதற்கு முன்பு இதே அடிலெய்டு மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (2012)-ல் ரன்அவுட் ஆகியிருந்தார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்கள் சேர்த்தது.
    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நடைபெறுகிறது. பகல்-இரவு போட்டியான இதில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய இந்திய அணி 32 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகள் இழந்தது. அதன்பின்னர் 3-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது. புஜாரா 160 பந்தில் 43 ரன்களும், விராட் கோலி 180 பந்துகளில் 74 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

    அதன்பின்னர் அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. இதனால் இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் சேர்த்திருந்தது.

    இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது, 11 ரன்கள் எடுப்பதற்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளும் சரிந்தன. இதனால் இந்தியா முதல் இன்னிங்சில் 244 ரன்கள் சேர்த்தது.

    ஆஸ்திரேலியா அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். 

    இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. மேத்யூ வேட், ஜோ பர்ன்ஸ் ஆகியோர்  துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
    உலக கோப்பை மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக், அனஸ்டாசியா நிசிதாவிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார்.
    பெல்கிரேடு:

    உலக கோப்பை மல்யுத்த போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் 1-5 என்ற கணக்கில் மால்டோவா நாட்டு வீராங்கனை அனஸ்டாசியா நிசிதாவிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். இந்திய வீராங்கனைகள் சரிதா (59 கிலோ), சோனம் மாலிக் (62 கிலோ), சாக்‌ஷி மாலிக் (65 கிலோ) ஆகியோர் தங்கள் பிரிவில் கால்இறுதியை தாண்ட முடியாமல் ஏமாற்றம் அளித்தனர்.
    உலக கோப்பை குத்துச்சண்டை போட்டியில் களம் இறங்கும் முன்பே இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதியாகி விட்டது.
    புதுடெல்லி:

    உலக கோப்பை குத்துச்சண்டை போட்டி ஜெர்மனியில் நேற்று தொடங்கியது. கொரோனா அச்சம் காரணமாக இந்த போட்டியில் இருந்து நிறைய வீரர், வீராங்கனைகள் விலகி உள்ளனர். இந்த போட்டி அட்டவணையின்படி, உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் அமித் பன்ஹால் (52 கிலோ பிரிவு), இந்திய வீராங்கனைகள் மனிஷா (57 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), பூஜா ராணி (75 கிலோ) ஆகியோர் நேரடியாக அரைஇறுதிப்போட்டியில் பங்கேற்கின்றனர். இதனால் களம் இறங்கும் முன்பே இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதியாகி விட்டது.

    உடல் தகுதி பிரச்சினை காரணமாக இந்திய வீரர்கள் ஷிவதபா (63 கிலோ), சஞ்சீத் (91 கிலோ) ஆகியோர் இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளனர். இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் ரோகித் காஷ்யப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்ததை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக வீரர், வீராங்கனைகள் யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
    ஊக்கமருந்து விவகாரத்தில் ரஷியா அடுத்த இரண்டு ஒலிம்பிக் தொடரில் நாட்டின் பெயர், கொடியை பயன்படுத்த தடைவிதித்துள்ளது விளையாட்டு தீர்ப்பாயம்.
    2014-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் ரஷிய வீரர்கள் பலர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினர். வீரர்களுக்கு ரஷியாவே உதவியாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வகத்தில் இருந்த தகவல்களை உலக ஊக்கமருந்து தடுப்பு மையத்திற்கு கொடுப்பதற்கு முன், அந்த தகவல்களை அழித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

    இதுதொடர்பான வழக்கு விளையாட்டுக்கான தீர்ப்பாயத்தில் நடைபெற்றது. அப்போது அடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டியில் ரஷியா நாட்டின் பெயரையும், கொடியையும் பயன்படுத்த தடைவிதித்து உத்தரவிட்டது.

    ஊக்கமருந்து அல்லது நேர்மறையான சோதனைகளை மூடிமறைக்கவில்லை என்றால், டோக்கியோ ஒலிம்பிக், 2022 கத்தார் உலக கோப்பையில் பங்கேற்க அனுமதிக்கப்படும்.

    பொதுவான அணி அல்லது பொது வீரர் என்ற அடிப்படையில் ரஷிய வீரர்கள், வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட் பேட்டியில் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் அடித்துள்ளது.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. பகல்-இரவு போட்டியான இதில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆஸ்திரேலிய அணியில் ஜோ பேர்ன்ஸ், மேத்யூ வடே  ஆகியோர் தொடக்க வீரர்களாகவும், லாபஸ்சேன், ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஆகியோர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் இடம்பிடித்தனர்.

    பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஸ்டார்க் வீசினார். பிரித்வி ஷா 2-வது பந்திலேயே ரன்ஏதும் எடுக்காமல் க்ளீன் போல்டானார். அடுத்து புஜாரா களம் இறங்கினார். மயங்க் அகர்வால் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 18.1 ஓவரில் 32 ரன்கள் எடுத்திருந்தது.

    3-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் நம்பிக்கையுடன் விளையாடியது. விரைவாக ரன்கள் அடிக்கமுடியவில்லை என்றாலும், ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை சோதிக்கும் வகையில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. புஜாரா 160 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆவுட் ஆனார். அடுத்து வந்த ரகானேவும் நிதானமாக விளையாடினார்.

    விராட் கோலி 123 பந்தில் அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 188 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி 74 ரன்கள் (180) எடுத்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். அடுத்து வந்த விஹாரி 16 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.

    2 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்

    187 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் அடுத்த 19 ரன்னுக்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. சகா மற்றும் அஸ்வின் முதல் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

    இதனால் இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலியா அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா ஒரு முறையும் ஆட்டமிழந்தார்.
    பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது அமிர், அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.
    பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர். இவரை இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்தனர்.

    விசாரணை முடிவில் ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டது, அதன்பின் மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்தார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாட விரும்பினார். இதனால் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

    டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிருப்தி அடைந்தது. இதனால் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் அவரை சேர்க்காமல் ஓரங்கட்டினர். இந்த நிலையில் அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக முகமது அமிர் அறிவித்துள்ளார்.

    முகமது அமிர் பாஸ்தானுக்காக 36 ஒருநாள், 49 டி20 மற்றும் 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    ×