என் மலர்tooltip icon

    விளையாட்டு

    முகமது ஷமி காயம் அடைந்த நிலையில், இஷாந்த் சர்மாவை உடனடியாக ஆஸ்திரேலியா அனுப்ப வேண்டும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. இரண்டரை நாட்களிலேயே முடிவடைந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இந்தியா 2-வது இன்னிங்சில் 36 ரன்னில் சுருண்டு படுமோசமான சாதனையை பதிவு செய்தது.

    இந்த போட்டியில் முகமது ஷமி காயம் அடைந்து எஞ்சிய போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கனவே இஷாந்த் சர்மா இல்லாத நிலையில் முகமது ஷமியும் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது. 

    இந்த நிலையில் இஷாந்த் சர்மாவை உடனடியாக ஆஸ்திரேலியா அனுப்ப வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘முகமது ஷமி காயம் அடைந்திருப்பது மிகப்பெரிய பிரச்சினை. அவர் விக்கெட் எடுக்கும் திறமை படைத்தவர். பவுன்சர் மற்றும் யார்க்கர்கள் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு ஷாக் கொடுக்க முடியும். அவர் விளையாடவில்லை என்றால், அது இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும்.

    இஷாந்த் சர்மா ஃபிட் ஆகியிருந்தால், அவரை உடனடியாக ஆஸ்திரேலியா அனுப்ப வேண்டும். அவர் ஒரு நாளைக்கு 20 ஓவர்கள் வீச முடியும் என்றால், அணி நிர்வாகம் நாளைய விமானத்திலேயே ஆஸ்திரேலியா அனுப்ப வேண்டும். அப்படி என்றால் அவரால் சிட்னி டெஸ்டில் பங்கேற்க இயலும்.

    இந்தியா இந்த வாய்ப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்தியா சரியான பேக்-அப் வைத்திருக்கவில்லை. சைனியிடம் விக்கெட் எடுக்கும் திறமை உள்ளது. ஆனால், பயிற்சி ஆட்டத்தில் வீசியதை பார்க்கும்போது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரியவில்லை’’ என்றார்.

    ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் வருகிற 26-ந்தேதி மெல்போர்னிலும், 3-வது டெஸ்ட் சிட்னியில் அடுத்த மாதம் 7-ந்தேதியும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் அடுத்த மாதம் 15-ந்தேதியும் தொடங்குகிறது.
    டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் அதிகபட்ச ரன்னும், குறைந்தபட்ச ரன்னும் டிசம்பர் 19-ந்தேதி தான் நிகழ்ந்துள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்னில் சுருண்டு படு தோல்வியை தழுவியது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது மிகவும் மோசமான ஸ்கோர் ஆகும்.

    முதல் இன்னிங்சில் 244 ரன்கள் குவித்த இந்திய அணி 2-வது இன்னிங்சில் 36 ரன்னில் சுருண்டது. ஆட்டத்தின் 3-வது நாளான நேற்று (டிசம்பர் 19) இந்த மோசமான சாதனை நிகழ்ந்துள்ளது.

    இதே நாளில் தான் இந்திய அணி மிகப்பெரிய சாதனையும் படைத்துள்ளது. 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன்களை (கருண்நாயர் 303, ராகுல் 199) குவித்தது. 4-வது நாள் ஆட்டத்தில் அதாவது டிசம்பர் 19-ல் இந்த சாதனை படைக்கப்பட்டது.

    இந்தியாவின் அதிகபட்ச ரன்னும், குறைந்தபட்ச ரன்னும் டிசம்பர் 19-ந்தேதி தான் நிகழ்ந்துள்ளது. அதிக பட்ச ஸ்கோரை பதிவு செய்த 4 ஆண்டுகளுக்கு பிறகு அதே டிசம்பர் 19-ந்தேதி தான் குறைந்த பட்ச ஸ்கோரும் பதிவாகி இருப்பது சுவாரசியமானது.

    ஒரே அணிக்காக விளையாடி 643 கோல்கள் அடித்து பிரேசில் கால்பந்து சகாப்தம் பீலேயின் சாதனையை மெஸ்சி சமன் செய்தார்.

    பார்சிலோனா:

    உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி. அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த இவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

    ஸ்பெயினில் லாலிகா கிளப் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா - வாலன்சியா அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

    இந்த போட்டியில் மெஸ்சி ஒரு கோல் அடித்தார். பார்சிலோனா அணிக்காக அவர் அடித்த 643-வது கோலாகும்.

    இதன்மூலம் மெஸ்சி பிரேசில் கால்பந்து சகாப்தம் பீலேயின் சாதனையை சமன் செய்தார்.

    பீலே 15 வயதில் சாண்டோஸ் கிளப்புக்காக விளையாட தொடங்கினார். 1956-ல் அந்த கிளப்பில் சேர்ந்தார். 1974 வரை பிரேசிலுக்காக அவர் பல சர்வதேச போட்டிகளில் விளையாடினார். பீலே சாண்டோஸ் கிளப்புக்காக 665 ஆட்டங்களில் விளையாடி 643 கோல்கள் அடித்துள்ளார்.

    மெஸ்சி தனது 17-வது வயதில் 2004-ல் பார்சிலோனா கிளப் பில் சேர்ந்தார். அவர் 748 போட்டிகளில் 643 கோல்களை அடித்து பீலேயை சமன் செய்துள்ளார்.

    10 லாலீகா பட்டங்களையும், 4 சாம்பியன்ஸ் லீக் பட்டங்களையும் பார்சிலோ அணி வெல்ல மெஸ்சி முக்கிய வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது குறித்து சச்சின் தெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் மோசமான நாளாக நேற்று அமைந்தது. டெஸ்ட் வரலாற்றில் மிகவும் குறைந்தபட்ச ரன்னை எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் படுதோல்வியை தழுவியது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகல்-இரவாக நடந்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 244 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்சில் 191 ரன்னில் இந்தியா மடக்கியது.

    53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 2-வது இன்னிங்சில் ரன்களை குவித்து ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் மிகவும் மோசமாக விளையாடினார்கள்.

    128 பந்துகளை மட்டுமே ஆடிய இந்திய வீரர்கள் 36 ரன்களில் சுருண்டனர். டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் மோசமான ஸ்கோர் இதுவாகும். 46 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பரிதாப நிகழ்வு நடந்துள்ளது. 90 ரன் இலக்கை ஆஸ்திரேலியா 2 விக்கெட்டை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய அணியில் அனைத்து வீரர்களுமே ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர். இந்த ஒற்றை இலக்கத்தில் அதிகபட்ச ரன் 9 (அகர்வால்) ஆகும். புஜாரா, ரகானே, அஸ்வின் ஆகிய 3 வீரர்கள் ரன் எதுவும் எடுக்காமல் ‘டக் அவுட்’ ஆனார்கள்.

    அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கில் அவுட் ஆனது இந்திய அணியின் மோசமான சாதனையாகும். இதற்கு முன்பு 1924-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் தென் ஆப்ரிக்க வீரர்கள் அனைவருமே ஒற்றை இலக்கத்தில்ஆட்டம் இழந்து இருந்தனர்.

    இந்த டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 30 ரன்னில் சுருண்டு இருந்தது. இந்த போட்டிக்கு பிறகு தற்போது தான் இந்திய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

    அடிலெய்டு டெஸ்டில் 36 ரன்னில் சுருண்டு இந்தியா படுதோல்வியை தழுவியதால் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது. இந்த தோல்வி தொடர்பாக கிரிக்கெட்டின் சகாப்தம் தெண்டுல்கர் கூறியதாவது:-

    முதல் இன்னிங்சில் பேட்டிங், பந்துவீச்சை பார்த்தபோது இந்தியா ஆதிக்கம் செலுத்தியது போல் தெரிந்தது. 3-வது நாள் காலையில் ஆஸ்திரேலிய அணியினர் கடுமையான முறையில் மீண்டு வந்தனர். இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்.

    போட்டி முடியும்வரை எதுவும் முடிந்து விடவில்லை. 2-வது இன்னிங்சில் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆஸ்திரேலிய பவுலர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீரர் வார்னே கூறும்போது, ‘கம்மின்ஸ், ஹாசல்வுட் சிறப்பாக பந்து வீசினார்கள். பந்துகள் இப்படிவரும் என்று இந்திய வீரர்கள் ஒருபோதும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் செயல் பாட்டை நம்பவே முடிய வில்லை’ என்றார்.

    இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீரர் பிரக்யான் ஓஜா கூறும்போது, ‘இந்த டெஸ்டில் இரு அணியும் சம பலத்துடன் விளையாடின. ஒரு மணி நேர ஆட்டம் நமக்கு எதிராக மோசமாக திரும்பிவிட்டது’ என்றார்.

    உலக கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் அமித் பன்ஹால் தங்கம் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
    புதுடெல்லி:

    உலக கோப்பை குத்துச்சண்டை போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 52 கிலோ பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்த இந்திய வீரர் அமித் பன்ஹாலை எதிர்த்து களம் இறங்க இருந்த ஜெர்மனி வீரர் அர்ஜிஷ்டி டெர்டெர்யன் கடைசி நேரத்தில் விலகியதால் போட்டியின்றி அமித் பன்ஹாலுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.

    91 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் சதீஷ்குமார் 4-1 என்ற கணக்கில் பிரான்ஸ் வீரர் டாமிலி டினி மொயின்டை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஆனால் காயம் காரணமாக சதீஷ்குமார் இறுதிப்போட்டியில் இருந்து ஒதுங்கியதால் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிட்டியது.

    இந்திய வீரர்கள் முகமது ஹூசாமுதீன் (57 கிலோ), கவுரவ் சோலங்கி (57 கிலோ) ஆகியோர் அரைஇறுதியில் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தனர். பெண்களுக்கான 57 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனைகள் சாக்‌ஷி, மனிஷா ஆகியோர் இறுதிபோட்டிக்குள் நுழைந்தனர். இந்திய வீராங்கனை பூஜா ராணி (75 கிலோ) அரைஇறுதியில் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கம் பெற்றார்.
    முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றும் தோல்வி அடைந்துவிட்டோம் என்ற நிலையில் ஏற்பட்ட வேதனையான உணர்வுகளை சொல்ல வார்த்தை இல்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு நகரில் நடைபெற்றது. பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி படு தோல்வி அடைந்தது.

    குறிப்பாக, இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி வெறும் 39 ரன்களில் ஆட்டமிழந்தது. அபாரமாக ஆடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

    அந்த வேதனையான உணர்வுகளை சொல்ல வார்த்தைகள் இல்லை. நாங்கள் பேட்டிங் செய்ய வந்த போது 60 ரன்களுக்கு மேல் முன்னிலையில் இருந்தோம். ஆனால், உடனடியாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டோம்.

    இரண்டு நாட்கள் சிறப்பாக ஆடி, போட்டியில் ஒரு நல்ல நிலையில் இருந்தோம். ஆனால், ஒரு மணி நேரத்தில் தோல்வி அடைந்து விட்டோம். இன்று இன்னும்கூட தீவிரம் காட்டியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

    முதல் இன்னிங்சிலும் அவர்கள் இதே வகையான பந்துவீச்சைத்தான் காட்டினார்கள். ஆனால், இன்று நாங்கள் ரன்கள் சேர்க்கும் அவசரத்தில் இருந்தோம் என நினைக்கிறேன். உண்மையில் சிறப்பான பந்துகளை எதிர்கொண்டோம். 

    ஆனால், மிகப்பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. மனநிலையில்தான் மாற்றம் என நினைக்கிறேன். அது வெளிப்படையாகத் தெரிந்தது. கண்டிப்பாக இன்றைய ஆட்டத்திலிருந்து கற்றுக்கொண்டு அணி வீரர்கள் அடுத்த ஆட்டங்களில் சிறப்பாக ஆடுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்தார். 
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகியுள்ளார்.
    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. 2-வது இன்னிங்ஸில் 36 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.  

    முன்னதாக 2-வது இன்னிங்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சஷி பேட்டிங் செய்தபோது ஆஸ்திரேலிய வீரர் பட் கம்மின்ஸ் வீசிய பந்தில் கையில் காயம் அடைந்தார். உடனடியாக  ரிடையர்ட் ஹர்ட் முறையில் சஷி  வெளியேறினார். 

    ஆட்டம் முடிந்த பிறகு ஷமியின் காயம் குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ’ஷமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு ஸ்கேன் எடுத்த பிறகே தகவல் தெரிய வரும்" என்றார். 

    இந்நிலையில், முகமது ஷமிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய 3 டெஸ்ட் போட்டியில் இருந்தும் முகமது ஷமி விலகியுள்ளார். இந்தத் தகவலை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து முகமது ஷமி விலகியதையடுத்து அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ்-க்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 
    இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
    அடிலெய்டு:

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 244 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டது. 

    ஆஸ்திரேலிய அணி 72.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. அதிகபட்சமாக டிம் பெய்ன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ், பும்ரா தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். 
     
    இதனையடுத்து 53 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. அகர்வால் (5), பும்ரா (0) ஆகியோர் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணி 36 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்தது. முகமது சமிக்கு கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் வெளியேறினார். இதையடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 90 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

    ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹசில்வுட் 5 விக்கெட்டும் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 

    இதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் இந்திய அணியின் வேகப்பந்து வீரர் முகமது ‌ஷமி நேற்றைய ஆட்டத்தில் கிழிந்த ஷூ அணிந்து கொண்டு விளையாடினார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் இந்திய அணியின் வேகப்பந்து வீரர் முகமது ‌ஷமி நேற்றைய 2-ம் நாள் ஆட்டத்தில் கிழிந்த ஷூ அணிந்து கொண்டு விளையாடினார். 

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் இந்திய அணியின் வேகப்பந்து வீரர் முகமது ‌ஷமி நேற்றைய 2-ம் நாள் ஆட்டத்தில் கிழிந்த ஷூ அணிந்து கொண்டு விளையாடினார். 17 ஓவர்களை வீசி, 41 ரன்களை கொடுத்தார். விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. ஆனால் அவரது பந்துவீச்சு மிகவும் நேர்த்தியாக இருந்தது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.

    முகமது ‌ஷமி இடதுகாலில் கிழிந்த ஷூவை அணிந்து கொண்டு விளையாடிதை ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக பகிர்ந்து இருந்தனர். அவர் கிழிந்த ஷூவுடன் பந்து வீசியது ஏன் என்பதற்கு, ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீரர் வார்னே விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    வியூகத்தின் அடிப்படையில் முகமது ‌ஷமி கிழிந்த ஷூ அணிந்து விளையாடி உள்ளார். வீரரை நோக்கி பந்து வீசும் போது சரியான பிடிமானத்தில் சென்று சேர வேண்டும் என்பதால் அவர் அவ்வாறு செய்திருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அணிக்காக ‌ஷமியின் அர்ப்பணிப்பை பார்த்த ரசிகர்கள் வலைதளத்தில் அவரை பாராட்டி வருகிறார்கள்.

    ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி கோவா அணியை எதிர்கொள்கிறது.

    கோவா:

    11 அணிகள் பங்கேற்கும் 7-வது ஐ.எஸ்.எல். (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.

    2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்செட்பூரை தோற்கடித்தது. கேரளா பிளாஸ்டர்சுடன் மோதிய 2-வது ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.

    3-வது போட்டியில் பெங்களூருவிடம் 0-1 என்ற கணக்கிலும், 4-வது ஆட்டத்தில் மும்பையுடன் 1-2 என்ற கணக்கிலும் தோற்றது. 5-வது போட்டி யில் கவுகாத்தி அணியுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது.

    சென்னையின் எப்.சி. 5 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்வியுடன் 5 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.

    சென்னையின் எப்.சி. 6-வது ஆட்டத்தில் கோவா அணியை இன்று இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது.

    சென்னை அணி தொடக்க ஆட்டத்துக்கு பிறகு வெற்றி பெறவில்லை. இதனால் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடி சென்னை அணிக்கு உள்ளது. கோவாவை வீழ்த்தி 2-வது வெற்றி சென்னை அணிக்கு கிடைக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    கோவா அணி 6 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 டிரா, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

    இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் கோவா 7 முறையும், சென்னை அணி 7 தடவையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிரா ஆனது.

    நேற்று நடந்த 32-வது லீக் ஆட்டத்தில் ஜாம்செட்பூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை வீழ்த்தியது. அந்த அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். 10 புள்ளிகளுடன் ஜாம்செட்பூர் 5-வது இடத்தில் உள்ளது.

    கவுகாத்தி அணி முதல் தோல்வியை தழுவியது. அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

    அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சில் இந்திய அணியை வெறும் 36 ரன்களில் ஆஸ்திரேலியா சுருட்டியது.
    அடிலெய்டு:

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 244 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். இந்தியாவின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டது. 

    ஆஸ்திரேலிய அணி 72.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. அதிகபட்சமாக டிம் பெய்ன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ், பும்ரா தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    இதனையடுத்து 53 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. அகர்வால் (5), பும்ரா (0) ஆகியோர் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். டாப் ஆர்டர் விக்கெட்டுகள் அடுத்தடுத்த சரிந்தன. பும்ரா 2 ரன்களிலும், அகர்வால் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். புஜாரா மற்றும் ரகானே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். கேப்டன் விராட் கோலி 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பும்ரா, புஜாரா, கோலி ஆகிய முக்கிய விக்கெட்டுகளை பேட் கம்மின்ஸ் வீழ்த்தியதால் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.  தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் என்ற நிலையில் பரிதாபமான நிலையில் இருந்தது. 79 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. 

    தேநீர் இடைவேளைக்கு பிறகு சகா (4), அஸ்வின் (0) ஆகியோர் ஹாசில்வுட் ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஹனுமா விகாரியின் (8) விக்கெட்டையும் கைப்பற்றினார். கடைசியில் முகமது ஷமி காயத்தால் வெளியேறினார். இதனால் இந்திய அணி ஆட்டத்தை முடித்துக்கொண்டது.

    இந்திய அணி 36 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 90 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி நிதானமாக ஆடும்பட்சத்தில் இந்த இலக்கை எளிதில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்திய அணி ஒரு இன்னிங்சில் எடுத்த மிகக்குறைந்த ரன் இதுவாகும். இதற்கு முன்பு 1974ல் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி ஒரு இன்னிங்சில் 42 ரன்கள் எடுத்ததே மிகக்குறைந்த ரன்னாக இருந்தது.
    அடிலெய்டில் டே-நைட் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்திய அஸ்வின், அறிமுக போட்டியில் களம் இறங்கியதுபோல் உணர்ந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் இந்தியா திணறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அபாரமாக பந்து வீசி ஸ்மித் உள்பட நான்கு பேரை வீழ்த்தி முத்திரை பதித்தார். உமேஷ் யாதவ், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்த ஆஸ்திரேலியா 191 ரன்னில் சுருண்டது.

    இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடிந்த பின் அஸ்வின் கூறுகையில் ‘‘சுமார் 10 மாதத்திற்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவோம் என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

    லாக் டவுன் காலத்தில் விளையாட்டைப் பற்றி அதிகம் யோசித்தேன். பைத்தியமாக இருந்தேன். அதிகமாக பயிற்சி மேற்கொண்டேன். ஆகவே, இங்கே வந்து பந்து வீசுவதற்கு அது உதவியாக இருந்தது. பிங்க்-பால் டெஸ்டில் விளையாடுவது, பிங் பாலிற்கான புதிய சிந்தனை சிறந்த உணர்வாக இருந்தது.

    களத்தில் இறங்கி விளையாடியது சிறந்த உணர்வு. மீண்டும் களம் இறங்கியதை நான் அறிமுக போட்டியாகவே உணர்ந்தேன். இதனால் மிகவும் மகிழ்ச்சியாக பந்து வீசினேன். ஸ்மித் விக்கெட் மிகப்பெரியது. அவர் பேட்டிங் செய்வதை பார்க்கும்போது, முக்கியமான விக்கெட். நான் உற்சாகம் அடைந்தேன்’’ என்றார்.
    ×