என் மலர்tooltip icon

    விளையாட்டு

    20 ஓவர் போட்டிகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. டாப் 10 பேட்டிங் வரிசையில் 2 இந்திய வீரர்களே இடம் பெற்றுள்ளனர்.

    துபாய்:

    20 ஓவர் போட்டிகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது. டாப் 10 பேட்டிங் வரிசையில் 2 இந்திய வீரர்களே இடம் பெற்றுள்ளனர். இந்திய அணி கேப்டன் வீராட் கோலி, தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் ஆகியோர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

    லோகேஷ் ராகுல் 816 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளார். வீராட் கோலிஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தில் உள்ளார்.

    வீராட் கோலி

    இங்கிலாந்தை சேர்ந்த மலான் முதல் இடத்திலும் பாகிஸ்தானின் பாபர் ஆசம் 2-வது இடத்திலும் உள்ளனர்.

    பந்து வீச்சாளர் மற்றும் ஆல் ரவுண்டர் வரிசையில் டாப் 10-ல் எந்த இந்திய வீரரும் இடம்பெறவில்லை.

    பந்து வீச்சு தர வரிசையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷீத்கான், முஜ்பூர் ரகுமான் முதல் 2 இடங்களில் உள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த ஆதில் ரஷித் 3-வது இடத்தில் உள்ளார்.

    கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் தேர்வு குழுவின் புதிய தலைவராக முன்னாள் வேகப்பந்து வீரர் அஜீத் அகர்கர் தேர்வு பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அகமதாபாத்:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.இ.) 89-வது வருடாந்திர கூட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடக்கிறது.

    தேர்வு குழு உறுப்பினர்களாக இருந்த ஜதின் பரஞ்சே (மேற்கு மண்டலம்), தேவங்காந்தி (கிழக்கு), சரண்தீப் சிங் (வடக்கு) ஆகியோரின் பதவி காலம் முடிவடைந்துள்ளது.

    இதையொட்டி இன்று நடைபெறும் கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டத்தில் 3 புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யலாம்.

    புதிய தேர்வு குழு உறுப்பினர்களுக்கான இறுதி பட்டியலில் 11 பேர் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் வேகப்பந்து வீரர் அஜீத் அகர்கர், அபய் குருவில்லா, நயன் மோங்கியா, (மேற்கு மண்டலம்), கேப்டன் சர்மா, மனிந்தர்சிங், விஜய் தகியா, அஜய் ரத்னா, நிகில் சோப்ரா (வடக்கு), எஸ்.எஸ்.தாஸ், மொகத்தா, ரன்தீப் போஸ் (கிழக்கு) ஆகியோர் இதற்கான போட்டியில் உள்ளனர்.

    தேர்வு குழுவின் புதிய தலைவராக அஜீத் அகர்கர் தேர்வு பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.

    தற்போது தேர்வு குழு தலைவராக இருக்கும் சுனில் ஜோஷி 15 டெஸ்டில்தான் ஆடி உள்ளார். அகர்கர் 26 போட்டி மற்றும் 191 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார்.

    இதனால் அகர்கர் தேர்வு குழு உறுப்பினராக தேர்வு செய்யப்படலாம். அவர் தலைவராக வாய்ப்பு இருக்கிறது.

    2022-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் மேலும் 2 அணிகளை சேர்ப்பது குறித்தும் கிரிக்கெட் வாரிய செயலாளர் அமித்ஷாவுக்கு புதிய பதவி வழங்குவது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

    2021-ம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதத்தில் இந்தியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடந்தது. இதில் ஐ.சி.சி. அமைப்புக்கு வரிவிலக்கு அளிக்க கோரி மத்திய அரசிடம் பி.சி.சி.ஐ. கேட்டு இருந்தது. அந்தக்காலக்கெடு முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் இது குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

    இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்து கொண்டு முன்னாள் கேப்டனான கங்குலி பல்வேறு விளம்பர படங்களில் நடிக்கிறார். அவர் மீது எழுந்து இருக்கும் இரட்டை ஆதாயம் தொடர்பாக கேள்வி எழுப்பப்படும்.

    இந்திய அணி 2021-ம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள வெளிநாட்டு பயணங்கள், 20 ஓவர் உலக கோப்பை, 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான ஆட்டம் காரணமாக இந்திய அணியில் 5 மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மெல்போர்ன்:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கிலும் 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

    4 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரில் அடிலெய்டில் பகல்-இரவாக நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 36 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை மறுநாள் (26-ந் தேதி) தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான ஆட்டம் காரணமாக இந்திய அணியில் 5 மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கேப்டன் விராட் கோலி நாடு திரும்பியுள்ளார். அவரது மனைவி அனுஷ்காவுக்கு குழந்தை பிறக்க இருப்பதால், எஞ்சிய 3 டெஸ்டில் விளையாடவில்லை. இதனால் ரகானே கேப்டன் பொறுப்பை வகிப்பார். விராட் கோலி இடத்தில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

    மோசமான ஆட்டம் காரணமாக தொடக்க வீரர் பிரித்விஷா, விக்கெட் கீப்பர் விர்த்திமான் சகா ஆகியோர் அணியில் இருந்து கழற்றி விடப்படலாம். அவர்களுக்கான இடத்தில் சுப்மன்கில், ரி‌ஷப்பண்ட் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

    மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணி 5 பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க திட்டமிட்டுள்ளது. இதனால் விகாரி நீக்கப்பட்டு அவர் இடத்தில் ஆல் ரவுண்டரான ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

    வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி முதல் டெஸ்டில் காயமடைந்தார். இதனால் அவரது இடத்தில் நவ்தீப் சைனி அல்லது முகமது சிராஜ் இடம்பெறலாம்.

    தொடக்க வீரராக மயங்க் அகர்வாலுடன் லோகேஷ் ராகுல் களம் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுப்மன்கில் 6-வது வரிசையில் விளையாடுவார்.

    2020-ம் ஆண்டில் விளையாட்டுத்துறையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
    ஜன.1 - செர்பியாவில் பிறந்த மாடல் அழகியும், பாலிவுட் நடிகையுமான தனது நீண்டகால தோழி நடாசா ஸ்டான்கோவிச்சை கரம் பிடிப்பதாகவும், நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் ஹர்திக் பாண்ட்யா அறிவிப்பு.

    ஜன.1. ஐசிசி நான்கு நாள் டெஸ்ட் திட்டத்திற்கு இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ஆதரவு

    ஜனவரி 2: U-19  உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட மன்ஜோத் கல்ரா வயது மோசடி காரணமாக ரஞ்சி போட்டியில் விளையாட தடைபெற்றார்.

    ஜன. 3-ந்தேதி- நியூ சவுத் வேல்ஸ் காட்டுப் பகுதியல் புதர்கள் எரிந்து காட்டுத்தீயாக மாறி சிட்னி நகர் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்குமா? என்ற கேள்வி எழுந்தது, இறுதியில் போட்டி நடத்தப்பட்டது.

    ஜனவரி 5: நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் இடது கை பேட்ஸ்மேன் ஜோ கார்ட்டர்  6 பந்தில் 6 சிக்ஸ் விளாசி சாதனைப் படைத்தார்.

    ஜனவரி 6: சிட்னி டெஸ்டில் 2-வது இன்னிங்சில் ராஸ் டெய்லர் 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 20 ரன்னைக் கடந்த போது நியூசிலாந்து பேட்ஸ்மேன்களில் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் முதல் இடத்தில் இருந் ஸ்டீவன் பிளமிங்கை (7172) பின்னுக்குத் தள்ளினார்.

    ஜனவரி 7: யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக், யூரோப்பியன் நேஷன்ஸ் லீக், உலக கோப்பை, கிளப் உலக கோப்பை, கோபா டெல் ரே, யூரோ தகுதிச் சுற்று, உலக கோப்பை தகுதி சுற்று, லா லிகா, பிரிமீயர் லீக், செர்ரி ஏ என 10 தொடர்களில் ஹாட்ரிக் கோல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை.

    ஜனவரி 7: நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கு தென்ஆப்பிரிக்கா ஆதரவு

    ஜனவரி 8: செனகல் நாட்டைச் சேர்ந்த சேடியோ மானே, முகமது சாலாவை பின்னுக்கு தள்ளி 2019-ம் ஆண்டுக்கான  ஆப்பிரிக்கா கால்பந்து வீரர் விருதை வென்றுள்ளார்.

    ஜனவரி 12: ஆக்லாந்து கிளாசிக் தொடரில் செரீனா வில்லியம்ஸ் பதக்கம் வென்றார். 2017-ம் ஆண்டு குழந்தை பெற்ற பின் அவர் வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.

    ஜனவரி 20; போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஆட்டத்தில் ஜோ ரூட் 28 ரன்கள் விட்டுக்கொடுத்தது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர்கள் வரிசையில் இணைந்தார்.

    ஜனவரி 21: தென்ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் குயிண்டான் டி காக் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

    ஜனவரி 26: அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரையன்ட் இன்று காலை இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் பலியாகியுள்ளார். இதில் கோப் பிரையன், அவரது 13 வயது மகள் ஜியானா, கூடைப்பந்து பயிற்சியாளர் கிரிஸ்டினா உள்ளிட்ட 9 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
    மறைந்த கோப் பிரையன் மற்றும் அவரது மகள்

    ஜனவரி 29: தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில் 87.86 தூரத்திற்கு ஈட்டி எறிந்ததன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா.

    ஆஸ்திரேலியா ஓபன் (ஜனவரி 20 முதல் பிப்ரவரி 2): கிராண்ட் ஸ்லாம் டென்னிசில் வருடத்தின் முதல் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் சோபியா கெனின் சாம்பியன் ஆனார்.

    பிப்ரவரி 5: ஹாமில்டனில் இந்தியாவுக்கு எதிராக 348 ரன்களை எட்டியதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அதிகபட்சமான இலக்கை எட்டி சாதனைப் படைத்தது.

    பிப்ரவரி 7: கோபா டெல் ரே கால்பந்து தொடரின் காலிறுதியில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் அதிர்ச்சி தோல்வி

    பிப்ரவரி 9: தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற U19 உலக கோப்பையை இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது வங்காளதேசம்.

    பிப்ரவரி 11- நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-0 என இழந்ததன் மூலம் 31 வருடத்திற்குப் பிறகு ஒயிட்வாஷ் ஆகி மோசமான சாதனையை பதிவு செய்தது இந்தியா.

    பிப்ரவரி 12: பார்முலா-1 கார் பந்தயத்தில் ஷாங்காய் நகரில் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற இருந்த சீனா கிராண்ட் பிரி பந்தயம் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    பிப்ரவரி 18: ஐபிஎல் 2020 சீசன் மார்ச் 29-ந்தேதி தொடங்கும் என பிசிசிஐ தலைவர் கங்குலி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    பிப்ரவரி 20: ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் உமர் அக்மலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தடை

    பிப்ரவரி 21: சர்வதேச அளவில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை ராஸ் டெய்லர் படைத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான 100-வது டெஸ்டில் களம் இறங்கிய டெய்லர் இந்த சாதனையை பதிவு செய்தார்.

    பிப்ரவரி 21: இந்தியாவின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு

    பிப்ரவரி 23: கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஸ்பால் அணிக்கெதிராக விளையாடியதன் மூலம் 1000 போட்டிகளில் விளையாடி சாதனைப் படைத்துள்ளார்.

    பிப்ரவரி 25: 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரில் அருணாச்சல பிரதேசம் அணிக்கெதிராக சண்டிகர் வீராங்கனை காஷ்வீ கவுதம் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.

    பிப்ரவரி 26: நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையாக திகழ்ந்த 32 வயதான ரஷியாவின் மரியா ஷரபோவா ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    பிப்ரவரி 28: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முதன்முறையாக இத்தாலியில் ‘செரி ஏ’ லீக் கால்பந்து போட்டிகள் மூடிய மைதானத்திற்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    மார்ச் 01: துபாயில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால் 3-ந்தேதி நடக்க இருக்கும் கூட்டத்தை பிசிசிஐ தலைவர் கங்குலி புறக்கணித்தார்.

    மார்ச் 04: இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடியதன் மூலம் 500 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் பொல்லார்ட்.

    மார்ச் 05: போலி பாஸ்போர்ட் உடன் பராகுவேயில் சிக்கிய கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ

    மார்ச் 08: ஜோர்டானில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் குவாலிபையர் குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் விகாஸ் கிருஷ்ணன், பூஜா ராணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    மார்ச் 08: பெண்களுக்கான டி20 உலக கோப்பை இறுதி போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா 184 ரன்கள் குவித்தது. பின்னர் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 99 ரன்னில் சுருண்டு 85 ரன்னில் தோல்வியைத் தழுவி சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது.

    மார்ச் 10: ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை மேரிகோம்  ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    மார்ச் 10: இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டி கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.

    மார்ச் 12:  இந்தியா - தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் கொரோனா தொற்றால் ரத்து செய்யப்பட்டது.

    மார்ச் 13: இலங்கையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி பயிற்சி ஆட்டத்தை இடையில் ரத்து செய்து அவசரமாக சொந்த நாடு திரும்பியது. இதற்குப் பிறகு கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.

    மார்ச் 13: கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 15-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

    மார்ச் 13: ரஞ்சி டிராபி இறுதி போட்டி டிராவில் முடிந்த நிலையில், முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் சவுராஷ்டிரா அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. பெங்கால் அணி ஏமாற்றம் அடைந்தது.

    மார்ச் 13: இந்தியா - தென்ஆப்பிரிக்கா போட்டிகள் ரத்து என அதிரடி அறிவிப்பு. 2-வது போட்டி லக்னோவில் 15-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி கொல்கத்தாவில் 18-ந்தேதியும் நடைபெற இருந்தது. 12-ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் நடைபெற இருந்த ஆட்டம் மழையால் போட்டி கைவிடப்பட்டது.

    மார்ச் 17: கொரோனா பீதி: பாகிஸ்தான் சூப்பர் லீக் அரையிறுதி, இறுதி போட்டிகள் ரத்து 17 அரையிறுதி. 18 இறுதிப் போட்டி.

    மார்ச் 23: சுரேஷ் ரெய்னா - பிரியங்கா ஜோடிக்கு ஆண்குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ரியோ எனப் பெயரிட்டுள்ளனர். சுரேஷ் ரெய்னா - பிரியங்கா ஜோடிக்கு ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.

    மார்ச் 24: உலகின் மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டு ஜப்பான் டோக்கியோ நகரில் ஜூலை மாதம் 24-ந்தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி வரை நடைபெற இருந்தது.

    டோக்கியோ ஒலிம்பிக்

    ஏப்ரல் 02: 134-வது விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஜூன் 29-ந்தேதி முதல் ஜூலை 12-ந்தேதி வரை லண்டனில் நடத்தப்பட இருந்தது. கொரோனா தொற்றால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 2-வது உலகப்போருக்குப்பின் முதன்முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 06: ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ'கீபே முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.

    ஏப்ரல் 15: ஐபிஎல் சீசன் 2020 காலவரையின்றி ஒத்திவைப்பு என அணிகளிடம் தெரிவித்தது பிசிசிஐ

    கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமானதால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    ஜூன் 3-ந்தேதி மீண்டும் தொடங்கப்பட்ட பண்டேஸ்லிகா கால்பந்து லீக்கில் பேயர்ன் முனிச் சாம்பியன் பட்டம் வென்றது.

    மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் ஜூன் 8-ந்தேதியில் இருந்து தொடங்கியது. இங்கிலாந்தில் மீண்டும் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் பயோ-செக்யூர் வளையத்திற்குள் வீரர்கள் கொண்டு வரப்பட்டு வெற்றிகரமாக டெஸ்ட் தொடர் நடத்தப்பட்டது.

    ஜூன் 11-ந்தேதி மீண்டும் தொடங்கப்பட்ட லா லிகாவில் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    ஜூன் மதம் 17-ந்தேதி இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட்டது. லிவர்பூல் அணி 30 வருடங்களுக்குப்பின் சாம்பியன் பட்டம் வென்றது.

    சாம்பியன் கோப்பையுடன் லிவர்பூல் அணி வீரர்கள்

    ஆகஸ்ட் 07: அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை ஒத்தி வைக்கப்பட்டதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

    ஆகஸ்ட் 15: இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ். டோனி தனது சர்வதேச கிரிக்கெட் ஓய்வை அறிவித்தார். ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற அவர், ஒயிட்-பால் கிரக்கெட்டான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

    எம்எஸ் டோனி

    ஆகஸ்ட் 31-ந்தேதி முதல் செப்டம்பர் 13-ந்தேதி வரை நடைபெற்ற அமெரிக்க ஓபனில் டொமினிக் தீம் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்-ஐ வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் விக்டோரியா அஸரெங்காவை வீழ்த்தி நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்.

    செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10: ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 13-வது சீசன் செப்டம்பர் 19-ந்தேதியில் இருந்து நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் ரசிகர்கள் இன்றி நடத்தப்பட்டது. நவம்பர் 10-ந்தேதி நடைபெற்ற  இறுதிப் போட்டியில் மும்பை  இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    வெற்றிக் கோப்பையுடன் ரோகித் சர்மா

    கிராண்ட் ஸ்லாம் டென்னிசில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் செப்டம்பர் 27-ந்தேதி தொடங்கியது. 11-ந்தேதி வரை நடைபெற்றதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடால் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 13-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை வென்ற நடால், அதிக முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற பெடரர் சாதனையை சமன் செய்துள்ளார். இந்தத் தொடரில் நடால் ஒரு செட்டை கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சோபியா கெனின்-ஐ வீழ்த்தி இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

    நடால்

    நவம்பர் 17 முதல் நவம்பர் 20 வரை: அடிலெய்டில் நடைபெற்ற பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-வது இன்னிங்சில் இந்தியா 36 ரன்னில் சுருண்டு, மிகவும் குறைந்த ஸ்கோரில் சுருண்ட இந்திய அணி என்ற மோசமான சாதனையை பதிவு செய்தது. சர்வதேச அளவில் ஒரு வீரர் கூட இரட்டை இலக்க ரன்னை தாண்டாத 2-வது ஆட்டம் என கரும்புள்ளியும் குத்தப்பட்டது.

    ஜூலை 5-ந்தேதியில் இருந்து டிசம்பர் 13-ந்தேதி வரை நடைபெற்ற பார்முலா 1 கார்பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்று சாதனைப்படைத்தார். இது அவரின் 7-வது சாம்பியன் பட்டம் ஆகும். இதன்மூலம் முன்னாள் சாம்பியன் ஜூமாக்கரின் சாதனையை சமன் செய்தார்.
    பிரேசில் ஜாம்பவான் பீலேவின் 46 ஆண்டு கால சாதனைக்கு மெஸ்சி இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    பார்சிலோனா:

    ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் ரியல் வல்லாடோலிட்டை வீழ்த்தி 7-வது வெற்றியை சுவைத்தது. 65-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரரும், அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவருமான லயோனல் மெஸ்சி ஒரு கோல் அடித்தார். பார்சிலோனா கிளப்புக்காக மெஸ்சி அடித்த 644-வது (749 ஆட்டம்) கோல் இதுவாகும். இதன் மூலம் ஒரே கிளப்புக்காக அதிக கோல்கள் அடித்தவரான பிரேசில் ஜாம்பவான் பீலேவின் சாதனையை மெஸ்சி முறியடித்தார். பீலே, பிரேசிலைச் சேர்ந்த சான்டோஸ் கிளப்புக்காக மட்டும் 643 கோல்கள் (656 ஆட்டம்) 1956-ம் ஆண்டு முதல் 1974-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அடித்திருந்தார். அவரது 46 ஆண்டு கால சாதனைக்கு மெஸ்சி இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    பார்சிலோனா கிளப்புக்காக கடந்த 17 ஆண்டுகளாக விளையாடி வரும் 33 வயதான லயோனல் மெஸ்சிகூறுகையில், ‘நான் கால்பந்து விளையாடத் தொடங்கிய போது எந்த ஒரு சாதனையையும் தகர்ப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் பிலேவின் சாதனையை கடப்பேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. இத்தனை ஆண்டுகள் எனக்கு பக்கபலமாக இருந்த அணியின் சக வீரர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த சமயத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஆமதாபாத்தில் இன்று நடக்கிறது. இதில் ஐ.பி.எல். போட்டியில் புதிய அணிகள் சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படுகிறது.
    ஆமதாபாத்:

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 89-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமாதாபாத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் முக்கிய அம்சமாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2 புதிய அணிகளை சேர்ப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. தற்போது ஐ.பி.எல்.ல் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த போட்டிக்கு தொடர்ந்து மவுசு அதிகரித்து வருவதால் அணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. அதானி குழுமம், சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.ஜி. உள்பட பல நிறுவனங்கள் ஐ.பி.எல். அணிகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றன.

    அடுத்த ஆண்டு (2021) ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகளை சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டினாலும், புதிய அணிகளை டெண்டர் மூலம் முடிவு செய்வது, வீரர்கள் ஏலம், புதிய அணிகள் போட்டிக்கு தயாராகுவது ஆகியவற்றுக்கு போதிய கால அவகாசம் இல்லாததாலும், ஐ.பி.எல். போட்டி ஒளிபரப்பு நிறுவனத்தின் ஒப்பந்தம் அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வருவதாலும், 2022-ம் ஆண்டு முதல் புதிய அணிகளை சேர்க்க முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) போட்டிகளை இந்தியாவில் நடத்துகையில் அதற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. விடுத்து இருக்கும் காலக்கெடு குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. காலியாக இருந்த துணை தலைவர் பதவிக்கு ராஜீவ் சுக்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதற்கும், ஐ.பி.எல். நிர்வாக கவுன்சில் தலைவராக பிரிஜேஷ் பட்டேல் தொடருவதற்கும் அங்கீகாரம் அளிக்கப்படும்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டங்களில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதியாக யாரை பங்கேற்க வைப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இதற்கு வாரிய செயலாளர் ஜெய் ஷாவின் பெயர் முன்மொழியப்படும் என்று தெரிகிறது.

    இந்திய கிரிக்கெட் அணிக்கான 3 புதிய தேர்வாளர்களை தேர்வு செய்வதற்கு கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி அமைப்பது, நடுவர்கள் கமிட்டி, டெக்னிக்கல் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் குறித்தும் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும். இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால போட்டி தொடர்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஸ்பான்சர் நிறுவனத்துக்கு போட்டியாக விளங்கும் நிறுவனத்தின் விளம்பர தூதராக கங்குலி இருப்பது குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஆலோசனை செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
    டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் மறைந்த அருண் ஜெட்லிக்கு சிலை வைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஷன் சிங் பெடி உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
    இந்தியாவில் புகழ் வாய்ந்த கிரிக்கெட் மைதானங்களில் டெல்லி பெரோஸ் ஷா கோட்லாவும் ஒன்று. இந்த மைதானத்தில் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்-மந்திரியுமான அருண் ஜெட்லிக்கு பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் 6 அடி சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் பிஷன் சிங் பெடி ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கும் கேலரிக்கு வைக்கப்பட்டுள்ள எனது பெயரை நீக்கிவிடுங்கள். என்னை உறுப்பினர் பதவியில் இருந்தும் விடுவித்து கொள்கிறேன் என டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

    டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அருண் ஜெட்லி 1999 முதல் 2013 வரை டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார்.
    ரஹானே பந்து வீச்சாளர்களின் கேப்டன் எனக் கூறிய இஷாந்த் சர்மா, அணியிடம் இருந்து விரும்புகிறார் என்பதில் தெளிவாக இருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா காயத்தால் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகியுள்ளார். விராட் கோலி முதல் டெஸ்ட் முடிந்த பின்னர், மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு குழந்தை பிறக்க இருப்பதால் இந்தியா திரும்பியுள்ளார். இதனால் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கும் ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

    ரஹானே கேப்டன் பதவி குறித்து இஷாந்த் சர்மா கூறுகையில் ‘‘ரஹானே மிகவும் அமைதியானவர், நம்பிக்கையுள்ளனர். அவர் பந்து வீச்சாளர்களின் கேப்டன் என்பதை நான் கூறுவேன்.

    விராட் கோலி களத்தில் இல்லாமல் ரஹானே உடன் இணைந்து விளையாடும்போதெல்லாம், அவர் என்னிடம் எந்த மாதிரியான பீல்டிங்கை விரும்புகிறீர்கள்? எப்படி பந்து வீச விரும்புகிறீர்கள்? நீங்கள் பந்து வீச விரும்புகிறீர்களா? எனக் கேட்பார்.

    அவர் பந்து விச்சாளர்களின் கேப்டன். அவர் மற்றவர்களை போன்று இதை செய்யுங்கள் எனச் சொல்லமாட்டார். அவருடைய அணியிடம் இருந்து அவர் என்ன விரும்புகிறார் என்பதில் தெளிவாக இருப்பார்’’ என்றார்.
    அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவினாலும் இந்திய கிரிக்கெட அணி வீரர்கள் மெல்போர்ன் போட்டிக்கு தயாராகும் வகையில் இன்று பயிற்சியை மேற்கொண்டனர்.
    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது அடிலெய்டில் கடந்த 17-ந்தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் 20-ந்தேதியிலேயே முடிவடைந்து விட்டது.

    புஜாரா, ரஹானே

    2-வது டெஸ்ட் மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்டாக 26-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி வீரர்கள் மெல்போர்ன் சென்றடைந்தனர்.

    பும்ரா

    இன்று வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டனர். ஷுப்மான் கில் நீண்ட நேர பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டார். ஜடேஜா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் பவுலிங் செய்தனர். புஜாரா உள்பட பேட்ஸ்மேன்கள் பயிற்சி மேற்கொள்ள பொறுப்பு கேப்டன் ரஹானே, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மேற்பார்வையிட்டனர்.
    இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் போட்டி தொடர் ஜனவரி 10-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் போட்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2020-21-ம் ஆண்டுக்கான போட்டித் தொடர் வருகிற ஜனவரி 10-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த போட்டித் தொடருக்கான தமிழ்நாடு அணி இன்று அறிவிக்கப்படுகிறது.தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணை கேப்டனாக விஜய் சங்கர் தேர்வு செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் கே.விக்னேஷ் கொரோனா பரிசோதனையை கடந்துள்ளதால் அணியில் இடம் பெறுவார்.

    மேலும் 3 ஆண்டுகளுக்கு பிறகு அஸ்வின் கிறிஸ்ட் அணியில் இடம் பெறுவார் என்று தெரிகிறது. வேகப்பந்து வீச்சாளரான அவர் முதுகு வலி காரணமாக நியூசிலாந்தில் ஆபரே‌ஷன் செய்து குணம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணி கேப்டன் வீராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளதால் அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார்.

    சிட்னி:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவிளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 4 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா தோற்றது. 2-வது இன்னிங்சில் வெறும் 36 ரன்னில் சுருண்டது.

    2-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது. இதற்கிடையே இந்திய அணி கேப்டன் வீராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளது. இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு கோலி நாடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி வீராட் கோலி ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார். புறப்படுவதற்கு முன்பாக கோலி, அணி வீரர்களுடன் ஆலோசனை நடத்தி பேசி உள்ளார். அப்போது உத்வேகத்துடன் விளையாடுங்கள் என்று ஊக்கப்படுத்தினார்.

    இதுகுறித்து அணி நிர்வாக வட்டாரங்கள் கூறும்போது, “வீராட் கோலிஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார். அதற்கு முன்பாக அவர் அனைத்து வீரர்களுடன் பேசினார்.

    அவர்களுக்கு நம்பிக்கையை உயர்த்துவதோடு நேர்மாறாக இருக்க யோசனைகளை வழங்கினார். கேப்டன் பொறுப்பை ரகானேவிடம் வழங்கி விட்டு, ஆடுகளத்தில் வீரர்கள் தங்களை வெளிப்படுத்தி கொள்ள வேண்டும் என்று ஊக்கம் அளித்தார்” என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள ரோகித் சர்மா சிட்னி நகரில் கொரோனா நெறிமுறை காரணமாக அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அவர் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது.

    ரோகித் சர்மா வருகிற ஜனவரி 3-ந் தேதி தனது பயிற்சியை தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3-வதுடெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ந் தேதி, 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் 15-ந் தேதி பிரிஸ்பேனிலும் தொடங்குகிறது.

    சிட்னியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ரோகித் சர்மா கோரன்டைனில் இருப்பதால் பிரச்சினை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது. 2-வது டெஸ்ட மெல்போர்னில் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. 3-வது டெஸ்ட் ஜனவரி 7-ந்தேதி சிட்னியில் நடக்கிறது.

    சிட்னியில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்ததால் சுற்றியுள்ள மாநிலங்கள் எல்லைகளை மூடி கட்டுப்பாடு விதித்துள்ளது. சிட்னியில் இருந்து வந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா இந்தியாவில் இருந்து புறப்பட்டு கடந்த 16-ந்தேதி சிட்னி சென்றடைந்தார். அவர் 14 நாட்கள் கோரன்டைனை முடித்து சிட்னி டெஸ்டில் பங்கேற்பது திட்டம்.

    இன்றைய சூழ்நிலையில் சிட்னியில் டெஸ்ட் போட்டி நடைபெற வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. அப்படியானால் போட்டி மெல்போர்ன் அல்லது பிரிஸ்பேன் அல்லது அடிலெய்டுக்கு மாற்றப்பட வேண்டும்.

    அப்படியென்றால் ரோகித் சர்மா சிட்னியில் இருந்து வெளியேறும்போது மீண்டும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது இருக்கும். இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு அரசிடம் பேசி ரோகித் சர்மா மீண்டும் ஒருமுறை தனிமைப்படுத்திக் கொள்ளத்தேவையில்லை என்ற அனுமதியை பெற்றுள்ளது.

    இதனால் ரோகித் சர்மா 14 நாட்கள் முடிந்தபின் சிட்னியில் இருந்து வெளியேறினாலும் அணியுடன் கலந்து கொள்ளலாம். 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியும். ரோகித் சர்மாவுக்கு இரண்டு படுக்கை கொண்ட அறையுடன் சிறப்பான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது என ஆஸ்திரேலியா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
    ×