என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 297 ரன்கள் எடுத்தது.

    கிறிஸ்ட்சர்ச்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    2 டெஸ்ட் போட்டி தொடரில் மவுண்ட் மவுக்கானுவில் நடந்த முதல் டெஸ்டில் நியூசிலாந்து 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் பாகிஸ்தான் திணறியது. 83 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது.

    தொடக்க வீரர் ஷான் மசூத் ரன் எதுவும் எடுக்காமல் சவுத்தி பந்தில் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்கவீரர் ஆபித் அலி (25 ரன்), ஹாரிஸ் சோகைல் (ஒரு ரன்), பவாத் ஆலம் (2 ரன்) ஆகியோரது விக்கெட்டை ஜேமிசன் வீழ்த்தினார்.

    5-வது விக்கெட்டான அசார் அலி- கேப்டன் முகமது ரிஸ்வான் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. சிறப்பாக ஆடிய ரிஸ்வான் 61 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரது விக்கெட்டையும் ஜேமிசனே கைப்பற்றினார்.

    அடுத்து பஹீம் அஸ்ரப் களம் வந்தார். மறுமுனையில் இருந்தனர் அசார் அலி தொடர்ந்து சிறப்பாக ஆடினார். தேனீர் இடைவேளையின் போது பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன் எடுத்தது. அசார் அலி 90 ரன்னிலும், அஸ்ரப் 26 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

    இதனையடுத்து மீண்டும் களமிறங்கிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தது. அசார் 93 ரன்னிலும் 48, ரன்னிலும் வெளியேறினார். 83.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 297 ரன்கள் எடுத்தது.

    நியூசிலாந்து அணி தரப்பில் ஜெமிசன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சவுத்தி, போல்ட் தலா 2 விக்கெட்டுகளையும் ஹெண்ட்ரி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    கிறிஸ்ட்சர்ச்:

    பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்டடி 20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    முதலில் நடைபெற்ற டி20 தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் டி 20 தொடரை கைப்பற்றியது. முதல் டெஸ்டில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷான் மசூத், அபித் அலி ஆகியோர் களமிறங்கினர்.

    மூன்றாவது ஓவரில் ஷான் மசூத் சவுத்தி பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய அசார் அலி நிதானமாக ஆடினார்.

    இந்த ஜோடி 62 ரன்கள் சேர்த்த நிலையில், அபித் அலி 25 ரன்னில் ஜேமிசன் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த ஹாரிஸ் சோஹைலை 1 ரன்னிலும், ஃபவாத் ஆலமை 2 ரன்னிலும் ஜேமிசன் அவுட்டாக்கினார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அசார் அலி பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.

    முதல் நாள் போட்டியின் உணவு இடைவேளை வரை பாகிஸ்தான் அணி 26 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 88 ரன்கள் எடுத்துள்ளது. அசார் அலி 52 ரன்னும், கேப்டன் மொகமது ரிஸ்வான் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.

    நியூசிலாந்து சார்பில் கைல் ஜேமிசன் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டும், சவுத்தி ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.
    சயத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் மும்பை அணியில் கூடுதலாக அர்ஜூன் தெண்டுல்கர், ஹனகவாடி ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்
    மும்பை:

    சயத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் அணி வீரர்களின் எண்ணிக்கையை 20-ல் இருந்து 22 ஆக உயர்த்திக்கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து மும்பை அணியில் கூடுதலாக அர்ஜூன் தெண்டுல்கர், ஹனகவாடி ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர். 19 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜூன் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் ஆவார். அவர் மும்பை சீனியர் அணியில் இடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.
    கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக புகார் எழுந்துள்ள நிலையில் ரோகித் சர்மா, ரிஷப் பந்த் உள்ளிட்ட 5 இந்திய வீரர்கள் தனிமைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

    ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.

    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.

    3-வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ல் மற்றும் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகின்றன.

    புத்தாண்டை முன்னிட்டு மெல்போர்னில் உள்ள உணவு விடுதிக்கு ரோகித் சர்மா, ஷுப்மன் கில், பிரித்வி ஷா, ரிஷப்பந்த், சைனி போன்றோர் சென்றார்கள்.

    இந்நிலையில் அதே சமயத்தில் அங்கிருந்த நவால்தீப் சிங் என்கிற இந்திய கிரிக்கெட் ரசிகர், இந்திய வீரர்களுக்குத் தெரியாமல் அவர்களுடைய உணவு பில்லுக்கான கட்டணத்தைத் தானே செலுத்தியுள்ளார். இதையடுத்து உணவகத்தில் என்ன நடந்தது என்பதை அவர் டுவிட்டரில் விலாவாரியாகத் தெரிவித்தது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    டுவிட்டரில் நவால்தீப் சிங் தெரிவித்ததாவது:

    நான் பில் தொகையைக் கட்டியது இந்திய வீரர்களுக்குத் தெரியாது. என்னுடைய சூப்பர் ஸ்டார்களுக்கான சிறிய பங்களிப்பு. நான் தான் பில்லைக் கட்டினேன் எனத் தெரிந்தவுடன், அண்ணா காசு வாங்கிக்கோங்க, இல்லைனா நல்லா இருக்காது என என்னிடம் ரோகித் சர்மா சொன்னார். என்னை அணைத்து நன்றி சொன்னார் ரிஷப் பந்த் என்றார்.

    அவர் கட்டிய பில்லின் தொகை - ரூ. 6683. கிரிக்கெட் ரசிகருடைய இந்த டுவீட்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. கொரோனா தடுப்பு விதிமுறைகளை இந்திய வீரர்கள் மீறியுள்ளதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் விதிமுறைப்படி, விடுதியின் வெளிப்பகுதியில் மட்டுமே வீரர்கள் சாப்பிட வேண்டும். ஆனால் நவால்தீப் சிங் வெளியிட்ட விடியோவில், இந்திய வீரர்கள் விடுதியின் உள்ளே இருப்பது போலத் தெரிகிறது. மேலும் யாரும் முகக்கவசம் அணியவில்லை.

    இந்நிலையில் இந்த விவகாரம் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாகப் புகார் எழுந்துள்ள நிலையில் ரோகித் சர்மா, ரிஷப் பந்த் உள்ளிட்ட ஐந்து இந்திய வீரர்களும் தனிமைப்படுவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ரோகித் சர்மா, ரிஷப் பந்த், ஷுப்மன் கில், பிரித்வி ஷா, நவ்தீப் சைனி ஆகிய ஐந்து பேரும் விடுதிக்கு சாப்பிட சென்றது கொரோனா விதிமுறைகளை மீறியதா என்பதை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் பிசிசிஐயும் விசாரணை செய்து வருகின்றன.

    அதுவரை, இந்திய, ஆஸ்திரேலிய மருத்துவக் குழுவின் அறிவுரையின்படி, ஐந்து வீரர்களும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். 5 பேரும் இந்திய வீரர்களுடன் இணைந்து பயணம் செய்வதோ பயிற்சி மேற்கொள்ளவோ கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஐந்து வீரர்களும் அனுமதிக்கப்பட்ட இடத்தில் ஒன்றாகப் பயிற்சி மேற்கொள்ளவுள்ளார்கள்.
    பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு இன்று நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமானவர் சவுரவ் கங்குலி. இவர் தற்போது இந்திய கிரிக்கெட் வாரிய சங்க (பிசிசிஐ) தலைவராக செயல்பட்டு வருகிறார்.  மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த கங்குலி தனது சொந்த ஊரில் வசித்து வருகிறார். 

    இதற்கிடையில், கொல்கத்தாவில் அவரது வீட்டில் இருந்த சவுரவ் கங்குலிக்கு இன்று மதியம் 2 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லேன்ட்ஸ் பல்நோக்கு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், சவுரவ் கங்குலிக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்களில் ஒருவரான டாக்டர். அஃப்தாப் கான் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டாக்டர் கூறியதாவது:-

    சவுரவ் கங்குலிக்கு இதயநாள அடைப்புக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கங்குலியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் அடுத்த 24 மணி நேரம் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார்.

    அவர் முழு நினைவுடன் உள்ளார். கங்குலியின் இதயத்தில் 2 அடைப்புகள் ஏற்பட்டுள்ளது. அதற்காக தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    என்றார்.   
    பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமானவர் சவுரவ் கங்குலி. இவர் தற்போது இந்திய கிரிக்கெட் வாரிய சங்க தலைவராக (பிசிசிஐ) செயல்பட்டு வருகிறார். மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த கங்குலி தனது சொந்த ஊரில் வசித்து வருகிறார். 

    இந்நிலையில், கொல்கத்தாவில் அவரது வீட்டில் இருந்த சவுரவ் கங்குலிக்கு இன்று மதிய 2 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லேன்ட்ஸ் பல்நோக்கு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கங்குலிக்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலி விரைவில் குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்களும், கிரிக்கெட் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள பிவி சிந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெற கடுமையாக உழைப்பதாக தெரிவித்துள்ளார்.

    லண்டன்:

    இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து. உலக தரவரிசை பட்டியலில் அவர் 7-வது இடத்தில் உள்ளார்.

    ஐதராபாத்தை சேர்ந்த 25 வயதான பி.வி.சிந்து தற்போது இங்கிலாந்தில் தங்கி உள்ளார். இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்காக அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    இது தொடர்பாக பி.வி.சிந்து கூறியதாவது:-

    ஒலிம்பிக் போட்டிக்கு நான் நன்றாக திட்டமிட்டுள்ளேன். பதக்கத்தை பெற எல்லோரும் 100 சதவீதம் கடினமான உழைப்பை கொடுக்கவே விரும்புவார்கள்.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவதை நான் ஆவலுடன் விரும்புகிறேன். அதற்காக கடுமையாக உழைக்கிறேன். இது எளிதானதல்ல என்று எனக்கு தெரியும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக நடைபெறும் அனைத்து சர்வதேச போட்டிகளிலும் அவர் பங்கேற்கிறார். தாய்லாந்து ஓபன் பேட் மின்டன் போட்டி வருகிற 12-ந் தேதி நடைபெறுகிறது. இதில் அவர் கலந்து கொள்கிறார்.

    பி.வி.சிந்து 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் மயிரிழையில் தங்கப் பதக்கத்தை இழந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கிலாவது தங்கப் பதக்கத்தை வெல்ல வேண்டும் என்ற இலக்கில் உள்ளார்.

    கடந்த ஆண்டு பாசல் நகரில் நடந்த உலக சாம்பியன் போட்டியில் அவர் தங்கப்பதக்கம் பெற்றார். இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவார். ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த்தில் அவர் சாதித்து இருந்தார்.

    பி.வி.சிந்து இதுவரை 326 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். 139 போட்டியில் தோற்றுள்ளார்.

    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் 11 பேர் கொண்ட இந்திய அணியில் ரோகித் சர்மா எந்த வரிசையில் விளையாட போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    சிட்னி:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

    4 டெஸ்ட் போட்டி தொடரில் அடிலெய்டில் பகல்-இரவாக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 36 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது.

    இதற்கு மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி சரியான பதிலடி கொடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 7-ந் தேதி சிட்னியில் தொடங்குகிறது.

    இந்த போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா விளையாடுகிறார். காயம் காரணமாக முதல் 2 டெஸ்டில் விளையாடாத அவர் அணியோடு தாமதமாக இணைந்து கொண்டார்.

    14 நாட்கள் தனிமைக்கு பிறகு ரோகித் சர்மா இந்திய வீரர்களுடன் இணைந்து சிட்னி மைதானத்தில் பயிற்சியை தொடங்கினார். அவருக்கு அணியின் துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புஜாராவுக்கு பதிலாக அவர் கடைசி 2 டெஸ்டில் துணை கேப்டனாக பணியாற்றுவார்.

    11 பேர் கொண்ட இந்திய அணியில் ரோகித் சர்மா எந்த வரிசையில் விளையாட போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தொடக்க வீரராக ஆடுவாரா? அல்லது 5-வது வரிசையில் களம் இறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    அணி நிர்வாகமே இதுகுறித்து இறுதி முடிவை எடுக்கும். தொடக்க வீரரான மயங்க் அகர்வால் இதுவரை நடந்த 2 டெஸ்டிலும் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. இதனால் அவர் இடத்தில் ரோகித் சர்மா தொடக்க வீரராக ஆடலாம் என்று கருதப்படுகிறது.

    இதேபோல மிடில் ஆர்டரில் விளையாடும் ஹனுமா விகாரியும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இதனால் அவரது வரிசையான 5-வது இடத்தில் ரோகித் சர்மா களம் இறக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.

    ரோகித் சர்மாவின் இட வரிசை குறித்து இன்னும் அணி நிர்வாகத்தால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

    33 வயதான ரோகித் சர்மா 32 டெஸ்டில் விளையாடி 2,141 ரன் எடுத்துள்ளார். சராசரி 46.54 ஆகும். 6 சதமும், 10 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 212 ரன் (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக) குவித்துள்ளார்.

    இதில் வெளிநாடுகளில் 18 டெஸ்டில் 816 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரி 26.32 ஆகும். அதிகபட்சமாக 79 ரன்கள் எடுத்துள்ளார்.

    ரோகித் சர்மா தொடக்க வீரர் வரிசையில் 5 டெஸ்டில் 3 சதத்துடன் 556 ரன் எடுத்துள்ளார். 5-வது வரிசையில் 9 டெஸ்டில் 3 அரை சதத்துடன் 437 ரன் எடுத்துள்ளார்.

    ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு எந்தவொரு ஆட்டத்திலும் விளையாடாமல் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் விளையாட இருக்கிறார். இதனால் அவரால் நல்ல நிலையில் ஆட முடியுமா? என்ற சந்தேகமும் இருக்கிறது.

    பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. உள்ளூரில் நியூசிலாந்தின் ஆதிக்கத்துக்கு பாகிஸ்தான் முடிவு கட்டுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறாார்கள்.
    கிறைஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மவுன்ட் மாங்கானுவில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தான்-நியூசிலாந்து மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் நியூசிலாந்துக்கு இந்த வெற்றி முக்கியமானதாக அமைந்துள்ளது.

    தொடக்க டெஸ்டில் நியூசிலாந்து நிர்ணயித்த 373 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி டிரா செய்ய கடைசி நாளில் கடுமையாக போராடியது. ஆனால் நியூசிலாந்து பவுலர்கள் 4.3 ஓவர்கள் மீதம் இருக்கையில் பாகிஸ்தானை ஆல்-அவுட் ஆக்கி விட்டனர். வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னெருக்கு வலது காலில் இரண்டு விரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்த போதிலும் வலி நிவாரண ஊசி போட்டுக்கொண்டு இடைவிடாது பந்து வீசினார். 2-வது இன்னிங்சில் அவர் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். காயம் காரணமாக அவர் 2-வது டெஸ்டில் விளையாடவில்லை. காயம் குணமடைய 6 வாரங்கள் வரை ஆகும். அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி சேர்க்கப்பட்டு உள்ளார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் நியூசிலாந்து தற்போது 360 புள்ளிகளுடன் (66.7 சதவீதம்) 3-வது இடம் வகிக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிசுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இந்த டெஸ்டிலும் வாகை சூடி 60 புள்ளிகளை பெற்றாக வேண்டும். அதை அடையும் முனைப்புடன் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி வீரர்கள் வரிந்து கட்டுவார்கள். வலுவான அணியாக திகழும் நியூசிலாந்து உள்நாட்டில் கடைசி 16 டெஸ்டுகளில் தோற்றதே இல்லை. அத்துடன் 2011-ம் ஆண்டுக்கு பிறகு நியூசிலாந்து அணி உள்ளூரில் ஆசிய அணிகளிடம் தோற்றது கிடையாது. அந்த பெருமையையும் தக்க வைக்கும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

    பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை அனுபவ வீரர்கள் குறைவு என்றாலும் நியூசிலாந்துக்கு முடிந்த அளவுக்கு சவால் கொடுத்து பார்த்தனர். தொடக்க டெஸ்டில் பவாத் ஆலம் அடித்த சதம் அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தி இருக்கும். கை பெருவிரலில் ஏற்பட்ட லேசான எலும்பு முறிவால் முதலாவது டெஸ்டில் ஒதுங்கியிருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நேற்று நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் காயத்தில் இருந்து அவர் முழுமையாக குணமடைந்து விட்டார் என்று அணி மருத்துவ குழு கூறினால் மட்டுமே இந்த டெஸ்டில் விளையாடுவார். ஒருவேளை உடல்தகுதியை எட்டாவிட்டால் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் தொடர்ந்து கேப்டனாக செயல்படுவார். நியூசிலாந்தின் வீறுநடைக்கு பாகிஸ்தான் முடிவு கட்டுமா? அல்லது பணிந்து போகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த டெஸ்ட் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
    அடிலெய்டு பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்றது ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சால் அல்ல, பிங்க் பந்தால்தான் என அக்தர் தெரிவித்துள்ளார்.
    அடிலெய்டு பகல்-இரவு டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதல் இன்னிங்சில் 53 ரன்கள் முன்னிலைப் பெற்ற போதிலும், 2-வது இன்னிங்சில் 36 ரன்னில் சுருண்டது.

    இந்தியா தோற்றதற்கு ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு முக்கிய காரணமல்ல. பிங்க்-பால்தான் முக்கிய காரணம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘நான் கண்டதில் ஆஸ்திரேலியாவின் பலவீனமான பேட்டிங் ஆர்டர் கொண்ட அணியாக இது உள்ளது. இது மிகவும் உடையக்கூடிய, மிகவும் பலவீனமானது. ஸ்மித்தை நீக்கிவிட்டு மிடில் ஆர்டரை பார்த்தால் மிகவும் மோசம். அவர்களுடைய பந்து வீச்சு சிறப்பானதாக உள்ளது. முதல் போட்டியில் இந்தியா ஏன் தோற்றது என்று என்னிடம் கேட்டால், அதற்கு காரணம் பிங்க்-பால்தான் என்பேன்’’ என்றார்.
    மெல்போர்ன் டெஸ்டில் தோல்வியடைந்த நிலையில், இந்தியாவை நெருக்கடிக்குள் கொண்டு வரும் வழிகளுடன் 3-வது போட்டிக்கு வரவேண்டும் என லாபஸ்சேஸ் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் 7-ந்தேதி சிட்னியில் நடக்கிறது. இதில் வெற்றி பெற வேண்டும் என்றால் இந்தியாவை நெருக்குடிக்குள்ளாக்கும் வழிகளுடன் வருவது அவசியம் என ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் லாபஸ்சேன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து லாபஸ்சேன் கூறுகையில் ‘‘இந்திய பந்து வீச்சாளர்கள் உறுதியாக திட்டத்துடன் வந்துள்ளனர். அவர்கள் ஸ்டம்பை விட்டு வெளியே பந்து வீசமாட்டார்கள். லெக்-சைடு அதிகமான பீல்டிங் அமைக்கிறார்கள். இது ரன்ரேட் விகிதத்தை குறைக்கும். ஏனென்றால், நீங்கள் லெக்சைடு அடிக்கும் பந்தில் ஒரு ரன்தான் எடுக்க முடியும். பவுண்டரி கிடைக்காது.

    கவனமாக ஒழுக்கத்துடன் விளையாட வேண்டும். நாங்கள் இந்திய அணியை நெருக்கடிக்குள் கொண்டு வரும் வழிகளுடன் சிட்னி டெஸ்டிற்கு வருவது அவசியம்’’ என்றார்.
    சையத் அலி முஷ்டாக் டிராபிக்கான பெங்கால் அணியில் முகமது ஷமியின் இளைய சகோதரர் முகமது கைப் இடம் பிடித்துள்ளார். இவர் வேகப்பந்து வீச்சாளர் ஆல்-ரவுண்டர்.
    இந்தியாவின் உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபி வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான பெங்கால் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அனுஸ்தப் மஜும்தான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீவாட்ஸ் கோஸ்வாமி துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் முகமது ஷமியின் இளைய சகோதரர் அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராவார்.

    பெங்கால் அணி ஜனவரி 10-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தமிழ்நாடு, ஜார்கண்ட், ஒடிசா, அசாம், ஐதராபாத் அணிகளை எதிர்கொள்கிறது. ஜனவரி 10-ந்தேதி முதல் போட்டியில் ஒடிசாவை எதிர்கொள்கிறது.
    ×