என் மலர்
விளையாட்டு
கொல்கத்தா:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக உள்ளார்.
இந்த நிலையில் 48 வயதான கங்குலிக்கு நேற்று திடீரென லேசான மாரடைப்பு ஏற்பட்டது. உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது இருதயத்துக்கு செல்லும் ரத்தகுழாயில் 3 அடைப்புகள் இருந்தது தெரியவந்தது. இதில் ஒரு அடைப்பு 90 சதவீத அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
இதைத்தொடர்ந்து உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. இதில் ஒரு அடைப்பு நீக்கப்பட்டது. கங்குலியின் உடல்நலம் தொடர்பாக டாக்டர் ஒருவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கங்குலிக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் 24 மணி நேரம் கண்காணிப்பில் உள்ளார். அவரது இருதயத்தில் தற்போது 2 அடைப்புகள் உள்ளன. அதற்கான சிகிச்சை அவருக்கு அளிக்கப்படும்.
அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாளை ஆலோசிக்கப்படும். அவர் அபாய கட்டத்தில் இல்லை. நன்றாக பேசுகிறார். இன்று காலை கங்குலிக்கு வழக்கமான இ.சி.ஜி. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
உட்லான்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கங்குலியை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேரில் சென்று நலம் விசாரித்தார்.
பின்னர் மருத்துவமனைக்கு வெளியே அவர் நிருபர்களிடம் கூறும்போது, கங்குலி நலமாக உள்ளார். என்னுடைய உடல்நலம் குறித்து அவர் கேட்டறிந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றி என்றார்.
இதேபோல மேற்கு வங்காள கவர்னர் ஜக்தீப்பும் தனது மனைவியுடன் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று கங்குலியிடம் நலம் விசாரித்தார்.
அவர் விரைந்து குணமடைய வேண்டுமென்று கிரிக்கெட் வீரர்கள் தற்போது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
கோவா:
11 அணிகள் பங்கேற்கும் 7-வது ஐ.எஸ்.எல். (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.
2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்செட்பூரை தோற்கடித்தது. கேரளா பிளாஸ்டர்சுடன் மோதிய 2-வது ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.
3-வது போட்டியில் பெங்களூருவிடம் 0-1 என்ற கணக்கிலும், 4-வது ஆட்டத்தில் மும்பையுடன் 1-2 என்ற கணக்கிலும் தோற்றது. 5-வது போட்டி யில் கவுகாத்தி அணியுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது.
6-வது ஆட்டத்தில் கோவாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. 7-வது போட்டியில் ஈஸ்ட் பெங்காலுடன் 2-2 என்ற கணக்கிலும், 8-வது ஆட் டத்தில் ஏ.டி.கே.மோகன் பாகனுடன் கோல் எதுவு மின்றியும் டிரா செய்தது.
சென்னையின் எப்.சி. 8 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 4 டிரா, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.
சென்னையின் எப்.சி. 9-வது ஆட்டத்தில் ஐதராபாத் அணியை நாளை இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது.
சென்னை அணி ஐதராபாத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதன் மூலம் சென்னை அணி முன்னேற்றம் அடையும். ஐதராபாத் அணி 2 வெற்றி, 3 டிரா, 3 தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.
நேற்று நடந்த 44-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி 2-0 என்ற கோல் கணக்கில் கேரளாவை தோற்கடித்தது. அந்த அணி 6 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 19 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
மோகன் பகான் 17 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், கோவா 14 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஜாம்செட்பூர் 13 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளன.
இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. ஒரு ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - ஒடிசா (மாலை 5 மணி), மற்றொரு ஆட்டத்தில் மோகன் பகான் -கவுகாத்தி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.
கிறிஸ்ட்சர்ச்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
2 டெஸ்ட் போட்டி தொடரில் மவுண்ட் மவுக்கானுவில் நடந்த முதல் டெஸ்டில் நியூசிலாந்து 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் பாகிஸ்தான் திணறியது. 83 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது.
தொடக்க வீரர் ஷான் மசூத் ரன் எதுவும் எடுக்காமல் சவுத்தி பந்தில் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்கவீரர் ஆபித் அலி (25 ரன்), ஹாரிஸ் சோகைல் (ஒரு ரன்), பவாத் ஆலம் (2 ரன்) ஆகியோரது விக்கெட்டை ஜேமிசன் வீழ்த்தினார்.
5-வது விக்கெட்டான அசார் அலி- கேப்டன் முகமது ரிஸ்வான் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. சிறப்பாக ஆடிய ரிஸ்வான் 61 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரது விக்கெட்டையும் ஜேமிசனே கைப்பற்றினார்.
அடுத்து பஹீம் அஸ்ரப் களம் வந்தார். மறுமுனையில் இருந்தனர் அசார் அலி தொடர்ந்து சிறப்பாக ஆடினார். தேனீர் இடைவேளையின் போது பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன் எடுத்தது. அசார் அலி 90 ரன்னிலும், அஸ்ரப் 26 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து மீண்டும் களமிறங்கிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தது. அசார் 93 ரன்னிலும் 48, ரன்னிலும் வெளியேறினார். 83.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 297 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் ஜெமிசன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சவுத்தி, போல்ட் தலா 2 விக்கெட்டுகளையும் ஹெண்ட்ரி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.






