என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ரோகித் சர்மா உள்பட ஐந்து பேர் மீது பாதுகாப்பு வளையத்தை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தாலும், சக வீரர்களுடன் இணைந்தே சிட்னி செல்ல இருக்கிறார்கள்.
    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. பயோ-பாதுகாப்பு வளையத்திற்குள் வீரர்கள் கொண்டு வரப்பட்டு கொரோனா தாக்காத வண்ணம் எச்சரிக்கையுடன் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில்தான் ரோகித் சர்மா, ஷுப்மன் கில், பிரித்வி ஷா, நவ்தீப் சைனி, ரிஷப் பண்ட் ஆகியோர் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக புகார் எழுந்துள்ளது. முதற்கட்டமாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில் குற்றச்சாட்டை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. நாளை மெல்போர்னில் இருந்து இரு அணி வீரர்களும் சிட்னி செல்கிறார்கள்.

    இரண்டு நாட்கள் தீவிர பயிற்சிக்குப்பின் 7-ந்தேதி 3-வது டெஸ்டில் விளையாடுகிறார்கள். இந்திய அணியின் சக வீரர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப்களுடன் ரோகித் சர்மா உள்பட ஐந்து பேரும் செல்வார்களா? என்ற கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில் ஐந்துபேரும் சக வீரர்களுடன் இணைந்தே சிட்னி செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித் சர்மா, ஷுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் 3-வது டெஸ்டில் பங்கேற்பதில் எந்த சிக்கலும் இருக்காது.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜிம்பாப்வே நாட்டில் அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2-வது வாரத்தில் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. பிறகு ஜூன் மாதத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன.

    தற்போது இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்ததாக இங்கிலாந்து கூறுகிறது.

    தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதனால் தற்போது மீண்டும் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    செஞ்சூரியனின் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை முதல் இன்னிங்சில் 157 ரன்னில் சுருண்டது.
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் இன்று செஞ்சூரியனில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    கருணாரத்னே, குசால் பேரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2 ரன் எடுத்த நிலையில் கருணாரத்னே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திரிமானே 17 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 0 ரன்னிலும் வெளியேறினர்.

    அதன்பின் அன்ரிச் நோர்ஜோ அபாரமாக பந்து வீசினார். குசால் பேரேரா 67 பந்தில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் தென்ஆப்பிரிக்கா 157 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    தென்ஆப்பிரிக்கா அணியின் அன்ரிச் நோர்ஜோ 14.3 ஓவர்களில் 56 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.
    ஜப்பான் பேட்மிண்டன் வீரர் கென்டோ மொமொட்டாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் தாய்லாந்து ஓபனில் இருந்து அந்நாட்டின் ஒட்டுமொத்த வீரர்களும் விலகியுள்ளனர்.
    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் வருகிற 19-ந்தேதியில் இருந்து 24-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்கான நம்பர் ஒன் வீரரான கென்டோ ஜப்பான் வீரர் மொமோட்டோ, சக வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் தாய்லாந்து செல்வதற்காக ஜப்பான் விமான நிலையம் சென்றார்.

    அப்போது கென்டோவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் பாசிட்டிவ் முடிவு வந்தது. ஆனால் அவருடன் வந்த மற்ற 22 வீரர்களுக்கும் கொரோனா இல்லை. இருந்தாலும் ஜப்பான் பேட்மிண்டன் சங்கம் ஒட்டுமொத்த வீரர்களும் தொடரில் இருந்து விலக இருப்பதாக தெரிவித்துள்ளது.

    கென்டோ கடந்த வருடம் கார் விபத்தில் சிக்கினார். அதன்பின் தற்போதுதான் வெளிநாடு சென்று விளையாட இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ரோகித் சர்மா உள்பட ஐந்து வீரர்கள் மீது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. துபாயில் இருந்து ஆஸ்திரேலியா சென்றதும் 14 நாட்கள் கோரன்டைனை இந்திய அணி வீரர்கள் கடைபிடித்தனர். அதன்பின் ஆஸ்திரேலிய நாட்டின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தால் போதுமானது என்று கூறப்பட்டது.

    ரெஸ்டாரன்ட் சென்றால் அறைகளில் அமர்ந்து சாப்பிடக்கூடாது. வெளியில் சென்றால் மாஸ்க் அணிய வேண்டும் என்பதை கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியை சேர்ந்த ரோகித் சர்மா, ஷுப்மான் கில், ரிஷப் பண்ட், நவ்தீப் சைனி, பிரித்வி ஷா ஆகியோர் புத்தாண்டை முன்னிட்டு மெல்போர்னில் உள்ள ஒரு ரெஸ்டாரன்ட் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் பூட்டிய அறைக்குள் இருந்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலியும், ஹர்திக் பாண்ட்யாவும் சிட்னி நகரில் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதாக ஆஸ்திரேலியாவின் சிட்னி மார்னிங் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது.

    இருவரும் சிட்னியில் உள்ள பேபி ஷாப் சென்றுள்ளனர். அப்போது இருவரும் ரசிகை ஒருவருடன் போட்டோ எடுத்துள்ளனர். அப்போது இருவரும் மாஸ்க் அணியவில்லை. இதனால் அவர்களும் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்ற சர்ச்சை எழும்பியுள்ளது.
    இலங்கைக்கு எதிரான 2-வது போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இருந்தும், ரபடா ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்படவில்லை.
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையில் இரண்ட போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திர பந்து வீச்சாளர் ரபடா இடம் பெறவில்லை.

    2-வது போட்டியில் விளையாட அணியில் சேர்க்கப்பட்டார். இன்று 2-வது போட்டி தொடங்கியது. தென்ஆப்பிரிக்கா ஆடும் லெவன் அணியில் ரபடா சேர்க்கப்படவில்லை. இது அனைவரும் ஆச்சரியத்தை கொடுத்தது.

    ஆனால், அடுத்து ஆஸ்திரேலியா தொடக்கு சிறப்பான வகையில் உடற்தகுதி பெறுவதற்காகவே அணியில் சேர்க்கப்படவில்லை என்று கேப்டன் குயிண்டான் டி காக் தெரிவித்துள்ளார்.

    தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் பேட்ஸ்மேன் கிப்ஸ், பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் கராச்சி கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. கடந்த வருடம் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் பாகிஸ்தான் சூப்பர் லீக் நடைபெற்றது. கொரேனா வைரஸ் தொற்று காரணமாக நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டடு பின்னர் நடத்தப்பட்டது.

    பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடும் அணிகளில் ஒன்று கராச்சி கிங்ஸ். இந்த அணி தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் பேட்ஸ்மேன் கிப்ஸை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.
    இந்தியாவிற்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீஸ் ஸ்மித்திற்கு டேவிட் வார்னர் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் ஸ்டீவ் ஸ்மித் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடிலெய்டு டெஸ்டில் 1, 1* ரன்களும், மெல்போர்ன் டெஸ்டில் 0, 8 ரன்களும் அடித்தார். ஸ்டீவ் ஸ்மித் ஃபார் இழந்திருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பாதகமாக இருக்கிறது.

    சிட்னி டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் எல்லோருக்கும் இதேமாதிரியான நிலை ஏற்படும் என்று என்று டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

    மேலும், இதுகுறித்து டேவிட் வார்னர் கூறுகையில் ‘‘ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த ஸ்டீவ் ஸ்மித்தை, கேன் வில்லியம்சன் பின்னுக்குத்தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார். ஆனால், நீங்கள் அவருடைய சராசரியை பார்த்தீர்கள் என்றால், ஸ்டீவ் ஸ்மித் 60-க்கு மேல் வைத்துள்ளார்.

    ஒவ்வொருவருக்கும் லேசான ஃபார்ம் இழப்பு ஏற்படும். எனக்குக்கூட 2019 ஆஷஸ் தொடரில் இதே நிலை ஏற்பட்டது. குறிப்பிட்ட அந்த பந்தில் அவுட்டாக்குவதாக இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது. அதற்கான பேட்டிங் பயிற்சி எடுக்கவில்லை என்று சொல்ல முடியாது. வலைப்பயிற்சியில் இதுபோன்று அவுட்டானது கிடையாது. போட்டி இல்லாத நேரத்திலும் ஸ்மித் பயிற்சி மேற்கொண்டுதான் வருகிறார்.’’ என்றார்.
    பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக மீண்டும் கோரன்டைன் விதிமுறையை பின்பற்ற இந்திய அணி விரும்பாததால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20, ஒருநாள் போட்டிகள் முடிந்த நிலையில், தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா சென்றபோது 14 நாட்கள் கோரன்டைனில் இருந்தது. அதன்பின் கிரிக்கெட்டில் விளையாடியது.

    3-வது போட்டி சிட்னியில் நடக்கிறது. சிட்னி போட்டி முடிந்த பின்னர், 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் நடக்கிறது. பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம் குயின்ஸ்லாந்து மைதானத்தில் நடக்க இருக்கிறது.

    தற்போது கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் கோரன்டைன் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அம்மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    இந்திய அணி துபாயில் 14 நாட்களும், அதன்பின் ஆஸ்திரேலியா சென்ற பின்னர் அங்கு 14 நாட்களும் கோரன்டைனில் இருந்தது. ஆஸ்திரேலியாவில் இருந்து தொடரை முடித்து சொந்த நாடு திரும்புவதற்கு முன், இன்னொரு முறை கோரன்டைனில் இருக்க இந்திய அணி விரும்பவில்லை. இதனால் போட்டியை சிட்னியிலேயே நடத்த இந்திய அணி வற்புறுத்தியுள்ளது.

    இந்த நிலையில் குயின்ஸ்லாந்து சுகாதாரத்துறை அமைச்சர் ரோஸ் பேட்ஸ் கூறுகையில் ‘‘இந்திய கிரிக்கெட் அணி கோரன்டைன் விதிமுறையை எளிதாக்க கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் குயின்ஸ்லாந்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிடில், இங்கே வரவேண்டாம்’’ என்றார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி இருதயத்தில் அடைப்பு நீக்கப்பட்ட நிலையில் அவர் 24 மணி நேரம் கண்காணிப்பில் உள்ளார்.

    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக உள்ளார்.

    இந்த நிலையில் 48 வயதான கங்குலிக்கு நேற்று திடீரென லேசான மாரடைப்பு ஏற்பட்டது. உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது இருதயத்துக்கு செல்லும் ரத்தகுழாயில் 3 அடைப்புகள் இருந்தது தெரியவந்தது. இதில் ஒரு அடைப்பு 90 சதவீத அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

    இதைத்தொடர்ந்து உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. இதில் ஒரு அடைப்பு நீக்கப்பட்டது. கங்குலியின் உடல்நலம் தொடர்பாக டாக்டர் ஒருவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கங்குலிக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் 24 மணி நேரம் கண்காணிப்பில் உள்ளார். அவரது இருதயத்தில் தற்போது 2 அடைப்புகள் உள்ளன. அதற்கான சிகிச்சை அவருக்கு அளிக்கப்படும்.

    அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாளை ஆலோசிக்கப்படும். அவர் அபாய கட்டத்தில் இல்லை. நன்றாக பேசுகிறார். இன்று காலை கங்குலிக்கு வழக்கமான இ.சி.ஜி. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உட்லான்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கங்குலியை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேரில் சென்று நலம் விசாரித்தார்.

    பின்னர் மருத்துவமனைக்கு வெளியே அவர் நிருபர்களிடம் கூறும்போது, கங்குலி நலமாக உள்ளார். என்னுடைய உடல்நலம் குறித்து அவர் கேட்டறிந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றி என்றார்.

    இதேபோல மேற்கு வங்காள கவர்னர் ஜக்தீப்பும் தனது மனைவியுடன் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று கங்குலியிடம் நலம் விசாரித்தார்.

    அவர் விரைந்து குணமடைய வேண்டுமென்று கிரிக்கெட் வீரர்கள் தற்போது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

    ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டியின் நாளை நடக்கவுள்ள ஆட்டத்தில் சென்னை அணி ஐதராபாத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவா:

    11 அணிகள் பங்கேற்கும் 7-வது ஐ.எஸ்.எல். (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.

    2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்செட்பூரை தோற்கடித்தது. கேரளா பிளாஸ்டர்சுடன் மோதிய 2-வது ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.

    3-வது போட்டியில் பெங்களூருவிடம் 0-1 என்ற கணக்கிலும், 4-வது ஆட்டத்தில் மும்பையுடன் 1-2 என்ற கணக்கிலும் தோற்றது. 5-வது போட்டி யில் கவுகாத்தி அணியுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது.

    6-வது ஆட்டத்தில் கோவாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. 7-வது போட்டியில் ஈஸ்ட் பெங்காலுடன் 2-2 என்ற கணக்கிலும், 8-வது ஆட் டத்தில் ஏ.டி.கே.மோகன் பாகனுடன் கோல் எதுவு மின்றியும் டிரா செய்தது.

    சென்னையின் எப்.சி. 8 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 4 டிரா, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

    சென்னையின் எப்.சி. 9-வது ஆட்டத்தில் ஐதராபாத் அணியை நாளை இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது.

    சென்னை அணி ஐதராபாத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதன் மூலம் சென்னை அணி முன்னேற்றம் அடையும். ஐதராபாத் அணி 2 வெற்றி, 3 டிரா, 3 தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.

    நேற்று நடந்த 44-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி 2-0 என்ற கோல் கணக்கில் கேரளாவை தோற்கடித்தது. அந்த அணி 6 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 19 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

    மோகன் பகான் 17 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், கோவா 14 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஜாம்செட்பூர் 13 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளன.

    இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. ஒரு ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - ஒடிசா (மாலை 5 மணி), மற்றொரு ஆட்டத்தில் மோகன் பகான் -கவுகாத்தி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 297 ரன்கள் எடுத்தது.

    கிறிஸ்ட்சர்ச்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    2 டெஸ்ட் போட்டி தொடரில் மவுண்ட் மவுக்கானுவில் நடந்த முதல் டெஸ்டில் நியூசிலாந்து 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் பாகிஸ்தான் திணறியது. 83 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது.

    தொடக்க வீரர் ஷான் மசூத் ரன் எதுவும் எடுக்காமல் சவுத்தி பந்தில் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்கவீரர் ஆபித் அலி (25 ரன்), ஹாரிஸ் சோகைல் (ஒரு ரன்), பவாத் ஆலம் (2 ரன்) ஆகியோரது விக்கெட்டை ஜேமிசன் வீழ்த்தினார்.

    5-வது விக்கெட்டான அசார் அலி- கேப்டன் முகமது ரிஸ்வான் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. சிறப்பாக ஆடிய ரிஸ்வான் 61 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரது விக்கெட்டையும் ஜேமிசனே கைப்பற்றினார்.

    அடுத்து பஹீம் அஸ்ரப் களம் வந்தார். மறுமுனையில் இருந்தனர் அசார் அலி தொடர்ந்து சிறப்பாக ஆடினார். தேனீர் இடைவேளையின் போது பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன் எடுத்தது. அசார் அலி 90 ரன்னிலும், அஸ்ரப் 26 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

    இதனையடுத்து மீண்டும் களமிறங்கிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தது. அசார் 93 ரன்னிலும் 48, ரன்னிலும் வெளியேறினார். 83.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 297 ரன்கள் எடுத்தது.

    நியூசிலாந்து அணி தரப்பில் ஜெமிசன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சவுத்தி, போல்ட் தலா 2 விக்கெட்டுகளையும் ஹெண்ட்ரி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    ×