search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்பாப்வே கிரிக்கெட்
    X
    ஜம்பாப்வே கிரிக்கெட்

    ஜிம்பாப்வேயில் அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளும் நிறுத்தி வைப்பு

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜிம்பாப்வே நாட்டில் அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2-வது வாரத்தில் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. பிறகு ஜூன் மாதத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன.

    தற்போது இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்ததாக இங்கிலாந்து கூறுகிறது.

    தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதனால் தற்போது மீண்டும் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    Next Story
    ×