search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா உள்பட ஐந்து பேர்
    X
    ரோகித் சர்மா உள்பட ஐந்து பேர்

    ரோகித் சர்மா உள்பட ஐந்து பேரும் சக வீரர்களுடன் இணைந்தே சிட்னி செல்கிறார்கள்

    ரோகித் சர்மா உள்பட ஐந்து பேர் மீது பாதுகாப்பு வளையத்தை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தாலும், சக வீரர்களுடன் இணைந்தே சிட்னி செல்ல இருக்கிறார்கள்.
    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. பயோ-பாதுகாப்பு வளையத்திற்குள் வீரர்கள் கொண்டு வரப்பட்டு கொரோனா தாக்காத வண்ணம் எச்சரிக்கையுடன் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில்தான் ரோகித் சர்மா, ஷுப்மன் கில், பிரித்வி ஷா, நவ்தீப் சைனி, ரிஷப் பண்ட் ஆகியோர் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக புகார் எழுந்துள்ளது. முதற்கட்டமாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில் குற்றச்சாட்டை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. நாளை மெல்போர்னில் இருந்து இரு அணி வீரர்களும் சிட்னி செல்கிறார்கள்.

    இரண்டு நாட்கள் தீவிர பயிற்சிக்குப்பின் 7-ந்தேதி 3-வது டெஸ்டில் விளையாடுகிறார்கள். இந்திய அணியின் சக வீரர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப்களுடன் ரோகித் சர்மா உள்பட ஐந்து பேரும் செல்வார்களா? என்ற கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில் ஐந்துபேரும் சக வீரர்களுடன் இணைந்தே சிட்னி செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித் சர்மா, ஷுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் 3-வது டெஸ்டில் பங்கேற்பதில் எந்த சிக்கலும் இருக்காது.
    Next Story
    ×