என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இலங்கை அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
    டாக்கா:

    வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, 48.1 ஓவர்களில் வங்காளதேசம் அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    கடந்த போட்டியைப் போலவே அந்த அணியின் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் அபாரமாக ஆடி சதமடித்து 125 ரன்னில் ஆட்டமிழந்தார். மஹமதுல்லா 41 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் லித்தன் தாஸ் 25 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை அணி சார்பில் துஷ்மந்தா சமீரா, லஷ்மண் சண்டகன் தலா 3 விக்கெட்டும், இசுரு உடானா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. வங்காளதேச பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியவில்லை.

    3 விக்கெட் வீழ்த்திய மெஹிதி ஹசன்

    இலங்கை அணி 40 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 140  ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. அந்த அணியில் யாரும் நிலைத்து நிற்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர் தனுஷ்கா குணதிலகா அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, டக்வொர்த் லுயிஸ் விதிப்படி வங்காளதேசம் 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    வங்காளதேசம் அணி சார்பில் மெஹிதி ஹசன், முஷ்டபிசுர் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆட்ட நாயகன் விருது முஷ்பிகுர் ரஹிமுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை வங்காளதேசம் 2-0 என கைப்பற்றியுள்ளது.
    கொலை வழக்கில் சுஷில்குமார் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர் ரெயில்வே பணியில் இருந்து நீக்கப்படுவதாக வடக்கு ரெயில்வே இன்று அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன் சாகர் தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தான்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பினர்.

    மோசமான காயங்களுடன் கிடந்த சாகர் தான்கட்டை மற்றொரு நண்பர் சோனு மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். ஆனால், சிகிச்சைப் பலன் அளிக்காமல் சாகர் உயிரிழந்தார். இதையடுத்து, சாகர் தான்கெட் உயிரிழந்ததைக் கொலை வழக்காக போலீஸார் மாற்றி மல்யுத்த வீரர் சுஷில் குமாரைத் தேடி வந்தனர்.

    கடந்த இரு வாரங்களாக தனிப்படை அமைத்து சுஷில் குமாரை ஹரியாணா, உத்தரகாண்ட் எனப் பல்வேறு மாநிலங்களில் தேடி வந்தனர். இதற்கிடையே, மல்யுத்த வீரர் சுஷில் குமார் இருப்பிடம் குறித்து யாரேனும் தகவல் அளித்தால் அவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என டெல்லி போலீசார் அறிவித்தனர்.

    இதற்கிடையில், ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்றுள்ள சுஷில் குமார் தீவிர தேடுதலுக்கு பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுஷில் குமாரை 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து சுஷில் குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், ஒலிம்பிக் வெற்றியாளரான சுஷில்குமார் இந்திய ரெயில்வேயில் பணியாற்றி வந்தார். வடக்கு ரெயில்வேயில் மூத்த வணிக மேலாளராக சுஷில்குமார் பணியாற்றி வந்தார்.

    தற்போது, கொலை வழக்கில் சுஷில்குமார் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர் ரெயில்வே பணியில் இருந்து நீக்கப்படுவதாக வடக்கு ரெயில்வே இன்று அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுஷில்குமார் பணிநீக்கம் செய்யப்படுவதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
    கிரிக்கெட் உலகில் மிகவும் பணக்கார வாரியமாக வலம் வரும் பிசிசிஐ, வீரர்களுக்கு சம்பளத்தை வாரி இறைக்கிறது. அதன்படி, கிரிக்கெட் கேப்டன்களில் அதிகம் சம்பளம் பெறும் நபராக விராட் கோலியே இருப்பார் என பலரும் நினைத்திருக்கலாம்.


    உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களை பட்டியலிட்டால் அதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயர் கட்டாயம் இடம்பெறும். அந்த அளவுக்கு புகழின் உச்சத்தில் இருக்கும் கோலிக்கு, கிரிக்கெட் விளையாடுவதன் மூலம் மட்டும் இல்லாது விளம்பரம் மூலமும் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறார்.  

    கிரிக்கெட் உலகில் மிகவும் பணக்கார வாரியமாக வலம் வரும் பிசிசிஐ, வீரர்களுக்கு சம்பளத்தை வாரி இறைக்கிறது. அதன்படி, கிரிக்கெட் கேப்டன்களில் அதிகம் சம்பளம் பெறும் நபராக விராட் கோலியே இருப்பார் என பலரும் நினைத்திருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல.  இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட், விராட் கோலியை விட அதிக  சம்பளம் பெறுகிறார். இந்தப்பட்டியலில் விராட் கோலி, 2 ஆம் இடத்திலேயே உள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, பிசிசிஐயின் ஏ பிளஸ் கிரேடு பட்டியலில் உள்ளார். அவருக்கு ஆண்டு ஊதியமாக ரூ.7 கோடியை பிசிசிஐ வழங்குகிறது. அதேவேளையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட். ஆண்டுக்கு 7,00,000 பவுண்டுகளை சம்பளமாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வழங்குகிறது. இது இந்திய மதிப்பில் ரூ.7.22 கோடியாகும்.  

    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் சம்பளமே விராட் கோலியை விட அதிகம் என்பது வியக்கும்படியாக உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் ஆண்டுக்கு ரூ.5 கோடி சம்பளமாக பெறுகிறார்.  

    கடந்த 2020- ஆம் ஆண்டில் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக அளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் விராட் கோலி இடம் பிடித்து இருந்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் விராட் கோலி, அந்த அணியிடம் இருந்து  ரூ.17 கோடியை பெறுகிறார்.
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் இந்திய அணியை சேர்ந்த 20 வீரர்கள், மாற்று வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 14 நாட்கள் கொண்ட கொரோனா பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி உள்ளது.

    மும்பை:

    வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வருகிற 2-ந் தேதி இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது.

    இந்திய அணி இங்கிலாந்தில் 6 டெஸ்டில் விளையாடுகிறது. முதலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துடன் விளையாடுகிறது. இந்த போட்டி ஜூன் 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை சவுத்தம்டனில் நடக்கிறது.

    அதன்பிறகு இந்திய அணி இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் ஆடுகிறது. ஆகஸ்டு 4-ந் தேதி முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை நடைபெறும்.

    இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் இந்திய அணியை சேர்ந்த 20 வீரர்கள், மாற்று வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 14 நாட்கள் கொண்ட கொரோனா பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி உள்ளது.

    இந்த தனிமைப்படுத்தல் காலமானது கடந்த 20-ந் தேதி தொடங்கியது. அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், மயங்க் அகர்வால் உள்ளிட்ட வீரர்கள் ஏற்கனவே சிறப்பு விமானம் மூலம் மும்பை சென்று கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இணைந்தனர்.

    இந்தநிலையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா மும்பை சென்று அணியோடு இணைந்து கொண்டார். 3 ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகே இந்திய வீரர்கள் மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வீரர்கள் வரிசையில் தற்போது ஜடேஜாவும் இணைந்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

    வீரர்கள் பாதுகாப்பு வளையத்தில் இணைந்த பின்னர் மேலும் 3 முறை பரிசோதனை எடுக்கப்படும். இந்த வகையில் லண்டனுக்கு பயணமாகும் முன்பு இந்திய வீரர்கள் 6 முறை பரிசோதனை செய்து கொண்டதற்கான முடிவுகளை எடுத்துச் செல்வார்கள்.

    இங்கிலாந்து புறப்படும் முன்பு வீரர்களுக்கு முதல் கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தப்படும். இங்கிலாந்து சென்றடைந்த பிறகும் இந்திய வீரர்கள் அங்கு தனிமையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யுமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்து இருந்தது.

    லண்டன்:

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே ஒத்தி வைக்கப்பட்டது. வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் 29 ஆட்டங்கள் நடந்த நிலையில் போட்டி நிறுத்தப்பட்டது.

    ஐ.பி.எல். போட்டியில் இன்னும் 31 ஆட்டங்களை நடத்த வேண்டும். இந்த போட்டிகளை உலக கோப்பைக்கு முன்பு செப்டம்பர்-அக்டோபரில் நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

    ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    பிசிசிஐ

    இதற்கிடையே ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்துவதற்கேற்ற வகையில் இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யுமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்து இருந்தது.

    இந்திய கிரிக்கெட் அணி 6 டெஸ்டில் விளையாடுவதற்காக வருகிற 2-ந்தேதி இங்கிலாந்து செல்கிறது. முதலில் நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆடுகிறது.

    அதைத்தொடர்ந்து இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் விளையாடுகிறது. ஆகஸ்டு 4-ந் தேதி முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. ஆகஸ்டு 4-ல் தொடங்கும் டெஸ்டை முன்னதாக ஆரம்பிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

    செப்டம்பர் 14-ந் தேதி முடிவடையும் டெஸ்ட் தொடரை செப்டம்பர் 7-க்குள் முடிக்குமாறும் கேட்டுக்கொண்டு இருந்தது.

    ஆனால் இதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. போட்டியை ஒளிபரப்பும் நிறுவனத்தால் அட்டவணையை மாற்றி அமைக்க விரும்பவில்லை. இதனால் இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி அட்டவணையில் மாற்றம் இருக்காது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தெரியவில்லை. ஆனாலும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நாட்டிங்காமிலும் (ஆக 4-8), இரண்டாவது டெஸ்ட் லண்டனிலும் (ஆக 12-16), மூன்றாவது டெஸ்ட் லீட்சிலும் (ஆக25-29), நான்காவது டெஸ்ட் லண்டனிலும் (செப் 2-6), கடைசி டெஸ்ட் மான்செஸ்டரிலும் (செப்10-14) நடக்கிறது. 

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் உள்பட 17 நாடுகளை சேர்ந்த 150 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
    துபாய்:

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நேற்று தொடங்கியது. 31-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் உள்பட 17 நாடுகளை சேர்ந்த 150 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தொடக்க நாளில் நடந்த ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் முகமது ஹூசாமுதீன் 5-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் 19 வயது மக்முத் சபிர்கானை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.
    இந்தியாவின் பிரபல முன்னாள் ஓட்டப்பந்தய வீரரான மில்கா சிங் (வயது 91) கடந்த புதன்கிழமை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது.
    சண்டிகார்:

    இந்தியாவின் பிரபல முன்னாள் ஓட்டப்பந்தய வீரரான மில்கா சிங் (வயது 91) கடந்த புதன்கிழமை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது. இதனை அடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் மொகாலியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து அவரது மகனும், கோல்ப் வீரருமான ஜீவ் மில்கா சிங் கூறுகையில், ‘பலவீனமாக இருப்பதாலும், சரியாக சாப்பிடாததாலும் முன்னெச்சரிக்கையாக எனது தந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கிறோம். அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. இருப்பினும் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதி அனுமதித்து உள்ளோம். அவர் விரைவில் குணமடைவார்’ என்றார்.
    இங்கிலாந்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த மாதம் 18-ந்தேதி தொடங்குகிறது. இப்போட்டி இங்கிலாந்தில் நடக்கிறது.

    இரண்டு அணிகளுக்கும் இங்கிலாந்து பொதுவான இடமாக இருந்தாலும், இங்கிலாந்து சூழ்நிலை ஸ்விங் பந்திற்கு சாதகமாக இருக்கும். நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி, கைல் ஜேமிசன் ஆகியோர் பந்தை சிறப்பாக ஸ்விங் செய்யக் கூடியவர்கள். இதனால் இந்தியாவுக்கு இறுதிப் போட்டி சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் மிகவும் அபாயகரமானவர் என்று நியூசிலாந்து அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஜர்கென்சன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜர்கென்சன் கூறுகையில் ‘‘ரிஷப் பண்ட் மிகவும் அபாயகரமானவர். போட்டியை தனி நபரால் மாற்றக்கூடிய வல்லமை படைத்தவர். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், இங்கிலாந்துக்கு எதிராகவும் எப்படி விளையாடினார் என்பதை நாம் பார்த்தோம். மிகவும் நேர்மறையான சிந்தனையுடன் விளையாடக் கூடியவர். ஆனால் அவர் விக்கெட்டை வீழ்த்தக்கூடிய சாத்தியமான வாய்ப்புகள் வரும்.

    கைல் ஜேமிசன்

    எங்களுடைய பந்து வீச்சாளர்கள் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது அவசியம். ரிஷப் பண்ட் ரன்கள் குவிக்கும்போது, பொறுமையாக இருந்து செயல்பட வேண்டும். அது கஷ்டமாகத்தான் இருக்கும். அவர் அதிரடியை கட்டுப்படுத்துவது கடினம். இதை நாங்கள் மனதில் வைத்திருப்போம்.

    விராட் கோலியும், ஜேமிசனும் ஆர்சிபி-க்காக விளையாடும்போது இறுதிப் போட்டி குறித்து சில கருத்துக்களை பகிர்ந்திருப்பார்கள். ஆகவே, சுவாரஸ்யமாக நேரங்கள் இருக்கும். கைல் ஜேமிசன் பந்து வீச்சை பார்க்க விருந்தாக அமையும்’’ என்றார்.
    இந்தியாவில் 2-வது அலையால் பாதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் மிக இன்றியமையாததாக உள்ளதால் மற்ற நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டின.
    இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மிகவும் தீவிரமாக இருந்து வருகிறது. 2-வது வாரத்திற்குப் பிறகு இந்தியாவில் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தண்டியது. இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடு மிக அதிக அளவில் ஏற்பட்டது.

    இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்பட ஏராளமான நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன் தொடர்பான உபகரணங்கள் வழங்கி உதவி செய்தன. இந்த நிலையில் பிசிசிஐ 10 லிட்டர் கொள்ளவு கொண்ட 2000 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குகிறது.

    அடுத்த சில மாதங்களில் பசிசிஐ நாட்டின் எல்லா பகுதிகளுக்கும், தேவையிருக்கும் இடத்திற்கு இதை வழங்க இருக்கிறது. ஏற்கனவே சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி, ரிஷப் பண்ட், தவான், இர்பான் பதான், பாண்ட்யா சகோதரர்கள் போன்ற கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவிற்கு உதவியுள்ளனர்.
    ஐபிஎல் போட்டியின்போது வயிற்று வலி காரணமாக குடல்வால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட கேஎல் ராகுல், அதில் இருந்து குணமடைந்துள்ளார்.
    இந்திய ஒயிட்-பால் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பவர் கேஎல் ராகுல். டெஸ்ட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக இருந்த கேஎல் ராகுல் மோசமாக விளையாடிதன் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

    தற்போது டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். என்றாலும் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. ஐபிஎல் தொடரின்போது வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். அவருக்கு குடல்வால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    இதற்கிடையில் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். ஜூன் 2-ந்தேதி இந்திய அணி இங்கிலாந்து செல்கிறது. அதற்குள் உடற்தகுதி பெற்றுவிட்டால் அணியுடன் இங்கிலாந்து செல்வார் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது.

    கேஎல் ராகுல்

    இந்த நிலையில் காயம் குணமாகி சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் நிச்சயமாக இங்கிலாந்து செல்வார் என்று ராகுலுக்கு நெருக்கமானவர் மூலம் செய்தி கசிந்துள்ளது.

    இங்கிலாந்து தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒன்றரை மாத காலம் இருக்கிறது. இதற்கு முன் காயம் அடைந்த சகா ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். அங்கு அணி வீரர்களுடன் இணைந்து வீரர்கள் குணமடைவதற்கான பயிற்சியை மேற்கொண்டார் எனவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்ற இளம் பேட்ஸ்மேன் ஷுப்மான் கில் முக்கிய காரணமாக இருந்தார் என்றால் மிகையாகாது.
    இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில். ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மெல்போர்ன் மைதானத்தில் அறிமுகமான ஷுப்மான் கில் 259 ரன்கள் குவித்தார். பிரிஸ்பேன் ஆடுகளத்தில் 4-வது இன்னிங்சில் 91 ரன்கள் விளாசி இந்தியா தொடரை 2-1 எனக் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார்.

    இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் என ஆறு போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்த ஆறு போட்டிக்கான இந்திய அணியில் ஷுப்மான் கில் இடம் பிடித்துள்ளார். அவர் இங்கிலாந்து மண்ணில் விளையாடுவதற்கு ஆர்வமாக உள்ளார். ஆனால் இங்கிலாந்து சூழ்நிலை (condistions) பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும்.

    இந்த நிலையில் இங்கிலாந்து ஆடுகளத்தில் ஒரு தொடக்க பேட்ஸ்மேன் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து ஷுப்மான் தெரிவித்துள்ளார்.

    ஷுப்மான கில் இங்கிலாந்தில் விளையாடுவது குறித்து கூறுகையில் ‘‘ஒரு தொடக்க வீரராக, இங்கிலாந்தில் மட்டுமல்ல எங்கு விளையாடினாலும், ஒருநாளில் விளையாடப்படும் மூன்று செசன்களில் எப்படி விளையாட வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு செசன்களிலும் விளையாடுவது முக்கியமானது. இங்கிலாந்தில் பார்த்தீர்கள் என்றால், எப்போதெல்லாம் மேகமூட்டமாக இருக்குமோ, அப்போதெல்லாம் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும். சூரியன் வெளியே வந்து வெயில் அடிக்கும்போது, ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். தொடக்க வீரர் இந்த சூழ்நிலையை மதிப்பிடுவது அவசியமானது.

    விராட் கோலியுடன் ஷுப்மான் கில்

    எங்களுடைய ஆட்டம் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக இருந்தது. கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். சொந்த மண்ணில் அபாரம். இதைவிட நாங்கள் நாங்கள் ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு சிறப்பாக தயாராக முடியாது என்று நான் நினைக்கிறென்’’ என்றார்.
    ஐ.பி.எல். போட்டி பாதியில் தள்ளி வைக்கப்பட்டது. 29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது. இன்னும் 31 ஆட்டங்கள் நடத்தப்பட வேண்டி உள்ளது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ‘இந்தியன் பிரிமீயர் லீக்’ என்று அழைக்கப்படும் இந்த போட்டிக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. ஆண்டுதோறும் இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்பட்டு வந்தது.

    ஐ.பி.எல். போட்டி வர்த்தக ரீதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த போட்டியின் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மிகப்பெரிய அளவில் வருமானம் கிடைத்தது.

    கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபியில் செப்டம்பர் 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை நடந்தது.

    ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் காரணமாக அங்கு ஐ.பி.எல். போட்டிகளின் ஒரு பகுதி நடத்தப்பட்டு இருந்தது.

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந் தேதி தொடங்கியது. சென்னை, மும்பையில் போட்டி முடிந்த நிலையில் டெல்லி, அகமதாபாத்தில் ஆட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் போது வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஐ.பி.எல். போட்டி பாதியில் தள்ளி வைக்கப்பட்டது. 29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது. இன்னும் 31 ஆட்டங்கள் நடத்தப்பட வேண்டி உள்ளது.

    எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பு நடத்திட வேண்டும் என்பதில் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக உள்ளது. உலக கோப்பை போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இதனால் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை செப்டம்பரில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இங்கிலாந்து, இலங்கை நாடுகளும் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்த விருப்பம் தெரிவித்து உள்ளன.

    இதற்கிடையே ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டத்துக்காக டெஸ்ட் தொடர் அட்டவணையை மாற்றி அமைக்குமாறு இங்கிலாந்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வருகிற 2-ந் தேதி இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது. இந்திய அணி முதலில் நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் (ஜூன் 18 முதல் 22) விளையாடுகிறது.

    அதன்பிறகு இந்திய அணி இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் ஆடுகிறது. ஆகஸ்டு 4 முதல் செப்டம்பர் 14 வரை இந்த டெஸ்ட் தொடர் நடைபெறும். ஐ.பி.எல். போட்டிக்காக செப்டம்பர் 7-ந் தேதிக்குள் டெஸ்ட் போட்டிகளை முடிக்குமாறு இங்கிலாந்திடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    2-வது டெஸ்ட்டுக்கும், 3-வது போட்டிக்கும் இடையே அதிக அளவு கால இடைவெளி இருப்பதால் இங்கிலாந்து போட்டி அட்டவணையை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை செப்டம்பர் 15-ந் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்க கிரிக்கெட் வாரியம் இறுதி முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அக்டோபர் 15-ந் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு உள்ளது. வருகிற 29-ந் தேதி நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரியம் சிறப்பு பொதுக்குழுவில் இது குறித்து இறுதி முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

    ஐ.பி.எல். எஞ்சிய போட்டிகள் முடிந்த பிறகு 20 ஓவர் உலக கோப்பை நடத்தப்படுகிறது. இந்த போட்டி இந்தியாவில் நடைபெறுமா என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். கொரோனா பாதிப்பு குறைந்தால் மட்டுமே இங்கு நடத்தப்படும்.

    ஒருவேளை பாதிப்பு தொடர்ந்து நீடிக்குமானால் 20 ஓவர் உலக கோப்பையை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது.

    ×