என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரபல ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி
Byமாலை மலர்25 May 2021 12:14 AM GMT (Updated: 25 May 2021 12:14 AM GMT)
இந்தியாவின் பிரபல முன்னாள் ஓட்டப்பந்தய வீரரான மில்கா சிங் (வயது 91) கடந்த புதன்கிழமை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது.
சண்டிகார்:
இந்தியாவின் பிரபல முன்னாள் ஓட்டப்பந்தய வீரரான மில்கா சிங் (வயது 91) கடந்த புதன்கிழமை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது. இதனை அடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் மொகாலியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அவரது மகனும், கோல்ப் வீரருமான ஜீவ் மில்கா சிங் கூறுகையில், ‘பலவீனமாக இருப்பதாலும், சரியாக சாப்பிடாததாலும் முன்னெச்சரிக்கையாக எனது தந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கிறோம். அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. இருப்பினும் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதி அனுமதித்து உள்ளோம். அவர் விரைவில் குணமடைவார்’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X