என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 275 ரன்னில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து 2-வது இன்னிங்சை 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
    இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 378 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் ரத்து செய்யப்பட்டது.

    4--வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தில் 275 ரன்னில் சுருண்டது. 103 ரன்கள் முன்னிலைப் பெற்ற நியூசிலாந்து நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய நியூசிலா்நது 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    ஒட்டுமொத்தமாக நியூசிலாந்து அணி 272 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இங்கிலாந்துக்கு 273 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால் 75 ஓவர்கள் மட்டுமே உள்ளது.

    இங்கிலாந்து 75 ஓவர் வரை தாக்குப்பிடித்தால் போட்டி டிரா ஆகும். ஒருவேளை அதிரடியாக விளையாடிவிட்டால் வெற்றி பெற வாய்ப்புள்ளது. போட்டி டிராவில் முடியவே வாய்ப்புள்ளது.
    ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் ஒன்றொன்று விட்டுக்கொடுக்காமல் விளையாடும் என்று நியூசிலாந்து முன்னாள் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் வருகிற 18-ந்தேதி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இங்கிலாந்து சீதோஷ்ணநிலை நியூசிலாந்து வீரர்களுக்கு சாதகமாக இருக்கும். காலையில் ஆடுகள் ஸ்விங் பந்து வீச்சிற்கு ஒத்துழைக்கும். டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி, கைல் ஜேமிசன் ஆகியோர் சிறப்பாக பந்தை ஸ்விங் செய்யக் கூடியவர்கள்.

    இந்தியாவில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரகானே போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்து பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது கோடிக்கணக்கான ரசிகர்கள் கேள்வி.

    இந்த நிலையில் நியூசிலாந்தின் ஸ்விங் பந்து வீச்சை இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் என நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மைக் ஹெசன் கூறுகையில் ‘‘இந்தியா- நியூசிலாந்து அணிகள் பொதுவான இடத்தில் விளையாடினாலும், இரண்டு அணிகளிலும் அடுத்த இரண்டு வாரத்திற்கு காயம் ஏதும் ஏற்பாடாமல் இருந்து முழு அணிகளுடன் களம் இறங்கினால், நாம் சிறந்த போட்டியை காணலாம்.

    நான் முக்கியமாக இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஸ்விங் பந்திற்கு எதிராக எப்படி விளையாடப் போகிறார்கள் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். சவுத்தாம்ப்டனில், புற்கள் நனைந்து பச்சையாக இருக்கும்போது, பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும். இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடுவதை பொறுத்துதான் போட்டியின் ரிசல்ட் இருக்கும்.

    மைன் ஹெசன்

    விராட் கோலி, கேன் வில்லியம்சன் இருவரும் சிறந்த கேப்டன்கள். இருவரும் அவர்களுடைய வித்தியாசமான முறையில் கேப்டன் பணியை செய்து வருகிறார்கள். முக்கியமான நேரத்தில் கேன் வில்லியம்சன் நெருக்கடியை கட்டுப்படுத்தக் கூடியவர். ஆனால் விராட் கோலி எப்போதுமே அணி முன்னோக்கிச் சென்று கொண்டிருக்க வேண்டும் என நினைப்பவர்.

    இருவரைடைய கேப்டன் பணியையும் பரிசோதிக்கக் கூடியது உலக சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம். நாளுக்கு நாள் ஆடுகளத்தின் தன்மை மாறிக் கொண்டே இருக்கும். யுக்தியை எப்படி இருவரும் கையாள்கிறார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்’’ என்றார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் டு பிளிஸ்சிஸ், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஏராளமான வேகப்பந்து வீச்சாளர்களை காண முடிகிறது எனத் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் டு பிளிஸ்சிஸ். சிறப்பாக பேட்டிங் செய்து வரும் டுபிளிஸ்சிஸ் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடுகிறார்.

    இவர் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் குவேட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கொரோனா தொற்றால் பாதி ஆட்டங்களுடன் பிஎஸ்எல் நிறுத்தப்பட்டது. வருகிற 9-ந்தேதி மீதமுள்ள போட்டி தொடங்குகிறது, ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.

    டு பிளிஸ்சிஸ் இந்தப் போட்டியில் விளையாடுகிறார். அவர் இரண்டு தொடரையும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் தரம் சிறப்பாக உள்ளது. இந்தத் தொடரில் விளையாடும் வேகப்பந்து வீச்சாளர்கள் என்னை ஈர்க்கும் வகையில் பந்து வீசி வருகிறார்கள் என்பதை என்னால் கட்டாயமாக சொல்ல முடியும். என்னைப் போன்று தென்ஆப்பிரிக்காவில் இருந்து வருபவர்கள் வேகப்பந்து வீச்சை பார்த்து வளர்ந்திருப்பார்கள். ஏராளமான வீரர்கள் 140 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசுவது என் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

    இந்தியாவில் ஐபிஎல் தொடரை பொறுத்த வரையில், ஏராளமான விதவிதமான சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    ஐபிஎல் தொடர் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. பயோ-பபுள் பாதுகாப்பானது என்று கருதினோம். அதில் எந்த பிரச்சினையும் வரவில்லை. அதன்பின், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விளையாடுவதற்காக செல்லும்போது, சற்று இடைவெளி கிடைக்க, கொரோனா தொடருக்குள் நுழைந்து விட்டதாக கருதுகிறேன்’’ என்றார் டு பிளிஸ்சிஸ்.
    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் ஓட்டலில் தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர்.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இதற்காக இந்திய அணி கடந்த 2-ந்தேதி இரவு இந்தியாவில் இருந்து புறப்பட்டு சென்றது. இங்கிலாந்து சென்றடைந்ததும், சவுத்தாம்ப்டன் மைதானத்தை ஓட்டியுள்ள ஹில்டன் என்ற ஓட்டலில் தங்களை தனிப்பமைப்படுத்திக் கொண்டனர். ஒருவருகொருவர் சந்திக்கக் கூடாது. இணைந்து பயிற்சி மேற்கொள்ளக் கூடாது. மூன்று நாட்கள் ஓட்டல் அறையை விட்டு வெளியேறக்கூடாது. குறிப்பிட்ட நான் முடிவடைந்த பின்னர் ஒன்றிணைந்து பயிற்சி மேற்கொள்ளலாம்.

    இந்த நிலையில் இன்று ஜடேஜா சவுத்தாம்ப்டன் மைதானத்தில் தனியாக பந்து வீசி பயிற்சி மேற்கொண்டார். அதன் படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

    வீரர்கள் ஜிம்மில் பயிற்சி மேற்கொள்ள, பீல்டிங் பயிற்சி எடுக்க வெவ்வேறு நேரத்தில் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் ஒரு நேரத்தில் இணைந்து பயிற்சி மேற்கொள்ளக் கூடாது. இன்றுடன் ரூம் அறை தனிமைப்படுத்துதல் முடிவடைந்து விட்டது. இனிமேல் குறைந்த அளவிலான வீரர்கள் ஒன்றிணைந்து ஜிம்மில் பயிற்சி மேற்கொள்ள முடியும்.
    விராட் கோலி, ரோகித் சர்மா பயிற்சி ஆட்டத்தில் விளையாடாமல் இருப்பது ஐசிசி உலக டெஸ்ட் சாமபியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவர்களுக்கு பாதகமாக இருக்கும் என திலிப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் வருகிற 18-ந்தேதி சவுத்தாம்ப்டனில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன் நியூசிலாந்து அணி இங்கிலாந்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா 4 செசன் பயிற்சி மட்டுமே மேற்கொள்ள இருக்கிறது.

    பயிற்சி ஆட்டம் ஏதுமில்லை. இந்திய அணி ஐபிஎல் போட்டியில் விளையாடிய பின்னர் நேரடியாக டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    இருந்தாலும் போதுமான அளவிற்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடாதது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் தேர்வாளர் திலிப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.

    மேலும், இதுகுறித்து வெங்சர்க்கார் கூறுகையில் ‘‘விராட் கோலி நீண்ட காலமாக சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போதைய நிலையில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்கள் அவர்களுடைய ஆட்டத்திற்கும், இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த வகையிலும், ஏராளமான பெருமையை பெற்றிருப்பார்கள்.


    இருவரும் சிறந்த பார்மில் இருப்பது சிறந்த விசயம்தான். இருந்தாலும், போதுமான பயிற்சி இல்லாதது, இவர்களுடைய சிறந்த லெவல் ஆட்டத்தை பாதிக்கும். இந்தியா சிறந்த அணி. சிறந்த பார்மில் உள்ளது. மிகப்பெரிய அளவில் இல்லாத நியூசிலாந்து அணிக்கு, இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாடுவது சாதகமாக இருக்கும்.

    திலிப் வெங்சர்க்கார்

    இந்தியா ஒன்றிரண்டு போட்டி கிரிக்கெட்டிலாவது விளையாடியிருக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் விளையாடினால், சூழ்நிலைக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக் கொள்ள சாதகமாக இருக்கும்.’’ என்றார்.
    இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டண் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.

    லண்டன்:

    இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டண் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.

    நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 378 ரன் குவித்தது. டிவான் கான்வே இரட்டை சதம் (200ரன்) அடித்தார். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்து இருந்தது.

    3-வது நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது.

    தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 275 ரன் எடுத்து ஆல்அவுட் ஆனது. இது நியூசிலாந்து ஸ்கோரை விட 103 ரன்கள் குறைவாகும்.

    இங்கிலாந்து தரப்பில் தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 132 ரன்னும், கேப்டன் ஜோ ரூட், ராபின்சன் தலா 42 ரன்களும் எடுத்தனர்.

    நியூசிலாந்து வேகப்பந்து வீரர் சவுத்தி 43 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். ஜேமிசன் 3 விக்கெட்டும், வாக்னர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    103 ரன்கள் முன்னிலையில் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சை ஆடியது. நேற்றைய ஆட்டநேர முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன் எடுத்து இருந்தது. தற்போது நியூசிலாந்து 165 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கைவசம் 8 விக்கெட் இருக்கிறது.

    தொடக்க வீரர் கான்வே 23 ரன்னிலும், கேப்டன் வில்லியம்சன் ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். மற்றொரு தொடக்க வீரர் டாம் லாதம் 30 ரன்னிலும், வாக்னர் 2 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இரு அணிகளும் இன்னும் ஒரு இன்னிங்சை ஆட வேண்டியுள்ளது. இதனால் இந்த டெஸ்ட் டிராவில் முடிகிறது.

    இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 10-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. இந்த தொடருக்கு பிறகு நியூசிலாந்து அணி இந்தியாவுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடுகிறது.

    இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.

    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.

    இந்த தொடருக்கான இலங்கை அணியின் 20 ஓவர் போட்டி கேப்டனாக குசால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். 30 வயதான அவர் ஏற்கனவே ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக உள்ளார்.

    குசால் பெரேரா இலங்கை அணிக்காக 22 டெஸ்ட், 104 ஒருநாள் போட்டி மற்றும் 47 இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடி உள்ளார்.

    குசால் பெரேரா

    இலங்கை 20 ஓவர் அணிக்கு மலிங்கா கேப்டனாக செயல்பட்டு வந்தார். அவர் பயிற்சி முகாமில் பங்கேற்கவில்லை. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் தசுன் ‌ஷனகா கேப்டனாக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் நீக்கப்பட்டு குசால் பெரேரா கேப்டனாக தேர்வாகி உள்ளார்.

    இங்கிலாந்து-இலங்கை அணிகள் இடையேயான 20 ஓவர் போட்டிகள் வருகிற 23, 24 மற்றும் 26-ந்தேதிகளிலும், ஒருநாள் போட்டிகள் 29, ஜூலை 1 மற்றும் 4-ந்தேதிகளில் நடக்கிறது.

    இந்திய அணியினருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நடுகள வீரரான 23 வயது அனிருத் தபா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்
    புதுடெல்லி:

    கத்தாரில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பங்கேற்றுள்ள இந்திய அணியினருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நடுகள வீரரான 23 வயது அனிருத் தபா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டங்களில் நாளை வங்காளதேசத்தையும், வருகிற 15-ந் தேதி ஆப்கானிஸ்தானையும் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டங்களில் அனிருத் தபா விளையாட முடியாது.
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வர்ணனையாளராக தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தேர்வாகி உள்ளார்.
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான தினேஷ் கார்த்திக் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    ஐக்கிய அரபு அமீரத்தில் நடைபெறும் எஞ்சிய ஐ.பி.எல். போட்டிக்கு வரமாட்டேன் என்று ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் சொல்லி விட்டார்.

    கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்ட இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் வருவாரா? என்பது குறித்து இப்போதே சொல்ல முடியாது.

    ஐ.பி.எல். போட்டிக்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கிறது. அதற்குள் நிறைய விஷயங்கள் மாறலாம். அணி நிர்வாகம் என்னை தலைமை தாங்கி அணியை வழிநடத்தச் சொன்னால் அதனை ஏற்று செயல்பட தயார் என தெரிவித்தார்.
    பிரெஞ்சு ஓபன் நான்காவது சுற்றுக்கு ரபேல் நடால் மற்றும் ஜோகோவிச் ஆகியோர் முன்னேறினர்.
    பாரிஸ்:

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், ஜெர்மன் வீரர் டொமினிக் கோப்ஃபெர் ஆகியோர் மோதினர்.

    இதில், அனுபவ வீரரான பெடரர் முதல் செட்டை 7-6 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை ஜெர்மனி வீரர் 7-6 என கைப்பற்றினார். மூன்றாவது செட்டை பெடரர் 7-6 கைப்பற்றினார். நான்காவது செட்டையும் 7-5 என கைப்பற்றினார்.

    இறுதியில் பெடரர் 7-6, 6-7, 7-6, 7-5 என்ற கணக்கில் ஜெர்மனி வீரரை போராடி வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டு இருந்தது
    புதுடெல்லி:

    16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு காரணமாக இந்த போட்டி இந்தியாவில் அரங்கேறுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்தியாவில் போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

    கொரோனா பரவல் சூழ்நிலையை ஆய்வு செய்து அதற்கு தகுந்தபடி 20 ஓவர் உலக கோப்பையை நடத்தும் முடிவை எடுக்க ஒரு மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) விடுத்த வேண்டுகோளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சமீபத்தில் ஏற்றுக்கொண்டது. இதன்படி இந்தியாவில் இந்த போட்டியை நடத்த முடியுமா? என்பது குறித்து பரிசீலனை செய்து முடிவை வருகிற 28-ந் தேதிக்குள் தெரிவிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.

    ஐசிசி



    இதற்கிடையே, 20 ஓவர் உலக கோப்பைபோட்டி குறித்து முடிவு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தாலும், கொரோனா அச்சம் காரணமாக இந்த போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் போட்டியை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தொடங்க ஐ.சி.சி. திட்டமிட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. அத்துடன் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் தொடக்க சுற்று ஆட்டங்களை நடத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து முடிவெடுக்க 4 வாரம் அவகாசம் வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முறைப்படி கேட்டது. என்றாலும் போட்டிக்குரிய உரிமத்தை தக்க வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டியதே தவிர இந்த போட்டி அமீரகத்தில் நடைபெறுவது குறித்து கிரிக்கெட் வாரியம் கவலைப்படவில்லை. எஞ்சிய ஐ.பி.எல். போட்டி அமீரகத்தில் அக்டோபர் 10-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட்டால், 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ‘பிட்ச்’ தயாராக 3 வார காலம் இடைவெளி தேவைப்படும். இதனால் 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் ஆட்டங்களை அமீரகத்தில் நவம்பர் மாதத்தில் தான் தொடங்க முடியும். அதற்கு முன்னதாக தொடக்க சுற்று ஆட்டங்கள் ஓமனில் ஒரு வாரம் நடைபெறும்.

    தற்போது இந்தியாவில் ஒருநாளைக்கு 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதனை கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட்டால் மூன்றில் ஒரு பங்கு தான். எனவே அக்டோபரில் தொடங்கும் உலக கோப்பை போட்டியின் போது கொரோனா பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை இந்த மாதத்திலேயே எப்படி கணிக்க முடியும். கொரோனா 3-வது அலை வந்தால் என்ன செய்ய முடியும். எஞ்சிய ஐ.பி.எல். போட்டியை செப்டம்பரில் இங்கு நடத்த முடியாமல் அமீரகத்துக்கு மாற்றி இருக்கும் போது 16 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை எப்படி இந்தியாவில் நடத்த முடியும்.

    அத்துடன் கொரோனா சூழ்நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் வெளிநாட்டு வீரர்கள் எத்தனை பேர் இந்தியா வந்து விளையாட ஆர்வம் காட்டுவார்கள். அமீரகத்தில் நடைபெறும் எஞ்சிய ஐ.பி.எல். போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள். அதேநேரத்தில் அங்கு
    20 ஓவர் உலக கோப்பை போட்டியும் நடந்தால் அவர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்பார்கள்’ என்று தெரிவித்தார்.
    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோரி பெர்ன்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
    லண்டன்:

    இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்று வருகிறது.

    இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

    அறிமுக வீரர் டிவான் கான்வே அபாரமாக ஆடி (200 ரன்) இரட்டை சதம் விளாசி அவுட்டானார். நிக்கோல்ஸ் 61 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டும், மார்க் வுட் 3விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. இங்கிலாந்து 18 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்த போதிலும் ரோரி பர்ன்சும், கேப்டன் ஜோ ரூட்டும் சரிவை தடுத்து நிறுத்தினர்.

    இரண்டாவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 43 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. பர்ன்ஸ் 59 ரன்களுடனும், ஜோ ரூட் 42 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

    மூன்றாவது நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. 

    இந்நிலையில் 4வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஜோ ரூட் 42 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஒல்லி போப் 22 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் ஒல்லி ராபின்சன் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    6 விக்கெட் வீழ்த்திய டிம் சவுத்தி

    ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் தொடக்க ஆட்டக்காரரான ரோரி பர்ன்ஸ் சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 132 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 101.1ஓவரில் 275 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டும், ஜேமிசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
     
    இதையடுத்து, 103 ரன்கள் கூடுதல் பெற்ற நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சை ஆடியது.

    நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. லாதம் 30 ரன்னுடனும், நீல் வாக்னர் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இதுவரை நியூசிலாந்து அணி 165 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 
    ×