என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் காட்ரல் மற்றும் ஆண்ட்ரு ரசல் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
    செயிண்ட்லூசியா:

    ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் மூன்று போட்டிகளை வெஸ்ட் இண்டீஸ் அணியும், 4-வது போட்டியை ஆஸ்திரேலியாவும் வென்றது.

    இந்நிலையில், 5 ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை எடுத்தது. அந்த அணியில் எவின் லெவிஸ் அதிகபட்சமாக 34 பந்துகளில் 79 ரன்களும், கேப்டன் பூரன் 18 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர். 

    ஆட்ட நாயகன் விருது வென்ற லெவிஸ்

    இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 200 ரன்களை இலக்காக கொண்டு பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியில் ஆரோன் பின்ச் மட்டும் 34 ரன்கள் சேர்த்தார்.

    இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்று அசத்தியது.

    ஆட்ட நாயகன் விருது எவின் லெவிசுக்கும், தொடர் நாயகன் விருது ஹெய்டன் வால்ஷுக்கும் அளிக்கப்பட்டது.
    பாரிசில் நடந்த உலக வில்வித்தை போட்டியில் 3 தங்க பதக்கங்களை வென்ற தீபிகா குமாரி இந்திய அரசால் அர்ஜூனா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர்.
    தருண் தீப் ராய் - வில் வித்தை வீர‌ர் , வயது 37 , 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம்  நாள் சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாம்ச்சி மாவட்டத்தில் பிறந்தவர். உலக அளவிலான போட்டிகளில் 2 முறை வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள இவருக்கு இந்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி சிறப்பித்துள்ளது.  வில்வித்தை போட்டியில் உலக அரங்கில் 22 வது இடத்தை பிடித்துள்ளார். 

    அட்டானுதாஸ் - வில்வித்தை வீர‌ரான இவருக்கு வயது 29. 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி மேற்குவங்க மாநிலம், பராநகரில் பிறந்தவர். உலக அளவிலான போட்டிகளில் 2 முறை தங்க பதக்கங்களை வென்றுள்ள இவருக்கு இந்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்துள்ளது. வில்வித்தை போட்டியில்  உலக அரங்கில் இவர் இடத்தில் உள்ளார். 

    பிரவீன் ரமேஷ் ஜாதவ் - வில் வித்தை வீர‌ரான இவருக்கு வயது 25. 1996 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம் சாத்தாரா மாவட்டத்தில் பிறந்தவர். உலக அளவிலான போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள இவர், ஆடவர் வில்வித்தை போட்டிகளில் உலக அரங்கில் 77 வது இடத்தில் உள்ளார். 

    தீபிகா குமாரி - வில்வித்தை வீராங்கனையான இவருக்கு வயது 27. 1994 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தவர். ஒலிம்பிக்கில் பங்கேற்கும் சக வீர‌ர் அதானு தாஸின் மனைவி.  சமீபத்தில் பாரிசில் நடந்த உலக வில்வித்தை போட்டியில் 3 தங்க பதக்கங்களை வென்ற இவர், இந்திய அரசால் அர்ஜூனா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர். மகளிர் வில்வித்தை போட்டியில் உலக அரங்கில் முதல் இடத்தில் உள்ளார். 

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 18 விளையாட்டுகளில் 68 பிரிவில் பங்கேற்கிறது. 71 வீரர்கள், 56 வீராங்கனைகள் ஆக மொத்தம் 127 பேர் கலந்து கொள்கிறார்கள்.
    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் நடந்தது. 2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. 

    அதன்படி ஒலிம்பிக் போட்டி வருகிற 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை டோக்கியோவில் நடக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 18 விளையாட்டுகளில் 68 பிரிவில் பங்கேற்கிறது. 71 வீரர்கள், 56 வீராங்கனைகள் ஆக மொத்தம் 127 பேர் கலந்து கொள்கிறார்கள். பயிற்சியாளர்கள், அதிகாரிகள் என மொத்தம் 222 பேர் டோக்கியோ செல்கிறார்கள்.

    முதல்குழு இன்று ஜப்பான் புறப்பட்டு செல்கிறது. ஏற்கனவே பாய்மர படகு அணி மட்டும் அங்கு சென்றிருக்கிறது. இதைத்தொடர்ந்து மற்ற குழுக்கள் தொடர்ச்சியாக செல்லும்.ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் வருமாறு:-

    வில்வித்தை (4 பேர்)

    அதானு தாஸ், பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய் (ஆண்கள் ரிகர்வ் தனிநபர் மற்றும் அணிகள் பிரிவு), தீபிகா குமாரி   (பெண்கள் ரிகர்வ் தனிநபர் பிரிவு).  கலப்பு அணிகள் பிரிவில் அதானு தாஸ், தீபிகா குமாரி பங்கேற்பு.

    தடகளம் (26)

    ஆண்கள்:  நீரஜ் சோப்ரா, ஷிவ்பால் சிங் (ஈட்டி எறிதல்), முரளி ஸ்ரீ சங்கர் (நீளம் தாண்டுதல்),  தேஜிந்தர் பால் தூர் (குண்டு எறிதல்),  எம்.பி.ஜபிர் (400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்), அவினாஷ்  சாப்ளே  (3 ஆயிரம் மீட்டர் ஸ்டிபிள் சேஸ்),  குர்பிரீத் சிங் (50 கி.மீ நடை பந்தயம்), சந்தீப் குமார் , ராகுல் ரோலினா, இர்பான் (20 கி.மீ நடை பந்தயம்),  முகமது அனஸ், அமோஜ் ஜேக்கப், ஆரோக்கிய ராஜீவ் ,  நாகநாதன் பாண்டி, நிர்மல் டாம் (48* 400 மீட்டர் தொடர் ஓட்டம் ).

    பெண்கள் : டூட்டி சந்த் (100 மற்றும் 200  மீட்டர்  ஓட்டம்),  கமல்பிரீத் கபூர், சீமா புனியா (வட்டு எறிதல்), அன்னு ராணி  (ஈட்டி எறிதல்), பிரியங்கா கோஸ்வாமி ,  பாவ்னா ஜாட்  (20 கி.மீ நடை பந்தயம்). 4*400 மீட்டர்  கலப்பு தொடர் ஓட்டத்தில் சர்தக் பாம்ப்ரி, அலெக்ஸ் அந்தோணி , தனலட்சுமி ரேவதி,  சுபா ஆகியோர் பங்கேற்பு.

    பேட்மின்டன் (4)

    சாய் பிரனீத்  (ஆண்கள் ஒற்றையர்), பி.வி.சிந்து (பெண்கள் ஒற்றையர்) , சத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி (ஆண்கள் இரட்டையர் ).

    குத்துச்சண்டை (9) 

    ஆண்கள் : அமித் பன்கல் (பிளை வெயிட்), மணிஷ் கவுசிக் (லைட் வெயிட்),  விகாஸ் கிருஷ்ணன் (வெல்டர் வெயிட்) ஆசிஷ்  குமார் (மிடில் வெயிட்)  , சதீஷ்குமார் ( சூப்பர் ஹெவி வெயிட்), பெண்கள்: மேரி கோம் (பிளை வெயிட்),  சிம்ரஜித் கபூர் (லைட் வெயிட்),  லவ்லினா (வெல்டர் வெயிட்),  பூஜா ராணி ( மிடில் வெயிட்).

    குதிரையேற்றம் (1)
    பவுசத் மிர்ஸா ( ஆண்கள் தனிநபர் பிரிவு ) வாள்சண்டை (1) சி.ஏ. பவானிதேவி (பெண் கள் தனிநபர் சேபர் பிரிவு ).

    ஆக்கி  (38)

    ஆண்கள்: ஸ்ரீஜேஷ், ஹர்மன் பிரீத்,  ருபீந்தர் பால்சிங், சுரேந்தர் குமார், அமித்ரோகிதாஸ், பிரேந்திர லக்ரா, ஹர்திக்சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், நீலகண்டசர்மா, சுமித், ஷாம்சர்சிங்,தில்பிரீத் சிங், குர்ஜந்த்சிங், லலித் குமார் உபாத்யாய், மன்தீப்சிங். (3 மாற்று வீரர்கள்)
    பெண்கள்:  சவீதா புனியா,  தீப் கிரேஸ்ஏகா, நிக்கி பிராதன், குர்ஜித்கவூர்,  உதிதா, நிஷா , நேகா கோயல், சுசிலா சானு, மோனிகா, நவ்ஜித்கவூர், சலீமா தீதி, ராணி  ராம்பால் , நவ்னீத் கவூர், லால் ரேஷ்மி, வந்தனா கத்ரியா, ஷர்மிளா தேவி.(3 மாற்று வீராங்கனைகள்)

    கோல்ப் (3)

    அணிர்பன் லக்ரி, உதயன் மானே (ஆண்கள் தனிநபர்), அதிதி அசோக் (பெண்கள் தனிநபர்).

    ஜிம்னாஸ்டிக் (1)

    பிரானதி  நாயக் (பெண்கள் ஆர்ஸ்டிக் ஆல்ரவுண்டு  பிரிவு).

    ஜூடோ  (1)

    சுஷீலா  லிக்மபம் (பெண் களுக் கான 48 கிலோ பிரிவு).

    துடுப்பு படகு (2)

    அர்ஜூன் லால் , அரவிந்த் சிங் (ஆண்கள் லைட் வெயிட் இரட்டையர் ஸ்குல்ஸ் )

    பாய்மர படகு (4)
    விஷ்ணு சரவணன் (ஆண்கள் லேசர் பிரிவு),  கே.சி. கணபதி , வருண் தாக்கர் (ஆண்கள் 49 இ.ஆர். பிரிவு), நேத்ரா குமணன்  (பெண்கள் லேசர்  ரேடியல் பிரிவு).

    துப்பாக்கி சுடுதல் (15)

    ஆண்கள்: சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா (10 மீட்டர் ஏர் பிஸ்டல்), பஜ்வா, அகமது கான் (ஸ்கீட்), தீபக்குமார், பன்வார் (10 மீட்டர் ஏர் ரைபிள்), சஞ்சீவ் ராஜ்புத், அஸ்வாரி தோமர் (50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன்).

    பெண்கள்: மனுபாக்கர்(10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் பிஸ்டல்), யஸ்வினி தேஷ்வால் (10 மீட்டர் ஏர் பிஸ்டல்), ராகி சரன்பத் (25 மீட்டர் பிஸ்டல்), அபூர்வி சண்டிலா, இளவேனில் வாலறிவன் (10 மீட்டர் ஏர் ரைபிள்), அஞ்சும், மோட்கில், தேஜஸ்வினி சவாந்த்  (50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன்).

    நீச்சல் (3)

    ஸ்ரீகாரி நடராஜன், சாஜன் பிரகாஷ் (ஆண்கள்), மானா படேல் (பெண்கள்).

    டேபிள் டென்னிஸ் (4)

    சரத்கமல், சத்யன் (ஆண்கள் ஒற்றையர்), மனிகா பத்ரா, சுதிர்தா முகர்ஜி (பெண்கள் ஒற்றையர்). கலப்பு இரட்டையர் பிரிவில் சரத் கமல், மனிகா பத்ரா பங்கேற்பு.

    டென்னிஸ் (3)

    சுமித் நாகல் (ஆண்கள் ஒற்றையர்), சானியா மிர்சா, அங்கிதா ரெய்னா (பெண்கள் இரட்டையர்).

    பளு தூக்குதல் (1)

    மீராபாய் சானு  (பெண்கள் 49 கிலோ பிரிவு).

    மல்யுத்தம் (7)

    ஆண்கள்: ரவிகுமார் தகியா (57 கிலோ பிரிவு), பஜ்ரங் புனியா (65 கிலோ பிரிவு), தீபக் புனியா (86 கிலோ பிரிவு).
    பெண்கள்: சீமா பிஸ்ரா (50), வினேஷ் போகத் (53), அசுமாலிக் (57), சோனம் மாலிக் (62).
    ஜூடோ வீரர்கள் தங்கி இருக்கும் ஓட்டல் ஒன்றின் ஊழியர்கள் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. போட்டி தொடங்க இன்னும் 6 நாட்கள் உள்ள நிலையில் வீரர், வீராங்கனைகள் தங்கும் ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  

    கோப்புபடம்

    டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி செய்தி தொடர்பாளர் மசாத்  தகாயா தெரிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்பட்டவரின் பெயர், விவரம் வெளியிடப்படவில்லை. இதனால் ஒலிம்பிக் கிராமத்தில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. போட்டி நடைபெறுவதில் பாதிப்பு ஏற்படுமா என்ற சந்தேகமும் நிலவுகிறது. 

    ஏற்கனவே ஜூடோ வீரர்கள் தங்கி இருக்கும் ஓட்டல் ஒன்றின் ஊழியர்கள் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு காரணமாக ஒலிம்பிக் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த அச்சம் காரணமாக முன்னணி டென்னிஸ் வீரர்கள் நடால் பெடரர் ஆகியோர் விலகி உள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் 200-க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் பெண்கள் 100 மீட்டர் பேக்ஸ்டோக் படேல் பிரிவில் இந்திய வீராங்கனை மீனா பங்கேற்கிறார்.
    ஆண்கள் 100 மீட்டர் பேக்ஸ்டாக்

    ஸ்ரீஹரி நடராஜ்

    ஸ்ரீஹரி நடராஜ் 2001 ஜனவரி 16-ம் தேதி பிறந்தார். 21 வயதான நடராஜ் பெங்களூரை சேர்ந்தவர். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியின் ஆண்கள் 100 மீட்டர் பேக்ஸ்டாக் பங்கேற்கிறார். 

    ஆண்கள் 200 மீட்டர் பட்டர்ஃப்லை

    சஞ்ஜன் பிரகாஷ்

    கேரளாவை சேர்ந்த சஞ்ஜன் பிரகாஷ் 1993 செப்டம்பர் 14-ம் தேதி பிறந்தார். இவர் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டியில் 6 தங்கம் மற்றும் 3 சில்வர் பதக்கங்களை வென்று தடகள பிரிவுக்கான இந்திய தேசிய விளையாட்டு போட்டிகளின் சிறந்த வீரராக முன்னேறினார். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்டுகள் 200 மீட்டர் பட்டர்ஃப்லை பிரிவில் பங்கேற்கிறார். கேரளாவை சேர்ந்த சஞ்சன் பிரகாஷ் தமிழ்நாட்டின் நெய்வேலியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். சிதம்பரத்தில் உள்ள கல்லூரியில் இளநிலை படிப்பை முடித்தார். சஞ்ஜன் பிரகாஷ் தற்போது கேரள காவல்துறையில் பணியாற்றி வருகிறார். 

    பெண்கள் 100 மீட்டர் பேக்ஸ்டோக்

    மானா படேல்

    மானா படேல் 2000 மார்ச் 18-ம் தேதி பிறந்தார். 21 வயதான மானா படேல் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் பெண்கள் 100 மீட்டர் பேக்ஸ்டோக் பிரிவில் பங்கேற்கிறார். ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்திய பெண் வீராங்கணை இவர் ஆவார். 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டில் மானா படேல் 4 தங்கப்பதங்கம் வென்றுள்ளார். 
    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் அதிரடியாக ஆடி சதமடித்தார்.
    நாட்டிங்காம்:

    பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. 

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 232 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரிஸ்வான், பாபர் அசாம் அரை சதமடித்து அசத்தினர். ரிஸ்வான் 63 ரன்களும், பாபர் அசாம் 85 ரன்களும் எடுத்தனர். பகர் சமான் 8 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஹபீஸ் 10 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி என 24 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.

    சதமடித்த லிவிங்ஸ்டோன்

    அந்த அணியின் லிவிங்ஸ்டோன் தன்னந்தனி ஆளாக போராடினார். 17 பந்தில் அரை சதமடித்த அவர் 43 பந்தில் 9 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 103 ரன்கள் குவித்து அவுட்டானார். ஜேசன் ராய் 32 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

    3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது ஷஹீன் அப்ரிதிக்கு அளிக்கப்பட்டது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

    தென் ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர்களான ஜேன்மேன் மாலன், டி காக் ஜோடி அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்தது.
    டப்ளின்:

    தென் ஆப்பிரிக்கா அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது அயர்லாந்து.

    இந்நிலையில் அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி டப்ளினில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 346 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜேன்மேன் மாலன், டி காக் ஜோடி அதிரடியாக ஆடி சதமடித்தது.

    டி காக் 120 ரன்னில் வெளியேறினார். மாலன் 177 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 347 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். காம்பர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 54 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சதமடித்த சிமி சிங்

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சிமி சிங் சிறப்பாக ஆடி சதமடித்து அவுட்டாகாமல் உள்ளார்.

    இறுதியில், அயர்லாந்து அணி 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 70 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என சமன் செய்தது தென் ஆப்பிரிக்கா அணி.

    ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ஜேன்மேன் மாலனுக்கு அளிக்கப்பட்டது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி 19-ம் தேதி நடக்கிறது.
    ஐ.சி.சி. டி20 உலக கோப்பை 2021 போட்டிகள் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளன.
    புதுடெல்லி:

    பி.சி.சி.ஐ. நடத்தவுள்ள ஐ.சி.சி. டி20 உலக கோப்பை போட்டிகள் வரும் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கி நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறும்.

    இதற்கான அணிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சூப்பர் 12 பிரிவில் குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டாக அணிகள் பிரிக்கப்பட்டு உள்ளன.

    இவற்றில் குரூப் 1ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 4 அணிகளும், குரூப் 2ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகளும் இடம் பெறும்.

    இவை தவிர, குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரண்டாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.  குரூப் ஏ-வில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா ஆகிய 4 அணிகள் இடம் பெறும்.

    குரூப் பி-யில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, ஓமன் ஆகிய 4 அணிகள் இடம் பெறும்.

    குரூப் ஏ மற்றும் குரூப் பி அணிகளில் வெற்றி பெறும் அணிகள் முறையே குரூப் 1 மற்றும் குரூப் 2 ஆகியவற்றில் இடம் பெறும்.

    இதேபோன்று, குரூப் ஏ-வில் 2வது இடம் பெறும் அணி குரூப் 2விலும், குரூப் பி-யில் 2வது இடம் பெறும் அணி குரூப் 1லும் இடம் பெறும்.
    ரி‌ஷப் பண்ட், சமீபத்தில் யூரோ கால்பந்து போட்டியில் இங்கிலாந்து-ஜெர்மனி ஆட்டத்தை மைதானத்துக்கு நேரில் சென்று பார்த்த புகைப்படத்தை சமூக வலைதளத்திலும் பதிவிட்டு இருந்தார்.

    லண்டன்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    சவுத்தம்டனில் கடந்த மாதம் 18 முதல் 23-ந் தேதி வரை நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய அணி நியூசிலாந்திடம் தோற்றது.

    அடுத்து இங்கிலாந்துடன் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. முதல் டெஸ்ட் அடுத்த மாதம் 4-ந் தேதி தொடங்கியது.

    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டி முடிந்ததும் இந்திய அணியினருக்கு 20 நாட்கள் ஓய்வு வழங்கப்பட்டது.

    இதையடுத்து வீரர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பொழுதை கழித்தனர். சில வீரர்கள் விம்பிள்டன் டென்னிஸ் மற்றும் யூரோ கால்பந்து போட்டியை நேரில் சென்று ரசித்தனர். இதற்கிடையே இந்திய அணியின் விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்ஸ்மேனுமான ரி‌ஷப் பண்ட்டுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

    அவர் கடந்த 8-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனது நண்பர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார் என்று தகவல் வெளியாகி இருந்தது.

    ரி‌ஷப் பண்ட், சமீபத்தில் யூரோ கால்பந்து போட்டியில் இங்கிலாந்து-ஜெர்மனி ஆட்டத்தை மைதானத்துக்கு நேரில் சென்று பார்த்தார். அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்திலும் பதிவிட்டு இருந்தார். அதில் அவர் முகக்கவசம் அணியாமல் இருந்தார்.

    ரி‌ஷப் பண்ட்

    மேலும் அவர் பல இடங்களுக்கு நண்பர்களுடன் சென்று சுற்றியதாக தெரிகிறது.

    இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா, இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியினருக்கு இ-மெயிலில் ஒரு கருத்து அனுப்பி உள்ளார்.

    இங்கிலாந்தில் டெல்டா வகை வைரசால் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையொட்டி இந்த எச்சரிக்கையை அனுப்பியுள்ளார்.

    ஜெய்ஷா அனுப்பிய இ-மெயிலில் வீரர்கள் நெரிசலான மற்றும் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி பாதுகாப்பை மட்டுமே வழங்கும். வைரசுக்கு எதிராக முழு நோய் எதிர்ப்பு சக்தி கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

    ஜெய்ஷாவின் இந்த கடிதம் விம்பிள்டன் டென்னிஸ் மற்றும் யூரோ, சாம்பியன்ஷிப் போட்டியை நேரில் பார்க்க செல்வதை தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிடும் வகையில் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

    ஆனால் கிரிக்கெட் வாரியத்தின் அறிவுறுத்தலை மீறி ரி‌ஷப்பண்ட் யூரோ கால்பந்து போட்டியை பார்க்க நேரில் சென்றதாக தெரிகிறது.

    இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி கூறும்போது, இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு போட்டிகளை பார்க்க ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்திய கிரிக்கெட் வீரர்கள் விடுமுறையில் இருந்ததால் அவர் அங்கு சென்றுள்ளார். அனைத்து நேரத்திலும் முகக்கவசம் அணிந்து கொண்டு இருப்பது என்பது உடல் ரீதியாக சாத்தியமில்லாதது என்றார். 

    இதையும் படியுங்கள்....கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டு வீரர்களில் ஒருவர் ரிஷப் பண்ட் என தகவல்

    சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியின் கேப்டனாக குசல் பெரேரா இருந்தார்.

    கொழும்பு:

    இந்திய கிரிக்கெட்டின் 2-ம் தர அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணிக்கு ஷிகர்தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    முதல் ஒருநாள் போட்டி வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இப்போட்டி தொடருக்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இன்னும் இலங்கை அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் இலங்கை அணியின் தொடக்க வீரர் குசல் பெரேரா, காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுகிறார்.

    குசல் பெரேரா தோள்பட்டையில் காயம் அடைந்துள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவது கிட்டத்தட்ட உறுதி என்றும், காயத்தின் தன்மை அல்லது அவர் தொடரில் இருந்து விலகுவது இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    ஆனால் அணியின் டாக்டர் கூறும்போது, குசல் பெரேரா, ஆறு வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியின் கேப்டனாக குசல் பெரேரா இருந்தார். ஆனால் ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரை இலங்கை இழந்தது.

    இதனால் அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையே தான் அவர் காயம் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து காரணமாக விலகி உள்ளார். 

    ஜோகோவிச் இந்த ஆண்டில் இதுவரை நடந்துள்ள கிராண்ட்சிலாம் போட்டிகளான ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் பட்டங்களை வென்றுள்ளார்.

    டோக்கியோ:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டி ஒலிம்பிக் வருகிற 23-ந் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்குகிறது.

    இதற்கிடையே டோக்கியோவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் இருந்து முன்னணி வீரர்-வீராங்கனைகள் விலகி உள்ளனர். காயம் மற்றும் ஓய்வு காரணமாக பெடரர், நடால், டொமினிக் திம் ஆகிய வீரர்களும், செரீனா வில்லியம்ஸ், ஹாலெப், கெர்பா, அசரெங்கா ஆகிய வீராங்கனைகளும் விலகி உள்ளனர்.

    இந்த நிலையில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா) தான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பேன் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

    சமீபத்தில் விம்பிள்டன் பட்டத்தை வென்ற ஜோகோவிச் கூறும்போது, ஒலிம்பிக்கில் தான் பங்கேற்பது 50 சதவீதம்தான் சாத்தியம் என்று அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க டோக்கியோவுக்கு செல்கிறேன் என்று ஜோகோவிச் நேற்று உறுதிபடுத்தி உள்ளார்.

    ஜோகோவிச் இந்த ஆண்டு இதுவரை நடந்துள்ள கிராண்ட்சிலாம் போட்டிகளான ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் பட்டங்களை வென்றுள்ளார். அமெரிக்கா ஓபன் செம்டம்பரில் நடக்கிறது.

    ஜோகோவிச் ஒலிம்பிக்கில் தங்கமும், அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றால் ஒரே ஆண்டில் நான்கு கிராண்சிலாம் பட்டங்கள் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் டென்னிஸ் வீரர் என்ற சாதனையை படைப்பார்.

    இந்த சாதனையை ஜெர்மனி வீரங்கனை ஸ்டெபிகிராப் (1988-ம் ஆண்டு) நிகழ்த்தி உள்ளார்.

    இதையும் படியுங்கள்...டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து ரோஜர் பெடரர் விலகல்

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச்சுடுதல் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள் வீராங்கனை விவரம் குறித்த தகவலை பார்க்கலாம்.
    பெண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை (பொசிஷன்)

    தேஜஸ்வினி சாவந்த்

    தேஜஸ்வினி சாவந்த் 1980 செப்டம்பர் 12-ம் தேதி பிறந்தார். இவர் மராட்டிய மாநிலத்தில் பிறந்தார். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பங்கேற்கிறார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 2009 ஆம் ஆண்டு சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் ஸ்போர்ட் பெடரேஷன் உலக கோப்பை போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். 2010 ஆண்டு
    நடைபெற்ற 50 மீட்டர் ரைபி ப்ரோனி இவெண்ட் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். இவர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
       
    பெண்கள் 25 மீட்டர் பிஸ்டல்

    மனு பக்ஹர் 

    அரியானாவை சேர்ந்த மனு பக்ஹர் 2002 பிப்ரவரி 18-ம் தேதி பிறந்தார். 19 வயதான மனு பக்ஹர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்கிறார். 2018 ஆம் ஆண்டு சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் ஸ்போர்ட் பெடரேஷன் உலக கோப்பை போட்டியில் மனு பக்ஹர் 2 தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மிகக்குறைந்த வயதில் (16) சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் ஸ்போர்ட் பெடரேஷன் உலக கோப்பை போட்டியில் தங்கம் வென்ற நபர் என்ற பெருமையை மனு பக்ஹர் பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.   

    ரஹி சர்னோபெட் 

    ரஹி சர்னோபெட் 1990 அக்டோபர் 30-ம் தேதி பிறந்தார். இவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். 30 வயதான ரஹி சர்னோபெட் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்கிறார். 2013, 2019, 2021 ஆம் ஆண்டுகளில் சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் ஸ்போர்ட் பெடரேஷன் உலக கோப்பை போட்டிகளில் ரஹி சர்னோபெட் 4 முறை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 2010,2014 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் 2 முறை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 2018 ஆசியன் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

    ஸ்கீட் 

    ஆண்கள் பிரிவு

    அங்கட் பாஜ்வா

    அங்கட் பாஜ்வா 1995 ஆம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி சத்தீஷ்கரில் பிறந்தார். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஸ்கீட் பிரிவில் பங்கேற்கிறார். 2018 ஆசியன் சூட்கன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்கீட் பிரிவில் அங்கட் பாஜ்வா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஆசியன் துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் ஸ்கீட் பிரிவில் 2015 மற்றும் 2019 ஆண்டுகளில் 3 முறை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 

    அமிராஜ் அகமது கான்

    அமிராஜ் அகமது கான் உத்தரகாண்ட் மாநிலத்தில் 1975 ஆம் ஆண்டு நம்பவர் 2-ம் தேதி பிறந்தார். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஸ்கீட் பிரிவில் பங்கேற்கிறார். இவர் 2007 மற்றும் 2008 சிங்கப்பூர் ஒப்பன் துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2 தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 2010 காமன்வெல்த் துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
    ×