என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி 2-வது இடத்திலும், துணைக் கேப்டன் ரோகித் சர்மா 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
    இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.

    முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம், 3-வது ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார். அவர் 139 பந்தில் 158 ரன்கள் விளாசினார். இதன்மூலம் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.

    8 புள்ளிகள் அதிகம் பெற்று 873 புள்ளிகள் பெற்றுள்ளார். விராட் கோலி 16 புள்ளிகள் குறைவாக பெற்று 2-வது இடத்தில் நீடிக்கிறார். ரோகித் சர்மா 825 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்து பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் 801 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், ஆரோன் பிஞ்ச் 791 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
    இந்திய வீரர்கள் இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரை முடித்த பிறகு ஐ.பி.எல். போட்டியில் விளையாட ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு செல்வார்கள்.

    துபாய்:

    முதலாவது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து கோப்பையை கைப்பற்றியது.

    2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2021 முதல் 2023 வரை நடக்கிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே வருகிற 4-ந் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டியில் இருந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்குகிறது.

    இந்த போட்டிக்கான அட்டவணை விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 9 அணிகளும் இந்தக்காலக்கட்டத்தில் 6 டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும்.

    உள்ளூர், வெளியூர் என சமமாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு அணிக்கும் மாறுபட்டு இருக்கும்.

    இந்திய அணி, நியூசிலாந்து(2 டெஸ்ட்), இலங்கை (3), ஆஸ்திரேலியாவுடன் (4) உள்ளூரிலும், இங்கிலாந்து (5), தென் ஆப்பிரிக்கா (3), வங்காளதேசம்(2) ஆகியவற்றுடன் அந்நாட்டு மண்ணிலும் விளையாடுகிறது.

    இந்திய அணி மொத்தம் 19 டெஸ்டில் விளையாடுகிறது. இங்கிலாந்து அதிகபட்சமாக 22 போட்டிகளில் ஆடுகிறது. அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா 18 டெஸ்டில் விளையாடுகிறது.

    இந்திய வீரர்கள் இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரை முடித்த பிறகு ஐ.பி.எல். போட்டியில் விளையாட ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு செல்வார்கள். அதைத்தொடர்ந்து அங்கேயே டி20 உலகக்கோப்பையும் நடைபெறுகிறது. அதன் பிறகு நாடு திரும்பியதும் அவர்கள் நியூசிலாந்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடுவார்கள். 2 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து அணி நவம்பர் மாதம் இந்தியா வருகிறது.

    அதன்பிறகு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இலங்கை அணி இந்தியா வந்து 3 டெஸ்டில் விளையாடும். அதைத்தொடர்ந்து இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லும்.

    இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளிகள் முறையில் மாற்றம் செய்து ஐ.சி.சி. அறிவித்து உள்ளது. அதன்படி வெற்றி பெறும் அணிக்கு 12 புள்ளியும், டிராவுக்கு 4 புள்ளியும், டைக்கு 6 புள்ளியும் வழங்கப்படும். மெதுவாக பந்து வீசும் அணிக்கு ஒருபுள்ளி குறைக்கப்படும்.

    பார்சிலோனா கிளப்பின் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக மெஸ்சிக்கு வழங்கப்படும் ஊதியம் 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

    பார்சிலோனா:

    உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி. அர்ஜென்டினாவை சேர்ந்த அவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக ஆடுகிறார்.

    34 வயதான அவரது 21 ஆண்டுகால ஒப்பந்தம் சமீபத்தில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து மெஸ்சி எந்த அணிக்கும் சொந்தமில்லை என்றும் தனி வீரர் என்றும் அறிவிக்கப்பட்டது. அவர் நினைத்தால் எந்த கிளப்பில் வேண்டுமானாலும் விளையாடலாம் என்ற நிலை ஏற்பட்டது.

    சமீபத்தில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி கோபா அமெரிக்க கோப்பையை 28 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றியது. கிளப் அணிகளில் பல்வேறு கோப்பைகளை பெற்று கொடுத்த மெஸ்சி முதன் முறையாக தனது நாட்டுக்காக முக்கிய பட்டத்தை கைப்பற்றினார். இதன்மூலம் அவரது கனவு நனவானது.

    இந்தநிலையில் மெஸ்சி பார்சிலோனா கிளப்பில் தொடர்ந்து விளையாடுகிறார். அவரது ஒப்பந்தம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. மெஸ்சியுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதை பார்சிலோனா கிளப் ஒப்புக்கொண்டுள்ளது.

    அந்த கிளப் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதன் காரணமாக மெஸ்சிக்கு வழங்கப்படும் ஊதியம் 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதை மெஸ்சி தரப்பு ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. ஒப்பந்த நீட்டிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். 

    இங்கிலாந்துக்கு எதிராக ஏற்கனவே ஒருநாள் போட்டியிலும் இந்தியா 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்திருந்தது.

    செம்ஸ்போர்டு:

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது.

    முதலில் ஆடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த தோல்வி மூலம் இந்தியா 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. ஏற்கனவே ஒருநாள் போட்டியிலும் 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்திருந்தது. ஒரே ஒரு டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

    இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 23 வீரர்களுடன் இங்கிலாந்து சென்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக ஐசிசி சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடிய நிலையில், இங்கிலாந்துடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 4-ந்தேதி தொடங்குகிறது.

    ஐசிசி சாம்பியன்ஷிப் பைனல் கடந்த மாதம் 18-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரை நடைபெற்றது. சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கும் இடையில் சுமார் 40 நாட்கள் இடைவெளி உள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை இந்திய அணியில் உள்ள இரண்டு வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் குணமடைந்துவிட்டார். ஒருவருக்கு இன்னும் தொற்று பாதிப்பு உள்ளது என்ற செய்தி வெளியானது.

    தற்போது இரண்டு பேரில் ஒருவர் ரிஷப் பண்ட். அவர் இன்று துர்ஹாம் செல்லும் அணியுடன் செல்லமாட்டார். அவர் தங்கி இருக்கும் அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகின.

    இதை உறுதிபடுத்தும் விதமாக, யூரோ 2020 உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் இங்கிலாந்து- இத்தாலி அணிகள் மோதிய ஆட்டத்தை நேரில் பார்க்க சென்றபோது, ரசிகர் ஒருவருடன் முகக்கவசம் அணியாத நிலையில் ரிஷப் பண்ட் இருக்கும் படம் வெளியாகியுள்ளது.

    அவருக்கு முன்னதாகவே கொரோனா வைரஸ் தொற்று தாக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய்ஷா, வீரர்கள் யூரோ 2020 மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளை தவிர்க்குமாறு  கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில் இருவர் பாதிக்கப்பட்ட செய்திகள் வெளியாகியுள்ளன.

    பிசிசிஐ துணை தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில் ‘‘ஒரு வீரருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. ஆனால், கடந்த 8 நாட்களாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அணிகளின் மற்ற வீரர்களுடன் அவர் இணைந்து தங்கவில்லை. ஆகவே, மற்ற வீரர்கள் பாதிக்கப்படவில்லை. அந்த வீரரின் பெயரை வெளியிட முடியாது’’ எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், ‘‘தற்போது வேறு யாருக்கும் பாசிட்டிவ் இல்லை. எங்களுடைய செயலாளர் ஜெய் ஷா, வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.
    சுரினாம் நாட்டின் பேட்மிண்டன் வீராங்கனை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
    ஜப்பானில் கடந்த வருடம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெற இருந்தது. அந்த சமயம் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்ததால் போட்டி, இந்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒலிம்பிக் போட்டி வருகிற 23-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    பெரும்பாலான நாடுகளில் 2-வது அலை, 3-வது அலை கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

    ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட இருப்பதால், கொரோனா வைரஸ் தொற்று ஒலிம்பிக் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தாது என அதிகாரிகள் நம்பியிருந்தனர்.

    இந்த நிலையில்தான் போட்டிகள் தொடங்க இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் ஜப்பானில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 22-ந்தேதிக்குப் பிறகு பதிவான அதிகபட்ச ஒரேநாள் பதிவு இதுவாகும்.

    இதற்கிடையில் ரஷிய ரக்பி அணி ஸ்டாஃப், பிரேசில் ஜூடோ அணிக்கு உணவு வழங்கும் ஓட்டல் ஊழியர்கள், தற்போது சுரினாம் நாட்டின் பேட்மிண்டன் வீராங்கனை வரிசையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

    டோக்கியோ ஒலிம்பிக்

    இதனால் டோக்கியோ கவர்னருடன் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் ஆலோசனை நடத்த உள்ளார். நேற்று தாமஸ் பேச் ஜப்பான் பிரதரை சந்தித்து பேசியிருந்தார். இந்த நிலையில் டோக்கியோ கவர்னரை சந்திக்க உள்ளார். ஆனால் எது குறித்து பேச இருக்கிறார் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

    கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஒலிம்பிக் போட்டியை திறம்பட நடத்த முடியுமா? என்பது குறித்து விவாதிக்கப்படலாம்.

    தென்அமெரிக்க நாடான சுரினாமின் பேட்மிண்டன் வீராங்கனை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சுரினாமின் மற்ற வீரர்- வீராங்கனைகள் அமெரிக்கா சென்று, அங்கிருந்து ஜப்பான் செல்ல இருக்கின்றனர்.
    ரஷியாவின் ரக்பி அணியைச் சேர்ந்த ஸ்டாஃப் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    ஜப்பான் டோக்கியோ நகரில் வருகிற 23-ந்தேதி ஒலிம்பிக் தொடர் தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள இருக்கும் அணிகள் ஜப்பான் சென்ற வண்ணம் உள்ளன.

    ஜப்பானில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதால், டோக்கியோ நகரில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது நேற்று 1,149 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதத்திற்குப் பிறகு அதிகமான பாதிப்பு இதுவாகும்.

    கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்று வெற்றிகரமாக செயல்பட்டு சொந்த நாடு திரும்புவது மிகப்பெரிய சவாலாகும்.

    ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்படுகின்றன. வீரர்கள், அவர்களுக்கு உதவி செய்பவர்கள், அவர்கள் தங்கும் ஓட்டல் ஊழியர்கள் என அனைவரும் பாதுகாப்பு வளையத்திற்குள் வர உள்ளனர்.

    இந்த நிலையில் ஜப்பானில் பிரேசில் ஜூடோ அணிக்கு உணவு வழங்க ஒரு ஓட்டலை ஒலிம்பிக் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. அந்த ஓட்டலில் உள்ள 8 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தற்போது அந்த ஒட்டலில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நெகட்டிவ் முடிவு வந்தவர்கள் மட்டுமே அணியுடன் வேலை செய்ய முடியும். மிகவும் ஆரோக்கியமான ஊழியர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்படுவார்கள் என்பதை அணியிடம் எடுத்துரைப்போம் என டோக்கியோவின் மேற்கு நகரான ஹமாமட்சுவின் சுகாதார மற்றும் விளையாட்டுக்கான அதிகாரி தெரிவித்தார். பிரேசில் ஜூடோ அணி வருகிற சனிக்கிழமை ஜப்பான் சென்றடைகிறது.

    கடந்த 10-ந்தேதி ரஷியாவின் ரக்பி செவன்ஸ் அணி ஜப்பான் சென்றடைந்தது. இந்த நிலையில் அந்த அணியின் ஸ்டாஃப் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அணியின் மற்ற ஸ்டாஃப்கள், வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதில் வீரர்களுக்கு நெகட்டிவ் முடிவு வந்தால், பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
    லென்டில் சிம்மன்ஸ் 48 பந்தில் 72 ரன்கள் விளாசினாலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
    வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    4-வது போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் மேத்யூ வடே 5 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் ஆரோன் பிஞ்ச் 37 பந்தில் 53 ரன்களும், அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 44 பந்தில் 75 ரன்களும் விளாசினர். இதனால் ஆஸ்திரேலியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது.

    பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் லென்டில் சிம்மன்ஸ் 48 பந்தில் 72 ரன்கள் குவித்தார். எவின் லீவிஸ் 14 பந்தில் 31 ரன்கள் விளாசினார். கெய்ல் 1 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.

    கடைசி 2 ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. அந்த்ரே ரஸல், பேஃபியன் ஆலன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரஸல் ஒரு சிக்ஸ், ஆலன் 3 சிக்ஸ் விளாசினர். ஆனால் கடைசி பந்தில் ஆலன் ஆட்டமிழந்தார். என்றாலும் 25 ரன்கள் இந்த ஓவரில் கிடைத்தது. இதனால் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது.

    மிட்செல் மார்ஷ்

    மிட்செல் ஸ்டார்க் கடைசி ஓவரை வீசினார். அந்த்ரே ரஸல் முதல் நான்கு பந்துகளை சந்தித்தார். அதில் ஒரு ரன் கூட அவரால் அடிக்க முடியவில்லை. 5-வது பந்தில் 2 ரன்களும், கடைசி பந்தில் 4 ரன்களும் அடித்தார்.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. கடைசி ஓவரில் மிட்செல் ஸ்டார்க் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததால், ஆஸ்திரேலியா 4 ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது.

    75 ரன்களுடன், 4 ஓவரில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடுத்த மாதம் 4-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.
    இங்கிலாந்தில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 இந்திய அணி வீரர்களும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    2 வீரர்களில் ஒருவருக்கு நெகட்டிவ் வந்த நிலையில் மற்றொருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

    கொரோனா வைரஸ்

    நியூசிலாந்துடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திலேயே இருக்கிறது.

    இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடருக்கு முன் 20ந்தேதி துவங்கும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாடுகிறது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடுத்த மாதம் 4-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.




    கொரோனா பிரச்சினையால் இங்கிலாந்து அணியில் முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் 2-ம் தர அணி களம் புகுந்து அசத்தியுள்ளது.
    பர்மிங்காம்:

    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 331 ரன்கள் குவித்தது. தனது 14-வது சதத்தை பூர்த்தி செய்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 158 ரன்கள் (139 பந்து, 14 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். இங்கிலாந்துக்கு எதிராக 150 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் கேப்டன் என்ற சிறப்பை பெற்றதோடு, 14 சதங்களை அதிவேகமாக எட்டியவர் (81 இன்னிங்ஸ்) என்ற சாதனையையும் பாபர் அசாம் படைத்தார். இதற்கு முன்பு தென்ஆப்பிரிக்காவின் அம்லா தனது 84-வது இன்னிங்சில் 14 சதங்கள் அடித்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

    அடுத்து மெகா இலக்கை நோக்கி அதிரடியாக ஆடிய இங்கிலாந்து அணியில் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 165 ரன்களுடன் (23.3 ஓவர்) தடுமாறியது.

    இதன் பின்னர் 6-வது விக்கெட்டுக்கு ஜேம்ஸ் வின்சும், லிவிஸ் கிரிகோரியும் இணைந்து அணியை காப்பாற்றினர். தனது முதலாவது சதத்தை எட்டிய ஜேம்ஸ் வின்ஸ் 102 ரன்களும் (95 பந்து, 11 பவுண்டரி), கிரிகோரி 77 ரன்களும் (69 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

    இங்கிலாந்து அணி 48 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 332 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. கொரோனா பிரச்சினையால் இங்கிலாந்து அணியில் முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் 2-ம் தர அணி களம் புகுந்து அசத்தியுள்ளது.

    அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த வழக்கமான கேப்டன் இயான் மோர்கன், மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், ஜாசன் ராய் உள்ளிட்டோர் அணிக்கு திரும்பியிருக்கிறார்கள். ஒரு நாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட லிவிஸ் கிரிகோரி, ஜாக் பால், சகிப் மமூத் ஆகியோருக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் பென் ஸ்டோக்சுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது.
    பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவில் 989 புள்ளிகளுடன் தரவரிசையில் ஆசிய மண்டல அளவில் 7-வது இடத்தை பிடித்து இருக்கும் சுஷிலா தேவி அந்த மண்டல கோட்டாவின் அடிப்படையில் ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றுள்ளார்.
    ஜூடோ:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு மணிப்பூரை சேர்ந்த 26 வயது ஜூடோ வீராங்கனை சுஷிலா தேவி தகுதி பெற்று இருக்கிறார். பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவில் 989 புள்ளிகளுடன் தரவரிசையில் ஆசிய மண்டல அளவில் 7-வது இடத்தை பிடித்து இருக்கும் சுஷிலா தேவி அந்த மண்டல கோட்டாவின் அடிப்படையில் ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றுள்ளார். 

    ஆசிய மண்டலத்தில் இருந்து மொத்தம் 10 பேர் தகுதி பெற முடியும். அதில் ஒரு நாட்டுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும். சுஷிலா தேவி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி கண்டு இருப்பது இதுவே முதல்முறையாகும். 
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோர்கன் உள்பட பல வீரர்கள் விளையாடவில்லை.
    இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த 8-ந்தேதி தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக வீரர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கேப்டன் உள்பட முக்கியமான வீரர்கள் தனிமைப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதனால் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான புதிய அணியை இங்கிலாந்து களம் இறக்கியது. புதிய அணி என்றாலும் பாகிஸ்தானை 3-0 என வீழ்த்தியது.

    இந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் 16-ந்தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இங்கிலாந்து அணியில் கேப்டன் மோர்கன் உள்பட 9 பேர் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

    பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் இங்கிலாந்து டி20 அணி:-

    1. மோர்கன், 2. மொயீன் அலி, 3. பேர்ஸ்டோவ், 4. ஜேக் பால், 5. டாம் பாண்டன், 6. பட்லர், 7. டாம் கர்ரன், 8. லேவிஸ் கிரேகோரி, 9. கிறிஸ் ஜோர்டான், 10. லியம் லிவிங்ஸ்டன், 11. சகிப் மெஹ்மூத், 12. தாவித் மலான், 13. மேட் பார்கின்சன், 14. அடில் ரஷித், 15. ஜேசன் ராய், 16. டேவிட் வில்லே.
    ×