என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா
Byமாலை மலர்17 July 2021 9:46 AM GMT (Updated: 17 July 2021 9:46 AM GMT)
ஜூடோ வீரர்கள் தங்கி இருக்கும் ஓட்டல் ஒன்றின் ஊழியர்கள் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. போட்டி தொடங்க இன்னும் 6 நாட்கள் உள்ள நிலையில் வீரர், வீராங்கனைகள் தங்கும் ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி செய்தி தொடர்பாளர் மசாத் தகாயா தெரிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்பட்டவரின் பெயர், விவரம் வெளியிடப்படவில்லை. இதனால் ஒலிம்பிக் கிராமத்தில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. போட்டி நடைபெறுவதில் பாதிப்பு ஏற்படுமா என்ற சந்தேகமும் நிலவுகிறது.
ஏற்கனவே ஜூடோ வீரர்கள் தங்கி இருக்கும் ஓட்டல் ஒன்றின் ஊழியர்கள் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு காரணமாக ஒலிம்பிக் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த அச்சம் காரணமாக முன்னணி டென்னிஸ் வீரர்கள் நடால் பெடரர் ஆகியோர் விலகி உள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் 200-க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X