என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து ரோஜர் பெடரர் விலகல்
Byமாலை மலர்14 July 2021 11:20 AM GMT (Updated: 14 July 2021 11:20 AM GMT)
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறிய முன்னணி வீரர் ரோஜர் பெடரர், டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் முன்னணி டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். டென்னிஸ் தரவரிசையில் நீண்ட காலமாக நம்பர் ஒன் இடத்தில் இருந்தவர். 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். என்றாலும் கடந்த சில வருடங்களாக அவரால் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்ல முடியவில்லை.
கடைசியாக 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனை வென்றிருந்தார். இந்த வருடம் மூன்று கிராண்ட்ஸ்லாம் நடைபெற்றுள்ளது. மூன்றிலும் அவர் ஜொலிக்கவில்லை.
கடந்த வாரத்துடன் முடிவடைந்த விம்பிள்டன் டென்னிஸில் போலந்து வீரரிடம் காலிறுதியில் நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
விம்பிள்டன் டென்னிஸில் விளையாடும்போது அவருக்கு மூட்டு வலி இருந்துள்ளது. இதனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். காயத்தில் இருந்து மீள்வதற்கான நடைமுறையை தொடங்கிவிட்டதாகவும், இந்த கோடைக்காலத்தின் இறுதியில் மீண்டும் விளையாட்டுக்கு திரும்பும் நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X