என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட பல்வேறு அணிகளில் இடம்பெற்று உலகின் பல நாடுகளில் நடைபெற்றுவரும் 20 ஓவர் தொடர்களில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    செயிண்ட் கீட்ஸ்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வெய்ன் பிராவோ. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் ஓய்வு பெற்ற அவர் 20 ஓவர் ஆட்டங்களில் மட்டும் விளையாடி வருகிறார்.

    இந்த நிலையில் 37 வயதான பிராவோ 20 ஓவர் போட்டிகளில் 500 ஆட்டங்களில் விளையாடி சாதனை படைத்துள்ளார். அவர் கரீபியன் லீக் 20 ஓவர் தொடரில் செயிண்ட் கீட்ஸ்-நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு கேப்டனாக உள்ளார்.

    நேற்று நடந்த இறுதிப் போட்டியில் அந்த அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் செயிண்ட் லூசியா கிங்சை தோற்கடித்தது. இந்த போட்டி 20 ஓவரில்பிராவோவுக்கு 500-வது ஆட்டமாகும்.

    20 ஓவரில் 500 போட்டிகளில் விளையாடிய 2-வது வீரர் பிராவோ ஆவார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசை சேர்ந்த பொல்லார்ட் இந்த அரிய சாதனையை படைத்திருந்தார்.

    பிராவோ 500 போட்டிகளில் 388 இன்னிங்ஸ் விளையாடி 6,574 ரன்கள் எடுத்து உள்ளார். 540 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

    2006-ம் ஆண்டு சர்வதேச 20 ஓவர் போட்டியில் அறிமுகமான அவர் 2010-ல் டெஸ்டில் இருந்தும், 2014-ல் ஒருநாள் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார். பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட பல்வேறு அணிகளில் இடம்பெற்று உலகின் பல நாடுகளில் நடைபெற்றுவரும் 20 ஓவர் தொடர்களில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இங்கிலாந்தை பொறுத்தமட்டில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தி விட்டதால் அவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருக்கிறது. இதனால் அங்கு அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் இன்றி மக்கள் திரள்கிறார்கள்.
    புதுடெல்லி:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் 4 டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. மான்செஸ்டரில் கடந்த 10-ந் தேதி தொடங்க இருந்த 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் கொரோனா அச்சம் காரணமாக இந்திய வீரர்கள் களம் இறங்க மறுத்ததால் அந்த போட்டி கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் 4-வது டெஸ்ட் போட்டியின் போது கொரோனா பாதிப்பை சந்தித்ததாலும், அடுத்து உதவி பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மரும் கொரோனா தொற்றுக்கு ஆளானதாலும் கலக்கம் அடைந்த இந்திய அணியினர் களம் இறங்க மறுத்ததால் விறுவிறுப்பான இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிவுக்கு வராமல் போனது.

    4-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக லண்டனில் உள்ள ஓட்டலில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ரவிசாஸ்திரி உள்ளிட்ட இந்திய அணியினர், கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெறாமல் கலந்து கொண்டனர். அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பங்கேற்ற இந்த விழாவில் கலந்து கொண்டதன் விளைவாக தான் ரவிசாஸ்திரி உள்ளிட்ட இந்திய அணியின் பயிற்சியாளர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    ரவிசாஸ்திரி


    இந்த நிலையில் லண்டனில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய அணியினர் யாரும் முககவசம் அணியாமல் கலந்து கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் திலிப் தோஷி கூறுகையில், ‘ஓட்டல் நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் நான் லண்டனில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றேன். அதில் நிறைய பிரபலங்கள் மற்றும் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். இந்திய வீரர்கள் உள்பட யாரும் முககவசம் அணியாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்திய வீரர்கள் 10 நிமிடத்திற்குள் அங்கிருந்து கிளம்பி விட்டனர். இங்கிலாந்தை பொறுத்தமட்டில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தி விட்டதால் அவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருக்கிறது. இதனால் அங்கு அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் இன்றி மக்கள் திரள்கிறார்கள்.

    இருப்பினும் வீரர்கள் செல்லும் இடங்களில் மக்கள் கொஞ்சம் அதிகமாக கூடுவார்கள் என்பதால், இந்திய அணியினர் முககவசம் அணிந்து இருக்கலாம். நான் அணியில் இடம் பெற்று இருந்தால் நிச்சயம் சொந்த பாதுகாப்பு கருதி முககவசம் அணிந்து இருப்பேன்.

    5-வது டெஸ்ட் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக வர்ணணையாளரும், வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் வீரருமான மைக்கேல் ஹோல்டிங்கிடம் நான் பேசினேன். அப்போது அவர், ஐ.பி.எல். போட்டிக்கு முன்பாக இந்திய வீரர்களுக்கு போதிய காலஅவகாசம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பதால் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை. ஏற்கனவே 4-வது டெஸ்டுடன் தொடரை முடித்து கொள்ள வலியுறுத்தி இருந்தனர் என்று அவர் என்னிடம் தெரிவித்தார்’ என்றார்.

    டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இருப்பதால் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியதாக இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.
    ஐ.பி.எல். 14-வது சீசனின் 2-வது பகுதி ஆட்டங்கள் வருகிற செப்டம்பா் 19-ம்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் நடைபெறுகிறது. இந்த முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இத்தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஆர்சர் ஆகியோர் ஏற்கனவே, விலகிவிட்டார்கள். சமீபத்தில், சன்ரைசர்ஸ் அணியிலிருந்து ஜானி பேர்ஸ்டோவ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிலிருந்து கிறிஸ் வோக்ஸ் மற்றும் பட்லர், தாவித் மலான் ஆகிய வீரர்களும் ஐ.பி.எல். போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

    கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்க வேண்டிய நிலைமை உள்ளது. இதனால், ஐ.பி.எல். போட்டியிலிருந்து இவர்கள் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. 

    மேலும்,  கிறிஸ் வோக்ஸ்-க்குப் பதிலாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பென் துவார்ஷியஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

    இந்நிலையில், ஐ.பி.எல். 2021 போட்டியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து கிறிஸ் வோக்ஸ் கூறியதாவது,“ டி20 உலகக் கோப்பை அணியில் நான் இடம்பெறுவேன் என எனக்குத் தெரியாது. ஐ.பி.எல். போட்டியின் அட்டவணை மாற்றப்பட்டது.

    டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் போட்டி என அடுத்தடுத்து முக்கியமான போட்டிகள் உள்ளது. இதனால், குறைந்த நாட்களில் நிறைய ஆட்டங்களில் விளையாட வேண்டிய நிலைமை ஏற்படும். ஐ.பி.எல். போட்டியில் விளையாட வேண்டும் என்று எனக்கும் விருப்பம்தான். ஆனால், ஏதாவது ஒரு போட்டியிலிருந்து விலக வேண்டிய நிலைமை உள்ளது. இந்த முடிவை எடுக்காவிட்டால் எந்த போட்டியிலும் விளையாட முடியாத நிலைமை ஏற்படும்'' என கூறினார்.
    ஐக்கிய அரபு அமீரகம் வந்தடைந்த போதிலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் சாம் கரன் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, புஜாரா மற்றும் மொயீன் அலி ஆகியோர் கடந்த சனிக்கிழமை துபாய் வந்தனர்.  ஆனால்,  இந்தியா டெஸ்ட் தொடரில் விளையாடிய சி.எஸ்.கே. ஆல்-ரவுண்டர் சாம் கரன் அவர்களுடன் வரவில்லை.

    இதனால், சாம் கரன் வருகைக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.  இன்று  அவர் ஐக்கிய அரபு அமீரகம் வந்தடைந்துள்ளார். அவரது வருகை குறித்து சி.எஸ்.கே. அணி நிர்வாகம் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    பிரிட்டனில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வருபவர்கள் கட்டாயம் ஆறு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால், சாம் கரன் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி உடனான முதல் ஆட்டத்தில் அவர் விளையாடமாட்டார். அடுத்த ஆட்டத்தில் இருந்து தொடர்ந்து விளையாடுவார். ஏற்கனவே டு பிளிஸ்சிஸ் காயம் காரணமாக விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் நான்கு வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சவால் காத்திருக்கிறது. சாம் கரன் தொடரின் முதல் பகுதி ஆட்டங்களில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டூ பிளிஸ்சிஸ்-க்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வருகிற ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
    ஐ.பி.எல். தொடர் வரும் செப்டம்பர் 19-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதனால், ரசிகர்கள் ஐ.பி.எல். தொடரை எதிர்பார்த்து ஆவலுடன் இருக்கின்றனர்.

    கரீபியன் லீக் கிரிக்கெட் தொடரில், செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்காக தென்ஆப்பிரிக்காவின் டு பிளிஸ்சிஸ் விளையாடி வந்தார். இதில் காயம் காரணமாக அரையிறுதிப் போட்டியில் டு பிளிஸ்சிஸ் பங்கேற்கவில்லை.

    வருகிற ஞாயிற்றுக்கிழமை ஐ.பி.எல். தொடர் தொடங்குகிறது.  இந்நிலையில், டு பிளிஸ்சிஸின் காயம் இன்னும் சரியாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஐ.பி.எல். தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்று பல தரப்பில் கேள்விகள் எழுகின்றன.  இதனால், சென்னை அணி நிர்வாகத்தை கவலையடையச் செய்துள்ளது.

    ஐ.பி.எல். முதல் பாதித் தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கிய டு பிளிஸ்சிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐ.பி.எல். தொடரின் முதல் பாதியில் நடைபெற்ற ஆட்டங்களில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    ஐ.பி.எல். 2021 சீசன் இந்தியாவில் நடைபெற்றது. கொரோனா 2-வது அலை உச்சநிலையை அடைந்தபோது போட்டி நடைபெற்றதால் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பாதி ஆட்டங்கள் முடிந்த நிலையில் பாதுகாப்பு வளையத்தையும் மீறி வைரஸ் தொற்றால் வீரர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் ஐ.பி.எல். தொடர் ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

    மீதமுள்ள ஆட்டங்கள் ஐ.பி.எல். 2021 சீசன் 2-வது பகுதியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட இருக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 19-ந்தேதி (ஞாயிறு) நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த நிலையில் நாளையில் இருந்து போட்டிகளை ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்க ஐ.பி.எல். அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது. 

    இதுவரை நேரில் சென்று கிரிக்கெட்டை பார்க்க முடியாத ரசிகர்கள் தற்போது நேரில் கண்டுகளிப்பதுடன், அவர்களுக்கு பிடித்தமான அணிக்கு ஆதரவையும் தெரிவிக்கலாம்.

    துபாயில் 13 ஆட்டங்களும், ஷார்ஜாவில் 10 ஆட்டங்களும், அபு தாபியில் 8 ஆட்டங்களும் நடைபெற இருக்கின்றன.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா 2007 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ‘பவுல்-அவுட்’ வெற்றியின் நீங்கா நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முதன்முதலாக கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னதாக தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. குரூப் சுற்றில் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானை பவுல்-அவுட் முறையில் வீழ்த்தியது.

    டர்பனில் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் 20 ஓவர்கள் முடிவில் 141 ரன்களை எடுத்ததால் போட்டி டை-யில் முடிந்தது. அதனால் ‘பவுல்-அவுட்’ முறை கடைபிடிக்கப்பட்டது.

    அந்த போட்டியின் பவுல்-அவுட்டில் இந்தியாவின் சேவாக், ஹர்பஜன் பந்தை வீசி ஸ்டம்புகளை தகர்த்தனர். பின்னர், மூன்றாவதாக இந்தியா சார்பில் பந்து வீசியவர் உத்தப்பா.

    இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறுகையில், ‘‘ஆட்டம் சமனில் முடிந்ததும் சக வீரர்களுடன் பவுல்-அவுட்டில் யாரெல்லாமல் பந்து வீசுவது என்பது குறித்து விவாதித்தோம். அப்போது, நான் டோனியிடம் நேராக சென்று நான் பந்து வீசுகிறேன் என்று சொன்னதும் டோனி பதில் ஏதும் கூறாமல், நிச்சயமாக என்று கூறினார்.

    இதை நான் ஒருபோதும்  மறக்கவே மாட்டேன். டோனியின் சிறப்பான தலைமை பண்பை நான் பெருமிதம் கொள்கிறேன்.  அதுதான் கேப்டனாக டோனி விளையாடிய முதல் போட்டி. அதுமட்டுமல்லாமல், இந்த தருணத்தை ஒருபோதும் மறக்கமாட்டேன்” எனக் கூறினார்.
    மாரியப்பன் பழனிக்கு வந்தது குறித்து தகவல் அறிந்ததும் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    பழனி:

    பாராஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சேலம் மாரியப்பன் தனது குடும்பத்துடன் பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த பாராஒலிம்பிக் போட்டியில் சேலத்தை சேர்ந்த தடகளவீரரான மாரியப்பன் உயரம் தாண்டுதலில் போட்டியிட்டு வெள்ளி பதக்கம் வென்றார். பதக்கம் வென்று சாதனைபடைத்து தனது சொந்த ஊருக்கு திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாரியப்பன் தனது குடும்பத்தினருடன் பழனி கோவிலுக்கு சாமிதரிசனம் செய்ய வந்தார்.

    மதனபுரத்தில் உள்ள நாககாளியம்மன் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்து பின்னர் மலைக்கோவிலுக்கு சென்று வழிபட்டார். மேலும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். மாரியப்பன் பழனிக்கு வந்தது குறித்து தகவல் அறிந்ததும் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    மேலும் சிலர் அவருடன் இணைந்து செல்பியும் எடுத்து கொண்டனர். இதனையடுத்து மாரியப்பன் சேலத்துக்கு புறப்பட்டு சென்றார். 


    5-வது டெஸ்ட்போட்டி ரத்து செய்யப்படுவதற்கு முன்பு நள்ளிரவில் விராட்கோலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு இமெயில் அனுப்பினார் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் டேவிட் கோவர் குற்றம்சாட்டி உள்ளார்.

    லண்டன்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 5-வது டெஸ்ட்போட்டி ரத்து செய்யப்படுவதற்கு முன்பு நள்ளிரவில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு இமெயில் அனுப்பினார் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் டேவிட் கோவர் குற்றம்சாட்டி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘கடைசி நேரத்தில் போட்டியை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காக விராட் கோலி இந்த இமெயிலை நள்ளிரவில் அனுப்பினார்’ என்று அவர் கூறியுள்ளார்.

    இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான வீரேந்திர ஷேவாக், கங்குலி, டோனி ஆகியோரில் யார் சிறந்த கேப்டன் என்பது குறித்து பதில் அளித்து உள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களாக கருதப்படுபவர்கள் சவுரவ் கங்குலி, மகேந்திரசிங் டோனி. இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்கு புத்துயிர் அளித்தவர்கள்.

    கங்குலி தலைமையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றி இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை சமன் செய்து இருந்தது. 2002-ல் இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் கோப்பையை வென்றது. 2003-ல் உலக கோப்பை இறுதிப்போட்டி வரை வந்தது.

    டோனி தலைமையில் இந்திய அணி 2 உலக கோப்பையை (2007-ல் 20 ஓவர், 2011-ல் ஒருநாள் போட்டி) கைப்பற்றியது. அதோடு ஐ.சி.சி. சாம்பியன் டிராபியை 2013-ல் வென்று கொடுத்தார் டோனி. முதல் முறையாக இந்திய அணியை டெஸ்டில் நம்பர் ஒன் இடத்துக்கும் கொண்டு வந்தார்.

    வீரேந்திர ஷேவாக்


    கங்குலி, டோனி தலைமையின் கீழ் பல வீரர்கள் விளையாடினர். அவர்களில் முக்கியமானவர் வீரேந்திர ஷேவாக். இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான அவர் இருவரில் யார் சிறந்த கேப்டன் என்பது குறித்து பதில் அளித்து உள்ளார். இது தொடர்பாக ஷேவாக் கூறியதாவது:-

    இருவருமே சிறந்த கேப்டன்கள். ஆனால் கங்குலியையே சிறந்த கேப்டனாக நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர் புதிதாக ஒருஅணியை உருவாக்கினார். நம்பிக்கைக்கு உரிய வீரர்களை தேர்ந்தெடுத்து அணியை மீண்டும் கட்டமைத்தார்.

    இந்திய அணிக்கு வெளிநாடுகளில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்று கற்றுக்கொடுத்தவர் கங்குலி ஆவார். நாங்கள் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை சமன் செய்தோம்.

    டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற கற்றுக்கொடுத்தார். கங்குலி இள மற்றும் திறமையான அணியை ஒன்று சேர்த்தார்.

    கங்குலி விட்டுச்சென்ற அந்த வேலையை டோனி சிறப்பாக தொடர்ந்தார். கங்குலி கட்டமைத்த அணியை அவர் சிறப்பாக மேம்படுத்தினார்.

    டோனி புதிய அணியை தயார் செய்ய மிகவும் அதிகமாக சிரமப்படவில்லை. இருவருமே சிறந்த கேப்டன்கள் ஆவார்கள். ஆனால் எனது கருத்து என்னவென்றால் கங்குலிதான் சிறந்த கேப்டன் ஆவார்.

    இவ்வாறு ஷேவாக் கூறி உள்ளார்.
    இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா வீரர் குயிண்டன் டி காக் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.
    கொழும்பு:

    தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரில் இலங்கை 2-1 என வென்று தொடரைக் கைப்பற்றியது.

    இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் 2 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வென்று முன்னிலை பெற்றிருந்தது.

    இந்நிலையில் இலங்கை, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.  
     
    அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குசால் பெராரா 39 ரன்கள் எடுத்தார்.  
     
    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபடா, பார்ச்சுன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    விக்கெட் வீழ்த்திய மார்கிராமை பாராட்டும் சக வீரர்கள்

    இதையடுத்து, 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஹென்ரிக்ஸ், டி காக் பொறுப்புடன் ஆடினர். இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 14.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டி காக் 59 ரன்னுடனும், ஹென்ரிக்ஸ் 56 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 3-0 என தொடரை முழுமையாக கைப்பற்றியது.

    யார்க்கர் மன்னனாக திகழ்ந்த இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.
    இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா தனது அபார பந்து வீச்சால் உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்தார். நேர்த்தியான யார்க்கர் பந்து வீச்சால் நட்சத்திர பேட்ஸ்மேன்களையும் திணற வைத்தவர். ஒரே ஓவரில் நான் விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியவர்.

    ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்த மலிங்கா, கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் கடந்த 2019-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

    இந்த நிலையில் தற்போது டி20 போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். இதன்மூலம் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து மலிங்கா விடைபெற்றுள்ளார்.

    38 வயதாகும் மலிங்கா 2004-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி டெஸ்ட் போட்டியிலும், ஜூலை 17-ந்தேதி ஒருநாள் போட்டியிலும், 2006-ம் ஆண்டு ஜூன் 15-ந்தேதி டி20 போட்டியிலும் இலங்கை அணிக்காக அறிமுகம் ஆனார்.

    30 டெஸ்ட் போட்டிகளில் 101 விக்கெட்டுகளும், 226 ஒருநாள் போட்டிகளில் 338 விக்கெட்டுகளும், 84 டி20 போட்டிகளில் 107 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் 6 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட் வீழ்த்தியது அவரின் சிறந்த பந்து வீச்சாகும்.
    ×