என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மயங்க் அகர்வால் 62 ரன்களும், புஜரா 47 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கம் கொடுக்க, இந்தியாவின் முன்னிலை 439 ரன்களை தாண்டியுள்ளது.
    வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும்  2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாளான இன்று மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி நியூஸிலாந்தை விட 405 ரன்கள் கூடுதலாக பெற்று வலுவான நிலையில் உள்ளது.

    மூன்றாம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 325 ரன்கள் எடுத்தது.  மயங்க் அகவர்வால் 150 ரன்கள் குவித்தார். நியூஸிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் இந்திய அணியின் 10 விக்கெட்டையும் கைப்பற்றி சாதனை படைத்தார்.
    பின்னர் நேற்று முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி 62 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

    இதையடுத்து நியூஸிலாந்து பாலோ ஆன் ஆனது. ஆனாலும், இந்திய அணி 263 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடி வருகிறது. 

    இன்று மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் அடித்திருந்தது. மயங்க் அகர்வால் 2-வது இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடி 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புஜாரா 47 ரன்கள் அடித்தார்.

    விராட் கோலி

    உணவு இடைவேளையின்போது கில் 17 ரன்களுடனும், கோலி 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் முலம் இந்திய அணி 405 ரன்கள் கூடுதலாக பெற்று வலுவான நிலையில் உள்ளது.

    உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இந்தியா டிக்ளேர் செய்யாமல் தொடர்ந்து விளையாடியது. 53 ஓவரில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.

    தற்போது வரை இந்தியா 439 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
    ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா? என்பதில் கேள்வி எழுந்தது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற் குழுவில் நேற்று ஆலோசிக்கப்பட்டது.

    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிகாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் நான்கு 20 ஓவர் போட்டிகளில் விளையாட திட்டமிட்டது.

    இதற்கான போட்டி அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

    அதன்படி முதல் டெஸ்ட் போட்டி வருகிற 17-ந்தேதி ஜோகன்ஸ்பர்க்கில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்காக இந்திய அணி வருகிற 8 அல்லது 9-ந்தேதி தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு செல்ல இருந்தது.

    இந்த நிலையில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா? என்பதில் கேள்வி எழுந்தது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற் குழுவில் நேற்று ஆலோசிக்கப்பட்டது.

    அதன்படி இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்வது ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 17-ந்தேதி தொடங்க இருந்தது. தற்போது இந்த டெஸ்ட் வருகிற 26-ந் தேதி செஞ்சூரியனில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந்தேதி ஜோகன்ஸ்பர்க்கிலும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 11 அல்லது 12-ந்தேதி கேப்டவுனில் தொடங்கலாம் என்றும் தெரிகிறது.

    டெஸ்ட் போட்டிக்கு பிறகு 3 ஒருநாள் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இரு அணிகள் இடையேயான நான்கு 20 ஓவர் போட்டிகள் தள்ளி வைக்கப்படுகிறது. அது பின்னர் நடத்தப்படும்.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையே மாற்றி அமைக்கப்பட்ட டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் ஆட்டங்கள் நடைபெறும் தேதி, இடங்கள் குறித்து சில தினங்களில் கிரிக்கெட் வாரியம் அறிவிக்கும்.

    இந்திய அணி வருகிற 16-ந்தேதி மும்பையில் இருந்து தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அனில் கும்ப்ளேவின் கனிவான வார்த்தைகளும், பாராட்டும் என்னை நெகிழ வைக்கிறது என நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் தெரிவித்தார்.
    மும்பை:

    இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

    இந்நிலையில், தனது சாதனை குறித்து அவர் கூறுகையில், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச்சிறந்த நாட்களில் இதுவும் ஒன்று என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அஜாஸ் படேல் கூறுகையில், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச்சிறந்த நாட்களில் இதுவும் ஒன்று. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இதை என்னால் நம்ப முடியவில்லை. 

    இந்தச் சாதனையை மும்பையிலேயே (பிறந்த ஊர்) நிகழ்த்திய வகையில் நான் அதிர்ஷ்டசாலி. நிச்சயம் எனக்கு மட்டுமல்ல, எனது குடும்பத்துக்கும் இது மிகவும் சிறப்பு வாய்ந்த தருணமாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக அவர்கள் இங்கு வர முடியவில்லை.

    முந்தைய நாள் இரவில் வான்கடே ஸ்டேடியத்தில் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தும் வீரர்களின் பெயரைப் பதித்து பெருமைப்படுத்தும் போர்டை பார்த்தேன். அதில் எனது பெயரும் இடம் பெற வேண்டும் என விரும்பினேன். ஆனால் இப்படிப்பட்ட சிறப்புகளோடு இணையும் என்று எதிர்பார்க்கவில்லை.

    இதற்கு முன் கும்ப்ளே 10 விக்கெட்டுகள் வீழ்த்திய வீடியோ காட்சிகளை பலமுறை பார்த்துள்ளேன். அவரது கனிவான வார்த்தைகளும், பாராட்டும் நெகிழ வைக்கிறது. 10 விக்கெட் சாதனை பட்டியலில் அவருடன் பணிவோடு இணைகிறேன் என தெரிவித்துள்ளார்.

    வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் அரை சதமடித்தார்.
    டாக்கா:

    வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

    அதன்படி, பாகிஸ்தானின் தொடக்க வீரர்களாக அபித் அலி, அப்துல்லா ஷபிக் களமிறங்கினர். அபித் அலி 39 ரன்னிலும், ஷபிக் 25 ரன்னிலும் அவுட்டாகினர். 

    அடுத்து இறங்கிய அசார் அலியுடன், கேப்டன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. பாபர் அசாம் பொறுப்புடன் அரை சதமடித்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 57 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அசார் அலி 36 ரன்னும், கேப்டன் பாபர் அசாம் 60 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
    நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தற்போது இந்திய அணி 332 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
    மும்பை:

    இந்தியா, நியூசிலாந்துக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடி 150 ரன்கள் குவித்தார்.

    நியூசிலாந்து சார்பில் பந்துவீசிய அஜாஸ் படேல் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.

    கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 1956-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் ஜிம் லேக்கர் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்தார்.

    அவரை தொடர்ந்து, 1999-ம் ஆண்டு இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அனில் கும்ப்ளே பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்தார்.

    இந்நிலையில், இவர்களைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய சாதனைப் பட்டியலில் மூன்றாவது வீரராக நியூசிலாந்தைச் சேர்ந்த அஜாஸ் படேலும் இணைந்துள்ளார்.

    அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி, சிந்துவிடம் தோல்வி அடைந்தார்.
    பாலி:

    இந்தோனேசியாவின் பாலி நகரில் உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனை போன்பவி சோச்சுவாங்கிடம் தோல்வியடைந்தார். இதன்மூலம், குரூப்-ஏ பிரிவில் சிந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். சோச்சுவாங் முதலிடத்தை பிடித்தார்.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் குரூப்-பி பிரிவில் இடம் பெற்றிருந்த ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி, இந்தியாவின் பி.வி.சிந்துவை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையே போட்டி கடுமையாக இருந்தது. முதல் செட்டை 21-15 என்ற புள்ளிக்கணக்கில் சிந்துவும், இரண்டாவது செட்டை 15-21 என்ற புள்ளிக் கணக்கில் அகானேவும் கைப்பற்றினர்.  மூன்றாவது செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றிய சிந்து வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
    இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார்.
    மும்பை

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது.  முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும், சகா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இரண்டாவது நாளான இன்று காலை ஆட்டம் தொடர்ந்த நிலையில் மேலும் 2 ரன்கள் சேர்த்த சகா ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமல் அஜாஸ் படேல் பந்துவீச்சிற்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.  பின்னர் வந்த அக்ஸர் படேல் மயங்க் அகர்வால் உடன் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். 

    அரைசதம் அடித்த அக்ஸர், 52 ரன்களை எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். எனினும்  தொடர்ந்து விளையாடிய மயங்க் அகர்வால் 150 ரன்களை குவித்த நிலையில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களுடன் வெளியேற இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 325 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. 

    10 விக்கெட் கைப்பற்றிய அஜாஸ் பட்டேலுக்கு வாழ்த்து தெரிவிக்கும் சக வீரர்கள்

    இந்தப் போட்டியில் மும்பையை பூர்வீகமாக கொண்ட நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 47.5 ஓவர்கள் வீசி இந்திய அணியின் 10 விக்கெட்களையும் கைப்பற்றி புதிய சாதனை படைத்தார்.  

    இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து வீரர்கள் ஆரம்பம் முதலே இந்திய வீரர்களின் சுழல் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். 28.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த நியூஸிலாந்து அணி 62 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக  ஜேமிசன் 17 ரன்களும், லாதம் 10 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னுடன் வெளியேறினர். 

    இந்தியா தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்களை வீழ்த்தினார். சிராஜ் 3 விக்கெட்டுகளும், அக்ஸர் படேல் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட் எடுத்தார். 

    இதையடுத்து நியூஸிலாந்து பாலோ ஆன் ஆனது. ஆனாலும், பாலோ ஆன் கொடுக்காத இந்திய அணி 263 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடி வருகிறது. 
    நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 47.5 ஓவர்கள் வீசி இந்திய அணியின் 10 விக்கெட்களையும் கைப்பற்றி புதிய சாதனை படைத்தார்.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். 

    புஜாரா, கேப்டன் விராட் கோலி டக்அவுட்டில் வெளியேறிய நிலையில்  இந்திய அணி 90 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர்  மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் அடித்திருந்தது. மயங்க் 120 ரன்களுடனும், சகா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இரண்டாவது நாளான இன்று காலை மேலும் 2 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் சகா ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய ரவிச்சந்திரன் அஷ்வின் ரன் எதுவும் எடுக்காமல் அஜாஸ் படேல் பந்துவீச்சிற்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.  பின்னர் வந்த அக்ஸர் படேல், மயங்க் அகர்வால் உடன் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். 

    அரைசதம் அடித்த அக்ஸர் மேலும் 2 ரன்களை சேர்த்தநிலையில் ஆட்டமிழந்தார். எனினும்  தொடர்ந்து விளையாடிய  மயங்க் அகர்வால் 150 ரன்களை குவித்த நிலையில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். மயங்க் அடித்த 150 ரன்களில் 17 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களும் அடங்கும். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களுடன் வெளியேற இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 325 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. 

    இந்தப் போட்டியில் மும்பையை பூர்வீகமாக கொண்ட நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 47.5 ஓவர்கள் வீசி இந்திய அணியின் 10 விக்கெட்களையும் கைப்பற்றி புதிய சாதனை படைத்தார்.  

    இதற்கு முன்னதாக சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு வீரர்கள் மட்டுமே ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் என்ற சாதனையை படைத்திருந்தனர். 

    அதன்படி, 1956-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் வலது கை சுழற்பந்து வீச்சாளர் ஜிம் லெகர் 53 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை முதல் முறையாக படைத்தார். 

    ஜிம் லெகருக்கு அடுத்தபடியாக 1999-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ளே 76 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 

    தற்போது, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஜிம் லேகர், அனில் கும்ளே இடம்பெற்றுள்ள சாதனை பட்டியலில் 3-வது நபராக நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் இணைந்துள்ளார். 
    இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துடன் விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடர் முடிந்த நிலையில் தற்போது 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் நடைபெற்று வருகிறது. 7-ந் தேதியுடன் நியூசிலாந்துடனான போட்டி முடிவடைகிறது.

    இதைத்தொடர்ந்து இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, நான்கு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு உள்ளது. 

    இந்தநிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இதனால் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா என்ற கேள்வி எழுந்தது.

    இந்நிலையில் பி.சி.சி.ஐ.யின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் கங்குலி தலைமையில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா உள்பட அதன் முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியுடனான  தொடர், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள், ஒமைக்ரான் அச்சுறுத்தல் உள்பட தற்போதைய சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து  இரு அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் பங்கேற்கும் மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஜெய்ஷா  தெரிவித்துள்ளார்.  இரு அணிகள் பங்கேற்கும் முதல் டெஸ்ட் போட்டி இம்மாதம் 26ம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ உறுதி செய்துள்ளது. 
    இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்வது உறுதி செய்யப்பட்டாலும் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துடன் விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடர் முடிந்த நிலையில் தற்போது 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் நடைபெற்று வருகிறது. 7-ந் தேதியுடன் நியூசிலாந்துடனான போட்டி முடிவடைகிறது.

    இதைத்தொடர்ந்து இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, நான்கு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு உள்ளது. வருகிற 9-ந் தேதி இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டு செல்லும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    முதல் டெஸ்ட் போட்டி வருகிற 17-ந் தேதி ஜோகன்ஸ் பெர்க்கில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இதனால் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    கங்குலி

    இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா செல்லுமா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) முடிவு செய்கிறது. பி.சி.சி.ஐ.யின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் கங்குலி தலைமையில் கொல்கத்தாவில் இன்று நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் தென் ஆப்பிரிக்கா தொடர் குறித்து இறுதி முடிவு செய்யப்படும். இதைதவிர மேலும் ஐ.பி.எல். போட்டி, வீரர்கள் ஏலம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    தென் ஆப்பிரிக்கா பயணத்திற்கு இந்த கூட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்திய அணி திட்டமிட்டபடி தென் ஆப்பிரிக்கா செல்கிறது. கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி ஒருவர் இதை உறுதி செய்தார்.

    அதேநேரத்தில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து இந்த தொடரின் போது கூடுதல் கவனம் செலுத்தப்படும். இது குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும்.

    இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்வது உறுதி செய்யப்பட்டாலும் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    வருகிற 17-ந் தேதி தொடங்க இருந்த முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ந் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 9 நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ரகானே நீக்கப்பட்டார். முதல் டெஸ்டில் கேப்டனாக இருந்தஅவர் மோசமான ஆட்டம் காரணமாக கழற்றி விடப்பட்டு உள்ளார்.

    அவரது துணை கேப்டன் பதவியும் கேள்விக்குறியாக உள்ளது. தென் ஆப்பிரிக்கா பயணத்தின் போது ரகானேவின் துணை கேப்டன் பதவி பறிக்கப்படுகிறது. ரோகித்சர்மா துணை கேப்டனாக நியமிக்கப்படுகிறார்.

    இதையும் படியுங்கள்... ஒமைக்ரான் வைரஸ் இதுவரை 38 நாடுகளில் பரவியுள்ளது

    132 ஆண்டுகளுக்குப் பின் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் அணியை வழிநடத்தி சாதனை படைத்துள்ளனர்.
    மும்பை:

    இரு டெஸ்ட் போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் அணியை வழிநடத்துவது கிரிக்கெட்டில் மிகவும் அரிதான சம்பவமாகும். இதற்கு முன் 1889-ம் ஆண்டு இரு டெஸ்ட் போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் செயல்பட்டிருந்தனர்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு இங்கிலாந்து அணி பயணம் செய்தபோது தென் ஆப்பிரிக்க அணிக்கு ஓவன் டன்னல், வில்லியம் மில்டன் என இரு போட்டிகளுக்கு இரு கேப்டன்கள் இருந்தனர். அதேபோல, இங்கிலாந்து அணிக்கு ஆப்ரே ஸ்மித், மான்டி பவுடன் என இரு கேப்டன்கள் செயல்பட்டனர்.

    இந்நிலையில், 132 ஆண்டுகளுக்கு பிறகு 2 டெஸ்ட் போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் செயல்பட்டு அணியை வழிநடத்தி சாதனை படைத்துள்ளனர்.

    இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

    கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி கேப்டனாக ரகானே பொறுப்பேற்றார். மும்பையில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டிக்கு  கேப்டன் விராட் கோலி வந்துவிட்டதால், ரகானே அமரவைக்கப்பட்டார். 

    அதேபோல், நியூசிலாந்து அணியில் கான்பூர் டெஸ்ட் போட்டிக்கு வில்லியம்சன் கேப்டன் பொறுப்பேற்றார். வில்லியம்சனுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டதால், மும்பை டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதில் கேப்டன் பொறுப்பை டாம் லாதம் கவனிக்கிறார்.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை வீரர் தனஞ்செயா டி சில்வா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
    காலே:

    இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் காலே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை முதல் இன்னிங்சில் 204 ரன்னில் ஆல்அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரர் நிசாங்கா 73 ரன்கள் எடுத்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் வீரசமி பெர்மவுல் 5 விக்கெட்டும் ஜோமேல் வாரிகன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 253 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. கேப்டன் பிராத்வெயிட் 74 ரன்கள் எடுத்தார்.

    இலங்கை சார்பில் ரமேஷ் மெண்டிஸ் 6 விக்கெட்டும், எம்புல்டெனியா, ஜெயவிக்ரமா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

    தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 345 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. அந்த அணியின் நிசங்கா அரை சதமடித்து ஆட்டமிழந்தார். தனஞ்செயா டி சில்வா பொறுப்புடன் ஆடி 155 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் பெர்மவுல் 3 விக்கெட்டும், ராஸ்டன் சேஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆனால் இலங்கை அணியின் பந்து வீச்சில் சிக்கி 132 ரன்னில் ஆல் அவுட்டானது. பானர் 44 ரன்னும், பிளாக்வுட் 36 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை அணி சார்பில் எம்புல்டெனியா மற்றும் ரமேஷ் மெண்டிஸ் தலா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். இதன் மூலம் இலங்கை அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொட்ரை 2-0 என கைப்பற்றியது.

    ஆட்ட நாயகன் விருது தனஞ்செயா டி சில்வாவுக்கும், தொடர் நாயகன் விருது ரமேஷ் மெண்டிசுக்கும் வழங்கப்பட்டது.

    ×