என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன்- பி.வி.சிந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்4 Dec 2021 12:08 PM GMT (Updated: 4 Dec 2021 12:41 PM GMT)
அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி, சிந்துவிடம் தோல்வி அடைந்தார்.
பாலி:
இந்தோனேசியாவின் பாலி நகரில் உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனை போன்பவி சோச்சுவாங்கிடம் தோல்வியடைந்தார். இதன்மூலம், குரூப்-ஏ பிரிவில் சிந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். சோச்சுவாங் முதலிடத்தை பிடித்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் குரூப்-பி பிரிவில் இடம் பெற்றிருந்த ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி, இந்தியாவின் பி.வி.சிந்துவை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையே போட்டி கடுமையாக இருந்தது. முதல் செட்டை 21-15 என்ற புள்ளிக்கணக்கில் சிந்துவும், இரண்டாவது செட்டை 15-21 என்ற புள்ளிக் கணக்கில் அகானேவும் கைப்பற்றினர். மூன்றாவது செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றிய சிந்து வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X