என் மலர்
விளையாட்டு
Just @msdhoni things. 🦁 pic.twitter.com/88ho3S6pbf
— Sharukh (@StanMSD) April 13, 2022
எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி, ஜி.கே.எம். கைப்பந்து பவுண்டேசன் மற்றும் லேடி சிவசாமி அய்யர் பள்ளி ஆகியவை இணைந்து மாநில அளவிலான மகளிர் அழைப்பு கைப்பந்து போட்டியை சென்னையில் நடத்துகிறது.
பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் ஆகிய 2 பிரிவில் நடைபெறும் இந்தப் போட்டி மைலாப்பூரில் உள்ள லேடி சிவசாமி பள்ளியில் நாளை (14-ந் தேதி) தொடங்குகிறது. வருகிற 16-ந் தேதி வரை 3 நாட்கள் போட்டி நடக்கிறது.
பெண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம்., பி.கே.ஆர்., எஸ்.டி.ஏ.டி, ஐ.சி.எப், தமிழ்நாடு போலீஸ், டாக்டர் சிவந்தி கிளப், ஜி.கே.எம். பவுண்டேஷன், பாரதியார் ஆகிய 8 அணிகளும், பள்ளிகள் பிரிவில் லேடி சிவசாமி, வேலம்மாள், டி.ஏ.வி, ஆவடி அரசு பள்ளி உள்ளிட்ட 8 அணிகளும் பங்கேற்கின்றன. லீக் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடக்கிறது.
பெண்கள் பிரிவில் முதல் 4 இடங்களுக்கு முறையே ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம், பள்ளி பிரிவில் ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இதேபோல் போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.
வெளியூரில் இருந்து பங்கேற்கும் அணிகளுக்கு தங்குவதற்கு இடம் இலவசமாக அளிக்கப்படும்.
மேற்கண்ட தகவலை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், ஜி.கே.எம். கைப்பந்து பவுண்டேஷன் தலைவர் வீரமணி ஆகியோர் தெரிவித்தனர்.
ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. தான் மோதிய 4 ஆட்டங்களிலும் தோற்று புள்ளிகள் எதுவும் பெறவில்லை.
சென்னை அணி தொடக்க போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 6 விக்கெட்டிலும், 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் பஞ்சாப் கிங்சிடம் 54 ரன் வித்தியாசத்திலும், 4-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் 8 விக்கெட்டிலும் தோற்றது.
சி.எஸ்.கே. அணி 5-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை இன்று சந்திக்கிறது. இந்தப் போட்டி மும்பை டி.ஒய். பட்டீல் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
சென்னை அணி முதல் வெற்றிக்காக இன்னும் காத்திருக்கிறது. 4 ஆட்டத்தில் தோற்றதால் நெருக்கடியில் உள்ளது. எஞ்சிய 10 ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்றால்தான் பிளேஆப் வாய்ப்பில் இருக்க முடியும். இதனால் இன்றைய ஆட்டத்தில் சி.எஸ்.கே. கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் முன்னேற்றம் இருந்தால் மட்டுமே வெல்ல இயலும். தற்போது பெங்களூரு அணி நல்ல நிலையில் இருப்பதால் அதனை வீழ்த்துவது சவாலானது.
டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளி பெற்றுள்ளது. அந்த அணி சென்னையை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
இரு அணிகளும் 29 முறை மோதியுள்ளன. இதில் சென்னை 18-ல், பெங்களூரு 9-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.
சென்னை:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல் (தமிழ்நாடு பிரீமியர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன.
இதுவரை 5 டி.என்.பி.எல். போட்டிகள் முடிந்துள்ளன. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. அந்த அணி 2017, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்றது.
டூட்டி பேட்ரியாட்ஸ் (2016), மதுரை பாந்தர்ஸ் (2018) ஆகிய அணிகள் தலா ஒரு முறை கோப்பையை கைப்பற்றி உள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக 2020-ம் ஆண்டு டி.என்.பி.எல் போட்டி நடைபெறவில்லை.
6-வது டி.என்.பி.எல். போட்டியை ஜூன் இறுதி முதல் ஜூலை இறுதி வரை நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டு உள்ளது.
இந்தநிலையில் இதுதொடர்பாக டி.என்.பி.எல். ஆட்சி மன்றகுழு கூட்டத்தில் நேற்று விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் இந்த சீசனிலும் வீரர்களை வரைவு ஒதுக்கீடு முறையில் தேர்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
டி.என்.பி.எல். போட்டி ஜூன் 27-ந் தேதி தொடங்கலாம் என்று தெரிகிறது. ஜூலை 31-ந்தேதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரம் வரை போட் நடைபெறலாம். திண்டுக்கல், நெல்லை, சேலம், கோவை ஆகிய 4 இடங்களில் போட்டி நடத்தப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி கூறியதாவது:-
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதமபரம் மைதானத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் இந்த சீசனில் இல்லை. சேலம், கோவையில் மின்னொளி வசதி உள்ளன. அங்கு 4 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் உள்ளன.
வீரர்கள் தேர்வு வரைவு ஒதுக்கீடு முறையில் இருந்து ஏலத்துக்கு கொண்டு செல்ல நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஆனால் இந்த மாற்றம் அடுத்த ஆண்டில் இருந்து மட்டுமே அமல்படுத்தப்படும். இது தொடர்பாக அணிகளின் உரிமையாளர்களு டன் விவாதித்துள்ளோம். அனைத்து அணி உரிமையாளர்களும் ஏலம் முறை சிறந்தது என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த ஆண்டும் வரைவு ஒதுக்கீடு பட்டியலில் இருந்து வீரர்கள் தேர்வு முறை நீடிக்கும். நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ்.சுக்காக ஸ்பான்சரை தேடி வருகிறோம்.
ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்சிடம் உறுதி செய்த பிறகு போட்டி அட்டவணை வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






