search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹர்த்திக் பாண்ட்யா"

    • ஒரு பந்து எஞ்சி இருந்த நிலையில் தான் இந்த வெற்றியை பெற முடிந்தது.
    • எங்களை விட அவர்களது பந்து வீச்சு அதிகம் ஸ்பின் ஆனது.

    லக்னோ:

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது.

    லக்னோவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 100 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    கேப்டன் சான்ட்னெர் அதிகபட்சமாக 19 ரன் எடுத்தார். அர்ஷ்தீப்சிங் 2 விக்கெட்டும், ஹர்த்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், யசுவேந்திர சாஹல், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    100 ரன் இலக்கை எடுக்க இந்திய அணி போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு பந்து எஞ்சி இருந்த நிலையில் தான் இந்த வெற்றியை பெற முடிந்தது.

    இந்திய அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 101 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சூர்யகுமார் யாதவ் 26 ரன்னும் (அவுட் இல்லை), இஷான் கிஷன் 19 ரன்னும், ஹர்த்திக் பாண்ட்யா 15 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தனர். பிரேஸ்வெல், சோதி தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    இந்த நிலையில் லக்னோ ஆடுகளம் குறித்து கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா அதிருப்தி தெரிவித்து உள்ளார். இந்த பிட்ச் மிகுந்த அதிர்ச்சி அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். போட்டி முடிந்த பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    ஆட்டத்தை முடித்து விடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் மிகவும் தாமதமாகி விட்டது. உண்மையை சொல்ல போனால் இந்த ஆடுகளம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரு அணி வீரர்களுமே பிட்ச் குறித்து அதிருப்தியை வெளியிட்ட னர். 20 ஓவர் போட்டிக்கு ஏற்ற ஆடுகளம் இதுவல்ல.

    கடைசி நேரத்தில் பிட்ச்களை தயார் செய்தால் இது போன்று தான் இருக்கும். எனவே முன் கூட்டியே தயார்படுத்தி இருக்க வேண்டும். 120 ரன் என்பது நல்ல ஸ்கோராகும். பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எங்களை விட அவர்களது பந்து வீச்சு அதிகம் ஸ்பின் ஆனது. இறுதியில் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம்.

    இவ்வாறு ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி அகமதாபாத்தில் வருகிற 1-ந்தேதி நடக்கிறது.

    • நீண்ட நாட்களுக்கு பிறகு பேட்ஸ்மேன் பிரித்வி ஷா டி20 அணிக்கு தேர்வாகி உள்ளார்.
    • சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த தொடரில் அவர் தொடக்க வீரராக களம் இறங்குவார்.

    ராஞ்சி:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய ஒருநாள் போட்டி தொடரை இந்தியா முழுமையாக (3-0) கைப்பற்றியது.

    அடுத்து இந்தியா-நியூசிலாந்து அணிகள் மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி இன்று ராஞ்சியில் நடக்கிறது.

    இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்த்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு பேட்ஸ்மேன் பிரித்வி ஷா அணிக்கு தேர்வாகி உள்ளார். அவருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    இது தொடர்பாக கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த தொடரில் அவர் தொடக்க வீரராக களம் இறங்குவார். பிரித்விஷா வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்.

    முக்கியமான இரண்டு பந்து வீச்சாளர்களுக்கு (முகமது ஷமி, முகமது சிராஜ்) ஓய்வு கொடுத்து இருப்பதால் எங்களுக்கு நெருக்கடி எதுவும் இல்லை.

    புதிய பந்தில் பந்து வீசுவதை நான் எப்போதும் ரசித்து வருகிறேன். பல ஆண்டுகளாக நான் வலைகளில் பந்து வீசும் போதெல்லாம் புதிய பந்தை தேர்வு செய்கிறேன்.

    கடந்த ஆட்டத்தில் இரண்டு முக்கிய பந்து வீச்சாளர்கள் ஓய்வில் இருந்ததால் தொடக்கத்தில் நான் பந்து வீச தயாராக இருக்க வேண்டியிருந்தது. ஆனால் அது எப்போதும் அழுத்தமாக இருந்ததில்லை. பயிற்சியில் ஈடுபட்ட நாங்கள் டோனியை சந்தித்தோம். அவரை சந்தித்து பேசியது உற்சாகமாக இருந்தது.

    நாங்கள் ஒன்றாக விளையாடிய போது அவரிடம் இருந்து நிறைய கற்று கொண்டேன்.

    இவ்வாறு ஹர்த்திக் பாண்ட்யா கூறினார்.

    • ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் பேட்டிங்கின்போது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
    • முதல் ஆட்டம் வருகிற 10ம் தேதி அசாம் மாநிலம் கவுகாத்தில் நடக்கிறது.

    இலங்கைக்கு எதிரான 3-வது 20 ஓவர் ஆட்டத்தில் இந்திய அணி 91 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    பேட்டிங் செய்வது மிக எளிதாக இருந்ததாக சூர்யகுமார் யாதவ் சக வீரர்களிடம் தெரிவித்தார். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் பேட்டிங்கின்போது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். அவரது பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது.

    நான் அவருக்கு பந்து வீசினால் சூர்யகுமார் யாதவின் ஷாட்களை பார்த்து என் மனம் உடைந்து விடும். ராகுல் திரிபாதியும் நன்றாக ஆடினார்.

    இதேபோல அக்ஷர் படேலை நினைத்தும் நான் பெருமைப்படுகிறேன். இந்த தொடர் வீரர்களுக்கு நம்பிக்கையை அதிகரித்து உள்ளது. 20 ஓவர் போட்டியின் சிறந்த வீரர்கள் ஆவார்கள்.

    இவ்வாறு ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

    அடுத்து இந்தியா- இலங்கை அணிகள் இடையே 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 10ம் தேதி அசாம் மாநிலம் கவுகாத்தில் நடக்கிறது.

    • உலக கோப்பை போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா இந்தியாவுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்.
    • 1985-ம் ஆண்டு நடந்த சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

    மும்பை:

    ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் உலக கோப்பையில் ஆல்-ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

    உலக கோப்பை போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா இந்தியாவுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார். 1985-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலக சாம்பியன் ஷிப் போட்டியில் ஆல் ரவுண்டர் ரவி சாஸ்திரி இந்தியாவுக்காக சாதித்தது போல் ஹர்த்திக் பாண்ட்யாவால் செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.

    ரவி சாஸ்திரி பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டார். அது போன்று செய்வதில் ஹர்த்திக் வல்லவர். ஹர்த்திக் பாண்ட்யா முதுகு காயத்திலிருந்து மீண்டு வந்து சில மாதங்கள் ஆகிறது. எனவே அவரை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    ஏனென்றால் அவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மூலம் மேட்ச் வின்னராக இருப்பார். அவரது பீல்டிங்கும் அபாரமாக இருக்கிறது. ரன் அவுட் செய்வதும் ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பும்.

    1985-ம் ஆண்டில் ரவி சாஸ்திரி போல் ஹர்த்திக் பாண்ட்யா செயல்பட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    1985-ம் ஆண்டு நடந்த சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இத்தொடரில் ரவி சாஸ்திரி 5 ஆட்டத்தில் 182 ரன்னும், 8 விக்கெட்டும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனியின் சாதனையை ஹர்த்திக் பாண்ட்யா சமன் செய்துள்ளார்.
    • இந்த போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் 33 ரன்கள் எடுத்திருந்தார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று மோதின. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது.

    இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்த்திக் பாண்ட்யா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்த போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் 33 ரன்கள் எடுத்திருந்தார்.

    இதன் மூலம் ஹர்த்திக் பாண்ட்யா ஒரு போட்டியில் 30-க்கு அதிகமான ரன்கள் மற்றும் 3 விக்கெட்களை எடுத்த இந்திய வீரர் என்ற யுவராஜ் சிங்கின் சாதனையை ஹர்த்திக் பாண்ட்யா தகர்த்துள்ளார்.

    ஹர்திக் பாண்டியா மூன்று முறையும், யுவராஜ் 2 முறையும் 30-க்கு அதிகமான ரன்கள் மற்றும் 3 விக்கெட்களை எடுத்துள்ளனர்.

    மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடைசி கட்ட ஓவர்களில் (16 - 20) அதிக சிக்சர்களை அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற டோனியின் சாதனையையும் இவர் சமன் செய்துள்ளார்.

    அந்தப் பட்டியலில் ஹர்திக் பாண்டியா (34*) இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி (34) இவர்களுக்கு அடுத்தப்படியாக யுவராஜ் சிங் (31) உள்ளார்.

    • ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் பும்ரா காயம் காரணமாக விலகி உள்ளார்.
    • ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது.

    15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 27-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா, 7 முறை கோப்பையை வென்ற அணியாக உள்ளது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் ஹர்த்திக் பாண்ட்யா பயிற்சியில் ஈடுபடும் போது பும்ரா போல பந்து வீசி வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் "எப்படி இருக்கிறது பூம்?" சிரிக்கும் ஈமோஜியுடன் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் பும்ராவை போல் பந்து வீசுவது போலவும் அதை கொண்டாடுவதும் போலவும் இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    அவரது செயல் மற்றும் கொண்டாட்டம் இரண்டையும் பும்ரா பாராட்டினார். மேலும் க்ருணால் பாண்ட்யா மற்றும் பொல்லார்ட் இருவரும் வீடியோவிற்கு கமெண்ட் செய்தனர்.


    ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் பும்ரா காயம் காரணமாக விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 28-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடுகிறது.

    • உலக அளவில் பாகிஸ்தானின் முஹமது ஹஃபீசுக்கு பின்பு இந்த அரிதான சாதனையை செய்யும் 2-வது வீரராக பாண்ட்யா உள்ளார்.
    • பாண்ட்யா தான் முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் இதனை சாதித்துள்ளார்.

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருதை ஹர்த்திக் பாண்ட்யா தட்டிச் சென்றார்.

    இந்த போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீச்சில் 4 விக்கெட்டும் பேட்டிங்கில் 71 ரன்களும் எடுத்திருந்தார். இதன் மூலம் அவர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் நடந்த ஒரு போட்டியில் 50+ ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை பாண்ட்யா படைத்துள்ளார்.

    இதற்கு முன் ஸ்ரீகாந்த் (1988), சச்சின் (1998), கங்குலி (1999 & 2000), யுவராஜ் (2008 & 2011) ஆகியோர் சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் போட்டிகளில் 50 ரன்களும் 4 விக்கெட்டுகளை எடுத்து உள்ளனர். ஆனால் பாண்ட்யா தான் முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் இதனை சாதித்துள்ளார்.

    ஹார்த்திக் பாண்ட்யா அதைவிட டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரு போட்டியில் 50+ ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார்.

    ஏற்கனவே டெஸ்ட் (52* ரன்கள் & 5/28 விக்கெட், 2018) மற்றும் டி20 கிரிக்கெட்டில் (51 ரன்கள் & 4/33 விக்கெட், 2022) அவர் 50+ ரன்களும் 4 விக்கெட்களும் இதே இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் பதிவு செய்துள்ளார். உலக அளவில் பாகிஸ்தானின் முஹமது ஹஃபீசுக்கு பின்பு இந்த அரிதான சாதனையை செய்யும் 2-வது வீரராக பாண்ட்யா உள்ளார்.

    • உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சு வேகத்தை எதிர்கொள்வது எளிதல்ல.
    • இறுதி ஓவரின்போது உண்மையை சொல்ல வேண்டுமானால் எந்த கவலையும் படவில்லை.

    டுப்ளின்:

    இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதிய 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேற்று நடந்தது.

    இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    முதலில் விளையாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 225 ரன் குவித்தது.

    3-வது வீரராக களம் இறங்கிய தீபக் ஹூடா அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 57 பந்தில் 104 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரியும் , 6 சிக்சர்களும் அடங்கும். சஞ்சு சாம்சன் 42 பந்தில் 77 ரன் ( 9 பவுண்டரி,4 சிக்சர் ) எடுத்தார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 85 பந்துகளில் 176 ரன் குவித்தது முக்கியமானதாகும்.

    அயர்லாந்து அணி தரப்பில் மார்க் ஆதிர் 3 விக்கெட்டும், ஜாஸ் லிட்டில், கிரேக் யங் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    226 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் அயர்லாந்து ஆடியது. பால் ஸ்டிர்லிங்-கேப்டன் பால்பிரீன் ஜோடி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தது. 3.5 ஓவரில் அந்த அணி 50 ரன்னை தொட்டது.

    ஸ்கோர் 72 ரன்னாக ( 5.4 ஓவர்) இருந்த போது தொடக்க ஜோடியை ரவி பிஷ்னோய் படேல் பிரித்தார். ஸ்டிர்லிங் 18 பந்தில் 40 ரன் ( 5 பவுண்டரி, 3 சிக்சர் ) எடுத்தார். அடுத்து வந்த டெலனி ரன்எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார்.

    மறுமுனையில் இருந்த கேப்டன் பால்பிரீன் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 37 பந்தில் 60 ரன்னில் வெளியேற்றப்பட்டார். அவரது ஸ்கோரில் 3 பவுண்டரியும், 7 சிக்சரும் அடங்கும். அப்போது அயர்லாந்து 10.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 117 ரன் என்ற நிலையில் இருந்தது.

    ஒரு ஓவருக்கு 12 ரன்னுக்கு மேல் தேவைப்பட்டது. அயர்லாந்து வீரர்கள் ஹேரி டெக்டரும், ஜார்ஜ் டாக்ரெலும் சளைக்காமல் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 38 ரன் தேவைப்பட்டது. கைவசம் 6 விக்கெட் இருந்தது.

    18-வது ஓவரில் புவனேஸ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி 7 ரன் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். டெக்டர் 28 பந்தில் 39 ரன் (5 பவுண்டரி) எடுத்து அவுட் ஆனார்.

    ஹர்சல் படேல் வீசிய 19-வது ஓவரில் அயர்லாந்து 14 ரன் எடுத்தது. மார்க் ஆதிர் ஒரு பவுண்டரியும், ஒரு சிக்சரும் அடித்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் 17 ரன் தேவைப்பட்டது.

    உம்ரான் மாலிக் அந்த ஓவரை வீசினார். முதல் பந்தில் ரன் கொடுக்கவில்லை. அடுத்த பந்து நோபால் ஆனது. 2-வது மற்றும் 3-வது பந்தில் அடுத்தடுத்து ஆதிர் பவுண்டரி அடித்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    கடைசி 3 பந்தில் அயர்லாந்து வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டது. ஆனால் உம்ரான் மாலிக் நேர்த்தியாக வீசி 3 ரன்களே கொடுத்தார். அயர்லாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    டாக்ரெல் 16 பந்தில் 36 ரன்னும் (3 பவுன்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். புவனேஸ்வர்குமார், ஹர்சல் படேல், உம்ரான் மாலிக், ரவி பிஸ்னோய் தலா ஒரு விக்க்ட் கைப்பற்றினார் கள்.

    இந்த வெற்றி மூலம் 2 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    வெற்றிக்கு பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கடைசி ஓவரை புதுமுக வீரரான உம்ரான் மாலிக்குக்கு கொடுத்து ஏன்? என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இறுதி ஓவரின்போது உண்மையை சொல்ல வேண்டுமானால் எந்த கவலையும் படவில்லை. நெருக்கடியில் சிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். உம்ரான் மாலிக் மீது முழு நம்பிக்கை இருந்தது.

    அவருடைய பந்துவீச்சு வேகத்தை எதிர்கொள்வது எளிதல்ல. அயர்லாந்து வீரர்கள் சிறப்பாக ஆடி வந்தனர். ஆனாலும் உம்ரான் மாலிக் நேர்த்தியாக விளையாடினார். அவர் மீதுள்ள நம்பிக்கையால் கடைசி ஓவரை கொடுத்தேன்.

    நெருக்கடியான இந்த நேரத்தில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

    இவ்வாறு ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

    • 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக ஹர்த்திக் பாண்ட்யா 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
    • ஹர்த்திக் பாண்ட்யாவை ஒரு நாள் போட்டிகளில் விளையாட வைக்கும் அபாயத்தை எடுக்கக்கூடாது.

    மும்பை:

    15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றது. தனது அறிமுக சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

    காயத்தில் இருந்து மீண்டு வந்த ஹர்த்திக் பாண்ட்யா பேட்டிங், பந்துவீச்சு, கேப்டன் என அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு பாராட்டு குவிந்தது. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

    இந்தநிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக ஹர்த்திக் பாண்ட்யா 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஹர்த்திக் பாண்ட்யா ஒரு பேட்ஸ்மேனாகவோ அல்லது ஆல்-ரவுண்டராகவோ மீண்டும் அணிக்குள் வருவார். 2 ஓவர் வீச முடியாத அளவுக்கு அவர் மோசமாக காயம் அடைந்ததாக நான் நினைக்கவில்லை.

    அவருக்கு போதுமான ஓய்வு அளிக்க வேண்டும். உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் விதமாக அவர் 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டும். அவரை ஒரு நாள் போட்டிகளில் விளையாட வைக்கும் அபாயத்தை எடுக்கக்கூடாது.

    உலக கோப்பைக்கு முன்பாக சில மாதங்களுக்கு 20 ஓவர் கிரிக்கெட்டில் மட்டுமே ஹர்த்திக் பாண்ட்யா விளையாட வேண்டும். அவர் இரண்டு வீரர்களுக்கான பணியை செய்கிறார். ஒரு பேட்ஸ்மேனாக விளையாடினால் அவர் முதல் நான்கு அல்ல ஐந்து இடங்களுக்குள் களம் இறங்க வேண்டும். ஆல்-ரவுண்டராக ஐந்து, ஆறு அல்லது நான்காவது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×