என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் கே.எல்.ராகுல், தீபக் ஹூடா ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தது.
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் சுற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. இளம் வீரர் ரஜத் படிதார் அதிரடியாக ஆடி 54 பந்தில் 112 ரன்னும், தினேஷ் கார்த்திக் 23 பந்தில் 37 ரன் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டி காக் 6 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மனன் வோரா 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கேப்டன் கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு தீபா ஹூடா நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ஹூடா 45 ரன்னில் வெளியேறினார். ஸ்டோய்னிஸ் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். தனி ஆளாகப் போராடிய ராகுல் 79 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், லக்னோ அணி 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றி 2வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

    இந்த தோல்வியின் மூலம் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய லக்னோ அணி 4வது இடத்தை தக்கவைத்தது.

    பெங்களூரு அணி சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட், சிராஜ், ஹசரங்கா, ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
    லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணியின் ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்து அசத்தியது.
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் சுற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. 
    இளம் வீரர் ரஜத் படிதார் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அவர் 54 பந்துகளில் 112 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் லக்னோ அணி விளையாடி வருகிறது.

    இந்நிலையில், இந்திய அணியில் அறிமுகம் ஆகாமல் ஐபிஎல் பிளே ஆப் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரஜத் படிதார் படைத்துள்ளார்.
    சர்வதேச செஸ் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
    சென்னை:

    செசபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டி 9 தொடர்களாக நடத்தப்படுகிறது. இதன் 4-வது தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

    இதில் விளையாடி வரும் சென்னையை சேர்ந்த 16 வயதான கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்செனை (நார்வே) வீழ்த்தி இருந்தார்.

    இவர் அரை இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தை சேர்ந்த நம்பர் ஒன் வீரரான அனிஷ்கிரியை எதிர்கொண்டார்.

    இதில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2 மணிக்கு இந்தப் போட்டி நிறைவு பெற்றது.

    பிரக்ஞானந்தா இறுதிப் போட்டியில் சீனாவை சேர்ந்த டிங்லிரனை எதிர் கொள்கிறார். அவர் அரை இறுதியில் மேக்னஸ் கார்ல்செனை சந்தித்தார்.
    கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ, டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 4 அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

    ‘பிளே ஆப்’ சுற்று நேற்று தொடங்கியது. கொல்கத்தாவில் நடந்த ‘குவாலிபையர்-1’ஆட்டத்தில் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    தோல்வி அடைந்த ராஜஸ்தானுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. அந்த அணி வருகிற 27-ந் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் ‘குவாலி பையர்-2’ ஆட்டத்தில் விளையாடுகிறது.

    ராஜஸ்தானுடன் மோதப்போவது லக்னோவா, பெங்களூரா என்பது இன்று இரவு தெரியும்.

    கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ, டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் நடைபெறும் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் ராஜஸ்தானுடன் மோதும் தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும்.

    லக்னோ அணியில் கேப்டன் லோகேஷ் ராகுல், குயின்டன் டிகாக், தீபக் ஹூடா, ஸ்டோனிஸ், மோஷின்கான், அவேஷ்கான், பிஷ்னோய் போன்ற சிறந்த வீரர்களும், பெங்களூரு அணியில் கேப்டன் டுபெலிசிஸ், மேக்ஸ்வெல், விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ஹசில்வுட், முகமது சிராஜ் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.

    இரு அணியும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.
    நான் எந்த வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்பியது இல்லை. அணிக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்கிறேன் என குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
    கொல்கத்தா:

    ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த குவாலிபையர்-1 ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன் குவித்தது. இதனால் குஜராத் அணிக்கு 189 ரன் இலக்காக இருந்தது.

    ஜோஸ்பட்லர் 56 பந்தில் 89 ரன்னும் ( 12 பவுண்டரி , 2 சிக்சர் ) , கேப்டன் சஞ்சு சாம்சன் 26 பந்தில் 47 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர் ) எடுத்தனர். முகமது ஷமி , தயாள், சாய் கிஷோர் ஹர்திக் பாண்ட்யா தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 191 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    டேவிட் மில்லர் 38 பந்தில் 68 ரன்னும் (3 பவுண்டரி, 5 சிக்சர்) , கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 27 பந்தில் 40 ரன்னும் ( 5 பவுண்டரி ) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். சுப்மன் கில் 21 பந்தில் 35 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), மேத்யூ வேட் 30 பந்தில் 35 ரன்னும் (6 பவுண்டரி) எடுத்தனர். டிரெண்ட் போல்ட், மெக்காய் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    புதுமுக அணியான குஜராத் தனது முதல் சீசனிலேயே இறுதிப் போட்டிக்குள் நுழைந்து சாதித்தது.

    குஜராத் அணியின் வெற்றிக்கு காரணமான டேவிட் மில்லரை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பாராட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் வெவ்வேறு மாதிரியானவர்கள். நான் அவர்களை மதிக்கிறேன்.

    ரஷீத்கான் பந்து வீச்சு நன்றாக இருந்தது. மீண்டும் அவருக்கு பந்து வீச்சில் நல்ல நாளாக அமைந்தது. இந்த தொடர் முழுவதும் அவர் கிரிக்கெட் பயணம் அற்புதமாக இருந்தது.

    இந்த போட்டித் தொடரில் டேவிட் மில்லர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

    நான் எந்த வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்பியது இல்லை. அணிக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்கிறேன்.

    நான் எனது வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களை சமநிலைப்படுத்த தொடங்கி விட்டேன். கடந்த 2 ஆண்டுகளாக இது ஒரு நிலையான முயற்சியாகும். என்னை சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்ற குடும்பம் உதவியது.

    இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறினார்.

    தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

    முதலில் ஆடி 188 ரன் குவித்தது மகிழ்ச்சியை அளித்தது. இது நல்ல ஸ்கோர்தான் என்று கருதினோம். ஆனால் ஈடன் கார்டன் மைதானத்தில் 2-வது பேட்டிங் செய்வது எளிதாக இருந்தது.

    இந்தப் போட்டி தொடரில் அதிர்ஷ்டம் (டாஸ்) முக்கிய பங்கு வகிக்கிறது. சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் இல்லை. அடுத்தப் போட்டியில்நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக சச்சின் டெண்டுல்கர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும், இடக்கை வேகப்பந்து வீச்சாளருமான அர்ஜூன் ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். இரண்டாவது ஆண்டாக அவருக்கு ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

    இந்நிலையில், நடப்பு ஆண்டில் ஐபிஎல்லில் அர்ஜூன் ஆட்டத்தைப் பார்க்க ஆர்வமுடன் இருந்தீர்களா? என சச்சினிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சச்சின் பதிலளித்து கூறியதாவது:

    இது வித்தியாசமான ஒரு கேள்வி. நான் என்ன நினைக்கிறேன் என்பது முக்கியமல்ல. இந்த சீசனில் மும்பை அணிக்குரிய லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிந்துவிட்டது. அர்ஜூனுடன் என்னுடைய உரையாடல் எப்போதும் இப்படித் தான் இருக்கும்.

    உன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை பாதை சவாலானது. மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. உனக்கு கிரிக்கெட் மீது ஈடுபாடு இருந்ததால் கிரிக்கெட் விளையாட தொடங்கினாய். அந்த ஆர்வம் இருந்தால் வாய்ப்பு கிடைக்கும் வரை நீ தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். அப்படிச் செய்தால் அதற்குரிய பலன் கிடைக்கும் என சொல்வேன்.

    ஆடும் லெவனில் அவரை சேர்ப்பது அணி நிர்வாகத்தின் முடிவு. அணித்தேர்வில் நான் ஒரு போதும் தலையிடுவது கிடையாது என தெரிவித்தார். 
    இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் வங்காளதேச அணியின் முஷ்பிகுர் ரஹிம் 176 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
    மிர்புர்:

    இலங்கை, வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நடைபெறுகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்தது வங்காளதேசம்.

    ஆரம்பத்தில் அந்த அணியினர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 24 ரன்னுக்குள் 5 விக்கெட் இழந்து தத்தளித்தது. 6-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிமுடன் கைகோர்த்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் சதமடித்தனர்.

    முதல் நாள் முடிவில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 115 ரன்னுடனும், லிட்டன் தாஸ் 135 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இலங்கை அணி சார்பில் கசுன் ரஜிதா 3 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. லிட்டன் தாஸ் 141 ரன்னில் அவுட்டானார். அடுத்து ஆடிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், வங்காளதேச அணி 365 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முஷ்பிகுர் ரஹீம் 175 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் . பின்னர் 
    இலங்கை சார்பில் ரஜித 5 விக்கெட்டும், ஆஷா பெர்னாண்டோ 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடியது. தொடக்க வீரர்களாக ஒஷாடா பெர்னான்டோ, கேப்டன் திமுத் கருணரத்னே களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த ஒஷாடா பெர்னான்டோ 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய கருணரத்னே அரைசதம் அடித்தார்.

    இரண்டாம் நாள் முடிவில் இலங்கை 2 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. கருணரத்னே 70 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.
    சூப்பர்நோவாஸ் அணி 18 ரன்னுக்குள் 3 விக்கெட் இழந்து தத்தளித்த நிலையில், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பாட்டியா, ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி 82 ரன்கள் சேர்த்தது.
    புனே:

    மூன்று அணிகள் இடையிலான பெண்கள் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 2-வது போட்டியில் சூப்பர்நோவாஸ், வெலாசிட்டி அணிகள் மோதின. டாஸ் வென்ற வெலாசிட்டி அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த சூப்பர்நோவாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக ஆடி 51 பந்தில் 71 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெலாசிட்டி அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 33 பந்தில் 51 ரன்கள் குவித்தார்.

    லாரா வால்வார்ட், கேப்டன் தீப்தி சர்மா ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.

    இறுதியில், வெலாசிட்டி அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் சூப்பர்நோவாஸ் அணியை வீழ்த்தியது. ஆட்ட நாயகி விருது ஷபாலி வர்மாவுக்கு அளிக்கப்பட்டது.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிசின் இரண்டாவது சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் நடால், செர்பியாவின் ஜோகோவிச் உள்ளிட்ட பலர் முன்னேறியுள்ளனர்.
    பாரிஸ்:

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று போட்டி ஒன்றில் உலகின் 2-ம் நிலை வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வதேவ், அர்ஜென்டினாவின் ஃபகுண்டோ பாக்னிஸை எதிர்த்து விளையாடினார்.

    இதில் மெத்வதேவ் 6-2, 6-2, 6-2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 

    இதேபோல், இத்தாலியை சேர்ந்த ஜானிக் சின்னர், அமெரிக்காவைச் சேர்ந்த பிரெடஞ்சலோவை எதிர்கொண்டார். இதில் 6-3, 6-2, 6-3 என்ற செட்களில் சின்னர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
    நடப்பு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சுற்று இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்தது. ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி 56 பந்துகளில் 2 சிக்சர், 12 பவுண்டரி உள்பட 89 ரன்களை குவித்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 47 ரன்கள் எடுத்தார்.    

    குஜராத் சார்பில் ஷமி, யாஷ் தயாள், சாய் கிஷோர், ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சாஹா 2வது பந்தில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    அடுத்து ஷுப்மான் கில்லுடன் ஜோடி சேர்ந்த மேத்யூ வேட் பொறுபுடன் ஆடினார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தது. ஷுப்மான் கில் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் வேட் 35 ரன்னில் வெளியேறினார்.

    தொடர்ந்து இறங்கிய கேப்டன் பாண்ட்யா நிதானமாக ஆடினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த டேவிட் மில்லர் அரை சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், குஜராத் அணி 3 விக்கெட்டை இழந்து வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. பாண்ட்யா 40 ரன்னுடனும், மில்லர் 68 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளனர்.
    189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகின்றன.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சன்று இன்று நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

    கொல்கத்தா எடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது.

    இதனால், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பில் 188 ரன்கள் சேர்த்தது.

    அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 56 பந்துகளில் இரண்டு 6, 12 பவுண்டரிகளில் 89 ரன்களை குவித்தார். தொடர்ந்து, சாம்சன் 47 ரன்கள், படிக்கல் 28 ரன்கள், ஹட்மயர் மற்றும் ரியான் பராங் தலா 4 ரன்கள், ஜெய்ஸ்வால் 2 ரன்கள், அஷ்வின் 2 ரன்களை சேர்த்தனர்.    

    குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் ஷாமி, யாஷ் தயால், சாய் கிஷோர், ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

    இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகின்றன.

    இதையும் படியுங்கள்.. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன் இவர்தான்- வீரேந்திர சேவாக் கருத்து
    பேட்டிங் செய்யும்போது காட்டும் அதே ஆக்ரோஷத்தை, கேப்டனாகவும் காட்டுவார் என்று நினைத்தேன். ஆனால் அவர் அமைதியாக, கட்டுக்கோப்பாக இருக்கிறார் என சேவாக் கூறியுள்ளார்.
    மும்பை:

    15-வது ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் சுற்று இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன. 

    இந்த ஆண்டு தொடரில் பலம் வாய்ந்த அணிகளாக கருதப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும்  கடைசி 2 இடங்களை பெற்று வெளியேறின. இளம் கேப்டன்களை கொண்ட குஜராத், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ, பெங்களூர் அணி  குவாலிஃபயருக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன் ஹர்த்திக் பாண்டியாதான் என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்  தெரிவித்துள்ளார்.

    குஜராத் டைடன்ஸ் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் என்னை மிகவும் கவர்ந்தது ஹர்த்திக் பாண்டியா தான். அவருக்கு சிறப்பான தலைமை பண்பு இருக்கும்  என நான் எதிர்பார்க்கவே இல்லை. அவர் பேட்டிங் செய்யும்போது காட்டும் அதே ஆக்ரோஷத்தை, கேப்டனாகவும் காட்டுவார் என்று  நினைத்தேன். ஆனால் அவர் அமைதியாக, கட்டுக்கோப்பாக இருக்கிறார். 

    எப்போது ஒரு கேப்டனின் தலைமை பண்பு நமக்கு பிடிக்கும்? இக்கட்டான சூழலில் அவர் எடுக்கும் முடிவுகளில் தான்.  குறிப்பாக  உங்கள் அணி பந்துவீசி கொண்டிருக்கும்போது நாம் ஃபீல்டிங்கையும், பந்துவீச்சையும் எதிரணிக்கு தகுந்ததாற்போல் மாற்ற வேண்டும். 

    அப்போது தான் சிறந்த பலன் கிடைக்கும். கடும் அழுத்தமான நேரங்களில் கூட அவர் அமைதியாக இருக்கிறார். இதுதான் அவருடைய கேப்டன்சியில் எனக்கு பிடித்தது.

    இவ்வாறு சேவாக் தெரிவித்துள்ளார்.
    ×