என் மலர்
புதுச்சேரி
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நாராயணசாமி வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரது மகன்கள் திவாகர் மற்றும் சுதாகர் ஆகியோர் நாராயணசாமியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால், வழியிலேயே நாராயணசாமி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி கடற்கரை சாலை, பூங்கா ஆகியவை காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபயிற்சிக்காக திறந்திருக்கும். கோவில்கள் பக்தர்கள் தரிசனத்துக்காக இரவு 9 மணி வரை திறந்திருக்கும். உடற்பயிற்சி கூடங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படும்.
புதுச்சேரி கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த மாதம் 7-ந்தேதி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அப்போது அவருடன் வேறு யாரும் அமைச்சர்களாக பொறுப்பேற்கவில்லை.
இந்தநிலையில் அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. ஆகிய கட்சிகளிடையே ஒரு மாதத்துக்கும் மேலாக இழுபறி நீடித்து வந்த நிலையில், 23-ந் தேதி புதிய அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
இந்த பட்டியலில் என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பா.ஜனதாவின் நமச்சிவாயம், சாய்.சரவணன் குமார் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்று இருந்தன.
இந்தநிலையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு தொடர்பான அறிவிப்பும் அதிகாரபூர்மாக வெளியிடப்பட்டது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொள்கின்றனர்.
இதற்கான விழா கவர்னர் மாளிகை முன் எளிமையாக நடக்கிறது.
புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே செம்பியப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவா (வயது50). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர் மோட்டார் சைக்கிளில் சாராயக்கடைக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பினார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த பவித்ரன் என்பவர் அதிக குடிபோதையில் சிவாவை பார்த்து எங்கள் தெருவிலேயே மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி செல்கிறாயா? என தகராறு செய்தார். அதற்கு சிவா நீ யார் கேட்பது என கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.
இதனால் ஆத்திரமடைந்த பவித்ரன் வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து சிவாவின் தலையில் வெட்டினார். இதனை சிவாவின் மகன்கள் பிரகாஷ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் தடுக்க முயன்றார்.
அப்போது பவித்ரனுக்கு ஆதரவாக அவரது சகோதரர்கள் பார்த்தீபன் மற்றும் சிவசங்கர் ஆகியோர் தடி மற்றும் இரும்பு கம்பியை எடுத்து வந்து சிவா மற்றும் அவரது மகன்கள் பிரகாஷ், மணிகண்டன் ஆகியோரை தாக்கினர். மேலும் பாட்டிலாலும் குத்தினர். அதோடு கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த சிவா கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து சிவாவின் மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 195 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 261 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 186 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 363 பேர் குணமடைந்துள்ளார். தற்போது 493 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 2 ஆயிரத்து 477 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 பேர் பலியாகி உள்ளனர். அதாவது புதுவை அரசு ஆஸ்பத்திரியில் காந்தி வீதியைச் சேர்ந்த 70 வயது முதியவர், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவ்வை நகரைச் சேர்ந்த 68 வயது முதியவர், ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தட்டாஞ்சாவடியை சேர்ந்த 75 வயது முதியவர், முகமதியா நகரைச் சேர்ந்த 72 வயது முதியவர், காரைக்காலில் அக்கரை வட்டத்தைச் சேர்ந்த 47 வயது பெண் ஆகியோர் பலியாகி உள்ளனர்.
புதுவையில் உயிரிழப்பு 1.50 சதவீதமாகவும், குணமடைவது 95.95 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 28 பேரும், முன்களப் பணியாளர்கள் 13 பேரும், பொதுமக்கள் 6 ஆயிரத்து 886 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதுவரை 4 லட்சத்து 56 ஆயிரத்து 402 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
திருக்கனூர் புதுநகர் முதல் தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 44). திருவக்கரையில் உள்ள கல்குவாரி கிரஷரில் கண்காணிப்பாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி உமாதேவி.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களாக ஜனார்த்தனன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் குடும்பம் நடத்த வழியில்லாமல் தவித்து வந்தார். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. எனவே வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜனார்த்தனன் வீட்டின் மாடியில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி கண் டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் சுரேந்தர் வயது (21) இவருக்கு குடிபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை தாயார் லட்சுமி (45) கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுரேந்தர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்குழு அமைந்துள்ள இடத்தில் புதிய சட்டமன்ற கட்டிடம் கட்ட கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. ஆனால் அது செயல் வடிவம் பெறாமல் போய்விட்டது.
இந்தநிலையில் மீண்டும் புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டும் திட்டம் கையில் எடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் நாடாளுமன்ற சபாநாயகர் பிற மாநில சபாநாயகர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது புதுவையில் புதிய சட்டமன்ற வளாகம் கட்ட ரூ.220 கோடி வழங்கவேண்டும் என்று சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வலியுறுத்தினார்.
இந்தநிலையில் சட்டமன்றம் மற்றும் தலைமை செயலகம் இணைந்த புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக சபாநாயகர் அலுவலகத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.பி. ரமேஷ், அசோக் பாபு, பொதுப்பணித்துறை செயலாளர் விக்ராந்த் ராஜா, துணை கலெக்டர் கந்தசாமி, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, வேளாண் துறை இயக்குனர் பாலாகாந்தி, சட்டசபை செயலாளர் முனுசாமி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது புதிய கட்டிடம் கட்டுவதற்கான தோராயமான மதிப்பீட்டு தொகையை கணக்கிட சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மேலும் எந்த வடிவமைப்பில் கட்டிடம் கட்டுவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.






