search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி அரசு
    X
    புதுச்சேரி அரசு

    புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

    புதுச்சேரியில் கடற்கரை சாலை, பூங்காக்கள் காலை 9 மணிக்கு பதில் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தொடர் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

    புதுவை கடற்கரை சாலை

    ஊரடங்கில் அவ்வப்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று நள்ளிரவுடன் ஊரடங்கு முடிவடைகிறது. இதையடுத்து கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 15-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


    புதுச்சேரி கடற்கரை சாலை, பூங்கா ஆகியவை காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபயிற்சிக்காக திறந்திருக்கும். கோவில்கள் பக்தர்கள் தரிசனத்துக்காக இரவு 9 மணி வரை திறந்திருக்கும். உடற்பயிற்சி கூடங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படும்.

    Next Story
    ×