என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    புதுவையில் புதிதாக 261 பேருக்கு தொற்று- 5 பேர் கொரோனாவுக்கு பலி

    புதுவையில் உயிரிழப்பு 1.50 சதவீதமாகவும், குணமடைவது 95.95 சதவீதமாகவும் உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 195 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 261 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 186 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 363 பேர் குணமடைந்துள்ளார். தற்போது 493 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 2 ஆயிரத்து 477 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 பேர் பலியாகி உள்ளனர். அதாவது புதுவை அரசு ஆஸ்பத்திரியில் காந்தி வீதியைச் சேர்ந்த 70 வயது முதியவர், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவ்வை நகரைச் சேர்ந்த 68 வயது முதியவர், ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தட்டாஞ்சாவடியை சேர்ந்த 75 வயது முதியவர், முகமதியா நகரைச் சேர்ந்த 72 வயது முதியவர், காரைக்காலில் அக்கரை வட்டத்தைச் சேர்ந்த 47 வயது பெண் ஆகியோர் பலியாகி உள்ளனர்.

    புதுவையில் உயிரிழப்பு 1.50 சதவீதமாகவும், குணமடைவது 95.95 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 28 பேரும், முன்களப் பணியாளர்கள் 13 பேரும், பொதுமக்கள் 6 ஆயிரத்து 886 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதுவரை 4 லட்சத்து 56 ஆயிரத்து 402 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×