என் மலர்
புதுச்சேரி
- குளம், ஏரி, இயற்கைச் சார்ந்த பகுதிக ளில் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இந்த தூய்மைப் படுத்தும் நிகழ்ச்சி அங்கு சுற்றியுள்ள ஊர் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
புதுவை கவுண்டன் பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்டத்தின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் குளம்,
ஏரி, இயற்கைச் சார்ந்த பகுதிக ளில் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் 8-ம் வாரமாக வில்லியனூரில் அமைந்துள்ள அன்னம் மாள் சரித்திர குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி யில் தூய்மைப் படுத்தும் நிகழ்வு நடை பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி யின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக வில்லியனூர் கொம்யூன் ஆணையர் ஆறுமுகம் கலந்து கொண்டு தூய்மைப் படுத்தும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்
இதில் 1½ டன் அளவிற்கு பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி கழிவுகள் அகற்றப் பட்டன. இதில் 50 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
புதுச்சேரி மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர் ராஜன் வழிநடத்தினார். மண்வாசம் இளைஞர் நற்பணி மன்றம் திருக்காஞ்சி குழுவினர் மற்றும் சமூக சேவகர் யுனஸ்கோ குளங்கள் காப்போம் குழுவின் தலைவர் கார்த்தி கேயன் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மைப்ப டுத்தும் மாணவர்களை ஊக்கப் படுத்தினர். இந்த தூய்மைப் படுத்தும் நிகழ்ச்சி அங்கு சுற்றியுள்ள ஊர் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
பள்ளியின் ஆசிரியர் நெடுஞ்செழியன் , சோமு உடன் இருந்தனர்.
நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி யின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயந்தி செய்திருந்தார்.
- ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை பட்டியலிட்டு, திட்டங்கள் தயாரித்து, நிதி ஒதுக்கி 1½ ஆண்டுகளுக்குள் செயல்படுத்தி இருக்கலாம்.
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கால அளவு ஓராண்டு நீட்டிக்கப்பட்டு ரூ. 950 கோடிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை பட்டியலிட்டு, திட்டங்கள் தயாரித்து, நிதி ஒதுக்கி 1½ ஆண்டுகளுக்குள் செயல்படுத்தி இருக்கலாம். இந்த இழப்புக்கு யார் பொறுப்பேற்பது? மத்திய அரசு கொடுக்கும் நிதியை செலவழிக்காமலும், மக்க ளுக்கு வேண்டிய அடிப் படை வசதிகளை உருவாக் காமலும் இருப்பதற்காகவா இங்கே இரட்டை எஞ்சின் அரசு நடைபெறுகிறது?
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கால அளவு ஓராண்டு நீட்டிக்கப்பட்டு ரூ. 950 கோடிக்கான திட்டங்கள் அறிவிக்கப் பட்டன.
ஸ்மார்ட் சிட்டி பணிக்கு ஒப்பந்தம் போட்டு 16 மாதங்கள் ஆகியும் இன்னும் இந்த திட்டங்களுக்கு அடிக் கல் கூட நாட்ட வில்லை.
ஒப்பந்தப்படி இத்திட்டங்களை செயல் படுத்த முடியாது என்று என்.பி.சி.சி. கூறியுள்ளதாக தெரிகிறது.
அந்த நிறுவனம் பணி செய்ய தயாராக இருந்தும் பூமி பூஜை போட்டு அனுமதி கொடுக்காததால் அந்த நிறுவனம் தன் பணியை தொடங்க முடிய வில்லை.
அனுமதி அளிக்க வேண்டும்
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் இதுபோல் சுணக்கம் இருக்கவே இல்லை. பிரச்ச னையின் தீவிரத்தை புரிந்து கொண்டு வளர்ச்சியை மனதில் கொண்டு இன்னும் 10 நாட்களுக்குள் திட்டங்க ளுக்கு அடிக்கல் நாட்டி ஒப்பந்ததாரர்கள் பணிகளைத் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 65 எல்.டி.சி. எனப்படும் கீழ்நிலை எழுத்தர், 55 பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வு
- புதுவை மாநிலத்தின் 4 பிராந்தியங்களையும் சேர்த்து தேர்வை 49 ஆயிரத்து 904 பேர் எழுது கின்றனர்.
புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள 165
எல்.டி.சி. எனப்படும் கீழ்நிலை எழுத்தர், 55 பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வு இன்று நடந்தது.
3 ஆயிரம் ஆசிரியர்கள்
புதுவை மாநிலத்தின் 4 பிராந்தியங்களையும் சேர்த்து தேர்வை 49 ஆயிரத்து 904 பேர் எழுது கின்றனர்.
தேர்வு பணியில் 3 ஆயிரம் ஆசிரியர்கள், அலுவலர்கள் ஈடுபடுத்தப் பட்டனர்.
தேர்வர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டில் பாஸ்போர்ட் போட்டோவை ஒட்டி, கையொப்பமிட்டு எடுத்து வர வேண்டும். ஆதார், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் இதில் ஒரு அசலை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள மையத்தில் காலை 10 மணிக்கு முன்னதாக வர வேண்டும். அதற்கு மேல் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் காலை 8.30 மணி முதலே தேர்வர்கள் மையங்கள் முன்பு திரண்ட னர். தேர்வர்களின் ஹால்டிக் கெட்டை பார்த்து மையத்திற்குள் அனும திக்கப்ட்டனர்.
செல்போனுக்கு தடை
அறைகளிலும் பணியில் இருந்த அலுவலர்கள் ஹால்டிக்கெட்டை பெற்று சரி பார்த்தனர்.
தேர்வு அறைகளில் செல்போன், இயர்போன், கால்குலேட்டர் உட் பட மின் சாதனங்களை எடுத்து செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.
இதனால், இவற்றை மீறி தேர்வர்கள் எடுத்து செல்கின்றனரா என சோதனை நடந்தது.
மீறி மின் சாதனம் வைத்தி ருப்போர் தேர்வு அறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கயும் விடுக்கப்பட்டது.
காலை 10 மணிக்கு மையங்களின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டது. அதன்பிறகு வந்தவர்கள் யாரும் மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வை புதுவையில் 37 ஆயிரத்து 329, காரைக்காலில் 5 ஆயிரத்து 534, மாகேவில் ஆயிரத்து 216, ஏனாமில் 2 ஆயிரத்து 825 பேர் எழுது கின்றனர்.
இவர்களுக்காக புதுவையில் 107, காரைக்காலில் 14, மாகேவில் 6, ஏனாமில் 10 என மொத்தம் 137 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு பதவிக்கு 213 பேர் வீதம் 220 பணியிடங்களுக்கு 46 ஆயிரத்து 904 பேர் தேர்வு விண்ணப்பித்தி ருந்தனர். விண்ணப்பித் தோரில் சுமார் 40 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் தேர்வு எழுதியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
- புதுவை மாநிலத்தின் 4 பிராந்தியங்களையும் சேர்த்து தேர்வை 49 ஆயிரத்து 904 பேர் எழுது கின்றனர்.
- தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள 165
எல்.டி.சி. எனப்படும் கீழ்நிலை எழுத்தர், 55 பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வு இன்று நடந்தது.
3 ஆயிரம் ஆசிரியர்கள்
புதுவை மாநிலத்தின் 4 பிராந்தியங்களையும் சேர்த்து தேர்வை 49 ஆயிரத்து 904 பேர் எழுது கின்றனர்.
தேர்வு பணியில் 3 ஆயிரம் ஆசிரியர்கள், அலுவலர்கள் ஈடுபடுத்தப் பட்டனர்.
தேர்வர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டில் பாஸ்போர்ட் போட்டோவை ஒட்டி, கையொப்பமிட்டு எடுத்து வர வேண்டும். ஆதார், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் இதில் ஒரு அசலை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள மையத்தில் காலை 10 மணிக்கு முன்னதாக வர வேண்டும். அதற்கு மேல் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் காலை 8.30 மணி முதலே தேர்வர்கள் மையங்கள் முன்பு திரண்ட னர். தேர்வர்களின் ஹால்டிக் கெட்டை பார்த்து மையத்திற்குள் அனும திக்கப்ட்டனர்.
செல்போனுக்கு தடை
அறைகளிலும் பணியில் இருந்த அலுவலர்கள் ஹால்டிக்கெட்டை பெற்று சரி பார்த்தனர்.
தேர்வு அறைகளில் செல்போன், இயர்போன், கால்குலேட்டர் உட் பட மின் சாதனங்களை எடுத்து செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.
இதனால், இவற்றை மீறி தேர்வர்கள் எடுத்து செல்கின்றனரா என சோதனை நடந்தது.
மீறி மின் சாதனம் வைத்தி ருப்போர் தேர்வு அறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கயும் விடுக்கப்பட்டது.
காலை 10 மணிக்கு மையங்களின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டது. அதன்பிறகு வந்தவர்கள் யாரும் மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வை புதுவையில் 37 ஆயிரத்து 329, காரைக்காலில் 5 ஆயிரத்து 534, மாகேவில் ஆயிரத்து 216, ஏனாமில் 2 ஆயிரத்து 825 பேர் எழுது கின்றனர்.
இவர்களுக்காக புதுவையில் 107, காரைக்காலில் 14, மாகேவில் 6, ஏனாமில் 10 என மொத்தம் 137 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு பதவிக்கு 213 பேர் வீதம் 220 பணியிடங்களுக்கு 46 ஆயிரத்து 904 பேர் தேர்வு விண்ணப்பித்தி ருந்தனர். விண்ணப்பித் தோரில் சுமார் 40 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் தேர்வு எழுதியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
- புதுவை மாநில தமிழக எல்லையில் அமைந்த பிள்ளை சாவடி கிராமத்தில் கடலோர பகுதிகள் அரிப்பால் மிகுந்த பாதிப்பை அடைந்து வருகின்றன
- ஒரே நாளில் ரூ.24 கோடியே 70 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கான தொடக்க விழா நடந்தது.
புதுவை மாநில தமிழக எல்லையில் அமைந்த பிள்ளை சாவடி கிராமத்தில் கடலோர பகுதிகள் அரிப்பால் மிகுந்த பாதிப்பை அடைந்து வருகின்றன.
இயற்கை சீற்றத்தாலும், கடலின் குறுக்கே அமைக்கப்பட்ட துறைமுகம், தமிழ் நாடு பகுதியான தந்திராயன்குப்பம் மற்றும் பொம்மையார்பாளையம் உள்ளிட்ட பின்ளைச் சாவடி கிராமத்தின் தெற்கு சுடலோர பகுதிகளில், கடல் அரிப்பை தடுக்க மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கை போன்றவை களால் புதுவை பிள்ளைச் சாவடி உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடல் அரிப்பு மேலும் அதிகமாகி வருகிறது.
இதனால், பிள்ளைச் சாவடி உள்ளிட்ட கிராமத்தில் வாழும் மீனவர்கள் உள்ளிட்ட, கடலோர மக்களின் வீடுகள், வலை பின்னும் கூடம் போன்ற அடிப்படை உரிமைகள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றன. பாதிப்புகளில் இருந்து மக்களையும் அவர்களது உடைமைகளையும் காக்கும் வகையில் ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் என்.சி.சி.ஆர். தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசனைகளை பெற்று, பிள்ளைச் சாவடி கிராமத்தில் கடல அரிப்பை தடுக்கும் வகையில், கடலோரத்தில் தடுப்பு சுவர்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.
கடல் அரிப்பை தடுக்கும் வகையில் 6 தடுப்பு சுவர்கள் அமைக்கபட இருக்கின்றன. 50 மீட்டர் நீளத்திற்கு ஒரு தடுப்புச்சுவரும் 40 மீட்டர் நீளத்திற்கு 2 தடுப்புச்சுவரும், 30 மீட்டர் நீளத்திற்கு 2 தடுப்புச்சுவரும், 20 மீட்டர் நீளத்திற்கு ஒரு தடுப்புச் சுவரும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த தடுப்புச் சுவர்கள் வெவ்வேறு இடைவெளி விட்டு அமைக்க வும், அதில் 2 டன்னில் இருந்து 10 கிலோ வரை எடையுள்ள கருங்கல் கற்கள் 3 லேயர்களாக போடப்படும் வகையில் கடலோர தடுப்புப்பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.6¼ கோடியாகும். இந்த் திட்ட பணிகள் 4 மாதங்களில் முடிக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது. பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
நிகழ்ச்சியில். பொதுப் பணித்துறை அமைச்சர் நாராயணன், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ, தலைமை பொறியாளர், பழனியப்பன் கண்காணிப்பு பொறியாளர், பாஸ்கரன, உதவி பொறியாளர் சீனு, சம்பந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்
இதே போல் புதுவை கருவடிக்குப்பம் லட்சுமி நகர் ஓடையில் ரூ.3 கோடியில் பக்கவாட்டு கால்வாயுடன் கூடிய கான்கிரீட் பாதை அமைக்கப்படுகிறது. இந்த பணியையும் பூமி பூஜை செய்து முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
ஒட்டு மொத்தமாக புதுவையில் இன்று ஒரே நாளில் ரூ.24 கோடியே 70 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கான தொடக்க விழா நடந்தது.
- காரைக்கால் திருநள்ளாறில் அரசால் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- அவரது கையில் இருந்த ரூ.250 மற்றும் ஒரு செல்போனை போலீசார் பறி முதல் செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவி லுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை முன்பு, வாலிபர் ஒருவர் நின்று கொண்டு செல்போன் மூலம் அரசால் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில், திருந ள்ளாறு போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொ ண்டனர். அப்போது, அங்கு திருநள்ளார் நகர் பகுதியை ச்சேர்ந்த மாரிமுத்து (வயது 40) என்பவரை போலீசார் சோதனை செய்ததில், அவரது செல்போனில் பொது மக்களுக்கு 3 எண் கொண்ட தடை செய்ய ப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து மாரிமுத்தை போலீசார் கைது செய்து, அவரது கையில் இருந்த ரூ.250 மற்றும் ஒரு செல்போனை போலீசார் பறி முதல் செய்தனர்.
- இருவர் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
- எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
புதுச்சேரி:
2023-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவரும் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
அவர்களுக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தென் தமிழக மண்ணிலிருந்து இருவர் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அலங்காநல்லூர் மதுரை மாவட்டம், ஆசிரியர் அரசு ஆண்கள் பள்ளி காட்வின் வேதநாயகம் ராஜ்குமாருக்கும், தென்காசி மாவட்டம், கீழ்ப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பணம் கொடுக்க மறுத்தால் அந்த வீடியோவை ‘யூ-டியூப்’பில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் (வயது 53). இவர் லாஸ்பேட்டை பெத்திச்செட்டிப்பேட் புதுத்தெருவில் வசித்து வருகிறார்.
இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த சில நாட்களாக புதிய நம்பரில் இருந்து 'ஹலோ ஜி' என தொடர்ந்து மெசேஜ் வந்துள்ளது. கட்சி நிர்வாகிகள் யாரோ மெசேஜ் அனுப்பி இருப்பதாக கருதி இதனை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் கடந்த வாரம் அவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வீடியோ கால் ஒன்று வந்தது. அதனை சாமிநாதன் எடுத்தபோது மறுமுனையில் இளம் பெண் ஒருவர் நிர்வாணமாக இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடை ந்த அவர் உடனடியாக செல்போன் அழைப்பை துண்டித்தார்.
அதையடுத்து அவரது செல்போன் எண்ணுக்கு மற்றொரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியஒரு பெண் சாமிநாதனிடம் செல்போனில் ஆபாச வீடியோவில் பதிவான காட்சி இருப்பதாக கூறி ரூ.50 ஆயிரம் பணம் கேட் டார். பணம் கொடுக்க மறுத்தால் அந்த வீடியோவை 'யூ-டியூப்'பில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் பா.ஜனதா தலைவர் சாமிநாதன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டிய மர்ம பெண்ணை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
புதுவை பா.ஜனதா தலைவரிடம் இளம் பெ ண் ஆபாச வீடியோ அனுப்பி பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், பொதுமக்கள் தங்களின் செல்போன் எண்களுக்கு, புதிய எண்களில் இருந்து வரும் வீடியோ கால்களை ஏற்க வேண்டாம். தற்போது ஆன்லைன் மோசடி கும்பல், வீடியோ கால் மூலமாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஆபாச காட்சிகளை வைத்து எதிர் முனையில் இருப்பவர்கள் உரையாடுவது போல காட்சிகளை ஜோடிக்கிறார்கள். இதுபோல் யாரும் பாதிக் கப்பட்டால் பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம். உடனடியாக சைபர் கிரைம் போலீஸ் எண் 1930-ல் புகார் அளியுங்கள்' எனத்தெரிவித்தனர்.
- புதுவையில் 107 மையங்களில்
- ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள மையத்தில் காலை 10 மணிக்குள் வந்துவிட வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை அரசு துறை களில் காலியாக உள்ள ௧௬௫ எல்.டி.சி, 55 ஸ்டோர் கீப்பர் பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வு 10 முதல் 12 மணி வரை நடக்கிறது.
இத்தேர்வை 49 ஆயிரத்து 904 பேர் எழுது கின்றனர். தேர்வு பணியில் 3 ஆயிரம் ஆசிரியர்கள், அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வர்கள் தங்கள் ஹால்டிக்கெட்டில் பாஸ்போர்ட் போட்டோ ஒட்டி சுய கையொப்பம் இட்டு எடுத்து வர வேண்டும்.
ஆதார், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் இதில் ஒரு அசலை கட்டாயம் கொண்டுவர வேண்டும். ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள மையத்தில் காலை 10 மணிக்குள் வந்துவிட வேண்டும்.
அதற்கு மேல் தேர்வர்கள் அனும திக்கப்பட மாட்டார்கள். கருப்பு நிற பால்பாயிண்ட் பேனா, ஹால்டிக்கெட், அசல் அடையாள அட்டை மட்டுமே எடுத்து வர வேண்டும். செல்போன், கால்குலேட்டர் உட் பட மின் சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதை மீறி மின் சாதனம் வைத்திருப்போர் தேர்விலிருந்து வெளி யேற்றப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
இத்தேர்வை புதுவை யில் 37 ஆயிரத்து 329, காரைக்காலில் 5 ஆயிரத்து 534, மாகிவில் ஆயிரத்து 216, ஏனாமில் 2 ஆயிரத்து 825 பேர் எழுதுகின்றனர். இவர்க ளுக்காக புதுவை யில் 107, காரைக்காலில் 14, மாகேவில் 6, ஏனாமில் 10 என மொத்தம் 137 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளது.
ஒரு பதவிக்கு 213 பேர் வீதம் 220 பணியிடங்களுக்கு 46 ஆயிரத்து 904 பேர் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வையொட்டி தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
- இயக்குனர் சாய்.இளங்கோவன் பார்வையிட்டார்
- கைவினைப் பொருட்கள், கலை, ஓவியங்கள், ஆடைகள் ,நகைகள், ஆகியவற்றை பார்வையிட்டு பழங்குடி மக்களின் செயல்பாடுகளை கேட்டறிந்து வெகுவாக பாராட்டினார்.
புதுச்சேரி:
மத்திய அரசின் பழங்குடியினர் நல அமைச்சகம் மற்றும் பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில் புதுவை கடற்கரை காந்தி திடலில் ஆடி பஜார் என்ற பெயரில் கைவினை கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது.
இதனை எம்.பி.க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிலையில், பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பின் அழைப்பின் பேரில் புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டார். மேலும்,நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள், கலை, ஓவியங்கள், ஆடைகள் ,நகைகள், ஆகியவற்றை பார்வையிட்டு பழங்குடி மக்களின் செயல்பாடுகளை கேட்டறிந்து வெகுவாக பாராட்டினார்.
மேலும், அடுத்த மாதம் 4-ந் தேதி புதுடெல்லியில் நடைபெறும் பழங்குடியினர் கைவினை கண்காட்சியில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 2 பேர் முதல் 8 பேர் வரை பங்கேற்கலாம் என்றும் அவர்களுக்கான முழு செலவையும் மத்திய அரசு ஏற்க உள்ளதாக ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனரிடம் கண்காட்சி பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் ராஜேஷ் கண்ணா,ராஜா,சாக்ரடீஸ்,வித்யாவதி,பண்டக காப்பாளர் அமிர்தலிங்கம் மற்றும் பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க, கட்சி கொடி என எதையும் இனிமேல் கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் பயன்படுத்த கூடாது.
- அ.தி.மு.க.வையும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றியும் தவறாக விமர்சனம் செய்த யாருக்கும் கட்சியில் இடமில்லை.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க பொதுக்குழு தொடர் பான வழக்கில் இதுவரை 9 முறை எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். தி.மு.க தலைவர் ஸ்டாலினை மகிழ்விக்க எத்தனை முறை நீதிமன்றத்திற்கு சென்றாலும் நீதி தேவதை துணையோடும் ஜெயலலிதா ஆசியோடும் அதனை எங்களது பொதுச் செயலாளர் முறியடிப்பார்.
சுப்ரீம்கோர்ட்டு, ஐகோர்ட்டு, பெஞ்சு, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் மூலம் 11.7.2022-ல் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் உறுதி செய்யப்பட்ட பிறகும் அ.தி.மு.க, கட்சி கொடி என எதையும் இனிமேல் கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் பயன்படுத்த கூடாது.
இது சம்பந்தமாக ஏற்கனவே புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் டி.ஜி.பி, மற்றும் தேர்தல் துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.விற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் மீண்டும் மீண்டும் எங்கள் கட்சியின் பெயரையோ, கொடியை யோ, சின்னத்தின் குறியீட்டையோ, விளம்பர பதாகை கள், துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள், சுவர் விளம்பரங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவது சட்டவிரோத செயலாகும்.
இவர்கள் மீது காவல்துறையும், தேர்தல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.தி.மு.க.வையும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றியும் தவறாக விமர்சனம் செய்த யாருக்கும் கட்சியில் இடமில்லை. அப்படி விமர்சனம் செய்யாத அடிமட்ட தொண்டன், பிறருடைய தவறான துர்போதனைக்கு ஆளாகி துரோகிகள் கூட்டத்திற்கு சென்றிருந்தால் அவர்கள் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்தால் பொதுச் செயலாளர் அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ள முடிவெடுப்பார்.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
- காவலர் பொது நல இயக்கம் வலியுறுத்தல்
- அதிகாரிகளுக்கு காலத்தோடு பதவி உயர்வு மற்றும் சலுகைகளை உடனுக்குடன் வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை காவலர் பொது நல இயக்க பொதுச் செயலாளர் கணேசன் முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் இரவு ரோந்து பணியை தீவிர படுத்தி வருவது வரவேற்க்க தக்கது. இதனால் குற்ற சம்பவங்கள் குறைந்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் இரவு ரோந்து பணி செய்யும் போலீசாருக்கு சிறப்பு படி வழங்கப்படுகிறது.
அது போல் புதுவையில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கும் சிறப்பு படி வழங்கினால் அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதுடன் மேலும் பணியை சிறப்பாக செய்ய ஏதுவாக அமையும்.
மேலும் புதுவை காவல்துறையில் பணி புரியும் போலீசார் முதல் அதிகாரிகளுக்கு காலத்தோடு பதவி உயர்வு மற்றும் சலுகைகளை உடனுக்குடன் வழங்க வேண்டும். தற்போது எல்.டி.சி., எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்காக பணியில் ஈடுபடுத்தப்படும் அதிகாரிகள் மற்றும் அரசு துறை ஊழியர்களுக்கு தினப்படி அன்றே வழங்கப்படுகிறது. ஆனால் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு வழங்கப்படுவதில்லை. எனவே மற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் தினப்படி போலீசாருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






